Pages

29 January 2009

FLASH NEWS - சிங்கள இனவெறி அரசை கண்டித்து பத்திரிக்கையாளர் தீக்குளிப்பு

சிங்கள இனவெறி அரசை எதிர்த்து இன்று சென்னை சாஸ்திரி பவன் எதிரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் ஆர்ப்பாட்டத்தில் திடீரென பத்திரிக்கையாளர் முத்துக்குமரன் தீக்குளித்தார். இவர் பெண்ணே நீ என்னும் மாதப்பத்திரிக்கையில் அச்சுக்கோர்க்கும் பிரிவில் பணியாற்றி வந்தார் . அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.