Pages

30 September 2008

சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008

சென்னைவாழ் வலை பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு .

இந்த வார இறுதியில் பழம் பெரும் பதிவர் ( வரும் போது பழம் கொண்டு வரவும் ) ஆஸ்திரேலியாவாழ் பதிவரான பொட்டிகடையார் சென்னை வருகிறார்.

அவரை சந்திக்கவும் , மேலும் சென்னையில் மிகச்சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு எதுவும் நடத்தாத காரணத்தால் , பல புதிய பதிவர்கள் உருவாகி வரும் சூழலில் அவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பயன் பெறவும்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கடை(எந்த கடை என்று நான் சொல்லவும் வேண்டுமா) விடுமுறையாதலால் , அதனால் பாதிக்கப்பட்ட சென்னைவாழ் பெருங்குடி மக்களின் சிரமத்திற்கு இன்றைய ஆளும் அரசின் அராஜக போக்கை கண்டித்தும் ஒரு சிறிய அளவிலான அறப்போர் புரியவும் உத்தேசித்துள்ளோம் .

இந்த சந்திப்பில் ஏற்கனவே அடியேன் ,தல பாலபாரதி , மருத்துவர்.புருனோ , நர்சிம் ,ஜ்யோவ்ராம் சுந்தர் , லக்கிலுக் , முரளிக்கண்ணன் , புதுகை அப்துல்லா , தாமிரா ( வருவார் என்ற நம்பிக்கையில் போடுகிறேன் ) , பதிவர் செல்வம் , சென் , ஆகியோர் வருவதாக உருதியாகத்தெரிகிறது . இச்சந்திப்பில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , மெரினா பீச்சில் இடப்பற்றாகுறை இருந்தால் மட்டுமே பிரச்சனை .

புதிய பதிவர்கள் கட்டாயம் கலந்துகொண்டு பதிவுகள் மற்றும் பதிவர்கள் குறித்த உங்கள் சந்தேகங்களை அங்கே வரும் பல மூத்த பதிவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் . நானும் கேட்டு தெரிந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன் .

அதனால் சென்னை பதிவர்களே அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்


சந்திப்பு நாள் - 04-10-2008

நேரம் - மாலை 6.00 லிருந்து

இடம் - சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறம்

வாங்க பாஸு... கலக்குவோம்.....

மேலதிக விபரங்களுக்கு..

எனது மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
எனது அலைபேசி எண் - 9941611993

_____________________________________________________________________________________