Pages

17 July 2008

அரசு மருத்துவமனை சுகாதாரம் - Dr.புருனோவின் கேள்விகளும் சில சிந்தனைகளும்


மருத்துவர் புருனோ தனது பதிவில் அரசு மருத்துவமனைகளின் சுகாதரத்தின் ஆணிவேர்கள் குறித்து சிலபல கேள்விகளை தனது (அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம் ) பதிவில் வினவியிருந்தார் . அத்தனை கேள்விகளும் அற்புதமானவை . நம்மை (அதாவது நம்மை போன்ற சராசரி மக்களை சிந்திக்க செய்வது ) . சரி ஒரு சராசரி பாமரனாய் அக்கேள்விகளுக்கு நாமும் பதிலளிக்க முயல்வோம் .

கேள்வி .1 : அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களையும் தான்) ?

நல்லா கேட்டிங்க சார் கேள்வி , அரசு மருத்துவமனைக்கு வருவது மென்பொருள் துறையில் பணிபுரியும் சீமான்களோ , படித்து பட்டம் பெற்ற கணவான்களோ , மக்கள் ஒட்டை தேவையான அளவு வாங்கி கொண்டு ஆட்சி செய்யும் மந்திரிகளோ அல்லர் . (மேற் சொன்ன யாராவது நீங்கள் சொல்லும் மாடுகளும் பன்றிகளும் மேயும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரமிருந்தால் மன்னிக்கவும் , தற்குறி பாமரனுக்கு அவ்வளவுதான் அறிவு என்பதை ஒத்து கொள்கிறேன் )

அங்கே வரவன்லாம் காட்டில் ( வயலில் ) வேலை செய்றவன் , கக்கூஸ் கழுவறவன் , சாக்கடை சுத்தம் செய்பவன் , சேரியில் வாழற படிப்பறிவுல்லாத தற்குறிகள் , வரவன் பூரா காட்டு பயலுக ,( அவன் நம்மை போல சுகாதாரம் பற்றி படித்து தெரிந்தவனில்லை ) அவர்கள்தான் இந்த பாழாய் போன அரசு மருத்துவ மனைகளுக்கு வருவது . அவர்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் சுகாதாரம் இருக்காதுதான் . ஒத்துகொள்கிறேன் , அவனுக்கு என்ன தெரியும் ஹைஜீன் பற்றி .

அவன்தான் அப்படி இருக்கிறான் படிக்காத தற்குறி பயபுள்ள .

அரசுமருத்துவமனைகளில் பணியிலுருக்கும் எத்தனை துப்புரவு ஊழியர்கள் சரியாக பணியாற்றுகின்றனர் . அட அரசு மருத்துவமனை சுவர்கள் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வெள்ளளையடிக்க படுகின்றன , எனக்கு தெரிந்தவரை அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை . துப்புரவு தொழிலாளர்களை கண்கானிப்பது யார் , கண்காணிப்பாளர் சரியாக இருந்தால் அரசு மருத்துவமனைகள் நிச்சயம் சுத்தமாகத்தான் இருக்கும் . அங்கே தினமும் சரியான நேரத்திற்கு வேலைக்கு போகும் மருத்துவர்களாவது இந்த அசுத்தங்களை சுத்தம் செய்ய சொல்லலாமல்லவா .

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு , மருத்துவமனைகளில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுருத்த வேண்டியது யார் கடமை . ( ஏன்னா வரவன் பூரா காட்டு பயலுக ,அவன் நம்மளாட்டம் படிக்கல அதான் )

கேள்வி 2 : அரசு மருத்துவமனை படிக்கட்டில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவது யார் – செவிலியரா அல்லது நீங்களா ?

நாங்கதான் சாமி , அது நாங்களேதான் . சரிங்க சாமி நாங்கதான் பேஸன்ட்டுக்கு துணையா வந்தா எங்களுக்கு தங்கதான் இடங்கொடுக்கல ( நாங்க எங்க 5 நட்சத்தி ஒட்டல்லயா சாமி தங்க , அப்புறம் சோறு திங்க ) திங்கவாவது இடங்கொடுக்கலாம்ல சாமி ,ஒதுக்கு புறமா . சாப்பிடற இடத்த சுத்தமா வச்சிக்க எங்களுக்கு தெரியலனா என்ன உங்காளுங்க தான் ஷிப்ட்டு போட்டு சுத்தம் பண்றாங்கள்ள (படிச்சவங்க ) சுத்தம் பண்ண வேணாம் , குறஞ்சது சொல்லலாம்ல இப்படி அசுத்தம் பண்ண வேணாமுன்னு .

கேள்வி 3 : ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மாடு, பன்றி மேய்ப்பது – ஆய்வக நுட்பனரா அல்லது நீங்களா ??? அதை தடுக்கும் மருத்துவ அலுவலரிடம் அந்த பகுதி அரசியல்வாதி மூலம் பேசுவது மருந்தாளுனரா அல்லது நீங்களா ??

யாருங்க அத உள்ள விட்டது , உங்காஸ்பத்திரில செவிலியர்கள் , வாட்ச்மேன்கள்ளாம் இல்லையா . காசு குடுத்தா மாடு என்ன மாடர்னா என்ன வேணா பண்ணலாம்ங்க ஆஸ்பத்திரியில . அது சரி ஆரம்ப சுகாதார நிலையத்தில யாரு விவசாயம் பண்ண ஆரம்பிச்சா மாடு அங்கன வந்து மேய ( மாடு அங்க வந்து மேஞ்சு என்னத்த திங்க போவுது வீணாபோன சிரிஞ்சியும் , பஞ்சையுமா? ) . பன்றி மேயுதுனா அதுக்கு காரணம் உங்க துப்புரவாளர்களின் துப்பில்லாத தனம்தான் . ஏன்னா பன்றிகள் எங்க மேயும்னு உங்களுக்கே தெரியும் .

அப்புறம் இதுக்கு போயி அரசியல்வாதிய விட்டு மிரட்டுறதா சொல்றத கேட்டா , சிரிப்புதான் வருது , ஐயா மாடு மேய்க்கிற பயலுக்கு அதெல்லாமா தெரியும் , அப்படியே அது போன்ற விசயத்துக்கெல்லாம் ஒரு அரசியல்வாதி வருவரா ( ஒரு வேளை அது அப்போலோல வைத்தியம் பாக்கற , பண்ணையார் மாடா இருக்கும் , அவருக்கென்ன அவரும் உங்களாட்டம்தான் )

கேள்வி 4 : மருத்துவமனை என்று மட்டும் அல்ல ஏறத்தாழ அனைத்து அரசு அலுவலகங்களும் இப்படி இருக்க காரணம் அரசு ஊழியர்களா, நீங்களா ??

ஆமாமா , அந்த அரசு அலுவலகங்கள்ல்லாம் சுண்ணாம்ப பார்த்து எத்தனை வருஸமாச்சுனு அந்த சுவருக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும் . அதே மாதிரி வெத்தலை பாக்கு போடற அரசு அலுவலர்னு யாருமே இல்ல , இதுக்கு காரணமும் மக்கள்தான் ஒத்துக்கறோம்ங்க.

கேள்வி 5 : கலவரத்தில் விவேகம் பேரூந்து, கே.பி.எண் எல்லாம் பத்திரமாக போகும் போது அரசு பேரூந்து மட்டும் உடைவதற்கு காரணம் போக்குவரத்து துறையா, பொது மக்களா.???

முதலில் ஒன்றை தெளிவு படுத்துங்கள் , கலவரம் செய்வது பொதுமக்களா? , பஸ்ஸை உடைப்பது பொதுமக்களா??

பொதுமக்கள் என நீங்கள் கூறுவது ஒட்டு மொத்த சமூகத்தையும் சேர்த்துதான் என்பது உங்கள் வாதமாக இருப்பின் , கலவரம் செய்வது மருத்துவர்கள்தான் என்பது என் வாதம் ( மருத்துவர்களும் இச்சமூகத்தின் ஒரு பகுதியன்றோ )

நீங்கள் சொல்லும் கேபிஎன் ம் விவேகமும் எத்தனை பேருந்துகளை இயக்குகின்றன??, அதில் எத்தனை பேருந்துகள் கலவரம் நடக்கும் பகல் வேளையில் இயங்குகின்றன??

பாவங்க பொதுமக்கள் அரசாங்கம் எவ்வளவுதான் கட்டணத்த உயர்த்தினாலும் பேசாம கேக்கறத குடுத்துட்டு பயணிக்கிறான்

கலவரம் பண்ற படிக்காத பாமரனை கலவரத்திற்கு தூண்டிவுடுவது நம்மை போன்ற படித்தவர்கள் தானே . WE THE PEOPLE .

இந்த பிரச்சையில் ஒட்டு மொத்தமாய் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தியாதாலேயே இந்த விளக்கம் , அதற்காக மக்கள் எந்த தவரும் செய்யவில்லை என நான் சப்பைகட்டு கட்டவில்லை , அதில் மக்களின் பங்கு அதிகமே , ஆனால் சரியான ஊழியர்களும் , தக்க மேலாண்மையும் ( தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல ) , அரசின் நிதியும் ,இருந்தால் இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது . மக்களுக்கு மருத்துவ மனை சுகாதாரம் குறித்த அறிவை அதிகப்படுத்தினாலே போதும் ஓரளவு பிரச்சனை குறையும் . அதிகமான அளவு மக்கள் குவியும் அதுவும் பாமர மக்கள் வரும் இடங்களில் அதிகமான உருப்படியான துப்புரவு தொழிலாளர்களை நியமித்து அவர்கள் சரியாக இயங்கினாலே போதும் அரசு மருத்துவமனைகள் இந்தரலோகம் போல ஜொலிக்கும் .

அதில் மருத்துவர்களின் பங்கு மிகச்சிறியதே , அதனால் அந்த பிரச்சனையில் அவர்களை சாடுவது அர்த்தமற்றது . அவர்களால் இயன்றது இது போன்ற பிரச்சனைகளில் தலையிட்டு அரசிடம் இது குறித்து முறையிடலாம் . ( போராட்டம் வேண்டாம் , பிறகு தடியடி போன்றவைகளை சந்திக்க நேரிடலாம் )

அரசு மருத்துவமனைகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் கூட நல்ல பலன் கிடைக்கும் என்பது அடியேனின் கருத்து .