tag:blogger.com,1999:blog-77027748178584193952024-03-13T11:27:13.900+05:30அதிஷாAthishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comBlogger640125tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-2579415985587738872023-02-20T13:05:00.000+05:302023-02-20T13:05:30.244+05:30நூறுரூபாய்தானே<p><br /></p><p>நேற்று தியாகராயர் நகரில் என் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். போக்குவரத்து காவல்துறையினர் இடைமறித்து நிறுத்தினர். என்னிடம் எல்லா டாகுமென்ட்களும் இருப்பதாக சொன்னேன். இது அதற்கில்லை, ‘’உங்கள் வண்டியின் மீது ஏற்கனவே எதாவது அபாரதம் நிலுவையாக இருக்கிறதா என பார்க்கப்போகிறோம். இருந்தால் கட்டுங்க இல்லாட்டி கிளம்பலாம் என்று வண்டியை ஒரங்கட்டினார்கள். </p><p>பார்த்தால் நூறுரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். எதற்கு என்று விசாரிக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக என்றார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்போது எங்கே மீறினேன் என்று கேட்டேன். அப்படித்தான் காட்டுது சார் நீங்க நூறு ரூபாய் கொடுத்தால்தான் போக முடியும் என்று சொல்லிவிட்டார், நானோ ‘’எனக்கு விபரம் தரமால் பணம் கொடுக்க முடியாது’’ என சண்டையிடத்தொடங்கினேன். </p><p>கடைசியில் காவல்துறை அதிகாரியும் நானுமாக விபரங்களை தேடிபிடித்து கண்டுபிடித்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் திருமங்கலம் சிக்னலில் தானியங்கி போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவி ஒன்று மாட்டப்பட்டது. அது சாலையில் சிக்னல்களை மீறுவோர், ஹெல்மெட் அணியாதோர், கோட்டைத்தாண்டி நிற்பவர்கள் என கண்டுபிடித்து அதுவாகவே பைன் போட்டுவிடும். அது சில மாதங்கள் செயல்படுத்தி பிறகு கைவிட்டுவிட்டனர் என்று நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் செய்யப்பட்ட ஏற்பாடு இது! </p><p>அப்படித்தான் அந்த கருவி என்னுடைய பிழையை கண்டுபிடித்திருக்கிறது. அதற்குரிய புகைப்படத்தையும் அது இணைத்திருக்கிறது. புகைப்படத்தை பார்த்தபோது என் மீது எந்த பிழையும் இல்லை. அது கருவியின் தவறு. சிக்னல் கோட்டுக்கு பின்னால்தான் நிற்கிறேன். ஹெல்மெட் அணிந்திருக்கிறேன். சிகப்பு விளக்கை தாண்டிச்செல்லவும் இல்லை. ஆனால் தொழில்நுட்ப கோளாறால் எனக்கு அப்படி ஒரு அபாரதம் விதிக்கப்பட்டிருக்கிறது. காவலரோடு வாக்குவாதம் தொடங்கியது. ‘’சார் உங்களுக்கு டிஸ்ப்யூட் இருந்தா முன்னாலயே நீங்க சொல்லிருக்கணும். அதுக்குதான் உங்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டு ஒருமாதம் டைம் குடுத்துருக்காங்களே உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்திருக்குமே’’ என்றார் காவலர். ‘’வண்டி ரெஜிஸ்டர் பண்ணினப்ப யூஸ்பண்ண மொபைல் இப்ப பண்ணல, அப்புறம் அது தப்புன்னா நான் ஏன் சார் சொல்லணும். நீங்க பாத்துக்க மாட்டீங்களா… என்னால காசு தரமுடியாது’’ என சண்டை போடத்தொடங்கினேன். </p><p>காவலரோ அப்பாவியாக இருந்தார். சார் என்னால எதுவுமே பண்ணமுடியாது. எப்படியும் நான் விட்டாலும் வேற அதிகாரி புடிச்சார்னா அவர்கிட்டயும் நீங்க வாக்குவாதம் பண்ணவேண்டி இருக்கும் பேசாம கட்டிருங்க என்றார். நான் கட்டமாட்டேன் வேறு யாராவது ஆள் பிடித்தால் அங்கும் என் தரப்பு பிரச்சனையை சொல்கிறேன் என்றேன். காவல் அதிகாரியோ விடாப்பிடியாக பேசி என்னை சமாதானப்படுத்தி பணத்தை கட்ட சம்மதிக்க வைத்துவிட்டார். </p><p>என்னுடைய டெபிட் கார்டை கொடுக்க… அதை தேய்த்து பணமெடுக்க முயற்சி செய்தார். ஆனால் டிக்ளைன் ஆகிக்கொண்டே இருந்தது. என்ன சார் காசே வரலை என்றார். நானும் முயற்சி பண்ணினேன். வரவில்லை. வேறு கார்ட் கொடுத்தேன். அதிலும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அக்கவுண்டில் பணமில்லை. ‘’சார் என்னசார் நூறுரூவா கூட இல்லாமயா வாழ்ந்துட்டு இருக்கீங்க… நீங்க கிளம்புங்க சார் பரவால்ல…’’ என்றார். ‘’அந்த அக்கவுண்ட்ல இல்ல போல சார் நான் பேடிஎம்ல கட்றேன்’’ என்று சொல்லி பணத்தை கட்டிவிட்டு வந்தேன். </p><p>எனக்கு நூறு ரூபாய் என்பதால் கட்டிவிட்டேன். இதுவே ஆயிரக்கணக்கில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன். கட்டித்தான் ஆகவேண்டும் என்றோ அல்லது ஜெயிலுக்கு போ என்றால் போக முடியுமா.. என்கிற மனக்குழப்பங்கள் இருந்துகொண்டே இருந்தன. </p><p>உலகெங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முன்பைவிட பன்மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற தானியங்கி கண்காணிப்பு கருவிகள் பல நாடுகளில் வந்துவிட்டன. சீனா போன்ற நாடுகளில் மனிதர்களின் முகங்களை, கைரேகைகளை, கண்களை ஸ்கேன் பண்ணி இன்னார் இன்ன இடத்திற்கு போகிறான் வருகிறான் இங்கே இதை செய்கிறான் என்று பார்த்து தண்டனை கொடுக்கத் தொடங்கிவிட்டதாம். </p><p>இங்கேயும் அது எதிர்காலத்தில் வரக்கூடும். யோசித்துப்பாருங்கள் யாரோ திருடனுடைய முகத்தை பார்த்து நம்முடைய முகம் அதுபோல இருக்கிறது என நம்மை கைது செய்தாலோ அல்லது தண்டிக்கப்பட்டாலோ என்ன செய்வது என்கிற அச்சம் வருகிறது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கமுடியாது. அது வந்துதான் தீரும்!</p>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-81440929650449315782023-02-20T13:02:00.002+05:302023-02-20T13:02:35.542+05:30வெளியேற்றம் <p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU82CZqBbIudtssdaHF__fcGM-Bx1dnjeMkwDzSTazgl_ivaOvRfj9y4PWCRnqRqGtYv_j9--xFiWPgyikBnWNMV94KHg7rdr5LyzCNZBNXPwHjhCXQ3PT4Fuz_Hv3vkzg7K6_oTCZ-dXd0NAHepAebG9j8lIQ3hVZ5IIEhabQr1YoyMWm9vu0M5k/s1350/ht8spyi3iqy91.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1350" data-original-width="1080" height="351" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU82CZqBbIudtssdaHF__fcGM-Bx1dnjeMkwDzSTazgl_ivaOvRfj9y4PWCRnqRqGtYv_j9--xFiWPgyikBnWNMV94KHg7rdr5LyzCNZBNXPwHjhCXQ3PT4Fuz_Hv3vkzg7K6_oTCZ-dXd0NAHepAebG9j8lIQ3hVZ5IIEhabQr1YoyMWm9vu0M5k/w281-h351/ht8spyi3iqy91.jpg" width="281" /></a></div><br /><o:p><br /></o:p><p></p>
<p class="MsoNormal" style="margin-top: 12.0pt;"><span style="font-family: "Latha","sans-serif";">டேரன்
அரோனோஃப்ஸ்கி இயக்கி இருக்கிற ‘WHALE’ சென்னையில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆஸ்கருக்கும்
பரிந்துரைக்கப்பட்டிருக்க முக்கியமான படம். பிவிஆர் சத்யம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே டவுன்லோடில் பார்த்திருந்தாலும் விஷயம் அறிந்து இன்னொரு முறை நண்பரோடு பார்க்க
கிளம்பினோம். புகைப்பட கலைஞர் பிரபுகாளிதாஸும் எங்களோடு இணைந்துகொள்ள மூவருமாக திரையரங்கில்
நுழைந்தால் யாருமே இல்லை. நாங்கள் மூவர் மட்டும்தான். இதுமாதிரி படங்களுக்கு அவ்வளவுதான்
அதிகபட்ச கூட்டம் வரும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">எங்களுக்கு பிறகு
சில பையன்களும் பெண்களும் வந்தார்கள். கல்லூரி மாணவர்கள் போலிருந்தனர். எல்லோருமே வந்ததிலிருந்து
படம் தொடங்கு முன் புகைவேண்டாம் விளம்பரம் வரும் வரை கூத்தும் கும்மாளமும்தான். பாப்கார்னை
குட்ரா, செல்பி எட்ரா, டேய் தம்மடிச்சா இப்படிதான் வாய் கோணிக்கும், ரீல்ஸ் போடறேன்
இரு, டேய் இவன்லாம் இன்னுமா நடிக்கிறான், ப்ரபோஸ் பண்ணப்போறியாடி என என்னென்னவோ காதில்
விழுந்துகொண்டேயிருந்தது. கூடவே ஒரு அச்சமும் சேர்ந்துகொண்டது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மாற்றுசினிமாக்களை
பார்க்கும்போது காற்றின் உரசல் கூட கேட்காத சைலன்ஸ் தேவைப்படும். இடையூறு இல்லாத ஒளியும்
ஒலியும் முக்கியம். அலைபேசி ஒளி கூட கண்ணுக்கு தொந்தரவுதான். திரைப்பட விழாக்களில்
கிசுகிசுப்பாக சத்தம் போட்டால் கூட சினிமா ஆர்வலர்கள் கோபமாகி தாறுமாறாக திட்டிவிடுகிறார்கள்.
படம் ஓடும்போது பாதியில் குறுக்கே வந்து சேர் தேடுவது, நடுவில் எழுந்து போய் பாப்கார்ன்
வாங்கிவந்து கொரக் கொரக் என கொரிப்பது, முன்னால் சீட்டில் காலை வைத்து உதைத்துக்கொண்டே
இருப்பது என இதெல்லாம் <span style="mso-spacerun: yes;"> </span>திரைப்பட அனுபவத்தை
நாசம் பண்ணிவிடக்கூடியவை. திரைப்படங்களை நேசிப்பவர்களில் கறார் பேர்வழிகளால் இதையெல்லாம்
சகித்துக்கொள்ளவே முடியாது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இந்த கும்பல் பேசுவதையும்
கன்றுக்குட்டிகளாக களித்திருப்பதையும் வைத்து பார்க்கும்போது கட்டாயம் பெரிய அளவில்
வன்முறை சம்பவம் நடப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. அதிலும் என்னோடு வந்திருந்த
திரைப்பட ஆர்வலாதி நண்பர்கள் இருவருமே பெரிய வஸ்தாதுகள் என்பதால் என்னதான் ஆகப்போகிறதோ
என்று காத்திருந்தேன். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">வேல் திரைப்படம்
தன்னுடைய தவறுக்காக இழப்புக்காக குற்றவுணர்வில் தன்னை ஒரு சிறியவீட்டில் அடைத்துக்கொண்டு
வெளியுலக தொடர்புகள் அற்று தன்னை தானே சிதைத்துக்கொள்கிற ஒரு மனிதனை பற்றியது. பிடிக்காத
வாழ்வை தேர்ந்தெடுத்து அதனால் பலரையும் துன்பத்திற்குள்ளாக்கியவனின் கதை இது. ஒரு பெரிய
இழப்புக்கு பிறகு குற்றவுணர்ச்சியும் துயரமும் ஒரு திமிங்கலமாக அவனுள்ளே வளர்கிறது.
தன்னைதானே சுமக்க முடியாத அளவுக்கு அவன் எடை கூடியவனாக ஆகிவிடுகிறான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மனிதனின் அடிப்படை
தேவையான உணவை தண்டனையாக மாற்றிக்கொண்டு தாறுமாறாக உண்ணத்தொடங்குகிறான். புராணங்களில்
சபிக்கப்பட்டவர்கள் போல அவன் தின்று தீர்க்கிறான். அதை ஒரு நீண்ட சுயவதைப்பாதையாக மரணத்திற்கான
வழியாக தேர்வுசெய்துகொள்கிறான். அத்தகைய மனிதனின் கடைசி ஏழு நாட்களை பற்றியும் அவனோடு
தொடர்புள்ள மனிதர்களை பற்றியும் பேசுகிறது இத்திரைப்படம். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மிகுந்த சோகத்தையும்
மனச்சோர்வையும் படம் நமக்கு கடத்திக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப படத்தின் Aspect
Ratio 4:3</span>0 <span style="font-family: "Latha","sans-serif";">அளவிலும், மிக அதிக
க்ளோஸ் அப்களும், குறைவான ஒளிகொண்ட அறையும் என படம் பார்க்கும் நமக்கும் அந்த நாயகனின்
துயரமும் மன அழுத்தமும் தொற்றிக்கொள்கிறது. படத்தில் சில நிமிடங்கள் வருகிற வீட்டு
வாசல் கூட ஆசுவாசமாக இருக்கிறது. கொஞ்சம் கூட அவசரமில்லாத மிகமிகப்பொறுமையாக கதை சொல்கிற
பாணி திரைப்படம் இது. மேடை நாடகமொன்றின் தழுவல் என்பது இன்னும் சிறப்பு! படம் நிச்சயம்
நடிப்பு மேக்அப் இரண்டிலும் ஆஸ்கர் வெல்ல வாய்ப்புள்ளது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இப்படிப்பட்ட படத்திற்கு
ஏன் எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அந்த எட்டு பேரும் வந்திருந்தார்கள் என்பதுதான்
எனக்கு புரியாத புதிராக இருந்தது. ஆரம்பத்தில் உலக சினிமா பார்க்கிற இன்ஸ்டா இளைஞர்கள்
என்றுதான் நினைத்தேன். ஏனெனில் இன்ஸ்டாவில் இப்போதெல்லாம் உலகசினிமா ஆர்வல இளைஞர்கள்
அதிகமாகிவிட்டார்கள். படக்காட்சிகளை துண்டுதுண்டாக நறுக்கி அதில் இசைசேர்த்து அதிகம்
பகிர்கிறார்கள். அது அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">ஆனால் இவர்கள்
அவர்கள் இல்லை. படம் தொடங்கிய பிறகு அவர்களுக்குள் பேசிக்கொண்டதில் வேறு எதையோ எதிர்பார்த்து
இந்தப்படத்திற்கு வந்துவிட்டது தெரிந்தது. ‘’என்னடா திமிங்கலமே வரல’’ என்று ஒரு பெண்குரல்
கேட்டது அதை உறுதிப்படுத்தியது! ‘’டேய் இரண்டாயிரம் ரூவா போச்சா, டேய் குண்டா’’ என்றான்
ஒருவன். ஒருத்தி காலை ஆட்டிக்கொண்டே இருந்தாள். அது என் சீட்டின் பின்பக்கம் அதிர்வை
உண்டாக்கிக்கொண்டே இருந்தது. இன்னொருவன் காலியான தியேட்டரின் முன் சீட்களில் ஒன்றில்
அமர்ந்து ரீல்ஸ் பார்க்கத்தொடங்கினான். அவ்வப்போது ஆவ் ஆவ் என்று வினோதமாக ஒலி எழுப்பினான்.
இன்னொருவன் டேய் போலாம்டா என்று பினாத்திக்கொண்டிருந்தான். யாருக்கோ பிறந்தநாள் என்பது
புரிந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">அவர்கள் மிகுந்த
தொந்தரவுக்குள்ளாகிவிட்டனர். படம் அவர்களுக்கு புரியவில்லை. திரையில் பேசிக்கொண்டே
இருக்கிறார்கள். கதையும் நகரவில்லை. படத்தை பார்க்கவும் முடியாமல் புலம்பத்தொடங்கினார்கள்.
இன்டர்வெல் வரைக்கும் தாக்குபிடித்து அமர்ந்திருந்தனர். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இன்டர்வெல்லில்
அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை வைத்து நானாக புரிந்துகொண்டது, கல்லூரி மாணவர்கள்
யாரோ ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட திரையரங்குக்கு வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் மொத்தமாக
இருபது அல்லது இருபத்தைந்து பேர். பாதிபேர் அதே நாளில் வெளியான பிரபல நடிகரின் தமிழ்
படத்திற்கு போய்விட்டார்கள். இந்த க்ரூப் தங்களை பெரிய இதுவாக கருதிக்கொண்டு ஐ வாட்ச்
ஒன்லி வோர்ல்ட் சினிமாப்பா என இங்கே வந்து சிக்கி இருக்கிறார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இன்டர்வெல்லில்
இரண்டு பேர் மட்டும் யப்பா நீங்களே பாருங்க எங்களால முடியாது என பக்கத்து அரங்கில்
ஓடுகிற பிரபல நடிகரின் தமிழ் படத்திற்கு சென்றுவிட்டார்கள். மால்களில் இப்படி படம்
பார்ப்பது சாத்தியம். பிடிபடாமல் இருந்தால் பாதி பாதியாக இரண்டு படங்களை பார்த்துவிடலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மீதி ஆறுபேரும்
விடாப்பிடியாக கடைசிவரை அந்த திமிங்கலம் வருமோ என்று காத்திருந்தார்கள். படம் முந்தைய
பாதியைவிட இன்னும் மோசமாக மாறத்தொடங்கியது. படம் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க அழுத்தம்
அதிகரிக்கவே தொடங்கி இருந்தது. கூடவே ஆறுபேருக்கும் அதுவே நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஒருவன் என்னுடைய சேரின் மீது சாய்ந்து கொண்டு தூங்கத்தொடங்கிவிட்டான். இவர்கள் கிசுகிசுப்பாக
பேசிக்கொண்டே இருந்தாலும் அது ஏனோ நண்பர்களை தொந்தரவு செய்யவில்லை! <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இந்த பையன்களை
பார்க்க பரிதாபமாக இருந்தது. நானும்கூட பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய திரைப்படங்களில்
சென்று மாட்டிகொண்டு கதறி இருக்கிறேன். திரைப்பட விழாக்களுக்கு சென்று உலக சினிமா அறிமுகமாகி
இலக்கியங்கள் படிக்கத்தொடங்கிய பிறகுதான் இத்திரைப்படங்களை ரசிக்க கற்றுக்கொண்டேன்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">ஏன் நாம் நமக்கு
பிடிக்காத ஒன்றிலிருந்து வெளியேற எப்போதுமே மிகவும் போராடுகிறோம். பிடிக்காத ஒன்றில்
தேங்கி இருத்தல் என்பது நாட்பட நேரம் செல்ல செல்ல தீராக்காயங்களை உண்டாக்கி நமக்குள்
ஒரு திமிங்கலமாக வளரத்தொடங்கிவிடுகிறது. அது நம்மை பாடாய் படுத்தவும் செய்கிறது. அது
வேட்டையாடி ஓயும் வரை காத்திருக்கிறோம். இயற்கையாகவே நாம் ஏனோ ஒன்றிலிருந்து வெளியேற
பழக்கப்பட்டவர்கள் இல்லை என்று நினைக்கிறேன். பிடித்துதான் தேர்ந்தெடுத்தெடுக்கிறோம்.
பணம் வீணாகும் என்று வெளியேறுவதில்லை, பிறர் மனம் புண்படும் என வெளியேறுவதில்லை. பிடிக்காத
ஒன்றில் இருந்து வெளியேறுவது ஒரு நல்ல செயல். அது நம்முடைய நேரத்தை மன உளைச்சலை அவசியமற்ற
கடுப்புகளை குறைக்க உதவும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">சினிமா மட்டுமல்ல
புத்தகங்கள், உணவு, விளையாட்டு என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் நாமோ வாங்கிவிட்டோமே
என்று வேறு வழியின்றி தின்று வயிறு கெட்டுப்போய் கிடப்போம். உறவுகளுக்கும் கூட இது
பொருந்தும். வெளியேறுதல் ஒரு கலை. வெளியேறுதலை கற்க வேண்டும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">படம் முடிவதாகத்தெரியவில்லை.
பையன்களும் கதறல்களை நிறுத்தவில்லை. படம் ஓட ஓட பக்கத்து அரங்கிற்கு சென்ற அந்த இரண்டுபேர்
ஓடிவந்தார்கள். டேய் என்னடா திரும்பி வந்துட்டீங்க என்றாள் ஒருத்தி. ‘’அய்ய்யோ நீ வேற
அதுக்கு இதுவே தேவலாம்… அவன் சுறாவுக்கே சுறாவா இருக்கான். அய்யோ கொடூரம்’’ என்றுவிட்டு
திமிங்கலத்தோடு மீண்டும் சண்டையிட தொடங்கினார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">அந்த இருவரும்
திரும்பி வந்தபிறகு கூட்டம் அமைதியாகிவிட்டது. படம் முடியும்வரை சத்தமே இல்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-15789541621188638552023-01-10T08:24:00.003+05:302023-01-10T08:24:25.563+05:30நீலக்கை<p> <span style="font-family: Latha; font-size: 10pt; font-weight: 700; white-space: pre-wrap;">நீலக்கை</span></p><span id="docs-internal-guid-321b9f11-7fff-4459-c97a-8d96f5bb3fc2"><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 700; vertical-align: baseline; white-space: pre-wrap;">-அதிஷா</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">எங்கிருந்தோ இடைவிடாமல் டப்… டுப்… க்யீஈஈஈங் டப்… என்ற ஒலி சீரான இடைவெளியில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இன்னும்கூட இழுத்துப்போர்த்திக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் லட்சுமி. போர்வையின் ஊடாக புகுந்து, அந்த ஒலி விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. தூக்கம் கலைந்து விழித்து மெதுவாக எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.</span><span style="font-family: Calibri, sans-serif; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு அணைந்திருந்தது. அப்பா அருகில் திரும்பிப் படுத்திருந்தார்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அப்பாவின் தலையணைக்கு வெளியே பீடிக்கட்டும், தீப்பெட்டியும் விலகி வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன. அருகில் முக்கால்வாசி எரிந்து அணைக்கப்பட்ட பீடிகள் கிடந்தன. வீடு முழுக்கப் புகையாக இருப்பதைப் போலிருந்தது. கண்களை உள்ளங்கையால் கசக்கினாள். அம்மாவைக் காணோம். வேலைக்குப் போயிருப்பாளாயிருக்கும். வெளியே பட்டாசு ஒலி அதிகமாக கேட்டது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">இன்று பள்ளி விடுமுறை. விடுமுறை நாளில் லட்சுமி சீக்கிரமே எழுந்து விடுவதை வழக்கமாக்கியிருந்தாள். குடிசையிலிருந்து வெளியே வந்தாள். வாசலில் இருந்த சிமெண்டு தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த பயோரியா பல்பொடியில் கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் கொட்டிக்கொண்டாள். மேலே, தீச்சுவாலை ஒன்று பாய்ந்து வெடித்துப் பின் மஞ்சளாக குடைபோல ஒளிபரப்பி மறைந்தது. பல்பொடி லேசாக உவர்க்க துப்பினாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">பெரிய குளத்தின் நீண்ட கரையெங்கும் நிறைந்திருந்த ஏகப்பட்ட குடிசைகளை, ஒவ்வொன்றாக கடந்து நடக்கத் துவங்கினாள். சாலையின் ஒருபக்கம் குடிசைகள், மறுபக்கம் ஓட்டு வீடுகள். ஓட்டு வீடுகளைத் தாண்டினால் கோட்டைமேடு மிகப்பெரிய ஊராக விரியும். குடிசைகளை பார்த்துக்கொண்டே நடந்தாள் லட்சுமி.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">வேலைக்கு போய்விட்டு வரும்போது ஜிலேபி கொண்டு வருவதாக அம்மா நேற்று சொன்னது நினைவுக்கு வந்தது.. குடிசை வீடுகளில் ஒன்றின் வாசலில் ஒரு குட்டிப்பையன் தன்னந்தனியாக பொட்டுப் பட்டாசுகளை திண்ணையில் வைத்து, சிறிய கல்லால் குத்திக் குத்தி வெடித்துக் கொண்டிருந்தான். கொஞ்சதூரம் போனதும் மசூதி ஒன்றைக் கடந்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">கோயிலை, தேவாலயத்தை, மசூதியைக் கடக்கும்போதெல்லாம் நெற்றியில் தொடங்கி மார்பகங்களின் இரண்டுபக்கமும் கைகளை கொண்டுசென்று, வாயருகே வலது கை ஆட்காட்டிவிரலை மடக்கி முத்தம் கொடுப்பதைப்போல ’ப்ச்’ என்று சொல்வதை, லட்சுமி படித்த பள்ளிக் குழந்தைகள் வழக்கமாகக்கொண்டிருந்தனர். லட்சுமியும் அதையே செய்து கொண்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">மசூதியைத் தொட்ட முதல் சந்து நேராக குளத்திற்கே செல்லும். அந்த மிகக்குறுகிய சந்தில் மூன்றாவது குடிசை ரசூலுடையது. செங்குத்தாக இறங்கும் பாதை வழவழப்பாக இருந்தது. வழுக்கி விடாமல் மெதுவாக காலடி எடுத்துவைத்து முன்னோக்கி நடந்து, ரசூலின் வீட்டு வாசலில் நின்று மெலிதாக குரல்கொடுத்தாள். ‘’ரசூல்.. ரசூல்..’’</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ஏய் உள்ளே வாடி’’ ரசூலின் உம்மா குரல். மெதுவாக அந்த மரக்கதவை தள்ளி உள்ளே நுழைந்தாள். ரசூலின் வீடு லட்சுமியுடையதையும் விட, அளவில் மிகவும் சிறியது. மூலையில் உம்மா விறகடுப்பை சிறு உலோகக் குழாயால் ஊதிக்கொண்டிருந்தாள். அதிலிருந்து ங்ங்ங்ங்ங் என்ற ஒலியும், நிறைய புகையும் வந்துகொண்டிருந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">உம்மாவையும், அடுப்பையும் பார்க்க பாம்புக்கு முன்னால் அமர்ந்துகொண்டு மகுடி வாசிக்கிறவனைப்போல இருந்தது. புகையும் கூட பாம்பைப்போல அடுப்பின் மீதிருந்த கரிய சட்டியை சுற்றி, ஒட்டிக்கொண்டு வெளியேறி மேலே படமெடுத்துக் கரைந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">உம்மாவுக்கு அருகே விரித்திருந்த பாயில் ரசூல் குப்புறப் படுத்திருந்தான். தலையணையெல்லாம் ஈரமாக இருந்தது. அது தலையணை முழுக்கவும் படர்ந்திருந்தது. அவன் வாயிலிருந்து எச்சில் வழிந்து, கன்னத்தில் வெண்ணிறக் கோடாகத் தெரிந்தது. அருகில், இரண்டாம் வகுப்பு தமிழ்நூலும் கிடந்தது. வாப்பாவைத் தேடினாள். ‘’அவன எழுப்புடி.. எப்டி தூங்கறான் பாரு’’ உம்மா சொல்லிக்கொண்டே, பானையில் கரண்டியை விட்டுக்கிண்டினாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’கஞ்சி குடிக்கறியா?’’ என்றாள் உம்மா. வேண்டாம் என்பதைப்போல தலையசைத்தாள் லட்சுமி. ரசூலின் முதுகைத் தட்டி ‘’ரசூல்.. ரசூல்..’’ என்றாள். அவன் திரும்பி, லட்சுமியின் முகத்தைப் பார்த்தான். பின் புன்னகைத்தான். ‘’இச்சுமி..’’ என்றான். எல்லோருக்கும் அவள் லட்சுமி. ரசூலுக்கு எப்போதுமே அவள் இச்சுமிதான். ‘’இன்னைக்கு ஸ்கூலு லீவில்ல..’’ என்றான். ஆமா! என்பதாக தலையை ஆட்டினாள். ‘’இரு வாறேன்’’ என்று தன்னுடைய கையில்லாத பனியனையும், நீலநிற யூனிபார்ம் டவுசரின் பின்புறத்தையும் தட்டிக்கொண்டே ஓடினான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ஏண்டி உங்கம்மா இன்னைக்கும் வேலைக்கு போயிருக்காளா..?’’ கரண்டியை பானைக்குள் துளாவியபடி கேட்டாள் உம்மா.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’காலம்பர சீக்கரமே போயிருச்சு போல உம்மா.. ஆளக்காணோம்’’ என்று சொல்லிக்கொண்டே, இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ஆர். ரசூல் 2ஆம் வகுப்பு, பி பிரிவு, நல்ல ஆயன் பள்ளி என்று எழுதப்பட்டிருந்தது. புரட்டினாள். மயில் பற்றிய பாடம் இருந்தது. அது அவளுக்கு மிகவும் பிடித்த பாடம். மயில் நம் தேசியப்பறவை. பெண்மயிலுக்கு பீலி இல்லை. ஆண்மயிலுக்கு நீண்ட தோகை உண்டு… புத்தகத்திலிருந்த மயில் படத்துக்கு கீழே இச்மி என்று ரசூல் எழுதியிருந்தான். அதற்கு அடுத்த திருப்பூர் குமரன் பாடத்திலும் இச்மி என்று எழுதியிருந்தான். வரட்டும் இச்மி இச்மினு ஏண்டா எழுதின? என்று கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ரசூல் உள்ளே ஓடிவந்தான். முகங்கழுவியிருந்தான். அவன் ஓடும்போது இரண்டு கைகளையும் சைக்கிள் ஓட்டுவது போல வைத்துக்கொண்டுதான் ஓடுவான். அவனைப்பார்த்து லட்சுமியும், அப்படி ஓட கற்றுக்கொண்டிருந்தாள். ரசூலிடம்தான் அவள் நிறைய கற்றுக்கொண்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அவன்தான் அவளுக்கு பெரியகுளத்தின் குப்பைமேட்டிலிருந்து தீப்பெட்டி அட்டைகளையும் சிகரட் அட்டைகளையும் வேண்டிய அளவுக்கு எடுக்க கற்றுக்கொடுத்தான். கொட்டு வைக்கும்போது விரல்களை மடக்கி, அதில் முத்தமிட்டு எச்சில் துப்பி, தொடையில் வைத்து அழுந்த தேய்த்து, பின் நடுமண்டையில் குறிபார்த்து கொட்டுவதற்கு, பென்சில் முனையை தரையில் வைத்து தேய்த்து கூராக்க, பாட புஸ்தகங்களுக்கு தினத்தந்தி பேப்பரில் அட்டைபோட, இரண்டு கண்களையும் கொண்டு, மூக்கை உற்றுநோக்கி டோரிக்கண் வரவழைத்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்த, கண் இமைகளை மேல்நோக்கி மடித்துக்கொண்டு பூச்சாண்டி காட்ட, சீனிப்புளியங்கா மரத்தில் இனிப்பான சிவப்பு பழங்களை மட்டும் பறிப்பதற்கு,</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">டவுன்ஹாலில் இருக்கிற டிவி கடைவரைக்கும் போய் கூட்டத்தோடு நின்று மகாபாரதம் பார்க்க, மசூதியில் வரிசையில் நின்று கறிக்கஞ்சி வாங்கி குடிக்க, ஆபிதா ஹோட்டலில் இரண்டு ரூபாய்க்கு பரோட்டா வாங்கி தின்ன என நிறைய நிறைய கற்றுக்கொடுத்தான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’அல்லா.. ஒருவா கஞ்சியாச்சும் குடிச்சிட்டு போங்களேன்டா’’ என உம்மா உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்களிருவரும் வெளியே ஓடினர். குடிசையை விட்டு வெளியே வந்ததும் இருவரும் சாலையை பொறுமையாக கடந்து சாமியார் புதுவீதி வழியாக கோட்டைமேட்டின் பிரதான பாதையில் நுழைந்தனர். ‘’ரசூலு ராமசாமி நாயக்கர் வீதிக்கு மட்டும் வேணான்டா.. அங்க மாமா வீடிருக்கு.. அம்மா அங்க போக கூடாதுனு சொல்லிருக்கு’’ என்று தயங்கி தயங்கி சொன்னாள் லட்சுமி.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’சரி இச்சுமி நாம வண்டிகாரன் வீதிக்கு போலாம்..’’ என்று கோபமாக சொன்னான். ராமசாமி நாயக்கர் வீதியில்தான் நிறைய பேர் முந்தைய நாள் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். இச்சுமியின் இடது கை சுண்டுவிரலை பிடித்துக்கொண்டான். இருவருமாக வண்டிக்காரன் வீதியில் நுழைந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது. தெருவெங்கும் தேங்காய்த் துருவலைப்போல காகிதங்கள் நிரம்பியிருந்தன. காகித குப்பைகளுக்கு நடுவே சரக் சரக் என காலை நுழைத்துக்கொண்டு இருவரும் நடந்தனர்.</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">பட்டாசு மருந்து நெடி காற்றில் நிறைந்திருந்தது. ‘’இச்சுமி இந்தாப்பாரு’’ என்று கீழே கிடந்த வெடிக்காத பட்டாசு ஒன்றைக் காட்டி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். லட்சுமியும் இதுபோல சில சிகப்பு நிற ஊசிப்பட்டாசுகளைப் பொறுக்கி தன் சிம்மிஸ் பாக்கெட்டில் ரொப்பிக்கொண்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">நான்கு வீடுதள்ளி, மிகநீளமான சரவெடியை எடுத்துவந்தனர். அது கூடைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாம்பைப்போல இருந்தது. அதை உருட்டி நீட்டினர். முனையின் திரி கிள்ளி பற்றவைத்தான் சதீஷ். ரசூலின் பள்ளியில் படிக்கறவன். லட்சுமிக்கும் அவனைத் தெரியும். ஏனோ இன்று அவர்களைக் கண்டும் காணாதது போல, பட்டாசு வெடிப்பதில் மும்முரமாக இருந்தான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அவன் கையில் இருந்த ஊதுபத்தியை அவனுடைய அப்பாவும் சேர்த்துப் பிடித்திருந்தார். இருவரும் புத்தம்புது ஆடைகளை அணிந்திருந்தனர். ‘’சாமீ நிறைய பட்டாசு புஸ்ஸா போகணும்.. சாமிசாமி’’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள் லட்சுமி. மீண்டும் சிலுவை குறியிட்டு ஆட்காட்டி விரலை மடக்கி முத்தமிட்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அப்பாவும், மகனுமாக மெதுவாக திரியில் தீயை ஒட்டவைக்க.. ஒட்டிக்கொண்ட நெருப்புத்துளி பற்றி அப்படியேபட்டுப்பரவி வெடிக்கத்தொடங்கியது. வீட்டுக்கு எதிரில் நின்ற லட்சுமி காதை அழுத்திப்பொத்திக்கொண்டு, இடுப்பை வளைத்து திரும்பி நின்றாள். ரசூல் வீரமாக அப்படியே அசட்டையாக, நெஞ்சை நிமிர்த்தி, அதை பார்த்துக்கொண்டு நின்றான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">வெடித்து முடித்ததும். ரசூல் ஓடிச்சென்று சரவெடியில் வெடிக்காத பட்டாசுகள் ஒன்றிரண்டைப் பொறுக்க ஆரம்பித்தான். லட்சுமி தயங்கி தயங்கி நின்றாள். சதீஷின் அப்பா கோபமாக ரசூலை பார்த்தார். பிறகு லட்சுமியையும் பார்த்தார். அவர் மாமாவின் நண்பர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’நீ சித்ரா மகதான.. என்னடி இது துளுக்கப்பயலோட திரியற..’’ என்று ஏதோ கத்துவது சன்னமாக கேட்டது. சுற்றி வெடிச்சத்தம் பரவியிருந்தது. ‘’டேய் போடா.. இந்தப் பக்கமெல்லாம் வரக்கூடாது.. போ..’’ என்று சதீஷின் அப்பா ரசூலை விரட்டினார்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’டேய் பட்டாசெல்லாம் உள்ளே பத்திரமா வைய்யி’’ சத்தம்போட்டார் அப்பா. சதிஷ் ஓடிப் போய் வாசலில் வைத்திருந்த பட்டாசு பாக்கெட்டுகளை ஒரு வயர் கூடையில் போட்டு உள்ளே எடுத்துச்சென்றான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ரசூல் அதையெல்லாம் கண்டுகொள்ளாதவனாய் ‘’வா இச்சுமி போலாம்’’ என்றபோது லட்சுமிக்கு மனசுக்குள் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருந்தது. சினிமாவில் நாயகியை மீட்டு அழைத்துச்செல்லும் நாயகனைப்போல ரசூல் தோன்றினான். சுண்டுவிரலை பிடித்து இழுத்துக்கொண்டு வண்டிக்காரன் வீதி முழுக்க பட்டாசுகளை பொறுக்கினார்கள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">பெருமாள் கோவில் வீதியின் எல்லையில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் லாரிகள் நிற்குமிடத்தில் கதவு பூட்டப்பட்ட, ஒரு கடை வாசலில் வந்து அமர்ந்தபோது சூரியன் உச்சிக்கு வந்திருந்தான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">இரண்டு பாக்கெட்டுகளிலும் இருந்த பட்டாசுகளை மொத்தமாக கொட்டினான். சிகப்பும் மஞ்சளுமாக விதவிதமான பட்டாசுகள். சில பட்டாசுகளில் திரி சிறியதாக இருந்தது. சில பட்டாசுகளில் திரியே இல்லை. சில பட்டாசுகள் வெடிக்க முடியாமல் திணறி செத்துப்போயிருந்தன. ஒவ்வொன்றையும் பிரித்தான். சின்ன திரி உள்ள பட்டாசுகளை தீப்பெட்டியின் உதவியோடு வெடிக்கச்செய்தான். சில வெடிகள் பற்றிக்கொள்ளும் முன்பே வெடித்தாலும் ரசூல் தைரியமாக அருகிலேயே நின்றான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">இந்த ரசூல் எதுக்குதான் பயப்படுவானோ என நினைத்தாள். சில பட்டாசுகளைக் கையிலேயே பற்றவைத்து தூக்கி வீசி வெடித்தான். ஓவ்வொரு முறையும் பட்டாசினை பற்றவைத்ததும் காதைப்பொத்திக்கொண்டு கண்களை இறுக மூடி உடலைக் குறுக்கி, அது வெடிப்பதற்கு காத்திருந்தாள் லட்சுமி. ரசூல் வேண்டுமென்றே பற்றவைக்காமல் அவள் அப்படி செய்வதை காரணமின்றி ரசித்தான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">கிடைத்த பட்டாசுகளில் வெடிக்க முடிந்தது போக, மீதியை பிரித்து ஒரு செய்தித்தாளை குப்பையிலிருந்து பொறுக்கி அதில் கொட்டி சேகரித்தான். லட்சுமியும் தன் பங்கிற்கு பட்டாசுகளிலிருந்த மருந்தினைக் கொட்டினாள். ரசூலின் கைகள் முழுக்க பட்டாசு மருந்து நிறைய அப்பியிருந்தது. அது சூரிய ஒளியில் பட்டு, கண்ணனின் கரிய நீலநிற கைகளைப் போல் மின்னியது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ரசூலு உன் கை சூப்பரா மின்னுது’’ என்று மின்னுங்கண்களோடு சொன்னாள் லட்சுமி. பட்டாசுகளை பிரித்தபடி ‘’ஆமா’’ என்றான் ரசூல். ‘’கிஸ்ணர் கை மாதிரி இருக்கு..’’ என்றாள். ‘’கிஸ்ணர் கை இப்படிதான ப்ளூகலர்ல மின்னும், அன்னைக்கு மகாபாரதத்துல பார்த்தம்ல’’</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அவள் சொல்ல சொல்ல ரசூல் ஆமோதிப்பதைப்போல தலையசைத்தான். கைமுழுக்க அந்த பட்டாசு துகள்களை அப்பிக்கொண்டான். லட்சுமியும் தன்பங்குக்கு தன் சின்னக்கைகளால் பட்டாசு மருந்தை அள்ளி கொஞ்சம் அவனுடைய கைகளில் தேய்த்துவிட்டாள். இப்போது கையில் ஒரு சின்ன இடைவெளி கூட இல்லாமல் அவன் கைகள் மின்னின.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">லட்சுமி சிரிக்க.. ‘’நல்லாருக்கா இச்சுமி.. நல்லாருக்கா இச்சுமி’’ என்று கையை தூக்கிக்காட்டி ஆர்ப்பரித்தான் ரசூல். கீழே கிடந்த ஒரு நீண்ட ராக்கெட் குச்சியை எடுத்து புல்லாங்குழல் இசைப்பதைப்போல வைத்துக்கொண்டு நான்தான் கிஷ்ணர் என்று சிரித்துக்கொண்டான். ‘’அப்ப நான்தான் கிஷ்ணர் பொண்டாட்டி’’ என்று சிரித்துக்கொண்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’பசிக்குது ரசூல்’’ என்று வயிற்றை தொட்டுக்காட்டினாள். ‘’ராமசாமி நாயக்கர் வீதில போயி இன்னும் கொஞ்சம் பட்டாசு எடுப்போம் இச்சுமி.. அங்கே நிறைய வெடிப்பாங்க..’ என்று கெஞ்சினான். பயமாக இருந்தாலும் ரசூலுக்காக சரியென்று ஒப்புக்கொண்டு பெருமாள் கோவில்வீதி தாண்டி, பழையமார்க்கெட் வழியே ராமசாமி நாயக்கர் வீதியை அடைந்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">மதியமாகிவிட்டபோதும் இன்னமும் பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தனர். பையன்கள் பட்டாசுவெடித்துக்கொண்டும், இனிப்புகளை தின்றபடியும், புத்தாடைகளோடு நின்றனர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ரசூல் இன்னைக்கு எல்லார் வீட்லயும் நிறைய பட்டாசு வெடிக்காமப் போகணும்னு நீ வேண்டிக்க’’ என்றாள் லட்சுமி. ‘’நாங்க முஸ்லீம்ல எங்களுக்கு தீவாளி கிடையாது இச்சுமி, அதனால வேண்டினாலும் வேஸ்டுதான்’’ என்று வருத்தமாகச் சொன்னான் ரசூல்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ஆமாண்டா ச்சே’’ என்று லட்சுமியும் அவனோடு சோகமானாள். ‘’சரி விடுடா நான் மட்டும் வேண்டிக்கறேன்’’ என்று அவனைத் தேற்றினாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">இங்கும் தினத்தந்தி பேப்பரைக் கிழித்துப் போட்ட மாதிரி தெருவே நிறைந்திருந்தது. பட்டாசு நெடி மணந்தது. ஒரு பையன் பெரிய சைஸ் பட்டாசு ஒன்றை பற்றவைக்க, இருவரும் காத்திருந்தனர். ‘’புஸ்ஸா போணும் புஸ்ஸா போணும்..’’ மனதிற்குள் மந்திரம் போல ஜெபிக்க ஆரம்பித்தாள் லட்சுமி. ஆனால், டமால் என வெடித்தது. இது மற்ற பட்டாசுகளை விட அதிக சப்தத்தோடு வெடித்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’இது என்ன பட்டாசு?’’ ஆர்வத்தோடு கேட்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’இது லச்சுமி வெடி.. சும்மா நங்குனு வெடிக்கும் தெரியுமா இச்சுமி’’ என்று பேசிக்கொண்டே காத்திருந்தனர். அந்தப் பையன் ஒரு புஸ்வாணத்தை எடுத்து வந்து, நடுத்தெருவில் வைத்தான். ‘’டே! பகல்ல வைக்காத ஒண்ணுமே தெரியாது’’ என்று அவனுடைய அக்கா கத்தினாள். அந்தப் பையன் கேட்பதாக இல்லை.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">குவிந்துகிடந்த காகிதக்குப்பைகளுக்கு நடுவே இடம் ஒதுக்கி, அதை மத்தியில் வைத்தான். ஒரு மத்தாப்பு டப்பாவிலிருந்து குச்சியை எடுத்து பற்றவைத்தான். ரசூலும், லட்சுமியும் அதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">மத்தாப்பிலிருந்து வெளியான அடர்த்தியான பச்சையும், சிகப்புமான நெருப்பு புஸ்வாணத்திலும் பற்றிக்கொள்ள… பையன் திரும்பி வாசலுக்கே ஓடினான். ஆனால், அது லேசாக கொஞ்சமாக தீயை அரை அடிக்கும் குறைவாக கக்கிவிட்டு அடங்கியது. பையன் அருகில் வந்து மெதுமெதுவாக நெருங்கி ஒரு கல்லை தூக்கி அதை அடித்தான். அது அப்படியே இருந்தது. அருகில் வந்து கால்களால் தட்டிவிட்டான். அது ஓரமாக போய் விழுந்தது. ரசூல் அந்த புஸ்வானத்தை நோக்கிச்சென்றான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">லட்சுமியின் மாமா எங்கோ கிளம்பி சைக்கிளுடன் வெளியே வந்தார். லட்சுமியைப் பார்த்ததும் முறைத்தார். பின்னால் புத்தாடை அணிந்து அமர்ந்திருந்த, அவருடைய குட்டிப்பையனும் காரணமேயில்லாமல் முறைத்தான். ‘’உங்கம்மா எங்க..? இங்கே என்ன பண்ற..?’’ சைக்கிளில் அமர்ந்தபடி ஒரு காலை ஊன்றிக்கொண்டு மிரட்ட ஆரம்பித்தார். லட்சுமி மழுங்க மழுங்க விழித்தபடி நின்றாள். ‘’உங்கம்மாக்காரி எங்க..? எத்தன மொற சொல்லிருக்கேன் தனியாத்திரியாதன்னு’ மேலும் திட்டினார். புஸ்வாணத்தை எடுக்கும் முனைப்போடு சென்றுகொண்டிருந்த ரசூல் மெதுவாக மாமாவை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும், புஸ்வாணத்தை எடுக்க குனிந்தான். லட்சுமி எதுவுமே பேசாமல் தலைகுனிந்து நின்றாள். மாமா முறைத்தபடி நின்றார்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ரசூல் புஸ்வானத்தை கையில் எடுத்தான். அவனுடைய கைகளில் ஏறியதும் ராமனின் கால்பட்ட அகலிகைக்கு உயிர்வந்தது போல அந்த புஸ்வானம் சன்னமாக மூச்சுவிட்டது. அது தன் கூர்மையான வாயிலிருந்து கரகரவென்னும் ஓசையுடன் அவன் பனியனை நோக்கி தீப்பொறிகளை துப்பத்தொடங்கியது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அதிர்ந்துபோய் புஸ்வாணத்தை தூக்கியெறிந்தான் ரசூல். சில நொடிகள்தான்.., அவனுடைய இரண்டு கைகளை தீ பற்றிக்கொண்டிருந்தது. ‘’ஐய்யோ இச்சுமி.. ‘’ என்று அவன் கத்தியதுதான் கேட்டது. மாமா பதறினார். சைக்கிளிலிருந்து கீழே இறங்கினார். சைக்கிளின் முன்தண்டில் இணைக்கப்பட்ட குட்டி சீட்டிலிருந்து பையனை இறக்கினார். அதற்குள் கை முழுக்க தீப்பற்றிக்கொண்டு, தகதகவென வெவ்வேறு விதமாக ஒளிகளை பாய்ச்சியவாறு எரிந்துகொண்டிருந்தது. லட்சுமிக்கு அது இரண்டு நீண்ட தடியான கம்பித்திரிகள் எரிவதைப்போல் இருந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">மாமா அவசரமாக குனிந்து மண்ணை அள்ளினார் அவனுடைய கைகளில் போட. ஆனால் அதற்குள்ளாக ரசூலே சுதாரித்துக்கொண்டு அருகிலிருந்த சாக்கடையில் தன் கைகளை முக்கினான். அருகிலிருந்த வீடுகளில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தவர்கள் கூடிவிட்டனர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அவனைச் சிலர் சாக்கடையிலிருந்து தூக்கினர். லட்சுமி அவன் அருகே வந்து கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கைகள் முழுக்க சாக்கடை அப்பி, ஈரமாகி கருத்திருந்தது. ஒவ்வொருவரும் ஏதேதோ முணுமுணுத்தனர். ‘’டேய் ஏர்ரா..’’ என்று அதட்டினார் மாமா. மாமா அவனைச் சைக்கிளில் அமரவைத்துக்கொண்டார்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’லச்சுமி இவனை வீட்ல விட்ரு’’ என்று அதட்டிச் சொல்லி விட்டு எங்கோ விரைந்தார். மாமாவின் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ரசூல் அழுதபடி, தெருமுனை கடக்கும்வரை லட்சுமியையே பார்த்துக்கொண்டிருந்தான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அடுத்தநாள் காலையில் ரசூல் எங்கோ போய்விட்டிருந்தான். வாப்பாவிடம் கேட்டாள். அவனை பாலக்காட்டுக்கு அனுப்பிவிட்டதாக சொன்னார். அங்கே அவனுடைய மாமா வீட்டில் தங்கி வைத்தியம் பண்ணப்போவதாக சொன்னார். மூலையில் கிடந்த இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகம், இன்னமும் அங்கேயேதான் கிடந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">*********</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’வேற்றுமையிலும் ஒற்றுமை’’, ‘’வேற்றுமையிலும் ஒற்றுமை’’, ‘’வேற்றுமையிலும் ஒற்றுமை’’ என்று பத்தாம் வகுப்பு குடிமையியல் பாடத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்த போதுதான், காக்கியுடை போலீசார் லட்சுமியின் குடிசைக்குள் தொப் தொப்பென்று நுழைந்தனர். தங்களுடைய நீண்ட லத்தியால் உள்ளே கிடந்த பொருட்களை தட்டிப்பார்த்தனர். அவசரமாக எழுந்து, தன் தாவணியை அனிச்சையாக சரிசெய்துகொண்டு நின்றாள் லட்சுமி. ‘’பாப்பா வெளியே போம்மா’’ என்று காக்கி உடையணிந்த வயதான கான்ஸ்டபிள் சத்தமிட்டார்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">பதறிப்போய் அவசரமாக வெளியே வந்து நின்றாள் லட்சுமி. வெளியே ஒரு பதட்டமான சூழல் இருப்பதை உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான போலீஸார் அந்த குடிசைகளை முற்றுகையிட்டிருந்தனர். அவளைப்போலவே பலரும் வீட்டை போலீஸிடம் கொடுத்துவிட்டு வாசலில் நின்றனர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ஊரில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து சில தினங்களே ஆகியிருந்தது. பள்ளிகளுக்கு பத்துநாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஊர் முழுக்க ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எங்கும் நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சில வீடுகளிலிருந்து ஜெலட்டின் குச்சிகள், ஆர்டிஎக்ஸ் எல்லாம் கைப்பற்றப்பட்டதாக செய்தித்தாள்களில் லட்சுமி படித்திருந்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருந்ததால், இந்த விடுமுறைநாட்கள் படிப்பதற்கேற்றதாக இருந்தன. பகலெல்லாம் படித்துக்கொண்டேயிருந்தாள். கான்ஸ்டபிள்கள் மொத்தமாக வெளியே வந்தனர். ஒரு போலீஸ்காரர் உள்ளே ஒன்றுமில்லை என்று கையை ஆட்டி, சைகையில் கூற, அடுத்த வீடுகளுக்குள் புகுந்து மீண்டும் தேடுதலைத்தொடங்கியது காவல்துறை.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">லட்சுமி வீட்டுக்குள் நுழைந்தாள். பெட்டியிலிருந்த அவளுடைய உடைகள் வெளியே எறியப்பட்டிருந்தன. அவை வீடுமுழுக்க பூசணிக்கொடிகளைப்போல படர்ந்திருந்தன. கொடியில் கிடந்த துவைத்த உடைகளையும் இழுத்து தரையில் எறிந்திருந்தனர். வீட்டிலிருந்த சாமிப்படங்கள் மட்டும்தான் காவல்துறையின் தொந்தரவுக்கு ஆளாகாமல் சிரித்த முகத்துடன் காட்சியளித்தது. கிருஷ்ணர் தன் புல்லாங்குழலுடன் பசுவுக்கு முன்னால் ஒய்யாரமாக நின்றார். அவசரமாக ஓடிப்போய் அரிசிவைத்திருந்த குண்டாவில் கையை விட்டுத்தேடிப்பார்த்தாள் லட்சுமி.</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அதிலிருந்த முப்பது ரூபாயை காணவில்லை. எப்படிப்போய் யாரிடம் கேட்பது? கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தது. சனிக்கிழமை ரேவதியோடு காதலுக்கு மரியாதை பார்க்கலாம் என்று வைத்திருந்த பணம். இனி அம்மாவிடம் காசுகேட்டால் உதைப்பாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அப்பா இறந்த பிறகு, அம்மாதான் ஒற்றை ஆளாக குடும்பத்தைத் தாங்கினாள். தம்பியையும் லட்சுமியையும் படிக்க வைக்கவேண்டும் என்று உழைத்தாள். படிக்கணும் அவ்ளோதான்.. நல்ல மார்க் எடுக்கணும்.. இல்லாட்டி செறுப்பு பிஞ்சிடும் இதுதான் அம்மாவின் நிரந்தரமான வசனங்களாகிவிட்டன. தினமும் ஒருமுறையாவது இதைச் சொல்லவில்லையென்றால், அம்மாவால் தூங்கவும் முடியாது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">லட்சுமிக்கு இருந்த ஒரே ஆறுதல் ரேவதிதான். ரசூலின் குடிசைக்கு அடுத்த குடிசை ரேவதியுனுடையது. ரசூல் பாலக்காட்டுக்குச் சென்றபின், ரேவதிதான் நிரந்தரமாக லட்சுமியோடு சுற்ற ஆரம்பித்தாள். ரசூல் வீட்டை கடக்கும்போதெல்லாம், ஒருமுறை எட்டிப்பார்ப்பாள், அவனைக்குறித்து விசாரிப்பாள். எட்டாண்டுகளில் ஓரிரு முறை ரசூல் வீட்டிற்கு வரும்போது பார்த்திருக்கிறாள். ஆனால், முன்புபோல ரசூல் சரியாக பேசவில்லை. ‘’எந்தா இச்சுமி.. நல்லா வளந்துட்ட’’ என்று மலையாளம் கலந்து பேசுவான். இரண்டுமுறை பார்த்தபோதும், அதையேதான் சொன்னான். பாலக்காட்டிலேயே தங்கி தன்னுடைய மாமாவின் போத்து இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">கைநிறைய சம்பளம் தறார் மாமா.. அவர்ட கடைல நான்தான் எல்லாம் என்று பெருமையாகச் சொன்னான். அவ்வளவுதான் உரையாடல். அவனுக்கு எல்லாமே மறந்துவிட்டிருந்ததாக அவள் நினைத்து கலங்குவாள்.</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">போலீசார் தேடிக்கொண்டிருந்த குடிசைகளை பார்த்தபடியே விறுவிறுவென நடந்து நேராக ரேவதியின் வீட்டுக்குச் சென்றாள். ரசூலின் குடிசையை தாண்டிச்செல்லும்போது அவனுடைய வீட்டு வாசலில் நிறையவே காலணிகள் கிடப்பதை கவனிக்கத் தவறவில்லை. விருந்தாளிங்க வந்திருப்பாங்க போல.. என நினைத்தாள். ரசூலுக்கு பெண் பார்க்கிறார்களோ? என சந்தேகித்தாள். ரேவதியின் வீட்டுக்கதவை தள்ளினாள். திறந்துகொண்டது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">உள்ளே குடிசைக்கு நடுவில், ரேவதி தூங்கிக்கொண்டிருந்தாள். ‘’ஏ சோம்பேறி எழுந்திருடி. இவளே‘’ என்று எழுப்பினாள். தாவணி விலகி மார்புகள் தெரியப்படுத்திருந்த ரேவதி அதிர்ந்து போய், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். உடைகளைச் சரிசெய்துகொண்டு, கண்களைக் கசக்கியபடி ‘’என்னடி இந்த நேரத்துல..’’ என்றாள். போலீஸாரின் திடீர் வரவு குறித்து சொன்னாள் லட்சுமி. முப்பது ரூபாயை பற்றித்தான் சோகமாகச் சொன்னாள். ரேவதி ஓடிப்போய், அவசரமாக தன்னுடைய பையிலிருந்த ஜியாமன்ட்ரி பாக்ஸில் இருந்த இரண்டு பத்துரூபாயை எடுத்து, அவசரமாக பச்சைநிற ஜாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ஏன்டி காசெல்லாமா எடுக்கறானுங்க’’ என்று புருவம் உயர்த்தி கேட்டாள் ரேவதி.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ஆமாண்டி.. பாம் இருக்கானு செக் பண்றானுங்களாம்.. விட்டா இதான் சாக்குனு பிள்ளைக பாவடைய கூட தூக்கிப்பாப்பானுங்க போல’’</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’நேத்து ஷைலு வீட்டுக்கு பின்னால இருந்தான்ல அந்த பையன் என்னமோ பேரு.. மன்சூரு.. அவனைக்கூட புடிச்சிட்டு போய்ட்டாங்களாம்.. ரொம்ப அழகாருப்பான்’’ ரேவதி வருந்தினாள். மன்சூரை ரேவதிக்கு ரொம்பவும் பிடிக்கும்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’ரசூல் வீட்ல என்ன விசேஷமா.. கூட்டமாருக்கும்போலருக்கே’’ என்றாள். ‘’தெரிலடி.. காலைலருந்து நிறையபேர் வந்துட்டு போயிட்டிருந்தாங்க.. ரசூல் வந்திருப்பான் போல’’ என்று ஆர்வமேயில்லாமல் சொன்னாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ரசூல் வந்திருக்கிறானா! உடனே போய் அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பூப்படைந்த பின் தான் அழகாகிவிட்டதாக அம்மா சொன்னது காரணமேயில்லாமல் நினைவுக்கு வந்ததும். குடிசைக்கு நடுவில் அமர்ந்திருந்தவள் அவசரமாக எழுந்து சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில், முகம் பார்த்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">சிகப்பும், மஞ்சளுமாக ஃப்ரேம் போட்ட அந்தக்கண்ணாடியில், அவள் முன்னெப்போதும் இருந்ததைவிட அழகாயிருந்தாள். தன் உடைகளைச் சரிசெய்துகொண்டாள். பூவைத்திருக்கலாமோ? என்று தோன்றியது. ‘’ரேவதி ரசூல் வீட்டுக்குபோயி உம்மாவ பார்த்துட்டு வந்துரேன்’’ என்று விருட்டென வாசலுக்கு வந்தாள். ரேவதி அவள் சொல்வதை காதில் வாங்காமல் கடுகு டப்பாவில் வைத்திருந்த, நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து ஜாக்கெட்டிற்கு திணித்துக்கொண்டிருந்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அவளை கவனிக்காமல் வாசலுக்கு வந்தாள் லட்சுமி. வாசலில் போலீஸ்காரர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருடைய கையிலிருந்த வாக்கிடாக்கியில் கரகரப்பான குரல் குட்மார்னிங் சார் என்று எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. அந்த கரகர குரலிலிருந்து ரசூல் என்கிற பெயரை மட்டும் அவள் வடிகட்டிக்கொண்டாள். ரசூலுக்கு என்ன? என்று உடனடியாக மனது தவித்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">ரசூலின் வீட்டு வாசலில் இன்னும் கூட நிறைய போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘’யார் நீ’’ என்று லட்சுமியையும் அவர்கள் விசாரித்தனர். ‘’நான் உம்மா.. ரேவதி..’’ தடுமாறினாள் லட்சுமி. ‘’யார் வேணும் உனக்கு.. இங்கே என்ன பண்ற.. பேர் என்ன’’ அடுக்கடுக்காக கேள்விகளை குவிக்க.. லட்சுமி மேலும் நிலைகுலைந்தாள். உள்ளே உம்மாவின் பெருங்குரல் கேட்டது. ‘’அய்யோ என் புள்ளைய விட்ருங்கோ..’’ என்கிற கதறல் அவளுக்கு மெலிதாகக் கேட்டது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">நாலைந்து போலீஸ்காரர்கள் கொத்தாக வெளியே வர நடுவில் ரசூல். அவனுடைய சட்டை காலரைப் பிடித்திருந்தனர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அவனுக்கு லேசாக மீசை முளைத்திருந்தது. இன்னும் கொஞ்சம் உயரமாகியிருந்தான். இதழ்கள் சிவப்பாகியிருந்தன. தோள்கள் இரண்டும் அகன்று, கம்பீரமாக நிமிர்ந்திருந்தன. புருவங்கள் அடர்த்தியாயிருந்தன. சின்னதாக பங்க் வைத்திருந்தான். குங்குமக்கலர் சட்டை அணிந்திருந்தான். கொஞ்சம் உடம்புபோட்டிருக்கிறான் என்று தோன்றியது. ‘’போடா.. ராஸ்கல்.. இங்கே வந்து ஒளிஞ்சிகிட்டா எதுவும் தெரியாதா’’ அவனை பிடித்து சாலையில் தள்ளினர். லட்சுமியின் கண்களில் கலங்கியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">விழும்போது அவனுடைய கண்கள் லட்சுமியை கவனிப்பதைப் போல் இருந்தது. அவனுடைய கன்னங்கள் கைத்தடங்களால் ரத்தச்சிவப்பாய் இருந்தன. உதட்டோரம் சிவந்து கறுத்திருந்தது. இடதுகண் இமைகள் லேசாக வீங்கியிருந்தன.</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">மடித்துவிடப்பட்ட சட்டைக்கு வெளியே முழுக்க தழும்புகள் அடர்ந்த கைகள் நீண்டிருந்தன. அவை அட்லஸில் பார்த்த தக்காணபீடபூமியைப்போல இருந்தன. அந்த சுருக்கங்கள் கையெங்கும் பரவி அவன் உடல்முழுதும் கூட பரவியிருக்குமோ என்று எண்ண வைக்கும்படி படர்ந்திருந்தன.</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’சார்… இது பட்டாசு காயம்.. சார்.. நம்புங்கசார்.. அந்த பாய் வீட்டுக்கு எறச்சிதான் கொண்டுபோய் கொடுத்திருக்கேன். வேற எதுவும் தெரியாது சார்… பாய் பாய்.. நீங்களாச்சும் சொல்லுங்க பாய்..’’ கையைக்கூப்பி கண்களில் நீர்வழிய கெஞ்சினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முஸ்லீம் பெரியவர், தன் வலதுகையின் இரண்டுவிரல்களால் கண்களை நசுக்கிகொண்டு நின்றார். லட்சுமி தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். இன்னமும், கைகளை கூப்பி ரசூல் மன்றாடிக்கொண்டிருந்தான். மண்ணில் கிடந்தவனை நாலைந்து போலீஸ்காரர்கள் அள்ளிக்கொண்டுபோய் வெள்ளைநிற வாகனமொன்றில் கொட்டினர். அல்லாஹ் அல்லாஹ் என்று அவன் அழும் ஓசை அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">உம்மா வாசலில் கிடந்தாள். அவளுடைய தலைமுக்காடு விலக விலக அதை சரிசெய்துகொண்டே.. உரக்க கத்தி அழுதுகொண்டிருந்தாள். உள்ளே வாப்பா அமைதியாக அமர்ந்திருந்தார். அவருடைய தலையில் ரத்தம் வழிந்து அப்பிக்கொண்டிருந்தது. வெள்ளை வாகனம் கிளம்பிச்சென்றது. அதில், மேலும் பல இளைஞர்கள் இருந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர் வண்டிக்கு பின்னால் வெறிபிடித்தது போல ஓடினர். சிலர் உள்ளிருந்து உம்மா.. உம்மா என்று கத்துவது கேட்டது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">லட்சுமி உம்மாவைத் தூக்கினாள். ‘’பட்டாசு காயம் பட்டாசு காயம்னு எவ்வளவோ சொல்லியும்.. அவனுங்க கேக்கலையே’’ என்று அம்மா லட்சுமியை கட்டிக்கொண்டு அழுதாள். ரேவதி ஒரு எவர்சில்வர் சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து உம்மாவுக்கு கொடுத்தாள். உம்மா அதை குடிக்க மறுத்தாள். உம்மா சாலையையே பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைத்து குடிசைக்குள் அமரவைத்தனர். வாப்பா ஓரமாக குத்துகாலிட்டு அமர்ந்திருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ரத்தம் வழிந்து முகத்தில் படர்ந்திருந்தது. அதில் மண் ஒட்டிக்கொண்டிருந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">வெள்ளத்தினால் உருக்குலைந்த வீட்டைப்போல, குடிசை முழுவதுமே கலைத்துப் போடப்பட்டிருந்தது. ரசூலுக்காக சமைத்த பிரியாணியும் இறைச்சியும் தரையில் சிதறிக்கிடந்தன. தரையில் சில இடங்களில் ரத்தத்துளிகள் பரவியிருந்தன. அது ரசூலினுடையதாக இருக்கலாம். லட்சுமியின் கண்களை நீர் நிறைத்திருந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">***********</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">இச்சுமி என்கிற குரலைக்கேட்டதும் அதிர்ந்துபோய் குரல் வந்த திசைநோக்கித்தேடினாள். ஆயிரக்கணக்கான குரல்களின் இரைச்சல்களுக்கு நடுவே ஒலித்த தனிக்குரல். பத்தாண்டுகளுக்கு பிறகு கேட்கிற குரல். கிராஸ்கட் ரோடில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்திருந்தனர். அந்த பட்டாசுக் கடையில் எப்படியும் ஐநூறுபேராவது கையில் நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு, எனக்கு இரண்டு பாக்கெட் ஊசிவெடி, மூணுபாக்கெட் பெரிய கம்பித்திரி என கத்தி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் அந்த குரல் கேட்டது.. இச்சுமி… இங்கே.. இங்கே…..</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">அது கடைக்குள்ளிருந்து வந்தது. உள்ளே, முன் தலை வழுக்கையாக ஒல்லியாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அந்தக்குரல் அவனுடையதேதான். அவன் ரசூலேதான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">வெளியே வா என்பதைப்போல கையை உயர்த்தி வலதுஇடதாக ஆட்டி ஆட்டி கைகாட்டினான். அவனும் வெளியே வர கிராஸ்கட் ரோடிலிருந்து இறங்கி அருகிலிருந்த சின்ன சந்துக்குள் திரும்பினர். மூலையிலிருந்த ஜூஸ்கடையில் நின்றனர்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">மெலிந்திருந்தான். கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் உள்ளே போய் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. நெற்றியின் துவக்கத்தில் கருத்த மச்சம் போன்ற வட்டமான அடையாளமிருந்தது. வாப்பாவுக்கு இதே போன்ற மச்சம் உண்டு. அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தான். கருத்திருந்தான். மெலிந்திருந்தான். அழுக்கு சட்டையும், பழைய ஜூன்ஸும் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தின் லட்சுமியை கண்ட உற்சாகமும் பூரிப்பும் நிறைந்திருந்தன.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’இச்சுமி.. எப்படி இருக்க.. பையன் யாரு.. உம்பையனா.. உன்னை மாதிரியே இருக்கானே.. நீ சின்னதா இருக்கும்போதே இதேமாரிதான இருப்ப.. மூக்கொளிக்கிட்டு..சிம்மிஸ் போட்டுகிட்டு.. வீட்டுகார் என்ன பண்றாரு.. நீ எப்படி இருக்க.. அம்மா எப்படி இருக்கு, இப்போ எங்கே இருக்க வீடு மாத்திட்டப்போல.. ’’ கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">லட்சுமி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பேச எத்தனித்தும் வாயிலிருந்து வார்த்தைகளை பிடித்து இழுக்க வேண்டியிருந்தது. விரல் பிடித்து நின்றுகொண்டிருந்த குட்டிப்பையன் ரசூலை முறைத்துக்கொண்டு நின்றான். ‘’டேய் உன் பேரென்ன.. எத்தனாவது படிக்கற’’ என்று கன்னத்தை கிள்ளினான். பையன் இன்னும் அதிகமாக முறைத்தான். லட்சுமி எதுவுமே பேசாமல் அவனை பார்த்தபடி நின்றாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும் போல்தான் இருந்தது. பேச எத்தனித்தாலும் ஏனோ உடல் ஒத்துழைக்கவில்லை. அவனுடைய கண்களையே பார்த்துக்கொண்டு நின்றாள்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’இச்சுமி ஒம்போது வருமாகிடுச்சு... இப்பதான் எம்மேல தப்பில்லைனு கண்டுபிடிச்சாங்களாம்.. நான் நல்லவன்னு சொல்லி வெளிய போடானு விட்டுட்டாங்க.. என்னென்னமோ நடந்துபோச்சு.. எல்லாமே மாறிடுச்சு.. வெளிய வந்தா எல்லாமே மாறிப்போயிருக்கு.. ஜெயிலுக்கு போகும்போது வெறுங்கையோடு சுத்தினவங்க இப்பல்லாம் வெத்தலப்பெட்டி மாதிரி செல்போனை தூக்கிட்டு அலையறாங்க.. கோயம்புத்தூரே மாறிப்போச்சு இச்சுமி.. நீகூட மாறிட்ட.. பெரிய பொம்பளை மாதிரில்ல ஆகிட்ட.. சின்ன வயசுல உம்மாவ பாத்த மாதிரி இருக்க.. சேலைலாம் கட்டிகிட்டு’’ பேசிக்கொண்டேயிருந்தான். லட்சுமி கண்சிமிட்டவும் மறந்து போயிருந்தாள். அவனுடைய கருவிழி விரிந்தும் அடங்கியும் அதிர்ந்தும் அலைபாய்ந்தும்… பார்த்துக்கொண்டேயிருந்தாள்.</span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’பொழப்புதான் ஒன்னும் செட்டாவ மாட்டேனுது.. எங்கியாச்சும் வேலைனு போய் நிக்க முடில.. அப்படியே எதுனா வேலைல சேந்தாலும் போலீஸ்காரங்க தொல்ல.. டிசம்பர் ஆறாந்தேதி வருதா ஒருவாரம் முன்னாடியே புடிச்சிட்டு போய் உக்காத்தி வச்சிடறானுங்க.. அத்வானி வராப்லயா.. அவர் பேர் என்னவோ அவர் வராப்லயா.. புடிச்சி வை உள்ளாறனு.. வீட்டுக்கே வந்துடாறங்க போலீஸ்காரங்க… எங்கயோ வடநாட்ல குண்டுவெடிச்சிதுன்னா போதும்.. அவங்களுக்கு மொத்தல்ல நம்ம நினைப்பு வந்துடும்… உள்ளயும் வெளியவுமா போகுது பொழப்பு.. என்னத்தச்சொல்ல, கிடைச்ச வேலைய செஞ்சிட்டு.. ’’ துக்கித்தான்.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">‘’உனக்கு எப்போ கல்யாணமாச்சு.. என்ன இச்சுமி.. பேசவே மாட்டேன்ங்குற.. சரி உன் போன் நம்பர் குடு.. அப்புறமா கூப்ட்றேன்..கடைக்கு வா.. நம்ம யூசூஃப் மச்சான் தெரியும்ல.. ரேவதி வீட்டுக்கு அடுத்த வீடு.. அவன் கடைதான்.. என்ன பட்டாசு வேணுமோ எடுத்துக்கோ..’’ படபடத்தான். அவனுடைய இமைகள், தலைதிருகி எறியப்பட்ட பறவையின் சிறகசைப்பை போல இருந்தது.</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.2; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-family: Latha; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;">தன் கழுத்தில் கயிறுகட்டி மாட்டி வைத்திருந்த ரப்பர் பேன்ட் சுற்றப்பட்ட பழைய செல்போனை பிதுக்கி வெளியே எடுத்து.. ‘’இதுல எப்படி நம்பர் போட்டுவைக்கிறதுனே தெரில இச்சுமி.. நீயே போட்டு வுட்ரு..’’ என்று கையை நீட்டினான். அந்த கைகளில் எங்கும் அங்கும் இங்குமாக கொஞ்சம் பட்டாசு துகள்கள் ஒட்டியிருந்தன.. அவற்றில் சூரிய ஒளிபட்டு லேசாக ஒளிர்ந்தன. ரசூலின் கைகள் மகனின் தலையை வருடிக்கொண்டிருந்தன..</span><span style="font-family: Arial; font-size: 10pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span></p><p dir="ltr" style="line-height: 1.3800000000000001; margin-bottom: 10pt; margin-top: 0pt;"><span style="font-size: 12pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"><br /></span><span style="font-size: 12pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"><br /></span><span style="font-size: 12pt; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; vertical-align: baseline; white-space: pre-wrap;"><br /><br /></span></p></span>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-25170677740945566332020-09-08T15:50:00.003+05:302020-09-08T15:50:49.165+05:30 யாருக்காக உன் இந்தி...<p> <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">யாருக்காக உன் இந்தி...</span></p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கடந்த சில நாள்களாக இந்திக்கு எதிரான குரல்கள் இணையமெங்கும் ஒலிப்பதை பார்க்கிறோம். இந்தி தெரியாது போடா என்பதை பெருமையோடு பகிர்ந்துகொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் அதிகமும் இதில் பங்கெடுக்கிறார்கள். இதை எதோ திமுக மாதிரி கட்சிகள் மட்டுமே முன்னெடுப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் இதில் ஈடுபடுபவர்கள் கட்சி சாராத எளிய மக்கள்தான்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">காரணம் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் இந்தித்திணிப்பால் நேரடியாக பாதிக்கப்படத் தொடங்கி இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. வங்கிகளில் கூட இந்திக்காரர்கள் உட்கார்ந்துகொண்டு இந்தியில் பேசச்சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். இந்தி தெரியாட்டி இந்தியனே அல்ல என்கிற முட்டாள்தனமான முழக்கத்தை வேறு சங்கிகள் முன்னெடுக்கிறார்கள். இதெல்லாம் மிகுந்த மன உளைச்சலை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில்</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">யாருமே இந்திக்கு எதிரான மன நிலையில் இல்லை. திராவிட இயக்க இந்தி எதிர்ப்பை கூட சில ஆண்டுகாக கிண்டல்தான் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் சங்கிகளின் இந்த திணிப்பை இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஏழைக்குழந்தை இந்தி படிக்க வேண்டாமா என நீலிக்கண்ணீர் வடிக்கும் சதிகார சங்கிக்கூட்டத்திடம் ஏழைக்குழந்தைகள் மருத்தவம் கூடதான் படிக்கணும் நீட் தேர்வை ரத்து செய்யறியடா என கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">வடநாட்டினர் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து உயர்பதவியில் வேலை பார்க்கும்போது நாமெல்லாம் இந்தி கற்றுக்கொண்டு அவர்களுக்கு சேவகம் செய்ய தயாராக இருக்கத்தான் இந்த இந்தி திணிப்பு என்றார் ஓர் இளைஞர். எவ்வளவு உண்மை. இந்தி படித்து வடமாநிலங்களில் போய் லோல் படுவதை விட ஐரோப்பிய மொழிகள் கற்று கெத்தாக வாழமுடியும் என்பதை இளைஞர்களுக்கு இணையம் உணர்த்தி இருக்கிறது. அந்தக்காலம் போல இந்தி படித்தால் மும்பை போகலாம் டெல்லி போகலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">வேலைவாய்ப்புகள் சுரண்டப்படுபவதையும், கல்வி சார்ந்த பொருளாதாரம் சார்ந்த சுரண்டல்களையும் நம் மீது நிகழ்த்தப்படும் மொழிசார்ந்த கண்ணுக்கு புலப்படாத வன்முறையையும் அதன் தாக்கத்தையும் நேரடியாக உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px 0px;">இதற்கு காரணம் இந்தி வெறும் மொழியாக நம்மிடம் வந்து சேரவில்லை. அது நம்மை அடக்கி அடிமைப்படுத்துகிற தாழ்த்துகிற வீழ்த்துவதற்கான ஆயுதமாக வருகிறது. அடக்குமுறையும் பாகுபாடும் சமத்துத்துவத்திற்கு எதிரான சதியும் எவ்வடிவில் வந்தாலும் தமிழர்கள் விரட்டியடிப்பார்கள். அந்த எழுச்சியைதான்இப்போது பார்க்கிறோம்.</p>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-44585616613298988572020-08-29T09:57:00.001+05:302020-08-29T10:03:42.670+05:30வைராக்கியம்தான் வசந்தகுமார்<p><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">விஜிபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அரசியலிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார் வசந்தகுமார். விஜிபிக்கு அது பிடிக்காமல் வசந்தகுமாரை மும்பைக்கு மாற்றல் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்ப திட்டமிட்டனர். அரசியலை விட்டுவிட்டு இங்கேயே வேலை செய்யலாம் என இன்னொரு வாய்ப்பும் கொடுத்தார்கள். வசந்தகுமார் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பத்தாண்டுகள் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து ஒரே நாளில் தூக்கியெறியப்பட்டார். அது அவரை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். எவ்வளவு விசுவாசமாக இருந்தும் என்ன எஞ்சியது என்கிற கேள்வியே… இனி எங்கும் வேலை பார்க்கப்போவதில்லை சுயதொழில்தான் என்று முடிவெடுக்கச்செய்தது. அந்த வைராக்கியம்தான் வசந்தகுமார். அதுதான் அவரை வியாபாரத்தில் முதலிடத்தை பிடிக்க செய்தது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அடுத்து வந்த நாள்களில் பசி பட்டினிதான். குடும்பத்தின் உதவிகளைக்கூட வைராக்கியத்தோடு பெற மறுத்துவிட்டார். சைதாப்பேட்டையில் எப்போதும் திறந்தே கிடக்கும் கூரை கொண்ட ஒரு குடிசைவீட்டில் ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறார். ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வெறும் வயிற்றோடு சாலைகளில் படுத்து உறங்கியிருக்கிறார். விஜிபிக்கே திரும்பவும் சென்று வேலைக்கு சேர்ந்தவிட நண்பர்கள் சொன்னபோதும் வைராக்கியத்தை விடவில்லை. வேறு சில நிறுவனங்கள் அழைத்தபோதும் மறுத்துவிட்டார். தன் முடிவில் உறுதியாக இருந்தார். அந்த வைராக்கியம்தான் வசந்தகுமார். வெறும்வயிற்றோடு திரிந்தாலும் எதற்காகவும் யாருக்காகவும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பின்னாளில் ஒரு சிறிய கடையாக வசந்த் அன்கோவை ஆரம்பித்து வயர் நாற்காலிகள், கட்டில் பீரோ, ரேடியோ டிவி எல்லாம் டீலர்ஷிப் எடுத்து தவணைமுறையில் விற்க ஆரம்பிக்கிறார். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் சிறிய டீலராக இருந்தபோதும் சாலிடேர் அவருக்கு பெரிய அளவில் தோள்கொடுத்து உதவுகிறார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">படிப்படியாக வளரத்தொடங்கிய நேரம்… ஒனிடா டிவி மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக இருந்தது. ஒனிடாவிடம் டீலர்ஷிப் எடுத்து தன் கடையில் வியாபாரம் பண்ணிவிட ஆசைப்பட்டார். அது அத்தனை சுலபமில்லை என்பதை அறிந்திருந்தார். சிறிய கடை வைத்திருப்பவர். சைக்கிளில் சென்றுதான் பெரிய நிறுவனங்களை சந்திப்பார். எளிமையான உடைகளைதான் அணிந்திருப்பார். அதனாலேயே சின்ன சின்ன நிறுவனங்கள் கூட டீலர்ஷிப் கொடுக்க தயங்குவார்கள், பெரிதாக மதிக்கமாட்டார்கள். (பின்னாளில் எப்போதும் கோட் அணிய காரணமும் அதுதான்.)</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இருப்பினும் நம்பிக்கையோடு ஒனிடா அலுவலகத்துக்கும் டீலர்ஷிப் கேட்டு செல்கிறார். மேனேஜரை சந்திக்க அனுமதி கேட்டு தினமும் ஒனிடா அலுவலகத்துக்கு சென்றுவிடுவார். ஆனால் அந்த மேனேஜர் வாய்ப்பே தரவில்லை. இருப்பினும் தினமும் தவறாமல் சென்று சந்திக்க வாய்ப்பு கேட்டு அமர்ந்திருப்பார். திறக்கப்பாடத எந்தக்கதவையும் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பதன் மூலம் திறப்பதுதான் வசந்தகுமாரின் பாணி. பத்து நிமிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால போதும் எப்படிப்பட்டவருக்கும் தன் மீது நம்பிக்கை வரும்படி செய்துவிடுவார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்வும் அப்படி உருவாக்கிய நம்பிக்கையில் எழுந்ததுதான். தன் மீதான நம்பிக்கையை காப்பதற்காக எதையும் செய்யவும் இழக்கவும் தயங்காதவர் அவர். <span style="font-family: Helvetica, Arial, sans-serif;">வசந்த் அன் கோ லோகோவில் இடம்பெற்ற Trust and Quality தான் வசந்தகுமார்.</span></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அந்த ஒனிடா மேனேஜரோ இவரை நாளைக்கு நாளைக்கு என அலைகழித்திருக்கிறார். சும்மாவே தன் சீட்டில் அமர்ந்திருந்தாலும் இவரை சந்திக்காமல் தவிர்க்கிறார். எத்தனையோ வாரங்கள் ஓடுகிறது. இந்த மேனேஜர் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறார் என்பதை புரிந்துகொண்டவருக்கு கோபம் வந்துவிட்டது. ஒருநாள் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் ஆவேசமாக மேனேஜர் அறைக்குள் நுழைந்துவிட்டார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">‘’இனி உங்களை சந்திக்க அனுமதி கேட்டு இங்கே வரமாட்டேன். ஒனிடா இல்லாமலும் என்னால் பிஸினஸ் பண்ணமுடியும். இப்படி என்னை தினமும் அலைகழிக்கிற நீங்க ஒருநாள் என்னுடைய அலுவலக வாசலில் வந்து காத்திருப்பீர்கள். அன்றைக்கு நான் உங்களை சந்திக்கிறேன்.’’ என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். அந்த மேனேஜர் அன்றைய நாளில் நிச்சயமாக கேலியாக சிரித்திருப்பார். யாருக்காய் இருந்தாலும் அப்படித்தான் தோன்றும்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்டம் மாறிவிட்டிருந்தது. ஒனிடாவுக்கு போட்டியாக ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் களத்திற்கு வந்துவிட்டன. ஒனிடா மார்க்கெட்டை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வசந்த் அன் கோ வோ சாம்சம்,எல்ஜி என டீலர்ஷிப் எடுத்து ஒவ்வொரு மாதம் பல ஆயிரம் டிவிக்களை விற்க ஆரம்பித்திருந்தார். ஒனிடா நிறுவனம் வசந்த் அன் கோவோடு டீலர்ஷிப் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். அந்த மேனேஜர் வசந்தகுமாரை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தோல்விகள் கண்டபோதும் அரசியல் ஈடுபாட்டை யாருக்காகவும் விட்டுக்கொடுத்திடாதவர். தோல்விகளில் இருந்து மேலெழுந்த கடினமான உழைப்பாளி. சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர். லாபமும், வாய்ப்புகளும் தற்காலிகமானவை, சுயமரியாதை ஒன்றே நிரந்தரமானது என்பதை வாழ்வின் வழி காட்டியவர். டிவி ப்ரிட்ஜ் மாதிரி ஆடம்பரமான விஷயங்களை மிடில் கிளாஸ் மக்களுக்கும் கிடைக்க வழிவகுத்துக்கொடுத்தவர். போட்டிகள் நிறைந்த சூழலில் எப்படி எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவது என்பதை தானே செய்துகாட்டியவர். என்னை போல Zero Backup மனிதர்களுக்கெல்லாம் பெரிய முன்மாதிரி. அதனால்தான் அந்தக்காலம் மட்டுமல்லாது இந்தக்காலமும் வசந்த் அன் கோ காலமாக இருந்தது.</p><p style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px 0px;">வசந்தகுமாருக்கு அஞ்சலிகள்.</p>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-75374820355129468912020-08-17T09:45:00.002+05:302020-08-17T09:45:21.339+05:30கோ கொரனா கோ... <div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207793486700545" dir="auto" id="tweet_1" style="background: rgb(245, 248, 250); border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Lato, sans-serif; letter-spacing: -0.003em; line-height: 1.5; margin-bottom: 20px; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;"><br style="box-sizing: border-box;" /><span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; letter-spacing: normal;">கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகமே போராடிக்கொண்டிருந்த போது நம்மை ஆளும் பாஜக தலைவர்கள் கொரானவை எதிர்கொள்வதற்காக கொடுத்த சிறப்பான தரமான மருத்துவ ஆலோசனைகளை தொகுக்க முயற்சி செய்தேன்.</span><br /><span class="entity-image" style="box-sizing: border-box; color: #575553; display: block; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px;"><a href="https://pbs.twimg.com/media/Efl_fkdU8AAuK7L.jpg" style="background-color: transparent; box-sizing: border-box; color: #1da1f2; opacity: 1;" target="_blank"><img alt="Image" class=" b-loaded" src="https://pbs.twimg.com/media/Efl_fkdU8AAuK7L.jpg" style="background: url("/images/loading.gif") center center no-repeat rgb(255, 255, 255); border-radius: 15px; border: 1px solid rgb(225, 232, 237); box-sizing: border-box; max-width: 100%; vertical-align: middle; width: 700px;" /></a></span><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: visible; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207796867178498" dir="auto" id="tweet_2" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">பெரும்பான்மை பாஜக தலைவர்கள் முன்மொழிந்த மருந்து, மாட்டு மூத்திரம். பாஜக தலைவர் திலீப் கோஷ் தொடங்கி பாஜக எம்பிகளான பிரக்யா தாகூர், சுமன் ஹரிப்ரியா வரை அனைவருமே மாட்டுமூத்திரம் குடித்தால் கொரானா செத்துவிடும் என்றே வலியுறுத்தினர்.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207799807336449" dir="auto" id="tweet_3" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">Go Corono Go என்கிற முழக்கத்தை கண்டுபிடித்தவர் மத்திய அமைச்சரான ராம்தாஸ் அத்வாலே... மார்ச் முதல்வாரத்திலேயே இந்த மந்திரத்தை புத்த பிட்சுகளோடு சேர்ந்து ஜெபித்து கொரானாவை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.<br style="box-sizing: border-box;" /><br style="box-sizing: border-box;" /><span class="entity-embed" style="box-sizing: border-box; color: #575553; display: block; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px;"><span class="twitter-player" style="box-sizing: border-box;"><div class="twitter-tweet twitter-tweet-rendered" style="box-sizing: border-box; display: flex; margin: 10px auto; max-width: 550px; width: 550px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" class="" data-tweet-id="1237471415516852224" frameborder="0" id="twitter-widget-0" scrolling="no" src="https://platform.twitter.com/embed/index.html?creatorScreenName=athisha&dnt=true&embedId=twitter-widget-0&frame=false&hideCard=false&hideThread=true&id=1237471415516852224&lang=en&origin=https%3A%2F%2Fthreadreaderapp.com%2Fthread%2F1295207793486700545.html&theme=light&widgetsVersion=223fc1c4%3A1596143124634&width=550px" style="box-sizing: border-box; display: block; flex-grow: 1; height: 498px; position: static; visibility: visible; width: 550px;" title="Twitter Tweet"></iframe></div></span></span><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="google-auto-placed" style="background-color: white; box-sizing: content-box; clear: none; color: rgba(0, 0, 0, 0.84); font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; height: 0px; margin: 0px -15px 20px; padding: 0px; width: auto;"><ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-3755072543989337" data-ad-type="text" data-adsbygoogle-status="done" data-native-settings-key="31c10c1d" style="box-sizing: border-box; display: inline-block; height: 0px; width: 730px;"><ins id="aswift_3_expand" style="background-color: transparent; border: none; box-sizing: border-box; display: inline-table; height: 0px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 730px;"><ins id="aswift_3_anchor" style="background-color: transparent; border: none; box-sizing: border-box; display: block; height: 0px; margin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 730px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!3" data-google-query-id="CNuWh_euoesCFQ9jjwodsk4LwQ" data-load-complete="true" frameborder="0" height="262" hspace="0" id="aswift_3" marginheight="0" marginwidth="0" name="aswift_3" sandbox="allow-forms allow-pointer-lock allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3755072543989337&output=html&h=262&adk=236939556&adf=384897049&w=730&lmt=1597637352&nsk=31c10c1d&rafmt=11&pwprc=7152865607&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=730x262&url=https%3A%2F%2Fthreadreaderapp.com%2Fthread%2F1295207793486700545.html&flash=0&pra=3&wgl=1&fa=26&adsid=ChEI8LLj-QUQytWw8ab64Ke-ARIqACDrt13GyNVAz1GR7ecq5sKMtOVr8Q51WafQqxfnXeUtjzYga7NSyovi&dt=1597637352373&bpp=6&bdt=2878&idt=-M&shv=r20200810&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da5afb68be97f6694%3AT%3D1597636905%3AS%3DALNI_MZccMzJFqUH6TeyADk_VIJJYJRdpw&prev_fmts=0x0%2C930x280&nras=2&correlator=2479398318268&frm=20&pv=1&ga_vid=1526460421.1597636901&ga_sid=1597637352&ga_hid=1580197238&ga_fc=0&iag=0&icsg=142770418&dssz=22&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=310&ady=1887&biw=1349&bih=576&scr_x=0&scr_y=0&eid=42530557%2C42530559&oid=3&pvsid=2814463327590088&pem=581&ref=https%3A%2F%2Ft.co%2FwAYnK2sYrZ%3Famp%3D1&rx=0&eae=0&fc=1792&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C576&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&jar=2020-08-17-04&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=PDiUCRVnDL&p=https%3A//threadreaderapp.com&dtd=36" style="border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; height: 262px; left: 0px; position: absolute; top: 0px; width: 730px;" vspace="0" width="730"></iframe></ins></ins></ins></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207802357428225" dir="auto" id="tweet_4" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">பாபிஜி அப்பளம் சாப்பிட்டால் கொரானா வராது. என்று விளம்பரம் செய்தார் மத்திய அமைச்சர் ராம் மெக்வால். ஆனால் அடுத்தவாரமே கொரானாவால் பாதிக்கப்பட்ட அவர் அப்பளம் தின்னாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<br style="box-sizing: border-box;" /><br style="box-sizing: border-box;" /><span class="entity-embed" style="box-sizing: border-box; color: #575553; display: block; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px;"><span class="twitter-player" style="box-sizing: border-box;"><div class="twitter-tweet twitter-tweet-rendered" style="box-sizing: border-box; display: flex; margin: 10px auto; max-width: 550px; width: 550px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" class="" data-tweet-id="1286604745818349568" frameborder="0" id="twitter-widget-1" scrolling="no" src="https://platform.twitter.com/embed/index.html?creatorScreenName=athisha&dnt=true&embedId=twitter-widget-1&frame=false&hideCard=false&hideThread=true&id=1286604745818349568&lang=en&origin=https%3A%2F%2Fthreadreaderapp.com%2Fthread%2F1295207793486700545.html&theme=light&widgetsVersion=223fc1c4%3A1596143124634&width=550px" style="box-sizing: border-box; display: block; flex-grow: 1; height: 589px; position: static; visibility: visible; width: 550px;" title="Twitter Tweet"></iframe></div></span></span><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207805163429888" dir="auto" id="tweet_5" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">ஹனுமான் சாலிசாவை தினமும் ஐந்துமுறை ஜெபித்தால் கொரானாவை கொன்றுவிடலாம் என்று கொரானாவுக்கு எதிராக போர் முரசு கொட்டினார் பாஜக எம்பி பிரக்யா தாகூர். இந்த ஹனுமான் சாலிசாவை மற்ற பாஜகவினர் 15 முறை ஜெபித்தால் இந்தியாவை விட்டே கொரானாவை விரட்டலாம் என்றனர்.<br style="box-sizing: border-box;" /><br style="box-sizing: border-box;" /><span class="entity-embed" style="box-sizing: border-box; color: #575553; display: block; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px;"><span class="twitter-player" style="box-sizing: border-box;"><div class="twitter-tweet twitter-tweet-rendered" style="box-sizing: border-box; display: flex; margin: 10px auto; max-width: 550px; width: 550px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" class="" data-tweet-id="1287008746904752128" frameborder="0" id="twitter-widget-2" scrolling="no" src="https://platform.twitter.com/embed/index.html?creatorScreenName=athisha&dnt=true&embedId=twitter-widget-2&frame=false&hideCard=false&hideThread=true&id=1287008746904752128&lang=en&origin=https%3A%2F%2Fthreadreaderapp.com%2Fthread%2F1295207793486700545.html&theme=light&widgetsVersion=223fc1c4%3A1596143124634&width=550px" style="box-sizing: border-box; display: block; flex-grow: 1; height: 797px; position: static; visibility: visible; width: 550px;" title="Twitter Tweet"></iframe></div></span></span><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207807768080385" dir="auto" id="tweet_6" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">ராமருக்கு லஞ்சம் கொடுத்தால் கொரானா போய்விடும் என்பது அடுத்த கண்டுபிடிப்பு. ’ராமர் கோயில் கட்டினால் கொரானாவை அழித்துவிடலாம்,’’ என்று அஸ்ஸாமை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்ரியா , மத்தியபிரதேசத்தின் பாஜக தலைவர் ரோமேஷ்வர் ஷர்மா, பாஜக எம்பி ஜாஸ்கர் மீனா முதலானோர் பேசியிருந்தனர்.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207810376978439" dir="auto" id="tweet_7" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">ராமஜெபம் சொல்லி மந்திரித்த கிராம்புகளை வாயில் வைத்துக்கொண்டால் கொரானா பரவாது. என்று கூறியதோடு ராமஜெபம் சொல்லி பவர் ஏற்றிய கிராம்புகளை மக்களுக்கும் கொடுத்தார் காஸியபாத்தை சேர்ந்த பாஜக தலைவர் நந்துகிஷோர் குஜ்ஜார். மக்களும் கும்பல் கும்பலா குவிந்து அதை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207813027774465" dir="auto" id="tweet_8" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">உள்ளதிலேயே The Best invention award தரப்படவேண்டியது இவருக்கு. ’அஸ்லாம் அலைக்கும், அதாப் சொன்னால்தான் கொரானா வரும், நமஸ்கார் என்று சொன்னால் கொரானா வராது’ என்றார் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி. மதவெறியோடு இணைந்த மருத்துவ கருத்து இது.<br style="box-sizing: border-box;" /><br style="box-sizing: border-box;" /><div style="box-sizing: border-box;"><div class="entity-url-preview" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border-radius: 8px; border: 1px solid rgb(225, 232, 237); box-sizing: border-box; color: #575553; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px; max-width: 100%; overflow: hidden; width: 700px;"><div class="row no-gutters" style="box-sizing: border-box; display: flex; flex-wrap: wrap; margin-left: 0px; margin-right: 0px;"><div class="col-12 col-md-4 bg-secondary bg-light" style="-webkit-box-flex: 0; background-color: rgb(248, 249, 250) !important; box-sizing: border-box; flex: 0 0 33.3333%; max-width: 33.3333%; min-height: 1px; padding-left: 0px; padding-right: 0px; position: relative; width: 232.656px;"><a class="img-cover b-lazy b-loaded" href="https://www.deccanherald.com/national/national-politics/experts-have-said-namaskar-not-adaab-or-assalamu-alaikum-will-help-prevent-coronavirus-says-bjp-mp-ramesh-bidhuri-811390.html" style="background: url("https://www.deccanherald.com/sites/dh/files/article_images/2020/05/19/ramesh%20%27-1867801863-1583562701.jpg") center center / cover no-repeat rgb(238, 238, 238); box-sizing: border-box; color: #63615f; display: block; height: 266.484px; opacity: 0.8; text-decoration-line: none;" target="_blank"><img class="b-lazy b-loaded" src="https://www.deccanherald.com/sites/dh/files/article_images/2020/05/19/ramesh%20%27-1867801863-1583562701.jpg" style="background: url("/images/loading.gif") center center no-repeat rgb(255, 255, 255); border-style: none; box-sizing: border-box; vertical-align: middle; visibility: hidden; width: 232.656px;" /></a></div><div class="col-12 col-md-8" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 66.6667%; max-width: 66.6667%; min-height: 1px; padding-left: 0px; padding-right: 0px; position: relative; width: 465.328px;"><div class="paragraph" style="box-sizing: border-box; font-size: 0.8rem; margin: 1rem;"><a href="https://www.deccanherald.com/national/national-politics/experts-have-said-namaskar-not-adaab-or-assalamu-alaikum-will-help-prevent-coronavirus-says-bjp-mp-ramesh-bidhuri-811390.html" style="background-color: transparent; box-sizing: border-box; color: #63615f; opacity: 0.8; text-decoration-line: none;" target="_blank"><span style="box-sizing: border-box; color: #2e2c2d; display: block; font-size: 0.85rem; font-weight: bolder; overflow: hidden; text-overflow: ellipsis; white-space: nowrap;">Experts have said namaskar, not adaab or assalamu alaikum, will help prevent coronavirus, says BJP MP Ramesh Bidhuri</span>BJP MP Ramesh Bidhuri on Thursday said that according to experts' theory, coronavirus could be prevented by greeting with people with a 'namaskar', which is Indian culture, and not with an 'adaab' or…<small style="background-image: url("/images/icon-link.png"); background-position: 0px 2px; background-repeat: no-repeat; box-sizing: border-box; color: #1da1f2; display: block; font-size: 0.75rem; margin-top: 8px; overflow: hidden; padding-left: 20px; text-overflow: ellipsis; white-space: nowrap;">https://www.deccanherald.com/national/national-politics/experts-have-said-namaskar-not-adaab-or-assalamu-alaikum-will-help-prevent-coronavirus-says-bjp-mp-ramesh-bidhuri-811390.html</small></a></div></div></div></div></div><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207816202919936" dir="auto" id="tweet_9" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">உபி முதல்வர் சும்மா இருப்பாரா... மனநலத்தை நன்றாக கவனித்துக்கொண்டால் கொரானா வராது என்று அவரும் தன் பங்குக்கு ஒரு புதிய விஷயத்தை முன்வைத்தார்.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207819176579072" dir="auto" id="tweet_10" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">உலகமே கொரானாவை கொடிய அரக்கனாக பார்த்த போது ஒருவர் அதை தெய்வமாக பார்த்தார். அது நரசிம்ம அவதாரம் என்றார்.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207822586609664" dir="auto" id="tweet_11" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">இந்து மகா சபாவின் தேசிய தலைவர் ஸ்வாமி சக்ரபாணி ‘’கொரானா வைரஸ் என்பதே நரசிம்ம அவதாரம்தான். அசைவ உணவு சாப்பிடுகிற பாவிகளை வதம் பண்ண அது உருவாகி அந்த கொடியவர்களை அழிக்க அவதரித்துள்ளது. அசைவம் தவிர்த்தால் கொரானாவின் கோபத்தில் இருந்து தப்பலாம்.’’என்றார்.<div style="box-sizing: border-box;"><div class="entity-url-preview" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border-radius: 8px; border: 1px solid rgb(225, 232, 237); box-sizing: border-box; color: #575553; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px; max-width: 100%; overflow: hidden; width: 700px;"><div class="row no-gutters" style="box-sizing: border-box; display: flex; flex-wrap: wrap; margin-left: 0px; margin-right: 0px;"><div class="col-12 col-md-4 bg-secondary bg-light" style="-webkit-box-flex: 0; background-color: rgb(248, 249, 250) !important; box-sizing: border-box; flex: 0 0 33.3333%; max-width: 33.3333%; min-height: 1px; padding-left: 0px; padding-right: 0px; position: relative; width: 232.656px;"><a class="img-cover b-lazy b-loaded" href="https://www.news18.com/news/buzz/coronavirus-not-virus-but-an-avatar-to-punish-non-vegetarians-hindu-mahasabha-2503587.html" style="background: url("https://images.news18.com/ibnlive/uploads/2020/02/Untitled-design-2020-02-17T092505.437.png") center center / cover no-repeat rgb(238, 238, 238); box-sizing: border-box; color: #63615f; display: block; height: 155px; opacity: 0.8; text-decoration-line: none;" target="_blank"><img class="b-lazy b-loaded" src="https://images.news18.com/ibnlive/uploads/2020/02/Untitled-design-2020-02-17T092505.437.png" style="background: url("/images/loading.gif") center center no-repeat rgb(255, 255, 255); border-style: none; box-sizing: border-box; vertical-align: middle; visibility: hidden; width: 232.656px;" /></a></div><div class="col-12 col-md-8" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 66.6667%; max-width: 66.6667%; min-height: 1px; padding-left: 0px; padding-right: 0px; position: relative; width: 465.328px;"><div class="paragraph" style="box-sizing: border-box; font-size: 0.8rem; margin: 1rem;"><a href="https://www.news18.com/news/buzz/coronavirus-not-virus-but-an-avatar-to-punish-non-vegetarians-hindu-mahasabha-2503587.html" style="background-color: transparent; box-sizing: border-box; color: #63615f; opacity: 0.8; text-decoration-line: none;" target="_blank"><span style="box-sizing: border-box; color: #2e2c2d; display: block; font-size: 0.85rem; font-weight: bolder; overflow: hidden; text-overflow: ellipsis; white-space: nowrap;">Coronavirus Not Virus But an 'Avatar' to Punish Non-vegetarians: Hindu Mahasabha</span>'Corona is not a virus, but avatar for the protection of poor creatures. They have come to give the message of death and punishment to the one who eats them,' said Swami Chakrapani, the National Pres…<small style="background-image: url("/images/icon-link.png"); background-position: 0px 2px; background-repeat: no-repeat; box-sizing: border-box; color: #1da1f2; display: block; font-size: 0.75rem; margin-top: 8px; overflow: hidden; padding-left: 20px; text-overflow: ellipsis; white-space: nowrap;">https://www.news18.com/news/buzz/coronavirus-not-virus-but-an-avatar-to-punish-non-vegetarians-hindu-mahasabha-2503587.html</small></a></div></div></div></div></div><div class="google-auto-placed" style="box-sizing: content-box; clear: both; height: 0px; margin: 0px; padding: 0px; width: auto;"><ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-3755072543989337" data-ad-type="text" data-adsbygoogle-status="done" data-native-settings-key="6ee40a36" style="box-sizing: border-box; display: inline-block; height: 0px; width: 700px;"><ins id="aswift_4_expand" style="background-color: transparent; border: none; box-sizing: border-box; display: inline-table; height: 0px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 700px;"><ins id="aswift_4_anchor" style="background-color: transparent; border: none; box-sizing: border-box; display: block; height: 0px; margin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 700px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!4" data-google-query-id="CKbkh_euoesCFUQljwod-f8PcA" data-load-complete="true" frameborder="0" height="243" hspace="0" id="aswift_4" marginheight="0" marginwidth="0" name="aswift_4" sandbox="allow-forms allow-pointer-lock allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3755072543989337&output=html&h=243&adk=4105173335&adf=3052766506&w=700&lmt=1597637352&nsk=6ee40a36&rafmt=11&pwprc=7152865607&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=700x243&url=https%3A%2F%2Fthreadreaderapp.com%2Fthread%2F1295207793486700545.html&flash=0&pra=3&wgl=1&fa=26&adsid=ChEI8LLj-QUQytWw8ab64Ke-ARIqACDrt13GyNVAz1GR7ecq5sKMtOVr8Q51WafQqxfnXeUtjzYga7NSyovi&dt=1597637352373&bpp=3&bdt=2878&idt=4&shv=r20200810&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da5afb68be97f6694%3AT%3D1597636905%3AS%3DALNI_MZccMzJFqUH6TeyADk_VIJJYJRdpw&prev_fmts=0x0%2C930x280%2C730x262&nras=3&correlator=2479398318268&frm=20&pv=1&ga_vid=1526460421.1597636901&ga_sid=1597637352&ga_hid=1580197238&ga_fc=0&iag=0&icsg=679641330&dssz=23&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=325&ady=4442&biw=1349&bih=576&scr_x=0&scr_y=0&eid=42530557%2C42530559&oid=3&pvsid=2814463327590088&pem=581&ref=https%3A%2F%2Ft.co%2FwAYnK2sYrZ%3Famp%3D1&rx=0&eae=0&fc=1792&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C576&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&jar=2020-08-17-04&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=WkuefuaDGw&p=https%3A//threadreaderapp.com&dtd=44" style="border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; height: 243px; left: 0px; position: absolute; top: 0px; width: 700px;" vspace="0" width="700"></iframe></ins></ins></ins></div><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207825866547200" dir="auto" id="tweet_12" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே எப்படி சும்மா இருக்க முடியும். ‘’சூரிய ஒளியில் தினமும் 15நிமிடம் நின்றால் கொரானா வைரஸ் வெப்பம் தாங்காமல் செத்துப்போய்விடும் ‘’ என்றார்.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207835538583553" dir="auto" id="tweet_13" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">கடைசியாக வந்து சேர்ந்தவர்தான் ராஜஸ்தான் எம்பி சுக்பீர் சிங். உடம்பெல்லாம் மண்ணை தேய்த்துக்கொண்டு ஹாட் மாடல் போல கவர்ச்சிகரமாக வீடியோ எடுத்துப்போட்டு மண்குளியல் பண்ணுங்க கொரானாவை விரட்டுங்க என்று அவரே மாடல் ஆக கொரானா மருந்துக்கு விளம்பரம் செய்தார்.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207841200869376" dir="auto" id="tweet_14" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">இவர்களெல்லாம் தனி மனிதர்கள் போய்த்தொலைகிறது என்று விட்டுவிடலாம். மத்திய அரசின் நீர்வளத்துறையான மினிஸ்ட்ரி ஆப் ஜல்சக்தி கடந்த மே மாதம் ஐசிஎம்ஆரிடம் ஒரு கேனத்தனமான கோரிக்கை வைத்தது.<span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207850113789952" dir="auto" id="tweet_15" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">கங்கை நீரால் கொரானாவை குணப்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்ய கோரியது. ஐசிஎம்ஆர் எங்களுக்கு உருப்படியான வேலைகள் இருக்கிறது என்று அந்த கோரிக்கையை நல்லவேளையாக நிராகரித்துவிட்டது!<br style="box-sizing: border-box;" /><br style="box-sizing: border-box;" /><div style="box-sizing: border-box;"><div class="entity-url-preview" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border-radius: 8px; border: 1px solid rgb(225, 232, 237); box-sizing: border-box; color: #575553; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 0.8rem; margin: 10px 0px 0px; max-width: 100%; overflow: hidden; width: 700px;"><div class="row no-gutters" style="box-sizing: border-box; display: flex; flex-wrap: wrap; margin-left: 0px; margin-right: 0px;"><div class="col-12 col-md-4 bg-secondary bg-light" style="-webkit-box-flex: 0; background-color: rgb(248, 249, 250) !important; box-sizing: border-box; flex: 0 0 33.3333%; max-width: 33.3333%; min-height: 1px; padding-left: 0px; padding-right: 0px; position: relative; width: 232.656px;"><a class="img-cover b-lazy b-loaded" href="https://theprint.in/health/can-gangajal-treat-covid-19-modi-govt-wants-a-study-icmr-says-no/415365/" style="background: url("https://d2c7ipcroan06u.cloudfront.net/wp-content/uploads/2019/11/Ganga-Varanasi.jpg") center center / cover no-repeat rgb(238, 238, 238); box-sizing: border-box; color: #63615f; display: block; height: 139px; opacity: 0.8; text-decoration-line: none;" target="_blank"><img class="b-lazy b-loaded" src="https://d2c7ipcroan06u.cloudfront.net/wp-content/uploads/2019/11/Ganga-Varanasi.jpg" style="background: url("/images/loading.gif") center center no-repeat rgb(255, 255, 255); border-style: none; box-sizing: border-box; vertical-align: middle; visibility: hidden; width: 232.656px;" /></a></div><div class="col-12 col-md-8" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 66.6667%; max-width: 66.6667%; min-height: 1px; padding-left: 0px; padding-right: 0px; position: relative; width: 465.328px;"><div class="paragraph" style="box-sizing: border-box; font-size: 0.8rem; margin: 1rem;"><a href="https://theprint.in/health/can-gangajal-treat-covid-19-modi-govt-wants-a-study-icmr-says-no/415365/" style="background-color: transparent; box-sizing: border-box; color: #63615f; opacity: 0.8; text-decoration-line: none;" target="_blank"><span style="box-sizing: border-box; color: #2e2c2d; display: block; font-size: 0.85rem; font-weight: bolder; overflow: hidden; text-overflow: ellipsis; white-space: nowrap;">Can Gangajal treat Covid-19? Modi govt wants a study, ICMR says no</span>After an NGO wrote to Modi govt's Ministry of Jal Shakti claiming Gangajal could cure Covid-19 and it should be studied, ICMR had been requested to do ‘further research’.<small style="background-image: url("/images/icon-link.png"); background-position: 0px 2px; background-repeat: no-repeat; box-sizing: border-box; color: #1da1f2; display: block; font-size: 0.75rem; margin-top: 8px; overflow: hidden; padding-left: 20px; text-overflow: ellipsis; white-space: nowrap;">https://theprint.in/health/can-gangajal-treat-covid-19-modi-govt-wants-a-study-icmr-says-no/415365/</small></a></div></div></div></div></div><span class="tw-permalink" style="box-sizing: border-box; color: #cccccc; float: right; font-size: 14px; line-height: 0; margin-right: 10px; position: relative; text-align: right; top: 0px; vertical-align: baseline; visibility: hidden; width: 12px;"><span class="fas fa-link" style="-webkit-font-smoothing: antialiased; box-sizing: border-box; display: inline-block; font-family: "Font Awesome 5 Free"; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 900; line-height: 1; text-rendering: auto;"></span></span></div></div></div><div class="row t-tweet" style="background-color: white; box-sizing: border-box; color: rgba(0, 0, 0, 0.84); display: flex; flex-wrap: wrap; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Arial, sans-serif; font-size: 16px; margin-bottom: 1.25rem; margin-left: -15px; margin-right: -15px;"><div class="col-12" style="-webkit-box-flex: 0; box-sizing: border-box; flex: 0 0 100%; max-width: 100%; min-height: 1px; padding-left: 15px; padding-right: 15px; position: relative; width: 730px;"><div class="content-tweet allow-preview" data-screenname="athisha" data-tweet="1295207863262908418" dir="auto" id="tweet_16" style="border-radius: 15px; box-sizing: border-box; color: black; cursor: pointer; font-family: Georgia, Cambria, "Times New Roman", Times, serif; font-size: 1.1875rem; letter-spacing: -0.003em; line-height: 1.58; overflow-wrap: break-word; overflow: hidden; transition: all 0.3s ease 0s;">உலகமே அறிவியலின் துணையோடு போராடி கொரனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்க இந்தியா மட்டும் பாதிப்பில் முதலிடத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. காரணம் ஆட்சியாளர்களின் சிந்தனைகள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடப்பதே. கொரானாவே நம் மீது பரிதாபப்பட்டு செத்துப்போனால்தான் நமக்கு விடிவுகாலம்.</div></div></div>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-39373714756974033502020-08-16T15:11:00.002+05:302020-08-16T15:12:09.113+05:30தோனி எனும் நம்பிக்கை<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghFM52tePunf1GreWa8uI8Qamz6cg9bEeZ72VcJ9FsrXDhfV3AvXTvV30sUnlNZRLPVV4QzVGoL8_urBSGHm2ZrbSugG79zL3JReLWYFmEelRBZnv5q2poYRD6p0NMlgxn-Bpe1O052rE/s894/image.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="602" data-original-width="894" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghFM52tePunf1GreWa8uI8Qamz6cg9bEeZ72VcJ9FsrXDhfV3AvXTvV30sUnlNZRLPVV4QzVGoL8_urBSGHm2ZrbSugG79zL3JReLWYFmEelRBZnv5q2poYRD6p0NMlgxn-Bpe1O052rE/s640/image.jpg" width="640" /></a></div><span face="" style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px;"><br /></span><p></p><p><span face="" style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif;">எல்லாத்துலயும் ஒருவிதமான தயக்கம், ஜெயிக்க முடியுமானு சந்தேகம், எப்போதும் போட்டியாளர்களை பற்றின மலைப்பும் நிறைஞ்சவங்க லோயர் மிடில்கிளாஸ் பையன்கள்.</span></p><p style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif; margin: 1em 0px 0px;">அப்படிப்பட்டவ<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">ஙளுக்கு தோனி மாதிரி ஒருத்தன் குடுத்தது ஜெயிக்கறதுக்கான பெரிய நம்பிக்கையை. தோனியோட வெற்றி தன்னுடையதா பலரும் நினைக்க காரணமும் அதுதான்.</span></p><div class="text_exposed_show" style="background-color: white; color: #666666; display: inline; font-family: helvetica, arial, sans-serif;"><p style="font-family: inherit; margin: 1em 0px;">சின்ன ஊர்களை சேர்ந்தவங்களுக்கு சின்ன வயசுலருந்தே எதுவுமே அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. ஒவ்வொன்னுக்கும் போராடணும். போராடினாதான் மேலே வரமுடியும். அந்த போராட்டகுணம்தான் தோனி.</p><p style="font-family: inherit; margin: 1em 0px 0px;">நம்மை சுத்தி பெரிய பெரிய திறமைசாலிகள் இருக்கலாம்... நாம ரொம்ப சாதாரண பின்னணில இருந்து வந்தவங்களா இருக்கலாம்... நம்மோட பயணம் போராட்டம் நிறைஞ்சதா இருக்கலாம்... என்னவும் இருக்கட்டுமே... ஆனால் மைதானத்துல இறங்கிட்டா நம்ம ஆட்டம் மட்டும்தான் பேசணும்னு கத்துக்குடுத்தவன் அவன்தான்.</p><p style="font-family: inherit; margin: 1em 0px 0px;">ஓய்வெடுங்க தோனி... மைதானத்துக்கு உள்ளயும் வெளியேயும் எங்களுக்காக நிறைய பண்ணிருக்கீங்க! </p></div>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-67129320552719996092020-08-15T11:50:00.001+05:302020-08-15T11:50:21.014+05:30ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு வாழ்த்துகள்<p> <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">அண்டை நாடுகளுடனான நட்பு மொத்தமாக அழிந்துவிட்டது. பொருளாதாரம் மீட்க முடியாத இருளுக்குள் சென்றுவிட்டது. தொடர்ந்து நடக்கும் மத வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது.</span></p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மாடுகள் பாதுகாப்பில் தொடங்கி தலித்துகள் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. விவாதங்களின்றி நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிற புதிய சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வேலையின்மையும் வறுமையும் நாட்டையே ஆட்டிப்படைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எத<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">ிராக மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒரே நாடு ஒரே மொழி... ஒரே மதம்... ஒரே சட்டம்... ஒரே திட்டம்... ஒரே கல்விக்கொள்கை என பண்பாட்டு திணிப்புகள் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கின்றன.</span></p><div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"><p style="font-family: inherit; margin: 0px 0px 6px;">கவனம் செலுத்த வேண்டிய சிக்கல்களும் ஆபத்துகளும் பெருகிக்கொண்டிருக்க, அரசுகளோ வகுப்புவாதத்தை வளர்க்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றன. இந்த வகுப்புவாத திரையின் வழி தங்களுடைய தோல்விகளை மூடி மறைக்கின்றனர்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இன்றைய இந்தியா சென்று கொண்டிருக்கும் பாதை வளர்ச்சிக்கான ஒன்றல்ல. அது நம்மை பாழுங்கிணற்றுக்குள் மூழ்கடிக்கிற ஒன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே இந்திய வளர்ச்சி ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மட்டுமல்ல, வேற்றுமையில் ஒற்றுமை குறித்தும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்தும் நாம் கொண்டிருந்த நம்பிக்கைகளை தகர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது கேடுகெட்டவர்கள் கொண்டாடுங்காலம். வகுப்புவாதத்தோடு போர்விரும்பிகளாகவும் நம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் போரால் விளைந்த நன்மைகள் என்று எதையமே சுட்டிக்காட்ட முடியாது. அது அழிவையே நமக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால் அரசு தன் தவறுகளை மறைக்க தேசபக்தி எனும் போர்வையில் நம் முளைகளை மழுங்கடித்து போருக்கு ஆயத்தப்படுத்துகின்றன. ஒரு நல்ல தலைமை அனைவருக்குமான வளர்ச்சி பற்றி சிந்திக்க தெரிந்தவனாக இருக்கவேண்டும். அழிவைப்பற்றி சிந்திக்கிறவர்களால் எந்நாளும் ஒரு செடியை கூட வளர்த்துவிட முடியாது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்லும் இக்காலக்கட்டம் எல்லா தரப்புக்குமே அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்போதும அரசு நம்மை கண்காணிப்பதில்தான் முனைப்பாக இருக்கிறது. கண்காணிக்கப்படுபவன் பசியோடிருந்தால் அவனுக்கான உணவை வழங்க முற்படுவதில்லை.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இச்சுதந்திரநாளில் ஐசியூவுக்கு சென்று கொண்டிருக்கும் இந்தியாவுக்கு தேவை வகுப்புவாதமோ போரோ வெறுப்புவாதமோ அல்ல. மாறாக 50ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நம் சூழலை நம்மை வளர்த்தெடுக்கும் முற்போக்கான அறிவியல்பூர்வமான திட்டங்கள்தாம். சிறுபான்மையினரை அடக்குதல், வெளியேற்றுதல், பக்கத்து நாடுகளை அழித்தல் அல்ல. அறத்தின் பக்கம் நின்று இத்தீய சுழலை எதிர்கொள்ளவேண்டும். நம் எண்ணங்களில் செயல்களில் கவனம் செலுத்த தவறினால் அதற்கான விலையை நம் எதிராகல சந்ததியினர் தரவேண்டிவரும்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">பல்வேறு மொழிகளும் தனித்தனி பண்பாடுகளும் கொண்ட கோடிப்பேர் ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து வாழும் தேசத்தை, ஒற்றை அடையாளத்திற்குள் அடக்கவும் ஒரே பண்பாட்டை திணிக்கவும் முயலும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட உறுதியேற்க வேண்டும். அது ஒன்றே நமக்கிருக்கிற வாய்ப்பு.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.</p></div>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-33447200693947368472020-07-30T17:03:00.002+05:302020-07-30T17:03:59.986+05:30மீண்டும் ஒரு முடக்கம்.<div class="_1dwg _1w_m _q7o" data-visualcompletion="ignore-dynamic" style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px; padding: 12px 12px 0px;"><div style="font-family: inherit;"><div class="_5pbx userContent _3ds9 _3576" data-ft="{"tn":"K"}" data-testid="post_message" id="js_4" style="border-bottom: none; font-family: inherit; font-size: 14px; line-height: 1.38; margin-top: 6px; padding-bottom: 12px;"><p style="font-family: inherit; margin: 0px 0px 6px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">ஆகஸ்டிலும் ஒரு பொது முடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறோம். தளர்வுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், பொதுப்போக்குவரத்தும், சிறிய வேலைகளில் ஈடுபடக்கூடிய முழுமையான சூழலும் இல்லாத நிலையில் ஏழை மற்றும் கீழ்நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரச் சூழல் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பணியிழப்புகள், சம்பள இழப்புகள், வியாபாரமின்மை முதலானவை அடுத்த மாதங்களில் உச்சங்களைத் தொடக்கூடும்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">மக்களுடைய மனநிலையிலும் விடுதலைக்கான பரிதவிப்பும் எதிர்காலம் குறித்த அச்சமும் மன அழுத்தஙளை உருவாக்கிவிடக்கூடும். வாடகை தொடங்கி பள்ளிக்கட்டணம் வரை ஏற்கனவே எல்லா பக்கங்களிலும் இருந்தும் பொருளாதார அழுத்தங்கள் நம் கழுத்து நரம்புகளை நசுக்கத்தொடங்கிவிட்டன. எல்லோருக்குமே பணம் தேவையான ஒரு காலம். எல்லோருக்குமே வருமானமில்லாத காலம் மக்களை வெறிபிடிக்கத்தானே செய்யும்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">ஆனால் அரசு இந்த பொது முடக்கத்தை எங்கனம் எதிர்கொள்கிறது. தாங்கள் விரும்பியதை எல்லாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் செய்துமுடிக்க லாக்டவுனை ஒரு கருவியாக ஆளும் அரசுகள் பயன்படுத்திக்கொள்கின்றவோ என்று ஐயம் வருகிறது. அதனாலேயே இவை மக்கள் நலன் பற்றிய திட்டங்களற்று லாக்டவுனை விரும்பி அமல் படுத்துகிறது போல் இருக்கிறது. பொதுமுடக்கம் ஒன்றுதான் இன்றைய சூழலில் கொரானாவுக்கு எதிரான தற்காப்பு என்றபோதும், தொடர்ச்சியாக அது முன்னெடுக்கப்படும் விதமும், அதன் பலன்களும் அரசின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குகிறது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">குறிப்பாக இத்தனை நீண்ட முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படுவதில்லை. வெறும் ஆயிரம் ரூபாயும், ஒருமூட்டை அரிசியையும் கொஞ்சம் பருப்பையும் கொண்டு எத்தனை மாதங்கள் இந்த ஆட்சியாளர்களால் வாழ்ந்துவிட முடியும். அல்லது இதைத்தூக்கி எறிந்துவிட்டால் எல்லோரும் வாய்பொத்தி அமைதியாக இருந்துவிடுவார்கள், மதம் சார்ந்த சர்ச்சைகளை கிளப்பிவிட்டு கவனங்களை திசைதிருப்பி கல்வி சார்ந்த சுற்றுசூழல் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த தங்களுடைய புளுத்துப்போன கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் எனக்கருதுகிறார்களா?</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">நான்கு மாத முடக்கம் என்பது மிகநீண்ட காலக்கட்டம். அது பணமுள்ளோருக்கு விடுமுறைக்காலமாகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு வதையாகவும்தான் இருக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமுடக்கத்தை தொடர்ந்து வலிறுத்தும் அரசு இதையும் ஒரு பேரிடர் காலமெனக்கருதி நிவாரண உதவிகள் பற்றி கொஞ்சமாவது சிந்திக்கவேண்டும். ஆனால் அவர்களுடைய சிந்தனையோ எம்எல்ஏக்களை விலைபேசுவதிலும், கோயில்களை கட்டியெழுப்புவதிலும், முதலாளிகளின் மனங்களை குளிர்விப்பதிலும், சட்டவரைவுகளை சத்தமில்லாமல் நிறைவேற்றுவதிலும் அல்லவா இருக்கிறது!</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">உலகிலேயே பேன்டமிக் காலத்தை ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாக பார்க்கிற ஒரு அரசு இருக்குமானால் அது இங்குதான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் பேன்டமிக் சூழலை தங்களுடைய சுயவிளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். பேன்டமிக் சூழலை தங்களுடைய ரகசிய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தச் சூழலை தங்களை ஆட்டுவிக்கிறவர்களை மகிழ்விக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எதிர்ப்புகளற்ற சர்வாதிகார சூழலை அடக்கி ஆழ்வதை மட்டுமே சிந்திக்கிற இவர்களின் ஆழ்மனம் ரசிக்கத்தொடங்கிவிட்டது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">ஆனால் இந்தச்சூழலால் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிற மக்களுடைய அன்றாட வாழ்வுகுறித்த எவ்வித திட்டங்களும் இல்லை. 22லட்சம் கோடி என்கிற பொய்யான ஒரு மாயக்கனவை நம் மீது திணித்துவிட்டு மறைந்துபோனவர்கள். மீண்டும் மீண்டும் ஏழைகளுக்கு அரிசி கொடுத்தோம் என்பதை எத்தனை மாதங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள். காகிதத்தில் எழுதப்பட்ட அரிசியை தின்ன முடியாது!</p><p style="display: inline; font-family: inherit; margin: 6px 0px 0px;">அழிவுச்சூழலை வாய்ப்பாகக் கருதி காய்நகர்த்துகிறவர்களுக்கு வரலாறு அந்த அழிவையேதான் மீண்டும் மீண்டும் பரிசாகத் கொடுத்திருக்கிறது. இந்த அரசுக்கும் அதுவேதான் நிச்சயம் கிடைக்கும்.</p></div><div class="_3x-2" data-ft="{"tn":"H"}" style="font-family: inherit;"><div data-ft="{"tn":"H"}" style="font-family: inherit;"></div></div><div style="font-family: inherit;"></div></div></div><div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px;"><form action="https://www.facebook.com/ajax/ufi/modify.php" class="commentable_item" data-ft="{"tn":"]"}" id="u_0_16" method="post" rel="async" style="margin: 0px; padding: 0px;"><div class="_4299" style="border-radius: 0px 0px 3px 3px; color: #1c1e21; display: flex; flex-direction: column; font-family: inherit; font-size: 13px; width: 500px;"><div class="_5vsi" style="font-family: inherit; margin-top: 0px;"></div><div class="_78bu" style="font-family: inherit;"><div class="_68wo" style="font-family: inherit; position: relative;"><div class="_3vum" style="align-items: center; border-bottom: 1px solid rgb(218, 221, 225); color: #606770; display: flex; font-family: inherit; line-height: 20px; margin: -2px 12px 0px; padding: 0px 0px 10px;"><div class="_66lg" style="align-items: center; display: flex; flex-grow: 1; font-family: inherit; overflow: hidden;"><span aria-label="See who reacted to this" class="_1n9r _66lh" role="toolbar" style="align-items: center; display: flex; font-family: inherit; margin-bottom: -2px; margin-right: 2px; margin-top: -2px;"><span class="_1n9k" data-hover="tooltip" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border-radius: 12px; display: inline-block; font-family: inherit; font-size: 11px; line-height: 16px; margin: 0px 0px 0px -2px; outline: none; padding: 2px; position: relative; z-index: 3;" tabindex="-1"><a ajaxify="/ufi/reaction/profile/dialog/?ft_ent_identifier=ZmVlZGJhY2s6MjgyMzUyMzU5NzI1Nzk0&reaction_type=1&av=100038530955909" aria-label="33 Like" class="_1n9l" href="https://www.facebook.com/ufi/reaction/profile/browser/?ft_ent_identifier=ZmVlZGJhY2s6MjgyMzUyMzU5NzI1Nzk0&av=100038530955909" rel="dialog" role="button" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;" tabindex="0"><i class="sp_4HNKD3rBWK1 sx_54360b" role="img" style="background-image: url("/rsrc.php/v3/yB/r/AR1QzqiBB-H.png"); background-position: -76px -2138px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 18px; width: 18px;"></i></a></span></span></div></div></div></div></div></form></div>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-54745913534799310202020-07-28T09:08:00.000+05:302020-07-28T09:08:34.671+05:30நாம் ஏன் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம்?<p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px 0px 6px;"><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px 0px 6px;"><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px 0px 6px;"><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நாம் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோமா?</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இதைப் பலவிதங்களில் புரிந்துகொள்ளலாம். நம் வாழ்க்கை முறையில் இருந்தே பல்வேறு காரணங்களால் உடற்பயிற்சிகளை முற்றிலுமாகக் கைவிடுகிறோம். ஆரோக்கியமாக இருக்கவேண்டிய நிர்பந்தத்தால் உடற்பயிற்சியைத் தொடங்கி பிறகு பல்வேறு காரணங்களால் கைவிடுகிறோம். உடற்பயிற்சி மீதான புரிதலின்மையால் கைவிடுகிறோம். உடற்பயிற்சி குறித்த அச்சத்தால் கைவிடுகிறோம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இப்படிப் பலநேரங்களில் உடற்பயிற்சிகளை நம்மிடமிருந்து எப்பாடுபட்டாவது விலக்கிவைக்கவே போராடுகிறோம். அன்றாட வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கமாக இருக்கவேண்டிய உடற்பயிற்சியை திணிக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பார்க்கப்பழகி இருக்கிறோம்!</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><br />இருப்பினும் அனைவருக்குமே கட்டுக்கோப்பான ஆரோக்கியமான உடல் மீது ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், ஏன் எல்லோராலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை செய்ய முடிவதில்லை.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அன்றாட நடைபயிற்சியைத் தொடங்கினாலும் கூடத் தொடர்ச்சியாக ஒருவாரத்திற்கு மேல் செய்ய முடியாமல் போவது ஏன்? இந்தத் தோல்விகளுக்குப் பின்னால் இருக்கிற உடல், மனம், பழக்க வழக்கக் குறைபாடுகள் என்னென்ன என்பதை இந்த நூலில் என் சொந்த அனுபவங்களின் மூலமாகவும் அறிவியல்பூர்வமாகவும் ஆராய முயற்சி செய்திருக்கிறேன். அத்துடன், இந்தக் குறைபாடுகளை சரிசெய்து எவ்விதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை தொடர்ச்சியாக செய்வதற்கான எளிய வழிகளையும் தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறேன்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்த நூல் உங்களை ஒரே நாளில் கட்டுமஸ்தானாக மாற்றிவிடாது. ஆனால் அடுத்த முறை உடற்பயிற்சிக்குச் செல்லும்போது திட்டமிடலோடு செல்ல உதவும். உடல் ஆரோக்கியத்தின் தொடர் ஓட்டத்திற்கு உங்களைத் தயார் செய்யும். இந்நூலை வாசித்து அப்படி ஓர் உந்துதலைப் பெற்று உங்களால் ஓர் உடற்பயிற்சியை மூன்றுமாத காலத்திற்கு மேல் செய்ய முடிந்துவிட்டாலே எனக்கு மிகப்பெரிய வெற்றிதான்!</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இது உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள அனைவருக்குமான நூல்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">படியுங்கள் அன்பானவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">****</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">"நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம்..." புத்தகத்தை இங்கே வாங்கலாம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><a href="https://www.amazon.in/gp/product/B08DM7SB1S/ref=dbs_a_def_rwt_bibl_vppi_i0">https://www.amazon.in/gp/product/B08DM7SB1S/ref=dbs_a_def_rwt_bibl_vppi_i0</a></p>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-59286143179193799722020-05-10T13:49:00.000+05:302020-05-10T13:49:04.426+05:30இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDSloFF9mJkC1fDO-1JPkM-jOjhDrlZrqB4qAC1KsnAfVWAr6BQJm8SsbnFdlvLZGfv8R96JfwZFgG0V070_AKUf9u77eNxfzHTB2V29skGtzBNZ2u0CGtPVJoKDAW3S6WbEbNGq_HWns/s1600/TRAINKB.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="440" data-original-width="660" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDSloFF9mJkC1fDO-1JPkM-jOjhDrlZrqB4qAC1KsnAfVWAr6BQJm8SsbnFdlvLZGfv8R96JfwZFgG0V070_AKUf9u77eNxfzHTB2V29skGtzBNZ2u0CGtPVJoKDAW3S6WbEbNGq_HWns/s400/TRAINKB.jpg" width="400" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒன்றரை மாதங்கள் ஆகப்போகிறது இந்த ஊரடங்கை அறிவித்து. வெறும் நான்கே நான்கு மணிநேரங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டு எல்லோரும் கூடடையுங்கள் என விரட்டியடித்த உலகின் மிகப்பெரிய நிகழ்வு. டீமானிடைசேஷன் என்ன செய்ததோ அதையேதான் இந்த ஊரடங்கும் இந்தியாவுக்கு செய்துகொண்டிருக்கிறது. இனியும் செய்யும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஊரடங்கால் தொழில் அகதிகள் எல்லாம் வருமானத்திற்கு வழியில்லாமல் உணவுக்காக அலைந்து திரிந்து தவித்தபோது... பசியோடு ஒருவரைக் கூட தவிக்க விடமாட்டோம்... என்கிற சூளுரைகளை நிதி அமைச்சர் நமக்கு வழங்கினார். ஆனால் நாற்பது நாள்களா நாடே பசியின் கொடுமையால் துடித்தது. இப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் பசியால் செத்துப்போனார்கள். தொழில் நசிந்து தற்கொலை செய்துகொண்டார்கள்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பொருளாதார பின்னடவை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு கையாளப்படும் என்றார் பிரதமர். இன்றுவரை அந்த குழு என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது... அதனால் விளைந்த பயன் என்ன யாருக்கும் தெரியாது. வீட்டிற்குள் இருந்து தன்னுடைய தட்டுகளால் சத்தமெழுப்பியதை தவிர நிதியமைச்சர் செய்த உருப்படியான காரியம் என்னவென்று யாருக்காவது தெரியுமா...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தொழில்கள் நசிந்துவிட்டன. வேலை இழப்புகள் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு எட்டியிருக்கிறது. சம்பளத்தை குறைக்காதீர்கள், வேலையை பறிக்காதீர்கள் என்று சொன்ன அரசு... ஆனால் யாருமே செய்யவில்லை. எப்படி செய்ய முடியும். என்னதான் மோடி ஆதரவு சங்கியாகவே இருந்தாலும் நஷ்டத்தில் இயங்கும்போது யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியும் மீறி தொழிலாளர் நலனை காக்கிற நிறுவனங்களுக்கு உரிய நிதிபாதுகாப்பை இந்த அரசுகள் அளித்திருக்க வேண்டாமா... இதுவரை அப்படி எதாவது அறிவிப்புகளை நீங்கள் கண்டீர்களா? அதையும் செய்யவில்லை. வருமானமில்லாமல் தொழில் நடக்காமல் எந்த சிறுகுறு தொழில் முதலாளியும் தொடர்ச்சியாக சம்பளம் கொடுக்க முடியாது. காரணம் இங்கே சிறுகுறு மைக்ரோ லெவல் தொழில் நடத்துகிறவனும் ஒருவகையில் தொழிலாளிதான். அவனுடைய நிதிநிலைக்கு உதவிக்கரம் நீட்டாமல் வெறும் வாய்ஜாலாங்களால் நிகழ்த்தி காட்ட இது என்ன மதக்கலவரமா... சாதிக்கலவரமா... சொன்னதும் ஆளுக்கு ஒரு அரிவளோடு சென்று கண்டவனையும் வெட்டித்தள்ள.. இது உயிர்காக்கும் நடவடிக்கை. இங்கே சொல்லைவிட செயல்தான் பேசும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கொரானாவுக்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்ப்போம் என்றார் பிரதமர். இந்தியாதான் கொரானாவை மிகச்சரியாக கையாளுகிறது. உலக நாடுகளே மோடிதான் சிறந்த பிரதமர் என்கிறார்கள் என்று வாட்ஸ் அப் வட்டாரங்கள் எல்லாம் கொண்டாடித்தீர்த்தன. சொல்லப்போனால் கொரானாவை வைத்து தன்னுடைய கட்அவுட்டை இன்னும் நான்கு அடி உயர்த்திக்கொள்ளத்தான் பார்த்தார் பிரதமர். இதை மிகச்சரியாக கையாண்டிருந்தால் அது நாற்பதடி கூட உயர்ந்திருக்கும். ஆனால் அதை செய்ய மிகுந்த பொருப்புணர்வும் ஆளுமையும் வேண்டும். வெற்று உதார்களால் உதவாது. அவர் கைதட்டசொன்னார்... விளக்குப்பிடிக்க சொன்னார்... ஹெலிகாப்டர் வைத்து பூத்தூவசொன்னாலர். ஒரு கொள்ளைநோயை கையாளும் விதம் இதுதானா.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இதுபோன்ற வெத்து பம்மாத்துகள் எதுவும் ஒரு கொள்ளைநோயை கட்டுப்படுத்துவதில் உதவாது. முறையான திட்டமிடலும் அறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற அதிகாரிகளும்தான் தேவை. தொடர்ச்சியாக பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை காதுகொடுத்து கேட்பதற்கு அரசு தயாராக இல்லை. இந்த அரசுக்கு காதுகள் கிடையாது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஜெயலலிதா காலத்தில் எப்படி ஒருநபர் ஆட்சி தமிழகத்தில் நடந்ததோ அதுபோல இன்று இந்தியாவில் நடப்பது இருநபர் ஆட்சி. எல்லா முடிவுகளுக்கும் இந்த இருவர் அனுமதிக்காக காத்திருக்கவேண்டும். காத்திருந்து காத்திருந்து மக்கள் செத்துக்குவிந்தாலும் காத்திருக்கவேண்டும். அவர்கள் தூங்கி எழுந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களுடைய கழிவறை வாசலில் தவமிருக்கவேண்டும். இந்திய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அப்படித்தான் இன்று காத்திருக்கிறார்கள். மேமாதம் அறிவித்த மூன்றாவது ஊரடங்கிலும் கூட இதே மெத்தனம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு ஜோசியக்காரர்கள் மீது இருக்கிற மரியாதை கூட அறிவியலாளர்கள் மீது இருக்கிறதா என்று தெரியவில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இன்று மற்ற நாடுகளில் எல்லாம் கொரானா ஒரளவு கட்டுக்குள் வரத்தொடங்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை குறைகிறது. பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்கு குறைந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. கொரானா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய அரசோ... போர் உச்சத்தை எட்டுகிற சமயத்தில் நம்மை சானிட்டைசர் போட்டு கைகழுவிவிட்டது. இனி நாம் கொரானாவோடு வாழப்பழகவேண்டும் என்று அறிவிக்கிறார் சுகாதார செயலாளர்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இந்தியா இன்று இரண்டு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஒன்று கொரானாவை இந்தியா நினைத்தபடி வெறும் ஊடரங்கால் மட்டுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் தாக்கம் நினைத்துப்பார்க்கவும் முடியாத அளவில் வளர்ந்துகொண்டே செல்கிறது. இரண்டாவது இந்தியாவை சூளும் வறுமை. ஒருபக்கம் வேலையிழப்பால் அவதிறும் மக்கள். தொழில்நசிந்து போனதால் திண்டாடும் முதலாளிகள். அதன் தொடர்ச்சியாக வீழும் இந்திய பொருளாதாரம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அதோடு இந்தியாவின் பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயருகிறார்கள். இந்த தொழில் அகதிகளை மீட்கவோ அவர்களை உரிய இடத்தில் சேர்க்கவோ அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவோ அரசு எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. போர்க்கதைகளில் மட்டுமே படித்த பசியோடு குடும்பம் குடும்பமாக நிகழும் இந்த இடப்பெயர்வுகளை முதன்முறையாக நாம் வாழும் காலத்தில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிர்கதியாக விடுகிற போர்ச்சூழலும் இங்கே இல்லை. அரசு நினைத்தால் வாகனங்களை ஏற்பாடு செய்து இந்த அகதிகளை மீட்கவும் முடியும். ஆனால் இவர்கள் அடையாளமிலிகள். இவர்களுக்கு ஆதார் அட்டையோ வாக்களர் அட்டையோ வாக்குகளோ கூட இருக்குமா தெரியாது. இவர்களுடைய வாக்குகளால் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புகளில்லை. கிரிகெட் ஸ்கோர் போல அன்றாடம் வந்து விழும் கொரானா பட்டியல்கள் போல இந்த நீண்ட பயணங்களில் பசியால் பிணியால் சோர்வால் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கைகள் எங்கும் வரக்காணோம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஊரடங்கை திட்டமிடும்போது ஒழுக்கமாக திட்டமிட்டிருந்தால் இன்று இந்த நிலை உருவாகி இருக்காது. ஆனால் அவசரம். அதில் ஒரு விளம்பரம் தேடவேண்டும். ஒரு ஹீரோயிசம் காட்டவேண்டும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவது போல டிவியில் முகத்தை காட்டி பேசவேண்டும். பிரதமரின் இந்த முட்டாள்தனங்களுக்கு சப்பைக்கட்டு கட்ட பெரும்பான்மை ஆதரவு என்கிற ஊரில் பிணந்தின்னிகளுக்கு கொண்டாட்டம்தான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கொரானாவை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டது கேரளா மட்டும்தான். அவர்களால்தான் உருப்படியாக இந்த கொள்ளை நோயை கையாள முடிந்தது. ஆரம்பத்தில் அதிக கேஸ்கள் கொண்டிருந்த மாநிலம் இன்று பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை மருத்துவர்ளை கொண்ட தமிழ்நாடே திணறிக்கொண்டிருக்கிறது. காரணம் என்ன? முடிவெடுக்கும் திறன். ஆரம்பத்திலேயே பினராயி விஜயன் செய்தது ஒன்றுதான்... தன்னை இந்தியா என்கிற கூட்டமைப்பிலிருந்து விலக்கிக்கொண்டு அதன் உதவிகளுக்கோ முடிவுகளுக்கோ காத்திருக்காமல் அவர்களாகவே கொரானாச்சூழலை கையாளத்தொடங்கியதுதான். நம்முடைய அடிமை அரசோ இப்போதும் மேலிடத்து உத்தரவுக்காக டயர்களை வணங்கி காத்திருக்கிறது. பழக்கப்படுத்தப்பட்ட மிருகம் அப்படித்தான் சவுக்கு சத்தமில்லாமல் அதனால் இயங்க முடியாது. ஆனால் அறிவற்ற சவுக்குகள் அடுத்து என்ன செய்வது என்பதைக் குறித்து எந்த திட்டங்களுமற்றவை. கலவரங்களை உருவாக்குவதை மட்டுமே அறிந்தவை. யோசித்துப்பாருங்கள் இந்த ஆட்சியாளர்கள் ஏன் எதை முன்னெடுத்தாலும் அது ஒரு கலவரச்சூழலுக்கே நம்மை தள்ளுகிறது.</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
மக்களுடைய உயிர்குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாத அரசு இது. அதிலும் அகதி உழைப்பாளர்களின் உயிருக்கெல்லாம் மயிரளவுக்குகூட இங்கே மதிப்பு கிடையாது. அதனால்தான் கர்நாடகாவில் கட்டுமான நிறுவனம் கேட்டுக்கொண்டது என்று ஊருக்கு திருப்பி அனுப்பவேண்டிய தொழிலாளர்களை அனுப்பாமல் பிடித்து வைக்கிறார்கள். ரயில்தண்டவாளங்களில் சாலைகளில் மனிதர்கள் செத்துவிழுகிறார்கள். அதைப்பற்றி எங்காவது பிரதமரோ அவரை இயக்கும் நிழல்பிரதமரோ அமைச்சரவையின் வேறுயாருமோ எதாவது அறிவித்து பார்த்தீர்களா... செத்துப்போகிறவன் எவனோ ஏழை என்கிற மெத்தனத்தில்தானே நாம் இருக்கிறோம். இந்த அரசு இந்த நாற்பது நாள்களில் அந்த அகதி தொழிலாளர்களை எப்படி கையாண்டதோ அப்படித்தான் அடுத்த நாப்பது நாள்களும் நம்மையும் கையாளப்போகிறது. சாலைகளில் நடக்கும் அகதிகளின் நிலை நமக்கும் நாளை வரக்கூடும். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நீண்டசாலைகளில் வறண்ட நாவுகளோடும் பசித்த வயிறுகளோடும் நடப்பதை தவிர...</div>
</div>
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-64495024756827023222020-05-08T12:06:00.003+05:302020-05-08T12:06:33.473+05:30ஈகோவை கைவிடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஈகோவை கைவிடல்!<br />
<br />
இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே மனிதர்களின் மகிழ்ச்சிக்கு பெருந்தடையாக இருப்பது ஈகோதான். அதிலிருந்து மீள்தல் அத்தனை எளிதாக இருப்பதில்லை. நம்முடைய அடக்கம் ஒவ்வொருநாளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிற சமூகவலைதளங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். அன்பேவா திரைப்படமும் அத்தகைய அகம்பாவத்திலிருந்து மீள்தலை குறித்தே பேசுகிறது. நகைச்சுவையை மையமாக கொண்ட திரைப்படமாகவே அது இருந்தாலும் திரைப்படத்தின் மையமான கருத்தோட்டம் ஈகோவை எதிர்கொள்தலையே அடிப்படையாக கொண்டிருக்கிறது.<br />
<br />
செல்வசெழிப்பில் திளைக்கிற நாயகன் ஜேபி அமைதி இன்றி தவிக்கிறான். அதைத்தேடி வெளியூருக்கு செல்கிறான். அங்கே அவனுடைய வீடை வேறெவெரோ ஆக்கிரமித்திருக்கிறார்கள். அமைதி தேடி வந்த இடத்தில் எதிர்பாராத அவமானங்களுக்கு ஆளாகிறான். அதை எதிர்கொள்ள முடிவெடுக்கிறான். படத்தில் வில்லன்களே இல்லை. ஒரே வில்லன்தான் அது நாயகனின் மனதில் குடிகொண்டிருக்கிற ஈகோதான். அதை வெல்வதன் வழிதான் அவன் விரும்பும் அமைதியை அடைய முடியும் என்பதை அறிகிறான். அது படம் நெடுக மீண்டும் மீண்டும் சோதிக்கப்படுகிறது. அவன் விடாப்பிடியாக அவற்றோடு விளையாடுகிறான். அவன் நினைத்தால் அதையெல்லாம் தன்னுடைய அதிகாரத்தால் ஒருவிநாடியில் தீர்த்துக்கட்டிவிட முடியும். இருந்தும் அதற்கு பதிலாக அவமானங்களோடு விளையாடத்தொடங்குகிறான். வேலைக்காரர்கள் அவமதிக்கிறார்கள், காதலிக்கிற பெண் அவமதிக்கிறாள், அவளுடைய கல்லூரி நண்பர்கள் அவமதிக்கிறார்கள் எல்லாவற்றையும் விளையாட்டுபோல எதிர்கொண்டு வெல்கிறார். இறுதியில் உச்சமாக அவருடைய காதலுக்கே அப்படி ஒரு சவால் வரும்போதும் அதையும் எதிர்கொண்டு வெல்கிறார்.<br />
<br />
உண்மையில் வெளியே அடக்கமே உருவானவர் என்று அறியப்பட்டாலும் அடிப்படையில் எம்ஜிஆரே ஒரு பெரிய ஈகோயிஸ்ட்தான். எத்தனையோ பேரை பலிவாங்கிய அமைதிமிக்க ஈகோ அது. அவர் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்ததே பெரிய அதிசயம்தான். அதனாலேயே இந்தப்படம் இன்னும் சிறப்பை அடைகிறது. இதில் அவரைத்தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இதே அளவு வெற்றியை ஈட்டியிருக்குமா தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட மனுஷன் எவ்ளோ சிம்பிளா நடிச்சிருக்கார் என்பதே படத்திற்கும் பெரிய பலமாக இருந்திருக்கக்கூடும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAHUrQZNHMzzaEKtEUnv8e-Z2CiUnGnyn8_wHxXEeSxVtK3XleYzrGPDvnBa2kUuATssLHn9MMdwMYiKs7ekd84QH2SYkbFWKuwFRMGCcqrR5DtznapHprDhYhD0-yLMRz2-5LmEbuNO0/s1600/hqdefault+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="480" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAHUrQZNHMzzaEKtEUnv8e-Z2CiUnGnyn8_wHxXEeSxVtK3XleYzrGPDvnBa2kUuATssLHn9MMdwMYiKs7ekd84QH2SYkbFWKuwFRMGCcqrR5DtznapHprDhYhD0-yLMRz2-5LmEbuNO0/s320/hqdefault+%25281%2529.jpg" width="320" /></a></div>
<br />
அகம்பாவத்தை கைவிடுதல் யாருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. அந்தஸ்து, பணம், திறமை, புகழ், வலிமை, வல்லமை முதலானவற்றின் மீது நாம் கட்டமைக்கிற அகம்பாவ உணர்வை கைவிட முயல்கிறவர்கள் முதலில் எதிர்கொள்ள நேர்வது அளவில்லா அவமானங்களையே. அந்த அவமானங்கள் மீண்டும் அகம்பாவத்தின் சட்டகங்களுக்கு பின்னால் நம்மை நெட்டித் தள்ளுவதாகவே அமையும். அவமானங்களின் நஞ்சு சக மனிதர்கள் மீதான நம்பிக்கையிழப்பெனவும் வெறுப்பாயும் ரத்த நாளங்களில் படியும். ஆனால் இந்த நெருக்கடிகளை ரசித்து அவற்றோடு விளையாடத்தொடங்குகிற ஒருவன் வாழ்வின் வேறொரு பரிமாணத்தை காணத்தொடங்குவான்.<br />
<br />
புத்தர் அத்தகையவர். அவர் ஆசைகளில் இருந்துமட்டுமல்ல, அகம்பாவத்திலிருந்தும் விடுபடுதலை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார். அறிவு உருவாக்கும் அகம்பாவம் பெரிதினும் பெரிது. அது தன்னையும் அழித்து மனிதகுலத்தையும் அழிக்கவல்லது. தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் ஒவ்வொரு லைக்கிலும் கூட நம் அகம்பாவம் வளர்கிறது. வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி வெல்தலில் இல்லை விளையாடுதலில் இருக்கிறது என்பதை மறந்தும்போகிறோம். நாம் போலிப்புகழின் அகம்பவாத்தில் மூழ்கித்திளைக்கிறோம். சில புத்தகங்களின் சில திரைப்படங்களின் சில வாழ்வனுபவங்களின் மூலம் கிடைக்கிற சிறிய அளவிலான ஞானமும் நம்மை பீடங்களில் ஏற்றிப்பார்க்கிறது. புத்தரோ தன்னுடைய அளவில்லா ஞானத்தோடுதான் ஒவ்வொரு நொடியும் போரிட்டார். அதனாலேயே வாழ்நாளெல்லாம் அவமானங்களை எதிர்கொண்டார். ஆனால் சோர்ந்துவிடாமல் அதை விளையாட்டுபோல மாற்றிக்கொண்டார்.<br />
<br />
பெரியாரிடமும் இத்தகைய குணத்தை நாம் காணமுடியும். தன் மீது எறியப்பட்ட செறுப்பை எடுத்துக்கொண்டு இன்னொன்றையும் வீசினால் பயன்படுத்திக்கொள்வேன் என்கிற பகடியான பதில் வலிமைகொண்டவனின் எளிமையிலிருந்தே உருவாகக்கூடிய ஒன்று இல்லையா!g<br />
<br />
<br /></div>
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-16278804652766332142020-05-05T18:48:00.000+05:302020-05-05T18:48:22.496+05:30தன்னெஞ்சறிவது... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhubDDHi3CYO2SHD5t3M29Qd2uZDpeNEmFjZGmGdytwL9Fof849vqAK2qsE8Qe5yfH8QU9PBJlDW6cEl3zzlJuNubzfEnU4XXqRCjo6h49sVQIJiJ9hA0SR3E0UvntqatqrtzsptTfyx60/s1600/9465c7dac8f4a7e88454c8c50d27b15e.jpg" imageanchor="1" ><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhubDDHi3CYO2SHD5t3M29Qd2uZDpeNEmFjZGmGdytwL9Fof849vqAK2qsE8Qe5yfH8QU9PBJlDW6cEl3zzlJuNubzfEnU4XXqRCjo6h49sVQIJiJ9hA0SR3E0UvntqatqrtzsptTfyx60/s320/9465c7dac8f4a7e88454c8c50d27b15e.jpg" width="240" height="320" data-original-width="770" data-original-height="1027" /></a><br />
<br />
<br />
மீனாட்சிக்கு சஞ்சலமாகவே இருந்தது. இந்த மாதிரி சமயத்தில் இப்படியொரு கல்யாணம் அவசியம்தானா என்று உள்ளுக்குள் கேள்வியொன்று அலையடித்துக்கொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. நேரம் நெருங்க நெருங்க பரிதவிப்பும் அதிகமாகத்தான் ஆகிக்கொண்டே வந்தது. மந்திர ஒலிகளும் மூச்சுதிணறடிக்கும் புகையும் சொக்கநாதருக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை இருக்காதா... கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கிறான். முட்டாள்.<br />
<br />
தாலிக்கட்டப்போகும் முன் முடிவெடுத்தவளாக எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். கைகளில் தாலியோடு இருகிய முகத்தோடு நின்றுகொண்டிருந்தனர் புரோகிதர்கள். சொக்கநாதருக்கு புன்சிரிப்பு.<br />
<br />
என்னாச்சு ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு...<br />
<br />
இல்லை இது வேண்டாம். மக்களெல்லாம் கொள்ளை நோய்லயும் பஞ்சத்துலயும் கிடந்து தவிக்கிறப்ப எனக்கு கல்யாணம் ஒரு கேடா... என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவங்களோட இருக்கணும். அவங்களுக்கு உதவணும். அவங்களை காப்பாத்தணும். இப்படி என்னை அலங்காரம் பண்ணி உட்காரவச்சு பூச்சூடி பொட்டுவச்சு கொண்டாடறது அவமானமா இருக்கு. இந்த கல்யாணத்தை நிறுத்துங்க...<br />
உரத்துச்சொன்னாள். சொக்கநாதர் சத்தமில்லாமல் புன்னகையோடு அமர்ந்திருந்தார்.<br />
<br />
சொக்கு உனக்குகூட இது தோணலையா அகிலத்தையே ரட்சிக்கும் நமக்கு இந்த நேரத்தில் இது தேவையா நாம் அவர்களோடு அல்லவா இருக்கவேண்டும். அவர்களுடைய குரலுக்கு அல்லவா நாம் காதுகொடுத்து காக்கவேண்டும். கொதித்தாள் மீனாட்சி.<br />
<br />
சொக்கநாதர் புன்னகை மாறாமல் ``நீ சொல்றதும் சரிதான். இந்த நேரத்தில் இந்த கல்யாணம் எதுக்குன்னு எனக்கும் தெரியலை... இதை அடுத்த வருஷம் வச்சுக்கலாமே... என்று தயக்கமாகக் கேட்டார்.<br />
<br />
புரோகிதர் தன் அருகில் இருந்தவரிடம் என்ன லூசு மாதிரி பேசுறானுங்க... அதெல்லாம் கல்யாணத்தை நிறுத்தமுடியாதுனு நான்தான் சொல்லிட்டேனே. மரபை மாத்திக்கக் கூடாது. சடங்குகளை நிறுத்தமுடியாது. கல்யாணம் குறித்த நேரத்தில் நடந்தே தீரணும். இல்லாட்டி தப்பாகிடும். யாரும் வந்தாலும் வராட்டியும் திருமணம் நடக்கும்.<br />
<br />
புரோகிதர் வயதானவர். மிகுந்த அனுபவசாலி. 60 ஆண்டுகளாக திருமணம் செய்துவைத்துக்கொண்டிருப்பவர். அவருடைய கோபத்தைப்பற்றி மற்ற புரோகிதர்களுக்கு தெரியும் என்பதால் யாரும் அவரை நெருங்கவும் கூட அஞ்சுவார்கள்.<br />
<br />
மீனாட்சிக்கு கோபம் அதிகமாகிக்கொண்டேதான் போனது. தன் தோளில் சாத்தியிருந்த எடைகூடி அழுத்திக்கொண்டிருந்த மாலைகளை அணிகலன்களை உடலை அறுத்துக்கொண்டிருந்த பட்டாடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேற முடிவெடுத்தாள். அவளுடைய மனக்கண்ணில் கண்ணகியின் அவிழ்ந்த தலைமுடியும் தீபாய்ந்த கண்களும் வந்துபோனது. கண்ணகி செய்ததை தானும் செய்யப்போவதாக எண்ணிக்கொண்டாள்.<br />
<br />
புரோகிதர் தாலியை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தார். மந்திரங்கள் கூட்டாக ஜெபிக்கப்பட்டபடியிருந்தன. மலர்கள் வாறி இறைக்கப்பட்டன. எங்கும் ஒளி நிறைந்திருந்தது.<br />
<br />
கனத்த இதயத்தோடு மீனாட்சி இருளுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தாள். முடிவெடுத்தவளாக... போதும் இந்த வேடிக்கை விளையாட்டு என்று முடிவெடுத்தவளாக...<br />
<br />
அணிந்திருந்த நகைகளை மாலைகளை கழட்டி எறிய கைகளை தூக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தாள். அதுவும் முடியவில்லை. ஒரு நூல் அளவுகூட அவளால் அசையவும் முடியவில்லை.<br />
<br />
சொக்கு என்னால் நகரமுடியவில்லை... என்னை ஏன் பிடித்துவைத்திருக்கிறாய். என்னை செல்லவிடு. போதும் உன் திருவிளையாடல். நான் போகவேண்டும் என்றாள். சொக்கநாதர் புன்னகை மாறாமல் ஒரு சிகை விளையாடலும் இல்லை. உன்னால் நகர முடியாது நீ நம்பமறுத்தாலும் அதுதான் நிஜம் என்றார்.<br />
<br />
நான் போகவேண்டும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம். நான் தெய்வம். மக்களை காப்பதே என் முழுமுதற்கடமை என்னை போகவிடு சொக்கு என்றாள் மீனாட்சி.<br />
<br />
நொய் நொய் என்று கடுப்பாக்காதே அது என்னால் நிச்சயமாக முடியாது<br />
<br />
நீயாவது எழுந்து செல் என்றாள். அதுவும் என்னால் முடியாது என்றார் சொக்கநாதர்.<br />
<br />
சொக்கநாதர் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். அது மீனாட்சியை மேலும் கோபப்படுத்தியது. என்னுடைய கோபம் புரியவில்லையா இளித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாய் என்றாள் மீனாட்சி. அது புரோகிதர் போட்டுவிட்ட ஒப்பனை என்பதுகூடவா இவளுக்கு புரியாது என்று எண்ணிக்கொண்டார். சொன்னால் பிரச்சனை வேறுபக்கம் திரும்பி தன்மீது பாய்ந்துவிடுவாள் என்பதை சொக்கு அறிந்திருந்தார்.<br />
<br />
நாம் நினைத்தாலும் நம்மாள் நகர முடியாது... புரோகிதர்தான் மனதுவைக்கவேண்டும்.<br />
<br />
நாம் கடவுள் இல்லையா... புரோகிதர் துணையில்லாமல் நம்மால் எங்கும் நகர முடியாதா. இது என்ன விபரீதம்<br />
<br />
முடியாது. புரோகிதர்கள் சொன்னால் நாம் கடவுள்... இல்லையென்றால் வெறும் கல்தான். நகரவே முடியாது. எதையும் செய்ய முடியாது.<br />
<br />
மீனாட்சியின் மஞ்சள் முகம் சிவக்கத்தொடங்கியதாக அவள் நினைத்தாள்.<br />
<br />
நான் எத்தனையோ லட்சம் பேரை காப்பாற்றி இருக்கிறேன். எத்தனையோ பேரை குணப்படித்தி இருக்கிறேன். நான் தெய்வம் இல்லையா...எனக்கு சக்தி இருக்கிறது. எத்தனையோ கோடி பேரை ரட்சிக்கவே யாம் அவதரித்தோம். அருபாலிப்பது ஒன்றே எமக்கு தொழில்.<br />
<br />
எல்லாமே யதேச்சையானது. பத்தாயிரம் வேண்டுதல்களில் பத்து பேருக்கு குணமாகும். மீதி எத்தனையோ லட்சம் பேர் செத்து மடிந்திருக்கிறார்கள். நீ யாருக்கும் எதையுமே கொடுத்ததில்லை.<br />
<br />
புரோகிதர் மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டே இருந்தார். அவருடைய தலைப்பாகை தீபத்தில் ஒளி வீசிக்கொண்டேயிருந்தது. அதன் நுனியில் இருந்த முத்துமாலை ஆடிக்கொண்டிருந்தது. அவர் எந்த நேரத்திலும் மீனாட்சியை நெருங்கிவிடக்கூடும்.<br />
<br />
இதையெல்லாம் நம்பமுடியவில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நான் கடவுள் என்னால் எதையும் செய்ய முடியும். மக்களை ரட்சிக்க முடியும். நான் எத்தனையோ பேருக்கு விமோசனம் அளித்தவள். செல்வங்களை தந்திருக்கிறேன்.<br />
<br />
எல்லாமே யதேச்சையானது. எதிர்பாராமல் விழுந்த கனிகள். உன்னால் ஒன்றுமே நடந்ததில்லை. மற்றவர்களை விடு... உன்னால் கூட ஒரு அடி கூட நகரமுடியாது. நீ வெறும் கல். அதை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன். அந்த புரோகிதன் நினைத்தால் நாளைக்கே உன்னை தூக்கி எறிந்துவிட்டு வேறொரு கல்லை கொண்டுவந்து வைத்து எனக்கு கல்யாணம் செய்துவைத்துவிடுவான் மீனு.<br />
<br />
சொக்கநாதருக்கு கொஞ்சம் கூட ஈவுஇரக்கமே இல்லையோ என்று நினைத்துக்கொண்டாள் மீனாட்சி.<br />
<br />
நான் யார் என்பதை நிரூபிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இதற்காகத்தான் பல கோடி ஆண்டுகளாக காத்திருந்திருக்கிறேன். இன்று நான் இந்த திருமணத்தை நிறுத்திக்காட்டி உண்மையில் நான் எவ்வளவு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை நிருபீத்துக்காட்டுகிறேன் என்று சூளுரைத்தாள் மீனாட்சி. சொக்கநாதர் முகம் மாறாமல் புன்னகைத்தது. இதை நானே செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் நீங்கள் காத்திருந்திருந்தீர்களா... உங்கள் திருவிளையாடல் புரிந்துவிட்டது.<br />
<br />
மீனாட்சி முடிந்தமட்டும் தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தாள். அவளால் ஒன்றுமே முடியவில்லை. சொக்கு சிரிக்காதே நிச்சயம் மாற்றுவேன். என் மக்களை காக்க நான் மட்டுமே இருக்கிறேன். கிளம்புவேன்... முக்கி முனகி என்னென்னவோ செய்துகொண்டிருந்தாள்.<br />
<br />
புரோகிதர் அருகில் தாலியோடு நெருங்கினார். எனக்கு இந்த திருமணம் வேண்டாம். நான் போக வேண்டும் என்னை விடு விடு... என்று கத்தினாள். புரோகிதர் அதையெல்லாம் கவனிக்காதவராக அருகில் வந்தார்.<br />
<br />
உன்னை என்ன செய்கிறேன் பார் என் பார்வையாலேயே உன்னை எரித்துவிடுகிறேன்... உன் இதயத்தை நிறுத்துகிறேன் பார் என்றாள். தான் நினைத்தமாத்திரத்தில் புரோகிதரின் இதயம் நின்றுவிடும் என்று நினைத்தாள். இதயம் நின்றுபோகாதா என ஏங்கினாள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பக்கத்தில் சொக்கநாதரையும் அவ்வப்போது அவள் கவனிக்கத்தவறவில்லை. அவனுடைய புன்னகை கேலிசெய்வதைப்போலிருந்தது. வானத்திலிருந்து மின்னல் தோன்றி புரோகிதர் தலையில் விழும் என்று நினைத்துக்கொண்டாள்.. ஒளி வந்தது. ஆனால் மின்னலில்லை ஃப்ளாஷ்லைட்டுகள் ஒளிர்ந்தன.<br />
<br />
தான் நினைப்பதையெல்லாம் எப்படி செயலாக மாற்றுவது என்று அவள் அறிந்திருக்கவில்லை என்பதை முதன்முறையாக அறிந்துகொண்டாள். அவளால் எதுவுமே செய்யமுடியாது என்பது அப்போதுதான் புரிந்தது. புரிந்த கணத்தில் உள்ளுக்குள் எதுவோ ஒன்று தணிந்து நீர்த்துப்போய் கரைந்தது போலிருந்தது. அது ஒரு கொடுந்துயரமாக படிந்தது. மீனாட்சி புன்னகை சூடினாள்.<br />
<br />
<br />
<br />
</div>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-56771373864158579862019-01-18T14:43:00.001+05:302019-01-18T14:43:25.229+05:30MARATHON - SOME FAQS`புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தனித்தனியாக சொல்வது கஷ்டம். எனவே, ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுரை.<br />
<br />
முதலில் ஓடுவதை தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். ஓட்டம் கூட தியானம்தான் என்கிறார் ஓஷோ. ஆனால் அதைச் சரியாக செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். இல்லையென்றால் முட்டிவீக்கம், முழங்கால்வலி, குதிக்காலில் பிரச்னை என ஓடுகிற ஆசையே போய்விடும்.<br />
<br />
நான் சொல்கிற விஷயமெல்லாம் ஆனா ஆவன்னா அடிப்படை. இதை சரியாக பின்பற்றினாலே போதும் ஒருமாதிரி சில மாதங்களில் அமெச்சூர் ஓட்டக்காரனாகிவிடலாம். அதற்குபிறகு உடலும் கூகுளுமே நிறைய கற்றுக்கொடுக்கும்.<br />
<br />
1 - ஓடவேண்டும் என முடிவெடுத்துவிட்டதும் ஜனவரி ஒன்றாம்தேதியே உடனே எங்காவது மைதானத்திலோ பார்க்கிலோ சாலையிலோ லொங்கான் லொங்கான் என ஓடவேண்டாம். மூச்சுத்திணறும் நெஞ்சை அடைக்கும், தலைசுற்றும், அரை கிலோமீட்டர் கூட ஓடமுடியாது, நமக்கே நம்மை நினைத்து அசிங்கமாக இருக்கும். என்னத்துக்கு அவசரம்..<br />
<br />
2 - முதல் ஒரு வாரத்திற்கு மெதுவாக பொறுமையாக நடக்க ஆரம்பியுங்கள். மூச்சை கவனியுங்கள். முதல் நாள் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சியில் தொடங்கலாம். அடுத்தடுத்த நாட்களில் அரை அரையாக கூட்டி பத்து நாட்களில் ஐந்து கிலோமீட்டர் நடக்கலாம். முதலில் நம்மால் நடக்க முடிகிறதா என்பதை பார்க்கவேண்டுமில்லையா?<br />
<br />
3 - பத்து பதினைந்து நாட்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, நடக்க ஆரம்பித்து ஒரளவுக்கு உடம்பு செட் ஆகிவிட்டதா, இப்போது ஓடத்தொடங்கலாம்.<br />
<br />
4 - வீட்டில் சும்மா கிடக்கிற பழைய ஷூ, அலுவலகத்துக்கு போடுகிற பார்மல் ஷூவெல்லாம் போட்டுக்கொண்டு ஓடக்கூடாது. குறிப்பாக பாத்ரூம் செப்பல், ஹவாய் செப்பல், வெறுங்காலில் எல்லாம் ஓடுவது நிச்சயம் கூடவே கூடாது. காலுக்கேற்ற நல்ல ரன்னிங் ஷூ வாங்கிப்போட்டுக் கொண்டுதான் ஓடவேண்டும். ஆயிரம் ரூபாய்க்கே ஒரளவு நல்ல ஓட்டக்காலணிகள் கிடைக்கிறது. சோத்து சோம்பேறியாட்டம் அமேசானில் தேடாமல் நாலுகடை ஏறி இறங்கி போட்டுப்பார்த்து வசதிபார்த்து வாங்கவும். காலுக்கு கச்சிதமில்லாத காலணியும் ஆபத்துதான்.<br />
<br />
5 - உடை விஷயத்தில் கவனம் வேண்டும். ஜீன்ஸ் போட்டு ஓடுவது, சட்டை பேண்டில் ஓடுவதெல்லாம் கூடாது. நல்ல எளிய வியர்வை உறிஞ்சக்கூடிய கச்சிதமான உடைகள் அணியவும். வேட்டி லுங்கி கட்டிக்கொண்டோ, பர்தா போட்டுக்கொண்டோ, சுடிதார் போட்டு துப்பட்டாவை முகத்தில் கட்டிக்கொண்டோவெல்லாம் ஓடக்கூடாது.<br />
<br />
6 - ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடுவதை விட நல்ல காற்றோட்டமான அவுட்டோர் ரன்னிங்தான் சிறந்தது. நல்ல சுத்தமான ஆக்ஸினோடு ஓடுவது உடலுக்கு நல்லது. ஜிம் செலவு இல்லை.<br />
<br />
7 - அதிகாலையில் எழுந்து ஓடுவதுதான் சிறந்தது. அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாதவர்கள் திடீரென எழுவதால் பகலில் தூக்கம் சோர்வு எல்லாம் வரும்தான். ஆனால் பத்து பதினைந்து நாட்களுக்கு பிறகு அது இருக்காது. அதற்கு பிறகும் இருந்தால், இரவு அதிக நேரம் மொபைல் நோண்டாமல் நேரங்காலமாக உறங்கச்செல்லவும். அப்போதும் சோர்வாக இருந்தால் உணவுப்பழக்கத்தை கவனிக்கவும்.<br />
<br />
8 - சரி ஓடுவோம். ஓட ஆரம்பிக்கும்போது நமக்கு எது சரியான வேகம் என்பது தெரியாது என்பதால் வெறிநாய் துரத்துவது போல நினைத்து தபதபவென ஓடுவோம். அப்படியெல்லாம் ஓடி நாம் உசேன் போல்ட் ஆகப்போவதில்லை. பொறுமையாக எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓட ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் போகப்போக வேகம் பிக்அப் பண்ணிக்கொள்ளலாம்.<br />
<br />
9 - ஆரம்பத்தில் ஓட்டம் - நடை என கலந்து கட்டி பண்ணலாம்.. போகப்போக ஸ்டாமினா அதிகரிக்கும்போது முழுமையாக ஓட ஆரம்பிக்கலாம். அரைகிலோமீட்டர் ஓட்டம், ஒரு கிமீ நடை என ஆரம்பியுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு அரைகிமீயை ஒன்றாக அதிகரியுங்கள். மூச்சு வாங்கினால் கொஞ்சம் நடை போட்டுவிட்டு மீண்டும் ஓடுவதால் எந்த அம்பயரும் உங்களுக்கு அவுட் கொடுக்கப்போவதில்லை. அதனால் ஓட்டம்+நடை பார்முலாவை பின்பற்றுங்கள்.<br />
<br />
10 - ஓடும்போது மூச்சுவிடுவதை நன்றாக கவனிக்க வேண்டும். மூக்குவழியாகவும் வாய்வழியாகவும் சீராக மூச்சு விடவேண்டும். வயிறு இறுக்கிப்பிடித்து வலி உண்டாகும் சிலருக்கு. அப்போது வயிற்றுக்குள் காற்றை பலூன் போல செலுத்தி விரிவடைய செய்தால் சரியாகிவிடும். அச்சம் தேவையில்லை. ஆனால் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து விடவேண்டும். மூச்சை அடக்கிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டெல்லாம் ஓடாதீர்கள். ஓடும்போது ''ஹேப்பி பர்த்டே டூயூ'' பாடிப்பாருங்கள்... அதை தடையில்லாமல் பாடமுடிந்தால் மூச்சுவிடுவது சரியாக இருக்கிறது என்று அர்த்தம்! (சிகரட் பழக்கமிருந்தால் அதை விட்டுவிடுங்கள். அல்லது ஓட்டத்தை விட்டுவிடுங்கள். உடல் பாதிப்பு அதிகமாகிவிடும்)<br />
<br />
11 - வார்ம்அப்ஸ் நிச்சயம் அவசியம். அப்படீனா என்ன என்பவர்கள் யூடியூபில் தேடினால் நிறைய கிடைக்கும். உடலை இலகுவாக்குகிற சிறிய உடற்பயிற்சிகள் இவை.<br />
<br />
12 - ஓடும்போது கையில் மொபைல், காதில் ஹெட்போன் எல்லாம் வைத்துக்கொண்டு ஓடாதீர்கள். வீட்டிலேயே மொபைலை வைத்துவிட்டு ஓடுவது நல்லது. அல்லது மொபைல் பவுச் கிடைக்கும் அதில் வைத்துக்கொள்ளவும். ஓடும்போது ஹெட்போன் இடைஞ்சலாக இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.<br />
<br />
13 - கூட்டமான பார்க்குகளில் ஓடுவது சிரமம். அதற்கு சாலைகளில் ஓடலாம். நாய்கள், ஆய்கள் ஜாக்கிரதை. ஓடுகிற குழுக்கள் உங்கள் ஊரில் இருந்தால் அவர்களோடு சேர்ந்து ஓடுங்கள். பயிற்சிகளில் நிறைய உதவுவார்கள்.<br />
<br />
14 - ஓடி முடித்தபின் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முக்கியம். தசைகளை இழுத்து விட்டுக்கொள்வதால் காயங்களை தவிர்க்கலாம். யோகா தெரிந்தவர்கள் பத்து சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. எனக்குத்தெரிந்து ரன்னர்களுக்கான பெஸ்ட் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி அதுதான்.<br />
<br />
15 - நைக்ப்ளஸ், ஸ்ட்ரவா, ரன்கீப்பர் மாதிரி மொபைல் ஆப்களை உபயோகித்தால் ஓடும் தூரம் நேரமெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். அது அடுத்தடுத்த நாட்களில் ஓடுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும். ஸ்ட்ராவா என்பது ஓடுகிறவர்களுக்கான ஃபேஸ்புக்... ஓடிஓடி லைக் வாங்குவது நமக்கான உத்வேகத்தை தரும்.<br />
<br />
16 - ஆரம்பத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் ஓடினாலே போதும். திங்கள், செவ்வாய் ஓட்டம், புதன் நடைபயிற்சி, வியாழன்-வெள்ளி ஓட்டம் - சனி - யோகா, கிரிக்கெட், டென்னிஸ், சைக்கிளிங் மாதிரி ஏதாவது, ஞாயிறு ஓய்வு என வழக்கப்படுத்திக்கொள்ளலாம். அல்லது நம்முடைய ஸ்கெட்யூலுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.<br />
<br />
17 - ஓய்வு முக்கியம். தினமும் ஓடிக்கொண்டேஏஏஏஏ இருக்கக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது ஓடாமல் ஓய்வில் இருங்கள். ஆனால் வீட்டிலேயே குப்புறப்படுத்துக்கொள்ளாமல் பார்க்கிலோ பீச்சிலோ ஓடுகிற இடத்திலோ வேடிக்கை பாருங்கள், தியானம் பண்ணுங்கள்.. சைட் அடியுங்கள். ஆனால் அன்றாட பயிற்சியை ஸ்கிப் பண்ணுவது மொத்தமாக வழக்கத்தை உடைத்து தினப்பழக்கத்தை சிதைக்கும்.<br />
<br />
18 - காலில் முட்டியில், இடுப்பில் முதுகில் கழுத்தில் வலி இருந்தால், நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அதற்குபிறகு ஓடிக்கொள்ளலாம்.<br />
<br />
19 - பொறுமை மிகமிக அவசியம். எடுத்த உடனே நூறு கிலோமீட்டர் ஓடமுடியாது. அரைகிலோமீட்டர்தான் முடியும். அதை முழுமையான அர்பணிப்போடு ஓடுங்கள். மெதுமெதுவாக தூரத்தையும் வேகத்தை அதிகரியுங்கள்.<br />
<br />
20 - அதிக தூரம் ஓடும்போது நிறைய போர் அடிக்கும். அதை எதிர்கொள்ள மனதை பயிற்றுவிக்கவேண்டும். குழுவாக ஓடும்போது இந்த போரை தவிர்க்கலாம். அல்லது பாட்டுகேட்டுக்கொண்டே ஓடலாம்.<br />
<br />
21 - ஜனவரிக்கு பிறகு வெயில் அதிகரிக்கும். எனவே கையில் சின்னதாக ஒரு தண்ணீர் பாட்டில் வைத்துக்கொண்டு ஓடவும்.<br />
<br />
22 - ஓட ஆரம்பித்தால் நன்றாக பசிக்கும். அதனால் கொல தீனி தின்னக்கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்பதில் இனிமேல்தான் அதிக கவனம் வேண்டும்.<br />
<br />
23 - நாலுநாள் ஓடிவிட்டு வந்து வயிற்றை தடவிப்பார்த்து தொப்பை குறையலயே என்று அழக்கூடாது. சொல்லப்போனால் ஓட ஆரம்பித்த பிறகுதான் தொப்பை பெரியதாக மாறியதுபோல தோற்றம்தரும். நெஞ்சு நிமிர்வதால் வயிறு மேலும் முன்னுக்கு வரும். ஆனால் ஓட ஓட குறையும் நம்பிக்கையாக ஓடுங்கள்.<br />
<br />
24 - ஓடும்போது இயல்பாகவே நம் பாதங்களின் பின்புறம்தான் தரையில் முதலில் விழும். அப்படி ஓடக்கூடாது. பாதங்களின் நடுப்பாகம் தரையில் படும்படி ஓடவேண்டும். கவனித்து ஓடுங்கள்.<br />
<br />
25 - தினமும் ஓட்டத்திற்கு பிறகு காலுக்கு வலுவேற்றும் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். அதை ஸ்கிப் பண்ணக்கூடாது.<br />
<br />
இதெல்லாம் தெரிந்தால், ஓட்டம் நிரந்தரமான ஒரு ஆரோக்கிய பழக்கமாக மாறும். இவை தெரியாததால்தான் பலரும் ஓட்டத்தை ஆரம்பத்திலேயே விட்டுவிட நேர்கிறது.<br />
<br />
கடைசியாக எந்த வயதிலும் ஓட்டப்பயிற்சியை தொடங்கலாம். எந்த வயதிலும் மாரத்தான் ஓடலாம். அதற்கு தடையேயில்லை. அண்ணாநகரில் ஒரு 70 வயது ரன்னரை நேரடியாகவே பழக்கமுண்டு அவர் 65வயதில் ஓடத்தொடங்கியவர். (குழந்தைகள் என்றால் மட்டும் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடவேண்டாம். )<br />
<br />
ஓட்டத்திற்கு நம்பிக்கைதான் முக்கியம். அதைவிட முக்கியம் பொறுமை. ஓட்டப்பயிற்சி என்பதில் உடல் பலம் என்பது பாதிதான் ஓடுவதற்கான மனபலம்தான் முக்கியமானது. மாரத்தான் ஓட்டங்களில் நீண்ட தூரத்திற்கு யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாக ஓடுவதற்கு கால்களில் மட்டுமே பலமிருந்தால் பத்தாது. மனதிலும் வேண்டும். அது இருக்கிறவர்களால்தான் சிறந்த ஓட்டக்காரர்களாக முடியும்.<br />
<br />
Best wises<br />
<br />
அதிஷா.Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-46008046263130220742019-01-18T14:41:00.000+05:302019-01-18T14:41:19.582+05:30புத்தகத் திருவிழா 2019புத்தகத் திருவிழாவில் கூட்டமில்லை. அப்பளம்தான் அதிகம் விற்பனையாகிறது. இப்படி எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ``ஆமான்டா அப்பளம்தான்டா அதிகமா விக்கும். ஏன்னா அந்த அப்பளத்தைவிட....'' என்று வாசகர்கள் திருப்பி திட்டுவதில்லை. அவர்கள் அத்தனை சாதுவானவர்கள். எழுத்தாளன் மீதிருக்கிற கோபத்தில் அம்பிகையே அபிராமியே என அப்பளத்தை வாங்கி கோபமாக இரண்டு கடிகடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வாயில்லா வாசகர்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம். என்றைக்கு தமிழ்வாசகன் அவன் காசு கொடுத்து வாங்கிய நூலை படித்து கடுப்பாகும்போது எழுத்தாளனை திரும்பத் தாக்கத்தொடங்குகிறானோ அன்றைக்குதான் தமிழ் எழுத்துலகம் வாழும். அதெல்லாம் நடக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.<br />
<br />
சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை... ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.<br />
<br />
முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.<br />
<br />
அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பதிப்பகமே ரமேஷ் பப்ளிஷர் என நான்குகடை, சுரேஷ் பப்ளிஷர் என ஐந்து கடை, ராமேசுரேஷ் டிஸ்ட்ரிபூட்டர்ஸ் என பத்து கடை என கண்டமேனிக்கி ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். எங்கு சுற்றினாலும் ஒரே மாதிரியான நூல்களையே திரும்ப திரும்ப பார்க்கும் போது வாசகனுக்கு எவ்வளவு அலுப்பும் எரிச்சலும் வரும்... இப்படிப்பட்ட ப்ராக்ஸி கடைகளிலேயே போய்விட்டது 30 % !<br />
<br />
அடுத்து ஒரே மாதிரியான புத்தகங்கள் விற்கிற ஜிகே கடைகள். இங்கெல்லாம் பொன்னியின் செல்வன், சத்திய சோதனை, தெனாலி ராமன் கதைகள், பீர்பால், சாண்டில்யன்... இப்படிப்பட்ட நூல்களை மட்டுமே விற்பார்கள். இங்கெல்லாம் ஆண்டுதோறும் ஒரு புதிய நூலைக்கூட போடமாட்டார்கள். வருடாவருடம் அதே செட்டு... அதே நூல்கள். ஒரு புதுமையும் இருக்காது. எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்கிற பிரச்னைகள் இல்லாமல் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து விற்கிற குரூப்கள் இவர்கள். இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு 15% தேறும்.<br />
<br />
அடுத்து ஆங்கில நூல்கள் விற்பவர்கள். பென்குயின் தவிர பெரிய ஆங்கில பதிப்பகங்கள் சென்னை புத்தகத்திருவிழாவில் ஏனோ கால்வைப்பதில்லை. பெரும்பாலும் டூபாக்கூர் புக்ஸ் கம்பெனிகள்தான் களம்காண்கின்றன. எங்காவது பழைய கண்டெயினரில் பழைய நூலகத்தில் கழித்துக்கட்டின நூல்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்து எது எடுத்தாலும் 100 வகையில் விற்பார்கள். அதில் பத்து சதவீதம் கூட தேறுகிற நூல்களே இருக்காது. எல்லாமே 10 ரூபாய் கூட மதிப்பில்லாத நூல்களாக இருக்கும். இவ்வகை கடைகள் 5%<br />
<br />
அடுத்து ப்ரமோஷன் கடைகள். தங்களுடைய பொருள்களை விற்பதற்காக, அல்லது பிரபலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற கடைகள். இங்கெல்லாம் நமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. புத்தகத்திருவிழாவுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் பத்து கடைகளை மொத்தமாக போட்டு... உள்ளே பத்து பேர் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நம்மை உள்ளே அழைத்து பலூனை கொடுத்து மண்டையை கழுவி எதாவது எஜூகேஷனல் சாப்ட்வேரை தலையில் கட்டுவார்கள். இதுமாதிரி கடைகள் ஒரு 5%<br />
<br />
மீதி இருக்கிற 25% கடைகளில் நல்ல நூல்கள் கிடைக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதில் முக்கால்வாசி கடைகளில் புக்பேருக்கென்றே அவசரஅவசரமாக சரியாக எடிட் செய்யப்படாமல், பிழைகள் பார்க்காமல், சரியான ஆய்வுகளோ உழைப்போ இல்லாமல் அவசரகதியில் எழுதப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். 200 ரூபாய் கொடுத்து ஒரு வாசகன் புத்தகம் வாங்குகிறான், அவனுடைய பணத்துக்கு மதிப்புக்கொடுத்து அவனை கொஞ்சமாவது மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்கள் இவைகளில் சொற்பமாகத்தான் தேரும். அது எது எனக் கண்டுபிடித்து சொல்லவும் நம்மிடம் ஆட்கள் இல்லை. ஃபேஸ்புக்கில் தேடினாலும் கிடைக்காது. முகநூல் ஹிட் என சில நூல்கள் உண்டு... அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மட்டையடி அடித்து நம் தலையில் கட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தில் இந்த 25% கடைகளில் எதையோ ஒன்றை எடுத்துவந்து பத்து பக்கம் படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவோம்.<br />
<br />
இப்படி ஒட்டுமொத்த புத்தகத்திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்பது கடைசிவரை உள்ளே சென்று திரும்புகிற வாசகனுக்கு மர்மமாகவே இருந்துவிடுகிறது. ஆண்டுதோறும் இதே செட்அப்தான், ஒரு புதுமையோ மாற்றமோ இருக்காது. அதே லிச்சி ஜூஸ், அதே புதிய கவிஞர்கள் படை, அதே காலச்சுவடு கிளாஸிக்ஸ், அதே காமிக்ஸ் கடை, அதே மேடை, அதே சுகிசிவம், அதே மனிதர்கள்...<br />
<br />
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ, அவன்மீது எந்த பச்சாதாபமும் இல்லாமல் மொக்கையான சரக்குகளையும் அதிக விலைக்கு தலையில் கட்டி, மோசமான சூழலில் குடிக்க விட்டிருக்கிறார்களோ அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.<br />
<br />
உலகெங்கிலும் நடக்கிற புத்தகத்திருவிழாக்களின் வீடியோக்களை யூடியூபில் தேடிப்பாருங்கள்... எப்படியெல்லாம் புதுமைகள் பண்ணுகிறார்கள். ஆங்கில நூல்களை வாங்கிப்பாருங்கள், அட்டை தொடங்கி கன்டென்ட் வரை எத்தனை உழைப்பு. ஒரு ஒரு ரூபாய்க்கும் மதிப்பு மிக்க நூல்களை போடுகிறார்கள்.<br />
<br />
நம் புத்தகத் திருவிழா கடைகளில் கிரியேட்டிவிட்டி என்பது துளிகூட இருக்காது. போகட்டும் வசதிகளாவது இருக்கிறதா? கடையில் இருப்பவர்களுக்கும் நூல்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே ஒரு நூலை எடுத்து விவரித்து பரிந்துரை செய்யவும் பக்காவான ஆளில்லை. நல்ல நூல்களும் இல்லை. புதிதாக வருகிற சில நூல்களும் வாசகன் மீதான அக்கறையோடு எழுதப்படுவதில்லை...<br />
<br />
இதையெல்லாம் தாண்டியும் இத்தனை கூட்டங்கள் வருடந்தோறும் வருவதும் நூல்கள் வாங்குவதும் கூட அதிசயிக்கதக்க அதிசயம்தான்... பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அந்த பாவப்பட்டவர்களுக்கு ரத்தினக்கம்பளமல்லவா விரிக்க வேண்டும்... அவனை பார்க்கிங்கில் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்... யாசகனைப்போல!Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-54788385654564846452017-03-24T21:20:00.002+05:302017-03-24T21:28:00.932+05:30பால்கனி தாத்தா<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoTd9dtr-dJ8r6i59MeqxGZlRfp9hKSoFkUOYd_j3QZuGyN8RqN0oF3HeHzP3dAXi4W61Yfi5vEvS0Z5bCkrkkW6B-_0T9ccaKaI-pzdbOnhOaaPIRmpv82on47QIFLg9dFASKg_ulVFw/s1600/Ashokamitran-dead.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoTd9dtr-dJ8r6i59MeqxGZlRfp9hKSoFkUOYd_j3QZuGyN8RqN0oF3HeHzP3dAXi4W61Yfi5vEvS0Z5bCkrkkW6B-_0T9ccaKaI-pzdbOnhOaaPIRmpv82on47QIFLg9dFASKg_ulVFw/s320/Ashokamitran-dead.jpg" width="320" height="190" /></a></div><br />
நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன.<br />
<br />
அசோகமித்திரனின் கதைகளின் மொழி மூளையை அஷ்டபங்காசனம் பண்ண வைக்கிற வகையில் என்றைக்குமே இருந்ததில்லை. தண்ணீரும் ஒற்றனும் மானசரோவரும் கரையாத நிழல்களும்... ஒவ்வோரு சிறுகதைகளும் மக்களின் மொழியில்தான் உணர்வுகளை கடத்தின. அந்த உணர்வுகளின் அழுத்தம் என்றென்றைக்குமானவை. <br />
<br />
எழுத்தில் இன்னமும் அரிச்சுவடியைக்கூட தாண்டிடாத நானே ஒரு நானூறு லைக்ஸ் வாங்கினால் ஆட்டம் போடத்தோன்றுகிறது. ஆனால் எத்தனையோ மகத்தான கதைகளை எழுதிவிட்டு எப்படி இந்த ஆளால் இப்படி தேமேவென்று பால்கனி தாத்தாவாக இருக்கமுடிகிறது என வியந்திருக்கிறேன்.<br />
<br />
அவர் எப்போதும் பால்கனியில் அமர்ந்துகொண்டு இலக்கிய உலகை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டிருந்தார். தான் எழுதுவதை சமகால எழுத்தாளர்களை போல சமூகத்திற்கு செய்கிற தொண்டாக, தியாகமாக, எது எதுவாகவோ அவர் நினைத்ததே இல்லை.<br />
<br />
``உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’’ என்கிற கேள்விக்கு அவருடைய சமீபத்திய விகடன் தடம் பேட்டியில் இப்படி பதில் சொல்லியிருந்தார்.<br />
<br />
``பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். நான் எழுதினதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’’<br />
<br />
அசோகமித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் இதுதான். அவருக்கு எழுத்து என்றைக்கும் மகிழ்ச்சிக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஒற்றனின் ஒவ்வொரு வரியிலும் அந்த மகிழ்ச்சியை நான் உணர்ந்திருக்கிறேன். எழுதுவதன் மகிழ்ச்சி... அத்தனை எளிதில் வாய்க்காது. மன திருப்திக்காக மகிழ்ச்சிக்காக எழுதுதல் பெரிய வரம். அதைநோக்கித்தான் எழுதுபவர்கள் முன்னகர வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.<br />
<br />
தமிழ்மகனின் நூல்வெளியீட்டில்தான் அவரை கடைசியாக பார்த்தது. அவருடைய பேச்சையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை அவரே குறிப்பிட்டு சிரித்தார். அந்த சுய எள்ளலை அவருடைய சிறுகதைகளை இனி நிறையவே மிஸ் பண்ணுவோம். மற்றபடி இது கல்யாணச்சாவுதான்.<br />
<br />
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் அசோகமித்திரனின் முழுமையான சிறுகதை தொகுப்பை (காலச்சுவடு) ஒரு நண்பர் பரிசளித்தார். அதை இந்த ஆண்டு இறுதிக்குள் வாசித்து முடிப்பதுதான் அவருக்கு செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.<br />
<br />
என்னைப்போன்ற பேரன்களுக்கு ஏராளமாக எழுதி வைத்துவிட்டுத்தான் செத்துப்போயிருக்கிறது இந்த எழுத்து தாத்தா. அதையெல்லாம் வாசித்து பகிர்வதை விடவும் வேறென்ன பெரிய அஞ்சலியை செய்துவிடப்போகிறோம்... இந்த மகத்தான எழுத்தாளனுக்கு!<br />
<br />
#அசோகமித்திரன்Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-55392817963039479092017-03-23T11:35:00.000+05:302017-03-23T11:36:23.545+05:30யார் இந்திய விரோதி? <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-x2_OHs7jYrprcPuILksZhfteDpswc2y3gRtoLkIClqNfz1YXpbRjsVHwqZLYuBCWdDILEiqMPPS-TmX3B7Kt6H2PamzhbQuTM5NK1qozF859Mn5CIXOfcczPOrdxYyTiYhX_VdDS-Xw/s1600/497844198.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-x2_OHs7jYrprcPuILksZhfteDpswc2y3gRtoLkIClqNfz1YXpbRjsVHwqZLYuBCWdDILEiqMPPS-TmX3B7Kt6H2PamzhbQuTM5NK1qozF859Mn5CIXOfcczPOrdxYyTiYhX_VdDS-Xw/s320/497844198.jpg" width="320" height="213" /></a></div><br />
இன்று நாளிதழ்களில் ஒருவிளம்பரம் வந்திருக்கிறது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்த விளம்பரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை இந்திய வரலாற்றில் எந்த கார்பரேட் நிறுவனமும் தன்னுடைய நிறுவனத்தை விமர்சிப்பவர்களை ''இந்திய விரோதிகள்'' என வசைபாடியதில்லை. ஆனால் பதஞ்சலியின் விளம்பரம் ''ANTI INDIAN'' என்று தங்களுடைய விமர்சகர்களை குறிப்பிடுகிறது.<br />
<br />
பாபா ராம்தேவின் இந்த பதஞ்சலி நிறுவனம் அன்னிய நாட்டு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேசத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதை இந்திய விரோத சக்திகள் தடுக்க நினைப்பதாகவும் அந்த விளம்பரம் குறிப்பிடுகிறது. அதாவது சுதேசி பொருட்கள் விற்பதையும், தரமான பொருட்களை குறைந்த விலைக்கு தருவதையும் தடுக்கவே பாபா ராம்தேவ் மீது குற்றங்களை சுமத்துகிறார்களாம்.<br />
<br />
ஒரு உள்ளூர் நிறுவனம் தரமான பொருட்களை விற்பதிலோ, அதை உள்நாட்டிலேயே தயாரிப்பதிலேயோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யாருமே அதை வாங்கிப்பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சாமியார் மீதும் அவருடைய செயல்பாடுகள் மீதும், அரசியல் நடவடிக்கைகள் மீதும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போதும்... அந்த விமர்சகர்களை இந்தியாவுக்கே எதிரிகளாக சித்தரிக்க முயல்வதுதான் இந்த யோகா வியாபாரிகளின் நோக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் வன ஆக்கிரமிப்பு சாமியார் ஒருவரைப்பற்றி தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்தபோதும் கூட இப்படித்தான் விமர்சிக்கிறவர்கள் தன்னை விமர்சிக்கிறவர்கள் எல்லோருமே ''இந்து மத எதிரிகள்'' என்கிற முத்திரை குத்த முற்பட்டனர்.<br />
<br />
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை FMCG சந்தையில் பெரிதாக வளர்ச்சிகளை எட்டிடாத பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்... பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் மளமளவென வளர்ச்சி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாபா ராம்தேவ் துறவி என்பதால், பினாமியாக ஆச்சார்யா பால்கிருஷ்ணா என்பவரை வைத்து இந்த கார்பரேட் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார். 2.5பில்லியன் டாலர் அளவுக்கு பதஞ்சலிக்கு சொத்து இருக்கிறது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் ராம்தேவ் இருக்கிறார்! எல்லாம் யோகா சொல்லிக்கொடுத்து கற்றுக்கொடுத்த பணம்தானாம்!<br />
<br />
சமீபத்தில் இந்த ஏழ்மையான நிறுவனத்திற்கு வருமானவரித்துறை வரிவிலக்கு அளித்து அறிவித்துள்ளது. அதாவது பதஞ்சலி ஒரு தொண்டு நிறுவனமாம்! மோடி அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இப்படி பதஞ்சலிக்கு சலுகைகளை வாரித்தருவது மோடி அரசுக்கு புதிதல்ல... இதற்கு முன்பும் இப்படி பல முறை இதே மாதிரியான வேலைகள் நடந்திருக்கிறது. ராணுவத்தையே பாபா ராம்தேவுக்காக மடக்கிய சம்பவமெல்லாம் உண்டு. பதஞ்சலி தன்னுடைய நிறுவனத்தின் மூலதனமாக தேசபக்தியை மாற்ற முனைகிறது. பதஞ்சலி ஊறுகாய் வாங்கினால் நீங்களும் தேசபக்தராகலாம் என்கிறது. அதற்குத்தேவையான ஊக்கத்தை வழங்க இந்திய அரசே பின்னுக்கு நிற்கிறது. <br />
<br />
ஒரு அரசே பின்னால் இருக்கிற ஆணவத்தில்தான் இந்த சாமியார்களால் மிக தைரியமாக தன் விமர்சகர்களை இந்திய விரோதிகளாக்க முடிகிறது. வனத்தை சூறையாடிக்கொண்டே பிரதமரை அழைத்து விழா நடத்தமுடிகிறது. ஏன் பாபா ராம்தேவ், ஜக்கி மாதிரியான சாமியார்களை பாஜக போற்றி வளர்க்கிறது? அவர்களுடைய குற்றங்களை புறந்தள்ளி பொருளாதார அளவில் வளப்படுத்துகிறது? என் கேள்விகளுக்கான விடைகள் மிக அவசியமானவை. <br />
<br />
பாஜக விரும்புகிற இந்து ராஜ்ஜியத்திற்கு சில கொள்கைகள் உண்டு. அதை நேரடியாக திணிப்பதை விடவும் இந்த சாமியார்களின் வழி யோகா, ஆயுர்வேதம், மண்ணின் மருத்துவம், ஆர்கானிக், சுதேசி, கோமிய மருத்துவம் என்கிற எண்ணங்களின் விளைவாக மக்களுடைய மனதில் எளிதில் பரவச்செய்ய முடியும். காரணம் மேலே சொன்ன விஷயங்களின் தொடர்ச்சிதான்... தேசபக்தி, பெண்ணடிமைத்தனம், பாலியல் கட்டுப்பாடுகள், கலாச்சரம் காப்பது, வேற்றுமத வெறுப்பு, ஒரினசேர்க்கையாளர்களை அழித்தல், புராணப்பெருமைகள், மாட்டிறைச்சி எதிர்ப்பு, மீட்பர் மோடி, சாதியப்பெருமை, மதவாதமே அல்டிமேட்... போன்ற விஷக்கருத்துகள் எல்லாம். <br />
<br />
பாஜக விரும்புகிற இந்த பரப்புரைகளை மக்களிடையே எளிதில் கொண்டு சேர்க்க இந்த சாமியார்களை விடவும் நல்ல சாட்டிலைட்டுகள் கிடைக்காது. அதனால்தான் இந்த சாமியார்களை தங்களுடைய துணை அமைச்சர்களைப் போல போற்றி வளர்க்கின்றன மோடியின் அரசு.<br />
<br />
பதஞ்சலி சாமியாருக்கு இப்படி பொருளாதார உதவிகள் என்றால்... யோகி ஆதித்யநாத் மாதிரியான கூலிப்படை தலைவன்களை இன்னொரு பக்கம் பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறது மோடி அரசு. ஒரு ஜாடையில் என்னைப்போலவே இருக்கிறார் என்பதைத்தாண்டி யோகி ஆதித்ய நாத்தை எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே நன்றாகத்தெரியும். அவருக்குதான் என்னைத்தெரியாது. உபியின் இந்த புது முதல்வரை பற்றிய விஷயங்கள் சிலவற்றை அறிந்து சில ஆண்டுகளுக்கு முன்பே வியந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு பல்வேறு விதமான சாதனைகளை இளம் வயதிலேயே செய்த அபாரமான ஆள் இந்த கொலைகார யோகியார்.<br />
<br />
விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கிறவர்கள், பெண்களை மயக்கி வேட்டையாடும் காமுகர்கள், அரசியல் ப்ரோக்கர்கள், கூலிப்படை வைத்து கொலை செய்கிறவர்கள் என மதங்களின் பெயரால் மக்களை முட்டாளாக்கும் சாமியார்களில் பல வெரைட்டிகள் உண்டு. அதில் இந்த யோகி ஆதித்யநாத் எனப்படுகிறவர் மதக்கலவர ஸ்பெஷலிஸ்ட். மிகக்குறைந்த வயதிலேயே 50க்கும் அதிகமான மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இஸ்லாமிய மக்களை கொன்றுகுவித்து இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சாதனை! அதிலும் இவர் சாதாரண குற்றங்களை கூட இஸ்லாமியர்களுக்ககு எதிரான மதக்கலவமாக மாற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து சூறையாடி எரிக்கிற அசகாயசூரர்.<br />
<br />
கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது கிரிமினல் பின்னணி உள்ள நட்சத்திர வேட்பாளார்கள் குறித்து புதியதலைமுறை வார இதழுக்காக ஒரு கட்டுரை செய்தோம். கிரிமினல் பின்னணி உள்ள எம்பிக்கள் குறித்து விபரங்கள் சேகரித்துக்கொண்டிருந்த போதுதான் யோகி ஆதித்யநாத்தை அறிந்துகொண்டேன்.<br />
<br />
அவரைப்பற்றிய விபரங்களை தேடி வாசிக்க வாசிக்க புல்லரிப்பாக இருந்தது. ரத்தக்கறை படிந்த அவருடைய வாழ்வின் பக்கங்கள் படிப்பவர்களுக்கு மதவெறியையும் அடக்குமுறையையும் அள்ளிவழங்கக்கூடிய அட்சயபாத்திரமாக இருந்தது. மிக இளம் வயதிலேயே தன் சகாக்களோடு இந்து மதத்தை காப்பதற்காக இஸ்லாமிய சுடுகாட்டில் புகுந்து கலவரம் பண்ணிய வீராதிவீரர் இவர். அந்த வழக்குதான் இந்த கலவர சாமியாயாருக்கு பேர்வாங்கித்தந்த மிகமுக்கியமான வழக்கு. அப்போதே அவர் எம்பிதான்! இதுவரை இவர் மீது 12க்கும் அதிகமான எஃப் ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சிபிசிஐடி போலீஸாரால் இப்போதும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த யோகியார்தான் இப்போது உபியின் முதல் அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்க இருக்கிறார். அவருக்குதான் மோடியார் முடிசூட்டவிருக்கிறார். கோரக்பூரின் தெருக்களில் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஒரு மதவெறியர்தான் இப்போது அதே மாநிலத்தின் முதலமைச்சர். ஒருபக்கம் சாமியார்கள் நம் எண்ணங்களை நோக்கங்களை வடிவமைத்து திட்டமிட.... இன்னொருபக்கம் கூலிப்படையினர் நம்மை ஆளத்தொடங்கி இருக்கிறார்கள். <br />
<br />
திகிலாக இருக்கிறது இல்லையா... மோடி கனவு காணும் புதிய இந்தியா இப்படித்தான் இருக்கப்போகிறது. நம்முடைய அடிப்படையான சுதந்திரம் பறிக்கப்பட்டு, அடிப்படைவாதத்தின் கொடுங்கரங்கள் நம்மை கட்டுப்படுத்தும். அதற்கான திட்டமிடல்தான் இவை எல்லாம்... <br />
<br />
இந்த மக்கள் விரோதிகளை அவர்களுடைய செயல்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பதஞ்சலியின் பாஜகவின் பக்தர்களின் பார்வையில் 'நீங்களும் இந்திய விரோதியே!'Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-74019638640271308862017-03-09T17:22:00.002+05:302017-03-09T17:22:25.211+05:30ஆணுக்குப் பெண் நிகரா?<br />
<br />
முன்பு வேலை பார்த்த அலுவலகம் ஒன்றில் மகளிர் தினத்தன்று பெண்கள் எல்லோரையும் ஒரே நிறத்தில் உடையணிந்து வர சொல்லி இருந்தார்கள். அப்படி ஒரு நாளில் அங்கே வேலைபார்த்த ஒரு ஆண் நண்பனும் (விபரம் தெரியாமல்) அதே நிறத்தில் உடையணிந்து வந்துவிட்டான். அதை அலுவலக ஆண்நண்பர்கள் கேலி பேச ஆரம்பித்தனர். அவனுமே கூட அந்த நிறத்தில் உடையணிந்து வந்ததை அவமானமாகக் கருதினான்.<br />
<br />
திரும்பத் திரும்ப எல்லோரிடமும் ''ச்சே தெரியாம போட்டுட்டு வந்துட்டேன் பாஸ்... மதியமா வீட்டுக்கு போய் மாத்திட்டு வந்திடலாமானு இருக்கு...'' என்று சொல்லிக்கொண்டே இருந்தான். இதில் என்ன அவமானம் வந்துவிட்டது என்று எல்லோருமே கேட்டாலும் அவன் விடாமல் சொல்லிகொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.<br />
<br />
அந்த நண்பனைப்போலவேதான் என்னைப்போன்ற பல ஆண்களும் பெண்களோடு தன்னை எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்தி சொல்வதை எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்புவதேயில்லை. அது அவமானப்படுத்துகிற ஒரு செயலாக எப்படியோ பொதுபுத்தியில் பதிந்துவிட்டது.<br />
<br />
இருபாலர் பள்ளிகளில் கூட பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை பையன்கள் யாருமே விரும்புவதில்லை. பத்தாம்வகுப்புத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டான் என்பதற்காக வருத்தமே படாத பள்ளி நண்பன் அவன். ''பக்கத்துவீட்டு பெண்ணை பார்த்தாச்சும் திருந்துடா அவ பாரு அவ்ளோ மார்க் எடுத்திருக்கா'' என்று தகப்பன் திட்டியதற்காக தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனான். அவனை பிணமாக கிடத்தி வைத்திருந்த அந்த நேரத்தில் ''என்ன இருந்தாலும் அவன் மானஸ்தன்டா'' என எங்கள் நண்பர்கள் எல்லாம் வியந்து பேசி இருக்கிறோம்.<br />
<br />
வீட்டில் பெண்களை காட்டி ''இவளை நான் ஆம்பளை மாதிரி வளர்த்திருக்கேன்'' என்று சொல்வதை பெருமையாக நினைக்கிற பெற்றோர்களில் யாருமே மகனைக்காட்டி ''இவனை நாங்க பொண்ணு மாதிரி வளர்த்திருக்கோம்'' எனச்சொல்வதில்லை. நம்முடைய குழந்தை வளர்ப்பே அந்த லெவலில்தான் இருக்கிறது. தன் மகள் அப்பாவின் அண்ணன்களின் கணவனின் சட்டைகளை அணிந்துகொள்வதை எப்போதும் தாழ்வாக நினைக்காத நாம்தான், அதே பையன்கள் அக்காவின், அம்மாவின் உடைகளை அணிவதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.<br />
<br />
இங்கே எங்கும் எப்போதும் ஆண்களை பெண்களோடு ஒப்பிட்டுவிடகூடாது. பெண்கள் செய்கிற செயல்களை ஆண்கள் செய்துவிடக்கூடாது. அது வீட்டுவேலைகளாக இருந்தாலும் சரி... கதை கவிதை எழுதுவதாக இருந்தாலும் சரி.<br />
<br />
அறிவியக்கமாகவே இருந்தாலும் இங்கே ஒரு ஆண் எழுத்தாளரின் படைப்புகளை இன்னொரு பெண் எழுத்தாளரின் படைப்புகளோடு ஒப்பிட்டு பேசி எங்குமே பார்க்க முடியாது. சினிமாவிலும் கூட அதே நிலைதான். நயன்தாராவின் நடிப்பை கமலஹாசனோடு தனுஷோடு ஒப்பிடமாட்டோம். த்ரிஷாவோடும் அனுஷ்காவோடும்தான் போட்டி! ஹாலிவுட் வரைக்கும்கூட இதே பாணிதான். எப்போதுமே துறை ஒன்றாகவே இருந்தாலும் ஆணுடைய திறமை வேறு... பெண்ணுடைய திறமை வேறுதான். காரணம் பெண்கள் வலிமையற்றவர்கள், அறிவற்றவர்கள், அரசியல் தெரியாதவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் ஆணை அண்டி பிழைப்பவர்கள் என்பது நமக்குத் திரும்ப திரும்ப போதிக்கப்படுகிறது.<br />
<br />
எந்த ஆணும் தன்னை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுக்கொள்ளவோ அவரோடு போட்டிபோடவோ விரும்புவதில்லை. அப்படி நடக்கிற பட்சத்தில் அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே விரும்புகிறான். அல்லது அந்த பெண் தன்னை மீறி வளரும் போது அவளுடைய திறமைக்கு வெளியே அவளுக்கு எதுவெல்லாம் சாதகமாக இருந்தது என்கிற தேடலில் முழ்கிப்போகிறான். சொல்லப்போனால் பெண்களே கூட தன்னை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுக்கொள்வதை விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் ஆண்களோடுதான் போட்டிபோட விரும்புகிறார்கள். ஆண்களைத்தான் உண்மையான போட்டியாளர்களாக கருதுகிறார்கள்.<br />
<br />
இங்கே எல்லா ஆண்களுக்கும் பெண்களோடு வாழவேண்டும். அதுவும் மனைவியோடு ரகசியமாக மல்ட்டிபிள் தோழிகளும் என்றால் சுகானுபவம்தான். ஆனால் எந்த ஆணும் பெண்களைப்போல வாழவிரும்புவதில்லை. அவன் பெண்ணியவாதிகளை கூட ஏற்றுக்கொள்வான். அவர்களை நன்றாக ஊக்கப்படுத்துவான். ஆனால் எல்லாமே தன்னை விலக்கிக்கொண்டுதான். அது எல்லாமே நிபந்தனைகளுகுட்பட்டது. தன் குடும்பத்தினருக்கும் காதலிக்கும் அப்பாற்ப்பட்டது.<br />
<br />
அதனால்தான் அவனால் ஒரே நேரத்தில் ஆல்பர்பஸ் அங்கிளாக மாறி ''நைஸ் தோழி'' கமென்டுகளையும் போட முடிகிறது. இன்னொரு பக்கம் மகளிர் தின வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இதற்கு நடுவே ஸ்கான்டல் வீடியோ ஏதாவது வந்திருக்கிறதா என தேடலுடன், இன்பாக்ஸில் ''இன்னைக்கு என்ன ட்ரெஸ் போட்டிருக்கீங்க'' மாதிரியான சாட்டிங் தொல்லைகளையும் தொடரமுடிகிறது.<br />
<br />
பெண் என்பவள் ஆடு,மாடுபோல வேறொரு ஜீவராசி அல்ல... அவளும் என்னைப்போலவே ஒரு சக உயிர் என்று பார்க்கிற ஒருவனால் மட்டும்தான் அந்த ஜீவனோடு தன்னை ஒப்பிட்டுக்கொள்வது சாத்தியமாகும். ஆனால் அதை சாத்தியமாக்குவது ஆணுக்கு மாத்திரமே சாத்தியமல்ல. காரணம் ஆணின் ஒவ்வொரு அணுவிலும் ஆணாதிக்க மனோபாவம் பல்லாயிரம் ஆண்டுகளாக சேமிக்கப்பட்டிருக்கிறது. அதை மீறுவதென்பதோ அதற்கெதிராக செயல்படுவதென்பதோ அத்தனை சுலபமல்ல. வெவ்வேறு அரசியல் அழுத்தங்களால்தான் அவன் அதிலிருந்து மீளவும் பெண்ணை சரிசமமாக நடத்துகிற மனோபாவத்திற்கு நகரவும் முயல்கிறான். அதோடு இந்த நகர்தலும் கூட பெண்ணின் துணையின்றி சாத்தியமும் அல்ல. அப்படிப்பட்ட பெண்களால்தான் நானும் என்னை ஆணாதிக்கத்தின் அழுத்தங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்.<br />
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-41018435042183971922017-02-27T17:09:00.000+05:302017-02-27T17:09:05.847+05:30எழுத்தாளர் முனிராஜின் S பட்டன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzyISvmaeKiahAH0Hh-jQbPkCM8dt5JyPJrkz54P_LagGJ7euM1Jl453GoqhOqKBhmPTWT7zQFXTpofsiy5VyJLd4a5877xR9JZJ_oY_MzmlAXl6pS2UH47kV5HCZuKdg_d7Qro40dPYo/s1600/p325a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzyISvmaeKiahAH0Hh-jQbPkCM8dt5JyPJrkz54P_LagGJ7euM1Jl453GoqhOqKBhmPTWT7zQFXTpofsiy5VyJLd4a5877xR9JZJ_oY_MzmlAXl6pS2UH47kV5HCZuKdg_d7Qro40dPYo/s320/p325a.jpg" width="220" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின் எழுத்துக்களில் சற்றே தூக்கலாக விஞ்ஞானம் விளையாடும். முனிராஜ் மீதான பிரியத்தில், எத்தனையோ நாட்கள் யார் யாருடனோ விவாதித்து, சண்டை போட்டிருக்</div>
<div style="text-align: justify;">
கிறேன். குறிப்பாக, எங்களுடைய முக்கிய எதிரிகளான எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகர்களோடு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுஜாதா ரசிகர்களும் நாங்களும் பல இடங்களில் மோதிக்கொண்டாலும், எங்களுடைய மெயின் கோதா... தெருமுனை ஸ்டார் சலூன்தான். அங்குதான் அத்தனை வார - மாத இதழ்களும் குவிந்துகிடக்கும். சலூன் கடை அண்ணன், முனிராஜின் வெறியர். அதனாலேயே எங்கள் குழுவின் எல்லா போர்களுக்கும் அவரே தளபதியாக முன்நின்று போரிடுவார். அவருடைய தம்பிக்கோ சுஜாதாவைத்தான் பிடிக்கும் என்பதால், சுஜாதாயிஸ்ட்களும் அங்கே வந்து உரிமையோடு உட்கார்ந்திருப்பார்கள். சுஜாதாவின் கதைகளில் குறைகள் கண்டுபிடித்து நாங்களும், முனிராஜ் கதைகளின் சிக்கல்களை அவர்களும்... மாறி மாறி விவாதிக்க... சலூன் கடை விவாதம் குருக்ஷேத்திரம் ஆகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்களைப்போலவே சுஜாதாவுக்கும் முனிராஜுக்கும் நடுவிலும்கூட அறிவிக்கப்படாத ஒரு போட்டி இருப்பதாக நாங்களாகவே நம்பினோம். பேட்டி ஒன்றில் முனிராஜிடம்… </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`சுஜாதாவின் வாரிசு நீங்கள்தான் என்று சொல்கிறார்களே?’’ என்று ஒரு நிருபர் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முனிராஜைக் கோபப்படுத்தவே கேட்கப்பட்ட கேள்வி அது. ஆனால் முனிராஜ் சாந்தமாகப் பதில் சொன்னார்... ``அவர் கமல், நான் ரஜினி. ஒரே வானில் பறக்கும் இரண்டு சாட்டிலைட்கள். ஆனால், வெவ்வேறு வேலைகளுக்காக...’’ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுஜாதா தன் வாழ்நாளில் முனிராஜ் பற்றி ஒரு சொல்கூட எழுதியதும் இல்லை; சொன்னதும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முனிராஜ் எப்போதுமே மிகவும் குறைவாகவே பேசுகிறவராகவும் எளிமையானவராகவும், தன் பிரபலத்தைப் பயன்படுத்தி காரியங்கள் சாதிக்காதவராக, ஏழை எளிய வாசகர்களுக்கு நிறைய உதவிகள் செய்பவராகவே முன்னிறுத்தப்பட்டார். இதை எல்லாம் அவர் விளம்பரத்துக்காகச் செய்கிறார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவர் அவை பற்றி கவலைப்பட மாட்டார். அவருக்கு யார் வாசகர் கடிதங்கள் அனுப்பினாலும் தவறாமல் பதில் அனுப்புவார்... திட்டி எழுதினாலும்கூட. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``முனிராஜோட பலமே நம்மளை மாதிரி சாதாரண வாசகர்கள் வார்த்தைகளை மதிக்கிற, அவங்க மேல அவர் வெச்சிருக்கிற மரியாதைதான்டா. அதுக்குக் காரணம் அவர் வாழ்க்கைடா’’ என்பார் சலூன் கடை அண்ணன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடக்கத்தில் முனிராஜ், கோவையில் வாழும் சாதாரண வாசகராகத்தான் இருந்தார். பண்ணையில் விவசாயக்கூலி வேலைபார்த்த ஒருவருடைய குடிசையில் பிறந்து முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் சென்றவர். படிப்படியாக முன்னேறி எழுத்தாளரான அவருடைய வாழ்க்கைக் கதை, வெளியாகாத பத்திரிகைகளே இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுதத் தொடங்கிய காலத்தில், சம்பத்குமார் என்கிற தன் நிஜப்பெயரில் எப்போதாவது சிறு பத்திரிகைகளுக்கு விமர்சனக் கடிதங்கள் போடுவார். ஜெயகாந்தன் எழுத்துலகின் ராஜாவாக ஆட்சிசெய்த காலகட்டத்தில் முனிராஜ் ‘எழுத்தாணி முனை’ என்ற சிறுபத்திரிகையில் சின்னச்சின்ன விஷயங்கள்கொண்ட பத்தி ஒன்றை எழுத ஆரம்பித்திருந்தார். கணையாழியில், சுஜாதா தன் ஒரிஜினல் பெயரைக் கொஞ்சம் மாற்றி ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் அப்போதுதான் கடைசிப் பக்கங்கள் ஆரம்பித்திருந்தார். கிட்டத்தட்ட அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு முனிராஜ், சாதா சம்பத்குமாராகத்தான் இருந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
90-களில்தான் தொடங்கியது முனிராஜின் வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் கதைகள் எழுதவே தொடங்கினார். சம்பத்குமார் ‘முனிராஜ்’ ஆனார் (குலசாமி முனியப்பன் + மனைவி ராஜலட்சுமி). அவருடைய கதைகள் அடுத்தடுத்து பல பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு களம். கதைகளில் பெரிய தத்துவ விசாரணைகள் இருக்காது. ஹாலிவுட் சினிமா பாணியில் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், எதை எழுதினாலும் அவர் நம்புகிற அரசியலைத் தெளித்திருப்பார். போகிறபோக்கில் இலக்கிய நூல்களை அரசியல் எழுத்துக்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``பிஹெச்.டி படிச்ச ஒருத்தன் ஒண்ணாங்கிளாஸ் பையனுக்குப் பாடம் எடுக்க வந்தான்னா எப்படி இருக்குமோ, அப்படிப்பட்டது முனிராஜ் ரைட்டிங்’’ என்று இலக்கியவட்டத்தில் பேசிக்கொள்வார்கள். முனிராஜ் தன் கதைகளில் பொட்டில் அறைவதுபோல் பொளேர் என்று ஒரு முடிவை வைத்திருப்பார். யாருமே கணிக்கவே முடியாத ஒன்றாக அது இருக்கும். அதனாலேயே அவரை ஓ.ஹென்றியோடு ஒப்பிட்டு விமர்சிப்பார்கள். ‘க்ளைமாக்ஸ் கிங்’ என்ற பட்டப்பெயர்கூட இருந்தது. கோடம்பாக்கத்துக்கான நுழைவு வாயிலை அந்தப் பட்டப்பெயர்தான் திறந்துவிட்டது. 90-களின் கடைசியில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்கள் அத்தனை பேரும், க்ளைமாக்ஸுக்காக அவரை விரட்ட ஆரம்பித்தனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பக்கம் அவர் வளர்ந்துவந்தபோதும், இப்படி நல்ல கதைகளையும் சிறந்த முடிவுகளையும் எழுதுவது அவர் இல்லை என்ற பேச்சு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. அவருக்கு இந்தக் கதைகளைத் தருவது, அவருடைய கணினிதான் என தமிழ்நாடு முழுக்கவே ஒரு வதந்தி எப்போதும் நிலைத்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஜெயசூர்யா சிக்ஸரும் ஃபோருமாக விளாசிக்கொண்டிருந்தபோது `அவருடைய பேட்டில் ஸ்ப்ரிங் வைத்திருக்கிறார், பேட்டின் மேல் மர்ம ரசாயனம் பூசுகிறார்’ என்று எல்லாம் வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன. அதற்கு இணையான வதந்திகள் முனிராஜ் குறித்தும் தொடர்ந்து பரவியது அல்லது பரப்பப்பட்டது. ஜெயசூர்யாவுக்கு பேட் மாதிரி முனிராஜுக்கு கணினி. பத்திரிகைகளில் வருகிற அவருடைய புகைப்படங்கள் அனைத்திலும் அவரோடு தவறாமல் இடம்பிடித்திருக்கும் அந்தக் கணினி. எல்லா படங்களிலும் ஒரே கணினிதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுஜாதா தன் ஒரு கதையில் கதை எழுதும் கணினியை உருவாக்கியிருப்பார். முனிராஜிடம் அதுபோன்று ஒன்று இருக்கிறது என்று நம்பினார்கள். இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் கணினியே வேண்டியபடி த்ரில்லரோ, ஹாரரோ, ரொமான்ஸோ வேண்டிய ஜானரில் கதையை சிறப்பாக எழுதித்தந்துவிடும் என்று அவருடைய வாசகர்கள்கூட நினைத்தனர். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். முனிராஜின் கணினி குறித்த கதைகள் எல்லாம் அமானுஷ்யத்தன்மையோடு, கைகால் முளைத்து வாசகர்கள் அத்தனை பேரிடமும் எப்படியோ நிலைபெற்றது. முனிராஜிடம் இதைப் பற்றி ஒருமுறை டி.வி பேட்டியில் கேட்டபோது, ‘இன்ட்ரஸ்ட்டிங்’ என்று கண்கள் சிமிட்டினார்... அவ்வளவுதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் தன் கதைகளை கணினியில் எழுதுகிறார் என்று முதன்முதலாக வெளிவந்த கிசுகிசு செய்தியே எங்களுக்குப் புல்லரிப்பாக, ஓர் அறிவியல் புனைக்கதைபோல் இருந்தது. கணினி என்பது கணக்கு போட மட்டும்தான் என நம்பிக்கொண்டிருந்த காலம். முனிராஜைப் பார்த்துதான் சுஜாதா கம்ப்யூட்டரில் ஆர்வம் வந்து அதைப் பற்றி படித்தார் என்று நாங்களும், சுஜாதாவைக் காப்பி அடித்துதான் முனிராஜ் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டார் என்று அவர்களும் எந்நேரமும் சண்டையிடுவோம். ஆனால், எனக்கு நன்றாகத் தெரியும் சுஜாதாதான் இதில் மூத்தவர் என்பது... இருந்தும் விட்டுக்கொடுக்க மாட்டோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு அணிகளிலும் தலா ஐந்து சின்ன சுஜாதாக்களும், ஐந்து மினி முனிராஜ்களும் இருந்தோம். எங்கள் அணியிலேயே ‘கிட்டத்தட்ட முனிராஜ்’ நான்தான். அவரைப் போலவே உருவத்திலும், ஏதோ கொஞ்சம் எழுத்திலும். அவரைப் போலவே சதுரமான ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்துகொள்வேன். இடதுபுறமாகத் தலைவாரிக்கொள்வேன். முனிராஜுக்காக கம்ப்யூட்டர் க்ளாஸுக்குப் போய் எம்எஸ்-தாஸ், பேசிக், ஃபோர்ட்ரான் எல்லாம் படித்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐ.ஏ.எஸ் கோச்சிங் பெறுவதற்காக சென்னை வந்த பிறகு, முனிராஜ் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த ஏரியாவிலேயே நானும் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். அது யதேச்சையானது அல்ல. நான் எழுதிய கதைகளை அவரிடம் கொடுத்து பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பது என் கனவு. அவருடைய வீட்டு வாசல் வரை செல்வேன். ஏதோ தயக்கமாக இருக்கும். போக மாட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருநாள் தைரியம் வந்தவனாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். முனிராஜ் போலவே தலை வாரி, அவரைப்போலவே உடை அணிந்து, வீட்டு முன் நின்றேன். முனிராஜ்தான் கதவைத் திறந்தார். எப்போதும் டிப்டாப்பாக மட்டுமே பார்த்து வியந்த ஆளுமை, லுங்கியோடு நின்றுகொண்டிருக்க, எனக்குச் சிரிப்பு வந்தது. அவருக்கும் என்னுடைய வேஷத்தைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கும். புன்னகையை அப்படியே மென்று முழுங்கினார். ``என்ன வேணும்?’’ என்று கேட்டார். விவரம் சொன்னேன். உள்ளே அழைத்து உட்காரவைத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் எழுதுகிற அறை அது. என்னை அங்கே காத்திருக்கச் சொல்லிவிட்டு, எங்கோ சென்றுவிட்டார். என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புகளும் இருந்தன. அப்படியே பார்த்துக்கொண்டே வர, ஒரு திரைச்சீலைக்குப் பின்னால், ஓர் ஓரமாக அந்தக் கணினி இருந்தது. ஒரு பூதம் கைகால்களை மடக்கி அமர்ந்திருப்பதைப் போலவே அது இருந்தது. எத்தனை எத்தனை கதைகளை, முதன்முதலாக வாசித்த கணினி. அதன் கீபோர்டைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என விநோதமான ஆசை எழுந்தது. ஆனால், அதன் அருகில் செல்லவும் அச்சமாக இருந்தது. தைரியம் வந்தவனாக அந்தக் கணினிக்கு அருகில் சென்றேன். கீபோர்டில் ‘S’ என்ற எழுத்து மட்டும் அதிகமாகத் தேய்ந்திருந்தது. முனிராஜ் தன் நாயகிகளுக்கு ‘S’ என்ற முதல் எழுத்தில்தான் எப்போதும் பெயர்வைப்பார். செல்வி, ஸ்டெல்லாவில் தொடங்கி செண்பகவள்ளி வரை. அவருடைய முதல் காதலியின் பெயர்கூட சரோஜா அல்லது சந்திரா... இப்படி எதுவோ ‘S’-ல்தான் ஆரம்பிக்கும். திரைச்சீலையைத் தாண்டி நின்றுகொண்டி ருந்தேன். எதிரில் கணினி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு முன்னால் இருக்கிற இந்தக் கணினிக்குள்தான் ஏதோ ரகசியம் இருக்கிறது. இதை வைத்துதான் ஏதோ மாயாஜாலம் பண்ணுகிறார். ஒருவேளை முழுக்கதையைக் கொடுத்துவிட்டால், உலகின் மிகச்சிறந்த க்ளைமாக்ஸைக் கொடுக்கிற மென்பொருள் உள்ளே இருக்குமோ… இதுவரை உலகில் யார் யாரோ எழுதிய, அத்தனை கதைகளையும் உள்ளே தொகுத்து, அதன் வழியே தானாகவே கதைகளை உருவாக்கும் இன்ஜின் வைத்திருப்பாரோ... நாய்க்குட்டிபோல அமைதியாக நிமிர்ந்து, அமர்ந்திருந்த கணினியின் தலையைச் செல்லமாகத் தடவ கையை நீட்டினேன். </div>
<div style="text-align: justify;">
‘`அங்கே என்ன பண்றீங்க?’’ என்ற முனிராஜின் குரல் ஒரு புல்லட்டைப்போல மூளையைத் தாக்கியது. பிலுக்கென்று கையை உள்ளே இழுத்துக்கொண்டேன். கையில் இரண்டு கோப்பை காபியோடு நின்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`சார் நிறைய வாசிப்பீங்களா?’’ என்று அப்பாவியாகக் கேட்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`ஆயிரம் பக்கங்கள் வாசிச்சாத்தான், அஞ்சு பக்கங்கள் எழுத முடியும் குமார்’’ என்று கம்பீரமாகச் சொன்னார். அவருடைய தீவிர வாசகன் என்பதையும், அவருடைய சிறந்த கதைகளை நான் வாசித்த கதைகளையும் கொட்டினேன். அன்பாகக் கேட்டுக்கொண்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் என் கதைகள், கவிதைகளை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியவர். சில இடங்களில நிறுத்தி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு படிக்க ஆரம்பித்தார். முகத்தில் சன்னமாகப் புன்னகை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`நீங்க கல்யாண்ஜி, பசுவய்யா, பிரமிள், நகுலன் கவிதைகள்லாம் படிச்சிருக்கீங்களா?’’ எனக் கேட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`நான் வாழ்க்கையில உங்க எழுத்துக்கள் மட்டும்தான் சார் படிச்சிருக்கேன், சுஜாதாவோட கதைகள்கூடப் படிக்க மாட்டேன்’’ என்று பெருமையோடு பொய் சொன்னேன். அந்த அறையில் சின்னதாகப் பூகம்பம் வருகிற மாதிரி சிரித்தார். முதல் சந்திப்பிலேயே என்னை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது என்பதை அவருடைய பார்வையில் கண்டுகொண்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
`‘நான் வெறும் வாட்ச்மேன்தான்ப்பா… இலக்கியத்துக்கு உள்ளே முதல்ல போங்க ஏகப்பட்ட கருணாமூர்த்திகள் இருக்காங்க, அவங்க கத்துக்கொடுப்பாங்க’’ என்று ஆசி கூறி அனுப்பிவைத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``அவங்கள்லாம் வேண்டாம் சார், நீங்க சொல்லிக்குடுங்க’’ என்றேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்குப் பிறகு அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி மட்டும் இருப்பார். அந்த அம்மாவுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் மளிகை சாமான் வாங்குவது, பிளம்பரை அழைத்து வருவது, வீட்டைச் சுத்தமாக்குவது மாதிரி வேலைகளுக்கு என்னைதான் அனுப்புவார். சாப்பாடு போடுவார். எனக்கு அவருடைய மகன் சாயல் எனச் சொல்வார். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நான் எழுதிய கதைகளை முனிராஜிடம் கொண்டுபோய் காட்டுவேன். அவர் புரட்டிப்பார்த்துவிட்டு… ``நீ ஏன் என்னை மாதிரியே எழுதணும். உன்னை மாதிரி எழுது. எதுக்காக நீ என்னை மாதிரியே கண்ணாடியும் முடியும் வெச்சிருக்க? அதை மாத்து. உனக்கு நல்லா எழுத வருது. இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும். அவ்வளவுதான். புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி இவங்க எழுத்துக்களைப் படி. தினமும் பேப்பர் படி’’ என்று அறிவுரை கொடுப்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரோடு அமர்ந்து சாப்பிடும்போதுகூட, ‘`ஜெயமோகனோட காடு நாவல் வாசிச்சு பாரு. நான் தர்றேன். அவ்ளோ பிரமாதமா இருக்கும்’’ எனச் சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுவார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப் போக ஆரம்பித்தார். கடற்கரையில் அலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். சுண்டக்கஞ்சி சாப்பிட்டுவிட்டு மணலில் தூங்குவார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் சொன்ன கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து வாசிப்பேன். வாசித்து முடித்ததும் நான் தயாராகிவிட்டதாக நினைத்து அவரிடம் ஓடிப்போய்ச் சொல்வேன். அவர் இன்னொரு பட்டியல் சொல்வார். இந்த மனிதரை இம்ப்ரஸ் பண்ணுகிற மாதிரி ஒரு கதை எழுதிவிட வேண்டும் என வெறிவரும். ராஜலட்சுமி அம்மா ஆறுதலாகப் பேசுவார். ‘`அவர்தான் சொல்றார்ல... அதை எல்லாம் படியேன்டா’’ என்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`சார் க்ளைமாக்ஸ்ல எப்படி சார் அந்த மாதிரி ஒரு ட்விஸ்ட்டை உங்களால வைக்க முடியுது. அதைச் சொல்லிக்குடுங்களேன். நானும் எவ்வளவோ ட்ரைபண்றேன்’’ என்று கேட்பேன். அவர் சிரிப்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`புதுமைப்பித்தனோட `காஞ்சனை’ கதை படி...’’ என்று அனுப்பிவைப்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருமுறையாவது அவர் எழுதுவதை அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அவர் அனுமதிக்க மாட்டார். அவர் எழுதும்போது அறை உள்பக்கமாகத் தாழிட்டிருக்கும். மனைவிகூட தொந்தரவு செய்ய முடியாது. முனிராஜ் கதைகளைத் தட்டச்சுவதை ஒருமுறைகூட ராஜலட்சுமி அம்மா பார்த்தது இல்லையாம். ஆச்சர்யமாக இருந்தது. எங்கு சென்றாலும் அழைத்துச் செல்பவர் எழுதும்போது கிளம்பச் சொல்லிவிடுவார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லோரும் சொல்வதுபோல அந்தக் கணினியில்தான் ஏதோ சூதுவைத்திருப்பாரோ என்று சந்தேகம் வரும். எப்படி இவரால் இதுமாதிரி யோசிக்க முடிகிறது... எங்கிருந்து கிடைக்கிறது இத்தனை கற்பனை? அறிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதும் அதிகரிக்கும். அவர் இல்லாத சமயத்தில் கணினியைத் திறந்துபார்த்துவிடாலம் என்று நினைப்பேன். ஆனால், செய்ய மாட்டேன். சிக்கினால், இனி எப்போதும் இந்த வீட்டுக்குள் நுழையவே முடியாது. கீபோர்டில் தேய்ந்துபோன அந்த ‘S’ எழுத்தைப் பார்க்கும்போது எல்லாம், `அதைப் போட்டு ஏன் தேய்த்திருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு கடப்பேன். ஒருவேளை இந்த பட்டனைத் தொடர்ந்து தட்டினால் அலாவுதீனின் பூதம் வருமோ!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``சார் இந்த கம்ப்யூட்டரை எத்தனை வருஷமா வெச்சிருக்கீங்க?’’ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யோசிப்பார்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``இது எனக்கு கிஃப்ட்டா வந்துது. பத்து வருஷம் இருக்கும் குமார். அப்பப்ப நானே அப்டேட் பண்ணிப்பேன்’’ என்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`இதுலதான் உங்க கதைகளை எல்லாம் வெச்சிருக்கீங்களா?’’ என்று கேட்பேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``உன்னை தி.ஜா-வோட `அம்மா வந்தாள்’ படிக்கச் சொன்னேனே என்னாச்சு?’’ என்று கேட்பார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் கிளம்பிவிடுவேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`சார்... நீங்க கதை எழுதும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்’’ என்று ஒருமுறை அவரிடமே கேட்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``அதெல்லாம் அப்புறம், முதல்ல டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி எழுத்துக்களை எல்லாம் படி, மாப்பசான் சிறுகதைகள் படி’’ என்று எப்போதும்போலவே அனுப்பிவைத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘அதைப் படிக்கிறதுக்கும் நீ கதை எழுதுறதைப் பக்கத்துல நின்னு பார்க்குறதுக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என எனக்குள் கடுப்பாக இருக்கும். புத்தக அடுக்குகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அவர் எழுதும்போது பார்க்கலாமா என்று திட்டம்போடுவேன். நாள்பட எனக்கு கணினியின் ரகசியம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வெறியாக மாறத் தொடங்கியிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் ஐ.ஏ.எஸ் ப்ரிலிம்ஸில் தோற்றுப்போன ஒருநாளில், முனிராஜ் மாரடைப்பில் இறந்துபோனார். அறைக்குள் எதையோ எழுதிக்கொண்டிருந்தபோது அல்லது எழுத நினைத்து அமர்ந்தபோது மாரடைப்பு வந்திருக்கிறது. எழுந்துபோய் அவரால் கதவைத் திறக்க முடியவில்லை. அறைக் கதவை உடைத்துத் திறந்தபோது… அவர் இறந்துபோய் சில மணி நேரமாகியிருந்தது. அவருடைய தலை கீபோர்டில் சரிந்துகிடந்தது. இடது ஆட்காட்டி விரல் மட்டும் ‘S’ எழுத்தின் மேல் அழுந்தியிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராஜலட்சுமி அம்மாவுக்குக் குற்றவுணர்ச்சி. கதவைத் திறந்துவெச்சிருந்தா காப்பாத்திருப்பேனே... தாங்க முடியவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லி அருகிலேயே இருந்தேன். நான் நான்கு நாட்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் பைத்தியம் பிடித்துத் திரிந்தேன். முனிராஜ் இல்லாத உலகத்தைக் கற்பனைசெய்யக்கூட மனம் இல்லை. என் காதலி செத்துப்போயிருந்தால்கூட அப்படி அழுதிருக்க மாட்டேன். யாரோ ஒரு மனிதனின் சில ஆயிரம் சொற்கள் அப்படி அழவைத்தன. அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதிச் சடங்குக்கு வந்து குவிந்தனர். ராஜலட்சுமி அம்மா, வீட்டைக் காலி பண்ணி விட்டு மகனுடன் போகப்போவதாகச் சொன்னார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`அம்மா இந்த கம்ப்யூட்டரை நான் எடுத்துக்கவா?’’ - தயக்கமாகக் கேட்டேன். அம்மா என்னை ஏற - இறங்கப் பார்த்தார். அவருக்கு என்மீது பரிதாபம் வந்திருக்கும்போல. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`நீ எடுத்துட்டுப் போடா’’ என்று மட்டும் சற்றே சத்தமாகச் சொன்னார் அம்மா. அன்று அவரது கருவிழிகள் அகன்றிருந்ததை முதன்முறையாகப் பார்த்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்து ஆண்டுகளாக எப்படி ஒரு மனிதனால் ஒரே கணினியை வைத்திருக்க முடிந்தது, ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்... இப்படி பல கேள்விகள் அந்தக் கணினியைக் கடக்கும்போது எல்லாம் எழும். அதைப் பார்க்கும்போது எல்லாம், உயிருள்ள ஒரு மனிதன் அல்லது கதைசொல்லி அமர்ந்திருப்பதைப்போலவே இருக்கும். அது லேசாக அசைவதாகக்கூடத் தோன்றும். இப்போது நான் அந்தக் கணினியோடு என் அறைக்கு வந்துவிட்டிருந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்றைய இரவு... அந்தக் கணினியையே உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முனிராஜின் மாயக்கண்ணாடி, அற்புதவிளக்கு, கற்பக விருட்சம் இப்போது எனக்கு எதிரே இருக்கிறது. இதைத் திறந்தால் முனிராஜுக்கு வாய்த்த பொக்கிஷங்கள் எனக்கும் வாய்க்குமா? கணினியை ஆன் பண்ண யத்தனித்து எழ... மின்சாரம் தடைபட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறைக்குள் இருள் சூழ்ந்துகொண்டது. மெழுகுவத்தியைத் தேட மனமின்றி, நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு நெருக்கமான மரணத்துக்குப் பிறகு சந்திக்கிற முதல் இருளுக்கு சிநேக மனோபாவம் உண்டு. அது அடர்த்தியான துயரத்தையும் தனக்குள் கரைத்துக்கொள்ளும். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். அறையின் மூலையில் இருந்தது கணினி. நாற்காலியில் அமர்ந்திருக்கும் வெந்நிற மனிதனைப்போலவே இருந்தது. அது லேசாகக் காற்றில் அசைவதைப்போல இருந்தது. அதன் அசைவைப் பார்த்தபடியிருந்தேன். முனிராஜின் கதைகளும் அவருடைய சொற்</div>
<div style="text-align: justify;">
களும் குவியலாக மூளைக்குள் சிதறிக்கொண்டிருந்தன. யாருமற்ற தெருவில் ஒலிக்கும் ஒரு சைக்கிள் மணி ஓசை கேட்டது. இனி அந்த நபர் இல்லாத உலகத்தில் வாழ்ப்போகிறோம் என்ற எண்ணம் அச்சுறுத்தியது. அழத் தொடங்கினேன். திடீரென விழிப்பு வந்தவனாக இருளில் இருந்து விலக முயன்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் இருட்டில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைத்தேன். இப்போது கணினியின் நிழல் ஒரு மனித உருவம்போலவே பிரமாண்டமாக எழுந்து நின்றது. நிழல் காற்றில் சலசலத்து ஆடியது. யாரோ ஒரு மனிதன் அறையின் மூலையில் அமர்ந்தபடி என்னையே பார்ப்பதுபோல இருந்தது. மின்னுகிற ஒளியோடு இரண்டு கண்கள் என்னை கூர்மையாக... முனிராஜின் குரல்கூட கேட்டது. நான் அச்சத்தில் அறையைவிட்டு வெளியேற நினைத்தேன். ஏதோ என்னைத் தடுத்து நிறுத்துவதைப்போல் இருந்தது. மிகமிக சிறியதாக அந்தக் குரல் கேட்க ஆரம்பித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`டேய்... வண்ணநிலவனோட `எஸ்தர்’னு ஒரு கதைடா. உடைச்சுப்போட்டுடும். தேவிபாரதி யோட `பலி’னு ஒரு கதை, பாதசாரியோட `காசி’ படிடா, உயிரை உடைச்சுடும்’’ - மெதுவாக அந்த ஒலி அதிகரிக்க ஆரம்பித்தது. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கண்களை இறுக மூடிக்கொண்டேன். இரவு எல்லாம் அந்த ஒலி காதுக்குள் ரீங்காரமிட்டபடியே இருந்தது. தற்கொலை செய்துகொண்ட லைப்ரரியன் தூக்கத்தில் உளறுவதைப்போல், புத்தக கம்பெனி ஒன்றின் கேட்லாக்கை, குழந்தை ஒன்று மூச்சுவிடாமல் படிப்பதைப்போல அந்த ஒலிகள் காதுக்குள் ரீங்காரமிட்டதன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடிந்ததும் முதல் வேலையாக அந்த கணினியைக் கொண்டுபோய் எங்கேயாவது அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துவிட தீர்மானித்தேன். மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் இரவு எல்லாம் உறக்கம் இல்லாமல் தரையிலேயே புரண்டபடியிருந்தேன். விடியும்</div>
<div style="text-align: justify;">
போது உடல் தொப்பலாக நனைந்திருந்தது. மூலையில் கணினி புத்தரைப்போல அமர்ந்திருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலையில்தான் அந்த யோசனை வந்தது. கணினியை ஆன்செய்து பார்க்க முடிவெடுத்தேன். பாஸ்வேர்டு... யாரிடம் போய் கேட்பது. பாஸ்வேர்டை உடைத்து உள்ளே செல்லும் வழி எல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு படித்த நண்பன் கிருஷ்ணகுமாரை அழைத்து வந்தேன். அவனிடம் இரவு நடந்த ஆவித் தொந்தரவுகளைப் பற்றி சொன்னேன். கலகலவெனச் சிரித்தான். அவன் சுஜாதா ரசிகன்… </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``இன்னும் நீ அந்த முனிராஜை விடலையா ஃபன்னி பல்ப் ரைட்டர். அவரோட கதையிலதான் இப்படி லூஸுத்தனமா ஏதாவது வரும். சுஜாதா ஆல்வேஸ் கம்ஸ் வித் எ லாஜிக்டா’’ எனச் சிரித்தான். அவனுக்கு முனிராஜ் இறந்த விஷயம் தெரியாமல் இருக்கலாம். ``மூடிட்டு வேலையப் பாருடா நொன்னை’’ என்று கோபமாகக் கதவைச் சாத்தினேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரை மணி நேரத்தில் கணினியைத் திறந்துகொடுத்துவிட்டு சிகரட்டோடு வெளியே சென்றுவிட்டான். நான் முனிராஜின் ரகசிய வீட்டுக்குள் நுழைந்தேன். அத்தனை ரகசியமாக என்னுடைய விரல்கள் பட்டன்களைத் தட்டின. இங்கேதான் எங்கேயோ முனிராஜின் கதைகளுக்</div>
<div style="text-align: justify;">
கான ரகசியம் ஒளிந்திருக்கிறது. முனிராஜின் ஆவிகூட இங்கே ஏதாவது ஒரு ஃபைலுக்குள் இருக்கலாம். கண்களால் துளாவ ஆரம்பித்தேன். எதுவுமே தட்டுப்படவில்லை. கணினியை முழுக்க அலசி ஆராய்ந்தேன். எதுவுமே இல்லை. ஒரு சின்ன ஃபைல்கூட இல்லை. ஒரு புகைப்படம்கூட இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிகரட்டை அணைத்துப்போட்டுவிட்டு நண்பன் வந்தான். ‘‘டேய் எதுவுமே இல்லடா… ஒரு சின்னத் தகவல்கூட இல்ல’’ என்றேன். அவனுக்கும் எதுவும் தட்டுப்படவில்லை. ``சாகறதுக்கு முன்னால எல்லாத்தையும் அழிச்சிட்டுச் செத்துட்டாரா உன் குருநாதர்?’’ என்றான். </div>
<div style="text-align: justify;">
``வாய்ப்பே இல்லைடா.. அவர் எழுதும்போதுதான் மாரடைப்பு வந்து செத்திருக்கார்’’ அழுத்திச் சொன்னேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘‘அவர் எழுதுறதை நீதான் பார்த்ததே இல்லையே... அவர் செத்துக்கிடந்தப்போ கம்ப்யூட்டர் ஆன்ல இருந்துதா?’’ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘‘இல்லடா, ஆஃப்லதான் இருந்தது.’’</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுஜாதாயிஸ்ட் யோசிக்க ஆரம்பித்தான். ‘‘மனசுக்குள் பெரிய கணேஷ்னு நினைப்பு. விசாரணை பண்றான் ராஸ்கல்’’ - கோபத்தால் நுரையீரல்களை நிரப்பினேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``வெயிட்’’ என்றவன் உடனே தன் பேக்கில் இருந்து ஒரு சி.டி-யை எடுத்துப்போட்டு ஏதேதோ செய்யத் தொடங்கினான். அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத்தரும் மென்பொருள் ஒன்றைப் பதிவேற்றி அதன் வழி எதாவது தேறுமா எனத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, ``ப்ச்… ஒண்ணுமே இல்லடா இதுல இதுவரைக்கும் எதுவுமே சேவ் பண்ணலைடா. ஒரு ஃபைல்கூட இல்லடா...’’ என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘`ஒருவேளை முனிராஜ் ஆவி வந்து எல்லாத்தையும் அழிச்சிருக்குமோ…’’ என்றேன். அவன் ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்வானோ என்று நானே பேச்சை நகர்த்தினேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
``இதைக் கவனிச்சியா... இந்த மொத்த கீபோர்டுல `S’ எழுத்து மட்டும்தான் சுத்தமா அழிஞ்சிருக்கு. மத்த கீஸ் எல்லாம் அப்படியே புத்தம்புதுசா இருக்கே’’ என்றேன். தன்னுடைய சுண்டுவிரலால் அந்த `S’-ஐ நான்கு முறை அழுத்திப்பார்த்தான். ``வொய்?’’ என்றான். ``ஒருவேளை `S’ ஃபார் சுஜாதாவா இருக்குமோ?’’ என்றான். நான் எதுவும் பேசவில்லை. அவன் இன்னொரு சிகரெட்டை முடிக்கக் கிளம்பினான். எனக்கு அவனையே முடிக்க வேண்டும்போல இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவேளை முனிராஜுக்கு கணினி இயக்கவே தெரியாமல் இருக்குமோ? நான் யோசிக்கும்போதே சிகரெட் முடித்தவன் அதையே சொல்லிக்கொண்டு வந்தான். ``டேய் உன் ஆளு வெட்டிபந்தாவுக்காகப் பொய் சொல்லிருப்பாரோ. அவருக்கு கம்ப்யூட்டர் யூஸ் பண்ணவே தெரியாம இருக்குமோ?’’ என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக முனிராஜ் தன் கோப்புகளை அழித்திருக்க வேண்டும். அவருக்கு ரெக்கவர் பண்ண முடியாத அளவுக்கு அழிக்கிற விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். அல்லது இது அவருடைய ஆவியின் வேலையாக இருக்கலாம். தன் கற்பனையின் ஊற்றை யாரும் கண்டறியக் கூடாது என நினைத்திருக்கலாம். நான் நண்பனிடம் இதைப் பற்றி வெளியே சொல்லிவிடாதே என்று அன்பாகக் கேட்டுக்கொண்டேன். அவன் ``நான் சுஜாதா ரசிகன்டா... அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்’’ என்று கிளம்பினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு முன்னால் அந்தக் கணினி அப்படியே அமர்ந்திருந்தது. அந்த `S’ பட்டனின் புதிரை அவிழ்க்க மூளை முயன்றபடி இருந்தது. அது சுஜாதாவாக இருக்குமோ? சரோஜா? software? Secret? Self? Satisfaction? Search...<br />
<br />
<br />
**********<br />
<br />
<span style="font-size: x-small;">ஆனந்தவிகடன் , அக்டோபர் 2016 இதழில் வெளியான சிறுகதை. </span></div>
</div>
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-83762271842084670332017-02-27T11:39:00.000+05:302017-02-27T11:39:51.916+05:30தீபாவுக்கு என்ன வேண்டும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTQJnVFluRbjeRwkh8utgxXGgGPueG5mJWrC-g5GGhSqVO1cGBtKQM_oYEM-XNRsq27E8x1Zg-cYbS2AYraakFw2atacDaYJcbuBNqCIoBSjVoOFc-vG2SCdNAF2q5lnPIB3Ovt9Wy3Y/s1600/dj-1484651626.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="227" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTQJnVFluRbjeRwkh8utgxXGgGPueG5mJWrC-g5GGhSqVO1cGBtKQM_oYEM-XNRsq27E8x1Zg-cYbS2AYraakFw2atacDaYJcbuBNqCIoBSjVoOFc-vG2SCdNAF2q5lnPIB3Ovt9Wy3Y/s320/dj-1484651626.jpg" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
மேம்பாலங்களில் இதை கவனித்திருக்கலாம். யாராவது மேம்பாலத்தின் உச்சியில் வண்டியை நிறுத்தி கீழே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தால், இயல்பாக இன்னொருவரும் வண்டியை நிறுத்தி எட்டிப்பார்ப்பார்கள். அடுத்தடுத்து ஆட்களும் எதற்கு பார்க்கிறோம் என்பதே தெரியாமல் பார்ப்பார்கள். காவல்துறை வந்து கடமையை செய்தால்தான் கூட்டம் கலையும். ஜெயாடிவி அமைந்திருக்கிற ஈக்காட்டுத்தாங்கல் பாலத்திற்கு பக்கத்தில் அடிக்கடி இந்த காட்சி அரங்கேறும். நானும் கூட இப்படி வண்டியை நிறுத்தி எட்டிப் பார்க்கிற வழக்கம் உள்ளவன்தான். சிலநேரங்களில் அதிரவைக்கிற காட்சிகள் காணக்கிடைக்கும். பிணங்கள் கூட மிதந்துகொண்டிருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படித்தான் இன்றும் பாலத்திற்கு கீழே சிலர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர்... நானும் போய் நின்றேன். எப்போதும்போலவே விபரங்களை விசாரித்தேன். ''தீபாம்மா போறாங்க'' என்றார் ஒருவர். எனக்கு புரியவில்லை. ''என்னாம்மா போறாங்க'' என்றேன்... அதாங்க தீபாம்மா என்று அழுத்தமாகச் சொன்னார். புரியமாலே போயிருக்கலாம். அப்படியே மேம்பாலத்தில் இருந்து குதித்துவிடலாமா என்று இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மன்னார்குடி மாபியாவின் அரசியல் ஆக்ஷன் காட்சிகளுக்கு நடுவில் நகைச்சுவை பகுதிபோல நடக்கிறது அண்ணன் மகள் தீபாவின் அடாவடி. அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை கைகொள்ள துடிக்கிறார். எதற்காக அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்க நினைக்கிறார் என்பது அம்மாவின் ஆன்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இருந்தாலும் கடுமையான இந்த வெயில் காலத்திலும் சாமக்கோடங்கி போல போர்வையை போர்த்திக்கொண்டு துணிச்சலாக திரிகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர் போல ''ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிக்கொள்ள கூடாது'' என்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிதாக தொடங்குகிற அமைப்புக்கு பெயர் வைக்கும்போது மறக்காமல் தன் பேரையும் சேர்த்துக்கொள்கிறார். பேர் வச்சியே சோறுவச்சியா என்கிற முதுமொழிக்கு இணங்க... கட்சிக்கு என்னம்மா கொள்கைகள் என விசாரித்தால்... ஜெயலலிதா மரண மர்மத்தை கண்டுபிடிப்பது, ஜெ சொத்துக்களை மீட்பது என்கிறார். இரட்டை இலையை காப்பாற்றுவது என்கிறார். இதையெல்லாம் சாதித்து அதை யாரிடம் கொடுக்கப்போகிறார் என்பதுதான் இந்தக்கதையில் இருக்கிறது சுவாரஸ்யமே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எக்காலத்திலும் தீபாவை ஜெயலலிதா குறிப்பிட்டு பேசியதோ அல்லது ஊடகங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதோ கூட இல்லை. இவரும் இத்தனை காலமும் எங்கும் எப்போதும் முன்வந்து உரையாடியதில்லை. தீபா தனி மனுஷியாகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவோ... அல்லது தன்னுடைய அத்தையின் பிரச்சனைக்களுக்காகவோ கூட வாசல் தாண்டியதில்லை! எங்கோ பதுங்குகுழியில் பல ஆண்டுகளாக இருந்தவர். அத்தைக்கு உடம்புக்கு முடியவில்லை என சாலையில் இறங்கியிருக்கிறார். அவருக்கு அத்தையை தூரத்தில் நிறுத்தியாவது ''தோ பார் ஆன்ட்டி'' எனக்காட்டி அனுப்பியிருந்தால் தமிழ்நாடு இந்த காமெடிகளை தவறவிட்டிருக்கும். நல்லவேளையாக கைதி எண் 9234 புண்ணியத்தில் நமக்கு நல்ல டைம்பாஸ்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவேளை இத்தனை ஆண்டுகளும் பதுங்கி இருந்ததே தமிழகத்திற்கான அடுத்த அம்மா ஆவதற்கான தகுதியாக நினைத்தாரோ என்னவோ.... ஆமாம் நம்முடைய முன்னாள் முதல்வரும் அப்படித்தானே... ஆட்சியில் இல்லாத போதெல்லாம் கொடநாட்டில் தானே பதுங்கி இருப்பதைத்தானே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாத போது எப்போதாவது போராட்டத்தில் ஈடுபட்டதை நாடு பார்த்ததுண்டா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படி பிஸியாக இவ்வளவு காலமும் சும்மாவே இருந்த தீபா... இப்போது திடீரென்று அதிமுகவின் மீதும், தமிழக மக்களின் மீதும் அன்பு உண்டாகி களமிறங்கி தினமும் தவறாமல் காலை மாலை இரண்டுவேளையும் பால்கனியில் நின்று கை ஆட்டிக்கொண்டிருக்கிறார். தன்னளவில் அதுவே இந்த மக்களுக்கு செய்கிற மாபெரும் புரட்சி என கருதுகிறாரோ என்னவோ... இதே காலகட்டத்தில் இங்கே எது எதுக்கோ ஆளாளுக்கு போராடிக்கொண்டிருக்க... இவர் மட்டும் அப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடப்பதே இல்லைபோல வாழ்ந்துகொண்டிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர் அரசியலில் களமாடத்தொடங்கிய கடந்த நான்கு வாரங்களாக செய்திருக்கிற அதிரடியான அரசியல் நடவடிக்கைகளில் முக்கியமானது ஜெயலலிதாவை போலவே விளக்கெண்ணெய் போட்டு படிய படிய தலை வாரி சீவியது. ஜெவைப்போலவே உடை அணிவது. ஜெவைப்போலவே பால்கனியில் நின்று கைகாட்டுவது. ஜெவைப்போலவே மிமிக்ரி பண்ண முயல்வது... ஜெவைப்போலவே நம்பிவந்த அடிமைகளையும் பேட்டிக்கு வந்த ஊடகங்களையும் வாசலில் மணிக்கணக்கில் தேவுடு காக்கவைப்பது.... மதியம்தான் தூங்கி எழுவது... என எல்லாமே அப்படியே அச்சு அசலாக ஜெதான்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே வேகத்தில் அதிகாரம் கிடைத்தால் நிறையவே ஊழல்கள் செய்து உடன்பிறவா சகோதரியை தத்தெடுத்துக்கொண்டு, தன் வளர்ப்பு மகனுக்கோ மகளுக்கோ பிரமாண்டமான காதுகுத்து விழாகூட நடத்தி நான்தான் உண்மையான அம்மாவின் வாரிசு என நிரூபித்தாலும் நிரூபிக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செய்தி சேனல்கள் ஒரு சிலரை இரண்டு மூன்றுநாட்களுக்கு செய்திகளின் சுவைக்காக புரட்சி வீரனாக, புதிய நம்பிக்கையாகவெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ் நாயகர்களாக முன்னிறுத்தும். பிறகு கழட்டி எறிந்துவிட்டு வேறொருவருக்கு பின்னால் ஓடிவிடும். அப்படித்தான் ஜெ அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஒவ்வொரு நாளும் அதே புளித்துப்போன அப்பல்லோ அறிக்கைகளையும் வளர்மதிகளின் சரஸ்வதிகளின் முதலைக் கண்ணீர்களையும் காட்டிக் காட்டி மக்களை போராடித்து கொண்டிருந்தனர். அந்த வேளையில், நியூஸ் சேனல்களுக்கு லட்டுபோல வாகாக வந்து சிக்கியவர்தான் தீபா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் மண்டையை படிய வாரி சீவிக்கொண்டார். அடுத்து பச்சை நிற சால்வை போர்த்திக்கொண்டார்... கண்களை உருட்டி உருட்டி பார்த்தார். அப்போதும் ஜெயலலிதா சாயல் வரவில்லை. சன்னமாக லிப்ஸ்டிக் அடித்துக்கொண்டு தாடையை மேல் நோக்கி இழுத்து ஒருமாதிரி சோக ஸ்மைலி போல முகத்தை வைத்துப்பார்த்தார்... தேர்ந்த மிமிக்ரி கலைஞரைப்போலவே ஜெயலலிதா பாணியில் பேச முயன்றார். ஆனால் என்னதான் உடலெல்லாம் சூடு போட்டுக்கொண்டாலும் மைக் முன்னால் மியாவ் மியாவ் என்றுதான் நமக்கு கேட்டது. ஏன் என்றால் ஜெயலலிதாவே புலி கிடையாது... நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் பூனைதான். ஆனால் இத்தகைய ஒரு அரசியல் பிரவேசத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே கண்டிருக்காது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏதோ இருட்டுக்குள் பார்க்கும்போது ஒரு சாயலில் ஜெயலலிதா போல வெள்ளையாக உருண்டையாக இருக்கவே அதையே பயன்படுத்தி பரபரப்பாக்கியது ஊடகங்கள்தான். தீபாவின் கதையில் ஒரு மர்மம் இருக்கிறது. அவர் ஜெ. சாயலில் இருப்பதால் அவர் ஜெயலலிதாவின் மகளாக இருப்பாரோ என எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இப்போதும் உண்டு. அதனாலேயே மக்களும் இரண்டு நாட்களுக்கு ''அதே கண்ணு அதே மூக்கு கன்பார்ம் அடுத்த ஜெயலலிதாதான்'' என ஏற்றிவிட... கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைக்க ஆரம்பித்தார். அதற்கேற்ப வடமாவட்டங்களில் சிலர் அம்மாவின் ரத்த சொந்தம்தான் அதிமுகவின் வாரிசு என உளற... அதற்கு பிறகுதான் பால்வாடி கேர்ளின் பால்கனி பிரவேசம் தொடங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாசாயல் இருக்கு இவங்கதான் அடுத்த முதல்வர் என மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல ஒரு குரூப் தீபாவின் பின்னால் அலைகிறது. சொல்லப்போனால் தீபாவை விடவும் அம்மாவின் சாயல் அதிகமுள்ளவர் ப்ரியாதம்பிதான். அவரைக்கூட வாரிசாக முன்னிறுத்தலாம். ஆனாலும் மானுடகுல வரலாறு இத்தகைய கொடூரமான அடிமைகளை கண்டிருக்கவே கண்டிருக்காது. அம்மாவின் ரத்த சொந்தம்தான் எங்களை ஆளவேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். குனியறோம் ஏறி மிதிங்க என்று வான்டடாக போய் நிற்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மன்னார்குடியர்களை எதிர்ப்பது அத்தனை சுலபமல்ல. பின்புலத்தில் வலிமையான ஆதரவுக்கரங்கள் இல்லையென்றால் இதைப்பற்றி யாருமே சிந்திக்கவும் தயங்குவார்கள். அந்தக்கரங்கள் பாஜகவின் தமிழக ஏஜென்டுகளுடையதாக இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே கால்பதிக்க நினைக்கிற பாஜகவோ ஆட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக ஒருபக்கம் பன்னீர் செல்வத்தை இயக்குகிறது. சுனாசாமியைக்கொண்டு அதிமுகவிற்குள் காய்நகர்த்துகிறது. பாஜகவின் அப்படிப்பட்ட முன்னகர்வுகளில் சிறியரக ஆயுதமாக தீபாவை பயன்படுத்துகின்றன என தாரளமாக சந்தேகிக்கலாம். ஏன் என்றால் செத்துப்போன அத்தையின் சாவில் இருக்கிற மர்மத்தை அறிவதுதான் தீபாவின் தேவை என்றால் இவ்வளவு காமெடிகள் தேவைப்படாது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்கிற அமைப்புகள் வேண்டியதாயிருக்காது. ஆனால் அவருக்கு வேண்டியதெல்லாம் வேறு என்னவோ... அது கிடைத்ததும் நிச்சயம் கிளம்பிவிடுவார்.</div>
</div>
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-7285098603056756932017-02-24T19:43:00.003+05:302017-02-24T19:43:40.331+05:30கட்சிகள் ஏன் போராடத் தயங்குகின்றன? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgq4pw4Gklvt3gudfs4PNeCf8DJt8wqJHBKxZeGbpkRr0vnBFQGUlSViJqLjq9fvXDWx_NnCH3wlrG5IU0PoiNVJPLKBDoAPMIHh0BlLMbonXjgqUhLUsGh7e9M4iewnGfMIxBlfdgg4/s1600/123590447-stalin_6.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="247" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgq4pw4Gklvt3gudfs4PNeCf8DJt8wqJHBKxZeGbpkRr0vnBFQGUlSViJqLjq9fvXDWx_NnCH3wlrG5IU0PoiNVJPLKBDoAPMIHh0BlLMbonXjgqUhLUsGh7e9M4iewnGfMIxBlfdgg4/s400/123590447-stalin_6.gif" width="400" /></a></div><br />
<br />
<br />
ஓர் எதிர்கட்சித் தலைவர் உண்ணாவிரதம் இருக்கிறார், அது எவ்வளவு முக்கியமான நிகழ்வு. ஆனால் மக்களுக்கு அதைப்பற்றி எந்தவித பரபரப்பும் இல்லை. இன்றும் இன்னுமொரு நாளே என்று கடந்துபோகிறார்கள். இணையத்தில் கூட சலசலப்பே இல்லை. அவருடைய பட்டினிப்போர் யாருக்குமே பதட்டத்தை உண்டாக்கவில்லை. அட வயசான மனுஷன் சோறுதண்ணி இல்லாம கிடக்காரே என்கிற பரிதாப உணர்ச்சியைக்கூட எழுப்பவில்லை.<br />
<br />
இப்பல்லாம் இப்படித்தான். கட்சிகளால் நடத்தப்படும் போராட்டங்கள் என்பது யாரோ யாருக்கோ எதற்கோ நடக்கிற ஒன்று... அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று மக்கள் விலகிக்கொள்கிறார்கள். கடைசியாக கட்சிகளோடு இணைந்து பொதுமக்களும் இணைந்து பொது விஷயம் ஒன்றுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது எப்போது? நினைவிருக்கிறதா?<br />
<br />
ஆனால் பாருங்கள்... கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கெல்லாம் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்களோ... அது நியாயமான போராட்டமோ தூண்டப்பட்ட போராட்டமோ... நிச்சயம் கரைவேட்டிகளுக்கு அனுமதியில்லை என்று விரட்டுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவு தருகிற அரசியல்வாதிகளைக்கண்டு அஞ்சுகிறார்கள். கரைவேட்டிகளின் போராட்ட வரலாற்று பழைய ரெகார்டுகள் அப்படி...<br />
<br />
சில நாட்களுக்கு முன்பு ரயில் மறியல் என்ற பெயரில் திமுகவினர் ஒன்றை நிகழ்த்தினார்கள்... ஜல்லிக்கட்டுக்காக...! ரயிலுக்கு பின்புறம் நின்றுகொண்டு ரயிலை மறித்து நகைச்சுவையெல்லாம் பண்ணினார்கள். அந்த அறப்போராட்டத்தை மக்களெல்லாம் கடுப்போடுதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ''டேய் அதான் மறிச்சிட்டல்லா... எப்படா கிளம்புவீங்க ...'' எனக் காத்திருந்தனர். திமுக மட்டும் அல்ல வள்ளுவர் கோட்டத்திலும், சேப்பாக்கத்திலும் நடக்கிற பெரும்பாலான 'ஒற்றை மைக்கால் புரட்சி'களையும் உண்ணாவிரத போராட்டங்களையும் மக்கள் அப்படித்தான் கடந்து செல்கிறார்கள்.<br />
<br />
பொதுமக்களே இல்லாமல் போராடுவதுதான் கட்சிகளின் சமகால போராட்ட முறையாக மாறி இருக்கிறது. பொதுமக்களுக்கும் பிரதான கட்சிகளின் போராட்டங்கில் ஈடுபாடு மட்டுமல்ல , மரியாதை கூட இல்லாமல் போக ஆரம்பித்திருக்கிறது. காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட வைப்பதுதான் பெரிய கட்சிகளின் போக்காக மாறி இருக்கிறது. சிறிய கட்சிகளிலோ அடிவாங்குவதற்காகவே ஒரு கூட்டத்தை வளர்த்து இதற்காகவே காவுகொடுக்கிறார்கள். பெரிய கட்சிகளில் அதன் கொள்கைகளில் ஈடுபாடு உண்டாகி அதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிற தொண்டர்களின் எண்ணிக்கையை... யாராவது அப்படி இருப்பார்களா?<br />
<br />
அண்ணாசாலையில் ஸ்பெசன்சர் அருகே எதோ காரணத்துக்காக திமுகவினர் போராட்டத்திற்கு வந்திருந்தனர். என்ன காரணத்திற்காக நிற்கிறார்கள் என்று அங்கிருந்த பொதுமக்கள் யாருக்குமே தெரியவில்லை. கைகோர்த்து நின்றவர்கள் எல்லோருமே காஞ்சிபுரம், வேலூரில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். டீக்கடையில் கட்சி துண்டோடு நின்ற ஒருவரிடம் என்ன மேட்டர் என விசாரித்தேன். தலைமைல சொல்லிட்டாங்க தல கிளம்பிவந்துட்டோம் என்றார். நல்லவேளையாக இந்த மனித சங்கிலியால் போக்குவரத்து நெரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை. அந்த போராட்டத்தாலும் எதுவும் நடந்துவிடவில்லை.<br />
<br />
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அது தொடங்கிய சில நிமிடங்களில் போராட்டக்காரர்களை மொத்தமாக காவல்துறை வேனில் பூப்போல அள்ளிக்கொண்டு கிளம்பிவிடும். கல்யாண மண்டபத்தில் பாதிநாள் வைத்துவிட்டு புளியோதரையோ எலுமிச்சை சாதமோ போட்டு அனுப்பிவிடும் என்பது எல்கேஜி குழந்தைகளுக்கும் கூட தெரிய ஆரம்பித்துவிட்டது. அதிலும் சாலை அல்லது ரயில் மறியல்களால் அரசுக்கு எவ்வித பாதிப்புகளும் இருப்பதில்லை... பொதுமக்களுக்குத்தான் சங்கடங்கள்.<br />
<br />
சட்டசபையில் அத்தனை உக்கிரமாக சட்டை கிழிய போராடிவிட்டு செயல்தலைவர் ஸ்டாலின் மெரீனாவில் போராட்டத்தில் அமர... அடுத்த நொடியே வாட்ஸ் அப்பில் செய்திகள் பறக்கிறது... ''அடுத்து என்ன... இன்னும் சில நிமிடங்களில் வேன்ல ஏத்தி கூட்டிட்டு போய்டுவீங்க அதானே!'' என்று...<br />
<br />
மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள். கடைசியாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையிடம் தடியடிகளை வாங்கி மண்டைகளை உடைத்துக்கொண்டது எப்போது? நினைவிருக்கிறதா? ஆனால் இதே திமுக... எம்ஜிஆர் ஆட்சிகாலத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் எத்தனையோ முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக நின்று அடிபட்டிருக்கிறது. சிறையில் வாடியிருக்கிறது. களத்தில் இறங்கி போராடியிருக்கிறது. தன்னலமற்று... தியாக உணர்வோடு...<br />
<br />
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை இன்றைய நிலை. அன்றைக்கு இருந்த வாழ்வியல் இன்று முற்றிலுமாக மாறிப்போயிருக்கிறது. அறம் என்பதற்கான அளவுகோல்கள் திருத்தி அமைக்கப்பட்டிருக்கின்றன. காந்தி காலத்து அறப்போர் அல்ல இன்றைய அறப்போர்கள். இன்றைய பெரும்பாலான அறப்போர்கள் கார்பரேட்களால் கச்சிதமாக வடிவமைக்கப்படுகின்றன. அப்படி இருக்க கட்சிகளின் போராட்டங்களும் அதற்கேற்ப மாறி இருக்க வேண்டும்.<br />
<br />
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாதிரியான ஊரிலேயே பிரதானமாக இருந்ததே நான்கு சாலைகள்தான். முப்பது ரயில்கள்தான். மக்களுக்கு இருந்த ஊடகங்களும் இன்றுபோல இல்லை. அன்றைக்கு உண்ணாவிரதம் இருந்தால் மக்களெல்லாம் பதறி இருக்கக்கூடும். சக மனிதன் பட்டினியாக கிடப்பதென்பது தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த காலங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று ஒருவன் பட்டினியால் செத்துப்போனாலும் யாருக்கும் கவலைப்பட நேரமில்லை. அந்தக்காலத்தில் உண்ணாவிரதம் இருக்கிற அரசியல் தலைவர்கள் என்றாலே தியாகிகள் என நினைத்திருக்கலாம்.<br />
<br />
ஆனால் இன்று மக்களுக்கு அரசியல் தெரிகிறதோ இல்லையோ அவர்களுக்கு எல்லாம் அரசியல்வாதிகளின் போராட்டங்களுக்கு பின்னால் இருக்கிற நோக்கங்கள் தெரிகிறது. இந்த போராட்டங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நிலைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.<br />
<br />
மக்களுக்கும் போராட நேரமில்லை. டிவி இருக்கிறது. வாட்ஸ் அப்... ஃபேஸ்புக் வந்துவிட்டது. ஃபார்வர்டுகளில் போராட்டம் பண்ணத் தொடங்கிவிட்டார்கள். பணிச்சூழலும் வாழ்வியல் நெருக்கடிகளும் அவர்களை எந்நேரமும் பொழுதுபோக்குகளை நோக்கியும் பொருளாதார தேடலிலும் மூழ்கடித்து வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட அவர்களை கவர்கிற மாதிரியான போராட்டங்களை முன்னெடுப்பது அத்தனை சுலபமல்ல.<br />
<br />
இன்று எதிரியாக பாவித்து அடையாள போராட்டங்களை நடத்துகிற கட்சிகள், சென்ற ஆண்டுகளில் இதே ஆட்களோடு கூட்டணி போட்டு கும்மி அடித்ததும், இனி வரும் காலங்களில் பதவிக்காக கூட்டணி வைக்கத் தயங்காது என்பதையும் இந்த திரளான மக்கள் குழு அறிந்தே வைத்திருக்கிறது. அல்லது இது எல்லாமே அவன் தன்னுடைய பதவிக்காக தன்னுடைய சுயலாபத்துக்காக செய்கிறான் என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறது.<br />
<br />
சென்ற மாதம் சென்னையில் கம்யூனிஸ்ட் தோழர்களால் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மட்டுமல்ல இந்த நடவடிக்கையால் இந்தியாவே சூறையாடபட்டிருக்கிறது. மக்களெல்லாம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். <br />
<br />
அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக எளிமையான கம்யூனிஸ்ட் இயக்கம் போராட்டம் அறிவிக்கிறது. எத்தனை பேர் கூடியிருக்க வேண்டும். அங்கேயும் தோழர்களே தனியாகப்போய் போராடி தனியாகவே மிதிவாங்கினார்கள். பெண்கள் மீதெல்லாம் காவல்துறை முறைதவறி நடந்துகொண்டது... யாருக்கும் கவலையில்லை. காரணம் அது அவர்களுடைய போராட்டமில்லை என நினைக்கிறார்கள். ஏன்? அதற்கான விடைகளை கட்சிகள் கண்டறிய வேண்டும். எங்கே பொதுமக்களிடமிருந்து விலகி இருக்கிறோம் என்பதை கூர்நோக்க வேண்டும்.<br />
<br />
கட்சிகள் இன்னமும் அந்தகாலத்து முறையில் நாள்முழுக்க உண்ணாவிரதம் இருப்பது, ரயிலை மறிப்பது என்று பழைய மாடல் போராட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விமான மறியலாகவாவது செய்யலாம்! ரயிலாக இருந்தால் ஏழைகள்தான் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள், இதுவே விமானம் என்றால் பணக்காரர்கள்தான் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்... சிஎன்என், டைம்ஸ்நவ் கூட கவர் பண்ணுவார்கள். ஜாலிக்காக சொன்னாலும், கட்சிகள் புதுமையான போராட்ட முறைகளை சிந்திக்க வேண்டும்.<br />
<br />
சமூகவலைதளங்கள் வந்துவிட்டன. இங்கே பெருவாரியான மக்களிடையே அடிப்படையான பிரச்சனைகளுக்கு எதிரான மனநிலையை எளிதில் உருவாக்க முடியும். ஆனால் பாருங்கள்கட்சிகள் இன்றும்கூட சமூகவலைதளங்களில் ஒரு கருத்தை வைரலாக்க காசு கொடுக்கிற நிலைதானே இருக்கிறது...? இதற்காக ஏஜென்ஸிகளை நியமித்து வைத்திருக்கிறார்கள். தொண்டர்களின் வழி கொள்கைகளை பரப்பிக்கொண்டிருந்தவர்கள்... இன்று கொள்கைகளை பரப்ப கார்பரேட்டுகளை நாடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய காமெடி. கோடிகளை கொட்டி மீம்ஸ் போடுவது எவ்வளவு பெரிய சீரழிவு.<br />
போராட்ட முறைகளை முற்றிலுமாக மாற்றுவது ஒருபுறம் என்றால், போராட்டங்களில் அடிப்படையான நேர்மை இருக்கிறது என்பதை மக்கள் மனதில் உருவாக்க முனைவது கட்சிகளின் கடமை. காரணம் நீங்கள் என்னதான் மறைத்தாலும் உங்களுடைய உள்நோக்கக்கொண்டை நிச்சயம் வெளியே தெரிந்துவிடும் என்பதுதான் நவீனதொழில்நுட்பங்களின் காலத்தில் மிகப்பெரிய சிக்கல்.<br />
<br />
இதை எதிர்கட்சியான திமுகதான் முதலில் உணரவேண்டும். சட்டசபையில் இறங்கி அடித்ததை நிறையவே பேர் விமர்சித்தாலும் அந்த கெத்து நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை மறந்துவிடக்கூடாது. காரணம் அதில் சுயநலத்தோடு கொஞ்சம் பொதுநலனும் இருக்கிறது என்பதால்தான். #Standwithstalin என்கிற ஒரு ஹேஷ்டேக் சட்டசபையில் சபாநாயகரின் அத்துமீறல்கள் நடந்த நாளில் ட்ரெண்ட் ஆகிறது. அதை ட்ரெண்டாக்கியது மக்கள்தான். எத்தனையோ முறை காசுகொடுத்து முயன்றும் முடியாததை மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எங்கிருந்து உருவாகிறது...?<br />
<br />
போராட்டங்களால்தான் இங்கே எல்லாகட்சிகளும் வளர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று போராட்டங்களில் இருந்து அவை விலக்கிவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. அது சரி திமுக மட்டும்தான் குற்றவாளியா... அதிமுக என்ன கிழித்துவிட்டது?<br />
<br />
இந்தப்போராட்டக்களங்களில்... அதிமுகவுக்கு பிரச்சனையே இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் என்றால் போராட்டகுணம் என்பது தன்னுடைய மரபணுவில் துளியும் இல்லாதவர்களால்தான் அந்தக்கட்சியில் உறுப்பினராகவே இருக்கமுடியும்.போராட்டங்களில் ஈடுபடாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல் சும்மா இருந்தே ஆட்சியைப்பிடித்தவர்களும் அவர்கள்தான். அதுவும் சரிதான் போலியான அன்பைவிட உண்மையான வெறுப்பு எவ்வளவோ மேல்தானே...</div>Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-48869488322654981362017-02-20T19:44:00.001+05:302017-02-20T19:44:29.423+05:30ஆதி யோகியின் ஆக்கிரமிப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fSw00yLRFwKsn7NYA3VsFd4nS44MGtyKUM6Ke_hm1y3h24ru7LxURWEzAyl1U_vyMgdOCsetw177xjpeBxI1_pa2A9hDxXefYqwOx_vg5ORY-MJQUvfE9dmoNr2GRkMfdAV1iYbvTE0/s1600/16864408_729901647188565_8405184192091979052_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fSw00yLRFwKsn7NYA3VsFd4nS44MGtyKUM6Ke_hm1y3h24ru7LxURWEzAyl1U_vyMgdOCsetw177xjpeBxI1_pa2A9hDxXefYqwOx_vg5ORY-MJQUvfE9dmoNr2GRkMfdAV1iYbvTE0/s320/16864408_729901647188565_8405184192091979052_n.jpg" width="320" /></a></div>
<br />
ஆன்மிக வணிகர்... தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். அவருடைய அக்கிரம செயல்களுக்காக ஏராளமான வழக்குகளை போடுகின்றன பூவுலகின் நண்பர்கள் மாதிரியான சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள். பலரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காட்டை அழிக்கும் வேலைகளில் குற்றவுணர்ச்சியே இல்லாமல் ஈடுபடுகிறார். 1993ல் 37ஆயிரம் சதுர மீட்டர் இருந்த ஆஸிரம அளவு... இப்போது 55ஆயிரம் சதுரமீட்டராக உயர்ந்து நிற்கிறது. அத்தனைக்கும் ஆசைப்படுகிற அந்த மன அமைதி வியாபாரியின் பெயர் ஜக்கிவாசுதேவ் அவருடைய வணிக நிறுவனத்திற்கு பெயர் ஈஷா.<br />
<br />
''நாங்கள் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம்... நாங்கள் செய்த பசுமை புரட்சிக்காக மத்திய மாநில அரசுகள் விருது கொடுத்துள்ளன... '' என்று இந்த காட்டுயிர் அழிப்பான்கள் எப்போதும் மறுப்புத்தெரிவிக்கின்றன.<br />
<br />
# ஆனால் காட்டில் இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு நாட்டுக்குள் மரக்கன்றுகளை நடுவது ஏன்?<br />
<br />
# காடுகளை அழித்துவிட்டு நாட்டை பசுமையாக்குவதுதான் பசுமைபுரட்சியா?<br />
<br />
# காட்டில் இருக்கிற மரங்கள் என்பது வீணாக வளர்ந்து நிற்கிறதா... அந்த மரங்களை அழித்துவிட்டால் அதை நம்பி வாழ்கிற காட்டுயிர்கள் என்ன செய்யும்?<br />
<br />
# வனச்சூழல் பாழானால் நம் வாழ்வுச்சுழலும் பாழாகாதா?<br />
<br />
# ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா?<br />
<br />
# காட்டுக்குள் பல ஆயிரம் பேரைக்கூட்டி வைத்து சிவராத்திரி விழா நடத்துவதால் சூழல் சிதைவு உண்டாகும்தானே?<br />
<br />
# காட்டுயிர்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் அவை ஊருக்குள் வரநேரும். இதனால் MAN ANIMAL CONFLICT வராதா?<br />
<br />
என்கிற எளிய கேள்விகளுக்கும் கூட ஈஷா பதில் சொல்லத்தயாராயில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம் வாடா என தொடைதட்டி அழைக்கும். அரசிடமிருந்து பெற்ற விருதுகளையே சாட்சிக்கு நிறுத்திவைக்கும். அதனால்தான் உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட போதும் விளக்கம் கேட்டபோதும்கூட... ''போடா அங்கிட்டு... அந்த அரசாங்கமே எங்க பக்கம்'' என்று ஈஷாவால் சீன்போட முடிகிறது. எத்தனை தடைகள் விதித்தாலும் கட்டிடங்கட்டுவதை நிறுத்தமாட்டோம் என கொக்கரிக்கிறது.<br />
<br />
அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மிகத்துக்கும் என்னமோ அப்படி ஒரு ஃபெவிகால் நெருக்கம். ஈஷா மட்டும் என்ன விதிவிலக்காக... ஏற்கனவே பெண்களை மயக்கி மொட்டை அடித்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் உண்டு.<br />
<br />
முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்... எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்... எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்... இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்... <br />
<br />
போய்தொலையட்டும் அந்தக் கற்சிலை என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது ஜக்கி வாசுதேவ் சாமியாரின் ஆஸிரமம். இந்த கட்டுமானங்களுக்கு மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி வாங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை. சுற்றுசூழல் அனுமதியும் நொன்னைதான். இப்போது ஆக்கிரமித்திருப்பது நொய்யல்ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி.<br />
<br />
அப்படிப்பட்ட ஒரு சிலையை திறக்கிற விழாவுக்கு தன்னுடைய இடைவிடாத பணிகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் பாய்ந்தடித்துக்கொண்டு ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதா... இப்படி ஒரு முட்டாளைப்போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்... அவனுடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா?<br />
<br />
ஊரில் ஒரு திருடன்... அல்லது திருடன் என குற்றஞ்சாட்டப்பட்டவன். ஒரு காதுகுத்து கல்யாணம் வைக்கிறான். அதில் கலந்துகொள்ள திருடன் தன்னுடைய திருட்டில் பங்குகொடுத்து கவுன்சிலரை அழைத்து வருகிறான் என்றால்... அதற்கான காரணம் என்னவாக இருக்கும். 'இங்க பார் கவுன்சிலரே என் பிரண்டுதான்... பிராது குடுத்தா வகுந்துடுவேன்' என்பதாகத்தானே இருக்கும். ஈஷா செய்ய நினைப்பது இதைத்தான்.<br />
<br />
நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியான ஒரு பிரதமர் இதை உணரவேண்டாமா? மலைகிராமத்து மக்களெல்லாம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்... அதுவெல்லாம் பிரதமருக்கு தெரிந்திருக்குமா? அல்லது தெரியாதது போல இருந்துவிடுவாரா? அந்தச் சாமியாரின் மீதும் இப்போது திறந்து வைக்கிற சிலைக்கு பின்னாலும் இத்தனை அத்துமீறல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அந்த சிலையை தன்னுடைய திருக்கரங்களால் திறந்துவைப்பது என்பது ஒரு குற்றவாளியின் குற்றத்திற்கு துணைபோவது என்பதைக்கூட அறியாதவரா நம் பாரதப் பிரதமர்.<br />
<br />
காவிரி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வந்திருக்கலாம்... மெரீனாவில் தமிழகமே திரண்டு போராடியபோதாவது வந்திருக்கலாம்... காவிரி பிரச்சனை வெடித்தபோதாவது எட்டிப்பார்த்திருக்கலாம்... அப்போதெல்லாம் வராத ஒரு பிரதமர்... ஒருசாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறார் என்றால் அவர் யாருக்கான பிரதமர்?</div>
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-12466390688893605622017-02-17T20:45:00.000+05:302017-02-17T20:47:49.730+05:30இரண்டு நிமிடங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn3zpWQGxlX-kceCKNyMcSCX9hyiDONfkny_XkjmmIk4AqqsZFe__BR_o7T_8n6ayjBoXwV6MzjQzfqA8vDgcXBcaKPc3Gu3DmAYsjgFCSmzkxWAVNsTXx1c9Yd9xNAntL0o1jYESSAC8/s1600/15966085_10211288718516656_4808920016441413127_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn3zpWQGxlX-kceCKNyMcSCX9hyiDONfkny_XkjmmIk4AqqsZFe__BR_o7T_8n6ayjBoXwV6MzjQzfqA8vDgcXBcaKPc3Gu3DmAYsjgFCSmzkxWAVNsTXx1c9Yd9xNAntL0o1jYESSAC8/s400/15966085_10211288718516656_4808920016441413127_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
சென்ற ஆண்டுமுழுக்க ஒவ்வொரு நாளும் எனக்கு நானே சொல்லிக்கொண்ட மேஜிக் நம்பர் - 90. ஒவ்வொரு நாளும் என் மாரத்தான் பயிற்சியை தொடங்கும் போதெல்லாம் 90... 90... 90... என்ற எண்களை உச்சரித்தபடியேதான் தொடங்குவேன். ஓடும்போது சோர்ந்துபோனால் இந்த எண்களை மனது தானாகவே உச்சரிக்கத்தொடங்கி ஊக்கப்படுத்திக் கொள்ளத் தொடங்கும். நைன்ட்டி கட்டிங் பார்ட்டிகளை விடவும் வெறியோடு என்னைத்துரத்தியது இந்த நைன்ட்டி தான். <br />
<br />
இரண்டாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த மாரத்தானில் 97 நிமிடங்களில் அரைமாரத்தான் தூரமான 21 கிலோமீட்டர்களை கடந்தேன். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்தப்போட்டியில் எனக்கு கிடைத்தது 128 வது இடம். என்னைப்போன்ற பல ஆண்டு புகைப்பழக்கமுள்ள ஓர் ஆளுக்கு... திடீர் ஓட்டக்காரனுக்கு இதெல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாத மாபெரும் சாதனை. ஆனாலும் எனக்கு அதில் திருப்தியே வரவில்லை. <br />
<br />
ஓட்டப்பயிற்சி அப்படித்தான்... உங்களை லூசு போல மாற்றிவிடும். எவ்வளவு ஓடினாலும் ஓயவிடாது. இலக்குகளை அதிகமாக்கிக்கொண்டேதான் செல்லும். இலக்குகளே இல்லையென்றாலும் புதிய இலக்குகளை தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். அதனால்தான் டைம்பாஸுக்கு ஓட ஆரம்பித்த பலரும்... சைக்ளிங்... ஸ்விம்மிங்... கோச்சிங் என அடுத்தடுத்து ஏதோதோ செய்துகொண்டிருக்கக்காரணம். பெங்களூரில் தோன்றிய அத்தகைய புதிய இலக்குதான் இந்த 90நிமிட இலக்கு! <br />
<br />
எலைட் ரன்னராக ஆவதற்கான முதல் படி.... <br />
<br />
2016ஆம் ஆண்டின் சென்னை மாரத்தானில் 90நிமிடங்களுக்குள் பந்தய தூரத்தை கடப்பது. இதை சாதித்தால் நிச்சயம் டாப் 20 இடங்களில் ஒன்றை நிச்சயம் எட்டிவிட முடியும் என்பது என்னுடைய கணக்கு. நான்காயிரம் பேரில் 20வது இடம் என்பதெல்லாம் கனவில் கண்டுக்கலாம்... அல்லது சினிமாவில் பண்ணிக்கலாம்... பாணி இலக்கு! <br />
<br />
நண்பர்கள் சிலர் ஊக்கப்படுத்தினாலும், எல்லோருக்குமே இதில் அச்சங்களும் சந்தேகங்களும் இருந்தன. காரணம் மிக அதிகப் பயிற்சியும், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும்... அதோடு என்னுடைய புகைப்பழக்கத்தால் நார்நாராகிப்போன உடலும்... கூடவே இதுமாதிரியான இலக்குகள் கொடுக்கிற மன உளைச்சலும்... அச்சத்தை உண்டாக்கியது. <br />
<br />
விளையாட்டு வீரர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சாபக்கேடு இந்த காயங்கள். கண்களுக்கே தெரியாமல் உள்ளுக்குள் உருவாகி வலியால் உயிரை வாங்கிவிடும். காயம் வந்து ஓய்வுக்கு சென்றுவிட்டால் திரும்பிவரும்போது 90மினிட்ஸ் கோட்டையெல்லாம் அழித்துவிட்டு முதலில் இருந்து தொடங்கவேண்டும். எனவே ஜாக்கிரதையாகவும் திட்டமிட்டும் பயிற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினேன். தனியாக பயிற்சியாளர் வைத்துக்கொள்கிற அளவுக்கு வசதிகள் கிடையாது. ஓட்டக்குழுக்களோடு இணைந்து பயிற்சி செய்வதிலும் ஏனோ எனக்கு ஈடுபாடு இல்லை. எனவே நானே கற்றுக்கொள்ள முடிவெடுத்து படிக்க வேண்டியதாக இருந்தது. யூடியூப் வீடியோக்கள் உதவின. சமூகவலைதளங்களில் இயங்குகிற ரன்னிங் குழுக்கள் உதவின. <br />
<br />
இதுபோன்ற அதிவேக ஓட்டத்திற்கு அவசியமே உடல்வலிமைதான். அதை அதிமாக்கவேண்டியது அவசியம் என்பதால் ஒவ்வொருநாளும் ஓட்டத்தை விட இரண்டுமடங்கு அதிகமான நேரத்தை உடற்பயிற்சிக்கென ஒதுக்கினேன். கூடவே என் உடல் எடையையும் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள, LCHF டயட் முறையை முடிந்தவரை பின்பற்றினேன். அது நிஜமாகவே நன்றாக உதவியது. தேவையான போஷக்கையும் அளித்தது. புத்தகங்கள் வாசிப்பது, ஓட்டப்பயிற்சியை திட்டமிடுவது என எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 97 என்கிற என்னுடைய சாதனை எண்... படிப்படியாக குறைய ஆரம்பித்திருந்தது. <br />
<br />
97... 96ஆக மாற மிகமிக மெனக்கெட வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு விநாடியைக் குறைப்பதற்கும் பல நூறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சிபெறவும்... உடற்பயிற்சிகள் செய்யவும்வேண்டியதாக இருந்தது. <br />
<br />
ஒரு சிறிய விபத்து. 2016 ஏப்ரலில் மாதம் கணுக்காலில் காயம்.<br />
<br />
நான் எப்போதும் பயிற்சி பெறும் பூங்காதான். அதன் ஒவ்வொரு இன்ச்சும் கண்ணுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் அத்துப்படி. இருந்தும் உடைந்து போயிருந்த டைல்ஸ் ஓன்று காலை பதம் பார்த்தது. கணுக்கால் அப்படியே மடங்கிவிட்டது. ஆரம்பத்தில் அது பெரிதாக வலியெல்லாம் இல்லாமல் இருக்கவே, உடைந்த காலோடேயே பயிற்சியை தொடர்ந்தேன். கொஞ்சமாக வலி வர ஆரம்பித்தது, அது நாள்பட சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஓட்ட வியாதிகள் பலவும் அப்படித்தான் பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் வருகிற காதல் போல அதுபாட்டுக்கு வரும் போகும்... ஆனால் இது ஏதோ டீப் லவ் போல... அப்படியே தங்கி விருந்து சாப்பிடத்தொடங்கிவிட்டது.<br />
<br />
அடுத்த பத்து நாளில் கணுக்கால் மூட்டு பந்துபோல வீங்கிவிட...சுதாரித்துக்கொண்டு டாக்டரிடம் போனேன். அவர் அடுத்த ஒருமாதத்திற்காவது ரெஸ்ட் எடுங்க என சொல்லிவிட்டார். சிறப்பு... வெகு சிறப்பு...<br />
<br />
பயிற்சிகளை நிறுத்தினேன். ஒவ்வொரு நாளும் 90 என்கிற அந்த எண் கனவில் எல்லாம் வந்து தொல்லை பண்ணும். நினைத்து நினைத்து குமைவேன். ஒருமாதம் எப்போது முடியும் என வெறியாக இருக்கும். ஆனால் தொலைதூர ஓட்டக்காரனுக்கு இருக்கவேண்டிய முக்கிய குணங்களில் ஒன்று காத்திருப்பது. இல்லையென்றால் மிக அதிக தூரத்தை பொறுமையாக ஓடிக்கடக்கவே முடியாது. அதனால் இந்தக் காயம்பட்ட காலகட்டம் பொறுமையாக இருப்பதற்கான வலிமையை கொடுத்த நாட்கள்... அது ஓட்டத்திற்கு மட்டுமான பயிற்சியாக இல்லாமல் வாழ்க்கைக்கான பயிற்சியாக இருந்தது.<br />
<br />
ஒருமாதம் முடிந்தபின்னும் கால்களில் போதுமான முன்னேற்றம் இல்லை. இன்னும் பதினைந்து நாள் ஓய்வு நீட்டிக்கப்பட்டது. நாற்பத்தைந்து நாட்கள் கடந்த நிலையில் என்னுடைய எடை 70கிலோவை எட்டி இருந்தது. கன்னத்தில் கூட தொப்பை உருவாகி இருந்தது. ஓட ஆரம்பித்தால் பழைய வேகத்திற்கு அருகில் கூட வரமுடியாத அளவிற்கு வேகம் குறைந்து இருந்தது. உடலில் வலிமையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஓடத்தொடங்கி பழைய வேகத்தை எட்டமுடியாமல் போகும் போதெல்லாம் உடலைவிட அதிகமாக கண்களில் வேர்க்கும்... இருந்தாலும் பயிற்சி தொடரும். 90-90 மந்திரங்கள் எதுவுமே எடுபடவில்லை. <br />
<br />
கொஞ்சம் ஓரளவுக்கு சுமாரான வேகத்தில் ஓடத்துவங்கியதும் இழந்த நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. ஜூன் மாதம் நடந்த நள்ளிரவு மாரத்தான் (D2D) போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். நள்ளிரவில் ஓடியே பழக்கப்படாததும், அந்த இரவில் அடித்த அனலும் கால்களில் மீண்டும் காயத்தை உண்டாக்க... போட்றா இன்னும் ஒருமாசம் ரெஸ்ட்டு. <br />
<br />
இது... கலங்கிப்போனேன் கண்மணி சீசன் 2. சென்னை மாரத்தானுக்கு ஆறுமாதங்களே எஞ்சி இருந்தன. ஏற்கனவே வருடத்தில் பாதியை காயங்களுக்கு கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தேன். ஆனாலும் அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா. ஏதோ ஒருநாளில் உள்ளுக்குள் இருந்து அந்த நைன்ட்டி பூதம் விழித்துக்கொண்டது. நூறு நாள் நூறு ஓட்டம் என்று முடிவெடுத்தேன். <br />
<br />
விடாப்பிடியாக ஓய்வே இல்லாமல் நூறு நாட்களுக்கு ஓடுவது அவ்வளவுதான். ஆனால் தினமும் குறைந்தது 5கிலோமீட்டர் ஓடவேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை. நமக்கு நாமேதான் நடுவர். இந்தப்பயிற்சி எனக்கு மிக அதிக சுயக்கட்டுப்பாட்டை கொடுத்தது. இந்த காலகட்டத்தில் கொஞ்ச கொஞ்சமாக பழைய வேகத்தை எட்ட ஆரம்பித்தேன். ஆனால் இந்த முறை அதிகமான கவனத்துடன் பயிற்சிகள் தொடர்ந்தன. இந்த பயிற்சிகள் அத்தனையும் வெறுங்காலில் ஓடிதான் என்பதால் அதற்குண்டான விஷயங்களையும் இணையத்தில் தேடி படித்து, எப்படி பாதங்களை பாதுகாப்பது என்பதையும் படிக்க ஆரம்பித்தேன். <br />
<br />
அடுத்த ஐந்து மாதங்களும் விடாத பயிற்சி. முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் சென்னை மாரத்தான் ஒருமாதம் ஓத்திவைக்கப்பட, அந்த ஒருமாதம் லம்ப்பாக கிடைத்தது. பயிற்சியை இன்னும் முடுக்கிவிட்டேன். இந்த ஐந்துமாத காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை அதிகமாக்கினேன். கிட்டத்தட்ட 7 கிலோவரை எடைகுறைத்தேன். வலிமையை கூட்டும் பயிற்சியை அதிகப்படுத்தினேன். வலிநிறைந்த காலகட்டம் இது. <br />
இருந்தும் 90மந்திரம் முன்னெப்போதையும் விட மிக அதிக நம்பிக்கையோடு மனதில் ஜெபிக்கத் தொடங்கி இருந்தேன். நிச்சயம் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை பந்தய நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. ஒரு கிலோமீட்டர் 4 நிமிடம் 15 நொடியில் கடந்தால் 21கிலோமீட்டர் எவ்வளவு என எந்நேரமும் மனம் கணக்குப்போட்டபடி இருக்கும். <br />
<br />
எங்குமே நிற்கக்கூடாது. தொழில்முறை அத்லெட்டுகளோடு போட்டி போட்டாலும் அவர்களுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாவிட்டால் விலகிவிடவேண்டும். பொறுமை முக்கியம். வெறுங்காலில் ஓடுவதால் பாதையில் கவனம் வேண்டும். எதாவது கூரான பொருட்கள் குத்திவிட்டால் போச்சு... என ஏராளமான நிபந்தனைகளை விதித்திக்கொண்டேன். ஏராளமான ஸ்ட்ராடஜிகள்... ஒவ்வொன்றையும் நானே உருவாக்கி அழித்து சரிசெய்து... இதோ கடந்த ஜனவரி 7ஆம் தேதி சென்னை விப்ரோ மாரத்தானில் ஓடிமுடித்துவிட்டேன். <br />
<br />
ஆனால் இரண்டு நிமிடங்கள் அதிகமாகிவிட்டது. 92 நிமிடங்களில்தான் முடித்தேன். நடுவில் சில கிலோமீட்டர்கள் ஓடமுடியாத அளவுக்கு உடல் சோர்ந்துவிட்டது ஒரு காரணம்... இன்னொரு காரணம் நடுவில் ஒரு மேம்பாலம் குறுக்கிடுகிறது... இன்னொரு காரணம் ஆரம்பத்திலேயே மிக அதிகவேகத்தில் ஓடியது... இப்படி இன்னொரு காரணம்... இன்னொரு காரணம் என இதோ இப்போது வரைக்குமே மனது ஆயிரம் காரணங்களை கண்டுபிடித்தபடிதான் இருக்கிறது. <br />
<br />
ஆனால் தோற்றுவிட்டேன் என்று உறுதியாக நம்புகிற இந்த மனதை என்னால் சரிசெய்யவே முடியவில்லை. ஓராண்டாக பழக்கப்படுத்திய ராட்சசன்... அவனால் அத்தனை எளிதில் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மதிப்பெண் குறைந்தாலும் தேர்ச்சி இல்லைதான், ஒரு ரன்னில் தோற்றாலும் தோல்விதான் இல்லையா... இந்த முறை நான் தோற்றுத்தான் போயிருக்கிறேன். வேறு யாரிடமோ அல்ல என்னிடமே...! <br />
<br />
சென்னை மாரத்தானில் என்னுடைய நேரம் 92 நிமிடங்களும் 36 நொடிகளும். இதைவிடவும் சிறப்பாக செய்து முடித்திருக்கலாம்தான். ஆனால் கலந்துகொண்ட 3600பேரில் நான் பிடித்திருந்த இடம் 29வது... என்பதில் பெரிய மகிழ்ச்சி!<br />
<br />
2014ல் ஓடத்தொடங்கினேன்.. 440வது இடத்திலிருந்து அடுத்த ஆண்டு 128ஆவது இடம். அங்கிருந்து இதோ இந்த ஆண்டு 29வது இடம். ஆனால் இது போதாது என்கிறான் உள்ளுக்குள் இருக்கிற ஓட்ட ராட்சசன்.... <br />
<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVAL2I2mO8qMbPa7kh3hdQxZHPhkpMAorA1z4T5ocaPiAEOuY_TWEYB8_Qmkf43Uf9pLviOJMbahFysfXV2jkWd30nt4O1VemsvFkrfg_I_PZTNxKFl1reEGQKu9SMGT1W3_A2HBo5s4c/s1600/Certificates.png" imageanchor="1"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVAL2I2mO8qMbPa7kh3hdQxZHPhkpMAorA1z4T5ocaPiAEOuY_TWEYB8_Qmkf43Uf9pLviOJMbahFysfXV2jkWd30nt4O1VemsvFkrfg_I_PZTNxKFl1reEGQKu9SMGT1W3_A2HBo5s4c/s400/Certificates.png" width="400" /></a></div>
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-12287909041827366852017-02-07T11:29:00.000+05:302017-02-07T11:29:01.462+05:30அவனும் நானும்... <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNDsR4rf8OX2M6dcoJDjCdAImY01AFaLMzJbHS0hir_BJeQwps-9aaJVaXQMfOi_qexUmVutPVu7ARTPwL98MZqpFOO_NOWQ_eygV4q8JCD3g48GyDWs1TQSKge2N8bkTNYX9RjQe4rkY/s1600/bad-doctor.jpg" imageanchor="1" ><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNDsR4rf8OX2M6dcoJDjCdAImY01AFaLMzJbHS0hir_BJeQwps-9aaJVaXQMfOi_qexUmVutPVu7ARTPwL98MZqpFOO_NOWQ_eygV4q8JCD3g48GyDWs1TQSKge2N8bkTNYX9RjQe4rkY/s320/bad-doctor.jpg" width="320" height="203" /></a><br />
<br />
<br />
''அவங்க எப்படி இருக்காங்க...''<br />
<br />
''உடம்புக்கு முடியாம இருக்காங்க...''<br />
<br />
''அதான் என்னாச்சு...''<br />
<br />
''ஒன்னும் ஆகலை... சரியாகிட்டாங்க... அவங்க தண்ணி சாப்பிடறாங்க... இட்லி சாப்பிடறாங்க... பீட்ஸா ஆர்டர் பண்ணினாங்க... ஃபேஸ்புக்ல லைக் கூட போட்டாங்க...''<br />
<br />
''அப்புறம் ஏன்டா இவ்ளோ நாளா ஹாஸ்பிட்டல்ல வச்சிருக்கீங்க... டேய் அவங்களுக்கு என்னடா ஆச்சு''<br />
<br />
''நல்லா சுகமா இருக்காங்க... யூ டோன்ட் பேனிக்''<br />
<br />
''அடேய் ஆர்ஜேபாலாஜிகளா... அப்டேட் குடுங்கடா''<br />
<br />
''டோன்ட் பேனிக்... உப்புமா சாப்புட்டு உல்லாசமா இருக்காங்க... காபி சாப்பிட்டு கசமுசாவா இருக்காங்க... கொரில்லா கேர்ள்ஸ் அப்டேட் பண்ணுங்க...''<br />
<br />
''ஆமாங்கசார்... அவங்க ஆஸ்கிங் டூ கம்மிங் டூ ஹோம்தோட்டம் சார்... செம ஹெல்தி பாடி... கன்னத்துலயே அறைஞ்சாங்க பாருங்க கன்னம் எப்படி பழுத்துருச்சுன்னு...உய் உய் உய்''<br />
<br />
''பாரின் டாக்டர் நீங்களாச்சும் சொல்லுங்க... எய்ம்ஸ் டாக்டர்ஸ்.. நீங்களாச்சும் சொல்லுங்க என்ன ப்ராப்ளம்... எங்களை பாக்கவிடுங்க...''<br />
<br />
''அவங்களுக்கு சுகர்ல காய்ச்சல் வந்து மூச்சு முட்டி அதுக்காக பிஸியோதெரப்பி குடுக்கும்போது ஹார்ட் அட்டாக் வந்து, நுரையீரல்ல இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு... அதனால பாக்க முடியாது''<br />
<br />
''ஓஹ்ஹ் பெரிய வியாதிதான்... எங்க போட்டோ காட்டு''<br />
<br />
''டேய் நீ திமுக காரனா... கெளம்புடா ராஸ்கல்... அவங்க குணமாக பிரார்த்தனை பண்ணும் போது டிஸ்டர்ப் பண்ணாத... கொன்னுடுவோம்''<br />
<br />
*********<br />
சில நாட்களுக்கு பிறகு<br />
<br />
''அடேய் அநியாயமா கொலை பண்ணீட்டீங்களேடா... பாவிகளா ''<br />
<br />
''ஹார்ட் அட்டாக்காகிடுச்சு... காப்பாத்த முடியல...''<br />
<br />
''மெடிக்கல் ரிப்போர்ட் குடுங்கடா..."<br />
<br />
''அதான் சொல்றோம்ல இதயம் துடிக்கல...''<br />
<br />
''அந்த பாரின்டாக்டர கூப்புடுங்கடா...''<br />
<br />
''டாக்டர்ஸ்லாம் பிஸிங்க... இப்போதைக்கு முடியாது... பதவியேற்பு விழா இருக்கு அப்புறம் பேசுவோம்''<br />
<br />
''எம்பால்மிங்லாம் பண்ணிருக்கீங்களேடா... காலை காணோமேடா...''<br />
<br />
''டாக்டர் இவனைப்பார்த்தா பாகிஸ்தான் உளவாளி மாதிரி இருக்கு... ஒரு விஷ ஊசிய போட்டு கொல்லுங்க...''<br />
<br />
***********<br />
<br />
சிலநாட்களுக்கு பிறகு...<br />
<br />
''என்ன டாக்டர் என்ன வேணும்''<br />
<br />
''உண்மைய சொல்லணும்''<br />
<br />
''அப்படி ஓரமா உக்காந்து சொல்லிட்டுப்போ''<br />
<br />
''அவரை யாருமே கொலை செய்யவில்லை<br />
அவர்களாகத்தான் செத்தாங்க...''<br />
<br />
''யாரு டாக்டர்...''<br />
<br />
''அதான் அவங்க''<br />
<br />
''எவங்க''<br />
<br />
''அதான் செத்துப்போனாங்களே...''<br />
<br />
''ஓ அவங்களா... மறந்தே போச்சு... அதான் செத்துட்டாங்களே... பாவம் ரொம்ப நல்லவங்க... இரும்புமாதிரி இருந்தாங்க''<br />
<br />
''ஆங் அவங்கதான்... அவங்களேதான் அவங்களைதான் யாரும் கொலை பண்ணலை... அவங்களாதான் ...''<br />
<br />
''அதான் தெரியுமே...''<br />
<br />
''அதை சொல்லதான் பாரின்லருந்து வந்தேன்...''<br />
<br />
''ஓ நன்றி டாக்டர்... வரிங்களா ஜல்லிக்கட்டு பாக்கலாம்...வந்தேறிமாடு சாப்ட் மாடு... நாட்டு மாடு ஒன்லி வெரி ஷார்ப் கொம்பு... யூ டோன்ட் வொர்ரி தமிழன்ஸ் அடக்கிபையிங்''<br />
<br />
''இல்லைங்க... அவங்களுக்ககு யாரும் விஷம் வைக்கல.. தப்பான மருந்து கொடுக்கல ''<br />
<br />
''யாரு...''<br />
<br />
''அவங்கதான்... பதவி ஏத்துக்கப்போறாங்களே அவங்கதான்... அவங்க நிரபராதி... சுத்தமானவங்க... நம்புங்க ப்ளீஸ்''<br />
<br />
''அதை ஏன் இப்ப வந்து சொல்றீங்க...''<br />
<br />
''அன்னைக்கு கேட்டீங்களே''<br />
<br />
''ஆமா... அதான் இயற்கையா செத்துட்டாங்கனு நீங்கதான் சொல்லிட்டீங்களே...''<br />
<br />
''இருந்தாலும் உங்க டவுட்டை க்ளியர் பண்ணனும்ல...''<br />
<br />
"சரி சொல்லுங்க எப்படி செத்தாங்க...''<br />
<br />
''அதான் அவங்களே செத்துட்டாங்க''<br />
<br />
''டீடெயில்லா சொல்லுங்க...சிசிடிவி பூட்டேஜ் காட்டுங்க... ரிப்போர்ட் எங்க ''<br />
<br />
''வித் இன் பாராமீட்டர்ஸ்தான் சொல்லமுடியும்''<br />
<br />
''ஓஓஓஓஓ அப்ப சரி... பாராமீட்டரே சொல்லிட்டார்னா கரெக்டாதான் இருக்கும்... ஏன்னா அவர் அருவா கத்திலாம் வச்சிருப்பார் பார்த்துகிடுங்க''<br />
<br />
''எம்பால்மிங்...''<br />
<br />
''எம்ஜிஆருக்கே பண்ணோமே...''<br />
<br />
''காலு...''<br />
<br />
''அது காமராஜருக்கே பண்ணோமே...''<br />
<br />
''மெடிக்கல் ரிப்போர்ட்ட்''<br />
<br />
''பாராமீட்டர்ர்ர்...''<br />
<br />
''ஓஓஓஓ அப்ப ஓகே...''<br />
<br />
''சரி டவுட்டு க்ளியர் ஆய்டுச்சா''<br />
<br />
''எங்களுக்குத்தான் டவுட்டே இல்லையேடா...''<br />
<br />
''இல்லை நாளைபின்ன டவுட்டு வந்தா''<br />
<br />
''வந்தா சும்மா வுடுருவீங்களா வீடு புகுந்து மண்டைய உடைச்சிற மாட்டீங்க''<br />
<br />
''அப்ப உனக்கு டவுட்டு வராது''<br />
<br />
''வராது''<br />
<br />
''ரைட்டு''<br />
<br />
''ஆமா ஹாஸ்பிட்டல்ல வசூல் குறைஞ்சிருச்சா... அதான் ஆள் அனுப்பி விளக்க சொன்னாய்ங்களா''<br />
<br />
''இல்லையே...''<br />
<br />
''வேற யாரு...''<br />
<br />
''அவங்கதான்''<br />
<br />
'' அவங்கன்னா யார்ரா...''<br />
<br />
''அதான் பாஸ் விஷம் வச்சாங்களே... அவங்கதான்...இய்ய்ய்ய்.... இல்ல இல்ல... கவர்மென்ட்தான்... அரசுதான்... அய்யோ அவங்கள யாரும் கொல்லல அவங்களாதான் செத்தாங்க... ''<br />
<br />
''வா நாம ஜல்லிகட்டு பாப்போம்... நீயும் என்னை மாதிரிதான் போல... இவளோ அப்பாவியா இருக்க... இப்படிலாம் உளறாத... ஆசிட் அடிச்சி உயிரோட எரிச்சிருவாங்க... அப்புறம் நீயும் இயற்கையாதான் செத்தனு உங்க ஊர்லருந்தே ஒருத்தன் வந்து சொல்லுவான்... உங்க தாத்தா பாட்டிலாம் எவ்ளோ அறிவுள்ளவங்க தெரியுமா... சரி விசிட்டிங் கார்ட் வச்சிருக்கியா... ஒன்னு குடு பாப்போம்''<br />
Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7702774817858419395.post-27933904596409862442017-02-04T13:52:00.000+05:302017-02-04T13:55:40.726+05:30கன்னிவாடி கண்டெடுத்த ஆல்ரவுண்டர்...<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgepz-eWBsyguMLLQYbEmZaNyJdL_7_UYkvI2GU8T7U1CDjG2cUhEvY9wGC3qZQ2tOmI80ohlpESRxr8eqPvPNGqBSQUNUG59t-7aC3ti8Ls_PuxrxLDAyb9lqWBhdD41u359x1DXBMX9U/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgepz-eWBsyguMLLQYbEmZaNyJdL_7_UYkvI2GU8T7U1CDjG2cUhEvY9wGC3qZQ2tOmI80ohlpESRxr8eqPvPNGqBSQUNUG59t-7aC3ti8Ls_PuxrxLDAyb9lqWBhdD41u359x1DXBMX9U/s320/maxresdefault.jpg" width="320" height="180" /></a></div><br />
எழுத்தாளர்கள் குறித்தும் எழுத்துகள் குறித்தும் பரிச்சயம் உண்டான போது நான் பேசிப்பழக நினைத்த இரண்டு எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தியும், க.சீ.சிவகுமாரும். இலக்கியம் என்றாலே அது சிடுமூஞ்சிகளுக்கானது என்பகிற மரபான இயல்புகளை உடைத்தெறிந்த விசித்திரர்கள் இந்த இருவரும். ஒரே காலத்தில் உருவாகி வந்த தமிழின் மிகமுக்கியமான இரண்டு படைப்பாளிகள். நம் வாழ்வில் அன்றாடம் கடக்கிற சோகமான தருணங்களையும் கூட எளிய பகடியோடு களுக்கென புன்னகைக்க வைக்கிற இரண்டு வரிகளை வீசிச்செல்கிற அபாரமான எழுத்துக்காரர்கள். நான் எழுத விரும்புகிற மொழியை நடையை அவர்களிடமே இப்போதும் எடுத்துக்கொள்பவனாக இருக்கிறேன். ஆனால் பாஸ்கர்சக்தியோடு வாய்த்த நட்பும் பழக்கமும் சிவகுமாரோடு சரியாக அமையவில்லை. அதற்கு அவர் அச்சு அசலாக என் தந்தையின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு என் தந்தையை பிடிக்காது. அதனாலேயே என் தந்தையில் சாயலற்ற அவருடைய எழுத்துகளோடுதான் அதிகமும் பழகியிருக்கிறேன்.<br />
<br />
க.சீ.சிவகுமாரின் எழுத்துகள் எனக்கு ஆதிமங்கலத்து விசேஷங்களின் வழிதான் அறிமுகம். முகத்தை சிரித்தமாதிரியே வைத்துக்கொண்டு ஒரு மொத்த நூலையும் வாசித்தது அதுதான் முதல்முறை. முதல் முறை படித்து பித்துப்பிடித்தது போல அடுத்தடுத்து மூன்று... நான்கு... ஐந்து என பல முறை படித்து தீர்த்த நூல் அது. அங்கிருந்துதான் அவருடைய சிறுகதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் பயணித்திருக்கிறேன். எல்லா கதைகளிலும் சிவகுமார் இருப்பார். கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பார். கிரிக்கெட்டும் காதலும்தான் சிவகுமாரின் கதைகளில் நிறைந்து இருந்தன. அவர் எப்போதும் இப்போதும் கிரிக்கெட் ஆடுகிறவராகவே இருந்தார்.<br />
<br />
வேலை இல்லாத கிராமத்து வாலிபனாக, சைக்கிளில் திரிந்து பெற்றோரிடம் எந்நேரமும் திட்டுவாங்குகிற, ஊருக்குள் ஒரு பெண்ணையும் விடாமல் விரட்டி விரட்டி காதலித்து தோற்கிற வாலிபனாக... சோகமாக திரியும் காதலனாக, காசின்றி கையறு நிலையில் குடும்பத்தை எதிர்கொள்கிறவனாக, தான்தோன்றியாகத் திரியும் நாடோடியாக, என்று க.சீ.சிவகுமாரின் கதைகளில் தோன்றுகிற நாயகர்கள் எல்லோருமே வாழ்வை வேதனையோடுதான் எதிர்கொள்வார்கள். ஆனால் அந்த வேதனைகளைத்தாண்டிய ஒரு கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அவர்களிடம் நிலைத்து இருக்கும். அதுதான் சிவகுமாரின் இயல்பாகவும் இருந்தது. எல்லா வேதனைகளையும் புன்னகையோடு கடக்கிற மனிதராகவே அவர் இருந்தார். புன்னகைக்காத அவருடைய புகைப்படங்களை நான் கண்டதேயில்லை.<br />
<br />
தமிழ் இலக்கிய உலகம் குரூரமானது. அது யாரைக் கொண்டாடும் யாரை நிராகரிக்கும் யாரை வேண்டுமென்றே தள்ளிவைக்கும் என்று கணிக்கவே முடியாது. க.சீ.சிவகுமார் தன்னுடைய அபாரமான மொழி ஆளுமைக்காகவும் அழகான கதைகளுக்காகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருக்கவேண்டியவர். அவரைவிடவும் சுமாராக எழுதுகிற மொழிகுறித்த எவ்வித பயிற்சியோ ஆற்றலோ இல்லாதவர்களுக்கு கிடைத்த பீடங்கள் கூட சிவகுமாருக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்போதுமே இருந்து இருக்கிறது. அவருக்கு விருதுகளும் கூட அதிகமாக கிடைத்ததாக நினைவில்லை. சமகாலத்தின் டாப் சிறுகதை எழுத்தாளர்கள் குறித்த குறிப்புகளில் அவர் பெயர் இடம்பெறாமல் போயிருக்கிறது. மிகசிறந்த நூறு கதைகள் பட்டியல்களில் அவருடைய கதைகள் இருந்ததே இல்லை. அதை அவரிடமே கூட நான் பகிர்ந்துகொண்டது உண்டு. அதையும் தன்னுடைய புன்னகையோடு அடபோங்க பாஸு என்று கடந்து போகிறவராகவே அவர் இருந்து இருக்கிறார். நான்குநாட்களுக்கு லைக் வரவில்லை என்றாலே எழுதுவதை நிறுத்துகிறவர்களின் காலகட்டத்தில், சிவகுமார் எவ்வித வாழ்த்துகளும் இன்றி மரியாதைகளைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். சிறுகதைகளின் மீது தீராப்ரியம் கொண்டவராகவும் அவர் இருந்தார்.<br />
<br />
சில மாதங்களுக்கு முன்பு காட்சிப்பிழை இதழில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றி எழுதியிருந்த கட்டுரை நினைவுக்கு வருகிறது. சினிமா ஒரு அம்மாஞ்சி எழுத்தாளனை எப்படி வஞ்சித்து சுரண்டிவிட்டு சக்கையாக தூக்கி அடித்தது என்பதை எழுதியிருப்பார். அதையும் கூட புன்னகைக்கவைக்கும் படிதான் எழுதி இருப்பார். அந்த அனுபவங்கள் நமக்கு நேர்ந்திருந்தால் என்று எண்ண ஆரம்பித்த தருணத்தில் நான் அழுதுகொண்டிருந்தேன். என் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அத்தகைய மோசமான அனுபவங்களை அவர் எதிர்கொண்டிருந்தார். அதனாலேயே சினிமாவிலிருந்து விலகி இருந்து இருக்கிறார்.<br />
<br />
தமிழ் இலக்கிய உலகம் எவ்வளவு விசித்திரமானது என்றால், ஒரு எழுத்தாளனை பற்றி அறிந்துகொள்ள அவன் சாகவேண்டியதாக இருக்கும். இரங்கல் குறிப்புகளின் வழிதான் எழுத்தாளர்களை அடையாளங்காணும். எழுத்தாளர்கள் இறந்தபிறகுதான் அவரை வாசிக்கும். அவருடைய எழுத்துகளை ஆய்வுக்கெல்லாம் உட்படுத்தும். இதோ இப்போது சிவகுமார் இறந்துவிட்டார். இனியாவது வாசிக்கட்டும். இனியாவது கொண்டாடட்டும்.<br />
கன்னிவாடி ஆல்ரவுண்டருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.Athishahttp://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com