Pages

04 July 2008

பிளாக் எழுதியே நாசமாப் போனவன்!!!!!!!









'' டேய் மாப்ளே!!! என்னடா எப்படி இருக்கே , ரொம்ப நாளா ஆளும் இல்ல , போனும் இல்ல , உயிரோடதான் இருக்கியா!!!! '' சோகமாய் வினவினான் விஜய் .


'' இல்ல மச்சி , கொஞ்சம் பிஸிடா !! அதான் , எப்படி இருக்கே , அம்மா எப்படி இருக்காங்க , ஸாரிடா மாப்பி, போன் பண்ண்னும்னு நெனைப்பேன் அப்புறம் மறந்துருவேன் , '' கெஞ்சும் தோரணையில் அஜித் .


'' ஏன்டா நல்லாதான இருந்த என்ன ஆச்சு , என் மேல எதும் கோபமா , நான் எதும் தப்பா பேசிட்டனா , அப்படி எதும் பேசிருந்தா மன்னிச்சுர்ரா !!! ''


'' ச்சீ அப்படிலாம் ஒன்னுமில்லடா , நான் இந்த வலைப்பதிவுலாம் எழுத ஆரம்பிச்சுருக்கேன் , அதுல என்னோட கதை கவிதை விமர்சனம்லாம் எழுதறேனா அதான்டா , நிறைய யோசிக்க வேண்டி இருக்கு ''


'' வலைப்பதிவுனா?''


'' பிளாகுடா , நீ கூட ஏரிவாயன்னு ஒரு இங்கிலீஷ் பிளாகு வச்சிருக்கியே அது மாதிரி இது தமிழ்டா , தமிழ்ல வலைப்பதிவு ''


''ஸோ வாட் ''


''அதுதான்டா !! நிறைய யோசிச்சு எக்க சக்கமா எழுதறேன் , என்னோட கதை கவிதைலாம் கூட இருக்கு மாப்பி !! என்க்கு புனைப்பெயர் கூட இருக்குடா , ஜாம்பஜார் ஜக்குனு , என் வெப்சைட் அட்ரஸ் ஜக்குபாய் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்டா மறக்காம பாருடா''


'' பாக்குறேன்டா , கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறம் பேசறேன் மச்சி , பாய்டா '' '' பாய்டா மாப்பி'' அஜித் மனதுக்குள் பரபரப்பாக இருந்தது விஜய் தன் வலைப்பூவை பார்த்து விட்டு என்ன சொல்ல போகிறானோ என்று .



'' மச்சி விஜய் பேசறேன்டா !! ''


''சொல்லு மாப்பி ''


''மச்சி உன் பிளாக் பார்த்தேன்டா , நல்லாருந்துச்சி , பட் எனக்கு தான் ஒன்னும் புரியல ''


'' ஏன்டா , என்னாச்சு''


''நீ என்னமோ எழுதிருக்க , ஆனா பரவால்ல , நைஸ் , யாராவது வந்து பாக்குறாங்களா , ??''


அஜித்துக்கு என்னவோ போல் இருந்தது .


'' இது வரைக்கும் 2000 பேர் வந்து பார்த்துருக்காங்க மச்சி , ஆனா யாருமே கமெண்ட்ஸ் போட மாட்டேங்கிறாங்க , தமிழ்மணம்னு ஒரு திரட்டில போட்ருக்கேன் , அது மூலமா , வரவங்கதான் , தினமும் எப்படியாவது ஒரு பிளாக் போட்ருவேன்டா , ரெகுலரா அப்டேட் பண்ணிருவேன் , பட் தினமும் 20 பேர் தான் வராங்க , ரெண்டு நாளாதான் ஒன்னும் போடல , போஸ்ட் போட ஒரு மேட்டரும் கிடைக்கல மச்சி ''


'' சரி உன் பிளாக்ல நான் கமெண்ட் போடறேன் என் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி கமெண்ட் போட சொல்றேன் ஓகேவா , யூ டோண்ட் வொரி ,'' , '' தேங்கஸ்டா மச்சி ''


'' ஒகே உன் லவ்வர் கீதா எப்படி இருக்காடா , '' ,


''மச்சி நான் அவளோட பேசறதில்லடா ''


''ஏன்டா ''


'' நீ வேற , அவளால என் பிளாக்ல இருக்கற கவிதைகள ரசிக்க முடியல , எப்படி என்னோட வாழப்போறா !! என் கவிதை மொக்கையா இருக்காம் , அதுவுமில்லாம அவளோட பேசினா , என்னால என் பிளாகுக்கு மேட்டர் எதும் யோசிக்க முடியறதில்ல அதான்டா!!


''அடப்பாவி இதுக்கு போயி எவனாவது இப்படி பண்ணுவானா !! லூசாடா நீ ? ''


'' மச்சி உனக்கு என்னடா தெரியும் நம்ம எழுத்த நாலு பேரு படிச்சு , அது மூலமா கிடைக்கிற அந்த பாராட்டு அதுனால கிடைக்கிற அந்த சந்தோசம் , அந்த கிக்கே தனிடா ''


''மச்சி , நீ எதுக்கோ அடிமை ஆகிட்டேனு நினைக்கிறேன் , வீட்லதான இருக்க உங்கம்மாவ கூப்பிடு , நான் கொஞ்சம் பேசணும் ''


''மாப்பி அம்மாகிட்ட கொஞ்சம் பிரச்சனைடா , அம்மாகிட்ட சரியா பேசறதில்ல , எப்ப பாரு கம்ப்யூட்டரே கதினு இருக்கேனு என்ன ஒரு நாள் ரொம்ப திட்டிட்டாங்கடா , நானும் அவங்கள கன்னாபின்னானு திட்டிட்டேன் ''


'' அட இழவெடுத்தவனே !! அப்படி என்னதான்டா இருக்கு அந்த கருமம் புடிச்ச பிளாக்ல , அஞ்சு காசுக்கு பிரயோஜனமிருக்கா !!''


'' மாப்பி நான் காசுக்காக எழுதறதில்லடா , மனசு திருப்திக்காகடா , நான்லாம் சுஜாதா, பாலகுமாரன் மாதிரி வரவேண்டியவன்டா , கொஞ்சம் மிஸ் ஆகி இப்படி ஆகிட்டேன் , என் எழுத்துக்கு இங்கதான்டா சரியான அங்கீகாரம் கிடைக்குது ''


''உன்னலாம் திருத்தவே முடியாது , வை போன!! நீயெல்லாம் பிளாக் எழுதியே நாசமாப்போகப் போறடா , தயவு செஞ்சு இனிமே எங்கிட்டயும் பேசாத!!''


பட்டென அலைபேசி இணைப்பை துண்டித்தான் விஜய் .



காலச்சக்கரம் மேலும் 6 மாதங்கள் சுழன்றது


அஜித் தன் காதலியுடன் ஸ்பென்சர் பிளாசாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான் , அங்கே வந்த விஜய் இந்த காட்சியை பார்த்து ஆச்சர்யத்துடன் அஜித்திடம் ஓடிச்சென்று


'' மச்சி !! எப்படிடா இருக்கே , என்னடா என்னலாம் மறந்துட்டியா , மறுபடியும் கீதாவோட பேச ஆரம்பிச்சுட்ட , ஏய் கீ (தா) நாயே நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல !! ''

'' மாப்பி , நானே உனக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன்டா , இப்பலாம் நான் பிளாக் எழுதறதில்லடா , ''


'' அட்ரா சக்கை , இது எப்பருந்து ''


'' மச்சி இந்த பிளாக்னாலே என் வாழ்க்கைல நிறைய விசயங்கள இழந்துட்டேன்டா , அதுவுமில்லாம இந்த பிளாக்ல நல்ல கதை நல்ல கவிதைலாம் எவன் படிக்கிறான் , ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு , நானும் எப்படி எப்படியோ எழுதி பார்த்துட்டேன் ம்ம்ம் ஒரு பய நம்ம பிளாக்க மதிக்கலையே , அந்த விரக்தி எனக்கு வாழ்க்கைய உணர்த்திருச்சுடா , நான் இதனால என் வாழ்க்கையின் எத்தனை முக்கியமான தருணங்களை ரசிக்காம விட்டுட்டேன் , எக்ஸம்பிளுக்கு ஒன்னு சொல்லட்டா , இதோ என் செல்லக்குட்டியோட இந்த அழகான புன்னகையக்கூட ரசிக்க முடியாம போயிடுச்சே ''


கீதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள் . விஜயால் நம்பவே இயலவில்லை . கையை கிள்ளி பார்த்துக்கொண்டான் .


பெருமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றவன் இன்னும் அஜித்தின் இந்த மாற்றத்தை நம்ப இயலாமல் மீண்டும் விஜய்க்கு தன் அலைப்பேசியில் அழைத்தான்


'' மச்சி விஜய்டா '' , '' சொல்லு மாப்பி ''


'' மச்சி உண்மைய சொல்லு நீ உண்மைலயே பிளாக் எழுதறத விட்டுட்டியா ''


''மாப்பி , நீ பெரிய தில்லாலங்கடிடா , கண்டுபிடுச்சுட்டியே !!''


'' அப்ப நீ இன்னும் திருந்தலையா ''


'' மாப்பி இப்பவும் நான் பிளாக் எழுதறேன் , ஆனால் முன்னால மாதிரி இல்ல , பிளாக் மட்டுமே உலகமில்லனு புரிஞ்சுகிட்டேன் , பிளாக் படிக்கிறவங்களுக்கு என்ன புடிக்குமுன்னு தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி எழுத முயற்சி பண்றேன் , அதுனால நிறைய புதுபுது நண்பர்கள் கிடைக்கிறாங்க , ஆனால் ஒன்னு இந்த பிளாக் என் பெர்சனல் வாழ்க்கைய எந்த விதத்திலயும் பாதிக்காத மாதிரி பாத்துக்கறேன் , எதுக்குமே அடிமையாகம அத புரிஞ்சுகிட்டு

பண்ணா நிச்சயம் அந்த விசயத்துல பெரிய ஆளா வரலாம்டா , அது வாழ்க்கையா இருக்கட்டும் பிளாக்கா இருக்கட்டும் , அது இரண்டுக்குமே பொருந்தும் , பலன எதிர்பார்க்காம செய்ற எந்த வேலையும் ரொம்ப அழகாருக்கும் ''


'' அட நாயே , அப்ப காலைல கீதாவ வச்சுகிட்டு சீன் போட்ட?''


'' நீ வேற அவளுக்கு நான் பிளாக் எழுதறது தெரிஞ்சா அவ்ள்ளோதான் , சாமி தயவுசெஞ்சு அவகிட்ட மட்டும் சொல்லிறாத !!''


'' ஓகேஓகே , எப்படியோ போ!!''


''மச்சி இப்பக்கூட நாம பேசினத வச்சிதான் அடுத்த போஸ்ட் ஆரம்பிச்சிருக்கேன்டா ''


'' அட கருமாந்திரம் புடிச்சவனே , நீ பிளாக் எழுதியே நாசமா போ!!! என்ன விடு , பாய் ''


அஜித் தனது புதிய பதிவை தன் கணினியில் தொடங்கினான் '' பிளாக் எழுதி நாசமாப்போனவன்!!!!'' என்று.