Pages

09 June 2008

சென்னைப்பதிவர் சந்திப்பு 08.06.2008 : சில கேள்விகளும் பதில்களும்

சென்னையில் 08.06.2008 அன்று நடந்த வலைப்பதிவர் சந்திப்பு குறித்த ஒரு கேள்வி பதில் ஆய்வறிக்கை :





கேள்வி : சந்திப்பு எங்கே எப்போ எதுக்கு நடந்தது ?
பதில் :
சென்னை சந்திப்பு 08.06.2008 அன்று மாலை 5.30 மணியிலிருந்து 8.30 மணிவரை , மெரினா காந்தி சிலை பின்புறமுள்ள வரண்ட குளத்தில் , நண்பர் பாஸ்டன் பாலா அவர்களது வருகையை முன்னிட்டு நடந்தது .

கேள்வி : இந்த சந்திப்புக்கு யாரேல்லாம் வந்தாங்க?
பதில் :
பாஸ்டன் பாலா, லக்கிலுக்,டோண்டு ராகவன் , பைத்தியக்காரன் , மருத்துவர் புருனோ , வழக்கறிஞர் சுந்தர்ராஜன் , கடலையூர் செல்வம் , சுகுணா திவாகர் , மலர்வனம் லட்சுமி , கென் , முரளிக்கண்ணன் , ஜ்யோவ்ராம் சுந்தர் , வளர்மதி , ஜிங்காரோ ஜமீன் , வலைப்பதிவர் உதவிப்பக்கம் உதவி விக்கி , பாலபாரதி மற்றும் நான் .

கேள்வி : என்னல்லாம் பேசினீங்க ?
பதில் :
1 . அடுத்த வார தமிழ்மண நிர்வாகிகளுடனான சென்னை சந்திப்பில் அவர்களிடம் முன் வைக்க வேண்டிய பிரச்சனைகள்.
2. வலையுலகில் பாலியல்
3. பூங்கா இதழ்
4. வலைப்பதிவருதவி
5.சூடான இடுகைகளும் பின்னூட்டமும்.
6.உண்மைத்தமிழன் பின்னூட்ட பிரச்சனை
7.தமிழ்மண குறிச்சொற்கள் மற்றும் வகைப்படுத்துதல் பிரச்சனை

கேள்வி : சுவாரசியமான சம்பவங்கள் ?
பதில் :
சந்திப்பு தொடங்கி 10 நிமிடத்திலேயே மழை பெய்ய தொடங்கிவிட்டது , பதிவர்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றி கலைக்கப்பட்ட எறும்புக்கூட்டம் போல சிதறி ஒடினர் . அங்கு அருகிலிருந்த மரம்தான் பாதி பதிவர்களை காப்பாற்றியது .
இந்த அடை மழையிலும் டோண்டு மட்டும் கடலை நோக்கி நடந்து போய் அலையோடு விளையாடிக்கொண்டிருந்தார் . சில பதிவர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி புகைப்பிடித்தனர் .
மழை நின்ற பிறகு மீண்டும் பழைய இடத்துக்கே பதிவர்கள் திரும்ப மீண்டும் சந்திப்பு தொடர்ந்தது .

கேள்வி : சாப்பிட குடிக்க எதாவது குடுத்தாய்ங்களா?
பதில் :
மஞ்சள் நிற இனிப்பும் , முறுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் தரப்பட்டது . குடிக்க குடிநீருடன். சந்திப்பு முடிந்த பின் அனைவருக்கும் தேநீர் தரப்பட்டது . ( உபயம் : பாலா & பாலா )

கேள்வி : ரொம்ப எதிர் பார்த்தும் யாரெல்லாம் வரல ?
பதில் :
நான் எதிர்பார்த்து வராதவங்க , வினையூக்கி,ஜிம்ஷா மற்றும் உண்மைத்தமிழன்

கேள்வி : மொத்தமா 20 பேருதான் வந்திருப்பாங்க போலருக்கே , சென்னைல அவ்வளோதான் பதிவருங்களா?

பதில் :

:-)

கேள்வி : இந்த பதிவர் சந்திப்பு அரேஞ்ச் பண்றதுலாம் யாரு ? அதுனால அவங்களுக்கு என்ன லாபம் ?
பதில் :
பதிவர் சந்திப்பு ஏற்பாடு திரு.பாலபாரதி அவர்கள் , அவருக்கு நன்றி , இது போன்ற சந்திப்புகளால் அவருக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை .

கேள்வி : அப்ப யாருக்குதான் லாபம் ?
பதில் :
லாபம் , நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை , இது நம் உணர்வு , ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம் .

கேள்வி : புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
பதில் :
இருக்கலாம் . அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும் . ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும் , ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

கேள்வி : சந்திப்புக்கு கனெக்ஸனில்லாத கேள்வினாலும் பதில் சொல்லு , இந்த மோகன் கந்தசாமி இன்னா மேட்டருபா ?
பதில் :
இது ஒரு கந்தசாமியின் குமுறல் அல்ல , இது போல பலரும் எண்ணியிருக்கிறார்கள் .
மூத்த பதிவர் , பீத்த பதிவர் என யாரும் இல்லை நாம் எல்லோருமே பதிவர்கள் அவ்வளவுதான் . நல்ல எழுத்திற்கு நிச்சயம் சரியான அங்கீகாரம் கிடைக்கும்.

கேள்வி : இந்த மொக்கை சந்திப்புக்கெல்லாம் பதிவு போடறியே உனக்கெல்லாம் வேற வேல இல்ல ?

பதில் :
அதெல்லாம் சந்திப்புக்கு வராதவங்க சொல்லக்கூடாது .



கேள்வி : ஏன் இவ்ளோ சீரிஸா சந்திப்பு பத்தி எழுதிருக்க ?
பதில் :
சந்திப்பு பூரா ஒரே காமெடி நைனா , அல்லாரும் இன்னா சிரிப்புன்ற !!!!!
அதான்பா அத பத்தி எழுத சொல்லவாவ்து சீரிஸா.........
ஓகே ஓகே டென்ஸனாவாத!!!!!!


அத்த வாரம் மீட் பண்றேன்.


பின் குறிப்பு : இந்தப்பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படமாட்டாது . இச்சந்திப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள , உங்கள் சந்தேகங்களை பின்னூட்டமிடவும் .