Pages

04 March 2009

இன்னும் சாகவில்லையே..!






அமைதியாக அமர்ந்திருந்த துறவியிடம் அரசன் கேட்டான்.

''இறந்தபின் நமது புனிதமான ஆத்மா என்ன ஆகும்?''

''அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ''

''நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே''

''உண்மைதான்.. ஆனால் நான் இன்னும் சாகவில்லையே'' என்றார் துறவி புன்னகையோடு.

***********************************************


திரளான மாணவர்களுக்கு நடுவே துறவி ஜென் குறித்த முதல்நாள் வகுப்பை ஆரம்பித்தார்.


முதல்வரிசை முந்திரிக்கொட்டை மாணவன் ஆவலோடு துறவியை நோக்கி ''ஐயா ஜென் என்றால் என்ன? '' என்று வினவினான்


துறவி மேஜையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதை மெதுவாக தோல்நீக்கி பொறுமையாக உண்ண ஆரம்பித்தார். தின்று முடித்தபின்


''இப்போது புரிந்ததா?'' , துறவியின் செயலால் துடித்துப்போன மாணவன் வெறுப்பில் கத்தினான்..


''இவ்ளோதானா இல்ல இன்னும் இருக்கா? ''.. துறவி அவனை அருகில் அன்போடு அழைத்தார்.


அருகில் வந்தான். கையிலிருந்து வாழைப்பழத்தோலை அவனது முகத்தில் சுளீரென அடித்தார்.


''இப்போது புரிந்ததா ஜென் என்றால் என்னவென்று , இவ்வளவுதான் ஜென்''


அவன் ஏதும் பேசாமல் அவனது இருக்கையில் அமர்ந்துகொண்டான்.


கடைசி இருக்கை நக்கல் மாணவன் '' ஐயா உங்கள் செயல் எனக்கு ஜென்னை விளக்கவில்லை.. தயவு செய்து அதை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா?'' என்றான்.


''அதெற்கென்ன விவரிக்கலாமே.. ஒரு மிகப்பெரிய யானை உன் மூக்கில் அமர்ந்திருக்கும் கொசுவை புணர்வது! அவ்வளவுதானப்பா ஜென் '' என்றார் துறவி.




*********************************************


மிகவயதான அந்த துறவி தினமும் யாருமில்லாத மலை உச்சியில் அமர்ந்து கொண்டு ஒற்றைக்காலில் நின்றுகொண்டு கைகளை வானை நோக்கி கூப்பிக்கொண்டு தவம் செய்வார். அந்த மலை உச்சி மிக ஆபத்தானது யாராலும் செல்ல இயலாத இடம். அவர் ஒருவர் மட்டுமே இருந்தார்.எப்போதும் போல தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு மலையின் உச்சிக்கு சென்று ஒற்றைக்காலில் நின்று கொண்டு தியானத்தை துவங்கினார். நடுவில் மலையின் அடிவாரத்தில் இருந்து ஏதோ ஒரு ஓளி தெரிவதை கவனித்தார். துறவிக்கு தீர்க்கமான கழுகுக்கண்கள். கூர்ந்து பார்த்தார்.. அது ஒரு தங்கத்தாலான வைரமும் மாணிக்கமும் பதித்த மிகப்பெரிய பெட்டி.. துறவி தியானத்தினூடே நினைத்துக்கொண்டே இருந்தார்.


''இந்த பெட்டி யாருதா இருக்கும்... உள்ள என்ன இருக்கும்.. மதியதுக்குள்ள எடுத்துட்டு போயிருவாய்ங்களோ...!''


*******************************************