Pages

31 October 2008

வாசகர்கடிதம் - 31.10.08 ( FROM அன்பு நண்பர் அகில் )

கடந்த வாரம் அக்டோபர் 26ஆம் தேதி வந்த மின்னஞ்சல் கடிதம் . அவரது தளத்தில் சாருவை விமர்சித்து நிறைய பதிவுகள் எழுதி வந்தார் . நேற்று அத்தளத்தை பார்த்தபோது அதில் பொறுக்கி அகில் செத்துவிட்டான் என எழுதியிருந்தது . அகிலே அகிலை கொன்று விட்டாரோ . அதிஷா அதிஷாவை கொல்ல முயற்ச்சிப்பது போல . எப்படியோ ''நான்'' அழிந்தால் சரிதான் .


*************************


அகிலின் கடிதம் :

அதிஷா அவர்களுக்கு உங்கள் வலைப்பூவை சில நாட்களாக வாசித்து வருகிறேன். உங்கள் கதைகளையும், விமர்சனங்களையும் வாசிக்கிறேன்.

விமர்சனங்கள் அருமை. கதைகள் எழுதும்போது பொறுக்கி பெருமாளை போல நிறைய ஆபாச வார்த்தைகளை எழுதுகிறீர்கள். தமிழ் இணையத்துக்கு ஒரே ஒரு பொறுக்கி பெருமாள் போதும். எல்லோருமே பொறுக்கியாகி விட்டால் தமிழும் பொறுக்கி மொழி ஆகிவிடும்.

இனிமேல் நீங்கள் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுவதை தவிர்க்கவும். மீறி எழுதினால் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பல்ல. பொறுக்கி பெருமாளுக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அதே மரியாதை உங்களுக்கும் கிடைக்கும்.

மற்றபடி நன்றாக எழுதிவருகிறீர்கள். அரசியல் குறைவாகவும், மசாலா அதிகமாகவும் இருக்கும் இப்போதைய நிலையை அப்படியே தொடரவும். ஆபாசத்தை மட்டும் குறைத்துகொள்ளவும்.

அகில்

http://akilpreacher.blogspot.com/
அக்டோபர் - 26
7.45. PM

**************************

எனது பதில் கடிதம் :

அன்பின் அகிலுக்கு

வணக்கம் தங்கள் கடிதம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி ,.தங்கள் விமர்சனங்களுக்கு நன்றி . தங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள இயலாது . நான் நானாகவே இருக்க எண்ணுகிறேன் . அதையே நமது தளத்தை படிக்கும் நமது வாசகர்களும் விரும்புகிறார்கள் .
நீங்கள் என்னை பொறுக்கி அதிஷா என்று சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சியே .

அன்புடன்

அதிஷா.
31.10.2008


************************