Pages

03 March 2010

சாமியார் சாமான் நிக்காலோ!!!




''தல தல வெளிய வா தல '' என்றழைத்தபடியே ஓடிவந்தான் சிஷ்யன். சின்னக்குடிசையிலிருந்து தலையை குனிந்தபடி வந்தார் குரு.


''என்னால தியானமே பண்ண முடில , ரொம்ப நேரம் உக்காந்தா பின்னால வலிக்குது , முதுகு குடாயுது, மூச்சு முட்டுது, தலை அரிக்குது,தூக்கம் தூக்கமா வருது, செத்து போன ஆயாலருந்து பக்கத்துவீட்டு ஜெயாவரைக்கும் எல்லாரும் மனசுக்குள்ள வந்து ஓரே டார்ச்சராருக்கு, இதுக்கு ஒரு வழி சொல்லுங்க''


''ஓ............ம்ம் இன்னா செய்றது அல்லாம் பூடும்பா'' என்றார்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தான் சிஷ்யன்.


''தல சூப்பாராகீது தல, நேத்து நல்லா சூப்பரா தியானம் பண்ணேன். திவ்யமாந்துச்சு, இன்னா அமைதி... இன்னா மேரி இந்துச்சு தெர்யுமா! தாங்க்ஸ் தல'' என்றான்


''ஓ............ம்ம் இன்னா செய்றது அல்லாம் பூடும்பா'' என்றார்..குருநாதர்


*********************************************


கொஞ்ச நாள் கழிச்சு குருவும் சிஷ்யனும் ஆத்தோரமா சாமான்கள் கழுவிக்கொண்டு இருந்தனர். தீடீர்னு ஒரு பாம்பு ஆத்துக்குள்ள விழுந்துருச்சு . உடனே குரு ஆத்துல குதிச்சு காப்பாத்தினாரு. காப்பாத்தும் போது அந்த பாம்பு அவரு கைய கடிச்சிருச்சு. ஆனாலும் அவரு மறுபடியும் வந்து சாமான் கழுவறதில மும்முரமா இருந்தாரு.


மறுபடியும் அந்த பாம்பு ஆத்துக்குள்ள விழுந்துருச்சு. மறுபடியும் குரு ஆத்துல குதிச்சு காப்பாத்தினாரு , மறுபடியும் பாம்பு அவரு கைய கொத்திருச்சு. இந்த வாட்டி இன்னும் ஷார்ப்பா கொத்திருச்சு.இதையெல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த சிஷ்யன் காண்டாகி


'' குருவே அந்த பாம்புதான் கொத்தும் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறீர்கள்'' ன்னான்

குரு , குறுகுறுனு பாத்துகிட்டே சொன்னாரு '' பாம்புக்கு கடிப்பது குணம், எனக்கு பிடிப்பது குணம்''


******************************************


குருவிற்கு சிஷ்யர்களுக்கு கற்று கொடுத்து கொடுத்து சலிப்பு வந்துவிட்டது. அதனால் ஒரு நாள் அனைவரையும் அழைத்து ''பாய்ஸ் டுடே இஸ் தி லாஸ்ட் டே, நீங்க எங்கயாவது போய் ஏதாச்சும் பண்ணி உயிர்வாழ்ந்துக்கோங்கோ!! என்னால இதுக்கு மேல முடியாது '' என்றார்,


சிஷ்யர்கள் அனைவரும் வேறு வேறு ஊர்களுக்கும் சென்று பிரான்ச் ஆஸ்ரமம் அமைத்து பிழைத்து வந்தனர்.


முன்று வருடங்கள் கழிந்தது. நம்ம சிஷ்யனுக்கு திடீரென குருவின் ஞாபகம் வந்தது, அவனது ஆஸ்ரமத்தில் சரியாக கல்லா கட்டவில்லை. அவரிடம் இன்னும் சில வித்தைகள் கற்றுக்கொள்ள பிரியப்பட்டான். குருவைத்தேடி கோயில் குளமாய் அலைந்தான். ஒரு வழியாய் பழனிமலை அடிவாரத்தில் கண்டுபிடித்தான். அவர் ஒரு பிச்சைக்காரனோடு உக்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.


''இன்னா சாமி, இங்க பிச்ச எடுத்துனுக்கிறீங்கோ.. உங்களாண்ட இன்னும் கொஞ்ச வித்த பயகலாம்னு வந்தேன்''


''அதுக்கின்னா கத்து குடுத்துட்டா போச்சு'' என்றார் குரு.


''ஆனா மூணு நாளு நான் எப்படி இக்கீறனோ அதே மேரி நீயும் இர்ந்தா கத்து குடுக்கறேன் ஓகேவா!''


அதற்கு சம்மதித்தான் சிஷ்யன்.


அன்றைய தினமே குருவின் நண்பனான பிச்சைக்காரன் இறந்து போனான்.


குருவும் சிஷ்யனும் சேர்ந்து அவனை அடக்கம் செய்தனர்.


அடக்கம் செய்த களைப்பில் குரு உறங்கிப்போனார். சிஷ்யனோ இரவெல்லாம் விழித்தபடி நாளையைப்பற்றி சிந்தித்தபடி இருந்தான்.


''இன்னிக்கி நாம பிச்ச எடுக்க வேண்டியதே இல்லபா! , பாரு செத்துப்போனவன் முந்தாநாள் கொண்டாந்த பழைய சோத்த வச்சுகினு போயிருக்கான், அத துன்னு இன்னிக்கி பொழுத போக்கிக்கலாம்', நாளைக்கு பிச்ச எத்துக்கலாம் ஓகேவா'' என்றார்.


சிஷ்யனால் அதை முகர்ந்து கூட பார்க்க முடியவில்லை. குமட்டியது. ஒரு பருக்கை கூட தின்ன முடியவில்லை.


''இன்னாடா நீ.. நான்தான் சொன்னேன்ல உன்னால என்னாட்டம் வாயவே முடியாதுனு..'' என்று எரிச்சலுடன் கத்தினார் குரு.


''தயவு பண்ணி இன்னொருதபா வந்து வித்த சொத்தனு தொந்தர்வு பண்ணாத இன்னா, சாமியாரே சாமான் நிக்காலோ'' என்றார் குரு.