Pages

10 July 2013

டூ மினிட்ஸ்!



வரவர எந்த மரணமும் நான்கு மணிநேரத்துக்கு மேல் பாதிப்பதில்லை. மேகி பண்ணுகிற நேரத்துக்குள் வெகு எளிதாக மீண்டுவிட முடிகிறது
செய்திகளில் வருகிற மரணங்கள் அரைமணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை இயற்கை பேரழிவு, விபத்து, குண்டுவெடிப்பு , தற்கொலை, கொலை எதுவுமே.

இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் செய்தியை கடந்து செல்ல வேண்டியதாகிவிடுகிறது. நிறைய பேர் இறந்துபோனால் ஒரு நீண்ட அய்யயோ.. குறைவான எண்ணிக்கையெனில் ஒரு மினி அடச்சே.. மிக மிக குறைவென்றால் அய்யோ பாவம்..
ஒருவர்தான் என்றால் தாமாகவே தர்ம கணக்கில் சேர்த்துக்கொள்கிற மனது

பெற்றோர்,காதலி,நண்பர்,அண்டைவீட்டுக்காரர்,நாட்டுக்காரர்,தலைவர்கள்,தலைவிகள்,எழுத்தாளர்,நடிகர் என எல்லா மரணங்களுமே அதிகாலைச்செய்தித்தாளைப்போல அடுத்தநாள்
எங்காவது மூலைக்குள் முடங்கிவிடுகிறது.

''இறந்துபோனவர் எவ்வளவுதான் நெருக்கமென்றாலும்
அடுத்தவேளை பசித்துத்தொலைக்கிறது
தின்ன தின்ன மரணமும் துரத்துகிறது''