Pages

14 October 2010

...ண்ணா பார்ண்ணா சிரிக்கறான்!


கோமாளி!


நம்ம சிஷ்யன் சரியான சிடுமூஞ்சி. எப்போதும் மூஞ்சியில் எருமைசாணியை அப்பியது போலவே திரிபவன். ''மவனே நான்கண்டி செவப்பா காசோட பொர்ந்திருந்தேனு வை.. அப்படியே திரிஷா நயான்தாரானு செட்டில் ஆய்ருப்பேன்... என் நேரம் கர்ப்பா பொர்ந்து தொல்ச்சிட்டேன்..'' என்று சலித்துக்கொள்வான்.


நரசிம்மராவ் , முரசொலி மாறன் முகங்களில் கூட நீங்கள் எப்போதாவது சிரிப்பை பார்த்திருக்கலாம் ஆனால் இவன் முகத்தில் சிரிப்பை பார்க்க தலைகீழாக நின்று பரதநாட்டியம் ஆடினாலும் முடியாது. வாயில் நான்கு வார்த்தை பேசினால் நான்கில் மூன்று ''த்தா''வாகத்தான் இருக்கும். எப்போதும் சலிப்பு.. எப்போதும் வெறுப்பு.. ஒருகட்டத்தில் அவனாலேயே இன்னாடா வாழ்க்க இது , ரோதனையா பூச்சு என்று சலித்துக்கொண்டன் சாமியாரிடமே சரணடைந்தான்!


கையில் பிளாஸ்டிக் கப்பில் ஒரு கட்டிங்கை ராவாக அடித்துக்கொண்டிருந்தார் சாமியார். ஊறுகாய் கூட இல்லை.. இப்படிப்பட்ட வித்தைகளில் அசகாயசூரர் நம்ம சாமியார்.


''சாமி இன்னானே தெர்லே.. யாராப்பாத்தாலும் செரி காண்டாவுது.. யார்னா என்ன பாத்து சிர்ச்சா.. அப்டீயே செவ்னியே சேத்து நாலு அப் அப்லாம் போலக்து..'' என்றான்


சாமியார் அவனை தீர்க்கமாக பார்த்தார். எழுந்து நின்று தன் இடுப்பு லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். என்ன நினைத்தாரோ? கெக்கே பிக்கே கெக்கே பிக்கே என்று விலா நோக விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்தபடியே கட்டிங் கப்பை பிடித்தபடி தன் அறைக்கு திரும்பி கதவை பூட்டிக்கொண்டார். சிஷ்யனுக்கு எதுவுமே புரியல... கொஞ்ச நேரம் அவர் சென்ற பாதையை தீர்க்கமாக பார்த்துவிட்டு.. கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்தான்.

சாமியாரின் அந்த விநோத சிரிப்பு அவனை ஏதோ செய்தது. எரிச்சலூட்டியது. கடுப்பாக்கியது. சரக்கடிச்சாலும் போதையில்லே.. தம்மடித்தாலும் திருப்தியில்லே. சோறும் இறங்கலே... பீரும இறங்கலே! என்ன செய்வதென்றே புரியலே. நாலு நாள் பைத்தியம் பிடித்தவனாய் அந்த சிரிப்பை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் சாமியாரைப் போய் பார்த்தான். ''சாமி என்னா சாமீ.. என் மனசு கஷ்டத்த உங்களான்டை சொன்னா நீங்க இன்னாடானா கக்கபிக்கனு விக்கிவிக்கி சிர்ச்சினு பூட்டீங்களே'' என்றான்.


சாமி மீண்டும் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு.. முன்னால் செய்ததையே மீண்டும் செய்தார். யெஸ்! விழுந்துவிழுந்து சிரித்தார். இந்த முறை கடுப்பாகி.. ''யோவ் லூசாயா நீ! இப்ப இன்னாத்துக்கு இப்படி சிரிக்கற என்ன பாத்தா கோமாளி மாத்ரி இக்குதா'' என்றான் கோபக்கார சிஷ்யன்.


''டேய் பிலாக்கா பையா! நீ கோமாளியவுட கொறஞ்சவன்டா...'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்பை கன்டினியூவினார்.


''சாரி.. சாமீ டென்சானாகிச்சு.. என்ன ஏன் கோமாளியவுட கொறஞ்சவன்னு சொன்னே'' என்றான் சிஷ்யன்.


''கோமாளியாச்சும் அட்த்தவன் சிரிக்கர்த பாத்து அவன் ஹேப்பியாவான்.. நீ சுத்த வேஸ்ட்டு மச்சி, அட்த்தவன் சிர்ச்சாதான் ஒனக்கு காண்டாவுமே'' என்று கூறிய குரு.. மீண்டும் தன் அடைமழை சிரிப்பை தொடர்ந்தார்..


 

நாய்படாத பாடு!


நான்குவருட கடும் பயிற்சிகளுக்கு பிறகு சுயமாக ஒரு ஆசிரமம் அமைக்க முடிவெடுத்தான் சிஷ்யன். ஒரு நாள் சாமியாரிடம் போய் அதை நேரடியாகவே கேட்டான் ''சாமீ நான் தனியா ஒரு ஆஸ்ரமம் வச்சி.. டிவில உங்களாட்டம் வெளம்பரம் குட்து பெர்ய ஆளாவ்லாம்னுருக்கேன், உங்க பர்மிஷனும் ஆசீர்வாதமும் வோணும்'' என்றான்.


சாமியாருக்கு கிலியாகத்தான் இருந்தது. ஏற்கனவே நம்மகிட்ட டிரெயினிங் எட்த்துட்டு அவன்அவன் பிரான்ச் ஓப்பன் பண்ணி யுனிவர்சிட்டி, ஹாஸ்பிடல்,டிவி சேனல், பாரின் மனினு செட்டில் ஆகிட்டானுங்க.. இதுல இவன் வேற என்று நினைத்தவர்..


'' அடடே! ரொம்ப சந்தோசம் ராஜா! ஆமா தனியா ஆஸ்ரமம் வச்சி இன்னா பண்ணப்போற.. நம்ம ஆஸ்ரமத்துலயே மூனுவேளை சோறு போட்டு முப்பது ரூவா தரோமே பத்தாதா ஒனக்கு'' என்றார்.


''இன்னா சாமீ.. நேத்து வந்த சாமியாருங்கள்லாம், நடிகைங்க வீடியோ ஆடியோ, நியூஸ் சேனல்னு பெரிய ஆளாகிட்டானுங்க.. நான் நாலுவருஷம் உங்களான்ட குப்பை கொட்டிகினுக்றேன்.. அட்லீஸ்ட் நம்ம ரேஞ்சுக்கு ஒரு எஃப் எம் ரேடியாவாவது ஆரம்பிச்சி... ரம்பாவோ மேனகாவோனு செட்டில் ஆக வேணாமா, அதான் ராயபுரத்துல ஒரு எடம் பாத்துருக்கேன்.. செம எடம் சாமி'' என்றான் சிஷ்யன். சாமிக்கு பயம் கூடியது.


''செரி நீ முடிவு பண்ணிட்டு பேசற.. இன்னா பண்றது.. என்னமோ பண்ணு.. ஆனா நான் மூணு கேள்வி கேப்பேன் அதுக்கு நீ செரியா பதில் சொல்லிட்டா , உனக்கு பர்மிஷன் பிளஸ் ஆசீர்வாதம் எல்லாம் குடுக்கறேன்'' என்றார். சொல்லுங்கோ என்று முறைத்தபடி கைகட்டி நின்றான் சிஷ்யன். மவனே இப்போ மடக்கறேன் பாரு என்று நினைத்தவர்.. யோசித்துவிட்டு


''நீ போற எடம் ராயபுரம்.. மக்கள்லாம் செரி டெரரு , அங்க போனா உன்னை எல்லாரும் சேத்து காரித்துப்பி விரட்டி வுட்டா இன்னா பண்ணுவ''


''அதுக்கின்னா சாமி.. காரித்துப்பதான செய்றாங்கோ, தொட்ச்சு போட்னு போய்கினே இருக்க வேண்டியத்தான்.. அட்ச்சு கைய கால காவு வாங்காம வுட்டாலே போதும்'' என்றான் சிஷ்யன்


''ஒருவேளை அட்ச்சா? கைய காலல்லாம் ஒட்ச்சிட்டா இன்னா பண்ணுவ'' என்றார் சாமியார்.


''இன்னா சாமி.. அதுக்குலாம் பயந்தா ஆவுமா.. சாவடிக்காம வுட்டாலே போதும் , நான்லாம் பொழ்ச்சிப்பேன் உங்க டிரெயினிங்ல'' என்றான் சிஷ்யன்


''ம்ம்.. ஒருவேளை அட்ச்சே கொன்னுட்டா?''


''உங்களாட்டம் நாய்படாத பாடுபட்டுகினு அஞ்சுக்கும் பத்துக்கும் ஊர ஏமாத்திகினு அலையவேணாம் பாருங்க, நிம்மதியா போய் சேர்ந்துருவேன்'' என்று புன்னகைத்தபடியே சொன்னான் சிஷ்யன்!

 

 

(நன்றி ஜென்கதைகள்)