Pages

17 September 2008

தோசாவதாரம் !!

தோசாவதாரம் :


'' என் வணக்கத்திற்குரிய தமிழ்மக்களே இந்தியர்களே மன்னார்குடி பஞ்சாயத்து போர்டு தலைவர் குப்புசாமி, அண்டார்டிகாவில் ஐஸ் வண்டி ஓட்டும் ஜம்புலிங்கம் அண்ணாச்சி , கேளம்பாக்கம் குஜிலி கும்பாவும் அமர்ந்திருக்கும் இந்த தரித்திர விழா மேடையில் நானும் பேச வந்த கதை பெரிய கதை ஓலகமே சம்பந்தப்பட்ட கதை ,

ஏன் இது ஒரு மாமி கதையும் கூட , என்னடா பீஸாகடை பீஸா மாஸ்டர் மாமி கதை சொல்கிறானே என்று ஒரு ஐயம் எழலாம் ,

இங்கே மத்தியில் அமர்ந்திருக்கும் இந்த ஜலஜாமாமியும் இந்த கதையில் ஒரு முக்கிய பாத்திரம் அதனால் இந்த மாமியின் கதையையும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது , ஜலஜா மாமிக்கு நிறைய டமால் டுமீல் கதையுண்டு அதை இங்கே சொன்னால் இக்கதை பிரசுரமாகாது இருந்தாலும் ஜலஜா மாமி சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு அக்கதை சொல்ல குறைந்தது நாம் 50 வருடங்களாவது பின்னால் போக வேண்டும் சோ ( இங்கிலீசு SO ) 1958 , பீஸாஹட்டும் டோமினோசும் இந்தியாவிற்குள்ளும் இந்தியர்களின் வயிற்றுக்குள்ளும் புகாத நூற்றாண்டு தோசையும் ஆப்பமும் மோதி விளையாட வேறு ஐயிட்டம்கள் இல்லாத காலம் அதனால் அதன் ரசிகர்கள் வாயிலாக தன்னுள் மோதிக்கொண்ட நூற்றாண்டு ''

'' நாய்க்கும் சரி மனிதனுக்கும் சரி ருசிகண்டு விட்டால் தொல்லைதான் , கொருக்குபேட்டை கவுன்சிலர் காளியப்பனுக்கு ஆப்பம் மிகவும் பிடித்து போனது , பசி ருசியானது , ருசி ஓசியானாது , அது வரை மாமி மெஸ்ஸில் ஆப்பத்துடன் ஒண்டி குடித்தனம் நடத்தி வந்த தோசையை கவுன்சிலர் காளியப்பன் நிறுத்த சொன்னான் , ''

கவுன்சிலர் ஆட்கள் தோசைகல்லை பெயர்த்து எடுக்க , அங்கே வருகிறார் ரங்கன் ( அந்த கடை தோசை ஸ்பெசலிஸ்ட் , அவரது சிறப்பு 18 வகை தோசைகள் ) , தோசைக்கல்லை பெயர்த்து எடுக்கும் அடியாட்களை அடித்து நொருக்குகிறார் ( அப்படித்தான் இயக்குனர் சொல்லி தந்திருக்கிறார் ) ,

'' சுங்கம் பஸ் ஸடான்டில கடலைவித்த காளியப்பன்கிட்ட சூடாக வேணானு சொல்லு , அப்படி சொன்னது ஆருனு கேட்டா இந்த ரங்கன்தான்னு சொல்லு இன்னா!! ,'' ரங்கன் சூடாகிறார் தோசைகல்லின் மேல் கரண்டியால் ஓங்கி அடிக்கிறார் .

காளியப்பன் காண்டாகி மேலும் ஆட்களை அனுப்பி ரங்கனை அடிக்க சொல்கிறார் , சமையலறை கதவை இருக்க பிடித்து கொண்டு ரங்கன்

'' சாதா தோசை , சுபெசல் தோசை , வெங்காய தோசை , ஆனியன் ரவா , etc etc.. ( கோவில் புரோகிதர்கள் போல படித்துக்கொள்ளவும் ) '' என்று கதறியபடி கதவை பிடித்துகொண்டிருக்க , காளியப்பன் ஆட்கள் அடித்த அடியில் கதவு இரண்டாய் பிளக்க ராமு தெரித்து அனல் பறக்கும் தோசைக்கல்லில் விழுகிறார் , அவரையும் அகண்ட பிரமாண்டமான தோசைக்கல்லையும் சேர்த்து இழுத்து வருகிறார்கள் ஆட்கள் ,

இனி வசனங்கள் ,

காளியப்பன் : இன்னா ரங்கா , பாரு உம்புள்ளைங்கள்ளாலாம் எப்படி கதருதுனு , மருவாதயா நான் சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத

ரங்கன் : இன்னா எம் பாட்ட என்னாண்டயே பாடுறியா .. மவனே நான் செத்தாலும் இத பண்ணமாட்டேன்

காளி : மவனே நீ போடற வெங்காய தோசை , கீரை தோசை , ரவா தோசைலாம் தின்னு வயிரு செம கப்பு மாமு

ரங்கன் : பாத்தியா நைனா உன் வாயலயே எத்தினி தபா தோசை தோசைனு சொல்ல வச்சிருச்சு பாரு நம்ம தோசை

இப்படி ஒரு கலாய்ப்பை எதிர்ப்பார்க்காத காளி கடுப்பாகிறார்

காளி : இன்னாடா ஒன்னோட படா பேஜாரா பூடுச்சு , சரி ஒன்னு பண்ணு உன் தோசைகல்லுல எனக்கு ஒரு ஆப்பம் சுட்டு குடுத்தினா உன்ன உயிரோட விட்டுடறேன்

ரங்கனின் மனைவி காண்டாகிறார் ,

ரங்கனின் மனைவி : ஏ ஒன்னொட படா ரோதனையாக்கீதே பேசாம அந்தாளு சொல்ற மாறி ஆப்பம் சுட்டு குடுக்க வேண்டியது தான...


அனைவரும் ரங்கனை தோசை போடச்சொல்லி வற்புறுத்துகின்றனர் .


ரங்கன் தனது தோசை கல்லை காய வைக்கிறான் அதில் தண்ணீரை தெளித்து ஈர்குச்சி விளக்கமாறால் ஒரு விளாசு விளாசி மாவை எடுத்து தோசை சுடுகிறான் , காளி கோபமடைந்து அவனை அந்த காய்ந்து போன தோசைக்கல்லுடன் வைத்து கட்டி கூவத்தில் போட உத்தரவிடுகிறான் ,

பாடல் ஆரம்பமாகிறது , ரங்கன் அடித்தொண்டையில் கத்துகிறான்


கல்லை மட்டும் கண்டால் தோசை தெரியாது

தோசை மட்டும் கண்டால் ஆப்பம் கிடையாது


ஆப்பமாவிலே தோசை சுடலாம்

தோசை மாவிலே முடியாது


ஆப்பமாவிலே தோசை சுடலாம்
தோசை மாவிலே முடியாது



பூனைகண்ணில் பார்த்தால் எல்லாம் ஆப்பம்தான்

யானைகண்ணில் பார்த்தால் யாவும் தோசைதான்


மாவு தீர்ந்த பின்பு மாமிமெஸ்ஸில் தோசைகிடையாது

சட்னி மட்டும் தீர்ந்து போனால் ஆப்பம் - தின்ன முடியாது

பாடல் முடிகிறது...

டார்ச்சர் செய்யப்பட்ட ரங்கன் கூவத்தில் வீதப்படுகிறான் ஆழமில்லா பகுதியில் வீசப்பட்டும் அந்த ஆற்றின் கப்பு தாங்க இயலாமல் கதறி கதறி கண்மூடுகிறான் ,

''ரங்கன் செத்ததற்கு காரணம் தோசையுமல்ல , அந்த ரங்கன் நம்பி நாசமாய் போனதற்கு காரணம் ஆப்பமும் அல்ல .... தின்றே செத்தவர்கள் கதை அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் உண்டு ,ஹோட்டல் தோசை சரியில்லையென்றால் அதை கூண்டில் ஏற்றி குற்றம் சாட்டலாம் , வீட்டு தோசையை குற்றம் சொன்னால் தங்கமணிகளிடம் அடி மட்டுமே மிஞ்சும் , இந்த வீட்டு சக்தி வாய்ந்த தோசைகளின் மேல் தோசைகளை அடிக்கினால் நிச்சயம் அதன் பின்புலத்தில் ஒரு மாபெரும் சக்தி நிச்சயம் இருக்கும் , உதாரணத்திற்கு மனைவி , நாம் என்னதான் அலுவலகத்தில் இருந்தாலும் நம்மை வீட்டிலிருந்தே ஆட்டிவைக்கும் சக்தி மனைவிக்கு மட்டுமே உண்டென்று சொன்னால் அது மிகையாகாது , பசி வந்த நேரத்தில் காய்ந்த தோசைகளால் நம்மை காலி செய்யும் மனைவியும் சரி , கெட்டு போன சட்டினியுடன் வரும் ஹோட்டல் தோசையும் சரி பசிக்கும் போது நமது பசியை நிச்சயம் தீர்ப்பதில்லை , உதாரணம் டிசம்பர் 27 2003 கிரிவலபவன் வாந்திபேதி , சென்னை மயிலையில் பல நூறு பேர்களின் வயிற்றில் கபடி விளையாடிய தினம் , சரி அதற்கும் நம் கதைக்கும் என்ன சம்பந்தம் , மேற்கத்திய சிந்தனையில் கேப்மாரி தியரி என்று ஒன்று உண்டு இந்த உலக விஞ்ஞான தத்துவப்படி உலக வாந்திபேதிகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனபதாகும் , எடுத்துக்காட்டாக அருந்து விழும் ஒரு சிறிய பல்லியின் வால் பல ஆயிரம் பேரின் வாந்தி பேதிக்கு காரணமாய் இருக்கக்கூடும் என்பதே தத்துவம் , என் கதை ஒரு வாந்தி பேதியில் தொடங்கி ஒரு பல்லியின் வாலில் முடிகிறது


கதையின் இரண்டாவது அத்தியாயம் நுங்கம்பாக்கம் , பீஸா பாயிண்டில் துவங்குகிறது கதை சொல்லும் நானே கதாநாயகன் ஆனேன் , நானும் ஒரு வகையில் டமால் டுமீல் குஜிலி கும்பாதான் , ஆம் ராயபுரம் ரவுடி ராக்கப்பனின் மகனாய் பிறந்து , தோசை சுடுவதில் பல பட்டங்கள் பெற்று இன்றைக்கு கொலைகாரன்பேட்டையில் தோசைக்கல்லில் டமால் டுமீலென பீஸாகளைகண்ட

குஜிலி கும்பன் , அவசர சேவைக்காக நூறு பீஸாக்களை உற்பத்தி செய்யும் வேலையில் என்னை போல பல மாஸ்டர்களும் கடினமாக உழைத்துகொண்டிருந்தனர் , என் பெயர் கோயிந்தசாமி , என்னோட பசங்க இன்னானு கூப்புடுவானுங்கோ தெர்மா .. கோமி கோமி.......

____________________________________________________________________________________

TO BE CONTINUED....AGAINST PEOPLE'S INTREST....

___________________________________________________________________

Photo Courtesy - Dasavatharam Audio Wrapper