Pages

26 November 2008

மீண்டும் ஒரு பேய்க்கதை....!! (18+)




மழைப்பெய்யும் நள்ளிரவு . பேய்க்கதைகளுக்கு அதை விட சிறந்த வானிலை தேவையா . நான் மழையில் நடந்தபடி ஓடிக்கொண்டிருந்தேன் , முழுதுமாய் நனைந்திருந்தேன் . காற்று சூறாவளி போல அடித்ததது . தினமும் இரவில் அந்த சாலையில் போகும்போதும் வரும் போதும் அந்த பாழடைந்த பங்களாவை பார்க்க நேரிடும் .


எனக்கு பாழடைந்த பங்களாக்கள் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு , வாழ்வில் என்றாவது ஒரு தருணத்தில் எனது மீதிவாழ்க்கையை இப்படி ஒரு வீட்டில் தனியாக கழிக்கவேண்டும் என்று அடிக்கடி எண்ணம் வருவதுண்டு . அதற்கான வேளை இன்னும் வரவில்லை என்று ராபர்ட் மாமா கூறுவார் .


''ரோஜா....! நீ இன்னும் வளரணும்.. அதுக்குலாம் வயசிருக்குமா.. உனக்கு முதிர்ச்சி பத்தாது அதுவும் நீ தனியா இருந்தா ஆபத்துதான் ''


ராபர்ட் மாமா கூறிய அந்த வார்த்தைகளை என்னால் என்றுமே மறக்க இயலாது . அவரால்தான் இன்று நான் ஒழுங்காய் இருக்கிறேன் . எனக்கு ரோஜா என்று பெயர் வைத்தது கூட அவர்தான் .


அந்த பங்களாவை கடக்கும் போது அங்கிருந்து ஒரு அலறல் சத்தம் . ஆஆஆஆஆஆஆவென . அந்த ஓலி என்னவோ செய்தது . ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைய பயம் . தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கருப்பு கேட்டை திறந்து அந்த அகண்ட பங்களாவின் வாயிலில் மெதுவாக நடந்து சென்று கதவருகில் நின்றேன் . மீண்டும் அலறல் சத்தம் . ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓவென .


இம்முறை எனக்கு வயிற்றில் புளித்த கரைசல் உண்டாகியிருக்க வேண்டும் . கதவை தட்டினேன் . காலிங் பெல்லை காணவில்லை . கதவை பலமாகதட்டினேன் . தட் தட் தட் . யாருமில்லை . மேலும் தட்டினேன். கதவு திறந்து கொண்டது . மெதுவாக அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தால் உள்ளே ஒரு வயதான பெரியவர் மட்டும் தனியே அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார் . டிவியில் ஒரு கற்பழிப்புக்காட்சி, கோலங்கள் சீரியலில் . நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் . அப்போதெல்லாம் நான் தேவயானியின் அதி தீவிர ரசிகையாய் இருந்தேன் . இன்னுமா இந்த பாழாய் போன நாடகம் முடியவில்லை . கிழவன் என்னை பார்த்ததும் எழுந்து நின்று அவசர அவசரமாக தனது வேட்டியை சரிசெய்து கொண்டான் .


''யாருமா.. நீ ..........என்ன வேணும் ஏன் உள்ள வந்த '', பேய்ப்படங்களில் வரும் கிழவன் போன்ற தொணியில் பேசினான் . எனக்கு நடுங்கியது . இதுதான் முதல்முறை இது போன்ற சந்தர்ப்பத்தை அனுபவிப்பது . அலறல் கேட்டு வந்தேன் என்றால் எங்கே திட்டிவிடுவானோ என பயந்து போய்..... அமைதியாய் நின்றேன் . அவனுக்கு பற்கள் கரிய நிறத்தில் , முகமெல்லாம் அம்மைத்தளும்புகள் , ஆள் பார்க்க ஆறடி உயரத்தில் ராட்சசன் போல இருந்தான் கிழவன் . அவனது முகத்தில் ஒரு கள்ள சிரிப்பு வேறு பயமுறுத்தியது . தவறான இடத்தில் மாட்டிக்கொண்டோமோ என்கிற பயம் வேறு .


''யாரைப்பார்த்தும் பயப்படாதே, உன்னை பாத்துதான் உலகம் பயப்படணும் , நீ குழந்தை இல்ல , உன்னை பயமுறுத்தும் உலகத்தை நீ பயமுறுத்து ''


ராபர்ட் மாமா சொன்னது மீண்டும் ஒரு முறை காதில் ஒலித்தது .


''சார் மழை அதிகமா பெய்யுதேனு இப்படி ஒதுங்கினேன் , நாலஞ்சு ரவுடி பசங்க துரத்தினாங்க அதான் உள்ளே வந்துட்டேன் சார் ! ''


''ஓஓஓ ....... '' என்றபடியே மழையில் நனைந்திருந்த எனது ஆடைகளினூடே மெலிதாக தெரிந்த எனது சேலையை மீறி உள்ளாடை இல்லாத ரவிக்கையின் உள்ளே அவனது கண்கள் பரவத்துவங்கியிருந்தது .

என் கைகளால் என் மார்பை மறைத்துக்கொண்டேன் .

''சரிமா கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடு '' என்றான்.

அவன் கண்கள் மார்பிலிருந்து இடுப்புக்கு வந்திருந்தது . இன்னும் விட்டால் அவன் இடுப்புக்கு கீழேயும் பார்க்க நேரிடலாம் என்று அங்கிருந்து அருகில் இருந்து அறையின் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டேன் .

''இந்தாம்மா துடைச்சுக்கோ ..... துணியெல்லாம் நனைஞ்சிருக்கு பாரு.. இந்தா இந்த நைட்டிய போட்டுக்க ''

''சார் இந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருக்கீங்களா !! '' என்றபடியே துண்டை வாங்கிக்கொண்டேன் . குளிர ஆரம்பித்ததால் நைட்டியையும் வாங்கிக்கொண்டேன் .

''ஆமா.. நான் மட்டும்தான் ''

''சார் நீங்க கொஞ்சம் வெளிய போனா நான் , டிரஸ் மாத்திப்பேன் ''

''ஓ மாத்திக்கோயேன்... '' கிழட்டுச்சிரிப்பு , காமச்சிரிப்பு , எரிச்சலூட்டும் சிரிப்பு .

தலையை நன்கு துவட்டிவிட்டு , எனது சேலையை விலக்கி விட்டு , ஜாக்கெட்டுகளின் ஊக்குகளை கழட்ட முயல்கையில் ஒருசந்தேகம் அவன் எட்டி பார்க்கிறானோ என்று , கதவருகில் மெல்ல மெல்ல அடியெடுத்து வந்து துவாரத்தில் பார்த்தேன் . ஒரு சின்ன ஃபைலால் அவன் தனது கத்தியை கூர்படுத்திக்கொண்டிருந்தான் . எனக்கு மீண்டும் பயம் தொற்றக்கொண்டது .
எல்லா உடைகளையும் களைந்துவிட்டு சாவகாசமாய் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு . நிர்வாணமாகி , நைட்டியை அணிந்து கொண்டு கதவை திறந்தால் , கதவருகில் கிழவன் . புன்முருவலிட்டான் . பயம் வயிற்றை கவ்வியது .

''என்னம்மா , டிரஸ் மாத்திட்டியா !! ''

''மாத்திட்டேன் சார் ''

''சரிவா டீ சாப்பிடு ''

''வேண்டாம் சார் உங்களுக்கு ஏன் சிரமம் ''

''பரவால்லம்மா , என்னை உன் அங்கிள் மாதிரி நினைச்சுக்கோ '' , அந்த கிழவனுக்கு என் தாத்தாவை விட ஆறு வயது அதிகமிருக்கும் . அங்கிளாம்.

அவன் கொடுத்த டீயை பருகினேன் . அது மிகவும் கசப்பாக இருந்தது , எதையோ கலந்திருக்க வேண்டும் . இருவரும் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தோம் .டிவி சேனல் மாறிக்கொண்டே இருந்தது . டிவியில் மிக ஆபாசமான காட்சிகள் திடீரென வரத்துவங்கியது . கிழவன் கையில் ரிமோட் . முகத்தில் ஆபாசமான ஒரு புன்னகை . எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .

அவன் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு எனது தொடைகளின் மீது கையை வைத்தான் .

''சார் வேண்டாம் சார் தப்பு சார் '' வாய் வேண்டாம் என்றாலும் உடல் சரியென்றது . இதற்காகத்தான் இத்தனை நாளாய் காத்திருந்ததைப் போல .

கண்ணிமைக்ககும் நேரத்தில் அவன் தனது கைகளால் என் கழுத்தைசுற்றி அவனருகில் இழுத்து , வெறியோடு கன்னத்தில் முத்தமிட , கன்னத்திலிருந்து உதடு , உதட்டிலிருந்து கழுத்து , கழுத்திலிருந்து , மார்பு என உதடுகள் கபடி ஆடத்துவங்கியிருந்தது.

''சார் ப்ளீஸ் என்ன விடுங்க '' வாய் மட்டும் கூறினாலும் , உடல் அங்கேயே இருந்தது , அந்த கிழவனின் அணைப்பில் . எனது நைட்டியின் மேல் பட்டன்களை களைய முயல ,அதை தடுக்க மனம் நினைத்தாலும் கைகள் வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தது . என் உடலில் ஏதோ மாற்றம் . ஏன் என் உடல் மனதோடு ஒத்துழைக்கவில்லை . தெரியாது . சூனியத்திற்கு கட்டுப்பட்டது போல அப்படியே அவனது சேட்டைகளை ரசித்துக்கொண்டிருந்தது .

''சா...............ர்ர்.............. வேண்டாம்.............. ப்.......ளீஸ் ''

என்னையும் அறியாமல் கிழவனை இப்போது நானும் கட்டியணைத்திருந்தேன் . எனது திறந்த மார்புகள் கிழவனின் மார்போடு அழுந்தியிருந்தது . ஒரு புதிய உணர்வு மற்றும் உடலில் ஏற்படும் மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது . அளவில்லா இன்பம் ஆர்ப்பரித்தது . கிழவனின் காதுகளில் முத்தமிட்டபடி அவனது கழுத்தில் முத்தமிட்டேன் .

முத்தம் அழுத்தமாக ஆக ஆக ....... எனக்கு பல் முளைத்தது . கழுத்தில் கடித்து ரத்தத்தை உறிந்தேன் . எனது கால்கள் மறைய துவங்கின . இன்னும் அழுத்தமாய் கழுத்தின் துவாரம் வழியாக கிழவனின் ரத்தத்தை உறிய உறிய எனக்கு கால்கள் மறைந்து நான் ஓரளவுக்கு முழுமையான ரத்தக்காட்டேறியாய் மாறினேன் . கிழவன் செத்து விழுந்தான் . அந்த இடம் முழுவதும் ஜில்லிடத்துவங்கியது . காதுகளில் பிணங்களின் அலறல் இன்னிசையாய் ஒலிக்க துவங்கியது . நான் மிதக்கத் துவங்கினேன் . இன்னும் ஒருவரை இது போல கொன்று விட்டால் இறக்கைகளும் முளைத்து விடுமாம் பின் பறக்கலாம் எங்கும் எப்போதும்.......................

''சாதாரண கொள்ளிவாய் பிசாசான நீங்களும் குட்டிப்பிசாசுகளும் மோகினிப்பேய்களும், ரத்தக்காட்டேறியாய் மாறவேண்டுமென்றால் , உன் முதல் வேட்டை நீ அறியாமல் நடந்தால் மட்டுமே உனக்கு கொலைப்பற்கள் முளைக்கும் , அடுத்த கொலையை முடித்த உடன் இறக்கைகள் முளைத்து விடும் '' என ராபார்ட் மாமா நான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்து குட்டிப்பிசாசான புதிதில் சொல்லிக்கொடுத்தது இப்போது நினைவுக்கு வந்தது .