Pages

23 June 2008

கருணா v/s ராமு : தளபதி Part-2



காட்சி 1 : இடம் : கருணாவின் வீடு ,

கருணாவின் வலது கை வீரா ஒடி வருகிறார். காட்சி துவங்குகிறது.
வீரா : தல! தல! வெளிய வா தல! (உள்ளிருந்து கருணா வெளியே வருகிறார்)
கருணா : இன்னாடா....!!
வீரா : இத்த பாரு தல.......
(அலைப்பேசியால் ஓடிய அந்த காட்சியை பார்த்ததும் கருணாவிற்கு கோபம் வருகிறது )
கருணா : இன்னாடாது இன்னாதிது............ராமு ஆளு இப்டி பேசுறான் அதும் நம்ம ஏரியாலயே இருந்துகினு,
வீரா : ஆமா தல உன் கைல வச்சுகிறதே , ராமுவுக்கும் அவன் ஆளுங்களுக்கும் வேலயா பூடுச்சி....... இதுக்கு எதுனா பண்ணனும் தல...உடனே ஒரு முடிவெடு தல...வேற வழ்யே இல்ல
கருணா : முடிவெடுக்கர்துக்கு கரீட்டான டயம் வந்திருச்சி......................

காட்சி முடிகிறது.........ஃபிளாஸ்பேக் துவக்கம்............

காட்சி 2 : ஏரியா தாதாக்கள் கூட்டம் , ராயபுரம் பழைய பங்களா


தாதா 1 : இங்க பாரு கருணா ஓன் கைல 90 பசங்கதான் இருக்கான்ங்க , உனக்கு இந்த ஏரியால மாமூல் வசூல் பண்ண 120 பேருணா வேணும் , அத்தனால இந்த ஏரியாவ உனக்கு குடுக்க முடியாதுப்பா..இன்னாபா ...............மத்தவங்க இன்னாபா ....சொல்றீங்க
(மற்ற பெரிய தாதாக்கள் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட கருணா தலை குனிகிறார் )
(சால்னாகடை ஜெயாக்கா இந்த போட்டியில் கருணாவின் முக்கிய எதிரி...)
ஜெயாக்கா : இன்னா அதான் சொல்லிட்டாங்கள்ள , இன்னும் இன்னாத்துக்கு அங்கேயே நின்னுகினுகீறே..இட்த்த காலி பண்ணு..தோடா பீலிங்கஸ்.....கெளம்பு கருணா காத்து வரட்டும்
(கருணா சோகமாக அங்கிருந்து கிளம்புகிறார் , பின்னாலில் இருந்து ஒரு குரல் அது ராமு )
ராமு : இன்னா கருணா என் கைல ஒரு வர்த்த சொல்லிருந்த ....என் பசங்கள உனக்காக அனுப்பிருப்பனே...இப்ப ஒரு வார்த்த சொல்லு நம்ம புள்ளைங்கள உட்னே அனுப்பறேன்...இன்னா கருணா ...ஒனுக்கு ஓன்னினா....
( கருணா மகிழ்ச்சியால் கண்கலங்கி ராமுவை கட்டி அணைக்கிறார் , ஜெயாக்கா கோபத்துடன் கிளம்புகிறார் . கருணாவும் ராமுவும் இணைந்து நட்பு பாடல் பாடுகின்றனர் தேஜாஸ்ரீ நடனத்துடன்!!!!! )

காட்சி 3 : ராமு வீடு , ராமுவின் வலது கை குருவும் அவரும்

குரு : அண்ணா எத்தினி நாளைக்குதாணா நீ கருணாக்கு அல்லக்கையாவே இருப்ப...நீ கருணா கணக்கா எப்பணா ஆவ்றது , நம்ம புள்ளங்கலாம் பாவம்ணா , ரொம்ப பாவம்ணா , அவங்களும் நாலு காசு பாக்க வேணாமாண்ணா.... இன்னாணா
ராமு : குரு , கருணாகிட்ட மொதறது நமக்கு நல்லதில்ல... நாம அட்டாக்க வேற மாதிரி பண்ணுவோம்... குரு.....................................................................(பிளான் சொல்லுகிறார் வசனமில்லாமல் இசை மட்டும் )


காட்சி 4 : கருணாவின் சின்ன வீடு , கருணாவும் அவர் மகன் அழகுமலையும்

அழகு : நைனா!!! இன்னா நைனா இந்த ராமுவோட செம்ம கரைச்சலா இக்குதே, இதல்லாம் கேக்கமாட்டியா...
கருணா : இப்ப இன்னாடா அவன் உனக்கு டார்ச்சர்ர் குத்தான்...ஏன் காலைலியே வந்து கூவறே..
அழகு : நைனா, நம்ம மாமூல் வாங்கறதுக்காக வெளியூர்லரந்து இட்டாந்தமே கடைக்காரனுங்கோ அவங்கள தொழில் பண்ண வுட மாட்டேன்றான் , கேட்டா லோக்கல் பசங்க எங்க போயி தொழில் பண்டறதுனு தெர்லன்றான் ,
கருணா : விட்றா கொஞ்ச நாள் கத்துவான் அப்பால அடுத்த வேல பாக்க போயிருவான்
அழகு : இல்ல நைனா அவனலாம் வளரவுடக்கூடாது , அவன் நம்ம சாராயக்கடை மேட்டர்லயும் கை வைக்கன்றான் தெர்மா.. எதோ நான் ஊரற சங்க ஊதிட்டேன் அப்பால உன் பாடு அவன் பாடு ,


காட்சி 5 : குரு கருணாவின் சாராயக்கடையில் ரகளையிலீடுபட வீரா குருவுடன் சண்டையிடுகிறார்

குரு : டேய் வீரா நீ யார் ஆளு மேல கைய வச்சின தெர்யுமா... ராமுக்கண்டி இது தெர்ஞ்சிது அவ்ளோதான் ...
வீரா : யார்ரா ராமு தம்மாதுண்டு தாமாக்கோலி அவனான் ___த்து துண்ட்ற எச்சிதானடா நீ..கருணாகண்டி இந்த மேட்டரு தெரியாட்டும் த்தா அவ்ளோதான்
குரு : யார்ரா கருணா அவன் இன்னா பெரிய ___ஆ , வந்தாண்னா கண்ண நோண்டி காக்கவுக்கு போட்டுருவேன் சொல்லி வை..
(வீரா தன் அலைப்பேசியில் படமாக்கி கொள்கிறார் )
வீரா : இர்ரா உனக்கும் உன் தலைவனுக்கும் ஆப்படிக்கிறேன்
(கோபத்துடன் கிளம்புகிறார் )
( ஜெயாக்காவின் சால்னா தொழில் படுத்து விட , கோபத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தன் ஆட்களை அனுப்பி கருணாவின் ஆட்களை அடித்துவிட்டு பழியை ராமு மேல் போட்டுவிடுகிறார் )
( கருணா,ராமு இடையேயான நட்பு உடைகிறது )
( கருணா , ராமுவின் ஆட்களை திருப்பி அனுப்புகிறார் , அந்த ஏரியா பழைய தாதா மனைவி சோனியிடமிருந்து ஆட்களை இறக்கிக்கொள்கிறார் )
ஃபிளாஸ்பேக்கும் முடிகிறது .

கிளைமாக்ஸ் 1 :

கருணா ராமுவின் ஏரியாவிற்குள் தனியாக செல்கிறார். அங்கே ராமு,குரு அவரது ஆட்கள் சீட்டாடி கொண்டிருக்கின்றனர்.
ராமு : இன்னா தல இவ்வளோ தூரம் இன்னா...... சீட்டு ஒரு கை போட்றியா....
கருணா : நிருத்து அல்லாத்தயும் நிருத்து
ராமு : முடியாது எதையும் நிருத்த முடியாது ...
கருணா : ஏன்.....
ராமு : விளம்பரம் வெட்டி விளம்பரம்... எத்தனி நாள் நான் இப்டியே அல்லக்கேயா இக்கிறது...ஆவணும் நானும் தலைவன் ஆவணும்
குரு : ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நிருத்துங்கப்பா முடியல...
கருணா : டேய் டுபுக்கு.... யார்ரா இங்க குரு ....
குரு : நான்தான் இப்ப இன்னா.. ராமு உம் னு சொல்லு நான் இவன இங்கயே கண்டம் பண்ணிறேன்
கருணா : ஏண்டா நேர்ல பார்த்தா கண்ண நோண்டி காக்காய் போட்ருவேனு சொன்னியாமே , இதா நானே வந்துர்க்கேன் வாடா ஆம்பளையா இருந்தா வந்து கைய வச்சி பார்ரா...
(அங்கிருந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் கருணா , ராமுவை மட்டும் பாவமென்று மன்னித்து விடுகிறார் , )
(ராமு மீண்டும் சால்னாக்கடை ஜெயாக்கவிடமே தஞ்சமடைகிறார் )

கிளைமாக்ஸ் 2 :

குருவின் பேச்சு ராமுவுக்கு தெரியவர குபீரென வெகுண்டெழுந்த ராமு அவரை அடித்து துவைத்து ஏரியாவை விட்டே விரட்டி அடிக்கிறார் , அதை அறிந்த கருணா ராமுவின் உயரிய உள்ளம் அறிந்து மகிழ்ச்சி கொண்டு , அவரை அழைத்து விருந்து வைக்கிறார் மானாட மயிலாட குழுவினரின் நடனம் அரங்கேருகிறது . அந்த வேளையில் சால்னா கடையில் ஜெயாம்மா கருணாவையும் ராமுவையும் தீர்த்து கட்ட ஆட்களுடன் கிளம்புகிறார் , அங்கே பாடல் முடிய ஜெயாவின் ஆட்கள் உள்ளே நுழைய சண்டை துவங்குகிறது . சண்டையின் இறுதியில் கருணாவை கத்தியால் குத்த ஜெயா பாய அதை கண்ட ராமு நடுவில் பாய கத்தி ராமுவின் வயிற்றில் பாய்கிறது , இதனை சற்றும் எதிர்பாராத ஜெயா அங்கிருந்து ஓட்டமெடுக்கிறார் , ராமு மயக்கமாகி கருணாவின் மடியில் சாய கருணா ராமுவின் தியாகத்தே நினைத்து கதறி கண்ணீர் சிந்துகிறார், ஓவென கத்தி அழுத படி ராமுவை தன் கைகளில் ஏந்திய படி மருத்துவமனைக்கு ஓட........திரை இருள்கிறது.....!!!!!!!!!!!!!

____________________________________________________________________________________
இக்கதையில் வரும் சம்பவங்களும் , பாத்திரங்களும் கற்பனையே .
இஷ்டபட்ட கிளைமாக்ஸ படிச்சிட்டு கஷ்டப்படாம உங்க கருத்த(திட்டோ!!! பாராட்டோ !!!!!) பின்னூட்டத்தில தெரிவியுங்க அப்பதான் இனிமேலும் இது மாதிரி பதிவு போடலாமா வேண்டாமானு தெரியும் .

____________________________________________________________________________________