Pages

28 July 2008

தமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்றி


இன்று நம் பதிவர்களினூடே பல எழுத்தாளர்களும் மறைமுகமாக உருவாகி வரும் ஒரு சூழல் நிலவி வருகிறது , இது போன்ற வேளையில் இப்புதிய பதிவர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நம் தமிழ்மணம் , பதிவர் புத்தகங்கள் எனும் புதிய பகுதியை துவக்கியுள்ளனர் , அப்பகுதியில் இப்போதைக்கு 3 புத்தகங்கள் குறித்த விபரங்களும் அதைப்பற்றி மற்ற பதிவர்களின் கருத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன , இனி வரும் நாட்களில் இது போல பல பதிவர்களும் எழுத்தாளர்களாக வளரும் சூழல் நிலவும் என்பதே அனைவரது நம்பிக்கையும் . இன்றைய எழுத்தாளர்கள் பதிவர்களை மிகவும் இழிவாக நினைக்கும் இக்காலக்கட்டத்தில் நம் பதிவர்களில் இருந்தும் பல மிகச்சிறந்த எழுத்தாளர்கள் உருவாகி வருவது பதிவுலகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டுவதாகவே கருதுகிறேன் .
இந்த புதிய பகுதியை தமிழ்மணத்தில் இணைத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் அதற்கு காரணமான சக பதிவர் நண்பர்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .