Pages

09 October 2008

வாசகர்கடிதம் - 10-10-2008

நமது வலைப்பூவின் வாசகர் மற்றும் விரைவில் தானும் ஒரு வலைப்பூவை துவங்கவிருக்கும் திரு.ரவிஷங்கர் அவர்கள் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு . இதுவரை வந்த கடிதங்களிலேயே இக்கடிதம் மிகசுவாரசியமாக இருந்ததால் இதை இங்கே பதிகிறேன் .



கடிதம் :

_____________________

அன்புள்ளஅதிஷா ,

உங்கள் கதைகளை படித்தேன். (காலமும்காதலும்,கேள்விகளில்லா விடைகள்,இறுதிமுத்தம்,படிக்கக்கூடாத குட்டிக்கதைகள், சில்க்,ஷகிலா,நமீதா மற்றும் கிருஷ்ணப்பிள்ளை). அதை பற்றிய என் எண்ணங்கள்.

வாழ்கையை கூர்ந்து கவனிக்கிறிரீகள்.கதை கரு நன்றாக இருக்கிறது .சில வரிகள் அற்புதம். வயது மீறியா அனுபவம். ஆனால் அதை கதைக்கு கொண்டு வரும்போது, முரசொலி கலைஞர், கண்ணாதாசன் /நா.பா./அகிலன் நடிகர் எஸ்.எஸ்.ஆர் இவர்களை கூட்டிகொண்டு வர கூடாது. மற்றும் காவிய தமிழ் கண்டிப்பாக மறக்க படவேண்டும். காவிய தமிழ் எழுதினால் கதை நீர்த்து போய் விடும் .

ராமராஜன் உடையில், அதே விக்கில்,லிப்ஸ்டிக் பூசிய உதட்டோடு பிஸ்சா சென்டெரில் ஒருவனை பார்த்தால் எப்படி இருக்கும் ?

நாம் இருப்பது .2008..... முரசொலி கலைஞர் பாணியில் கதை இருக்கிறது. "பராசக்தி" சிவாஜி வசனம் இருக்கிறது. புரட்சி நடிகர் எஸ்.எஸ்.ஆர் பேசுகிறார் . கண்ணாதாசன் /நா.பா./அகிலன் போல வருணனை . . .தானாக உணர்ச்சிகள் வாசகனிடத்தில் எழ வேண்டும் . உணர்ச்சியை "புஸ்க் புஸ்க் " என்று காத்து அடித்து ஏற்றுகிறீர்கள். உப்பி போய் வெடிக்கிறது . காட்சி தளங்களும் கதை சொல்ல வேண்டும். இது சுவிஸேஷ கூட்டம் இல்லை.

கோனார் நோட்ஸ் போடக்கூடாது . பிரசார நெடி அடிக்க கூடாது சுருங்க சொல்லணும் .மெலோட்ராமா கூடாது .பாலசந்தர் காலம் முடிந்து இப்போது பருத்தி வீரன் காலம். வார்த்தைகளை தலைகாணியில் பஞ்சு அடைப்பது போல் கதையில் அடைக்கிறீர்கள். செயற்கைததனம் . Romanticise செய்யாக்கூடாது. தெரியாமல் செய்ய வேண்டும்.

. காலம் போக போக பக்குவம் வரும் .விடலைத்தனம் போகும் . நிறைய படிக்க வேண்டும் .படித்தல் மட்டும் போதாது. உள் வாங்க வேண்டும் .


நீங்கள் படிக்க வேண்டியது : சிறு கதை: "தனுமை" வண்ணதாசன் “செண்பகபூ" தி .ஜா. "நாற்காலி" கி.ரா. "அப்பாவும் ..." மா.வே.சிவகுமார் “கடவுளும் கந்தசுவாமி பிள்ளையும்” (பு.பித்தன் ) ம்ற்றும் பிரபஞ்சன் கதைகள் ..


கண்டிப்பாக "தனுமை" படிக்க வேண்டும்

பார்க்க வேண்டியது: “படங்கள்: கலாட்டா கல்யாணம் , அவள் அப்படித்தான் ,Monsoon Wedding ,( மெலிதான நகைச்சுவை) சோப்பு சீப்பு கண்ணாடி (வித்தியாசமான கதை). Gandhi movie.


வாழ்த்துக்கள்

கே.ரவிசங்கர்
___________________________

கடிதம் அனுப்பிய திரு.ரவிஷங்கர் அவர்களுக்கு நன்றி.
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா ;-(
____________________________________________________________________________________