Pages

28 June 2010

களவாணி



ரொம்ப சீரியஸான கதை. எந்த நேரத்துல எவனுக்கு குத்து விழும். எவனப்போட்டு வெட்டுவாய்ங்க , கிளைமாக்ஸுல யாரு சாவாய்ங்கனு பயந்துகிட்டே படம் பார்த்தா.. பயபுள்ளைங்க கடைசிவரைக்கும் சீரியஸான கதைய சிரிக்க சிரிக்க குடுத்துருக்காய்ங்க!

களவாணி. பருத்தி வீரன் மாதிரி படம் முழுக்க ஒரே லந்துதான். அதுவும் லந்துனா லந்து மச லந்து. பட்டுக்கோட்ட,அரசனூர்,ராணி மங்கலம்னு புது இடம்.. களவாணிப்பயலா திரியற ஹீரோ , ஸ்கூல் படிக்கற ஹீரோயின் , கிரிக்கெட் போட்டில குழந்தைங்க தொடங்கி , பார்ல தண்ணி அடிக்கறவன் வரைக்கும் வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் கிடக்கற இரண்டு கிராமத்து ஜனங்க , லவ்வர்ஸு ரெண்டுபேருக்கும் அதனால சிக்கலு.. நடுவுல ஹீரோவோட சில்வண்டித்தனமான வேலையால லவ்வுக்கு பாதிப்பு, அதை சரி பண்ணி , ஊர சரி பண்ணி , எப்படி லவ்வுல ஜெயிக்காருன்றது மீதி ஸ்டோரி..

படம் மொத சீன் ஆரம்பிச்சா சும்மா பத்தவச்ச சரவெடி மாதிரி கிளைமாக்ஸ் வரைக்கும் படபடபடனு வெடிச்சிகிட்டே போகுது.. நடுவுல வர பாட்டுங்க மொக்கையா இருந்தாலும் பெரிய டேமேஜ் இல்ல! ஏன்னாப் பாருங்க ஒவ்வொருக்கா பாட்டு வரப்பவும் ஹீரோயின அம்புட்டு அழகா காட்டுதாய்ங்க .. கண்ணுலயே நிக்கு.. பாக்க பாக்க நமக்கும் அப்படியே பத்திக்குது. ரொம்ப இயல்பா நடிச்சிருக்கு அந்த பொண்ணு. பேரு நினவில்ல. ஆனாலும் படத்துல மொத மார்க்கு அந்த பாப்பாவுக்குதேன்.

பசங்க படத்துல நடிச்ச நம்ம மீனாட்சி.. அல்லது விமல்தான் ஹீரோ. பரட்ட தலையும் வெள்ளையும் சொள்ளையுமா தெனாவட்டா திரிஞ்சுகிட்டு , போக வர பொடிப்பிள்ளைக கிட்ட கல்யாணம் கட்டிகிறேனு சொல்லுனு மிதப்பா திரியறது.. பட்டைய லேப்புறாய்ங்க! அதுவும் கிளைமாக்ஸுல மவனே என் மச்சான் மேல எவனாச்சும் கைய வச்சீங்கனு சீர்றப்ப தியேட்டரே அதகளமாகுது..

ஹீரோ ஹீரோயினுக்குப்பறம் கஞ்சாகறுப்புதேன் படம் முழுக்க.. ரொம்ப நாளைக்கப்பறம் கஞ்சாகறுப்பு காமெடி சரியா வொர்க்அவுட் ஆகிருக்கு.. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது... அது போக வில்லனா வர புதுமுகம்.. ஹீரோவுக்கு அம்மாவ வர சரண்யா , அந்த தங்கச்சிப்பாப்பானு அப்பாவ வர இளவரசுனு எல்லா கேரக்டருமே உசுரோட அப்படியே மனசுக்குள்ளயே சுத்திக்கிட்டு கிடக்குறாய்ங்க!

ஹீரோயினுக்கு பெரியப்பாவ வர அந்த பெரியவரு நிஜமாவே கிராமத்து காரர்தான் போலருக்கு!

இன்டர்வெல்ல ஒரு சேஸிங் , கிளைமாக்ஸுல ஒரு சேஸிங் , இரண்டுலயும் ஹீரோ ஒரு பொண்ண தூக்கிட்டுப்போறாரு.. நாடோடிகள் மாதிரியே இருந்தாலும்.. இது காமெடி சேஸிங், செம! படத்தோட மியூசிக்கு ரொம்ப சுமாரா இருந்தாலும் பிண்ணனில பட்டைய கெளப்புறாப்ல இசையமைப்பாளரு. பாட்டையும் சூதானமா போட்டிருந்தா நல்லாருந்திருக்கும். படத்தோட லொக்கேசன்லாம் ரொம்ப புதுசு. லேட்டஸ்டு கிராமத்த கண்ணுமுன்ன நிறுத்திருக்காய்ங்க! கிராமத்துல டிவி இருக்கு, துபாய் போய்ட்டு வந்து வீடுக்கட்டுற ஆளுங்க , கார் இருக்கு,யமஹால சுத்திகிட்டு பீரடிக்கிற இளந்தாரிங்க இருக்காய்ங்க, இதுமாதிரி கிராமத்தயும் கிராமத்தானையும்தான் எங்கூருப்பக்கம் நான்கூட பார்த்துருக்கேன். டைரக்டருக்கு ஒரு சபாஷு!

படத்துல ஒரு சீன்ல வெட்டுக்குத்து நடக்கு! அப்பக்கூட ரொம்ப சீரியஸா இல்லாம ஒரு துளி ரத்தம்தான் சட்டைல ஊர்றாப்ல காட்டுறாய்ங்க, நல்ல ஐடியா. படத்துல பெரிசா ஆபாச வசனம் , குத்துப்பாட்டு, சண்டை எதுவுமே இல்லாம சும்மா விறுவிறு சுர்ர்ர்ருனு ஒரு படம் குடுக்க முடியும்னு நிரூபிச்ச டைரக்டருக்கே இன்னொரு சபாஷு. புத்திசாலித்தனமா பல காட்சிகள அமைச்சதுக்கும் அவர பாராட்டியே ஆகணும்.

மனசுக்கு இதமா சிரிச்சுகிட்டே சந்தோசமா இந்த களவாணிப்பயல கட்டாயம் குடும்பத்தோட பாக்கலாம்னாலும்.. படத்துல வர ஸ்கூல் பாப்பா காதல்தான் கொஞ்சம் இடிக்கு! தயவு பண்ணி பத்தாம்ப்பு படிக்கற பிள்ளைக லவ் பண்றாப்ல படம் எடுக்காதீங்க. பாவம் நம்மூரு பிள்ளைக இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கு..

மத்தபடி களவாணிய , திருட்டு டிவிடில களவாணித்தனமா பாக்காம தியேட்டர்ல பாருங்கப்பு! படம் நெசமாவே நல்லாருக்கு.