<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395</id><updated>2012-01-28T10:51:18.341+05:30</updated><category term='சுற்றுச்சூழல்'/><category term='குட்டிகதை'/><category term='கோவை ஸ்பெஷல்'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='புத்தக மதிப்புரை'/><category term='பதிவர்வட்டம்'/><category term='காதல் டாக்டர்'/><category term='Cause'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='பொது'/><category term='சிறப்புப் பதிவு'/><category term='எச்சரிக்கை'/><category term='கார்ட்டூன்'/><category term='புத்தக கண்காட்சி 2011'/><category term='கவிதைகள்'/><category term='அறிவிப்பு'/><category term='மொக்கை'/><category term='சாமியார் தொடர்'/><category term='Lovers Party'/><category term='ஈழம்'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='Dr.Love'/><category term='புத்தக அறிமுகம்'/><category term='செம ஹாட் மச்சி'/><category term='அனுபவம்'/><category term='தற்குறித்தமிழன்'/><category term='டைம்பாஸ்'/><category term='அலங்கல்'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='உரையாடல்'/><category term='புத்தக கண்காட்சி 2012'/><category term='வாந்தி'/><category term='புகைப்படங்கள்'/><category term='பயணம்'/><category term='அரசியல்'/><category term='போட்டி'/><category term='பாராட்டு'/><category term='உலகசினிமா'/><category term='புனைவு'/><category term='கதைகள்'/><category term='கோவை'/><category term='வாசகர்கடிதங்கள்'/><category term='கடிதம்'/><category term='தற்குறித்தமிழன் கடிதங்கள்'/><category term='தமிழ்'/><category term='எனது சிறுகதைகள்'/><category term='சித்திரப்பதிவு'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='ஆட்டோ பிக்சன்'/><category term='இன்பக்கதைகள்'/><category term='நகைச்சுவை'/><category term='ஜென்'/><category term='Beach'/><category term='கதைகள்.'/><category term='எதிர்வீட்டு ஜன்னல்கள்'/><category term='விக்கிபீடியா'/><category term='book review'/><category term='சினிமா'/><category term='குட்டிக்கதை'/><category term='காதல்கல்வி'/><title type='text'>அதிஷா</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>398</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-5590322985165193815</id><published>2012-01-24T17:25:00.002+05:30</published><updated>2012-01-24T23:31:40.060+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><title type='text'>வேட்டை - கதற... கதற...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VBn3qQ-aasg/Tx6b0woTkUI/AAAAAAAAB_s/-49e3Kajzac/s1600/vettai-movie-arya-madhavan-amala-paul-sameera-reddy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-VBn3qQ-aasg/Tx6b0woTkUI/AAAAAAAAB_s/-49e3Kajzac/s320/vettai-movie-arya-madhavan-amala-paul-sameera-reddy.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘’சரியான முட்டாப்பசங்க சார் இவனுங்க!’’ என்று தமிழ்சினிமா ரசிகர்களை நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவரால் மட்டும்தான் இப்படி ஒரு படம் எடுக்க முடியும். அப்படி ஒருபடம்தான் வேட்டை! படமெடுத்தவர் லிங்குசாமி! லாஜிக்கோ கதை குறித்த அக்கறையோ இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாக்கியராஜ் படமொன்றின் கதையை லேசாக தட்டிஒட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்து ஆள்மாறட்டக்கதையை இன்னும் எத்தனை முறைதான் பார்க்க வேண்டியிருக்குமோ.. மசாலா படம் பார்க்கிறவர்களை முட்டாள்கள் என்று நினைத்து படமெடுப்பதை நீங்கள் நிறுத்தாவிட்டால் மசாலா படம் பார்ப்பதை முட்டாள்கள் நிறுத்திவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கமர்ஷியல் மசாலா படங்களுக்கென ஒரு பார்முலா உண்டு. அந்த பார்முலாவை கொஞ்சம்கூட மீறாமல் அதே குத்துப்பாட்டு, அதே மொக்கை ஹீரோயின் காமெடி, அதே கொலைசெய்யும் கொடுரமான ரவுடி வில்லன்,நடுவில் பஞ்ச் டயலாக்,குத்துப்பாட்டு, கிளைமாக்ஸில் சண்டை என்கிற அடிப்படைகளோடு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் சூட்டிங் கேப்பில் அதே மேக்கப்பில் அதே சட்டை பேண்ட் ரேபன் கண்ணாடியோடு இந்த படத்திலும் நடித்துக்கொடுத்திருப்பார் போல! அதுக்கொசரம் கேரக்டரை கூடவா மாத்தாம வச்சிருக்கணும்! படம் முழுக்க பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டேயிருக்கிறார். இவருக்கும் அடுத்த முதல்வர் ஆகிற ஆசை வந்திருக்கலாம். அல்லது இப்படம் வெற்றியடைந்து ‘மாஸ்’ அந்தஸ்து கிடைக்கநேர்ந்தால் இந்த டபரா ஸ்டாரிடமிருந்து தமிழகம் தப்பவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் பஞ்ச் வசனம் பேசும்போதும் தியேட்டர் குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. வசனம் லிங்குசாமியே எழுதியிருப்பாரோ என்னவோ! சம்பந்தா சம்பந்தமில்லாமல் பஞ்ச்!&lt;br /&gt;&lt;br /&gt;மாதவன் படம் முழுக்க பயப்படுவதுபோலவே நடிக்கிறார். ஏன் இப்படி என்று வெளியே வந்து டிக்கட் கிழிப்பவரிடம் விசாரித்தபோதுதான் அவர் காமெடியனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மங்காத்தா அஜித்போலவே மாதவனுக்கும் நல்ல அழகான உருண்டு திரண்ட தொப்பை.&amp;nbsp; ஒரே பாட்டில் பணக்காரனாவது போல நம்ம ''சின்ன தல'' மாதவன் எக்ஸைஸ் செய்து தொப்பையை குறைத்து பக்கா ஜென்டில்மேனாகிவிடுகிறார். ஒருகாலத்துல மாதவன் எப்படி இருந்தாரு.. பாவம் ஒரு டூயட்டு கூட இல்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகிகளை பார்க்க சகிக்கவில்லை. மேக்கப் மேனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ வாய் முழுக்க லிப்ஸ்டிக்கையும் முகம் முழுக்க ரோஸ்பவுடரையும் அப்பிவிட்டு அனுப்பியிருப்பார் போல!. (கவுண்டமணி ஒருபடத்தில் தன் தங்கைக்கு பெயின்ட் அடித்து ஏமாற்றுவாரே அதுபோல) அதிலும் படத்தின் முக்கிய நாயகியான சமீரா ரெட்டியை குளோஸ் அப்பில் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது! நாம் பார்த்துக்கொண்டிருப்பது வேட்டையா அல்லது ஈவில் டெட்டா என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் சமீரா! கேமராமேன் நீரவ்ஷா இன்னுமும் உயிரோடிருப்பது அவருடைய மனைவியின் தாலிபாக்கியமாகத்தான் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சமீராவுக்கு பதிலாக இந்த சமரசீமா ரெட்டியோ சமோசாக்குள்ள ரொட்டியோ அவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்! பெரிய வித்தியாசமேயிருந்திருக்காது. அமலாபால் படம் முழுக்க வறுமையால் வற்றிப்போன வயிறோடு தொப்புள் காட்டிக்கொண்டு வலம்வருகிறார். பேருக்கு தாவணியை போட்டுக்கொண்டிருந்தாலும் படம் முழுக்க ரசிகர்களுக்கு எதையோ காட்ட முயல்கிறார். ஏனோ சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களுக்கும் ரீரெகார்டிங்குக்கும் பெரிதாக மெனக்கெடாமல் யுவன் தன் முந்தைய படங்களிலிருந்தே சுட்டு அப்படியே மாற்றி மாற்றி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பப்ப பப்பாம் பபரப்பாம் பாட்டு மட்டும் ஓக்கே! மாதவனும் ஆர்யாவும் ஓடும் காட்சி சில்வஸ்டர் ஸ்டாலனின் ராக்கியில் சுட்டதாக இருக்கிறதே என ஆச்சர்யபட்டுக்கொண்டிருக்கும்போதே பிண்ணனியில் அதே படத்தில் இடம்பெற்ற அதே இசை! இருந்தாலும் தமிழ்மக்கள் மேல் லிங்குசாமிக்கு ஏகப்பட்ட நம்பிக்கை. ஆரம்பிச்ச படத்தை முடிக்கணுமே முடிச்சி.. முடிச்ச படத்தை வெளியிடணுமேனு வெளியிட்டிருப்பார்களோ என்கிற ஐயம் படத்தின் கிளைமாக்ஸில் படம் பார்க்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கட்டாயம் ஓடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாகவதர் காலத்து கதை எடுத்துக்கொண்டு அதை காமெடிப்படமா எடுக்கறதா? இல்ல சீரியஸ் ஆக்சன்படமா எடுக்கறதா? ஃபேமிலி சென்டிமென்ட் டிராமாவா எடுக்கறதா? ரொமான்டிக் காமெடியா எடுக்கறதா? என பெருங்குழப்பத்தில் படமெடுத்திருப்பார் போல லிங்கு. காமெடி ஆக்சன் கலந்த பேமிலி எமோசனல் நிறைந்த ரொமான்டிக் மொக்கைப்படமாக வந்திருக்கிறது வேட்டை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-5590322985165193815?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/5590322985165193815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=5590322985165193815' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/5590322985165193815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/5590322985165193815'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2012/01/blog-post_24.html' title='வேட்டை - கதற... கதற...'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-VBn3qQ-aasg/Tx6b0woTkUI/AAAAAAAAB_s/-49e3Kajzac/s72-c/vettai-movie-arya-madhavan-amala-paul-sameera-reddy.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-893751421370407011</id><published>2012-01-18T15:45:00.008+05:30</published><updated>2012-01-18T16:35:37.978+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆட்டோ பிக்சன்'/><title type='text'>ஆணியே புடுங்க வேணாம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-YWNAmI9PRX8/Txaa4rF4Y6I/AAAAAAAAB9k/tMVJjFgAVxs/s1600/baskar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://3.bp.blogspot.com/-YWNAmI9PRX8/Txaa4rF4Y6I/AAAAAAAAB9k/tMVJjFgAVxs/s320/baskar.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது இலக்கிய புஸ்தகங்களை படித்து பெரிய இலக்கிய அப்பாடக்கர் ஆகிவிடவேண்டும் என்கிற ஆர்வ வெறியோடு புத்தக கண்காட்சிக்கு கிளம்பினான் முட்டாள் முருகன்.. உள்ளே நுழையும்போதே ஆப்புகள் காத்திருந்தன. பைக் பார்க்கிங்கில் தொடங்கியது முதல் ஆப்பு. வண்டி நிறுத்த பத்துரூபாயாம்! அடப்பாவிகளா என வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’யோவ் காசு குடுத்து நான் புக்கு வாங்க வந்திருக்கேன்.. நான் எதுக்கு பார்க்கிங்குக்கு பத்துரூவா கொடுக்கோணும்’’ என சிங்கத்தைப்போல பூமிஅதிர தட்டிக்கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’ஏன்டா! தியேட்டர்ல என்னைக்காச்சும் போயி அப்படி கேட்டுருக்கியா..’’ என்று சொன்ன அந்த முரட்டு உருவம் நடுமண்டையில் நங் என ஒரு கொட்டு வைத்தது. சிங்கம் அசிங்கப்பட்டு வாசூவை பொத்திக்கொண்டு பத்துரூபாயை கொடுத்து பார்க்கிங் டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வழியெல்லாம் பேனர்கள். ஒவ்வொரு பேனரிலும் ''நாங்கதான் நம்பர் ஒன்'', ''பாகித்ய மொக்காதமி விருது எப்போதும் எங்களுக்கே'' , ''இந்தியாலயே ஏன் இந்த உலகத்துலயே காரு வைச்சிருக்கற பதிப்பகம் நம்ம பதிப்பகம்'' என ஆளாளுக்கு அளந்துகொட்டியிருந்தனர். அனைத்தையும் பரமசிரத்தையோடு நோட்பண்ணிக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தக கண்காட்சி என்றுதான் பெயர்... ஆனால் நுழைந்ததுமே அவன் கண்ணில் பட்டது கடலைமிட்டாய்,சோன்பப்படி,டெல்லி அப்பளம், குச்சி ஐஸ் என அவனுக்கு மிகவும் பிடித்த தின்பண்ட சமச்சாராங்கள். "அறிவுப்பசியாற்ற வந்த இடத்துல இதையெல்லாம்  ஏன் வச்சிருக்காங்க" என்கிற தத்துவார்த்த கேள்வி நங்கென்று நட்டுக்கொண்டு எழுந்துவிட்டது. அப்போதே அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நாமளும் இலக்கியவாதியாகிடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு பார்த்தாலும் எழுத்தாளர்கள் நிறைந்திருந்தனர். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கு நடுவில் நூற்றுசொச்சம் வாசகர்கள் பாவமாய் கையில் அஞ்சுபத்து வைத்துக்கொண்டு எதை வாங்குவது என பெரும் குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே நிற்கிற நாலைந்து பேரில் இருவர் எழுத்தாளர்களாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு எழுத்தாளர் நம்ம முருகனை கையைபிடித்து இழுத்தார். ‘’சார் யாரு சார் நீங்க.. உங்களை பார்த்ததே இல்லையே, என்னை ஏன் கையபுடிச்சி இழுக்கறீங்க’’ என மிரண்டுபோய் கேட்டான் முருகன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் என்ன தெரியலையா.. மறந்துபோச்சா.. டபிள்யூ டபிள்யூ குனிஞ்சாகுத்து டாட்காம்ல பின்னூட்டம்லாம் போட்டீங்களே.. ஐயாம் பிரபலபதிவர் சாம் மார்த்தாண்டன்.. உங்களை எனக்கு நல்லாத்தெரியுமே உங்க பிளாக்கை தினமும் படிப்பேனே... அதை விடுங்க... நான் ஆளப்பிறந்தவன்னு நாவல் ஒன்னு வெளியிட்டிருக்கேன்... பிரமாதமான நாவல்.. நேத்துதான் பில்கிளின்டன் போன்ல கூப்பிட்டு என் லைஃப்ல இப்படி தமிழ்நாவல படிச்சதேயில்லனு பாராட்டினாரு... ஒபாமா நாலு சாப்டர் படிச்சிட்டு அப்படியே ஷாக் ஆகிட்டாராம்.. &lt;br /&gt;&lt;br /&gt;''எனக்காக ஒன்னு வாங்குங்க... உங்க கிட்ட என்ன கேட்டுகிட்டு , ஏய் அண்ணனுக்கு ஒரு ஆளப்பிறந்தவன் பார்சேல்’’ என்று கட்டாயப்படுத்தி வலிந்து திணித்தார். என்ன கொடுமைடா இது என தலையிலடித்துக்கொண்டு அந்த கொடுமையையும் வாங்கி வைத்துக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் புக்கு வாங்கினா மட்டும் போதுமா..’’ என்று அசட்டு சிரிப்பை உதிர்ப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அய்யய்யோ இவன் புக்க வாங்கினத்துக்கு டேன்ஸெல்லாம் ஆடச்சொல்லுவான் போலிருக்கே என பயந்தபடி ‘’வேற என்ன சார் பண்ணனும்’’ என்று முட்டாள் முருகன் ப்பம்மி பம்மி பயந்தபடி கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’புக்குல ஆட்டோகிராப்லாம் வாங்கமாட்டீங்களா பாஸு’’ என அடுத்த குண்டைப்போட்டுவிட்டு அப்படியே முந்தாநாள் சமைஞ்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டார் நம்ம எழுத்தாளர். பேசிக்கொண்டிருக்கும்போதே முருகனிடமிருந்து புத்தகத்தை பிடுங்கி அதில் ஆட்டோகிராபையும் போட்டுவிட்டு.. கண்ணிமைக்கும் நேரத்தில் அதேகடையில் வேறு ஒருவரிடம் ‘’எச்சூஸ்மீ சார் உங்களை எங்கயே பார்த்திருக்கேனா.. நீங்கதானே அந்த பின்னூட்ட புயல் பிரேம்ஜி ராகு’’ என ஆரம்பித்திருந்தார். ‘’அடப்பாவிங்களா! இப்படித்தான் கதற கதற புக்கு விக்கறீங்களா’’ என மிகுந்த கடுப்புடன் கிளம்பினான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கடையில் ஒரு எழுத்தாளர் அவருடைய புத்தகம் கதறகதற ஆட்டோகிராப்பு என பல நூறு கண்டங்களை தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது.  காசு கொண்டுவரலங் சார் என்று சொன்னாலும்.. சார் கிரெடிட் கார்ட் டெபிட் கார்டுனு எது இருந்தாலும் குடுங்க பார்த்துக்கலாம், நம்ம பேங்க்ல பர்சனல் லோன்கூட போட்டுக்கலாம் புக்கை மட்டும் வாங்கிடுங்க என பயமுறுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பதிப்பகங்களிலும் தலா ஒரு செட் பொன்னியின் செல்வன் விதவிதமான சைஸ்களில் வைத்திருந்தனர். ஒருவேளை பதிப்பகம் ஆரம்பிக்கணும்னா பொன்னியின் செல்வன் பதிப்பிச்சி காட்டினாதான் அனுமதி கிடைக்குமோ என நினைத்துக்கொண்டான். இல்லாட்டிப்போனா பொன்னியின் செல்வன் பதிப்பிச்சாதான் புக்ஃபேர்ல ஸ்டால் போட விடுவாய்ங்களோ என்னவோ? அவனுக்கு தெரிந்த ஒரே இலக்கிய புத்தகமான பொன்னியின் செல்வனை குறைந்தவிலைக்கு மலிவு பதிப்பினை வாங்கிக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வனுக்கு இணையாக சமகால எழுத்தாளர்களும் ஏகப்பட்ட குண்டு குண்டு புத்தகங்கள் போட்டிருந்தனர். ‘’தமிழனோட வரலாற்றை அப்படியே புழிஞ்சு..  படுக்க போட்டு நெஞ்சுல ஏறி மிதிச்சா மாரி சும்மா நறுக்குனு நாலாயிரம் பக்கத்துல சொல்லிருக்காப்ல நம்ம குண்டுபுக்கு குமரேசன்’’ என யாரோ இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தனர். விருதெல்லாம் குடுத்தாய்ங்களே என ஆர்வத்தோடு அந்த குண்டு புத்தகத்தை தூக்கிப்பார்த்தான். என்னா வெயிட்டு.. நாலுநாள் அதை தூக்கி தூக்கி படித்தாலே பைசெப்ஸ் தாறுமாறாக ஏறிவிடும்.. அப்புறம் ஓங்கி அடிச்சா ஒன்னரை ட்ன்னு வெயிட்டுடா என்று பஞ்ச் டயலாக் பேசலாம். விருது குடுக்கறவங்க பெரிய தராசோடதான் இப்பலாம் விருதுக்கு புக்கு தேர்ந்தெடுக்கறாங்களோ என்னவோ என நினைத்தான். விலையை பார்த்தான் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கேன்டீன் பக்கம் ஒதுங்கினான். லட்சக்கணக்கான ரூபாய்களை கொட்டினால்தான் கேன்டீனில் ஒரு டீயும் பன்னும் சாப்பிட முடியும் என்கிற நிலையை கண்டான். சின்ன போண்டா அம்பதுரூவா.. அதைவிட சின்ன பஜ்ஜி எழுபதுரூபா... காஞ்சி சங்கராச்சாரியார் சிலையெல்லாம் வைத்துக்கொண்டு பட்டப்பகலில் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர். &lt;br /&gt;முருகனுக்கு நரம்பு புடைத்தது.. யாரோ தூரத்தில் ‘’ டேய் உங்களையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா’’ என சொல்லுவதைப்போல இருந்தது.. ஆனால் வரும்போது பார்க்கிங்கில் வாங்கிய் ‘நங்’ கொட்டு நினைவுக்கு வந்தது. இலவசமாக கொடுத்த தண்ணீரை இரண்டு மடக்கு குடித்துவிட்டு மீண்டும் புத்தக சந்தைக்குள் நுழைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் இரண்டுபேர் கட்டிப்புரண்டு சண்டைப்போட்டுக் கொண்டிருந்தனர். அதை ஒரு மிகப்பெரிய கூட்டமே நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தது. அதோடு புத்தகம் வாங்க வந்திருந்தவர்களும் சண்டை நடந்த இடத்திற்கு அருகிலேயே கிடைத்த லிச்சு ஜூசை வாங்கி உறிஞ்சியபடி அதை மகிழ்ச்சியாக ரசித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் முருகனிடம் கேட்டார் ‘’சார் இதுமாதிரி சண்டை தெனமும் நடக்குமா.. இதுபத்தி தகவல்கள் எங்கே கிடைக்கும்’’ . முருகனுக்கும் அதே ஆர்வம்தான். சண்டை போட்டவர்கள் இரண்டுபேரும் பிரபலமான கவிஞர்களாம்.. அடுத்தமுறை பபாஸியே இலக்கியவாதிகள் சண்டை போட எழிலான ஸ்டால் ஒன்றை கொடுத்து உதவலாம். அங்கே ஒவ்வொருநாளும் யார் யாரோடு புரளப்போகிளார்கள் என்பதையும் பட்டியலிட்டுவிட்டால் ஜாலியான வாசகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என நினைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;''ஏன்ப்பா சண்டைபோடும்போது அதை கேமரால படம்புடிச்சி டிவி ரியாலிட்டி ஷோக்களில் கொடுத்தீங்கன்னா.. அதை அவங்க தினமும் காட்டுவாங்க..  நம்ம கவிஞருங்க ஃபேமஸாகி அவர்களுடைய புத்தகங்களும் லட்சக்கணக்கில் விற்குமில்லையா! உங்களுக்குலாம் கொஞ்சம்கூட ஐடியாவே இல்லையா'' என ஒரு பழைய கவிஞர் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சமையல் புத்தகங்களும் பார்க்க ஒரேமாதிரி தோன்றின. 500 கோலம், 400 கோலம் என மாமிகள் விதவிதமாக புத்தகங்கள் வாங்கினர். பகவத் கீதையும் குரானும் சல்லிசு விலையில் கிடைத்தது. எத்தனை விதமான சாமியார்கள்.. சாமியாராக ஆவதற்கு ஒரு வெண்தாடியின் மகத்துவம் எத்தனை முக்கியமானது என்பதை புத்தக கண்காட்சியில் ஸ்தாபித்திருந்த எண்ணற்ற சாமியார்களின் ஸ்டால்களுக்கு அலைந்து திரிந்து தெரிந்துகொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்காக ஒடுக்கப்பட்டவர்களுக்காக தலித்துகளுக்காக பெண்களுக்காக குரல் கொடுக்கிறோம் பேர்வழி முற்போக்கு எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஏனோ ஏழைகளுக்கு கட்டுபடியாகத அநியாய விலையிலும், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன்கதைகள்,மரியாதை ராமன் கதைகள், ராமாயணம்,மகாபாரதம், கோலங்கள் ஆயிரம், விதவிதமான சைவ சமையல், கற்பனை கதைகள் மட்ட ரேட்டில் கிடைத்தன. கேட்டலாக்குகள் நிறைய இலவசமாக கிடைத்தன. வேண்டியவரை வாங்கி பையை ரொப்பிக்கொண்டான். அப்போதுதான் அந்த புத்தகம் கண்ணில் பட்டது.. &lt;br /&gt;&lt;br /&gt;‘’முதலீடேயில்லாமல் பணம் சம்பாத்திக்க எளிய வழி’’ &lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல பணம் சம்பாதிப்போம்.. நிறைய சம்பாதிச்சாதான் இலக்கிய பொஸ்தகம் வாங்கமுடியும். அப்புறமா அதையெல்லாம் படிச்சி அப்பாடக்கர் ஆவோம் என முடிவெடுத்தான். புத்தகத்தை வாங்க நினைத்து பாக்கெட்டில் கைவைத்தால் ஆச்சர்யமாக அதிர்ச்சியாக இருந்தது. சும்மா சுற்றியதற்கே கொண்டுவந்த முன்னூறில் முக்கால்வாசி காலியாகியிருந்தது. அந்த புத்தகத்தின் விலை நூற்றம்பது! ‘’நான் இலக்கியவாதியா ஆகவே முடியாதா’’ என கதறி அழவேண்டும் போல இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-893751421370407011?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/893751421370407011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=893751421370407011' title='54 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/893751421370407011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/893751421370407011'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2012/01/blog-post_18.html' title='ஆணியே புடுங்க வேணாம்!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-YWNAmI9PRX8/Txaa4rF4Y6I/AAAAAAAAB9k/tMVJjFgAVxs/s72-c/baskar.jpg' height='72' width='72'/><thr:total>54</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-7098110139321953115</id><published>2012-01-11T15:48:00.001+05:30</published><updated>2012-01-12T14:36:17.815+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல்'/><title type='text'>குவியும் குப்பைகள், காத்திருக்கும் எமன்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3lc627bO4LU/Twq2pDtnfeI/AAAAAAAAB60/ljoL_HVaIYk/s1600/2008040859370401.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="http://4.bp.blogspot.com/-3lc627bO4LU/Twq2pDtnfeI/AAAAAAAAB60/ljoL_HVaIYk/s320/2008040859370401.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்! இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு... ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம்!! குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என கணக்கிட்டுள்ளது! எளிதாக விளக்கினால் கோவை மாவட்டத்தில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8000 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே குவியப்போகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகள் ஒன்றுக்கும் உதவாத யாருக்கும் பிரச்சனையில்லாத குப்பைகளாக மட்டுமேயிருந்து குப்பைகளாகவே வாழ்ந்து அப்படியே மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனால் யாருக்கு பிரச்சனை! ஆனால் அவை நம் உயிருக்கே உலை வைக்கவல்ல எமனாக மாறிவருவது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்த பயத்தினை உண்டாக்குகிறது. நம் சந்ததிகளுக்கு இந்த பூமியில் எதை மிச்சம் வைத்துவிட்டுப்போக போகிறோம் குப்பைகளையா சுத்தமான சுற்றுசூழலையா என்பதை இப்போதே முடிவு செய்யவில்லையெனில் நாளை அதற்கான வாய்ப்பேயில்லாமல் போகலாம்! &lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் குறிப்பாக சென்னை,கோவை,மதுரை,திருச்சி மாதிரியான நகரங்கள் குப்பைக்கொட்டுவதில் போட்டிபோடுகின்றன. சென்னையில் 1991ஆம் ஆண்டு கணக்குப்படி குவிந்த குப்பைகளின் அளவு வெறும் 600டன்! ஆனால் இன்றோ ஒவ்வொருநாளும் 4000டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்க்கப்படுகிறது. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கிராமங்களும் குப்பைகளுக்கு பலியாகும் நிலை உண்டாகியிருக்கிறது. நிலங்கள் பாழாகின்றன.. நீர்நிலைகள் அழிகின்றன.. மக்களின் உடல்நலம் உயிருக்கும் ஆபத்து.. &lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? எப்படி சரிசெய்வது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குப்பைகள் ஓர் எளிய அறிமுகம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகளில் உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள்,எல்க்டாரனிக் குப்பைகள்,அணுக்கழிவுகள்,கட்டிடக்கழிவுகள்,தொழிற்சாலைக்கழிவுகள் என பல வகையுண்டு. இவற்றை மொத்தமாக மக்கும் குப்பை,மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கலாம்! இதுதவிர சில ஸ்பெஷல் குப்பைகளும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60%. மக்காத குப்பைகளின் அளவு 35% மற்றவை 5%தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர்,மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்,மாமிசம் என நமக்கு மிகநெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான்! மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக்,ரப்பர்,கண்ணாடி,உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நம்மை அழிக்கவல்ல நரகாசுரன்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதுதான் மக்கிடுமே சார்! அதனால நமக்கு என்ன பாதிப்பு வந்துடப்போகுது’’ என நினைக்கலாம்! இந்த மக்கும் குப்பைகளை கொட்டி கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது. குப்பைமேடுகளில் எப்போதும் புகை வந்துகொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்க முடியும். காரணம் இந்த மீத்தேன்தான்! &lt;br /&gt;குப்பை மேடுகளுக்குள் எப்போதும் இந்த மீத்தேன் வாயு எரிந்துகொண்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு இதை முழுமையாக எரியவிடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்துகொண்டேயிருக்க காரணம். இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக்,ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால் பல பாதிப்புகளை உண்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்றுநோய்களும்,சுகாதார கேடும் உண்டாகும். அதுபோக கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குப்பைகளால் உண்டாகும் டயாக்சின் என்னும் வாயு காற்றின் மூலக்கூறுகளில் அமர்ந்துகொண்டுபல ஆயிரம் கிலோமீட்டர்கள் கூட பயணிக்கும் திறன் கொண்டவை. இவைதான் புற்றுநோய் உண்டாகவும் முக்கிய காரணமாகவும் உள்ளது! ‘’சார் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது , ஆனா பாவம் கேன்சர் வந்து செத்துட்டாரு’’ என நிறைய பேர் பேசுவதை கேட்டிருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இந்த குப்பைகளினால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான். இன்றைக்கு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் உண்டாக காரணம் இந்த குப்பைகள்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் ஒட்டுமொத்த குப்பைகளும் கொட்டப்படுகிற பகுதிகளான பள்ளிக்கரணை,கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி முதலான பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தாய்ப்பால் கூட விஷத்தன்மை கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறைய பேருக்குக் கருச்சிதைவும்,ஆண்மைக்குறைவும்,சுவாசக்கோளாறுகளும்,நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பது கண்டறிப்பட்டுள்ளது. காரணம் அங்கே மலைபோல குவியும் குப்பைகள்தான். அணுக்கதிர்வீச்சால் உண்டாகலாம் என்று நாம் அஞ்சுகிற அனைத்துவிதமான உயிர்க்கொல்லி நோய்களையும் ஏற்படுத்தும் சக்தி குப்பைகளுக்கும் உண்டு. ஒரு ட்யூப்லைட்டில் இருக்கிற ஒருகிராம் பாதரசம் போதும் ஒரு ஏக்கர் நீர்நிலையை புல் பூண்டு முளைக்காத அளவுக்கு அழிப்பதற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கு இம்மாதிரி பிரச்சனைகள் என்றால் மக்காத குப்பைகளால் நிலமும் நீர்வளமும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. கோவையில் ஒருகாலத்தில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் குளங்கள் மிச்சமிருக்கின்றன. இவற்றில் பலவும் குப்பைகள் கொட்ட மெகாசைஸ் குப்பைத்தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் கலந்த நீர்நிலைகளில் எந்த ஜீவனும் வாழ முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கும் சக்தி இந்த குப்பைகளுக்கு உண்டு. விஷத்தன்மையுள்ள பொருட்களை குப்பைகளில் எரிந்துவிடுகிறோம். ஆனால் அவை நிலத்தடி நீரோடு கலந்து பல நூறு கிலோமீட்டர்களுக்கு பூமிக்கு கீழே பயணிக்கின்றன. எங்கோ சென்னையில் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரை ஈரோட்டில் ஒருவர் உபயோகித்து பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குப்பைகள் ஏன் பெருகின?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cjUFqG05_90/Twq2zYgxvYI/AAAAAAAAB68/ipsXo7xy5RI/s1600/kuppai-medu-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="189" src="http://4.bp.blogspot.com/-cjUFqG05_90/Twq2zYgxvYI/AAAAAAAAB68/ipsXo7xy5RI/s320/kuppai-medu-2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம் வாழ்க்கை முறை மாற மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. முன்னெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக்கழிவுகளையும் வீணான காய்கறி பழங்களையும் அதில் போட்டு அதன்மீது கொஞ்சம் மண்ணை தூவிவிட்டால் போதும்.. சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் தயார்! ஆனால் இன்று வீடுகளே குழியளவு சுருங்கிப்போயிருக்கிறது. இதில் எருக்குழிக்கு எங்கே போவது. &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு வீட்டில் உபயோகித்த பால்கவர்,பவுடர் டப்பா,மைடப்பா,பாட்டில்கள்,உபயோகித்த டூத்பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காய்லாங்கடைக்காரனுக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால் இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான்! அதோடு எல்லாமே பிளாஸ்டிக் கவர்தான். சென்ட்டு பாட்டில் உபயோகித்தால் உபயோகித்துவிட்டு குப்பைத்தொட்டிக்கு எறிகிற கலாச்சாரம் எப்படியோ நமக்குள் நுழைந்துவிட்டது. இயல்பிலேயே திடக்கழிவு மேலாண்மையை கையாண்ட நம்மால் இன்று அதை பின்பற்ற முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-600 கிராம்!  &lt;br /&gt;&lt;br /&gt;இன்று நம் வீட்டில் ஒரே ஒரு குப்பைத்தொட்டி அதிலேயே உணவுக்கழிவுகளும் பவுடர்டப்பாவும் சென்ட்டு பாட்டிலும் மொத்தமாக குவிகின்றன. அதில் பிளாஸ்டிக் கவர்களின் பங்கும் கணிசமானது. பேட்டரி வேலை செய்யலையா?,ட்யூப்லைட் ப்யூஸ் போயிடுச்சா? தூக்கிவீசு தெருவில்! பரட்டோ வாங்கப்போனாலும் குருமாவைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் வாங்கவேண்டியிருக்கிறது. பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது உயர்வாக கருதப்படுகிறது. இந்த மனநிலை பெருக பெருக குப்பைகளின் அளவும் பெருகியுள்ளது. வாங்கும் சக்தி அதிகரிக்க கண்டதையும் வாங்கி வீட்டில் குவிக்கிறோம். முன்னெல்லாம் ஒரு தொலைகாட்சியின் ஆயுள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் இன்றோ எல்சிடி,3டி,எச்டி என மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப வேகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே எதுவும் பழசாகிப்போகிறது! நுகர்வு கலச்சாரமும் உலகமயமாக்கலும் எதையும் யூஸ் அன்ட் த்ரோ என நம்மை பழக்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோக சரியான மேலாண்மை இல்லாமல் தொழிற்சாலைகழிவுகளும் மருத்துவகழிவுகளும் மலைபோல குவிகின்றன? இதை தடுக்க சினிமாவில் வருவதைப்போல அந்நியனோ,ரமணாவோ,சூப்பர்மேனோ வரப்போவதில்லை.. பிறகு என்னதான் செய்வது &lt;br /&gt;இந்த குப்பைகளை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரசு என்ன செய்கிறது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து அதை அப்படியே கலந்துகட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற காலி இடங்களில் கொட்டி ரொப்புகிறது. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. அதாவது சென்னையில் கொடுங்கையூரில் இடமில்லையா.. பெருங்குடியில் கொட்டு அங்குமிடமில்லையா பள்ளிக்கரணையில் கொட்டு.. அங்குமிடமில்லையா... புதிய இடம் கண்டுபிடி! இதுபோல சென்னையில் எட்டு இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. அந்த குப்பைகளை எதுவும் செய்வதில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தற்போதைய சுழற்சிமுறை திடக்கழிவு மேலாண்மையாக இருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80% அரசினால் அள்ளமுடிகிறது! மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும் எங்கேயும் எப்போதும் கிடந்து மக்கி நோய் பரப்பி வாழும்!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dj-lDqWhOL4/Twq3PUtXzTI/AAAAAAAAB7E/Ygiu7nHoGrE/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="207" src="http://3.bp.blogspot.com/-dj-lDqWhOL4/Twq3PUtXzTI/AAAAAAAAB7E/Ygiu7nHoGrE/s320/7.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அரசு இந்த குப்பைகளுக்காக ஒரு டன்னுக்கு 500ரூபாயிலிருந்து 1100 வரை செலவளிக்கிறது. அட பரவாயில்லையே அப்படீனா நல்லாதானே பண்ணுவாய்ங்க என்று நினைக்கலாம். உண்மையில் இந்த தொகையில் 60-70% குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20-30% அதை எடுத்துசெல்லும் போக்குவரத்துகளுக்கும், வெறும் 5%தான் அதை கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. &lt;br /&gt;இந்த வெறும் 5%ஐ வைத்துதான் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பையை எருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்! அதனாலேயே என்னவோ கொட்டப்படுகிற குப்பைகள் தரம்பிரித்து கொடுக்கப்பட்டாலும் அவை மீண்டும் கலக்கப்பட்டு அப்படியே கொண்டுபோய் கொட்டப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது உங்கள் வீட்டுவாசலில் இருக்கிற குப்பையை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்துவீதியில் இருக்கிறவருடைய வாசலில் கொட்டுவதைப்போலவே!&lt;br /&gt;&lt;br /&gt;‘’நமக்கு நம்ம வீடு சுத்தமா இருந்தா போதும்.. என்கிற மனநிலையில்தான் அரசும் செயல்படுகிறது. அதாவது பெரும்பாலும் இக்குப்பைகள் நகரத்திற்கு நடுவே உருவாகி ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற சேரிப்பகுதிகளுக்கு அருகாமையில்தான் கொட்டப்படுகின்றன. இது சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இப்படித்தான். அதாவது பணக்கார,நடுத்தரவர்க்க மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்’’ என்கிறார் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.&lt;br /&gt;குப்பைகள் கொட்டப்படுகிற LAND FILLS எனப்படும் இடங்கள் சட்டப்படி என்னென்ன வசதிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டுமோ என்னென்ன அளவீடுகளுடன் இருக்கவேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை மிகமோசமான நிலையில் இருப்பதை யாருமே நேராகவே சென்றாலும் கூட பார்க்க முடியும். குப்பைலாரிகள்தான் நோய்பரப்பும் வேலைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. மருத்துவமனைகளில் தொழிற்சாலை கழிவுகளை மாநகராட்சி குப்பைவண்டிகளில் பெறக்கூடாது என சட்டம் சொன்னாலும் அதுவும் தொடர்கிறது. இது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஒவ்வொரு குப்பை லாரியும் குப்பையை கொட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது தினமும் நன்கு கழுவப்பட்டு சுகாதாரமாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது சட்டம்.. ஆனால் இங்கே யாருக்கு அதைப்பற்றி கவலை, இங்கே குப்பை கொட்டு இடங்களில் தெருநாய்கள் கூட நுழையக்கூடாது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குதான் குப்பை பொறுக்குகின்றனர், இவர்கள் இங்கேயிருந்து வெளியே செல்லும்போது குப்பைகளை மட்டுமே எடுத்துச்செல்வதில்லை, பயங்கரமான வியாதிகளையும்தான்! இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது’’  என வருந்துகிறார் பெயர் சொல்லவிரும்பாத மாநகராட்சி ஊழியர் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாங்க மட்டும் சளைச்சவங்களா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் அரசு கூவி கூவி குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க சொன்னாலும் விடாப்பிடியாக குப்பைகளை ஒன்றாக்கி கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம். அதோடு குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமேயில்லாமல் காலியிடங்கள்,சாக்கடைகள் என பார்த்த இடத்திலும் கொட்டுகிறோம். கரப்பான் பூச்சி ஸ்ப்ரே பாட்டில்களை குப்பைகளில் போடுவது தொடங்கி மெர்குரி மிகுந்த ட்யூப் லைட், காட்மியம் கொண்ட பேட்டரி என சுற்றுசூழலை ஒருகை பார்க்கத்தான் செய்கிறோம். அதோடு விட்டாலும் பரவாயில்லை.. கடலை மிட்டாய் வாங்கினால் பிளாஸ்டிக் கவர்.. அண்டா குண்டா வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர்.. வாங்கிக்கொண்டேயிருக்கிறோம். பிளாஸ்டிக் கவரில் கிடைக்காத பொருட்கள் மட்டமானவை என்னும் சிந்தனைகளை வளர்த்திருக்கிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதுவேறயா!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் பத்துவகையாக பிரிக்கப்பட்டு, அவை ஆறுவிதமான குப்பைக்கூடைகளில் அடைக்கப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். சிலவகை குப்பைகள் 900டிகிரி செல்சியஸில் எரிக்கப்படவும் வேண்டும். ஆனால் இன்று பல மருத்துவமனைகளும் மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களை கரக்ட் செய்து எப்படியோ பொதுக்கழிவுகளோடு கலந்துவிடுவது தொடர்கிறது. இதனால் தொற்றுநோய் அபாயம் மட்டுமல்ல.. கதிர்வீச்சு அபாயங்கள் கூட உண்டு. இதுபோக எலக்ட்ரானிக் கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகளும் கூட பொதுக்கழிவுகளோடு கலக்கப்படுவதும் தொடர்கிறது. இதுவும் தடுத்து நிறுத்தப்படவேண்டியது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீர்வுதான் என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து எக்ஸனரோ இன்டர்நேஷனல் அமைப்பினை சேர்ந்த நிர்மலிடம் பேசினோம். ‘’நாம்தான் இதை வெறும் குப்பைகளாக பார்க்கிறோம். ஆனால் அவை செல்வங்கள். அதை சரியான வழியில் பயன்படுத்தினால் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும், அதற்காக  கொஞ்சம் உழைப்பும்,பொறுமையும் அவசியம், குப்பைகளைக்கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம், நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யலாம், பயோகேஸ் தயாரிக்கலாம், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். அவை தவிர மறுசுழற்சி என்பதே லாபகரமான தொழில்தான்’’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நிர்மல் சொல்வதை நிஜமாகவே பல பகுதிகளில் செய்தும் காட்டியிருக்கிறார் அவர் மட்டுமல்ல பல தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இதை செயலில் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;‘’வேலூர் தங்கக்கோவிலுக்கு ஒவ்வொருநாளு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களால் உண்டாகும் குப்பைகளை சரியான வழியில் உபயோகிக்க முடிவுசெய்தது எக்ஸனோரா, அங்கே கிடைக்கும் உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுவதோடு அவை சந்தைகளில் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்காக தயாராகின்றன, இவை தவிர்த்து மிகச்சிறிய அளவு குப்பைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன’’ என்றார் எக்ஸனோரா நிர்மல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேன்ட் இன் ஹேன்ட் என்னும் அமைப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை தமிழகத்தின் பல இடங்களில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டம் பிபிசி நடத்திய உலக அளவிலான போட்டியொன்றில் முதல் மூன்று இடங்கில் ஒன்றை பிடித்துள்ளது! குப்பைகளின் மூலம் பயனடைதல் அதன்மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குதல் என்னும் வழியை பின்பற்றி இத்திட்டம் மகாபலிபுரத்தை குப்பையற்ற ஊராக மாற்றியதோடு மாற்றத்தை ஏற்படுத்தியும் காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுக்க இத்திட்டத்தினால் 2,13,000 வீடுகள் பலனடைந்து வருகின்றன. ஒவ்வொருநாளும் நூறு டன் குப்பைகளை இந்த அமைப்பு கையாளுகிறது. அதன் ஒருபகுதியாக மகாபலிபுரத்தில் பயோகேஸ் தயாரிப்பு மற்றும் உணவு கழிவிலிருந்து மின்சாரம் என விதவிதமான திட்டங்களால் அசத்திவருகின்றனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் என அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். மகாபலிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த உரம் விகம்போஸ்ட் என்ற பெயரில் சந்தைகளில் விற்கப்படவும் செய்கிறது! தயாரிக்கப்படும் பயோகேஸ் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது! மின்சாரம் உரம் தயாரித்தலுக்கான தொழிற்சாலையின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய மத்திய மாநில அரசுகளும் இதுபோலவே பல கிராமப்புற பஞ்சாயத்துகளில் எரு தயாரித்தல் மற்றும் குப்பைகளை தரம்பிரித்து மாற்றுவழிகளில் உபயோகித்தல் என சில திட்டங்களின் மூலமாக வெற்றிகரமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு செயல்படுத்தப்பட்டே வந்தாலும்.. அவை வெறும் 10%தான். மீதி?&lt;br /&gt;&lt;br /&gt;‘’இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன போதிய விழிப்புணர்வின்மை, இடமின்மை, தேவையான வசதிகள் இன்மை. இதை தீர்க்க மக்களிடையே எய்ட்ஸ் குறித்த பிரச்சாரம் போல முழு வீச்சுடன் குப்பைகள் குறித்த ஆபத்துகளை விளக்க வேண்டும். குப்பைகளை அள்ளுவதில் தொடங்கி அவற்றை கையாளுதல் அழித்தல் வரை சுற்றுசூழல் சட்டம் சொல்கிற படி செய்யவேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கினாலும் அதை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும். இதை செய்தாலே கூட குப்பைகளை தவிர்க்க முடியும். எங்களைப்போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் மக்களை இணைத்துக்கொண்டும் இதை நிச்சயமாக சாதிக்க இயலும்’’ என்கிறார் ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சிவகிருஷ்ணமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் பேசும் போது ‘’சுவீடன் மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் குப்பைகளை கையாள ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அவருடைய வருவாயில் சிறிய தொகையை அரசே நேரடியாக வரியைப்போல கட்டயமாக பெறுகிறது. அதைக்கொண்டு நாட்டின் குப்பைகளை கையாளுகிறது. அதோடு அங்கே தொழில் நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளின் தன்மைகேற்ப மறுசுழற்சி செய்வதற்கான தொகையை முன்பே செலுத்தவும் வற்புறத்தப்படுகின்றன, அதாவது ஒரு குளிர்பான பெட் பாட்டில் விற்கும்போது பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்யத்தேவையான தொகையை அரசுக்கு வரியாக செலுத்தியே ஆகவேண்டும், அதே போல மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நம் உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதனால் உண்டாகும் குப்பைகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதை மாற்ற வேண்டும். குப்பைகளுக்கு விலை நிர்ணயம் செய்துவிட்டால் யார்தான் அதை சாலையில் அநாதையாக விட்டுவைத்திருப்பார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போல இங்கேயும் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக தமிழகத்திலும் குப்பைகளை வெகுவாக குறைக்க முடியும்’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’மக்களை மட்டுமே குறைச்சொல்லிக்கொண்டிருக்கிறோம். சுகாதாரம் பேணவேண்டிய மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட ஆபத்தை விளைவிக்கும் பயோமெடிக்கல் வேஸ்ட்டுகளை ஏனோ தானோ என்றுதான் கையாளுகின்றன. ஏன் என்றால் இவற்றை அழிக்க அதிக செலவாகும் என்பதே. உடனடியாக மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண். &lt;br /&gt;&lt;br /&gt;தீர்வுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அரசு பல கோடி செலவில் திட்டங்கள் தீட்டினாலும் மக்களாகிய நம்மிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அண்மையில் தமிழக அரசு குப்பைகளை தரம் பிரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. வரவேற்கத்தக்க முயற்சி இது. ஆனால் பிளாஸ்டிக் கவரில் கெட்டுப்போன சட்டினியோடு குப்பைத்தொட்டியில் வீசும் பழக்கம் நம்மிடம் இன்னும் ஒழியவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை ஒரு பிளாஸ்டிக் பையை வாங்குவதற்கு முன்பாகவும், குப்பைத்தொட்டியில் எல்லா குப்பைகளையும் கலந்து கொட்டும் போதும் ஒரே ஒருநிமிடம் நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். நமது மூதாதையர்கள் நமக்காக விட்டுச்சென்ற அழகான பூமியை குப்பைகூளமாக மாற்றிவிட்டோம் என்பதை உணருவோம். &lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகளை கையாள்வதில் அரசை மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்காமல் நம்மால் இயன்றதை இந்த சுற்றுச்சூழலுக்கு செய்ய முன்வர வேண்டும். ஊழலைப்போலவே தனிமனிதனிடமிருந்துதான் இந்த மாற்றம் தொடங்கவேண்டும்! நம் குழந்தைகள் தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் குப்பை போடுவதை பாவமாக கருத வேண்டும். அதுதான் குப்பைகளுக்கு முடிவுகட்டும்.  இதோ இந்த நிமிடம் தமிழகம் முழுக்க ஒன்பது டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன..குப்பையை சப்பை மேட்டராக நினைத்தால் ஆபத்து நமக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மக்களாகிய நாம் செய்யவேண்டியதென்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*உங்கள் பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படவில்லையென்றாலும் தரம்பிரித்தே துப்புரவு தொழிலாளியிடம் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*காலிமனைகளில்,சாலை ஓரங்களில்,கழிவுநீர் கால்வாய்களில்,நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;*குப்பைகளை எரிக்கவே எரிக்காதீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;*கடைகளுக்கு செல்லும் போது துணி அல்லது சணல் பை எடுத்துச்செல்லவும். முற்றிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*இதையே நாம் பணியாற்றும் அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் அருகாமை வீடுகளில் செய்யவும் வலியுறுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* நான் இன்னும் அதிகமா செய்ய நினைக்கிறேன்ங்க என்பவரா நீங்கள்.. உங்களுக்காக இன்னொரு யோசனையும் இருக்கிறது. வீட்டிலேயே செலவில்லாமல் அதிக இடமில்லாமல் எரு தயாரிக்கலாம். அது மிக மிக சுலபமானதுதான். ஒரு சிறிய டிரம் அல்லது பானை கூட போதுமானது. அதன் உள்ளே மரப்பலகை ஒன்றை வைத்து அதில் கொஞ்சமாக மண் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே தினமும் உணவுக்கழிவுகளை கொட்டிவிட்டு கொஞ்சமாக காய்ந்த சாணமோ அல்லது காய்ந்த இலைகளையோ போட்டு மேலோட்டமாக ஓரளவு காற்று போகும் வழிசெய்து மூடிவைத்துவிடுங்கள். தினமும் இதுபோல செய்துவந்தாலே ஓரிரு மாதங்களில் அருமையான இயற்கை உரம் தயார்! அதை உங்கள் வீட்டு தோட்டத்திற்கோ பக்கத்துவீட்டு தோட்டத்திற்கோ கொடுக்கலாம் விற்கலாம்!  இல்லை சாலையிலே போட்டாலும் ஒருபிரச்சனையும் வராது. மண்ணுக்கு நல்லது! அதோடு வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளை திரட்டி மொத்தமாக காய்லாங்கடையில் போட்டுவிடுங்கள்! காசுக்கு காசு. சுற்றுசூழலுக்கும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரசு செய்ய வேண்டியது &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருப்பதுபோலவே இந்த இயற்கை எரு தயாரிக்கும் அமைப்பும் இருக்க நிர்பந்திக்கலாம். இதன்மூலமாக பெருமளவு மக்கும் குப்பைகள் சேர்வதை நிச்சயமாக குறைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*குப்பைகள் எந்த நிலையில் வந்தாலும் தரம்பிரித்து அதை சரியான முறையில் கையாள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*குப்பைகளை கையாள நல்ல கட்டமைப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;*மக்களிடையே குப்பைகள் குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*சிறிய அளவில் பயோகேஸ் தயாரித்தல் ,குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல்,மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*உற்பத்தியாளர்களிடமிருந்தே மறுசுழற்சிக்கான நிதியை பெற்று சரியான முறையில் உபயோகித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;*நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மருத்துவக்கழிவுகள் முற்றிலுமாக சரியான முறையில் கையாளப்படுவதோடு மக்கள் பகுதிகளுக்குள் எக்காரணம் கொண்டு வரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றினை அழிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என தொடர் சோதனைகள் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சட்டம் என்ன சொல்கிறது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருகிவரும் குப்பைகளை சரியாக பயன்படுத்தவும் அழிக்கவும் அதை கையாளவும் அரசின் சட்டங்கள் மிகவும் சரியாக இயற்றப்பட்டுள்ளன. MUNICIPAL SOLID WASTE RULES, 2000 என்கிற சட்டம் நகரங்களின் குப்பைகளை எப்படி அகற்றவேண்டும், அவற்றை என்ன செய்யவேண்டும் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறது. &lt;br /&gt;அதன்படி&lt;br /&gt;&lt;br /&gt;1.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நேரடியாகவோ குப்பைத்தொட்டிகள் மூலமாகவே குப்பைகளை பெறுதல்&lt;br /&gt;&lt;br /&gt;2.கிடைத்த குப்பைகளை அதன் தன்மைகேற்ப தரம் பிரித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;3.உணவுக்கழிவுகளை தனியாக எரு தயாரிக்கவும் பயோகேஸ் உற்பத்திக்கும் பயன்படுத்துதல்&lt;br /&gt;&lt;br /&gt;4.பயோ மெடிக்கல் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகரக்கழிவுகளோடு கலக்காதிருத்தல். மற்றும் அவற்றை வெவ்வேறு விதமான முறைகளில் கையாளுதல் அழித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;5.குப்பைகள் எரித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;6.தெருநாய்கள் முதலான விலங்குகள் குப்பைகளுக்கு அருகில் செல்லாமலும் அவற்றை கிளறி உணவுதேடுதலையும் தடுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;7.ஒவ்வொரு குடிமகனுக்கும் குப்பையை தரம்பிரித்து கொடுக்க வேண்டிய கடமையை உணர்த்துதல் மற்றும் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;8.மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளை அமைத்தல். அவை நிரம்புவதற்குமுன்பு சுத்தம் செய்தல். நேரடியாக துப்புறவு தொழிலாளர்கள் அதை கைகளால் தொட்டு உபயோகிக்காமல் ஆட்டோமேடிக் முறையை பயன்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;9.குப்பை அள்ளும் வாகனங்களை உபயோகித்தல். அந்த வாகனம் சுத்தமானதாகவும் தரம்பிரித்த குப்பைகளை கலக்காமல் எடுத்து செல்லும் வகையிலும் இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10.பெறப்பட்ட குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்தல் முதலான காரியங்களின் மூலம் அழித்தல். மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மட்டும் பிரித்து உபயோகித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;11.மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளை LAND FILLS  எனப்படும் இடங்களை உண்டாக்கி கொட்டவேண்டும். அப்பகுதி மக்கள் வசிக்காத பகுதிகள்,காடுகள்,நீர்வளப்பகுதிகள்,வரலாற்று பகுதிகள்,தேசியபூங்காக்கள் உள்ள பகுதிகளில் அமைக்க கூடாது. இந்த இடம் 25 ஆண்டுகளுக்கு குப்பை கொட்ட வசதியான இடமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12.இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும் காம்பவுன்ட் சுவர்கள் கட்டப்பட்டதாகவும், போதிய காவலர்களோடும் இருக்க வேண்டியது அவசியம். இங்கே வெளியாட்களும் தெருநாய்கள் முதலான விலங்குகளும் நுழைவதை தடுக்க வேண்டும். &lt;br /&gt;இவை தவிர உரம் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும், இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் காற்றும் நீரும் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் விரிவாக உள்ளன. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்து கொள்ள http://envfor.nic.in/legis/hsm/mswmhr.html என்ற இணையதள முகவரியில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆன்லைன் காயலாங்கடை!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர். இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது..  மேலும் விபரங்களுக்கு – http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி புதியதலைமுறை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-7098110139321953115?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/7098110139321953115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=7098110139321953115' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/7098110139321953115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/7098110139321953115'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2012/01/blog-post_11.html' title='குவியும் குப்பைகள், காத்திருக்கும் எமன்!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3lc627bO4LU/Twq2pDtnfeI/AAAAAAAAB60/ljoL_HVaIYk/s72-c/2008040859370401.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-8962090474588692590</id><published>2012-01-09T14:16:00.006+05:30</published><updated>2012-01-09T18:49:28.094+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>மயில் ரக்க...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8qQ9ohW9C7Q/TwqoeZwt7iI/AAAAAAAAB6o/L0MciT9UYUc/s1600/4515_peacock_feather.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-8qQ9ohW9C7Q/TwqoeZwt7iI/AAAAAAAAB6o/L0MciT9UYUc/s320/4515_peacock_feather.jpg" width="208" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாவுக்கு மூன்று நாளாக ரொம்பவே கவலையாகிவிட்டது. பள்ளிக்கூடத்தில் யாரோ கொடுத்த மயில்ரக்கையை கணக்கு புத்தகத்தில் வைத்திருந்தாள். அது குட்டிபோடும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தும் அது குட்டிபோடாமல் இருந்ததே கவலைக்குக் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;‘’அப்பா.. ரம்யாவோட மயில் ரெக்கை ரெண்டு குட்டி போட்டுடுச்சுப்பா.. என்னோட மயில் ரெக்கை எப்போ குட்டிப்போடும்’’ என ஒவ்வொரு நாளும் கேட்பாள். ராஜேஷும் ‘’நாளைக்கு குட்டிப்போட்டிடும்மா’’ என்று பொய்யான நம்பிக்கை தருவான். தினமும் காலையில் எழுந்ததும் ஓடிப்போய் கணக்கு புத்தகத்தை திறந்து பார்ப்பாள். அதில் அவள் ஏற்கனவே வைத்திருந்த அதே மயில் ரக்கை உறங்கிக்கொண்டிருக்கும். புத்தகத்தை பார்த்ததும் முகம் வாடிவிடும். கணக்கு புத்தகத்திலிருந்து தமிழ்புத்தகத்திற்கு வீடு மாற்றிப்பார்த்தாள் அப்போதும் குட்டிபோடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அப்பா! நேத்து நைட்டு சொன்னியே நாளைக்குக் காலைல குட்டிப்போட்டிடும்னு.. ஏன்ப்பா இன்னும் குட்டிப்போடல, என்னை தூங்கவைக்கறதுக்காக பொய் சொன்னியா!’’ என கோபத்துடன் திட்டுவாள். பார்க்க பாவமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;‘’மயில்ரக்கைலாம் குட்டிபோடாதுடா.. அதுலாம் சும்மா.. ரம்யா வீட்லருந்து இன்னொரு மயில் ரக்கைய எடுத்துட்டுவந்து புக்குக்குள்ள வச்சி உன்னை ஏமாத்திருப்பா.. அதெல்லாம் நம்பாத பாப்பா’’ என்று சொன்னாலும் விடமாட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’போப்பா! அதெல்லாம் கிடையாது நானும் உன்னையமாரியே ரம்யா கிட்ட கேட்டேன்பா.. என்னடி வீட்லருந்து வேற ரக்கை வச்சி எடுத்துட்டு வந்துட்டியானு.. ஆனா அவ நிஜமாவே குட்டிப்போட்டுச்சுனுதான் படிப்புமேல பிராமிஸ் பண்ணி சொன்னா, நம்முள்து நல்ல ரக்கை இல்ல போல.. உடம்பு சரியில்லையோ என்னவோ.. அதான் குட்டிப்போடல’’ என அவளுக்கான காரணங்களை அவளே கண்டுபிடிப்பாள். &lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கவே பாவமாக இருக்கும். பாப்பாவைப்போலவே ராஜேஷூம் இரண்டாம் வகுப்பு படித்தபோது&amp;nbsp; இதுபோல மயில் ரக்கைகள் வைத்து அது குட்டிபோடுமா என காத்திருந்து ஏமாந்துபோயிருக்கிறான். அப்போதெல்லாம் அவனுடைய நண்பன் வடிவேலுவின் புத்தகத்தில் இந்த மயில் ரக்கைகள் குட்டிப்போட்டதாக சொல்லி நிறைய காட்டுவான். &lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இன்று வரை அதுவே புதிரான விஷயம்தான். சிலருடைய புத்தகங்களில் மட்டும் எப்படியோ இந்த மயில்ரக்கைகள் குட்டிப்போடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. தாயில்லாத குழந்தை. மனசு கேட்காமல் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் கோயில்வாசலில் ஒரு நல்ல ஃப்ரஷ்ஷான மயில்ரக்கையை வாங்கிக்கொண்டு வந்து  அன்றைக்கு இரவே ராவோடு ராவாக பாப்பா உறங்கிய நேரம் பார்த்து அவளுடைய தமிழ் புத்தகத்தை திறந்து அதில் அந்த மயிலிறகை வைத்துவிட்டான். விடிந்தால் அதை பார்த்து குட்டிப்பாப்பா துள்ளிகுதித்து மகிழ்வாள் என்கிற கனவோடு தூங்கப்போனான். விடிந்தது. பாப்பா அந்த புத்தகத்தோடு டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ராஜேஷிடம் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அப்பா அந்த புக்குல மயில்ரக்கைய ஏன் வச்ச..?’’ என்றாள். ராஜேஷூக்கு திக்கென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’நான் வைக்கல பாப்பா.. அது உன் ரக்கை போட்ட குட்டியா இருக்கும்.. ’’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பொய் சொல்லாத.. நீதான் வச்சிருக்க எனக்கு நல்லாத்தெரியும்’’ என உறுதியாக சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஏன் பாப்பா இப்படி சொல்ற.. அப்பா பொய் சொல்லுவேனா.. நான்தான் வைக்கலேனு சொல்றேனில்ல’’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஏன்ப்பா இதுமாதிரிலாம் பண்ற.. பொய்வேற சொல்ற, பொய்சொல்றது ரொம்ப தப்பு! இங்கே பார் இது நான் வச்சிருந்த மயில் ரக்கை..’’ என அவளுடைய மயில் ரக்கையை காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இது நீ வச்ச மயில் ரக்கை’’ என அவன் இரவு வைத்த மயில்ரக்கையையும் காட்டினாள். ராஜேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. திருதிருவென முழித்தபடி பாப்பாவிடம் என்ன சொல்வது என யோசித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;‘’எங்கேயாச்சும் குட்டி அதோட அம்மாவை விட பெரிசா இருக்குமா! பாரு நீ வச்ச மயில் ரக்கை எவ்ளோ பெரிசா இருக்கு.. என்னோட மயில்ரக்கைய பாரு எவ்ளோ சின்னதா இருக்கு.. இதுகூட தெரியாம மயில்ரக்கையை கடைலருந்து வாங்கிட்டு வந்து வச்சதுமில்லாம பொய்வேற சொல்ற.. போப்பா..பேட் அப்பா.. இவ்ளோ பெரியவங்களா இருந்துட்டு பொய் சொல்லலாமா? பொய் சொல்லக்கூடாதுனு நீதான் எனக்கு சொல்லிக்குடுக்கணும்!’’ என பேசிவிட்டு எரிச்சலோடு அவன் வாங்கி வைத்த மயில்ரக்கையை டேபிளில் வைத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள். &lt;br /&gt;&lt;br /&gt;விக்கித்துப்போய் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்க ஆரம்பித்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாவின் அராஜகம் இப்படியாக அதிகமாகிக்கொண்டே சென்றது. ஒருநாள் மாலைநேரம் அலுவலகத்திலிருந்து வந்தவனிடம் தன் கணக்கு புத்தகத்துடன் ஓடிவந்தாள். ''அப்பா தோ பாரு என் மயில் ரக்க குட்டி போட்டிருச்சி!'' என்று காட்டினாள். ராஜேஷுக்கு புரியவேயில்லை. எடுத்துப்பார்த்தான் ஏற்கனவே பாப்பா வைத்திருந்த அதே மயில்ரக்கையின் ஜாடையில் இன்னொரு சின்ன மயில்ரக்கை! &lt;br /&gt;&lt;br /&gt;''பாப்பா உண்மைய சொல்லு இது எப்படி வந்துச்சு..''&lt;br /&gt;&lt;br /&gt;''அப்பா இது அந்த ரக்க போட்ட குட்டிப்பா.. பாரு எவ்ளோ அழகா இருக்குன்னு.. அவங்க அம்மா மாதிரி''&lt;br /&gt;&lt;br /&gt;''மயில்ரக்கைலாம் குட்டிபோடாதும்மா! நீ நல்ல பாப்பா தானே பொய்சொல்லாத! இந்த குட்டி ரக்க எப்படி வந்துச்சு''&lt;br /&gt;&lt;br /&gt;''அப்பா படிப்பு பிராமிஸ்! இது அந்த ரக்கை போட்ட குட்டிதான்ப்பா'' என்று அடித்து சத்தியமும் செய்தாள். ராஜேஷுக்கு குழப்பமாக இருந்தது. இன்னொரு முறை கணக்கு புத்தகத்தை பார்த்தான்..ஆமாம் இரண்டு மயில் ரக்கை இருக்கிறது.. ஆனால் எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;''அப்பா உனக்கு ஐஸ்க்ரீம் சாக்லேட் வீடியோகேம்ஸ்லாம் வாங்கித்தரேன்.. உண்மைய சொல்லும்மா'' &lt;br /&gt;&lt;br /&gt;''அப்பா இந்த மயில்ரக்கைய தமிழ் புக்குலருந்து எடுத்து கணக்கு புக்குக்குள்ள காலைல ஸ்கூலுக்கு போனதும் வச்சேனா! அப்புறம் ஈவ்னிங் எடுத்துப்பார்த்தா குட்டிப்போட்டிருக்கு! மயில்ரக்கை எப்படி குட்டிபோடும்னு இவ்ளோ பெரிய ஆளு உங்களுக்கே தெரியல.. நான் குட்டிப்பொண்ணு எனக்கு எப்படி தெரியும்! போப்போ ஒனக்கு ஒன்னுமே தெரியல!'' என்றாள் பாப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறையும் விக்கித்துப்போய் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்க ஆரம்பித்தான் ராஜேஷ். இதற்குமேல் அவளை கட்டாயப்படுத்தி கேட்டால் அழத்தொடங்கிவிடுவாள்.. அவளை சமாதானப்படுத்தவே முடியாது. அதனால் இந்த பிரச்சனையை இத்தோடு நிறுத்திவிட்டு ''ஓக்கே பாப்பா! அது இன்னொரு குட்டிப்போட்டா எனக்கு ஒன்னு குடும்மா'' என்று சொல்லிவைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய டைரியில் அன்றொரு நாள் பாப்பா வீசிச்சென்ற மயில்ரக்கையை பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதை எடுத்துப்பார்த்தான். அது குட்டியெல்லாம் போடாமல் அமைதியாக டைரியின் பக்கங்களுக்குள் உறங்கிக்கொண்டிருந்தது.சிலருடைய புத்தகங்களில் மட்டும் எப்படியோ இந்த மயில்ரக்கைகள் குட்டிப்போடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி-வசந்தம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-8962090474588692590?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/8962090474588692590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=8962090474588692590' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/8962090474588692590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/8962090474588692590'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2012/01/blog-post_09.html' title='மயில் ரக்க...'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-8qQ9ohW9C7Q/TwqoeZwt7iI/AAAAAAAAB6o/L0MciT9UYUc/s72-c/4515_peacock_feather.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-9061162621482854170</id><published>2012-01-07T14:44:00.001+05:30</published><updated>2012-01-07T14:48:40.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக கண்காட்சி 2012'/><title type='text'>நூலும் நூல் சார்ந்த இடமும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-b04_LK0XumY/TwgL42B-VjI/AAAAAAAAB54/SnxZQrUcKTg/s1600/CBF%2BDay%2B00%2BPhoto%2B01%2B1st%2BGateway%2Bfrom%2Bthe%2BLeft%2BEnd%255B4%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-b04_LK0XumY/TwgL42B-VjI/AAAAAAAAB54/SnxZQrUcKTg/s320/CBF%2BDay%2B00%2BPhoto%2B01%2B1st%2BGateway%2Bfrom%2Bthe%2BLeft%2BEnd%255B4%255D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கி குவித்த புத்தகங்களில் பாதிகூட இன்னும் படித்து முடிக்கப்படவில்லை. அதனால் இம்முறை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறேன். ஏகப்பட்ட பதிப்பகங்கள் கோடிக்கணக்கான நூல்கள். அடுத்த பத்து நாட்களுக்கு கண்களுக்கும் கால்களுக்கும் நிறைய வேலையிருக்கும் என்றே நினைக்கிறேன். முடிந்தவரை அங்கே காண்பதையும் கேட்பதையும் நம் இணையதளத்தில் தரமுயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போல இந்த ஆண்டும் கிழக்கு,நக்கீரன் மாதிரியான பெரிய பதிப்பகங்கள் ஏகப்பட்ட பினாமி ஸ்டால்களை போட்டிருப்பதை பார்க்க முடிந்தது. போலவே ஏகப்பட்ட சாமியார் மார்க்கெட்டிங் ஸ்டால்கள்ளை காண முடிந்தது. இதில் மத வேறுபாடே கிடையாது. யுனானி சித்த மருத்துவ ஸ்டால்களும் நிரம்பியிருந்ததை பார்க்க முடிந்தது. நோனி மருந்து விற்கும் ஸ்டால் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தக கண்காட்சியில் இந்த சாமியார்களுக்கும் மருத்துவர்களுக்கும் என்ன வேலை என்கிற கேள்வியிருந்தாலும் பொருளாதார அடிப்படையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாதோ என்றும் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-obIndXmZtDc/TwgMcBxK8PI/AAAAAAAAB6c/vQYnT6KD1oc/s1600/2012-01-05%2B19.52.49.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://1.bp.blogspot.com/-obIndXmZtDc/TwgMcBxK8PI/AAAAAAAAB6c/vQYnT6KD1oc/s200/2012-01-05%2B19.52.49.jpg" width="200" /&gt;&lt;/a&gt;ஆண்டுதோறும் புத்தக காட்சி அரங்கில் கிழக்கு பதிப்பக சந்துகளில் நடைபெறும் எழுத்தாளர் பாராவின் வாசகர் சந்திப்பு இந்த முறை மிஸ்ஸிங். அதனாலேயே என்னவோ புத்தக கண்காட்சியை பூரணமாக அனுபவித்த சுகமேயில்லை. பீரில்லாத டாஸ்மாக்கும் சாரு இல்லாத புக்ஃபேரும் ஒன்றுதான். கடந்து சில ஆண்டுகளாக உயிர்மை ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுக்கும் அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா &lt;br /&gt;இந்தமுறை இல்லை என்பது வெந்த எதிலோ வேல் பாய்ச்சுவதாக அமைந்தது. ஆனால் உயிர்மை அரங்கில் சாருவுக்கு பதிலாக இம்முறை எஸ்ரா அமர்ந்திருக்கிறார். ஆட்டோகிராஃப் போடுவதோடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார். நேரமிருந்தால் யார் வேண்டுமானாலும் அவரோடு பல மணிநேரங்கள் உரையாட முடியுமென நினைக்கிறேன். அவரோடு எப்போதும் போல மனுஷ்யபுத்திரனும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் பல புத்தகங்கள் மீனாட்சி புத்தக நிலையத்தில் மலிவு விலையில் கிடைக்கிறது. நமக்கு அறிமுகமில்லாத அவருடைய பல நாவல்களும் 50ரூபாய்க்கும் கம்மியாக கிடைப்பது அவருடைய பெருந்திரளான ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தியாகத்தான் இருக்கும். கண்காட்சி தொடங்கிய இரண்டே நாளில் கொண்டு வந்த புத்தகங்களில் முக்கால் வாசி காலி என கடைக்காரர் பெருமிதமாக சொன்னார். ‘’யாரோ இன்டர்நெட்டுல எழுதிருப்பாங்க போல சார்.. வரவங்க பூரா நெட்ல பார்த்தோம் சுஜாதா புக்கு எங்கேனுதான் கேக்கறாங்க’’ என்றார். ஸ்டாக் தீர்வதற்குள் முந்துங்கள். சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கிற இன்னொரு பதிப்பகமான விசாவில் எல்லாமே ரீப்ரின்டில் ஏகத்திற்கும் விலையேற்றி விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தக சந்தையில் நம் கமர்ஷியல் தோழர் யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் நாவல் நன்றாக விற்பதாக அங்கே கடை போட்டிருக்கும் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் மகிழ்ச்சியுடன் கூறினார். (ஸ்டால் எண் – 334). விலை 50தான். சுஜாதாவின் கதைகளை விரும்பி படிக்கும் வாசகர்களுக்கு இந்நாவல் நல்ல தீனியாக இருக்கும் என பிரபல எழுத்தாளர் ஒருவர் அழிக்கபிறந்தவனை படித்துவிட்டு நேரில் பாராட்டினார். டிஸ்கவரியிலேயே பதிவர் உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் சிறுகதை தொகுப்பும், கேபிள் ஷங்கரின் தெர்மக்கோல் தேவதைகளும் கிடைக்கிறது. டிஸ்கவரி புக்பேலஸ் கடையில் இணையவாசி என அறிமுகம் செய்துகொண்டால் சிறப்பு சலுகைகள் கொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கருவூலம் என்கிற ஸ்டாலில் திராவிட இயக்க வரலாறு என்கிற குண்டு புஸ்த்தகம் வெகுவாக கவர்ந்தது. விலையும் 300தான். 1999வரையிலான திராவிட இயக்க வரலாறு எளிய தமிழில் சின்னச்சின்ன சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஒன்று வாங்க நினைத்திருகிகறேன். கிழக்குப்பதிப்பகத்தில் இன்னமும் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று பார்க்கவில்லை. ஆனால் இந்த புத்தக கண்காட்சியில் சிறந்த கேட்டலாக் அவர்களுடையதுதான். இலக்கிய நாவலினைப்போல பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவசம் என்பதால் அந்தப்பக்கம் செல்பவர்கள் கேட்டுவாங்கிச்செல்லவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-utWwIlzn7Vg/TwgMNDvwDtI/AAAAAAAAB6E/ueMjpa6F2XU/s1600/CBF%2BDay%2B00%2BPhoto%2B06%2BStall%2BNo%2B372%2BOur%2BEvergreen%2BHeroes%2Bin%2Ba%2BBanner%255B3%255D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-utWwIlzn7Vg/TwgMNDvwDtI/AAAAAAAAB6E/ueMjpa6F2XU/s320/CBF%2BDay%2B00%2BPhoto%2B06%2BStall%2BNo%2B372%2BOur%2BEvergreen%2BHeroes%2Bin%2Ba%2BBanner%255B3%255D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காமிக்ஸ் ரசிகர்களுக்கு சரியான வேட்டை ஸ்டால் நம்பர் 372ல் காத்திருக்கிறது. முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் தரம் பிரித்து வகை வகையாக வரிசைபடுத்தி வைத்திருக்கின்றனர். கௌபாய்கதைகள், சயன்ஸ் பிக்சன் கதைகள், டெக்ஸ்வில்லர் கதைகள், மர்ம மனிதன் மாண்ட்ரேக், துப்பறியும் கதைகள், எனக்கு பிடித்த சிஐடி ராபின் சாகசங்கள் என ஏகப்பட்ட காமிக்ஸ்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. அதுபோக 900ரூபாய்க்கு லயன்+முத்துகாமிக்ஸ் ஃபுல்செட் ஒன்றும் வைத்துள்ளனர். மேலதிக விபரங்களை அடுத்த பதிவில் தருகிறேன். நேற்று ஒரே நாளில் பதினைந்துக்கும் மேல் ஃபுல்செட் விற்றுத்தீர்வதால் ஆர்வமுள்ள நண்பர்கள் இன்றே வாங்கிப்பயனடையலாம்! அதோடு லயன் கம்பேக் ஸ்பெஷல் என்கிற புதிய 200 பக்க காமிக்ஸ் களஞ்சியமும் விற்பனைக்கு வந்துள்ளது. &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6O6kpFkKsfI/TwgMUCHbf7I/AAAAAAAAB6Q/y8apECp4vEQ/s1600/Lion%2BComics%2BComeBack%2BSpecial%2BJan%2B2012%2BFront%2BCover%255B5%255D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-6O6kpFkKsfI/TwgMUCHbf7I/AAAAAAAAB6Q/y8apECp4vEQ/s200/Lion%2BComics%2BComeBack%2BSpecial%2BJan%2B2012%2BFront%2BCover%255B5%255D.jpg" width="149" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர சொல்ல இன்னும் நிறையவே இருக்கிறது.. அது அடுத்த பதிவில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் - கிங்விஸ்வா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-9061162621482854170?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/9061162621482854170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=9061162621482854170' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/9061162621482854170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/9061162621482854170'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2012/01/blog-post_07.html' title='நூலும் நூல் சார்ந்த இடமும்'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-b04_LK0XumY/TwgL42B-VjI/AAAAAAAAB54/SnxZQrUcKTg/s72-c/CBF%2BDay%2B00%2BPhoto%2B01%2B1st%2BGateway%2Bfrom%2Bthe%2BLeft%2BEnd%255B4%255D.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-5946581219234781188</id><published>2012-01-06T17:17:00.003+05:30</published><updated>2012-01-06T17:41:46.214+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கோடம்பாக்கம் கும்மி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-CWmbwaYEhiE/Twbe1Ps2FXI/AAAAAAAAB5g/H5BDpOzAUW0/s1600/Arulnidhi-Mouna-Guru-stills.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="246" src="http://3.bp.blogspot.com/-CWmbwaYEhiE/Twbe1Ps2FXI/AAAAAAAAB5g/H5BDpOzAUW0/s320/Arulnidhi-Mouna-Guru-stills.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நல்லபடங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் தோல்வியை தழுவுகிற துயரமெல்லாம் கலைஞர் ஆட்சியில் மட்டுமல்ல கருணை உள்ளம் கொண்ட அம்மாவின் ஆட்சியிலும் நடக்கிறது. குடும்ப ஆட்சி மாறினாலும் கண்ணீர்க்காட்சிகள் மாறவில்லை என கோடம்பாக்கம் வட்டாரங்கள் இப்போதே கூடிகூடி கும்மியடித்து அழத்தொடங்கிவிட்டனர். அதற்கு சரியான உதாரணம் அண்மையில் வெளியான மௌனகுரு மற்றும் மகான் கணக்கு. மௌனகுரு படத்தின் நாயகன் கலைஞரின் பேரன் அருள்நிதி என்பது நீதிக்கதைகளை உங்களுக்கு நினைவூட்டலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கடந்த ஆண்டில் வெளியான மிகச்சில நல்லபடங்களில் மௌனகுருவும் ஒன்று என விமர்சகர்களால் பரவலாக பாராட்டப்பட்ட படம். ராஜபாட்டை பார்த்து பேண்ட்டு சட்டையெல்லாம் கிழித்துக்கொண்டதிலிருந்து இனி தமிழ்படமே பார்ப்பதில்லை என சபதமேற்றிருந்தேன். ஆனால் நண்பர்கள் தொடர்ந்து மௌனகுரு நன்றாக இருப்பதாகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமென்றும் சொல்லி சொல்லி அதிர்ச்சியூட்டிக்கொண்டே இருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மௌனகுரு படத்தின் நாயகன் அருள்நிதி , கலைஞர் அளவுக்கு பிரமாதமான திறமை கொண்டவரில்லை. இருந்தாலும் அவருடைய வம்சம் திரைப்படம் பசங்க பாண்டிராஜின் கதையால் எப்படியோ பிழைத்துக்கொண்டது. ஆனால் அவர் நடித்த உதயன் படத்தினை பார்த்து சரக்கடிக்காமலேயே வாமிட் பண்ணியிருக்கிறேன். அப்படி ஒரு படம் வந்தது கூட பலருக்கும் தெரிந்திருக்காது. படுபயங்கரமான திரைப்படம் அது. அதைபற்றி நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. அது ஒரு காரணம் என்றாலும் படம் பார்க்க தூண்டுகிற எந்த அம்சமும் இல்லாமல் இவ்வளவு மொக்கையாக கூட டிரைலர் வெட்ட முடியுமா என கீழத்தெரு கிச்சாகூட கேட்குமளவிற்கு வெட்டப்பட்ட ஒரு டிரைலரும் படம் பார்க்கிற ஆர்வத்தை வெகுவாக குறைத்தன. இருந்தும் நான் மௌனகுரு படம் பார்த்த சம்பவம் ஒரு விபத்தினைப் போல நடந்தேறியது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;படமெடுத்தவர் மிஷ்கினுக்கு தூரத்து சொந்தமாக இருக்கலாம், திரையில் வருகிற எல்லா காட்சிகளும் அச்சு அசல் மிஷ்கின் டைப். அதிலும் அந்த மஃப்டி போலீஸ்காரர்கள்,ஹாஸ்டல் காட்சிகள்,வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள், பொறுமையாக நகரும் காட்சிகள் என எல்லாமே மிஷ்கினையே நினைவூட்டியது. அதுதான் இந்த படத்தின் குறையும் கூட. விருவிருவென வெறித்தனமாக ஹைவேஸில் பாய்கிற கார் போல சென்றிருக்க வேண்டிய படம் பொறுமையாக மெட்ரோ ரயில் பிராஜக்ட்டைப்போல சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் வேகம் தவிர்த்து குறையொன்றுமில்லை! சிறந்த திரைக்கதை, நல்ல கதை சொல்லும்பாணி, பாத்திரத்தேர்வு, ஒரளவு ஓக்கேவான இசை, நாடகத்தனமில்லாத எளிமையான வசனங்கள், இயற்கையான லைட்டிங்கில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் என எல்லா விதத்திலும் சிறந்தபடம். எப்போதும் உம்மென எந்த ரியாக்சனும் இல்லாமல் கல்லுப்பிள்ளையார் போலவே நடிக்கும் அருள்நிதிக்கு அல்வா போல கேரக்டர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;குடும்பம் என்கிற அமைப்பின் பிடிமானத்தில் வளர்க்கப்படுகிற ஒரு சாதாரண மாணவன் அதன் பிடியிலிருந்து விலக்கிவைக்கப்படுவதால் உண்டாகும் மன அழுத்தம் , அவன் அந்த சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என நீளும் கதையை எந்த பாசாங்கும் இல்லாமல் சிறந்த காட்சி அனுபவமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு பாராட்டுகள். நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் மௌனகுருவும் இடம்பெறும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zDl1KlczxiI/TwbfPg4uPRI/AAAAAAAAB5s/b2eVQItiZCo/s1600/mahaan-kanakku_132196358822-659x1006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-zDl1KlczxiI/TwbfPg4uPRI/AAAAAAAAB5s/b2eVQItiZCo/s320/mahaan-kanakku_132196358822-659x1006.jpg" width="210" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சென்ற வாரம் பார்த்த இன்னொரு உருப்படியான படம் மகான் கணக்கு. மொக்கை பிலிம் கிளப் சார்பில் பார்க்கிற எந்த படமும் உருப்படியாக இருந்ததாக சரித்திரமே இல்லை. மகான் கணக்கு மொக்கை படமாகவே இருந்தாலும் அது பேசுகிற காட்சிப்படுத்தியிருக்கிற விஷயம் தமிழ்சினிமாவுக்கு புதுசு. கிரடிட் கார்டு,பர்சனல் லோன் மாதிரியான சமாச்சாரங்களால் நாம் படுகிற துன்பங்களையும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கிற கரம் மசாலா படம்! அதிலும் லோன் வாங்கிவிட்டு அவதிப்படும் மனிதர்களை மிகச்சரியான காட்சிகளால் கண்முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அதிலும் வீட்டிற்கே வந்து மிரட்டுகிற வங்கி அதிகாரிகள் , அவர்கள் தரும் மன உளைச்சல் என நீளும் காட்சிகள் குலைநடுங்க வைக்கிறது. தியேட்டரிலேயே பலரும் பச்சை பச்சையாக பிரபல வங்கிகளை திட்டித்தீர்த்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;படத்தின் ஹீரோயின் தொடங்கி இசை,கேமரா என எல்லாமே சுமார்தான் என்றாலும் வங்கிக்கடன் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சுவாரஸ்யமாக படமெடுத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். படம் பார்க்கும் அனைவருக்குமே இந்த தனியார் வங்கிகள் தருகிற கிரடிட் கார்டுகள்,பர்சனல் லோன் மாதிரியான ஏமாற்றுவேலைகளின் மேல் நிச்சயம் வெறுப்புண்டாகும் என்பது நிச்சயம். இனி எப்போதும் இந்த வங்கிகளில் எந்த கடனையும் வாங்க பத்துமுறை யோசிக்க தூண்டும். மிகப்பெரிய ஹீரோக்கள் நடித்திருக்க வேண்டிய படம், நடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் வங்கிக்கடன் குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டுபோயிருக்கலாம். படம் கோவையில் நடப்பதாக காட்டப்படுவதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்ளுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சொந்த ஊர் என்றாலே கொஞ்சம் பெருமிதமும் ஒரு சிலிர்ப்பும் உண்டாவது இயல்புதானே. அந்த வகையில் கோவையை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி ‘’கோயம்புத்தூரா கொக்கா’’ என்கிற வீடியோ ஆல்பத்தினை உருவாக்கியுள்ளனர். பாடலில் ஆங்காங்கே கொஞ்சம் பீட்டர்த்தனம் தென்பட்டாலும் பாடலை காட்சிப்படுத்திய விதத்திலும் அது எழுதப்பட்டதிலும் கவர்கின்றனர். இதை பார்க்கிற ஒவ்வொரு கோயம்புத்தூர் காரவீகளுக்கும் ஒருநிமிஷம் ஒடம்பு சிலுத்துக்கும் நெஞ்சுமுடி நட்டுக்கும் என்பது நிச்சயம். கோவையின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் அதன் தன்மை மாறாமல் படம் பிடித்து சரியான அளவில் எடிட் செய்து அருமையாக கோர்த்துள்ளனர். இதை பார்க்கும் போது நிஜமாகவே நானும் ஒரு கோயம்புத்தூர்காரன்தானுங் என்கிற காலர் உயர்த்துதலின் சுயபெருமைத்துவம் வருவது இயல்புதான் என்றே நினைக்கிறேன். அதே நேரம் கோவையின் அழகே பச்சையும் பசுமையும்தான் அது வரவர மாமியா கழுதா மாறி ஆனாளாம் என்பதுபோல கோவையில் பச்சை என்கிற நிறமே இல்லாத அளவுக்கு கான்க்ரீட் காடாக மாறிக்கொண்டிருப்பதாகவும் ஒரு அச்சம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மரமில்லாத கோவைக்கும் மயிரில்லாத மண்டைக்கும் மரியாதை கிடையாது அதை கோவை வாசிகள் உணர்ந்து நிறைய மரம் நடுங்கப்பா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கோயம்புத்தூரா கொக்கா வீடியோ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/ZYXIjrTGNhQ" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்தியாவே கொலைவெறி பிடித்து அலைந்த போதும் எனக்கு ஏனோ அந்தப்பாடல் மனதில் ஒட்டவேயில்லை. காரணம் இதையெல்லாம் கிமுவில் இளையராஜாவே செய்துவிட்டதாகவே கருகிறேன். அதுபோக இசைக்கோர்வையும் பாடல்வரிகளும் கொஞ்சம் கூட ஈர்க்கவேயில்லை. வில்பர் சற்குணராஜ் செய்யாத சாதனையை கொலைவெறி செய்துவிட்டதாக தெரியவில்லை. தனுஷ் போலவே இதுவும் பார்த்ததும் பிடிக்காதோ என்னவோ பார்க்க பார்க்க பிடிக்குதா என்று பார்க்கவேண்டும். ஆனால் அதே பாடலை ஹைதராபாதினை சேர்ந்த குட்டிப்பாப்பா ஒன்று பிரமாதமாக ரொம்ப அழகாக அசத்தலாக க்யூட்டாக பாடி அசத்தியிருக்கிறாள். இதை பார்த்தவுடன் எனக்கு ரொம்பவே பிடித்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பாப்பா பாடும் பாட்டு..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/mnKFyuw8BN8" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-5946581219234781188?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/5946581219234781188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=5946581219234781188' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/5946581219234781188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/5946581219234781188'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2012/01/blog-post.html' title='கோடம்பாக்கம் கும்மி'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CWmbwaYEhiE/Twbe1Ps2FXI/AAAAAAAAB5g/H5BDpOzAUW0/s72-c/Arulnidhi-Mouna-Guru-stills.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-927343132541709472</id><published>2011-12-31T16:08:00.000+05:30</published><updated>2011-12-31T16:08:57.080+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நண்பர்களின் ஆண்டு</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-r1fdNCCGecQ/Tv7jIoSLlgI/AAAAAAAAB4Y/htNPiN2IUMw/s1600/20111229-DSC01479.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-r1fdNCCGecQ/Tv7jIoSLlgI/AAAAAAAAB4Y/htNPiN2IUMw/s320/20111229-DSC01479.jpg" width="290" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மீண்டும் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஆண்டும் எதையும் சாதிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது எதாவது சாதனைகள் செய்யவேண்டும் என்கிற லட்சியவெறி மட்டும் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் சடங்கு போல எஞ்சியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நண்பர்களின் எண்ணிக்கை 2011ல் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பத்திரிகை பணி தொடர்பாக சந்தித்த நண்பர்கள் போக ஃபேஸ்புக்,டுவிட்டர் என புதிய தளங்களிலிருந்து நிறைய நிறைய நண்பர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-a5J7MVbJiIc/Tv7jaYDeifI/AAAAAAAAB4k/Fab2pf6InKo/s1600/vagaisoodavaa.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-a5J7MVbJiIc/Tv7jaYDeifI/AAAAAAAAB4k/Fab2pf6InKo/s1600/vagaisoodavaa.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: small;"&gt;நிறைய வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் இளைப்பாற நல்ல இடமாக டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் இருந்தன. அங்கே பலரோடு வேடிக்கையாக சண்டைகள் போட்டாலும் புதிய நட்புகளுக்கான இடமாக அமைந்தது. தொடர்ந்து நம் வலைப்பூவிலும் மாதத்திற்கு ஐந்து கட்டுரைகள் என்கிற அளவில் எழுதியே வந்துள்ளேன். முடிந்தவரை சினிமா தொடர்பான விஷயங்களை தவிர்த்து புதிதாக எழுத முயற்சி செய்துள்ளேன். சீமானை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக நிறைய அனானி ஆபாச போன் கால்களை சந்திக்க நேர்ந்தது பெருமையாக இருந்தது. நம் தளத்தில் எழுதிய வாகைசூடவா விமர்சனத்தின் வரிகள் அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டது இன்னும் மகிழ்ச்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZaNwxoQenb0/Tv7jr6mTkjI/AAAAAAAAB4w/WURDivDjiN4/s1600/kothu.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="197" src="http://4.bp.blogspot.com/-ZaNwxoQenb0/Tv7jr6mTkjI/AAAAAAAAB4w/WURDivDjiN4/s320/kothu.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;சென்னையை சேர்ந்த டுவிட்டர் நண்பர்கள் இணைந்து வாராவாரம் கிரிக்கெட் ஆடியதை மறக்கவே முடியாது. அடுத்த ஆண்டும் கிரிக்கெட் ஆட முயற்சி செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பதையும் தாண்டி அது சின்ன வயது சிநேகித உணர்வுகளை மீட்டுக்கொடுத்துள்ளது. முன்னெடுத்து சென்ற உருப்படாதது நாராயணனுக்கும் மச்சி கார்க்கிக்கும் நன்றி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;விகடனின் வலைபாயுதே பக்கத்தில் தொடர்ந்து வெளியான என்னுடைய ஏகப்பட்ட டுவிட்டுகளும் ஸ்டேடஸ்களும் பலரையும் கவர்ந்ததாக அறிகிறேன். அதை படித்துவிட்டு தொடர்ந்து பாராட்டும் வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த ஆண்டு நிறைய புத்தகங்கள் வாசிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 500க்கும் மேல் திரைப்படங்கள் பார்த்திருப்பேன்.  பைத்தியகாரன் சிவராமன் நிறைய புத்தகங்கள் மற்றும் சிடிக்களை தொடர்ந்து கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இலக்கியம் குறித்து தொடர்ந்து புட்டிப்பால் ஊட்டிவரும் மச்சிசார் மாமல்லன் மற்றும் ஜ்யோவ்ராமின் இனிய நட்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. காமிக்ஸ் விஷ்வா மற்றும் பின்தொடரும் நிழலான தோழர் யுவகிருஷ்ணாவின் தயவில் நிறைய காமிக்ஸ்கள் படித்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பயணங்கள் அதிகமில்லாத ஆண்டாக இது அமைந்தது. யானைகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைக்காக மேற்குதொடர்ச்சி மலையெங்கும் சுற்றியது தவிர பெரிய பயண அனுபவங்கள் ஏதுமில்லை. அடுத்த ஆண்டாவது நிறைய சஞ்சாரம் செய்ய நினைத்திருக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bUnlWUHEFZo/Tv7kBbHN8fI/AAAAAAAAB48/fG4Fl1o5X3k/s1600/athisa.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="http://1.bp.blogspot.com/-bUnlWUHEFZo/Tv7kBbHN8fI/AAAAAAAAB48/fG4Fl1o5X3k/s320/athisa.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;பல ஆண்டு கனவான சொந்தமாக ஒரு கேமரா வாங்கவேண்டும் என்கிற ஆசை நிறைவேறியது. டிஜிட்டல் கேமராதான்.. (எஸ்எல்ஆர் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி.) அதை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட படங்கள் எடுத்து தள்ளினாலும் சில படங்கள் பலரையும் கவர்ந்தது ஊக்கமளித்தது, அதிலும் புகைப்பட கலைஞர் ஜீவ்ஸ் கிருஷ்ணனின் தொடர்ச்சியான புகைப்படக்கலை குறித்த தகவல்களும் அவருடைய போட்டோகிராபி இன் தமிழ் வலைப்பூவும் நிறையவே உதவின. அவருக்கு நன்றி. முதல் முறையாக என்னை மேடையேற்றி அழகுபார்த்தனர் ஈரோடு பதிவர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சீமான்,விஜய்,அன்னாஹசாரே,கருணாநிதி,ஜெயலலிதா,மன்மோகன்,சோனியா,விஜயகாந்த் என பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் நமக்கு இணையத்தில் பொழப்பு ஓடுகிறது! நன்றி சொல்ல இன்னும் நிறைய பேர் இருந்தாலும் முக்கியமான ஒரு சிலர் அதில் உண்டு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;தீபாவளிக்கு முதல் நாள் ஒரு போன்கால்! ‘’அண்ணா வணக்கம் நான் இருளாயி பேசறேன்’’ என்றது எதிர்முனை. பேரைச்சொன்னதும் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இருளாயி. படிக்க வசதியில்லாமல் செங்கல் சூளையில் செங்கல் சுமந்துகொண்டிருந்தவரை பழனிக்கே போய் பார்த்து அவரை பற்றி நான் பணியாற்றும் பத்திரிகையிலும் நம்முடைய இணையதளத்திலும் எழுதியிருந்தோம். அந்தப்பெண்தான் செல்போனில் அழைத்திருந்தாள் ‘’சொல்லும்மா! எப்படி இருக்க, தம்பிங்க நல்லாருக்காங்களா? ஸ்கூல் போறாங்களா?, குடிசைவீட்டை மாத்திட்டீங்களா?’’ என கேள்விகளை அடுக்கினேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ybHhsbI623E/Tv7kjywlBhI/AAAAAAAAB5I/_6ofZ7L6dWI/s1600/Irulayi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="193" src="http://1.bp.blogspot.com/-ybHhsbI623E/Tv7kjywlBhI/AAAAAAAAB5I/_6ofZ7L6dWI/s320/Irulayi.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;‘’அண்ணா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேங்ண்ணா. கிட்டத்தட்ட ஒருலட்ச ரூபாய் வரைக்கும் உதவிகள் கிடைச்சிருக்குண்ணா.. எனக்கு உதவி செஞ்சவங்க யார்னு கூட தெரியல , அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணும் தெரியலண்ணா.. இப்போ நான் மட்டும் படிக்கல அந்த தொகையால செங்கல் சூளைக்கு போய்கிட்டிருந்த என் ரெண்டு தம்பிகளும் கூட படிக்கறாங்கண்ணா’’ என நெகிழ்ச்சியாக சொன்னாள். எனக்கும் கூட இப்போது வரைக்கும் தெரியாது ஆஸ்திரேலியாவிலிருந்தும் கனடாவிலிருந்து ஐரோப்பாவிலிருந்து இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஏகப்பட்ட பேர் தங்களால் முடிந்த உதவிகளை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அவளுக்கு கல்லூரியில் சீட் தர எத்தனையோ நண்பர்கள் முன்வந்தனர். ஆனால் விடாப்பிடியாக அரசுக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். கோவையிலிருந்து ஒருநண்பர் அவருக்கு மாதந்தோறும் ஒரு சிறுதொகையை அனுப்பிவருகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இதுவரை இதைவிடவும் பெரிதாக மகிழ்ந்த நெகிழ்ந்த கண்ணீர் விட்டழுத சம்பவம் எதுவுமே எனக்கு நினைவில்லை. உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என்னால் ஒரு நன்றியைக்கூட சொல்லமுடியவில்லை என்கிற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அப்பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சார்பிலும் இருளாயியின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த ஆண்டில் என்னென்னவோ நல்லதும் கெட்டதும் நடந்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த 2011 மட்டும் இருளாயியாலும் அவருக்கு உதவி செய்த நண்பர்களாலும் நிச்சயமாக நினைவிலேயே இருக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0pV68W6jXHE/Tv7k1q58e7I/AAAAAAAAB5U/t8rloKnz1ks/s1600/20111111-isal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-0pV68W6jXHE/Tv7k1q58e7I/AAAAAAAAB5U/t8rloKnz1ks/s320/20111111-isal.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-927343132541709472?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/927343132541709472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=927343132541709472' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/927343132541709472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/927343132541709472'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post_31.html' title='நண்பர்களின் ஆண்டு'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-r1fdNCCGecQ/Tv7jIoSLlgI/AAAAAAAAB4Y/htNPiN2IUMw/s72-c/20111229-DSC01479.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-9198704169943690634</id><published>2011-12-28T19:48:00.004+05:30</published><updated>2011-12-29T11:03:59.406+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பவுடர் ஸ்டார்</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;முன்னெச்சரிக்கை - (இந்தப்பதிவு உங்கள் உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கலாம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-lMbRrm3lCS4/TvskIT4RRkI/AAAAAAAAB3U/YkUGlyI-vN0/s1600/lathika-200.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-lMbRrm3lCS4/TvskIT4RRkI/AAAAAAAAB3U/YkUGlyI-vN0/s320/lathika-200.jpg" width="202" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த ஆண்டு எத்தனையோ பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருந்தாலும் எந்தப்படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தெரியவில்லை. இப்படியொரு மகா மோசமான தமிழ்சினிமா சூழலில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்கிற புதுமுகம் நடித்த லத்திகா என்கிற மாகாவியம் 300 நாட்களை கடந்து இன்னமும் சக்கைப்போடு போடுகிறது.. (ஒரே தியேட்டரில்). மொக்கையான கதை, மட்டமான நடிப்பு, கேவலமான இசை, தாங்கமுடியாத தலைவலி படம் எப்படி 300நாட்களை கடந்தும் ஓடுகிறது என்கிற வியப்பு நம் அனைவருக்குமே இருக்கலாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;‘’ஆமாய்யா காசு கொடுத்துதான் படத்தை ஓட்டுறேன், ரசிகர்களுக்காக ஓட்டித்தானே ஆக வேண்டியிதாருக்கு’’ என விகடன்,குமுதம்,விஜய்டீவி,சன்டிவி முதலான பிரபல பத்திரிகைகளில் டிவியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார் படத்தின் நாயகன் பவர்ஸ்டார். தமிழ்சினிமாவின் சூப்பர் நாயகர்களில் யாருமே இதுபோல ஒன்றை செய்ததாக தெரியில்லை.. ரசிகர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத மாமணியாக பவர்ஸ்டார் இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் நலன் கருதி வருடத்திற்கு ஒருபடம் நடிக்கிறாரோ என்னவோ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அவருடைய லத்திகா திரைப்படங்களின் காட்சித்தொகுப்பு.. கண்டு மகிழுங்கள். பார்த்துவிட்டு வாட் ஏ மேன் என வியந்துபோவீர்கள்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/7kBnR1gGgbQ" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அதுதவிர படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்னமும் திருட்டு டிவிடி வெளிவராத ஒரே திரைப்படம் லத்திகா மட்டும்தான்! திருட்டு டிவிடியை ஒழிக்க நம் தமிழக காவல்துறையும் முட்டிப்போட்டு குட்டிகரணம் அடித்தும் முடியாதிருக்க.. சத்தமேயில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புரட்சியை பண்ணிவிட்டு சின்னகவுண்டர் விஜயகாந்த் போல துண்டை தூக்கி தோளில் போட்டுகிட்டு போய்கொண்டே இருக்கிறார் பவர்ஸ்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜேகே ரித்திஷ் அரசியலில் பிஸியாகிவிட்ட சூழலில் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு தலைவன் வரமாட்டானா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் சம்முகத்திற்கு கிடைத்த வரம்தான் பவர்ஸ்டார். சினிமாவிலிருந்து அரசியல் என்பதே ரூட்டு அதை மாத்திப்போட்டு அடிச்சாரே ரிவீட்டு. அவர்தான் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் சொக்கத்தக்கம்தான் பவுடர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் ஸ்ரீனிவாசன். சினிமாவில் ஆயிரக்கணக்கான போலிடாக்டர்கள் (விஜய்,விக்ரம் etc) இருந்தாலும் இவரு மெய்யாலுமே படித்து பட்டம் வாங்கிய ஒரிஜினல் டாக்டர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருத்துவர் அணித்தலைவராக மட்டுமே இருந்தவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ரஜினியைப்போலவே வில்லனாக தொடங்கியது பவரின் பயணம். மேகம்,போகம்,மண்டபம் என ஒன்றிரண்டு கில்மா படங்களில் அவ்வப்போது பத்து பெண்களை கற்பழிக்கும் ஒற்றை வில்லனாக முகத்தில் எந்த சுரணையுமேயில்லாமல் வெறித்தனமாக நடித்துக்கொண்டிருந்தார். என்ன ஆச்சோ ஏதாச்சோ நம் பயுபுள்ள பவர்ஸ்டார் தீர்ப்பு சொல்லும் பண்ணையாராக வாழ்ந்த ‘’நீதானா அவன்’’ என்கிற படத்தின் வரலாறு காணாத மாபெரும் வெற்றி அவருக்கு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அந்தப்படத்தின் டிரைலர்.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/Jqjo1fnUNjQ" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஹீரோ அந்தஸ்து கிடைத்தும் புரோடியூசர் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாதே என்கிற ஒரே காரணத்திற்காகவும்.. தமிழ் மக்களுக்காகவும்.. பாரதமண்ணிற்காகவும்.. சொந்தகாசில் லத்திகா என்கிற படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்கு பிறகு லத்திகா பெரும் வெற்றியடைந்து தமிழ்நாடு டாராந்துபோனதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் வரலாறு..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பவர்ஸ்டாரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் பிலிம் இன்டஸ்ட்ரியையுமே மூச்சுபேச்சில்லாமல் செய்திருக்கிறது. அண்ணாரின் அடுத்த படமான ஆனந்த தொல்லை இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இதுதாண்டா டிரைலர் என்று சொல்லுமளவுக்கு அண்ணலின் இரண்டாவது படத்தினுடைய டிரைலர் வெளியாகியிருக்கிறது. இரண்டரை நிமிட டிரைலரே இந்த அளவுக்கு மிரட்டுதுன்னா இரண்டரை மணிநேர படம் வெளியானா தமிழ்நாடு என்னத்துக்கு ஆவறது என்கிற அச்சமும் நம் மனதில் உதிக்காமல் இல்லை! கூடங்குளத்தையே தாங்குகிற தமிழினம் இதை தாங்காதா? நம் தமிழ்மக்கள் மேல்தான் தலைவனுக்கு என்ன ஒருநம்பிக்கை.  அதைதான் இந்த டிரைலரும் நமக்கு காட்டுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;உங்களுக்காக அந்த அதி அற்புத டிரைலர். டிரைலரையே இரண்டு மணிநேரம் கூட பார்க்கலாம்! அதிலும் குறிப்பாக 1:54 நிமிடத்தில் வருகிற சண்டைக்காட்சியை கண்டு அர்னால்டுக்கே குலைநடுங்கும். வாட் ஏ ஃபைட் ஆஃப் தி டுவென்டி பஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/gTyryGJnulM" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;டிரைலர் பார்த்தாச்சா.. அதை பார்க்காவிட்டால் இந்த பதிவின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம். இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. விஜயின் நண்பன், தனுஷின் 3, ஆர்யாவின் வேட்டை என பிரபலங்களின் படங்களுக்கு நடுவே சந்துகேப்பில் சிந்துபாட தயாராகி வருகிறது ஆனந்ததொல்லை. படம் வெளியானால் விஜய் அஜித் சிம்பு தனுஷெல்லாம் ஃபீல்ட் அவுட் ஆகப்போவது உறுதியாக இப்போதே தெரிகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கடைசியாக ஒரு பிட்டு- &lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AYuW2ihgNUg/TvskT2Y8X0I/AAAAAAAAB3g/oeGRYZD3ebo/s1600/lathika.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-AYuW2ihgNUg/TvskT2Y8X0I/AAAAAAAAB3g/oeGRYZD3ebo/s320/lathika.jpg" width="225" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பிரபஞ்ச நாயகன் , நடிப்பு புயல் , அண்டம் வியக்கும் அண்ணன் பவர்ஸ்டாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-9198704169943690634?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/9198704169943690634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=9198704169943690634' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/9198704169943690634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/9198704169943690634'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post_28.html' title='பவுடர் ஸ்டார்'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-lMbRrm3lCS4/TvskIT4RRkI/AAAAAAAAB3U/YkUGlyI-vN0/s72-c/lathika-200.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-5878707459319644403</id><published>2011-12-20T14:01:00.003+05:30</published><updated>2011-12-20T14:04:18.928+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாராட்டு'/><title type='text'>செய்யாத தப்புக்கு தண்டனை!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-eRPojjWdfb8/TvBHanSes0I/AAAAAAAAB2g/WRK2wjoAFiM/s1600/DSC_1501.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="206" width="310" src="http://3.bp.blogspot.com/-eRPojjWdfb8/TvBHanSes0I/AAAAAAAAB2g/WRK2wjoAFiM/s320/DSC_1501.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் இதுதான் முதல் மேடை. முதல் கௌரவம். முதல் சால்வை, முதல் போர்வை. கிட்டத்தட்ட முதல் இரவுக்கு காத்திருக்கும் புதுமாப்பிள்ளையின் அநேக குழப்பங்களோடு ஈரோடு கிளம்பினேன். ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் உங்களை கௌரவிக்கப்போறோம் என்று கதிர் சொன்னபோது சும்மா கலாய்க்கிறாங்களோ என்றுதான் நினைத்தேன். நம்மலெவலுக்கு அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. என்னத்த எழுதி கிழித்துவிட்டோம் என்கிற மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மேடையில் என் பெயர் சொல்லி அழைக்கும்வரை என்னால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் இதுவரை நான் எதையும் உருப்படியாக செய்ததாக நினைவில்லை. பண்ணிடாத குற்றத்துக்கு தண்டனைபெறுவதைப் போல செய்யாத சாதனைக்கு கௌரவிக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலை அனுபவிக்க நேருகிறது. அப்படியொரு மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அதைவிடுங்க.. விருந்தோம்பலில் சும்மாவே காட்டு காட்டென்று காட்டும் ஈரோடு பதிவர்கள் சங்கமம் என்று வந்துவிட்டால் என்ன காட்டுகாட்டுவார்கள் என்பதை கடந்த ஞாயிறு ஈரோடு போயிருந்தால் உணர்ந்திருக்கலாம். ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் ஆண்டுதோறும் நடத்துகிற சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிளம்பினேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஈரோட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட என்னையும் தோழர் யுவகிருஷ்ணாவையும் வரவேற்க ஆறுமணிக்கே காத்திருந்தார் நண்பர் ஜாஃபர். லாட்ஜில் ரூம் போட்டுக்கொடுத்து தேவையான உதவிகளை அரங்குக்கு செல்லும்வரை கூடவே இருந்து செய்து உதவினார். அரங்கில் பிரமாதமான காலை உணவு பரிமாறப்பட்டது. 200க்கும் மேல் பதிவர்களும் சமூகவலைதள நண்பர்களும் கூடியிருந்தனர். வாசலிலேயே தாமோதர் சந்துருவும் ஈரோடுகதிரும் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். பாலாசி ஓடியாடி துடிப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சங்கோவி,கார்த்திக்ஈரோ,லவ்டேல் மேடி என என்னுடைய வாசகநண்பர்கள் நிறையபேர் என்னிடம் ஆட்டோகிராப் பெற நினைத்துக்கொண்டேயிருந்தனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருப்பூர் பதிவர்கள் சேர்தளம் என்று ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். வெள்ளை டிஷர்ட்டில் சேர்தளம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திருப்பூரிலிருந்து பலரும் வந்திருந்தனர். பார்க்கவே தமாஷாக இருந்தது. வெயிலான்தான் தலைவர் என நினைக்கிறேன். அவரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். சென்னையிலிருந்து மணிஜியும் அகநாழிகையும் பிலாசபி பிராபகரனும் இன்னபிற நண்பர்களும் வந்திருந்தனர். கேஆர்பி செந்திலும் ஜாக்கிசேகரும் உண்மைதமிழனும் கூட வந்திருந்தனர். அவர்களும் என்னோடு கௌரவிக்கப்பட்டனர். மதுரையிலிருந்து சீனா,தருமி என மூத்தபதிவர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த பதிவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சில குடிகாரர்களையும் அரங்கில் பார்க்க முடிந்தது. குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு என்பதை அழுந்த சொல்லி அவர்களையெல்லாம் திருத்த முயன்றேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிரமாண்டமான ஏற்பாடுகளை கண்டு பிரமிப்பாக இருந்தது. நமக்குத்தெரிந்த பதிவர் சந்திப்பெல்லாம் மெரீனாவின் கடற்கரையில் எளிமையாக அளவளாவி டீக்கடையில் அரசியல் பேசிக்கலைவது மட்டும்தான். அதன் சுகமே தனி! இது வேறு மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒழுங்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட போர்டு மீட்டிங்கை போல இருந்தது. நிறைய பெண் பதிவர்களும் , சிலபதிவர்கள் குடும்பத்துடனும் வந்திருந்தனர். தோழர் ஆரூரான் இனிமையாக பேசி விழாவை துவக்க.. சாதனையாளர்கள் அழைக்கப்பட்டனர். என்னையும்தான்! அப்போதும் கூட எனக்கு உள்ளுக்குள் ஒருவித லஜ்ஜையாகவே உணர்ந்தேன். ஒவ்வொருவரையும் அழைக்கும்போதும் நாதஸ்வரம் வாசித்தது புதுமையாக காமெடியாக இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நான் யாருக்கெல்லாம் ரசிகனோ அத்தனைபேரும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக நான் யாரைப்பார்த்து எழுதவந்தேனோ அந்த நபர் தோழர் லக்கிலுக், என்னை எழுதவைத்த பாலபாரதி, சிறுவயதில் நான் வியந்து பார்த்த கட்அவுட்களை வரைந்தவரும் தேசிய விருது பெற்ற எழுத்தாளருமான ஜீவநாதன், நாளைய இயக்குனரில் பல முறை என்னை கலங்கவைத்த குறும்பட இயக்குனர் ரவிக்குமார், எனது புகைப்படகலை ஆசான் ஜீவ்ஸ் என அத்தனை பேருக்கும் நடுவில் என்னையும் கௌரவித்தது சிலிர்ப்பூட்டியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அந்த மேடையில் அமரும் தகுதியற்றவனாக நெளிந்தபடி மேடையில் அமர்ந்திருந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒவ்வொருவரை குறித்தும் ஒரு அறிமுகத்தினை வாசித்தனர். என்னைப்பற்றிய அறிமுகத்தையும் வாசித்தனர். அதை கேட்டபோது என் குற்றவுணர்வு அதிகரித்து மவனே மரியாதையா மேடைலருந்து இறங்கி ஓடிடு என பயமுறுத்தியது. கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுக்கு உபயோகமான போர்வை பரிசாக அளிக்கப்பட்டது. வீட்டில் காட்டியபோது அம்மா அகமகிழ்ந்து போர்வை நல்லா காஸ்ட்லியா இருக்கும்போலருக்கு, நீ எழுதி எழுதி உருப்படியா வாங்கினது இதுதான் என்று வியந்து பாராட்டினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முதல்மேடை என்பதால் உட்காருவதற்கே ரொம்பவே சங்கோஜமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பார்வையாளர்கள் அனைவருமே நம்மையே பார்ப்பது போன்றதொரு பிரமை. படபடப்பாகவும் கிலியாகவும் இருந்தது. இதில் ஒவ்வொருவரும் ஒருநிமிடம் பேசியே ஆகவேண்டும் என்று சொல்ல.. கையில் மைக் பிடித்தது மட்டும்தான் நினைவிருக்கிறது என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. இருந்தும் செய்யாத சாதனைக்கு விருது என்கிற என்னுடைய குற்றவுணர்ச்சிவேறு வந்துவந்து அச்சுறுத்தியது. ஓடக்காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரனைப்போலவே சீட்டு நுனியில் அமர்ந்துகொண்டு விட்டாப்போதும் என்றே அமர்ந்திருந்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எந்த விழாவாக இருந்தாலும் நம்முடைய கவனமெல்லாம் சாப்பாடுதான். ஈரோடு பதிவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் எப்போதுமே கில்லிதான். ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு சென்றிருந்தபோது கதிரும் நண்பர்களும்  பிரமாதமான ஒரு ரோட்டுக்கடையில் அருமையான முட்டை தோசை வாங்கிக்கொடுத்து அசத்தினர். அதனால் மதிய உணவிலும் அதுமாதிரி புதுமைகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் முட்டை அப்பம், தலைக்கறி, சிக்கன் ஃபிரை, மட்டம் ஃபிரை, சிக்கன் சூப் என நான்வெஜ்ஜிலும்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத தாவரங்களை சமைத்து வெஜ்ஜிலும் அசத்தியிருந்தனர். வயிறார சாப்பிட்டேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மற்றபடி ஈரோடு பதிவர் சங்கமம் மிகச்சிறந்த நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான அனுபவத்தை தந்தது. விருந்தினர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தந்தது. ஒரு சிறிய விழாவாக இருந்தாலும் அதை எப்படி குறைந்த செலவில் பிரமாண்டமாக நடத்தமுடியும் என்பதை போதித்தது. இன்னும் நிறைய சொல்லலாம். ஈரோடு பதிவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னை வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அடுத்த முறை கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய விழாக்களில் சங்கமமும் ஒன்றென உணர்ந்தேன். இத்தனைக்கும் நடுவில் உள்ளுணர்வு இன்னமும் உனக்கேன் இதெல்லாம் குடுத்தாங்க சொல்லு என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறது! இனியாச்சும் ஒழுங்கா நல்லதா நாலு கட்டுரை எழுதோணும். இல்லாட்டி என் மனசாட்சியே என்னை கொன்னுபோடும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: inherit;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-5878707459319644403?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/5878707459319644403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=5878707459319644403' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/5878707459319644403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/5878707459319644403'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post_20.html' title='செய்யாத தப்புக்கு தண்டனை!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-eRPojjWdfb8/TvBHanSes0I/AAAAAAAAB2g/WRK2wjoAFiM/s72-c/DSC_1501.JPG' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-3376645154631081950</id><published>2011-12-15T16:20:00.000+05:30</published><updated>2011-12-15T16:20:41.325+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வெள்ளிச்சங்கு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-AUTh5w8AxnQ/TunQmUC_g2I/AAAAAAAAB2M/RT2FB7MVmew/s1600/bigFear.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="320" src="http://4.bp.blogspot.com/-AUTh5w8AxnQ/TunQmUC_g2I/AAAAAAAAB2M/RT2FB7MVmew/s320/bigFear.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றையதினம் விடிவதற்கு சற்றுமுன்பாகவே கிஷ்ணனின் உயிர்த்தோழன் அருண் தன்னுடைய ஆன்ட்ராய்ட் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியொன்றை அனுப்பினான். அதை ஆதியில் செல்போனாக கருதப்பட்ட இரட்டை ஒன்று இரட்டை பூஜ்யம் ரக செல்போனில் கிஷ்ணன் பார்த்தான். அதில் ‘’மச்சான் ஐயாம் பிளஸ்ட் வித் ஏ பாய்’’என்று சொல்லியிருந்தான் அருண். &lt;br /&gt;&lt;br /&gt;கிஷ்ணன் அதை அரைத்தூக்கத்தில் பார்த்துவிட்டு மீண்டும குப்புறப்படுத்து தூங்கிவிட்டான். அந்த குறுஞ்செய்தி பின்னாளில் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறதென்பது தெரியாது. விடிந்ததும் தோழனுக்கு எதையாவது பரிசு கொடுக்கணுமே என நினைத்து, வீட்டிலே பரணில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளிச்சங்கினை எடுத்து தூசி தட்டி புளிபோட்டு கழுவி பளபளவென்றாக்கி ஜிகினா பேப்பரில் சுற்றி புதிதுபோல மாற்றிப் பரிசளித்தான். அருண் அதைக்கண்டு நண்பனின் நட்பை வியந்து உச்சிமுகர்ந்தான். கிஷ்ணனுக்கு பெருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெள்ளிச்சங்கு அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக உபயோகித்து வந்த ஆதிகாலத்து பால்குடி சங்கு. கிஷ்ணனுக்கு அதில்தான் பால் புகட்டப்பட்டது. என்றைக்கு கிஷ்ணன் டியூப் வைத்த டம்ளரில் பால் குடிக்கத்தொடங்கினானோ அன்றையதினத்திலிருந்து வெள்ளிச்சங்கு பரணுக்குள் முடங்கியது. கிட்டத்தட்ட 25ஆண்டுகளாக அது வைத்த இடத்திலேயேதான் கிடக்கிறது.  அதைப்பற்றி வீட்டிலிருக்கும் அம்மாவுக்கோ ஆயாவுக்கோ அப்பாவுக்கோ ஒரு கவலையுமில்லை. பிறகு என்ன மயித்துக்கு அந்த கெரகத்த அங்க வச்சிருக்கணும்.. எனவே அது அருணுடைய குழந்தைக்கு பரிசளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இரவில் கிஷ்ணனின் அம்மாவுக்கு ஒரு நல்ல கனவு வந்தது. அந்தக்கனவில் பூச்சூடியம்மன் காட்சியளித்தது. அம்மனோடுனான கனவுரையாடலில் ‘’கிஷ்ணனுக்கு ஒரு கல்யாணங்காச்சி பண்ணிப்பாக்கணுமாத்தா! அதுக்கு நீதான் ஒதவோணும்’’ என்று கிஷ்ணனின் அம்மா வேண்டுகோளை முன்வைக்க.. யோசித்துவிட்டு அம்மன் சொன்னது ‘’என்ர கோயிலுக்கு வாராவாரம் வந்து உன்ர வூட்டுபரணுமேல கெடக்கற வெள்ளிச்சங்குல வெளக்கேத்தி வச்சியன்னா மூன்ற மாசத்துல டான்னு கல்யாணமாகிப்போயிடும்’’ என்றது. இப்படியாக அந்த கனவு நீண்டது. விடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்ததும் அம்மா அரக்கபரக்க கிஷ்ணனை எழுப்பினாள். ‘’கிஷ்ணா கொஞ்சம் பரண் ஏறி அந்த வெள்ளிச்சங்கை எடுத்துக்குட்ரா’’. தூங்கிக்கொண்டிருந்த கிஷ்ணன் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான். ‘’என்னகேட்ட.. வெள்ளிச்சங்கா?’’.. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி அதை தேடுவதுபோல பாவலா காட்டினான். ‘’இங்கே இல்லம்மா..’’ என கடிந்துகொண்டான். ‘’தம்பீ பத்துரூவா வேணா வாங்கிக்க.. அதை எப்படியாச்சும் எடுத்துக்குட்றா’’ என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘’ இப்ப என்னத்துக்கு அத வேலமெனக்கெட்டு தேடிக்கிட்டிருக்க.. அப்படியென்ன கொள்ளகொண்டுபோற அவசரம்’’ என மேலும் கோபங்கூட்டினான் கிஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இல்ல தம்பீ..நேத்து நைட்டு கனவுல...’’ என பூச்சூடியம்மனுடனான உரையாடல் குறித்து ஃபிளாஷ்பேக்கில் விளக்கினாள். கிஷ்ணன் கோபமாக தேடிதேடி நடித்தான். தேடலில் எதுவுமே அகப்படவில்லை என்கிற வருத்ததுடன் ‘’வேற வழியில்ல தம்பீ பேசாம மொளகாயரைச்சிர வேண்டியதுதான்’’ என தன் முடிவையும் தெரிவித்தாள். ம்க்கும் என்ன செஞ்சிடும் மொளகா.. என தெனாவெட்டாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ஒருவித பயம் அவனுடைய இதயத்தில் உருவானது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’அடப்போம்மா அதெல்லாம் சும்மா , அந்த பூசாரிப்பய ஊர ஏமாத்திட்டு திரியறான் நீ வேற.. என்னமோ பீடத்துல மொளகாவ அரைச்சு தேப்பாய்ங்களாம்.. உடனே உடம்பு எரிஞ்சிருமாம்.. ரத்தம் கக்குமாம், மெட்ராஸ் வெயில்ல அவனவன் இதெல்லாம் இல்லாமயே வெந்துபோய் ரத்தம் கக்கிட்டுதான் அலையறான்.. நீ வேற, இன்டெர்நெட்டு த்ரீஜி ஃபோர்ஜினு போய்கிட்டிருக்கோம்..ஒன்னு பண்ணு பேசாம போலீஸ்டேசன் போவோம் கம்ப்ளைன்ட் குடுமப்போம். சட்டப்படி செய்வோம்’’ என கடிந்துகொண்டான்.  தண்ணீரில் விட்ட ஒருதுளி சொட்டுநீலம் போலவே பயம் மெதுவாக உள்ளுக்குள் கரையத்தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’என்ரா பெரிய போலீஸு மயிராண்டி.. சாமியவுட உன்ர போலீஸு பெரிய இதுவா.. பூச்சூடியம்மனோட மகிமை உனக்கெங்க தெரியப்போவ்து.. போன வாரம் நம்ம சுப்பு கம்மல் தொலைஞ்சிருச்சினு மொளகா அரைச்சு தேச்சி வச்சு.. ஒரே ஒரு வாரந்தான்.. அவ தெருவுல ஒருத்தன் ரத்தங்கக்கி கைகால் விளங்காம போயி கண்ணு அவுஞ்சு உடம்பு எல்லாம் கொப்புளமா கிடந்து அழுகிப்போய் செத்துப்போனான் தெரியுமில்லே... டாக்டருங்களாலயே ஒன்னும் பண்ணமுடியல’’ என்றாள். அது சொட்டுநீலத்தை மேலும் கரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை அம்மாவின் பேச்சுக்கு காதுகொடுக்காமல் அதைப்பற்றி கவலைப்படாமல் சுவரில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது ஹாலிலிருந்த பீரோகண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே கிளம்பினான். வ.உ.சி பூங்காவில் பூச்சூடியம்மன் கோயில் பூசாரியின் மகளான உஷா காத்திருப்பாள்! &lt;br /&gt;&lt;br /&gt;நமக்குநாமே திட்டம்போல கிஷ்ணன் தனக்கான மொளகாயை தானே அரைக்க அம்மாவினால் அழைக்கப்பட்டான். முதலில் மறுத்தாலும் தற்போது வேலைவெட்டியில்லாமல் இருப்பதாலும் அவ்வப்போது பெட்ரோலுக்கும் தம்முக்கும் அம்மாவிடம் அஞ்சுபத்துக்கு போயி நிற்கவேண்டும் என்கிற காரணத்தாலும் பைக்கை எடுத்துக்கொண்டு அம்மாவை பின்னால் அமர்த்திக்கொண்டு கோயிலை நோக்கி புறப்பட்டான். வயிற்றுக்குள் ஏதோ எரிவதைப்போலவும், இதயம் என்றைக்கும் இல்லாமல் இன்று அதிவேகமாய் துடிப்பதாகவும் உணர்ந்தான். மொம்மது தெருவில் இருந்தது பூச்சூடியம்மன் கோயில். &lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் இருக்கிற நூறு கடைகளுக்கு நடுவே பெரிய இடத்தை வளைத்துப்போட்டு ஒரு கரையான் கட்டிய புற்றுதான் பூச்சூடியம்மன் கோவில். அந்த புற்றில் ஆதிகாலத்தில் பாம்பு வசித்திருக்கலாம். ஊரின் சந்தை சாலையாக மாறிவிட்ட காலத்திலும் அதில் பாம்பு இருப்பதாக ஊர் நம்பியது. அதனால் புற்றை சுற்றி சுவர் எழுப்பி நடுவில் புற்றை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் கொட்டி.. அதன் துளைகளில் பால் ஊற்றி.. முட்டையை உடைத்து போட்டு.. பூவைத்து.. பொட்டு வைத்து.. புற்றுக்கு கண்மலர்கள் வைத்து.. வெள்ளியில் மூக்கு வைத்து வாய் வைத்து.. கிட்டத்தட்ட அந்த புற்றை அம்மன் சிலைபோல மாற்றிவைத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதை பார்த்தால் யாருக்குமே பக்தி பீறிட்டு வந்துவிடும். புதிதாக வருகிறவர்களுக்கு அந்த பூச்சூடியம்மனே இறங்கி ஆட்கொண்டு அருள்வாக்கு சொல்வதும் உண்டு! எந்த ஊரில் எது தொலைந்தாலும் இங்கே வந்து மொளகாயரைக்கலாம். மாவட்டத்திலேயே பவர்ஃபுல் அம்மன் என்றால் அது பூச்சூடியம்மன்தான்! இங்கே வாசலிலேயே சூனியம் வைக்க வருகிறவர்களுக்கு வசதியாக அம்மிக்கல்லும் குளவியும் வைத்திருப்பார்கள். அதில் மிளகாயை அரைத்து அந்த காரமான சட்னியை கொண்டுபோய் புற்றுக்கு முன்னால் இருக்கிற கல்லில் பூசிவிட்டால் போதும். சோளி முடிந்தது! ரத்தம் கக்க அம்மன் கியாரண்டி என்பார் பூசாரி! பூசாரியின் குடும்பம்தான் பரம்பரையாக அங்கே பூஜை செய்துவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அம்மா இதெல்லாம் எதுக்கும்மா.. ஆப்டரால் வெள்ளிச்சங்கு.. ஐநூறு ரூவா பொறுமா.. அதுக்குபோயி மொளகாயரைச்சி சூனியம் வைக்கறேனு கிளம்பிருக்கியா.. திருடினங்களுக்கும் குடும்பங்குட்டி இருக்கும்ல.. நாளைக்கே ஏதாச்சும் ஒன்னாயி செத்துப்போயிட்டான்னா அவன் குடும்பம் அநாதையா நிக்காதா? யோசிச்சு பாரு.. அந்த வெள்ளிச்சங்க கொண்டுபோயி அவனென்ன லச்சுமிமில்ஸையா வெலைக்கு வாங்கப்போறான்.. வுட்டுத்தொலையேன்..’’ என பைக் ஓட்டியபடி அம்மாவோடு பேசிக்கொண்டே வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இவரு பெரிய இவரு.. சொல்லிட்டாரு.. அடப்போடா.. அப்படியே வண்டிகாரன்வீதிகிட்ட நிறுத்து..’’ என கிஷ்ணனின் பேச்சுக்கு துளிகூட மரியாதை கொடுக்காமல் பேசினாள் அம்மா. வண்டிக்காரன் வீதியில்தான் உஷாவின் வீடிருந்தது. துன்பத்திலும் ஒரு இன்பம் என நினைத்துக்கொண்டு வீதிக்குள் வண்டியை நுழைத்தான். வேண்டுமென்றே உஷாவின் வீட்டு வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இரண்டொருமுறை ஹாரன் அடித்தான். ‘’நீ போயி அண்ணாச்சிக்கிட்ட நான் சொன்னேனு சொல்லி ஒரு கிலோ காஞ்ச மொளகா வாங்கிக்க.. அப்படியே ஒர்ரூவாக்கு கற்பூரமும், ரெண்ட்ர்ரூவாக்கு வெத்தல பாக்கும்.. ஊதுபத்தி அஞ்சுரூவா பாக்கட்டும் வாங்கிக்க..’’ என்று கட்டளையிட்டாள் அம்மா. தனக்கு சூனியம் வைக்க தானே இதையெல்லாம் வாங்கவேண்டிய பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;உஷாவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு ‘’ஏன்டி இவளே கொஞ்சம் தண்ணிகொண்டாடி’’ என சப்தமிட்டாள் அம்மா. உஷா வெளியே ஓடிவந்து சுடிதார் ஷாலை சரிசெய்தபடி ‘’வாங்த்த.. எப்படி இருக்கீங்’’ என சொன்னாலும் வாசலில் நின்ற கிஷ்ணனின் பைக்கை பார்த்து அவனெங்கே என நோட்டம்விட்டாள். கிஷ்ணன் எதிர்த்த கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்தான். ‘’எங்கே கிளம்பிட்டீங்க..’’ என அம்மாவிடம் கேட்டபடி அண்ணாச்சிகடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’உங்க அய்யனெங்கே.. கோயில்லயா.. அங்கதான் போறோம்’’ என்றாள் அம்மா. ‘’காத்தால போனவரு இன்னும் வரலீங்த்த.. ‘’ என பேச்சிக்கொண்டிருக்க கிஷ்ணன் வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவளைப்பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான். அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அம்மா அதை கவனித்தாள். ‘சரிடி இவளே நான் கிளம்பறேன்..’’ என இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பொறுமையாக எழுந்து பைக்கில் அமர.. கண்களாலேயே உஷாவுக்கு ஒரு டாட்டாவை உதிர்த்துவிட்டு கிளம்பினான் கிஷ்ணன். &lt;br /&gt;&lt;br /&gt;கிஷ்ணனுக்கு வழியெல்லாம் பதட்டமாகவே இருந்தது. மொளகா அரைக்கும் முன்னமே வயிறு எரிவது போலவும் கண்கள் சிவப்பது போலவும் ஒரு உள்ளுணர்வு. லேசாக இடதுகால் கொஞ்சம் வீங்கி அதன் எடை அதிகரிப்பதைப்போலவும் இருந்தது. இதயம் வேறு திக்திக் என அடித்துக்கொண்டும் எரிச்சலாகவும் இருந்தது. விரல்கள் நடுங்கின. வியர்த்துக்கொட்டியது. அதோடு வண்டியோட்ட முடியாமல் ஓரிடத்தில் நிறுத்தினான். ‘’தம்பீ என்னடா ஆச்சு..’’ பதறினாள் அம்மா. ‘’ஒன்னுமில்லே லைட்டா தலைசுத்தல்’’ என சமாளித்தான். ‘’கண்டபசங்களோட சேர்ந்து கண்டதையும் குடிக்கறது.. கேட்டா அதெல்லாம் இல்லனு சொல்லவேண்டியது’’ என சலித்துக்கொண்டாள் அம்மா. அப்படியே ஒரமாக வண்டியை நிறுத்தி இருவருமாக வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் நின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;வேப்பமரம் அருகிலேயே ஒரு கரையான் புற்று.. ஏன் இந்த இடம் இன்னும் கோயிலா ஆகல என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எதையாவது பேச வேண்டுமே என பேசினாள். ‘’உனக்கு தெரியுமா.. ஒருக்கா பூச்சூடியம்மன் கோயில்லயே ஒருத்தன் கைய வச்சிட்டான்.. உண்டியல உடச்சிட்டான்.. பூசாரி வுடுவாரா.. ஒருமூட்டை .. நாப்பது கிலோ மொளாகா வாங்கிட்டு வந்து அரைச்சு தேய்ச்ச மூனாம்த்து நாளு அவனா வந்து கால்ல வுழுந்தான்..  சாமீ என்ன காப்பாத்துங்க தெரியாம கைய வச்சிட்டேன்.. எடுத்த காச திருப்பிகுடுத்துட்டான்.. ஏன்னு பார்த்தா.. அவனுக்கு யானைக்கால் வந்து ஒரு காலே வீங்கிப்போயி கிடக்கு..நாம எவ்ளோ மொளகா அரைக்கிறமோ அவ்ளோக்கவ்ளோ திருடனுக்கு ஆபத்து.. வெள்ளிச்சங்குக்கு ஒரு கிலோ போதும்னுதான் விட்டுட்டேன்’’ என்றாள் அம்மா. கிஷ்ணனின் பயத்தை இது இரட்டிப்பாக்கியது. முன்னைவிடவும் வேர்த்துக்கொட்டியது. காலுக்குள் புழு ஊறுவதைப்போலவும் கண்கள் இருண்டு தூரத்தில் மரணம் காத்திருப்பதாகவும் உணர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;பேசாம கிஷ்ணா உண்மைய சொல்லிடு.. என்றது மனசாட்சி. அதை சொன்னா ஏற்கனவே தொலைந்து போன மூக்குத்தி.. குத்துவிளக்கு கேஸெல்லாம் மீண்டும் தூசித்தட்டப்படும் என்பதால் அதுவும் முடியாது. சங்கை போய் திருப்பிக்கேட்டா அருண் மட்டுமா காறித்துப்புவான்.. ஊரே துப்புமே.. நமக்கு ஒரு ஆபத்துன்னா ஆண்டவன்கிட்ட போகலாம்.. ஆனா ஆபத்தே அந்த ஆண்டவனாலதான்னும் போது யாருகிட்ட போறது! மனதிற்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலை நெருங்க நெருங்க அவனையும் மீறி அவனுக்குள் ஒரு படபடப்பு. உஷாவின் காதல்வேறு கண்முன்னால் வந்துவந்து மறைந்த்து. ‘கண்ணே! உஷா! உன்னை வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்காம செத்திடுவேன் போலருக்கேமா.. நான் செத்துட்டா வேற யாராயாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழணும்.. ‘’ என மனசுக்குள் மத்தாப்பு கதறினான். தயங்கி தயங்கி மார்க்கெட் ரோடில் வண்டியைவிட்டான். பார்க் செய்தான். தூரத்தில் ஒரே கூட்டம். அம்மாவும் மகனும் பரபரக்க கோயில் இருந்த இடத்தை நோக்கி ஓடினர். &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தை கலைத்துவிட்டுப்பார்த்தால் கோயிலையே காணோம்! புற்றையும் காணோம். மொளகா பீடத்தையும் காணோம். பதினெட்டாவது மாடியிலிருந்து விழும் ஒருவன் உயிர்பிழைத்தால் என்ன செய்வானோ எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி கிஷ்ணனின் மனது முழுக்க நிறைந்தது. விஜய் ஆன்டனி இசையில் ஒரு குத்துப்பாட்டு போட்டு செம டான்ஸ் ஆடவேண்டும் போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தன் இதயத்தில் கைவைத்தபடி அப்படியே கிஷ்ணனின் தோளில் சாய்ந்தாள். வத்தாத நதியெல்லாம் அந்த கடலை பார்த்து ஆறுதல் அடையும் அந்த கடலே காணாம போயிடுச்சின்னா.. கோயிலிருந்த இடம் காலியாக இருந்தது, ஓரமாக பூசாரி கண்கள் வீங்க அமர்ந்திருந்தார். அவர் முகமெல்லாம் இருண்டு போய்.. கவிழ்ந்து போன டைடானிக் கப்பலின் கேப்டன் போல கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். வெள்ளிசங்க காணோம்னு கோயிலுக்கு வந்தா இங்கே கோயிலையே காணோமேடா.. என்று அம்மா அலறினாள். அம்மாவை பூசாரிக்கு அருகில் அமரவைத்துவிட்டு கூட்டத்தில் விசாரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பஞ்சாயத்துல புதுசா யாரோ ஆபீசரு.. மொத்தமா தூக்கிட்டான்!''&lt;br /&gt;&lt;br /&gt;‘’கிரேன் வச்சி இடிச்சாங்களாம்யா.. ‘’&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாக்காம போயிட்டேன்... தூங்கிட்டேன்பா.. &lt;br /&gt;&lt;br /&gt;புத்த இடிச்சப்பா உள்ளே பத்தடி நீளத்துல ராஜநாகம் வெளிப்பட்டுச்சாம்.. அதை பார்த்து ஆபீசரே அலறிட்டாராம்.. &lt;br /&gt;&lt;br /&gt;சன்டிவில படம் புடிச்சாங்களாம்யா.. ஊர்காரய்ங்களே பேட்டி வேற எடுத்தாங்களாம்.. நான் அப்பதான் பஸ் புடிச்சி கொழுந்தியா வீட்டுக்கு போனேன்பா..  &lt;br /&gt;&lt;br /&gt;ஆபீசருக்கு சாமினா புடிக்காதாம், அதான் மொத்தமா தகர்த்துட்டாராம் &lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்துக்கு இடையூறுனு கோர்ட்டுல ஆர்டர் வாங்கிட்டாய்ங்களாம்பா ’’ &lt;br /&gt;என்று பலரும் பல கதைகள் சொன்னார்கள். கோயிலோடு சேர்ந்து இடிந்துபோய் அமர்ந்திருந்தார் பூசாரி. அவனுக்கு மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி. அந்த பலிபீடக்கல்லையும் கொண்டு போய்விட்டார்கள் போல காணோம். விட்டிருந்தா ஆபீசருக்கே மொளகா அரைச்சிருப்பாய்ங்க முட்டாப்பயலுங்க. கைகொட்டி கண்களில் நீர்வழிய சிரிக்க வேண்டும் போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய மகிழ்ச்சி குதூகலத்திற்கு மத்தியில் அம்மா எழுந்து நின்று ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அலற.. கூட்டம் அம்மாவை சுற்றி வளைத்தது. கிஷ்ணனும் அருகில் போய் நின்றான்.&lt;br /&gt;கண்கள் சிவக்க.. தலையை அவிழ்த்துவிட்டு.. குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறவர்கள் நாக்கைமடிப்பதுபோல மடித்துக்கொண்டு ‘’யேய்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.’’ என்று சப்தமிட சலசலப்புடனிருந்த கூட்டம், மொத்தமாக அமைதியானது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’எவன்டா என் கோயில இடிச்சது.. ம்ம்ம்ம்ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்ஸ் ‘’ , அம்மன் பாம்போடு தொடர்புடையவர்என்பதால் அம்மாவும் கைகளை பாம்பு போல் வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ் என பாம்பினைப்போல சத்தம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூசாரிக்கு தெம்புவந்துவிட்டது.. முகத்தில் உற்சாகம், மூலையில் கிடந்த அவருடைய பிரசாத தட்டையும் வேப்பில்லையையும் எடுத்துக்கொண்டு அருகில் ஓடி வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘’தாயீ.. யாரு தாயீ வந்திருக்க..’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’நான்தான்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பூச்சூடியாத்தாடா..’’ என்று கைகள் இரண்டையும் மேலே உயர்த்திப்பிடித்து நாக்கை மடக்கிக்கொண்டு, பல்லால் கடித்தபடி அச்சு அசல் சாமியாடுகிறவர்களை போலவே இருந்தாள். கிஷ்ணன் இதற்கு முன் அம்மா சாமியாடி பார்த்ததேயில்லை. இதென்ன புதுப்பழக்கம்! அவனுக்கு இதில் ஏதோ சூது இருப்பதாக புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஊருக்கு வெளியே போ! அங்கே ஒரு புத்திருக்கு.. அங்கே எனக்கு கோயில வையி.. எனக்கு அமைதி வேணும்.. அமைதி வேணும்..’’ என்றாள் அம்மா!&lt;br /&gt;&lt;br /&gt;வரும்வழியில் வேப்பமரத்தடியில் பார்த்த புத்து. இங்கே அதையே பிட் ஆக போட்டது அவனை சிரிக்க வைத்தது . அம்மா அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பார்வையே பயமுறுத்தியது. அருந்ததி அனுஷ்காவையும் சந்திரமுகி ஜோதிகாவையும் கலந்து செய்த கலவைபோல பார்வை. ஆனாலும் அம்மாவின் பார்வைதான்.. நிஜமாவே சாமி வந்திருக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;‘’தாயீ இந்த கோயில என்ன பண்ணுறது..’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதை இடிச்சவன நான் பாத்துக்கறேன்டா.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நீ போயி கோயில கட்டுற வழியப்பாருடா.. ம்ம்ம்ம்ம்ம்’’  என்று தலையையும் உடலையும் ஒரேநேரத்தில் சுற்றி சுற்றி சொல்ல.. பூசாரியும் அம்மாவுக்கு ஏற்றபடி அதே சுருதியில் சுற்றினார். வாயில் ஒரு முழூ எலுமிச்சம்பழத்தையும் போட்டு அம்மா அதை நறநறவென கடித்து தின்ன கிஷ்ணனுக்கு பல் கூசியது! ஒரு கற்பூரத்தையும் வாயில் போட்டு அம்மனை சகல மரியாதைகளுடன் மலையேற்றிவைத்தார் பூசாரி. அம்மாவும் மற்ற சாமியாடிகளை போலவே மயங்கி விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் விழித்த போது லேசாக இருட்டியிருந்தது. அம்மன் இறங்கி கிளம்பியபின் அம்மா தலையை வாரிமுடிந்துகொண்டு நார்மலானார். டீக்கடையில் ஸ்ட்ராங் டீ மூன்று சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பூசாரி.. நான் என்ன பாக்கியம் பண்ணினேன் அந்த பூச்சூடியம்மனே என்மேல வந்து எறங்க..’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அம்மா உங்கூட்ல ஏதோ நல்லது நடக்கபோவுதுனு நினைக்கிறேன்.. கைல என்ன மொளகா’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதுவா.. அது பெரிய கதை.. மொதல்ல புதுக்கோயில கட்ற வேலைய பாருங்க.. அது யாரு நெலம்..’’ டீ குடித்தபடி பேசினாள் அம்மா. அது யாருநிலமா? கிஷ்ணன் திடுக்கிட்டு நின்றான்.. பூசாரி ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினார்.. அம்மா லேசாக நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’நம்ம மூலக்கட முருகனோடது.. கறாரான ஆளு.. அதான் என்ன பண்றதுனு யோசிக்கறேன்.. உஷாவுக்கு வேற கல்யாணம் பண்ணோனும்.. ஆடிமாசம் வரப்போவுதே கொஞ்சம் வருமானம் வரும் முடிச்சுட்ரலாம்னு இருந்தேன்.. இப்ப பாருங்க..’’ என்று சலித்துக்கொண்டார் பூசாரி.&lt;br /&gt;&lt;br /&gt;‘’நிலத்த பத்தி கவல படாதீங்க பூசாரி.. ஆத்தா பாத்துக்குவா.. ஏன் என் பையன பார்த்தா பையனாட்டம் தெரியலையா.. அஞ்சு காசு குடுக்க வேணாம்… ‘’&lt;br /&gt;&lt;br /&gt;பூசாரி அசையாமல் நின்றார். கிஷ்ணனுக்கு குலை நடுங்கியது. அப்படியே அம்மாவின் காலில் விழுந்தார். சூனியம் வைக்க வாங்கிய மொளகாயில் அடுத்த நாள் பூசாரிக்கு கறிக்கொழம்பு விருந்து வைக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் நிலம் மூலக்கடை முருகனுக்கு சொந்தமானது. அவன் அதெல்லாம் முடியாது.. ஆத்தாவாவது அம்மனாவது.. யோவ் அது நாலு லட்சம் போகும்யா.. என்று கொடுக்க மறுத்தான். அம்மாவின் மீது மட்டுமே பூச்சூடியம்மன் இப்போதெல்லாம் அடிக்கடி இறங்குவது போலவே அன்றைக்கும் இறங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகனிடம் ‘’டேய் பன்னிப்பயலே ஒழுங்கா நிலத்தை குட்றா இல்ல குலத்தையே நாசம் பண்ணிருவேன்!ஏய்ய்ய்ய்’’ என மிரட்ட.. அவனும் அடிபணிந்தான். புதுக்கோவிலுக்கு புதுப்பீடம் வரவழைக்கப்பட்டது. அதில் அனுதினமும் மொளகாய் அரைக்கப்பட்டது. புது இடம் விசாலமாக இருந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி அது வெரி ஃபேமஸ் டெம்பிளாக மாறியது. கிஷ்ணனின் மொளகாவுக்காக பீடம் காத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் நிச்சயமாகிவிட்டதால்.. வெள்ளிச்சங்கை மறந்தேபோனாள் அம்மா! இதோ கிஷ்ணனுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறக்கப் போகிறது. அம்மா வெள்ளிசங்கு எங்கேயென்று கேட்கலாம்.. அருணிடம் விஷயத்தைச்சொல்லி துப்பினாலும் கொடுத்த பரிசை திருப்பிக் கேட்டுவிட முடிவெடுத்தான்.. இந்த விதிதால் எத்தனை வலியது. அருண் வீட்டிலிருந்த வெள்ளிச்சங்கை யாரோ திருடிவிட்டார்களாம். கிஷ்ணனுக்கு தலை சுற்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-3376645154631081950?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/3376645154631081950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=3376645154631081950' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/3376645154631081950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/3376645154631081950'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post_15.html' title='வெள்ளிச்சங்கு'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AUTh5w8AxnQ/TunQmUC_g2I/AAAAAAAAB2M/RT2FB7MVmew/s72-c/bigFear.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-1102401194033219255</id><published>2011-12-09T12:38:00.000+05:30</published><updated>2011-12-09T12:38:43.429+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-G0a1NJWoly8/TuGzs6LHfkI/AAAAAAAAB2A/dT6w5dCe6yY/s1600/osthe-dec8-1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="258" src="http://2.bp.blogspot.com/-G0a1NJWoly8/TuGzs6LHfkI/AAAAAAAAB2A/dT6w5dCe6yY/s320/osthe-dec8-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும் பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும் பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம் அழிஞ்சிராதா! பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு. போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம் சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே சிரிச்சி மகிழுதுய்யா! &lt;br /&gt;&lt;br /&gt;பாவம் தரணி! குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி வந்துருக்காப்ல! இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன்! முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு!&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் + ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல தம்பி திருந்தி வில்லன் சாவுறான்! இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன்! அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும்! (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு நமக்கேன் பொச்செரிச்சல்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு! அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..&lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல. படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள்! அப்புறம் அந்த கலாசலா கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு.. அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம் காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது.. &lt;br /&gt;&lt;br /&gt;மத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா பாத்துக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-1102401194033219255?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/1102401194033219255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=1102401194033219255' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/1102401194033219255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/1102401194033219255'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post_09.html' title='மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-G0a1NJWoly8/TuGzs6LHfkI/AAAAAAAAB2A/dT6w5dCe6yY/s72-c/osthe-dec8-1.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-1636461636427635277</id><published>2011-12-07T13:39:00.002+05:30</published><updated>2011-12-07T15:37:03.311+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>எக்ஸிஸ்டென்ஷியலிசமும் டீ சமோசாவும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-27V248-K0pw/Tt8doMNjWXI/AAAAAAAAB10/d0KAKhSg638/s1600/charu.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="212" src="http://1.bp.blogspot.com/-27V248-K0pw/Tt8doMNjWXI/AAAAAAAAB10/d0KAKhSg638/s320/charu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை யாருமே கண்டிருக்க முடியாது. ஜெயகாந்தனுக்கு வராத கூட்டம்.. சுஜாதாவுக்கு கூடாத கூட்டம்.. காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது. வந்தவர்கள் வாய் பிழந்தனர். இலக்கியவாதிகள் வயிறெரிந்தனர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வாய்வலிக்க வாழ்த்தி மகிழ்ந்தனர். குடும்பத்தோடு ஏதோ திருமணவிழாவிற்கு வந்ததுபோல வாசகர்கள் கூடியிருந்தனர். வாசகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். வெளியீடு முடிந்ததும் குடித்துத்தீர்த்தனர். வெளியிடப்பட்ட புத்தகம் அரங்கிலேயே 500க்கும் மேல் விற்றுத்தீர்ந்தன. பதிப்பத்தினரோ ‘’புத்தக கண்காட்சிக்குள் பிரிண்ட் பண்ணின புத்தகங்கள் தீர்ந்துவிடும் என்றே நினைக்கிறோம்.. புக்ஃபேருக்கு புதிதாகத்தான் அச்சிடவேண்டும் போலிருக்கிறது’’ என உற்சாகமூட்டினர். இவையெல்லாம் நடந்தது சாருவின் எக்ஸைல் நாவல் வெளியீட்டில். கனவு போலத்தான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரங்கோடி ரூபாயில் அவதார் ரிலீஸ் பண்ணினவன் கூட இந்த அளவுக்கு விளம்பரம் செய்திருப்பானா தெரியாது.. கடந்த மூன்று மாதங்களாகவே வெறித்தனமாக எக்ஸைல் நாவல் வெளியீடு குறித்து விளம்பரப்படுத்திவந்தார் சாரு. அவரோடு அவருடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர்களும் இணைய துண்டுபிரசுரம் தொடங்கி போஸ்டர்,பத்திரிகை விளம்பரம் என அசத்தினர். தமிழில் முதன்முறையாக நாவலுக்கு டிரைலரெல்லாம் வெளியிடப்பட்டது. சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆண்டுதோறும் உயிர்மை என்னும் குடையின் கீழ் நடைபெறுகிற சாருவின் புத்தகவெளியீட்டு விழா இம்முறை அவருடைய வாசகர்களால் அவருடைய வாசகர்களுக்காகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த செலவும் சாருவின் வாசகர்களுடையது என்றே அவதானிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் சிலருக்கு காமெடியாக இருந்தாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த நாவலும் இதுவரை கண்டிராதது. இத்தனை விளம்பரம் எதற்கு? வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரான சுஜாதாவின் புத்தகமே பத்தாயிரம்தான் விற்கிறதென்றால் காரணம் என்ன? அந்த கேள்விக்கான விடையை தன்னுடைய இந்த நாவல் வெளியீட்டின் மூலம் அடிகோடிட்டு காட்டுகிறார் அல்டிமேட் ரைட்டர் என்று அவருடைய வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சாரு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஆறேகாலுக்குத்தான் செல்ல முடிந்தது. கோட் சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு ரிசப்ஷனில் மணமகளோடு கெக்கேபிக்கே என்று அசட்டு சிரிப்பை உதிர்க்கிற மணமகனைப்போல அழகாக காட்சியளித்தார் சாரு! இப்போதெல்லாம் தலைக்கு டை அடிப்பதில்லை போல.. வெள்ளைத்தலையும் குறுந்தாடியுமாக வெளிநாட்டு எழுத்தாளரைப்போல இருந்தார். அவருடைய பிரமாண்டமான புகைப்பட பேனர் வைக்கப்பட்டு மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்திரா பார்த்தசாரதி, வாலிப கவிஞர் வாலி, சாரு மூவர்மட்டும்தான் பேசப்போவதாக சாரு அறிவித்தார். அதற்கு முன்னால் இருபது வாசகர்களுக்கு தன்னுடைய புத்தக பிரதியை மேடையில் வழங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பேசிய வாலி சாருவின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டேன்.. அற்புதம் சூப்பர் ஆஹா ஓஹா.. என்றவர் எந்த குறிப்பிட்ட புத்தகம் குறித்தும் பேசவில்லை , விமர்சிக்கப்படுபவன்தான் அறிவாளி என்று இன்னும் பேச, சுவாரஸ்யக்குறைவினால் தூக்கம் கண்களை தழுவியது. அவர் சொன்னதில் எனக்கு நினைவில் இருப்பது இதுதான்.. இந்த எக்ஸைல் நாவல் சாஃப்ட் போர்னாகிராபி கிடையாது ஹார்ட் போர்னாகிராபி என்றார். விழித்துப்பார்க்கும் போது இந்திரா பார்த்தசாரதி இப்படி ஒரு கூட்டத்தை வாழ்க்கைல பார்த்ததில்லை என்றார். நான் டெல்லியில் இருக்கச்சே அவாள்லாம் சேந்துண்டு..  என்று அவர் சின்ன வயசாக இருக்கச்சே ஆதாம் ஏவாளோடு இலக்கியம் வளர்த்த கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் தூங்கிக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு தேகம் நாவல் குறித்து பேசிய மிஷ்கின் , இது சரோஜா தேவி என்று குறிப்பிட்டதையே நாசூக்கான மொழியில் இபாவும் வாலியும் குறிப்பிட்டு பேசியதாகவே கருதுகிறேன். ஆனால் சாரு மிஷ்கினை திட்டியது போல இவாளை திட்டமாட்டார் என்றே நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மதன் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கத்தினை போல நிகழ்ச்சியின் பாதியில் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவரை பேச சாரு அழைத்தார். அரை மணிநேரம் பேசினார்.. சாரு ஒரு உலக எழுத்தாளர்.. அவரை நாம கொண்டாடனும்.. அவருதான் மாஸ்.. மத்ததெல்லாம் தூஸ், இது உலகத்தரம் வாய்ந்த நாவல் என்பது கணக்காக நிறைய பாராட்டி பேசினார். நான் சாருவின் ரசிகனாகிட்டேன் என பெருந்தன்மையோடு அறிவித்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு இந்த தமிழ் இலக்கிய சமூகத்தில் தான் சந்திக்கிற பெருந்துன்பங்களை பட்டியலிட்டு பேசினார் சாரு. இனிமேல் நான் தமிழில் எழுதப்போவதில்லை என அறிவித்தார். அதாவது தமிழில் எழுதி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துதான் வெளியிடலாம் என்ற யோசனையில் இருக்கிறேன் என்றார். பிறகு மூலிகை வளம்,சித்தமருத்துவம்,பழம்பெருமை பற்றியெல்லாம் பேசினார். வாசகர்வட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். சாரு பேசிமுடித்த அடுத்த நொடி பலரும் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். பதிப்பகத்தார் பத்ரி நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சி படு போர்! சாருவின் நிகழ்ச்சிகளில் நாம் எதிர்பார்க்கிற அந்த ஜோர் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் சாரு ரொம்பவே அடக்கிவாசித்ததால் என்பதாலோ அல்லது கூட்டத்தில் உரையாற்றிவர்களின் பேச்சாலோ இருக்கலாம். ஆனால் இந்தமுறை ஏமாற்றமே! &lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் குசேலரான ஷோபாசக்தியும் நெருங்கிய நண்பர் எஸ்ராவும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. எழுத்தாளர் மாமல்லன் ஜிகஜிகாவென வெளிர்பச்சை நிற டிஷர்ட்டில் வந்து பயமுறுத்தினார். நிகழ்ச்சி முழுக்க ரொம்பவே அவதியுற்றார். மனுஷ்யபுத்திரன் வருவார் என கிசுகிசுக்கப்பட்டது. அவரும் வரவில்லை. சாருநிவேதிதா உயிர்மையை திட்டுவார் என எதிர்பார்த்து வந்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். உயிர்மையில் பத்தாண்டுகளாக சினிமாவிமர்சனம் எழுதினேன் எனக்கு பத்துகாசு கூட கொடுக்கவில்லை என பழைய பாட்டையேதான் சாரு பாடினார். அதோடு அந்த நேரத்தில் என்னுடைய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்திருந்தால்..  என்றெல்லாம் பேசினார். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் அரங்கிலேயே விற்கப்பட்டது. அரங்கத்திற்கு வந்திருந்த பலரும் எக்ஸைலும் கையுமாக அலைந்தனர். சாருவுக்கு ஆகாதவர்கள் பலரும் புத்தகம் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திரிந்தனர். நானும் வாங்கலாம் என கடைக்கு போனால் விலை 200,.. 250ரூபாய் மதிப்புள்ள புத்தகம் 200க்கு கொடுக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பலமுறை எழுதியதுதான் சாருவைப்போலவே அடியேனும் பரம ஏழை. 200ரூபாய்க்கு புத்தகம் வாங்கி படிக்கிற வசதி சமகாலத்தில் அடியேனுக்கு இல்லை. அதனால் புத்தகம் வாங்கியவர்களை ஏக்க பெருமூச்சோடு வேடிக்கை பார்த்தேன். தோழர் ஒருவர் வாங்கிய புத்தகத்தை ஒன்மினிட் ப்ளீஸ் என கேட்டு வாங்கி புரட்டினேன். காசுகொடுத்து வாங்க முடியவில்லையே என்கிற சோகம் மனதை கவ்வியது! கண்களில் நீர் கசிந்தது. துடைத்துப்போட்டுவிட்டு.. அதைவிடுங்க எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்தது. என்னை பொருத்தவரையில் இந்த நிகழ்வை அவருடைய வாசகர்கள் எந்தகுறையும் வைக்காமல் சிறப்பாக நடத்தி காட்டியிருக்கின்றனர். பதிப்பத்தின் பெரிய உதவியோ இலக்கியவாதிகளின் அரவணைப்போ எதுவுமேயில்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்து இவ்வளவு பிரமாண்டமான விழாவை நடத்திய சாருவின் வாசகர்களுக்கு பாரட்டும் வாழ்த்துகளும். இதுபோல வாசகர்கள் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இதுவரை கிடைத்ததில்லை என்பது நிச்சயம். நாகேஸ்வரராவ் பார்க்கில் போய் துண்டுபிரசுரம் கொடுக்கிற அளவு அர்ப்பணிப்பை தமிழ் இலக்கயவாசகர்களிடையே மைக்ரோஸ்கோப்பில் தேடினாலும் அகப்படுமா தெரியவில்லை. இது இலக்கியத்திற்கு நல்லதா என்பதையும் தாண்டி என்னை வெகுவாக கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் பிரமாண்டமான இலக்கிய கொண்டாட்டமாக இருந்தாலும் என்னளவில் பெரிய ஏமாற்றம்தான். காரணம் டீ காஃபி சமோசா எதுவுமே கொடுக்கவில்லை. ஸ்பான்சர் கிடைக்கவில்லையோ என்னவோ? சமோசா இல்லாமல் என்னத்த இலக்கியம் வளர்த்து.. அடப்போங்கப்பா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-1636461636427635277?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/1636461636427635277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=1636461636427635277' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/1636461636427635277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/1636461636427635277'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post_07.html' title='எக்ஸிஸ்டென்ஷியலிசமும் டீ சமோசாவும்!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-27V248-K0pw/Tt8doMNjWXI/AAAAAAAAB10/d0KAKhSg638/s72-c/charu.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-6952527184764711630</id><published>2011-12-01T16:23:00.000+05:30</published><updated>2011-12-01T16:23:34.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மாவுத்து, காவடி மற்றும் ஷங்கர்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-zqrfWL9Zsrk/TtdaxniStnI/AAAAAAAAB1Q/jgWBDceNoZ4/s1600/kavadi.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://2.bp.blogspot.com/-zqrfWL9Zsrk/TtdaxniStnI/AAAAAAAAB1Q/jgWBDceNoZ4/s400/kavadi.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யானைகுறித்த ஆராய்ச்சிக்காக முதுமலைக்கு சென்றிருந்தபோதுதான் மாதவன் பழக்கமானார். அவர் ஒரு மாவுத்து. மாவுத்து என்றால் யானைப்பாகன் என்று அர்த்தம். மிக இனிமையான மனிதர். முதுமலையில் யானைகளோடு யானைகளாக வாழ்பவர். யானைகள் குறித்து பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவரோடு ஒருநாள் முழுக்க சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன யானைக்கதைகள் ஏராளம். பாகன்களுக்கும் யானைகளுக்குமான உறவு அலாதியானது. ஒரு நாவலே எழுதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மாவுத்து மாதவனுக்கு எல்லாமே ஷங்கர்தான்! தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். கையை தூக்கி கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தால்.. அப்படியும் இப்படியும் வாலை ஆட்டிக்கொண்டு இலைதளைகளை தின்றபடி காத்திருப்பான் ஷங்கர்! தினமும் கண்விழிப்பது அவன் முகத்தில்தான். ஒருநாள் கூட அவனைவிட்டு பிரியமாட்டார். மாதவனை கண்டதும் உற்சாகமாகி வ்ர்ர்ர்ராங் என தும்பிக்கை உயர்த்தி கத்தி கூச்சலிடுவான் ஷங்கர். புன்னகைத்தபடி அவனருகில் சென்று அவனுடைய காது மடல்களை தடவிக்கொடுத்தால்.. குழைவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை கட்டியிருக்கும் சங்கிலிகளை கழட்டிப்போட்டுவிட்டு.. இருவரும் அங்கிருந்து கிளம்பினால் அடுத்து காட்டுவழிச்சாலை. காட்டிலிருந்து வேப்பங்குச்சியை உடைத்து பல்லு விலக்கியபடி நகர, பெரிய மரத்தில் நல்ல பசுங்கொம்பாய் ஷங்கரும் உடைத்து மென்றபடியே நடைபோடுவான். அருகிலே ஓடும் ஆற்றில் இரண்டுபேருமாக குத்தாட்டம் போட்டு குளித்து எழுந்து.. கால்மணிநேரம் காலார நடந்தால் முதுமலையிலிருக்கிற யானைகள் கேம்ப் வந்துவிடும்! அங்கே ஷங்கருக்கான ‘’டயட் பிரேக் ஃபாஸ்ட்’’ பக்காவாக தயார் செய்து வைத்திருப்பான் ‘’காவடி’’ கணேஷ்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4w-6g_xLjXE/TtdbCgx4EHI/AAAAAAAAB1c/6gITyq0Ha30/s1600/saapadu.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://4.bp.blogspot.com/-4w-6g_xLjXE/TtdbCgx4EHI/AAAAAAAAB1c/6gITyq0Ha30/s320/saapadu.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வேகவைத்த கொள்ளு நான்கு கட்டிகள், ராகி களி இரண்டு கட்டி, அரிசி சோறு மூன்று கட்டி, ஒரு கைப்புடி உப்பு, சர்க்கரை, கொஞ்சம் புரதச்சத்து பவுடர் என எல்லாமே வரிசையில் காத்திருக்கும். ஹாயாக போய் அதன் ‘’பார்க்கிங் ஸ்டான்டில்’’ நின்றுகொண்டால் மேலே சொன்ன அனைத்தையும் மொத்தமாக போட்டு பிசைந்து உருண்டையாக்கி கொண்டுபோய் குட்டிப்பாப்பாவுக்கு ஊட்டுவது போல ஊட்டிவிடுவார் மாதவன்! பொறுமையாக மென்று தின்றபின் அடுத்த உருண்டை.. ம்ம் வேண்டாம் என்று தலையை ஆட்டி அடம்பிடித்தால்.. சாப்பிடு கண்ணா என பிரமாண்ட காதை பிடித்து திருகி.. சாப்பிடவைக்கிறார். சாப்பிட்டு முடித்ததும் ஜாலியாக காட்டுக்குள் கிளம்பினால் மாலைவரை காடு காடு காடுதான்! &lt;br /&gt;&lt;br /&gt;காட்டுக்குள் சுற்றும்போதே வேண்டிய அளவு இளைதளைகளை பறித்து ஒன்றாக கட்டி தந்தங்களுக்குள் சொருகி வைத்துக்கொண்டு, ஆற்றுப்பக்கமாக மதியநேர குளியலை முடித்துவிட்டால் ஸ்ட்ரைட்டா முகாம்தான்! முகாமில் கொஞ்சம் ஓய்வு. பிறகு மீண்டும் இருவருமாக வீடு நோக்கி பயணிக்கத்தொடங்கிவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘’இதோ இந்த யானைக்கு நான்ன்னா அவ்ளோ இஷ்டம்ங்க.. அப்படியே தும்பிக்கையால கட்டிப்புடிச்சிக்குவான். ஒருமணிநேரம் கூட பிரிஞ்சி இருக்கமாட்டான். கண்ணெதிர்லயே இருக்கணும். குழந்தைமாதிரி.. ஒருவயசு குட்டிலருந்து இவனோடதான் வாழறேன். இவனுக்கு நான்தான் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,காதலி எல்லாமே!’’ என சிரிக்கிறார் ஒரு மாவுத்து. இவர் மட்டுமல்ல முதுமலையில் இருக்கிற 24யானைகளுக்கும் ஒரு மாவூத்து.. ஒவ்வொருவரும் தன் உயிராக இந்த யானைகளை நேசிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;முதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி! யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை. குக்கா புக்கா என்று ஏதோ புதுமாதிரியான பாஷையில் யானைகளோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றனர் இந்த மாவுத்துகள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் நாய்க்குட்டி போல இவர்களுடைய பேச்சினை அப்படியே கேட்கின்றன. நில் என்றால் நிற்பதும் உட்காரென்றால் உட்காருவதும்.. குதி என்றால் குதிப்பதில்லை.. யானைகள் குதிக்காது. ஆனால் மனிதர்களின் அன்புக்கு எப்போதுமே கட்டுப்பட்டிருக்கின்றனர்.&lt;br /&gt;‘’இதோ இங்கே ரெண்டு பேர் இருக்கானுங்க பாருங்க ஒருத்தன் பேரு விஜய் இன்னொருத்தன் சுஜய், இரட்டை பயலுக சரியான முரட்டு பசங்க.. நம்ம பேச்சை மட்டும்தான் கேப்பானுங்க’’ என்று அறிமுகப்படுத்துகிறார் இன்னொரு மாவுத்து. இவர்கள் யானைகளுடன் பேசுகிற இந்த மொழி மிகவும் வித்தியசமானதாகவும் ஆனால் தெரிந்த மாதிரியும் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இதுங்களா, உருது,மலையாளம்,தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக்குடுக்கறோம்’’ என்கின்றனர். ஒரு குக்கா புக்கா கட்டளைகள்தான் என்றாலும் யானை தன்னுடைய பாகன் சொன்னால் மட்டும்தான் கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்!  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச்செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை குமுகியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதென்ன குமுகி! போலீஸ் யானைனு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஊருக்குள் எங்கேயாவது காட்டுயானைகள் நுழைந்தாலோ, வயலுக்குள் புகுந்துகொண்டு வெளியேறாமல் இருந்தாலோ, தன் கூட்டத்தை விட்டு சாலைகளுக்கும் முக்கிய பகுதிகளுக்கும் வந்துவிடுகிற யானைகளை விரட்ட மனிதர்களால் முடியவே முடியாது. அதிலும் சில குறும்புக்கார காட்டு யானைகள் உண்டு. என்ன செய்தாலும் நகராது. அந்த நேரத்தில்தான் நம்ம ஸ்பெஷல் கும்கி யானை டீம் அங்கே களமிறங்கி மொத்தமா விரட்டுவாங்க.. இவங்க போயிட்டா வேலை முடிஞ்சா மாதிரிதான்!’’ என்று சிரிக்கிறார் வன அலுவலர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத்தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும்.  டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான். இந்த குமுகி யானைகளை கண்டால் காட்டுயானைகள் தெறித்து ஓடுமாம்! &lt;br /&gt;&lt;br /&gt;‘’இங்கே இருக்கிற ஒவ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல அதனால் அவர்களுடைய நலனில் மிகுந்த அக்கறையுண்டு எங்களுக்கு! ஒவ்வொரு யானையும் காலையில் என்ன சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற டயட் பிளானை இங்கேயே இருக்கிற மருத்துவர் அளித்துவிடுவார், அந்த அளவு உணவுதான் தரப்படும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படும். மற்றபடி எங்க டிபார்ட்மென்ட்டில் எங்களோடு பணியாற்றுகிற சகபணியாளராக நண்பராகவே இவர்களும் இருக்கின்றனர்! இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்.. பேர் சொல்லிதான் அழைப்போம், உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது!’’ என அடித்துச்சொல்கிறார் வனஅலுவலர்!&lt;br /&gt;&lt;br /&gt;அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டுகின்றனர் விஜயும் சுஜயும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;செம்மொழியான்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9bbOYb139h0/TtdbbS0e6UI/AAAAAAAAB1o/gzayv5KPiz0/s1600/semmozhiyan.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://1.bp.blogspot.com/-9bbOYb139h0/TtdbbS0e6UI/AAAAAAAAB1o/gzayv5KPiz0/s400/semmozhiyan.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இங்கே புதிதாக இணைந்தவர் மிஸ்டர்.செம்மொழியான் என்கிற வேது! வயது ஒன்று. காட்டில் எப்படியோ தாயை பிரிந்த இந்த குட்டி யானை முதுமலை முகாமில் பத்திரமாக வளர்க்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நேரத்தில் கிடைத்ததால் செம்மொழியான் என பெயர் வைத்துவிட்டனராம்! இவருக்கு மூன்று வேலையும் லேக்டஜன் 2 கொடுக்கின்றனர். ஆறுமாதம் வரை ட்யூப் மூலமாக லேக்டஜன் ஒன்று கொடுக்கப்பட்டதாம். ஒன்றரை வயதுக்குமேல்தான் சாதாரண உணவுகள் கொடுக்கப்படுமாம். நாம் கையை நீட்ட பாசத்தோடு நம் கைகளை பற்றிக்கொள்ள பிரிந்து வர மனமேயில்லாமல் கிளம்பினேன். என்னதான் தமிழ்ப்பெயர் சூட்டினாலும் ஷார்ட்நேம் முக்கியமென்பதால் வேது என அழைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு துணையாக இன்னொரு குட்டியும் இருக்கிறாள் அவள் பெயர் வேதா. அவளுக்கு வயது ஆறுமாதம்தான். இன்னும் ரொம்ப குட்டியாக இருக்கிறாள். கிருமித்தொற்று உண்டாகும் என யாரும் அவளை பார்க்க அனுமதிப்பதில்லை. நான் மட்டும் சிறப்பு அனுமதியில் பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தாள். படமெடுக்க மனமில்லாமல் கிளம்பினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-6952527184764711630?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/6952527184764711630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=6952527184764711630' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/6952527184764711630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/6952527184764711630'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/12/blog-post.html' title='மாவுத்து, காவடி மற்றும் ஷங்கர்'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-zqrfWL9Zsrk/TtdaxniStnI/AAAAAAAAB1Q/jgWBDceNoZ4/s72-c/kavadi.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-7005823468181660127</id><published>2011-11-28T16:30:00.001+05:30</published><updated>2011-11-28T16:31:14.736+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>எஸ்ராவின் கதாகாலட்ஷேபம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bJuZnsBf_eY/TtNnzNLnBLI/AAAAAAAAB1E/9bP1VWkf2Pg/s1600/RAMAKRISHNA23.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="175" width="225" src="http://1.bp.blogspot.com/-bJuZnsBf_eY/TtNnzNLnBLI/AAAAAAAAB1E/9bP1VWkf2Pg/s320/RAMAKRISHNA23.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அந்த அறிவிப்பே காமெடியாகத்தான் இருந்தது. என்னது எஸ்ரா ஏழுநாள் பேருரை ஆற்றப்போகிறாரா? ஹிஹி செம்ம காமெடியா இருக்குமே! என்று நண்பர்களோடு பேசிக்கொண்டேன். அதிலும் உலக இலக்கியங்கள் குறித்து பேசுகிறார் என்றதும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. உலக இலக்கியங்களின் மீதான அச்சமும் எஸ்ரா குறித்து நான் அறிந்திருந்த தகவல்களும் அப்படியொரு எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கலாம். எஸ்ராவின் புத்தகங்கள் எதையுமே பல காரணங்களால் என்னால் படிக்க முடியாமல் போயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறிவிப்பு எனக்கு சிறுவயதில் கேட்ட கதாகாலட்சேபங்களை நினைவூட்டியது. எங்கள் வீட்டருகே இருந்த கோவிலில் எப்போதுமே யாராவது பேசிக்கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன். பெரியபுராண கதைகளை பல நாட்கள் பெரியவர் ஒருவர் மைக் வைத்து சொல்லிக்கொடுப்பார். முடிவில் சுண்டலும் பொங்கலும் கிடைக்கும் என்கிற காரணத்திற்காக பள்ளி முடிந்து அங்கே செல்வதை வழக்கமாக்கியிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிலநாட்களில் அந்தப்பெரியவர் கதை சொல்லுகிற பாணியும் லாகவமும் சுவாரஸ்யமான கதைகளும் சுண்டல் பொங்கலை விடவும் சுவையாயிருந்தன. கதைகளுக்காகவே தினமும் பள்ளிமுடிந்ததும் விளையாடாமல் முகத்தை கழுவி திருநீர் போட்டுக்கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். இன்னமும் அந்தப்பெயர் தெரியாத பெரியவர் சொன்ன கதைகள் அனைத்தும் நினைவிலேயே இருக்கிறது. எஸ்ராவின் பேச்சும் அப்படித்தான் இருந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு திருநீரு பூசாமல் கையைக்கட்டிக்கொண்டு முதல்வரிசையில் அமர்ந்து ஆவென ஆச்சர்யத்தோடு கதை கேட்டு மகிழ்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்ராவின் பேச்சினை உலக இலக்கியங்கள் ஃபார் டம்மீஸ் என்று வைத்துக்கொள்ளலாம். ஏழுநாட்கள் பேச்சு என்றபோதும் என்னால் முதல்நாள் போகமுடியவில்லை. போகிற ஆர்வமும் இல்லை. ஃபேஸ்புக்கில் சிலர் எஸ்ராவின் பேச்சு பிரமாதம் என புகழ்ந்து தள்ளுவதைக்கேட்டு அப்படி என்னதான்யா இந்தாளு பேசறாரு பார்த்துபுடுவோம் என இரண்டாம் நாள் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு சென்றேன். சாரு மாதிரியான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட பேச்சைக்கேட்க வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்குநிறைந்து முப்பதுக்கும் மேல் வாசகர்கள் நின்றுகொண்டே பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தனர். நாற்காலிகள் கிடைக்காத காரணத்தால் அரங்கின் ஓரத்தில் தரையில் அமர்ந்து கேட்கத்தொடங்கினேன். அன்றைக்கு பேச்சு தாஸ்தோவ்ஸ்கி பற்றியது. அந்தப்பெயரை இதற்குமுன் பகடி எழுத மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். தாஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டணையும் புத்தகம் குறித்து பேசத்தொடங்கினார் எஸ்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப மொக்கை போட்டா எழுந்து ஓடிடுவோம் என்கிற எண்ணத்துடன்  ஓட்டப்பந்தய வீரனைப்போல தயாராயிருந்தேன். ஆனால் எஸ்ராவின் பேச்சு.. தகவல்கள்.. பகிர்ந்துகொண்ட விதம். அப்படியே இரண்டு கால்களையும் கட்டிப்போட்டு அமரவைத்தது. கிட்டத்தட்ட ஒன்னாம்ப்பு படிக்கும் பையனைப்போல சம்மணமிட்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து நான்மட்டுமல்ல ஒட்டுமொத்த அரங்குமே கேட்டுக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் படித்த ஒரு புத்தகத்தினை தெரிந்துகொண்ட சில தகவல்களை நண்பனைப்போல பகிர்ந்துகொண்டார். ஒரு மந்திரவாதியினைப்போல தாஸ்தோவ்ஸ்கியின் வாழ்க்கையையும் அந்நாவல் ஏன் எழுதப்பட்டது,எப்போது எழுதப்பட்டது,எப்படி எழுதப்பட்டது , எது அவரை அந்நாவல் எழுத தூண்டியது. அந்நாவல் அதன் ஆசிரியருக்கு எப்படிப்பட்டது என தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தில் தாஸ்தோவ்கியின் மீது ஒரு ஈர்ப்பையும் அவருடைய எழுத்துகளின் மீது ஒரு மரியாதையையும் உண்டாக்கினார் என்றுதான் சொல்லவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எதைப்பற்றி பேசினாலும் அதோடு தொடர்புடைய திரைப்படங்கள்,நாடகங்கள்,கவிதைகள்,புத்தகங்கள்,வரலாற்று சம்பவங்கள் என எதையுமே விட்டுவைக்காமல் பகிர்ந்துகொண்டார். உதாரணமாக மேக்பெத் குறித்து பேசும்போது அக்கதையில் வருகிற மூன்று சூனியக்காரிகளுக்கு வரலாற்றை தெரிவித்தார். ஷேக்ஸ்பியரின் காலத்தில் சூனியக்காரிகள் வேட்டையாடிக்கொல்லப்பட்டதையும் கூறினார். இப்படி ஒவ்வொரு கதையில் வருகிற கதாபாத்திரங்களின் வேர்களையும் தேடியது அந்த உரை.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு தெரிந்த அனைத்தையுமே பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை உணரமுடிந்தது. உலக இலக்கியங்களை மனிதர்களின் சமகாலவாழ்வியலோடு தொடர்பு படுத்தி பேசியது சிறப்பாக இருந்தது. அவர் பேசியதில் சில தகவல் பிழைகளிருப்பதாக நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இருந்துவிட்டுபோகட்டுமே. உலக இலக்கியங்கள் என்பதே பாகற்காயாக இருந்த எனக்கு அதையெல்லாம் படித்துவிடவேண்டும் , தேடிதேடி தாஸ்தோவ்ஸ்கியையும் டால்ஸ்டாயையும் பாஷோவையும் ஹோமரையும் ஷேக்ஸ்பியரையும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தினையும் இரண்டு மணிநேரத்தில் உண்டாக்கியிருக்கிறாரே! &lt;br /&gt;&lt;br /&gt;ஹோமரின் இலியட் பற்றி பேசியபோது அதை இந்தியாவின் புராணங்களோடு ஒப்பிட்டு கிட்டத்தட்ட இந்திய இலக்கியமாகவே மாற்றிக்காட்டினார். இலக்கியம் எதுவாக இருந்தாலும் எந்த நாட்டினுடையதாக இருந்தாலும் அவை அனைத்துமே மனிதர்களுக்கானவை என்பதே எஸ்ராவின் ஏழுநாள் உரையின் ஒரே கருத்தாக இருந்தது. நம் வாழ்வில் கதைகளின் முக்கியத்துவம் குறித்துப்பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு நாள் உரை அவர்மீது ஒருவித அன்பினை நட்பினை பிணைப்பை உண்டாக்கியது. எவ்வளவு இனிமையான மனிதர் இவர். புன்னகையோடு அனைத்தையும் நேசிக்கிறார். எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டுகிறார். ஒரு குழந்தையைப்போல ஆர்வத்துடன் விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நிறையவே தெரிந்துகொள்கிறார். இன்னமும் அவருக்குள் ஒரு குழந்தைத்தன்மை மிச்சமிருப்பதையும் உணர முடிந்தது. மூன்றாம் நாள் ஹைக்கூ குறித்து பேசும் போது அது நிகழ்ந்தது. திருடன் விட்டுச்சென்ற ஜன்னல் நிலவு என்கிற ஹைக்கூ குறித்து பேசினார். அற்புதமான பேச்சு அது. ‘’மாஸ்டர் என்னை உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என கத்திவிட வேண்டும் போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை இயற்கையை மனிதர்களை குணங்களை கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர் நேசிக்கிறவராக இருப்பதை ஏழுநாள் உரைகளும் எனக்கு உணர்த்தியது. எதையுமே விலகிநின்று ரசிக்கிற தன்மையை உணர முடிந்தது. ஆனால் ஒருநாள் கூட ‘என்னுடைய அந்த புத்தகத்தில் அப்படி எழுதியிருக்கிறேன்.. இந்தக்கதையில் இப்படி எழுதியிருக்கிறேன்.. அதை வாங்கிப்படியுங்கள் அதுதான் இலக்கியம்.. ‘’ என்றெல்லாம் பெருமை பீத்தல்களில் அவர் இறங்கவேயில்லை. ஏழுநாட்களும் அரங்கு நிறைய அதுவே காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; உலக இலக்கியங்களை கரைத்துக்குடித்த பெரிசுகளுக்கு இந்த உரை சலிப்பூட்டக்கூடியதாகவும் மொக்கையாகவும் இருந்திருக்கலாம். என்னைப்போன்ற ஒன்னாம்ப்பு மாணவர்களுக்கு இதைவிடவும் சிறந்த இலக்கிய அறிமுகத்தினை இதற்குமுன் யாருமே கொடுத்ததில்லை. ஏற்பாடு செய்த உயிர்மைக்கு நன்றிகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏழு நாள் உரையும் டிவிடி வடிவில் வெளியாகவுள்ளதாக தன்னுடைய இணையதளத்தில் எழுதியிருக்கிறார். அப்படி வெளியாகும்போது அனைவரும் நிச்சயமாக வாங்கி பார்க்கவேண்டும். மற்றபடி ஏழு நாட்களுக்கு பிறகு இன்றைக்கு மாலை எஸ்ராவின் உரையில்லை. என்பது ஒருவித ஏமாற்றத்தினை கொடுக்கிறது. டிசம்பர் 6 சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா வரைக்கும் காத்திருக்கவேண்டும். எஸ்ரா அன்றைக்கு பேசுகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-7005823468181660127?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/7005823468181660127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=7005823468181660127' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/7005823468181660127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/7005823468181660127'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/11/blog-post_28.html' title='எஸ்ராவின் கதாகாலட்ஷேபம்!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bJuZnsBf_eY/TtNnzNLnBLI/AAAAAAAAB1E/9bP1VWkf2Pg/s72-c/RAMAKRISHNA23.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-937057256660832393</id><published>2011-11-24T17:22:00.004+05:30</published><updated>2011-11-25T15:01:31.639+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கொலைவெறி இலக்கியம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sinM9-_8GZ8/Ts4vbyyn8FI/AAAAAAAAB04/75xNuy7AGVA/s1600/Athisha%2B%25281%2529.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="280" src="http://3.bp.blogspot.com/-sinM9-_8GZ8/Ts4vbyyn8FI/AAAAAAAAB04/75xNuy7AGVA/s320/Athisha%2B%25281%2529.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஊரில் உயிரோடு இருந்தவர்களில் முக்கால்வாசிபேர் இலக்கியவாதிகளாக இருந்தனர். அதே ஊரில் இரண்டு சாதாரண மனித இளைஞர்களும் வசித்துவந்தனர். அந்த இரண்டு பேரும்தான் அத்தனை இலக்கியவாதிகளுக்கும் மிச்சமிருந்த மிச்ச சொச்ச இரண்டே இரண்டு வாசகர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த இருவரும் பரம ஏழைகள். மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள். எவ்வளவு உழைத்தாலும் பசி பஞ்சம் பட்டினி. இந்த அயராத உழைப்புக்கு மத்தியிலே, பிரியாணி தின்றுவிட்டு பல்லிடுக்கில் சிக்கிய கறித்துண்டை நோண்டியபடி டோல்ஸ்டாய் பற்றியும் லத்தீன் அமெரிக்க இசைபற்றியும் கொரியமொழியில் வெளிவரும் உலகசினிமா குறித்தும் பின்னவீனத்துவமாக முதுகு சொறிந்தபடி விதந்தோதுகிற இலக்கியவாசிப்புக்கு எங்கே நேரம். செக்குமாட்டுக்கு எதுக்கு சிங்காரம். அடிமாட்டுக்கு எதுக்கு அலங்காரம். சரியான ஞானசூனியங்கள். ஆனாலும் இந்த இருவருடைய இலக்கிய வெறியும் ஆர்வமும் அலாதியானது. &lt;br /&gt;&lt;br /&gt;ஓசி டீயும் சமோசாவும் கிடைக்கிறதென்கின்ற ஒரே காரணத்திற்காக ஊரில் எந்த இலக்கிய,கவிதைவாசிப்பு,புத்தகவிமர்சன,வெளியீட்டு,முற்போக்கு பிற்போக்கு கூட்டங்களிலும் மேலும் இன்னபிற சமோசாடீ கூட்டங்களிலும் கலந்துகொள்வதை பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;புரிகிறதோ புரியவில்லையோ கூட்டமிருக்கிறதோ இல்லையோ பேருரைகள் முடியும்வரை முழுமையாக காத்திருந்து கடைசியில் கொடுக்கப்படுகிற சூடான டீயை உறிஞ்சி குடித்துவிட்டு சமோசாவை தின்றுவிட்டு வயிறார நடையை கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அந்த இருவரும் அதிதீவிர இலக்கியபிரதிகளாக இலக்கிய வானின் சுடரொளிகளாக , இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எஞ்சி இருக்கிற கடைசி இரண்டு வாசகர்களாக இலக்கியவாதிகள் மத்தியில் புகழ்பெற்றிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘அடேங்கப்பா அந்த இரண்டுபேருக்கும் என்ன ஒரு இலக்கிய ஆர்வம்ன்றீங்க ஒரு கூட்டம் மிஸ்பண்ணமாட்டாங்க.. அதுவும் நான் கலந்துக்கற கூட்டம்னா முத ஆளா வந்து விசில்தான் கைத்தட்டல்தான். ஏன்னா பாருங்க என் மேல அவங்களுக்கு அவ்ளோ அபிமானம். நான் கிணத்துல குதிங்கனு எழுதி முடிக்கறதுக்குள்ள கிணத்துல விழுந்து செத்து மிதப்பாய்ங்கன்னா பாத்துக்கோங்களேன்’’ என்று எல்லா பிரபல எழுத்தாளர்களும் அந்த இருவரையும் தங்களுடைய வாசக அடிமைகளாக ஊருக்குள் சொல்லித்திரிந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் அந்த இருவரையும் போனில் அழைத்தும் நேரில் சந்தித்தும் டீ வாங்கிக்கொடுத்து உரையாற்றுவதை எங்கும் காணலாம். அரிதாக சிலர் சாப்பாடு வாங்கிக்கொடுத்து அவர்களிடம் உரையாற்றுவார்கள். இலக்கியவாதிகளுக்கு எப்போதெல்லாம் ஆர்வவெறிதீர உரையாற்ற வேண்டும் என ஆசையாக இருக்கிறதோ கையில் பத்து இருபது ரூபாயோடுவந்தால் இருவரும் ஐட்டம் போல தயாராகிவிடுவார்கள். இந்த இலக்கியவாதிகளும் அரைமணிநேரமோ ஒருமணிநேரமோ கதறகதற இலக்கியம் பேசிவிட்டுப்போகலாம். டீ ரொம்பவே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பல நாட்கள் ஊருக்குள்ள நாங்களும் இலக்கியவாதிகள்தான் என ஏமாற்றிக்கொண்டு ஓசி டீயும் சமோசாவும் அவ்வப்போது பிரமாண்ட பொருட்செலவில் சரவணபவன் சாப்பாடும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் நல்ல பாடம் கற்பிக்க நினைத்தது விதி. &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கும் அந்த இலக்கிய கூட்டத்தில் எப்போதும் போலவே மேடையில் பத்து பேரும் பார்வையாளர்கள் நான்குபேரும் அமர்ந்து பின்னவீனத்துவத்தை பிச்சு பிச்சு போட்டுக்கொண்டிருந்தனர். சொந்தகாசில் புத்தகம் போட்ட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த கோமான்களும் சீமாட்டிகளும் வீட்டிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு பேசி தீர்த்தனர். &lt;br /&gt;பெரிய பார்ட்டி என்பதால் வழக்கத்திற்கு மாறாக சமோசாவுடன் சுவீட்டும் மிக்சரும் கூட சேர்த்துகொடுப்பார்கள் என்கிற ஆர்வத்தோடு எப்போதும் போல வயிற்றை வெற்றிடமாக்கிப் போயிருந்த இருவருக்கும் பச்சை தண்ணீர் கூட கொடுக்காமல் ஏமாற்றினர். பசிமயக்கத்தில் கண்களில் தூக்கம் சொக்கியது இருவருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கைத்தட்டிக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தது விதி. அவர்கள் இருவரையும் பார்த்து முதலில் புன்னகைத்தது. அவர்களும் மறுபுன்னகையை மெலிதாக அளித்தனர். விதி தன் பத்து சொச்சம் கவிதைகளை ஒன்று திரட்டி ஒரே ஒரு புத்தகத்தை தன் சொந்தகாசில் அச்சேற்றி அதை அதுவே கூடையில் வைத்து கூவி கூவி ஊரெங்கும் ஓசியில் கொடுத்து புகழடையும் வெறியிலிருந்தது! ஏற்கனவே இருவருக்கும் தலா ஒரு கவிதை தொகுப்பை இலவசமாக அளித்திருந்தது. கட்டாயம் படிச்சிட்டு சொல்லுங்க கருத்து சொல்லியே ஆகணும்.. உங்க கருத்து ரொம்ப முக்கியம் பாஸு  என்று கண்டிப்பாக சொல்லியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதையென்றாலே கரப்பான்பூச்சி போல இருவருக்கும். வாசித்தால் வாந்தி வரும். அதனால் எப்போதும் செய்வதைப்போலவே அந்த அருமையான கவிதைத் தொகுப்பையும் எடைக்குப்போட்டு டீ வாங்கி குடித்திருந்தனர். ஆனால் இப்போது விதி அருகில் வந்து அமர்ந்து அந்த கவிதைத்தொகுப்பை பற்றிகேட்குதே என அஞ்சிநடுங்கினர். நிலைகுலைந்து போயினர். &lt;br /&gt;&lt;br /&gt;விதியும் ‘இந்த பசங்க நம்ம கவிதைய படிச்சி பயங்கரமா புகழப்போறாங்க போல’ என்கிற எதிர்பார்ப்போடு கூட்டம் முடியும்வரை ஆர்வத்துடன் காத்திருந்தது. கூட்டம் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’என்ன மாரி கவிதைங்க பாஸு. சூப்பர் பாஸ்.. அடேங்கப்பா.. அந்த கடைசி கவிதை சான்ஸே இல்லை.. நீங்கதான் அடுத்த மனுஷ்யபுத்திரன்’’ என கோரஸாக புகழ்ந்தனர். புகழ்ந்து தீர்த்துவிட்டால் விதி வீட்டுக்கு போய்விடும் என நினைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் நாம ஏன் ஒரு டீ ஷாப்ட்டுகினே பேசக்கூடாது’’ என்றது விதி. ஏற்கனவே காஞ்சிபோயிருந்த காலிவயிற்றுக்கு உறவினர்களாக இருந்த இருவரும் ஓசிடீக்கு ஆசைப்பட்டு பலியாட்டைப்போல தலையாட்டினர். ‘’பொதுவா நான் டீ ஷாப்பிடறதுனா தாஜ் ஓட்டலுக்குதான் போவேன்.. இங்கே பக்கத்துல தாஜ் ஓட்டலுக்குதா’’ என்றது விதி. &lt;br /&gt;விதியோடு இருவரும் அருகிலிருந்து இரண்டரை நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்தனர். ‘’பாஸ் அதுல அந்த மூணாவது கவிதை எப்படி..? வார்த்தைகளுக்காக கிரியா அகராதியை பிச்சி பிராண்டி எழுதினது’’ என புஜபலபராக்கிரமங்களை சொல்லத்தொடங்கியது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் டீ ஆர்டர் பண்ணீங்கன்னா சாப்ட்டுகினே பேசலாம்.. இன்னான்றீங்க’’ என்றனர் இருவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இன்னாபாஸ் நம்ம கவிதைய படிச்சி நல்லாருக்குனு வேற சொல்ட்டீங்க இன்னைக்கு உங்களுக்கு வெறும் டீயா.. டிரீட்டு..’’ என அதிர்ச்சியளித்தது விதி. &lt;br /&gt;&lt;br /&gt;‘’சூடா இரண்டு மசால் தோசை, கேரட் அல்வா, உளுந்த வடை, சக்கரை பொங்கல்.. மூணுபிளேட்..’’ என்றதும் மகிழ்ச்சியில் பூரித்து போயினர்.. இருந்தாலும் ஆசுவாசமாகி பண்டங்கள் வந்ததும் பகிர்ந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரஞ்சுநிற கேரட் அல்வாவினைப் பார்க்கும்போதே எச்சில் ஊறியது. இருவரில் ஒருவன் ஆர்வத்துடன் அல்வாவில் கைவைக்க.. டக்கென்று ஆரம்பித்தது விதி &lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் அந்த மூனாவது கவிதைய எப்படி அதைப் பத்தி சொல்லுங்க.. கஷ்டப்பட்டு எழுதினது. ஓன் ஹோல் நைட் கண்ணுமுழிச்சி நிலாவ பாத்துகினே இருந்தேன். அதைபத்தி பேசாம.. அல்வா எங்க போயிடப்போகுது’’ என கையைபிடித்து தடுத்தது. அப்போதே உஷாராகி ஓடியிருக்கவேண்டும். விதி வலியது. இருவரும் அல்வாவைப் பார்த்துக்கொண்டு காத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘’அதுவந்து அதுவந்து.. அதுவா சூப்பர் கவிதை பாஸ்.. அப்படியே வான்கா ஓவியத்தை பாக்கறாப்லயே படிக்க சொல்ல இருந்துது.. அய்யயோ அதை படிச்சி நாலுநாள் தூக்கம் வரலியே! நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே..’’ எனபேசிக்கொண்டே அல்வாவினை எடுக்க முனைந்தான். மறுபடியும் கையை பிடித்து தடுத்து.. ‘’என்ன பாஸ் சாப்டுகிட்டே பேசினா பேசறது எப்படி புரியும்.. முதல்ல சொல்லிடுங்க.. அப்புறம் சாப்பிடுங்க, எனக்கு ஆர்வம் தாங்கல’’ என்றது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதுபாஸ்.. இதுமாதிரி கவிதைய வாழ்க்கைல படிச்சதே இல்ல.. இன்னைக்கு இந்தியாலயே ஏன் ஒலகத்திலயே நீங்கதான் பெஸ்ட் கவிஞர், உங்களுக்குதான்... ஏன் தோழர் அது இன்னா விருது.. நோபால் பரிசு.. அத்த குடுக்கணும். அந்த மூனாவது கவிதைதான் பெஸ்ட்டு கவிதை.. நான் அல்வாவ கொஞ்சம் சாப்பிட்டுக்கட்டுமா’’ என பரிதாபமாக கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’அட அல்வாவ விடுங்க.. அப்ப நாலாவது கவிதை மோசம்ன்றீங்களா!’’ என விதி தன் திருவிளையாடலை தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’அப்படி இல்ல பாஸ்.. மூணாவது கவிதை மாஸ்டர் பீஸ்னா நாலாவது கவிதை... ம்ம்ம்.. லிட்டில் மாஸ்டர் பீஸ்’’ என மீண்டும் அல்வாவில் கைவைக்க முயன்றான். விதியோடு ஒருவன் போராடுவதை பார்த்து மற்றொருவன் அல்வாவை தொடவேயில்லை. அதற்கு பதிலாக தோசையை பிய்த்து தின்ன கரம் நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் அவர் லிட்டில் மாஸ்டர் பீஸு காமெடி பீஸ்னு ஏதோ சொல்றாரு இப்ப போயி தோசை பிச்சிகிட்டிருக்கீங்க.. நீங்க சொல்லுங்க எது பெஸ்ட்டு’’ என விதி இருவர் கழுத்திலும் சுறுக்கை மாட்டியது. இனிமேல் கயிறு வயிறு இரண்டுமே விதியின் கைகளில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் முகத்தை ஙே என வைத்துக்கொண்டு ஒருவர் முகத்தை மற்றவர் மாறிமாறி பார்த்துக்கொண்டனர். மாட்னோம்டா என்பதே அதன் சாரம். பசியில் வயிறுவேறு எரிந்தது. கண்முன்னால அற்புதமான விருந்து இருக்கு.. மயிராண்டி திங்கவுடமாட்டேன்றானே என எரிச்சலோடு பல்லைக்காட்டிக்கொண்டு....&lt;br /&gt;&lt;br /&gt;‘’அது வந்து பாஸ்.. நீங்க எழுதின எல்லா கவிதையுமே மாஸ்டர் பீஸ்தான்.. நீங்க ஒரு மகாகவி.. இனிமே எழுதப்போற கவிதையும் கிளாசிக்காதான் இருக்கும். அப்படியே அந்த அல்வாவ சாப்ட்டுகிட்டே பேசினா நல்லாருக்கும்.. இல்லாட்டி ஆறிடும்.. டேஸ்ட்டுருக்காது’’ என கோரஸாக சொல்லிவிட்டு பார்வையை அல்வாவின் பக்கம் திருப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் அப்படிலாம் சும்மா சொல்லாதீங்க எனக்கு தெரியாதா என்கவிதைய பத்தி.. அந்த தொகுப்புல மூணுதான் உருப்படியான கவிதை.. சும்மா அல்வாவுக்கு ஆசைப்பட்டு பாராட்டுனுமேனு பாராட்டாதீங்க.. குறைகள சொல்லுங்க அதுதான் என்னை உயர்த்தும்’’ என விதி கொத்துகுண்டு தாக்குதலை தொடங்கியது. விடமாட்டான் போலருக்கே...என நினைத்த இருவரும் அழும் குரலில் பேசத்தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அது வந்து.. அந்த ஆறாவது கவிதை இருக்கே.. அது சுமார்தான்.. வெறும் வார்த்தை விளையாட்டு. மத்தபடி உயிரே இல்ல’’ என ஒருவனும். , ‘’ஆமா பாஸ் பதினோறாவது கவிதை ரொம்ப சுமார்.. ரொம்ப சின்னது’’ என சொல்லிவைத்துவிட்டு.. அல்வாவுக்கு காத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ் என் தொகுப்புல பத்து கவிதைதானே! பதினொன்னா..’’ என முதல்முறையாக விதி விழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அடடா பின் அட்டைல நீங்க எழுதிருந்ததையும் கவிதைனு நினைச்சி படிச்சிட்டேன் போல.. சாரி பாஸ்’’ என்றான். இதயம் வேறு படபடவென அடித்துக்கொண்டது இருவருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;‘’ஹாஹாஹா’’ என ஓட்டல் அதிர சிரித்தது விதி. ‘’ ஐலைக் யூவர் சென்ஸ் ஆப் க்யூமர்’’ என்றது. நல்லவேளை அடிவிழவில்லை என ஆசுவாசமாகினர். விதிக்கு இரண்டு கைகளும் நல்ல கர்லா கட்டைபோல உருண்டுதிரண்டு இருக்கும் என்பது இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. மீண்டும் அல்வா வேட்டையை தொடர்ந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘’கவிதை நல்லா இல்லாட்டி நல்லா இல்லைனு சொன்னீங்க பாருங்க உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..  அல்வாவை சாப்பிடுங்க’’ என்றது விதி. இந்த இலக்கிய விதிக்குகூட மனசாட்சியுண்டு இந்த கல்லுக்குள்ளும் ஒரு ஈரம் உண்டு என நினைத்துக்கொண்டு இருவரும் அல்வாவை சாப்பிடத்தொடங்கினர். ஆனாலும் விதி விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘’நீங்க வண்ணநிலவனோட கடல்புரத்தில் படிச்சிருக்கீங்களா....அதுல ஒரு வரி வரும்பாருங்க..அதுக்கு இணையான ஒரு உள்ளுணர்வெழுச்சிய நம்ம கவிதைல ஒன்னு’’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி உரையை தொடங்கியது விதி. &lt;br /&gt;‘’தோழர் அல்வா ரொம்ப சூடா இருக்குல்ல.. உஃப்ப்ப்’ என ஊதிக்கொண்டே இன்னொருவனிடம் ஸ்பூனை தூக்கி காட்டினான். ‘’ஆமா தோழர் ரொம்ப சூடு.. உஃப்ப்’’ என்றான் மற்றொருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஹலோ வண்ணதாசன்..’’ என இருவரையும் இடைமறித்து சத்தமாக பேசியும்.. அந்த இருவரும் &lt;br /&gt;&lt;br /&gt;‘’பாஸ்.. அல்வா செம டேஸ்ட்டு.. இன்னொரு பிளேட் வாங்கிக்குடுங்களேன்’’ என விதியைப்பார்த்து கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதுக்கென்னபாஸ் வாங்கிதரேன்.. வண்ணதாசனை விடுங்க.. ஆல்ப்ரட் காம்யூவோட அந்நியன்னு ஒரு நாவல்.. படிச்சிருப்பீங்களே.. அதே மாதிரி நானும்..’’ என விடாப்பிடியாக விதி விளையாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கும் மசியாமல் இருவரும் அல்வாவினை ருசித்து ருசித்து தின்று தீர்த்து அடுத்து பொங்கலில் விரலை விட்டு நோட்டிக்கொண்டிருக்க.. எரிச்சலானது விதி. கொஞ்சம் நேரம் அவர்களாக ஏதாவது பேசட்டும் என காத்திருந்தது. ஆனால் இருவரும் விதியை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வந்த வேலையில் மும்முரமாகியிருந்தனர். சாப்பிடத்தொடங்கிவிட்டால் இடியே விழுந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தொழில் ரகசியம். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்க முடியாமல்..&lt;br /&gt;&lt;br /&gt;‘’டேய் நிறுத்துங்கடா.. ஞான சூனியங்களா.. உயர் இலக்கிய ரசனை பத்தி பேசிட்டிருக்கேன்.. பத்துகாசு பொறாத அல்வாவ தின்னுகிட்டிருக்கீங்களே.. உங்களுக்கெல்லாம் இலக்கியம்னா என்ன தெரியுமா.. ’’ என சத்தம் போட்டது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் தோழர் சாம்பார் சூப்பரா இருக்கு.. பொங்கல்ல குழிபண்ணி ஊத்தி பிசைஞ்சி தின்னு பாருங்க அட்டகாசம் என பேசிக்கொண்டிருந்தனர். விதி தன்னையே நொந்தபடி..&lt;br /&gt;&lt;br /&gt;‘’சாரி பாஸ்! நான் கோவத்துல பேசிட்டேன்.. நான் புதுசா ஒரு கவிதை எழுதிருக்கேன்.. கேக்கறீங்களா?’’ என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’இன்னொரு பிளேட் அல்வா வாங்கிக்குடுங்க கேக்கறோம்’’ என சொல்லிவிட்டு மீண்டும் வாய்க்கு வேலை கொடுக்கத்தொடங்கினர். இதற்கு மேலும் விதியால் எப்படி பொறுத்திருக்க முடியும். இரண்டு பேரின் சட்டை காலரை பிடித்து அப்படியே நிற்கவைத்து ‘’டேய் என்னை பார்த்தா எப்படிடா இருக்கு உங்களுக்கு.. மரியாதையா ஓடிப்போயிருங்க..’’ என்று உலுக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் தன் உளுந்தவடையை கீழே வைத்துவிட இருவரும்.. சோகமாக அந்த ஹோட்டலை விட்டு கிளம்ப தயாராயினர். முதன்முதலாக விதிக்கே விளையாட்டு காட்டிவிட்டு சென்ற இருவரையும் நினைத்து விதி தன்னைத்தானே நொந்துகொண்டது. &lt;br /&gt;‘தோழர் நல்ல வேளை பில்லு கட்ட வச்சிருவானோனு நினைச்சேன்.. தப்பிச்சோம்.. நம்மகிட்டயேவா!’’ என்றான் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’தோழர் ஒருநிமிஷம் இருங்க! இதோ வந்திடறேன் என மீண்டும் அந்த டேபிளுக்கே திரும்பிப்போனான் மற்றொருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;விதியின் அருகில் போய் நின்றான். தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த விதி அவனை நிமிர்ந்து பார்த்து ‘’என்ன’’ என கத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இல்ல.. பாஸ் நாங்க ஏதாச்சும் தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க’’ என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;‘’இருக்கட்டும்.. இனிமே என் கண்லயே படாதீங்க’’ என்றது&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதுக்கில்ல.. என்னோட கேரட் அல்வால பாதிய மிச்சம் வச்சிட்டு போயிட்டேன்.. அதை மட்டும் எடுத்துக்கட்டுமா’’ என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு விதி கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எங்கோ கண்காணாத தேசத்துக்கு போய்விட்டது. அந்த இருவரும் தங்களுடைய இலக்கிய சேவையை தொடர்ந்தனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த கதையில் வருகிற பாத்திரங்கள் யாவும் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியவை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-937057256660832393?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/937057256660832393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=937057256660832393' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/937057256660832393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/937057256660832393'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/11/blog-post_24.html' title='கொலைவெறி இலக்கியம்'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-sinM9-_8GZ8/Ts4vbyyn8FI/AAAAAAAAB04/75xNuy7AGVA/s72-c/Athisha%2B%25281%2529.JPG' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-3748118751051092322</id><published>2011-11-18T12:53:00.000+05:30</published><updated>2011-11-18T12:53:53.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>டின்டின்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pllKD5duOuk/TsYH3E5qStI/AAAAAAAAB0o/e0dFHHaq-OM/s1600/tintin.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="251" src="http://3.bp.blogspot.com/-pllKD5duOuk/TsYH3E5qStI/AAAAAAAAB0o/e0dFHHaq-OM/s320/tintin.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களில் சிலர் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் குறித்து பேச ஆரம்பித்தால் மெய்மறந்து பரவசநிலையில் மணிக்கணக்கில் பேசுவதை கேட்டிருக்கிறேன். பல ஆயிரங்கள் செலவழித்து  பழைய கிழிந்த குப்பையான காமிக்ஸ்களை வாங்குவதையும், கடைகடையாக சொல்லிவைத்து பழைய புத்தகங்கள் சேகரித்து வைப்பதையும் பார்க்க செமகாமெடியாக இருக்கும். இந்த காமிக்ஸ்களுக்காக அடிதடி வெட்டு குத்து கைகலப்புகள் கூட நடக்கும் என்றே நினைக்கிறேன். (காமிக்ஸ் ரசிகர்கள் கன்பார்ம் செய்து உதவலாம்) அப்படி என்னதான்யா இருக்கு இந்த தமிழ்காமிக்ஸ்ல என முஷ்டியை மடக்கிக்கொண்டு ஒருகை பார்த்துவிட முடிவெடுத்து சமகாலத்தில் பழைய காமிக் புத்தகங்களை நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்படிக்கும்போதுதான் ச்சே! இரும்புக்கை மாயாவி படிக்காம விட்டுட்டோமே! லக்கிலூக் பற்றி தெரியாமல் போயிடுச்சே... அடேங்கப்பா மதியில்லா மந்திரி என்ன காமெடியா இருக்கு.. கௌபாய் கதைகள் பின்னுதே! ஸ்பைடரின் சாகஸங்கள் தூள்கிளப்புதே... இதையெல்லாம் சின்ன வயசுல படிக்க குடுத்துவைக்கலயே என்கிற ஏக்கம் எழும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் அநேக காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தாலும் எனக்கு ஆங்கில காமிக்ஸ்கள்தான் பள்ளிக்காலங்களில் பரிச்சயமாயிருந்தது. காரணம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வேலை பார்த்த புத்தக கடையில் ஆங்கில காமிக் புத்தகங்கள் மட்டும்தானிருந்தன. காசு கொடுத்து காமிக்ஸ் மட்டுமல்ல எதையுமே வாங்கிப்படிக்கிற பரம்பரையல்ல எங்களுடையது. வேலை செய்த கடையில் காணக்கிடைத்த டின்டின்னும் மார்வலும் டார்க் ஹார்ஸும் டிசி காமிக்ஸும்தான் ஒரே கதி!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மீடியம் என்பதால் என்னுடைய அபாரமான ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு அதையெல்லாம் என்னதான் முக்கிமுக்கிப்படித்தாலும் கொஞ்சமே கொஞ்சம்தான் புரிந்துகொள்ள இயலும்.  ஸ்பைடர் மேன்,பேட்மேன்,சூப்பர்மேன்,பேன்டம்,மாண்ட்ரேக் மாதிரியான காமிக்ஸ்கள் படித்தாலும் டின்டின் மீது எப்போதுமே அளவில்லாத அன்பிருந்தது. காரணம் ஆங்கிலமே தெரியவில்லையென்றாலும் படங்களைக்கொண்டே நம்மால் ஒரு கதையை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தக்கதை எப்போதுமே ஆக்சன் காட்சிகள் நிறைந்த சோகம் நிறைந்த காமெடி படங்களாகவே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் படங்களைப்பார்த்தே சிரித்து மகிழலாம். அதிலும் அந்தப்படங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்! மிகமிக நேர்த்தியாக ஆக்சன் காட்சிகளை சித்தரித்து வரையப்பட்ட படங்கள் அவை. &lt;br /&gt;&lt;br /&gt;டின்டின் என் கனவு நாயகன். ஒரு குட்டிநாயை வைத்துக்கொண்டு எப்பேர்ப்பட்ட உட்டாலக்கடி பலசாலி வில்லன்களையும் மதிநுட்பத்தால் பந்தாடுவார்! அவரோடு கப்பல்கேப்டன் குடிகார ஹடாக்கும் சேர்ந்துகொண்டால் காமெடி,அதிரடி,சரவெடிதான்! நடுவில் போலீஸ் டிடெக்டிவ்களாக வருகிற தாம்சன் அன்ட் தாம்சனின் ஜாலியான குறும்புகளும் நினைவிலிருந்து என்றுமே அகலாதவை. சுஜாதாவின் ஜீனோகூட ஸ்நோயி என்னும் டின்டின்ன்னின் குட்டிநாயின் பாதிப்பில் உருவானதாக இருக்கலாம்! படுசுட்டி! அதிலும் போகிறபோக்கில் வரலாற்றினையும் அரசியலையும் வெகுவாக கிண்டலடித்திருப்பார் டின்டின் கதாபாத்திரத்தினை உருவாக்கிய ஹெர்ஜ். &lt;br /&gt;&lt;br /&gt;டின்டின் காமிக்ஸ் கார்ட்டூன் நெட்வொர்க்கில் பத்தாண்டுகளுக்கு முன்பு டிவிசீரியலாக வெளியானபோதும் அண்மையில் அதன் திருட்டுடிவிடி மொத்த தொகுப்பு பர்மா பஜாரில் வெறும் பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தபோதும் விடாமல் பார்த்திருப்பேன். டிவிசீரியல் தரம் ரொம்ப சுமார்தான்.. காமிக்ஸில் கிடைத்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் ரொம்ப குறைவு! இருந்தும் சிடி தேய பல நூறுமுறை பார்த்திருப்பேன். டின்டின் கதைகளை அடிபட்டையாக கொண்டு சில படங்கள் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் வெளியாகியிருந்தாலும் திருட்டுடிவிடி இன்னும் ரிலீசாகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும அது திரைப்படமாக வருகிறதென்பதும் அதை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்குகிறார்.. அதுவும் பர்ஃபார்மென்ஸ் காப்ச்சர் 3டி தொழில்நுட்பம் என்பதும் எப்படிப்பட்ட ஆவலை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. பைலட் தியேட்டரில் பல மாதங்களாக இப்படத்தின் தமிழ் டப்பிங் டிரைலர் வரும்போதெல்லாம் நவம்பருக்காக காத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்சுனேட்லி ஏனோ படம் தமிழில் வெளியாகவில்லை. சென்னையிலும் மிகச்சில உயர்ரக பீட்டர்குடிகளுக்கான மெகாமால் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தது. அங்கெல்லாம் டிக்கட் விலை நூறுரூபாய்க்கும் மேல் (பைலட் தியேட்டரில் முப்பதேரூபாய்தான்). நமக்கு கட்டுப்படியாகாதே! படம் வெளியாகி ஒருவாரமாக ஏக்கத்தோடு ச்சே இந்த வறுமைதான் எத்தனை கொடியது என சோகத்தில் இருந்த எனக்கு தோழர்தான் ஆபத்பாண்டவனாக ஏமாந்த ரட்சகனாக பெரிய அமவ்ன்ட்டை ஸ்பான்சர் செய்தார். சத்யம் தியேட்டரில் டிக்கட் விலை நூற்றி இருபது,பார்க்கிங் பத்து, 3டி கண்ணாடிக்கு 20 என இரண்டுபேருக்கும் சேர்த்து மொத்தமாக 300 ரூபாய் மொய் வைக்க வேண்டியிருந்தது! இதில் சத்யம் தியேட்டரில் குடிக்க தண்ணீர் கூட இருபது ரூபாய் கொடுத்துதான் வாங்கித்தொலைய வேண்டிய துர்பாக்ய நிலை. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒரு வேலாயுதம் வரமாட்டானா?&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாப்பை மட்டுமே பார்சல் பண்ணிக்கொண்டு போன என்னை எள்ளளவும் ஏமாற்றவில்லை ஸ்பீல்பெர்க். நான் காமிக்ஸில் படம் பார்த்து உருவகித்து கொண்ட அச்சு அசல் அதே பாத்திரங்கள் உயிருடன்.. 3டியில்! பார்க்கவே சிலிர்ப்பாக உணர்ந்தேன். ஏற்கனவே படித்த டிவியில் பார்த்த அதே சீக்ரட் ஆஃப்தி யுனிகார்ன் கதைதான் என்றாலும் கொஞ்சமும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத அருமையான திரைக்கதை, பிரமிப்பூட்டும் கிராபிக்ஸ்! காமிக்ஸுக்கு கொஞ்சமும் குறையாத அதே நகைச்சுவை. அதிலும் கேப்டன் ஹடாக் வருகிற காட்சிகள் அத்தனையும் பட்டையை கிளப்புகிறது. வெறும் குழந்தைகளுக்கான படமாக மட்டுமேயில்லாமல் அனைவருக்குமான படத்தை கொடுத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். இதற்கு மேல் படத்தைப்பற்றி என்ன சொல்ல தியேட்டரில் பார்க்கும் வசதியிருக்கிற சீமான்களும் சீமாட்டிகளும் உடனடியாக தியேட்டரிலும் என்னைப்போன்ற பரம ஏழைகள் பத்து நாட்கள் பொறுத்திருந்து திருட்டுடிவிடியிலும் கட்டாயம் பார்க்கலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-3748118751051092322?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/3748118751051092322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=3748118751051092322' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/3748118751051092322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/3748118751051092322'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/11/blog-post_18.html' title='டின்டின்'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pllKD5duOuk/TsYH3E5qStI/AAAAAAAAB0o/e0dFHHaq-OM/s72-c/tintin.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-1118840458783583437</id><published>2011-11-10T14:45:00.000+05:30</published><updated>2011-11-10T14:45:37.500+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கழிவறை காதை!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-plTPxahw-1Q/TruSkg3lmkI/AAAAAAAAB0Y/UicEnyVTSnc/s1600/gwan862l.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="264" src="http://1.bp.blogspot.com/-plTPxahw-1Q/TruSkg3lmkI/AAAAAAAAB0Y/UicEnyVTSnc/s320/gwan862l.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது வாசலில் பெண் குரல்..’’மேடம்! மேடம்’’ &lt;br /&gt; &lt;br /&gt;ச்சே இந்த சேல்ஸ் பொம்பளைங்களுக்கு நேரங்காலமே கிடையாதா விடிஞ்சும் விடியாம வந்துட்டாங்களே.. என்று மனதிற்குள் நினைத்தபடி..&lt;br /&gt;&lt;br /&gt;‘’அம்மா, வாசல்ல யாருன்னு பாரு!’’ என்று சத்தம் போட்டுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன். சில நிமிடங்களில் அம்மா திரும்பிவந்து மீண்டும் சமையலறைக்குள் படையெடுக்க...&lt;br /&gt;&lt;br /&gt;‘’யாரும்மா.. என்னவாம்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஒன்னுமில்லே! யாருனே தெரியல.. பக்கத்துல சர்ச்சுக்கு வந்தாளாம்.. கொஞ்சம் உங்க டாய்லெட்ட யூஸ்பண்ணிக்கட்டுமானு கேக்கறா!’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’நீ என்ன சொன்னே’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’யாரோ எவளோ? அதெல்லாம் முடியாது அதோ அந்தப்பக்கம் மூணாவது வீடு இருக்கு பாரு அதுதான் கிரிஷ்டீன் வீடு அங்கே போய் கேளுனு விரட்டி விட்டுட்டேன்’’ என்று பெருமிதமான தொனியில் சொன்னதும் எனக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’என்னம்மா மனசாட்சியே இல்லாம இருக்க , மனுஷங்கதானே நாம.. பாவம் சுகர் பேஷன்டோ என்னவோ.. அடுத்தவங்க வீடு தேடி வந்து கேக்கறாங்களே.. உனக்கு கூட சுகர் இருக்குல்ல.. டாய்லெட்தானே ஒருவாட்டி யூஸ்பண்ணிகிட்டா என்னவாம், சொத்தா அழிஞ்சிடும்’’ என கடிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அட நீவேற வீட்டை நோட்டம் விட்டுட்டு போயி நாளைக்கே நாம இல்லாதப்ப வந்து கொள்ளையடிச்சிட்டி போனாலோ , தனியா இருக்கும்போது கண்ணுல மொளகாப்பொடி தூவிட்டு செயின களவாண்டு போயிட்டா என்னடா பண்ணுவா.. போடா வேலை மயிற பாத்துட்டு வந்துட்டான் மனிதாபிமானத்துக்கு அத்தாரிட்டி’’ என்று எதிர் சவுண்டு விட.. அடங்கிப்போனேன். அம்மாவின் குரலுக்கு அடங்காதவனும் செந்தமிழனா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொதுக்கழிப்பிட பிரச்சனைகளை நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கநேருகிற ஒன்றுதான். நான் மார்க்கெட்டிங் பணியில் இருந்தபோது ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு போனால் ஒன்பதரைக்கு வெளியேறிவிட வேண்டும் என்பது மேனேஜரின் உத்தரவு. வெளியேதான் வேலை. கஸ்டமரை பார்க்க போனால் அங்கேயே கழிப்பிடமிருக்கும். ஆனால் பயணத்தின் போது.. சாலையோரம்தான் ஒரே கதி! வேறு வழியேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மலங்கழிக்க வேண்டுமென்றால் கட்டணமுறை கழிப்பிடங்களை எங்காவது முக்கிய பேருந்து நிலையத்தை தேடிக்கண்டுபிடித்து கழிப்பறையை கண்டறிந்து காசு கொடுத்து க்யூ தாண்டி போய் சேர்வதற்குள் நரகவேதனைதான். சிலநேரங்களில் வேறுமாதிரி ஆயிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் பரவாயில்லை. பெண்களின் நிலைதான் பரிதாபம். சோப்பு,ஃபீனாயில்,டிக்சனரி விற்கும் சேல்ஸ் பெண்களை அறிவேன். அவர்களுக்கு சாதாரண நாட்களிலேயே இது ஒரு பெரிய தொல்லையாக இருந்தாலும் , மாதவிடாய் காலங்களில் சொல்லவும் வேண்டாம். அதற்காக எந்த ஏரியாவிற்கு சென்றாலும் அங்கே இருக்கிற ஹோட்டலிலோ,கடைகளிலோ இருக்கிற ஆண்களிடம் சிரித்துப்பேசி அங்கேயிருக்கிற கழிவறையை உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். சிலர் வீடுகள் தோறும் மேடம் கொஞ்சம் யூஸ்பண்ணிக்கட்டுமா என கெஞ்சிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கெல்லாம் வீடு இருக்கிறது, இருக்கிற வீட்டுக்குள்ளேயே பளபளப்பான கழிவறை இருக்கிறது. ஆனால் நம்நிலையே இப்படியென்றால் சென்னையில் வசிக்கிற பதினோறாயிரத்தி சொச்சம் சாலையோரம் வசிக்கிற குடும்பங்களின் நிலையை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. பொதுக்கழிப்பிடங்களில்தான் அக்குழந்தைகளுக்கு எல்லாவித பாலியல் அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் எங்கும் செல்லும் போதும் சாலையோரம் யாராவது சிறுநீர் கழித்தாலோ, மலங்கழித்திருந்தாலோ , மலத்தைக்கண்டாலோ உடனே மூக்கை பொத்திக்கொண்டு ச்சே இவங்களாலதான் சுகாதாரம் கெடுது என வக்கனையாக பேச மட்டும் தெரிந்துவைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களை பற்றி ஒருநாளும் சிந்திப்பதில்லை. இடிபடும் கோயில்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்கும் நாம் கழிவறைகளுக்காகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதிக்கு வீதி எது இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டிவைத்திருக்கிறோம். போட்றா தோப்புகரணத்தை என பார்க்குமிடமெல்லாம் நிறுத்தி குனிந்து குனிந்து போடுகிறோம்! ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பூசாரி வேறு. அதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இருக்கிற இந்த குட்டிக்குட்டி கோயில்களையும் சிறிய பிறமத வழிபாட்டுத்தலங்களையும் கழிவறைகளாக மாற்றி பூசாரிகளை காவலுக்கு நிறுத்திவைத்தாலே கூட வீதிக்கு ஒரு டாய்லெட்டோடு சுத்தபத்தமாக ஆச்சாரமாக வாழ இயலும் என்பது மட்டும் நிச்சயம். &lt;br /&gt;&lt;br /&gt;மதவெறியர்களுக்கு இதைபடிக்கும்போது குபீர் என கோபம் வரலாம்.. வந்துவிட்டுப்போகட்டும். என்றாவது ஒருநாள் அர்ஜன்டாக டூ பாத்ரூம் வரும்போது கழிவறையில்லாமல் அடக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் புரியும். வழிபாட்டுத்தலங்களைவிடவும் ஏன் கழிப்பறைகள் அவசியம் என்பதை அப்போதுதான் உணரமுடியும். சிறுநீர் முட்டிக்கொண்டு இருக்கையிலும் மலத்தினை அடக்கிக்கொண்டு அலைகையிலும் சொர்க்கமென்றால் அமைதி என்றால் என்னவென்பதை உணரவைக்கும் ஆற்றல் கழிவறைகளுக்கு மட்டுமேயுண்டு, எந்த தெய்வத்தாலும், எந்த வழிபாட்டுத்தலத்தினாலும் அந்த மகிழ்ச்சியை கொடுத்துவிடயலாது. திருப்பதி வெங்கடாஜலபதியின் சொத்தில் பாதி இருந்தால் கூட அரசே நமக்கு லட்சக்கணக்கில் இலவச கழிப்பறைகளை கட்டித்தரமுடியும! என்ன செய்ய காட் இஸ் க்ரேட்!&lt;br /&gt;&lt;br /&gt;அரசுதான் கழிப்பறைகளை கட்டித்தர முன்வரவேண்டும்.. அரசே செய்யாட்டி நாங்க என்னபண்றதாம் என கேள்விகளை அடுக்க வேண்டாம். கோயில்களை நாமே கட்டிக்கொள்ளவில்லையா? ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிடைக்கிற புண்ணியத்தைவிடவும் அவசரமாக உச்சா வருது சார் பாத்ரூம் யூஸ்பண்ணிக்கவா என கேட்கிறவனுக்கு டாய்லெட்டை அளித்தும் புண்ணியம் பெறலாம். அல்லது உங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடமில்லையா மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டுங்களேன்! கோயில் கட்றதுக்கு மட்டும்தான் டொனேஷன் கலேக்ட் பண்ணுவீங்களா? கக்கூஸ் கட்டவும் அதையே செய்வதில் தவறென்ன வந்துவிடப்போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் உங்கள் பகுதியில் மரம் நடறேன் செடி நடறேன் குப்பை எடுக்கிறேன் என எல்லோரும் செய்யும் அதையே செய்யாமல் கழிவறைக்கு ஏற்பாடு செய்யலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதைவிடுங்க! நமக்கேன் பொல்லாப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் கதவு தட்டிய அந்த பெண்மணியை குறித்த ஏதோ ஒரு குற்றவுணர்வு உருத்திக்கொண்டேயிருந்தது. அந்தப்பெண் வயதானவராக இருக்கலாம். உடல் ஊனமுற்றவராக இருக்கலாம். சிறுநீரக கோளாறு உள்ளவராகவோ, மாதவிடாய் காலத்து பிரச்சனையிலோ இருந்திருக்கலாம். அவசரமாக ஓடிப்போய் வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன்.. அந்தவயதான பெண்மணி மூன்றாவது வீட்டிலிருந்து பொறுமையாக மலர்ந்த முகத்தோடு வெளியே சென்றார். அது அவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வீட்டினர் உதவியிருக்க கூடும். மனது ஆறுதலடைந்தது. அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. அம்மாவின் பயம் நியாயமானதுதான். உடனடியாக கவுன்சிலரோடு பேசி பொதுக்கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-1118840458783583437?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/1118840458783583437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=1118840458783583437' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/1118840458783583437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/1118840458783583437'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/11/blog-post_10.html' title='கழிவறை காதை!'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-plTPxahw-1Q/TruSkg3lmkI/AAAAAAAAB0Y/UicEnyVTSnc/s72-c/gwan862l.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-4634644931270721153</id><published>2011-11-02T12:22:00.000+05:30</published><updated>2011-11-02T12:22:11.491+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பத்து-பத்து</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-bnUMr-vVyXA/TrDoC_bWtzI/AAAAAAAABzM/-tzbucYQXTM/s1600/Child-Labour-In-India-01.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="214" width="320" src="http://4.bp.blogspot.com/-bnUMr-vVyXA/TrDoC_bWtzI/AAAAAAAABzM/-tzbucYQXTM/s320/Child-Labour-In-India-01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூக்கு ஈரமாய் இருக்கிறது. காதிற்குள் ‘ங்..ங்ங்ங்ங்ங்’ என விடாமல் ஓர் ஒலி.  காதோரம் யாரோ நடந்து வருகிற சப்தம். குப்புற விழுந்து கிடந்தவன் தூரத்தில்  வருகிற கறுத்த பெருத்த காலடிகளை மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். மங்கலாக அது தன்னை கடந்து செல்வது போல் தெரிந்தது. மூச்சு விடமுடியவில்லை. முதுகில் உதைத்ததால் விண்விண் விண்விண் என இதயம் துடிப்பதைப் போல விட்டுவிட்டு  வலித்துக்கொண்டுருந்தது. விலகிச்செல்லும் கால்களை நிமிர்ந்து பார்க்கலாமா? அல்லது கண்களை இறுக்க மூடிக்கொள்ளலாமா?. வேண்டாம்! கண்திறந்தால் மீண்டும் அடிபட வேண்டியிருக்கும் , முட்டியில் வலித்தது. அதே அலைவரிசைதான். விண்விண் விண்விண்.. கண்களை இறுக்க மூடிக்கொண்டான். இடது கண்ணில் கண்ணீர் கசிந்துகொண்டே இருந்தது. முன்னர் கசிந்தவை காய்ந்து ஈரமாகி வடவடவெனவிருந்தது. தூரத்தில் இவனை அழைக்கும் சத்தம். டேய் லூசு...! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக கண்ணைத்திறந்து கையை தரையில் ஊன்றி எழுந்து நின்றான். மூக்கை புறங்கையால் துடைத்தான். சளி போல இல்லை. கெட்டியாக காய்ந்திருந்தது. கன்னத்திலும் வழிந்திருந்தது. ரத்தம்!. கீழே விழுந்துகிடந்த போது முகத்தில் எட்டி உதைத்ததில் சிறுமூக்கு உடைந்திருந்தது. வலி இல்லை. ரத்தம் வெளியேறிக்கொண்டேயிருந்தது. விடாமல். சொட்டு சொட்டாக... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘’டேய்...லூசு.. என்னடா பண்ற எவ்ளோ நேரமா கூப்படறேன்’’  படுக்கையறையிலிருந்து ராஜன் சாரின் தடித்த குரல். &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதரை வயது பாஸ்கர் கடைசியாக இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து திரும்பிய ஒரு நல்ல நாளில் அவனது அப்பா இங்கே அழைத்துவந்து விட்டுச்சென்றார்.  ஆந்திராவிற்கு பக்கத்தில் ஒரு ஏதோ தமிழ் கிராமம் அவனுடையது. சென்னை.. பீச்சு, ரஜினி,விஜய்,மூன்று வேளை சோறு, இங்கிலீஸ்படிப்பு,கூலிங்கிளாஸு என ஏதோ ஏதோ எதிர்பார்த்துதான் வந்துசேர்ந்தான். எடுபிடி வேலைக்கு என்றுதான் சேர்த்துவிட்டிருந்தார். ஆனால் கழிவறையை சுத்தம் செய்வதில்  துவங்கி சகலமும் இவன் மட்டுமே செய்ய வேண்டியதாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜன் சாருக்கு லேசான கிறுக்கு இருக்கலாம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான். அடிதாங்க முடியாமல் தூங்கும் போது தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று யோசிப்பான். பெரிய கல்லை தூக்க முடியாது. சின்னக்கல்லைப் போட்டால்  ராஜன் சார் சாக மாட்டான். ஓருவேளை கல்லை போட்டும் சாகாமல் உயிர் பிழைத்து அவன் கையில் சிக்கினால் சாவுதான் என்பதை அறிந்தேயிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய நாள் ராஜன் சாரின் அலுவலகத்தில் சிறிய பார்ட்டி. போதையில் டேபிள் டிராயரில் வைத்துவிட்டுச் சென்ற சிகரட்டுகளில் மூன்றை காணவில்லை. இவன்தான் அதை புகைத்திருக்க அல்லது எடுத்திருக்க வேண்டும் என பாஸ்கரை அழைத்து திட்டினான். இவன் நான் எடுக்கலைங் சார், நான் பார்க்கவே இல்லைங்சார், தெரிலைங்சார், தேடிபாக்கறேன்ங்சார் என நிறைய சொல்லியும் இனிமே எடுப்பியா எடுப்பியா இந்த வயசுலயே தம்மு கேக்குதோ உதவாக்கரை ஒன்னும் லாய்க்கில்ல என உதைத்தான். பாஸ்கர் மயங்கி விழுந்து மூச்சு பேச்சில்லாமல் ஆகும் வரை அது தொடர்ந்தது. &lt;br /&gt;இப்போது மீண்டும்  அழைக்கிறான். போனால் அடிபட நேரிடலாம். போகவில்லையென்றாலும் உதைவிழும். ஹாலில் கிடந்தவன் அவசர அவசரமாக  ரத்தம் வழியும் மூக்கை புறங்கையால் தேய்த்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தான்.  அடிவயிற்றில் கர்ர்ர் என்றது. இதயம் அளவுக்கதிகமாக அடித்துக்கொண்டது. ஓங்கி ஓங்கி வயிற்றில் நெஞ்சில் எங்கெங்கோ உதைத்தது வேறு விண் விண் என வலித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கைக்கு அருகில் ராஜன் சார் சேரில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தான். கொஞ்சம் தள்ளி நின்று தலையை தரையை நோக்கி குனிந்தபடி  ஒருகையை அக்குளுக்குள் கட்டி நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’மூஞ்சில என்ன ரத்தம்!’’.&lt;br /&gt;&lt;br /&gt;‘’சாங்! நீங்க மூங்சீல மிதிச்சீங்கங்கல , சின்னமூக்கு உங்ஞ்சிபோச்சிபோலசார் அதாங்’’  மூக்கிலேயே புரியாதபடிக்குப் பேசினான்.  இன்னும் துளிதுளியாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருந்த ஏதோ ஒரு துணியை எடுத்து அவனை நோக்கி வீசினான். அழுக்குத்துணி. ஈரமாய் இருந்தது. கொஞ்சமாய் நாற்றமடித்தது. ‘’இத்தால மூஞ்ச துடச்சுட்டு , பாத்ரூம் போய் கழுவிட்டு வா...என்ன? வேல இருக்கு..’’  அதட்டினான். பாஸ்கருக்கு எரிச்சலாக இருந்தது ,  வயிறும் மூக்கும் மனமும் எல்லாமே.&lt;br /&gt;&lt;br /&gt;கழிவறைக்கு சென்று சோப்புப்போட்டு முகத்தை கழுவினான். ஆனாலும் காய்ந்திருந்த ரத்தம் போகவில்லை. நன்றாக கரகரவென அழுத்தி தேய்த்து, சுரண்டி அதை அழித்துவிட  முயற்சித்தான் ஒரளவு போயிருந்தது. அதற்குள் உள்ளேயிருந்து இன்னுமாடா என்னும் குரல் கேட்டது. நீண்ட அமைதியிலிருந்த நிசப்தமான சூழலை கிழித்துக்கொண்டு வந்த திடீர் குரலால் உதறல் எடுத்தது. உடல் சிலிர்த்து கை முழுக்க பொறிப்பொறியாய் இருந்தது. அதை தடவிப்பார்த்தான். குறுகுறுப்பாய் இருந்தது. சிரித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கையறைக்குள் நுழைந்தான். புகை மண்டலமாக இருந்தது. கையில் சிகரட்டோடு ராஜன் பெட்டுக்கு அருகில் அமர்ந்திருந்தான். ராஜனுடைய காதலியை காணவில்லை. பாத்ரூமில் இருந்திருக்க வேண்டும். படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளில் பாதி அருந்திய ஜூஸ் இருந்தது. இட்லியும் இருந்தது. இரவு சாப்பிடததால் வலியில் பசி தெரியாமல் இருந்திருந்தான். இப்போது அதை பார்த்ததும் வயிறு பசிப்பது போல் இருந்தது. ர்ர்ர்ர் என வயிற்றுக்குள் இழுத்துப்பிடித்தது குசுபோல ஒருசப்தம் வந்து அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’டேய் என்னடா அங்க நின்னுட்டு பராக்கு பாத்துக்கிட்டு! அந்த சட்டைய எடு’’.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து வந்து அவனுக்கு முன்னே நீட்டினான். அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி , ‘’நம்ம குமார் கடைக்கு போய் ஒரு பாக்கட் கோஹினூர்னு கேளு தருவான் வாங்கிட்டு வா , மிச்சக்காசு இருபது ரூவா தருவான் சரியா பாத்து வாங்கிட்டு வா!’’.. ம் என்பதுபோல தலையை ஆட்டினான். பணத்தை வாங்கி தன் டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’டேய் நில்லு என்ன வாங்கிட்டு வருவ’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’கோங்கினார் ஒரு பாங்க்கட்’’ , மூக்கிலேயே இவன் சொல்ல ஹோஹோஹோ என ராஜன்சார் சிரித்தான். இவனுக்கு முகத்திலேயே  குத்த வேண்டும் போல் இருந்தது. ‘’கரெக்டா வாங்கிட்டுவா!’’&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியெல்லாம் கோகினார்.. கோகினார்.. கோகினார்.. கோசிமார்.. கோஜியார்.. என சொல்லிக்கொண்டே சென்றான். இன்னொரு பாக்கெட்டிலிருந்த அழுக்குத்துணியால் மூக்கைத்துடைத்துக்கொண்டான். குமாரின் மெடிக்கல் ஷாப் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அண்ணேங் ங்கொரு பாங்க்கட் ஙோஜியார்.. குடுங்க.. சாங் வாங்கிகினு வரசொன்னாரு’’ , முக்கு அடைப்பு விலக லேசாக வாயிலும் பேச ஆரம்பித்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’அதென்னடா ஙோஜியாரு.. ஏன்டா காலைல வந்து ரப்ச்சர குடுக்கற.. போடா நல்லா கேட்டுட்டு வா..’’ &lt;br /&gt;&lt;br /&gt;‘’அண்ணே திரும்பி போனா , சார் அடிப்பாருண்ணே!..’’.&lt;br /&gt;&lt;br /&gt;‘’என்னடா மூக்காண்ட கர.. இங்க வா’’ அருகில் வந்தவன் மூக்கை அழுத்தி தேய்த்து தூக்கிப் பார்த்தான். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;பையனை உள்ளே அழைத்து சென்று அவசர அவசரமாக மருந்து போட்டு விட்டான். முட்டியில் சிராய்த்திருந்தது. டெட்டாலால் அதை சுத்தம் செய்து பஞ்சு வைத்து தேய்த்துவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’சம்பளமே சரியவரமாட்டேனுது.. என்னால என்ன பண்ணமுடியும்.. எங்கிட்டாவது ஓடிப்போய்யிர்ரா! இவங்கிட்ட கிடந்து ஏன்டா அடிவாங்கி சாவற’’  சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;‘’அண்ணே எங்கனே போவன். எனக்கு யாரையுமே தெரியாதுண்ணே, ஓடிப்போனா எங்கப்பா கண்டுபுடிச்சி அடிச்சு கொன்னுருவாரு, மாசமாசம் வந்து காசு வாங்கிட்டு போகுதுல்ல.. கண்டுபுடிச்சிரும்ண்ணே’’  பேசபேச சிறுவனுக்கு அழவேண்டும் போல இருந்தது.கண்ணீர் வராவிட்டாலும் கண்களை துடைத்துக்கொண்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;‘’சொன்னா கேளுடா.. இங்க இருந்த அடிச்சே கொன்னுருவானுங்க’’  பேசியபடியே ஒரு சாக்லேட்டை அவனிடம் நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’அண்ணே அதெல்லாம் இருக்கட்டும், கோஜியூர் ஒரு பாக்கட் குடுங்கண்ணே.. லேட்டா போனா சார் அடிப்பாரு, அக்காவேற வந்திருக்கு’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஓஹ் கோஹினூரா!..’’ புரிந்துகொண்டவனாக ஒரு பாக்கட்டை எடுத்து நீட்டினான்.. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுவன் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு மீதி காசிற்காக காத்திருந்தான். ‘’ என்னடா கிளம்பு’’&lt;br /&gt;, ’’இல்லண்ணே மீதி இருபது ரூவா தருவீங்க அத வாங்கிட்டு வரச்சொன்னாரு சாரு’’ ,&lt;br /&gt;’’உங்க சார்கிட்ட சொல்லு சின்ன பாக்கட் இல்ல பெரிய பாக்கட்தான் இருக்காம்னு , பெரிசு அம்பது ரூவாயாம்னு சொல்லு’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அண்ணேத்தேடிப் பாருங்கண்ணே சின்னபாக்கட்டே குடுங்க.. இல்லாட்டி நான் மறந்து போய் வாங்கிட்டு வந்துட்டேனு அதுக்கும் அடிப்பாரு’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’டேய் இல்லடா, இரு’’ என ஒரு பேப்பரில் ‘சிறிய பாக்கட் இல்லை, பையனிடம் பெரிய பாக்கட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக்கொள்ளவும்’ என்றெழுதி குமார் என கையொப்பமிட்டு  கொடுத்தனுப்பினான். சிறிது தூரம் சென்றவனை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை அடைந்ததும் நேராக படுக்கையறை வாசலுக்கு சென்று தன் அரைடிரவுசர் பாக்கட்டில் கையை விட்டு கோஹினூர் பாக்கட்டை தேடினான். காணவில்லை. படுக்கை அறையின் உள்ளேயிருந்து சிரிப்புகளோடு வினோதமான ஒலிகளும் வந்து கொண்டிருந்தது.  ஐய்யயோ பாக்கெட்ட காணோம் , சார்கிட்ட என்ன சொல்றது , தொலைஞ்சு போச்சுனு  சொன்னா கரண்டிய சூடு பண்ணி கால்ல போட்டுருவாரே! என மனதிற்குள் பதறியபடி வந்த வழியில் மீண்டும் ஓடத்துவங்கினான். வேர்த்து வேர்த்து கொட்டியது. காலை வெயில் மெதுவாக உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு படபடபடபடபடவென எக்ஸ்பிரஸ் ரயில் போல அடித்துக்கொண்டிருந்தது. எங்கும் காணவில்லை. கடை வரைக்கும் வந்துவிட்டிருந்தான். கடையில் குமார் இல்லை , கடை முதலாளி அமர்ந்திருந்தான். என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கடையிலிருந்து வீடு வரைக்கும் வழியெல்லாம் தேடியபடியே வந்தான். கறுப்பு  பாக்கட்டு , பொம்பளைங்க படம்.. கறுப்பு பாக்கட்... பொம்பளங... என நினைத்தபடியே வந்தான். இல்லை. காணவில்லை. எங்குமில்லை. கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவன் கண்ணில் அந்த பாதிகிழிந்த காகிதம் தென்பட்டது. அது மின்கம்பத்திற்கு கீழே கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’குழந்தைகளே துன்புறுத்தப்படுகிறீர்களா? உதவி தேவையா? அழையுங்கள் பத்து பத்து!’’ என்று எழுதப்பட்ட காகிதமொன்று கிடந்தது. அதை ஒருமாதிரி எழுத்துக்கூட்டி படித்துவிட்டான். எடுத்து பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொண்டான். அந்த விளம்பரங்களை டீக்கடை ரேடியோவில் நிறைய முறை கேட்டிருக்கிறான். பல முறை அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைப்பான். ஏனோ விட்டுவிடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;ஙோஜியார் இல்லாமல் போனால் இன்றைக்கு காலில் சூடு நிச்சயம். அதற்கு பதில் அந்த எண்ணுக்கு அழைத்தால் என்ன? போன்? வீட்டில் இருக்கிறதே! ராஜன் சார் பார்த்துவிட்டால்.. அடிதான் எப்போதும் வாங்குகிறோமே.. என ஏதேதோ நினைத்த படி வீட்டிற்கு அருகில்  வந்துவிட்டான். படுக்கையறையில் இருந்து இன்னமும் அந்த ஒலிகள் வந்துகொண்டிருந்தன. இவனுக்கு அந்த சப்தம் பழக்கமானதுதான்.. இது போல சத்தம்  ஓய்ந்து ஐந்து நிமிடத்தில் ராஜன்சார்  வெளியே வருவான் அப்போது அவனுக்கு சிகரட்டும் தீப்பெட்டியும் தரவேண்டும். யோசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அந்த நம்பருக்கு போன் போட்டு சொல்லிவிட்டால் என்ன?. போலீஸ் வரும் ராஜன் சாரை கைது செய்யும்.. என்னை காப்பாற்றும். ஜாலிதான். சென்னைக்கு போலீஸ் விஜயகாந்த் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான். கற்பனையிலும் விஜயகாந்த்தான் வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக அறைக்குள் நுழைந்தான்.  அங்குதான் போன் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவன் நேராக டெலிபோன் அருகில் வந்தான். இதுவரை அவன் போனை உபயோகித்ததே இல்லை. துடைப்பதோடு சரி. ராஜன் சார் அதில் பேசுவதைப் பார்த்திருக்கிறான். அருகில் சென்றவன் என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டான் , &lt;br /&gt;&lt;br /&gt;‘’சார் என்னை இங்கே அடிஅடினு அடிக்கிறாங்க, உடனே வாங்க சார், இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க.. ‘’ அழ முயற்சித்து பேசிப்பார்த்தான். சரியாக வரவில்லை. மீண்டும் ஆரம்பித்தான்.. &lt;br /&gt;&lt;br /&gt;‘’சார் என் பேரு கோபி.. ஊரு அம்சாபேட்டை,  இங்க அப்பா என்னை வேலைக்கு சேர்த்து விட்டாங்க , இங்க என்னை அடிக்கறாங்க.. தயவு பண்ணி வந்து காப்பாத்துங்க, ம்ம்ம்ம்..’’ அழுது பார்த்துக்கொண்டான். சரியாக வருகிறது. புலி பதுங்குவது போல பதுங்கி போனுக்கு அருகில் போய் நின்றான். அவன் பலமுறை போனை பார்த்திருக்கிறான் அதில் பத்தாம் எண் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நம்பர்களை எண்ணத்துவங்கினான் ஒன்னு,ரெண்டு...எட்டு... ஒன்பது..ஜீரோ.. ஆமா பத்து இல்லை!. பதறிப்போனான். பத்துபத்து நம்பருக்குள்ள போன்போட சொல்லி எழுதிருந்துச்சு இங்க பத்தாம் நம்பரையே காணமே! &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து அறையில் ராஜன் சாரின் சப்தம் மெதுவாக குறைவதைப்போல் இருந்தது. இவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. நேற்று வாங்கின உதையே இன்னும் வலி தீரவில்லை. இரவில் புரண்டு படுத்து உறங்க முடியாது. சப்தம் வேறு குறைகிறது. பத்துபத்து.. என்ன செய்வது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’பத்து . ஒன்னு ஜீரோ ஒன்னா போட்டா பத்து! ‘’ . ச்சே இதை எப்படி யோசிக்காம விட்டோம். என தன்ன்னை தானே கொட்டிக்கொண்டான். டக்கென ரிசீவரை எடுத்தான். 1...0...1...0  பட்டனைகளை வேகவேகமாக அழுத்தினான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணின் இனிமையான குரல்.. எதற்காகவும் காத்திருக்காமல்&lt;br /&gt;&lt;br /&gt;‘’சார்..இல்ல இல்ல அம்மா.. இல்ல இல்ல அக்கா.. அக்கா.. என் பேரு கோபி..’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’வணக்கம் குழந்தைகள் நலத்திற்கான பறவைகள் அமைப்பு உங்களை வரவேற்கிறது.. ஃப்ரீடம் பேர்ட்ஸ் வெல்கம்ஸ் யூ..’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அக்கா! அதெல்லாம் தெரியாதுக்கா! எங்க ஊரு.. இல்ல.. என்ன ரொம்ப அடிக்கிறாங்க, கொஞ்சம் வந்து காப்பாத்துங்க்கா, இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க, இந்த ராஜன் சார் ரொம்ப மோசம்..யாரையாச்சும் உடனே அனுப்புங்கக்கா’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’தமிழில் தொடர எண் ஒன்றை அழுத்தவும், ஃபார் இங்கிலீஷ் ப்ரஷ் டூ.. ஹிந்தி மே..’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அக்கா ப்ளீஸ்க்கா.. எனக்கு அதுலாம் தெரியாதுக்கா.. இங்க இங்க.. எனக்கு கால்ல சூடு போடப்போறாங்கக்கா காப்பாத்துங்க , நேத்துகூட ராஜன் சார் என்னை போட்டு மிதிமிதினு மிதிச்சிட்டாரு.. நைட்லருந்து ஒன்னுமே சாப்பட்லை.. எனக்கு கால்லாம் வலிக்குதுக்கா.. எங்க அப்பாட்ட சொன்னா அவரும் அடிக்கறாருக்கா..’’  என போனை கெட்டியாக காதோடு அணைத்துக்கொண்டு தேம்பிதேம்பி அழுதபடியே பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’ தமிழில் தொடர எண் ஒன்றை... ..’’ விடாமல் சொன்னதையே திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது எந்திரக்குரல்.. ‘’அக்கா அக்கா.. உடனே வாங்கக்கா.. ப்ளீஸ்க்கா’’ என போனை அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவன் அருகில் கால்தட சப்தம் கேட்டு தானாகவே அவன் கையிலிருந்து ஃபோன் கைநழுவி விழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘’அக்கா’’ &lt;br /&gt;&lt;br /&gt;ராஜன்சாரின் காதலி அவனுக்கு பின்னால் கையைக்கட்டி நின்றபடி.. அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்த உணர்வும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவனிடமிருந்து ரிசீவரை பிடிங்கி தன் காதில் வைத்து கேட்டாள் எதிர்முனையில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவளையே கண்களில் நீரை தேக்கிவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர். இருவரும் மௌனமாய் நின்று கொண்டிருக்க ராஜன் தன் லுங்கியை இறுக்கிக் கட்டியபடியே உள்ளே நுழைந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் காலிங் பெல் சப்தம் கேட்டது. டிங் டாங்... கோபி தன்னை காப்பற்ற யாரோ வந்துவிட்டனர் என்று ராஜன் சாரைப்பார்த்துப் புன்னகைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;_____&lt;br /&gt;&lt;br /&gt;*- கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனமும் எண்ணும் நிகழ்வுகளும் கற்பனையே!&lt;br /&gt;&lt;br /&gt;(சென்ற ஆண்டு பிப்ரவரியில் எழுதியது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-4634644931270721153?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/4634644931270721153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=4634644931270721153' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/4634644931270721153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/4634644931270721153'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/11/blog-post.html' title='பத்து-பத்து'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-bnUMr-vVyXA/TrDoC_bWtzI/AAAAAAAABzM/-tzbucYQXTM/s72-c/Child-Labour-In-India-01.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-3766684994864563184</id><published>2011-10-31T12:43:00.001+05:30</published><updated>2011-10-31T19:45:06.112+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><title type='text'>டிக்கெட்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-tC4prWWQsJU/Tq5IS9GoBdI/AAAAAAAABzA/a6YVlI1Ir9Y/s1600/night-art-290x217.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="299" src="http://4.bp.blogspot.com/-tC4prWWQsJU/Tq5IS9GoBdI/AAAAAAAABzA/a6YVlI1Ir9Y/s400/night-art-290x217.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடித்துவிட்டு மிட்நைட்டில் வண்டியோட்டுவது சுந்தரேசனுக்கு மிகவும் பிடிக்கும். காதில் இயர்ஃபோனில் இளையராஜா. ''வருது வருது இளங்காற்று..'' எனப்பாடிக்கொண்டே போதையில் பறக்க தொடங்கிவிடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு அப்படித்தான் ஹாயாக கிளம்பினான். லேசான சாரல் வேறு சிலிர்ப்பூட்டியதோடு கிளுகிளுப்பை அதிகப்படுத்தியது. ‘‘இந்த நேரத்துல செமத்தியான ஒரு டிக்கெட் கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்...’’ என பெருமூச்சை உதிர்த்தபடி பைக்கை நகரின் பிரதான சாலையில் ஓட்டிய படி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையின் ஓரம் தூரத்தில் இரண்டு பேர் நிற்பது நிழலாகத் தெரிந்தது. போலீஸா இருக்குமோ? ட்ரங்க் அன்ட் ட்ரைவ்... இரவெல்லாம் உக்கார வச்சிருவானுங்களே... பதறி வண்டியை ஓரமாக நிறுத்தி வாயில் ஒரு பாக்கெட் குட்காவை அள்ளிக்கொட்டி குதப்பினான். பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்து அருகில் செல்லச் செல்ல அது போலீஸ் அல்ல... பெண்கள் என்று தெரிந்தது. ஆஹா அடிச்சதுடா ஜாக்பாட்...&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பேருந்து நிறுத்தம். அங்கேதான் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு நோட்டம் விட்டான். ஒருத்தி வயதானவள். முந்தானையை தலைக்கு முக்காடு போல போட்டிருந்தாள். இன்னொருத்தி இளம்பெண். சுடிதார் அணிந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் அவர்களுக்கு அருகில் போய் நிற்க அவர்களும் இவனையே பார்ப்பதாக உணர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;‘நிச்சயமா அந்தமாதிரிதான் இருக்கணும்... ஐட்டம்வேற செம கட்டையா இருக்கே’ பாக்கெட்டை தடவிப்பார்த்தான். 500 ரூபாய்தான் இருந்தது. ‘ரேட்டு ஜாஸ்தி கேட்டா என்ன பண்றது..?’ ஏடிஎம் எதிரில் இருந்தது. பிரச்னையில்லை. இடம்? அவர்கள் பார்த்துக் கொள்வார்களாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயதான பெண் சாலையை பார்ப்பதும் இவனை பார்ப்பதுமாக இருந்தாள். அந்த இளம்பெண் நல்ல அழகு. தொழிலுக்கு புதுசு போல. அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் காலியானது. அவர்களுக்கு கொஞ்சம் அருகில் போய் கையை உயர்த்தி சோம்பல் முறிப்பதுபோல ஆஆஆ வென பாடினான். அந்த வயதான பெண் அவன் அருகில் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தம்பி... தப்பா நினைக்காதீங்க... உங்க செல்போன் கிடைக்குமா? இவ மகனுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சுனு ஆம்புலன்ஸுக்கு போன்பண்ணிருந்தோம். இன்னும் வரல. எங்க போன்ல பேலன்ஸ் இல்ல. அதான் ஒரு போன் பண்ணிக்கலாம்னு? தப்பா நினைச்சிக்காதீங்க’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரேசனுக்கு வியர்த்துக்கொட்டியது. பதட்டமாக போனை எடுத்து நீட்டினான். போதையெல்லாம் ஒரு நொடியில் காலியாகியிருந்தது. அந்த இளம்பெண் அழுது அழுது கண்கள் வீங்க நின்றிருந்தாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வயதான அம்மா போன் செய்துகொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்து நின்றது. தன் செல்போனை வாங்கிக்கொண்டு அவசரமாக வீட்டிற்கு கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலில் சேலைத் தலைப்பில் முக்காடு போட்டுக் கொண்டு&amp;nbsp; சுந்தரேசனின் மனைவியும், கன்னத்தில் கைவைத்தபடி ஐந்து வயது குட்டிப்பாப்பாவும் காத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி தினகரன் , வசந்தமில் வெளியான ஒரு பக்க கதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-3766684994864563184?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/3766684994864563184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=3766684994864563184' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/3766684994864563184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/3766684994864563184'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/10/blog-post_31.html' title='டிக்கெட்'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-tC4prWWQsJU/Tq5IS9GoBdI/AAAAAAAABzA/a6YVlI1Ir9Y/s72-c/night-art-290x217.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-871760226119756770</id><published>2011-10-28T15:00:00.000+05:30</published><updated>2011-10-28T15:00:34.775+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-b-3KppFrKn0/TqpzqZxRusI/AAAAAAAABxw/Wh3n8L0G1hM/s1600/three+idiots.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="144" src="http://3.bp.blogspot.com/-b-3KppFrKn0/TqpzqZxRusI/AAAAAAAABxw/Wh3n8L0G1hM/s320/three+idiots.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜய.டி.ராஜேந்தர் + கேப்டன் விஜயகாந்த் இருவருமாக கூட்டணி போட்டு ஒரு படம் நடித்தால் அந்தப்படம் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகமே போற்றிக்காக்கும் பொக்கிஷமாக இருக்குமில்லையா?. அதே சந்தோசத்தை பேரானந்தத்தை விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் நமக்கு தருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சி சென்டிமென்ட்டையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் இணைத்து படமெடுக்க முன்வந்த இயக்குனர் ராஜாவுக்கு முதலில் பெரிய பூங்கொத்துடன் கூடிய பாராட்டுகள். தீபாவளி ரேஸில் அவர்படம்தான் பஸ்ட்டாம்! &lt;br /&gt;&lt;br /&gt;என்னது விஜய்படத்துல பாகிஸ்தான் தீவிரவாதியா ‘ஙே’ என முழிக்க வேண்டாம். யெஸ் பாகிஸ்தான் டெரரிஸ்ட்ஸ்தான். அவர்களைதான் விஜய் பறந்து பறந்து பின்னாங்காலால் சுவற்றை மிதித்து சுழன்று உதைத்து பந்தாடுகிறார். திருப்பாச்சி படத்தில் தங்கச்சிக்காக எப்படி சென்னை ரவுடிகளை அழித்தொழிக்கிறாரோ அதேபோல இதில் தங்கச்சிக்காக தீவிரவாதிகளை அழிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;யெஸ் தங்கச்சிக்காகத்தான்.. தோளிலும் மாரிலும் தூக்கி வளர்த்த அதே அன்பு தங்கச்சிக்காகதான்! ஆனால் என்ன ஒன்னு.. டீயார் போல தாடி கிடையாது.. நோ அழுவாச்சி! &lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சியை கொன்ற தீவிரவாதிகளை இளையதளபதி விஜயாக இருப்பதால், அவருடைய லெவலுக்கு குறைந்த பட்ஜெட்டில் சென்னையில் வைத்துதான் அடித்து உதைத்து கொன்று பழிதீர்க்க வேண்டியதாயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவே எங்க தல கேப்டனாக இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கே போயி ஒண்டிக்கட்டையாக ஒட்டுமொத்த தீவிரவாத சமூகத்தையுமே உதைத்ததழித்திருப்பார். சொல்லப்போனால் உலக மேப்பில் பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் போயிருக்கும். அன்பார்சுனேட்லி அது நடக்கல! ஆங்! (வீ மிஸ் யூ கேப்டன் சார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kez0Mi0PSdQ/Tqp0DtsegII/AAAAAAAABx8/taRMj-50rwc/s1600/velayutham%2Bhansika%2Bmotwani%2Bstills00-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://1.bp.blogspot.com/-kez0Mi0PSdQ/Tqp0DtsegII/AAAAAAAABx8/taRMj-50rwc/s320/velayutham%2Bhansika%2Bmotwani%2Bstills00-1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;கிளைமாக்ஸில் சிக்ஸ்பேக் மாதிரி எதையோ காட்டி நம்மையும் தீவிரவாதிகளையும் பழிவாங்குகிறார். விஜயின் அந்த மல்ட்டிப்பிள் சிக்ஸ்பேக்ஸை பார்த்து தியேட்டரில் குழந்தைகளே பயப்படும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எம்மாத்திரம். இருண்ட ஆப்பிரிக்காவை நோக்கி அலறி ஓடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சிக்காக டேன்ஸ் ஆடி பாட்டுப்பாடி அழுதுசிரித்து நடித்திருந்தாலும் டீராஜேந்தர் அளவுக்கு அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார், குறைந்தபட்சம் லத்திகா புகழ் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனைகூட தாண்டமுடியவில்லை விஜயால்!. பார்க்கவே பாவமாக இருக்கிறது. அட பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமாவது வீராவேசமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை என்ன இருந்தாலும் கேப்டன் கேப்டன்தான்! டீஆர் டீஆர்தான். எத்தனை வேலாயுதம் வந்தாலும் மங்காத்தா வந்தாலும் அவர்களை விஞ்ச அவர்களால் மட்டுமே இயலும். &lt;br /&gt;&lt;br /&gt;அஜித் பில்லா பார்ட் 2 நடிக்கிறார் என்பதை அறிகிறோம். இதுகூட திருப்பாச்சி பார்ட்2 தான். படம் முழுக்க பாட்டாளி வர்க்க மக்களை காப்பாற்றியதுமில்லாமல் உலக வரலாற்றில் முதல் முறையாக இளையதளபதி விஜய் தயாரிப்பாளரையும் ஒரளவு காப்பாற்றியிருக்கிறார். வெற்றியில் சந்தானத்தின் வாய், ஹன்சிகாவின் தொப்புளுக்கும் நிறையவே பங்கிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி படத்தில் எனக்கு மிகவும் பிடித்தவசனம் ‘’நான் ஆளுங்கட்சியும் இல்ல எதிர்கட்சியும் இல்ல ஒரே கட்சிதான் அது என் தங்கட்சி!’’ (இந்த வசனத்தை டீயார் சொல்லியிருந்தால் தியேட்டரே விசில் சப்தத்தில் சின்னாபின்னமாகியிருக்கும்!).&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் விஜயின் காஸ்ட்யூமும் நடிப்பும் அந்தக்காலத்து ராமராஜனை நினைவூட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல! 2007க்கு பிறகு வெற்றியையே ருசித்திடாத விஜய்க்கு இஞ்சி பச்சடி தொட்டு நக்கடி என கிடைத்திருக்கும் டுமாங்கோலி ஹிட் வேலாயுதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;இன்பிட்வீன் ஏழாம் அறிவு என்னும் மகாகாவியத்தையும் காண நேர்ந்தது. படத்தின் இயக்குனர் மாபெரும் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கனவே விஜயகாந்தும் அர்ஜூனும் சேர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துவிட்டதால் சைனாவிலிருந்து வில்லன்களை இறக்குமதி செய்திருக்கிறார். அதோடு தசாவதாரம் படத்திலிருந்து கிருமிகளையும் சில காட்சிகளையும் காப்பிபேஸ்ட் செய்திருக்கிறார். (தசாவதாரம் கிருமியே இங்கிலீஸ்லருந்து சுட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் வில்லன் ‘டோங் லீ’   செகன்ட்ஷோ டெர்மினேட்டர்2 பார்த்திருப்பான் போல! &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-v_9BglpdbwU/TqpzRampstI/AAAAAAAABxo/EGe7YMM2JUE/s1600/bodhidharma1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-v_9BglpdbwU/TqpzRampstI/AAAAAAAABxo/EGe7YMM2JUE/s400/bodhidharma1.jpg" width="253" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;படம் முழுக்க சின்ன கண்ணால் முழித்து முழித்து பார்த்தபடி ஆடாமல் அசையாமல் முகத்தில் எந்த ரியாக்சனுமே இல்லாமல் நேர்கோட்டில் ஒரே அச்சில் ஹாரிஜான்டிலாகவும் இல்லாமல் வெர்ட்டிகலாகவும் இல்லாமல் 90டிகிரியில் நடக்கிறார். ஹிப்னாடிசம் பண்ணும் போது மட்டும் மண்டையை முப்பது டிகிரி கோணலாக திருப்புகிறார். டேய் போங்கிரி! நீ ரோபோ இல்ல மனுஷன்டா என யாரோ கமென்ட் அடிக்க.. தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் அரைமணிநேரம் ஏதோ டாகுமென்ட்ரி போல ஓடுகிறது. படம் போடுவதற்கு முன்னால் அரசாங்கமே போடுகிற மொக்கை டாகுமென்ட்ரிகளுக்கு இணையான காட்சிகள் அது. அதை ரொம்ப சீரியஸாக படமெடுத்திருப்பதால் அதை சீரியஸாக பார்த்து தொலையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரிசு செயராசு என்னும் இசையமைப்பாளர் இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்னும் பாப்பா பாடலையே சீனா மொழியில் இசையமைத்துப் பாடினால் முட்டாள் மரமண்டை தமிழர்களுக்கு தெரியாது ஆகா ஓகோ என கைத்தட்டிவிடுவார்கள் என நினைத்துவிட்டார் போல! &lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸி டாக்ஸி பாட்டையே ஓரிங்கா ஓரிங்கா என பாடுகிறார்கள்.. ஆரிசு செயராசு அவர்களே.. எங்க நினைவாற்றல் மேலதான் உங்களுக்கு எவ்ளோ நம்பிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;போதிதர்மருக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறேன் பேர்வழி என பேதிக்கு மருந்துக்கொடுக்கும் பேதிதர்மராக அவரை சிவராஜ் சித்தமருத்துவர் ரேஞ்சுக்கு சித்தரித்திருப்பது காமெடி கும்மி! அவருக்கு எக்ஸ்மேன் திரைப்படத்தில் வருகிற மேக்னீட்டோ,புரொபஸர் எக்ஸ்,வோல்வரீன்,டாக்டர் ஜீன்க்ரே என கிட்டத்தட்ட எல்லாவித முயூட்டன்ட்களுக்கும் இருக்கிற சூப்பர் பவர்களும் இருக்கிறது! நல்ல வேளை அவருக்கு பேண்ட்மாட்டி அதற்குமேல் ஜட்டிமாட்டி குட்டி சூப்பர்மேன் ஆக்காமல் விட்டதற்காக முருகதாஸுக்கு பூங்கொத்து!     &lt;br /&gt;&lt;br /&gt;பாவம் போதி தருமர் உயிரோட இல்லை.. இந்தப்படத்தை பார்த்திருந்தால் தன்கையிலிருக்கும் நீண்ட கட்டையால முருகதாஸ் மண்டைலயே நாலு சாத்து சாத்தியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க தமிழர்கள் பெருமையை பேசுகிற சுருதிகமலுக்கு கொஞ்சமாச்சும் தமிழ் கத்துகுடுத்திருக்கலாம். பயபுள்ள பாவம் ரொம்ப்ப்ப்வே டமிலர்கள்க்கு பெர்மை சேர்க்க போர்ராட்து.த்து... .முடியல! &lt;br /&gt;&lt;br /&gt;படத்தோட கதைக்கும் பெரிசா சிரமப்படாம அசாசின் க்ரீடுன்ற வீடியோகேம் கதையவே சுட்டு கொஞ்சம் டிங்கரிங் செய்து திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. உலக சினிமாக்களை காப்பியடித்தால் கண்டுபிடித்துவிடும் இணைய விமர்சகர்களுக்கு சரியான சவுக்கடி. வீடியோகேம் விளையாடுகிறவர்கள் எண்ணிக்கை சொற்பம்தான். வீடியோகேமிலிருந்து கதையை உருவி சரியாக பயன்படுத்திய இயக்குனரின் ராஜதந்திரத்துக்கும் பாராட்டுகள்!&lt;br /&gt;&lt;br /&gt;‘’காசுக்கு புடிச்ச கேடு இந்த தண்ட கருமாந்திரத்தையெல்லாம் பாத்து தொலைக்க வேண்டியிருக்கிறது’’ என எனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த பீதி தருமரை தட்டி எழுப்பிய பெருமைக்காக முருகதாஸுக்கு ஒரு சல்யூட்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ரா-ஒன் பார்க்கவில்லை. ஆனால் ரஜினி வருகிற காட்சிமட்டும் யூடியுபில் கிடைக்கிறது. ரஜினியை பார்க்க கோமாளி போல மொக்கையாக இருக்கிறார். கேவலமான ஹேர்ஸ்டைல், மொக்கையான மேக்கப் என ஷாருக்கான் ரஜினியை ரொம்பவே அசிங்கப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள் ஷாருக்! &lt;br /&gt;&lt;br /&gt;நோட் திஸ் பாய்ன்ட் ரஜினியின் கொலைவெறி படை – நீங்கள் எந்திரனையே இன்னொரு முறை பார்ப்பது கிட்னிக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நானொன்னும் பொய் சொல்லீங் நீங்களே பாத்துக்கோங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/Fa99_fAGjxU" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7702774817858419395-871760226119756770?l=www.athishaonline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.athishaonline.com/feeds/871760226119756770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7702774817858419395&amp;postID=871760226119756770' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/871760226119756770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7702774817858419395/posts/default/871760226119756770'/><link rel='alternate' type='text/html' href='http://www.athishaonline.com/2011/10/blog-post_28.html' title='தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை'/><author><name>அதிஷா</name><uri>http://www.blogger.com/profile/08504143161102425634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_NFjpiD6NQNU/SF_fdBHzr2I/AAAAAAAAAIQ/DlCfDmbwACM/S220/papa+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-b-3KppFrKn0/TqpzqZxRusI/AAAAAAAABxw/Wh3n8L0G1hM/s72-c/three+idiots.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7702774817858419395.post-5343566852486262392</id><published>2011-10-18T13:08:00.000+05:30</published><updated>2011-10-18T13:08:04.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல்'/><title type='text'>எங்கிட்டே மோதாதே!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-yfcuMFGshUU/Tp0p1VVlaMI/AAAAAAAABwQ/spjuRo7jyJo/s1600/Christy+williams+2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://2.bp.blogspot.com/-yfcuMFGshUU/Tp0p1VVlaMI/AAAAAAAABwQ/spjuRo7jyJo/s400/Christy+williams+2.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதலில் சில சம்பவங்கள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;அக்டோபர் 7 : மூணாறு நகர்ப் பகுதியிலும் எஸ்டேட் பகுதியிலும் நுழைந்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் ஜான்சன் என்பவர் கொல்லப்பட்டார். இதே யானை தாக்கி ஏற்கெனவே 7 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;அக்டோபர் 3 : வால்பாறை அருகே தேயிலைத் தோட்டப் பகுதியில் 21 காட்டு யானைகள் புகுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் நடமாட அஞ்சினர்.&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;ஆகஸ்ட் 10 : கோவை வாழையாறு பகுதி காப்புக் காட்டில் வனக்காவலரான நடேசன், பணியிலிருந்தபோது, காட்டு யானைகள் மிதித்துப் பலியானார்.&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;ஜூலை 29 : திண்டுக்கல் மாவட்டம் தேக்கம் தோட்டம் பகுதியில் 10 யானைகள் இரவில் நுழைந்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்டன. ஓடுகளை உடைத்தும் வெளியில் நின்றிருந்த கட்டில், மொபெட் ஆகியவற்றையும் தூக்கி வீசின. விடியும் வரை கலாட்டா செய்த அவை விடிகாலையில்தான் கிளம்பின.&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;ஜூலை 7 : நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரை அடுத்துள்ள கிராமங்களில்  காட்டு யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தின. அவற்றுக்குப் பயந்து கொண்டு மக்கள் தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கினர்.&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ea9999; color: black;"&gt;ஜூலை 3 : ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள சில கிராமங்களில் புகுந்த யானைகள் சுமார் 15 நாட்கள் அங்கேயே ‘கேம்ப்’ போட்டு  தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னை, மாக்காச் சோளம் போன்றவற்றைத் தின்று சேதம் விளைவித்தன.&lt;/div&gt;&lt;br /&gt;-முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காட்டு யானைகள் மலையோர கிராமங்களுக்குள் நுழைவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது என்ன காரணம்? யார் மீது தவறு? அதைத் புரிந்து கொள்வதற்கு முன் யானைகளைப் பற்றிய சில அடிப்படையான தகவல்களைத்  தெரிந்துகொள்வது உதவும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சாப்பாடு 300கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;மேற்குத்தொடர்ச்சி மலை, இது யானைகளின் சொர்க்கம். எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடுகள். இங்கே 6700க்கும் மேற்ப்பட்ட யானைகள் வசிப்பதாக 2005ஆம் ஆண்டு வனத்துறையின் ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், ஈரோடு, அந்தியூர், ஆனைமலை, மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மிக மிக அதிகம். யானைகள் மற்ற எந்த விலங்குகளை போலவும் இல்லாமல் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவை. சரியான ‘காடோடி’கள். அதற்குக் காரணம் அவற்றின் உணவுப் பழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாளுக்கு 100 முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணுகின்றன இந்த யானைகள். அதோடு 100 முதல் 150 லிட்டர் அளவில் தண்ணீர் குடிக்கின்றன. வறட்சிக் காலங்களில் உணவு தேடி பல நூறு கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஒரே ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் நீரும் தேவையென்றால் குடும்பமாகவே (5லிருந்து 15யானைகள்) வாழக்கூடிய இந்த உயிரினத்திற்கு எவ்வளவு உணவும் தண்ணீரும் தேவைப்படும்! அதனால் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முகாமிட்டு அங்கிருக்கிற தாவரங்களை மொத்தமாக உண்டு காலிசெய்த பின்தான் அங்கிருந்து நகரும்.அடுத்து? அடுத்த காடு... அங்கே மொத்தமாக சாப்பிடுவதும்... மீண்டும் அடுத்த காடு...  இப்படி ஒரு சுற்று முடித்து, பழைய காட்டிற்கு வந்தால் அங்கே தேவையான தாவரங்கள் மீண்டும் வளர்ந்துவிடும்! இயற்கையாக நடைபெறும் சுழற்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;காடுவிட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களுக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் மட்டுமே பயணிக்கும் குணம் கொண்டவை. இதை யானைகளின் வழித்தடம் (ELEPHANT  CORRIDORS) என்று அழைக்கிறார்கள்.   ஆறாயிரம் யானைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவை பயன்படுத்துகிற வழித்தடங்கள் 19தான்! அதில் நான்கு பாதைகள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்கின்றன.&lt;br /&gt;இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் யானைகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்! &lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய பாதையிலிருந்து விலகி, அவை காடுகளுக்கு அருகாமையிலுள்ள கிராமங்களுக்குச் செல்கின்றன. வீடுகளைத் தாக்குகின்றன. வாழைத்தோட்டங்கள், கரும்புத்தோட்டங்களில் புகுந்து தின்று தீர்க்கின்றன. இதுகுறித்து மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் உலவும் பகுதிகளில் சில முக்கியமான பகுதிகளில் ஆய்வு செய்தோம். யானைகள் ஊருக்குள் நுழைவதற்கான காரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகின்றன.  சில காரணங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வால்பாறை &lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வால்பாறை பகுதி நான்கு பக்கமும் மலைக்காடுகள் சூழ்ந்த பகுதி. ஒருபக்கம் ஆனைமலை புலிகள் சரணாலய காடுகள். இன்னொரு பக்கம் இரவிக்குளம் தேசிய பூங்கா. வால்பாறையின் மேலே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், வளச்சல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என நான்கு பக்கமும் காடுகள் சூழ நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நான்கு காடுகளும் யானைகளின் முக்கிய வாழ்விடங்களாகவும் அவற்றிற்கு தேவையான உணவினை வழங்குபவையாகவும் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-xzudBmYh4WU/Tp0qKJJSW_I/AAAAAAAABwY/Gm5HKl_3vE8/s1600/Stepear+in+Karamalai32.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-xzudBmYh4WU/Tp0qKJJSW_I/AAAAAAAABwY/Gm5HKl_3vE8/s320/Stepear+in+Karamalai32.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;காட்டுயானைகள் இந்தக் காடுகளில் இருந்து மற்ற காட்டிற்குள் செல்வதாக இருந்தால் வால்பாறையின் பிரதான தேயிலைத் தோட்டங்களை கடந்தே செல்ல வேண்டியதாயிருக்கிறது. இதை மனதில் வைத்து 1920களில் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களை உருவாக்கும் போதே பிரிட்டிஷ் அரசு ’துண்டுச் சோலைகள்’ எனப்படும் வனப்பகுதிகளை வால்பாறையில் அமைத்தது. துண்டுச் சோலைகள் என்பது தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பெரிய அளவிலான வனப்பகுதிகளை வனவிலங்குகளுக்காக விட்டுவைப்பது. இதன் மூலம் யானைகள் மட்டுமல்லாது இன்னபிற விலங்குகளும் தன் பாதையிலிருந்து விலகாமல் இந்தத் துண்டுச் சோலைகளின் வழியாக  ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு இடையூறின்றிப் பயணிக்கும. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றோ இந்த துண்டுச் சோலைகள் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சி நிற்கின்றன. என்னதான் மனிதர்கள் வனத்தினை அழித்திருந்தாலும் யானைகள் இப்போதும் அந்தத் துண்டாகிப் போன சோலைகளை பயன்படுத்தியே நகர்கின்றன. அதுவும் மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் மட்டுமே. எப்போதாவது பகலில் எஸ்டேட்கள் வழியாக போகும்போதுதான் பிரச்சினையே. இதை காணுகிற மக்கள் கோபம் கொண்டு வெடிவைப்பதும், தாரை தப்பட்டைகள் கொண்டு ஒலி எழுப்பி விரட்டுவதும் தொடர்கிறது. மக்களின் இந்த விநோதப் போக்கினால் எரிச்சலடையும் யானைகள்தான் வன்முறையில் இறங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;“இங்கே. காட்டு யானைகளைவிட  பழக்கப்படுத்தப்பட்ட வளர்ப்பு யானைகள்தான் அதிகம் வளர்க்க முடியாமலும் முதுமையிலும் அவற்றை காட்டில் விட்டுவிடுவதான் பிரச்சினை., வீட்டு உணவை உண்டு வளர்ந்த இவை எஸ்டேட்டுகளுக்குள் புகுந்து அருகாமை வீடுகளையும், சத்துணவு கூடங்களையும் தாக்குகின்றன. தாக்குதல் நடத்துகிற யானைகளில் பலதும் வீட்டின் சமையலறையை குறி வைப்பதை உணரலாம், இதற்கு ஒரே வழி இந்த வளர்ப்பு யானைகளை முகாம்களில் வைத்து பரமாரிப்பதே’’ என்கிறார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையின் தனியார் எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் டேவிட். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மேட்டுப்பாளையம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழைத் தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அடர்ந்து கிடக்கின்றன மேட்டுப்பாளையத்தில். இங்கு சிறுமுகை தொடங்கி சத்தியமங்கலம் வரை யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள். இந்தக் காடுகளுக்கு நடுவேதான் பல நூறு கிராமங்கள் உள்ளன. இங்கே விவசாயமும் நடைபெற்று வருகின்றன. இதுபோக இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்த பெருவாரியான மரங்கள் வெட்டப்பட்டு இன்று வெறும் ஃபயர் வுட் எனப்படும் விறகுக்கான முட்செடிவகை மரங்களே நிறைந்துள்ளன. இந்த மரங்களை அடுப்பெரிக்க மனிதர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வெகு தொலைவிலிருந்து பயணித்து வரும் யானைகள் பசியாற இவை ஒரு சதவீதம் கூட உதவாது. பசியோடும் தாகத்தோடும் வருகிற காட்டு யானைகள் காட்டில் உணவு கிடைக்காததால்  அருகில் உள்ள வாழைத்தோப்புகளைக் குறிவைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கு இயற்கை விரும்பிகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்தப் பள்ளி யானைகளின் வழித்தடத்தினில் இருப்பதால் பிரச்சினை உண்டாகும் எனப் போராடியும் அப்பள்ளி கட்டப்பட்டது. ஆனால் இன்று, யானைகளின் வழித்தடத்தில் பள்ளி இருப்பதால் அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயணித்து அடுத்த காட்டை அடைய வேண்டியதாயிருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர மேட்டுப்பாளையத்திலிருந்து  சத்தி செல்லும் சாலை முழுக்க வனப்பகுதிக்கு மிக அருகிலேயே ரியல் எஸ்டேட் தொழிலும் கொடிக்கட்டி பறப்பதை காண முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுவாணி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவாணி ஆற்றையொட்டியுள்ள மலைக்கிராமங்கள் பலவும் இந்த யானைத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றன. இங்கே யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மோட்டார்களையும் மின்இணைப்புகளையும் உடைத்து நொறுக்கிவிடுகின்றன. என்ன காரணம் என உள்ளூர் வாசிகளிடம் விசாரித்தால், அண்மைக்கால ஆக்கிரமிப்புகளே காரணம் என்கின்றனர். மேலும் கல்லூரிகள், ஆசிரமங்கள், கோவில்கள், சுற்றுலாப் பயணிகள் என யானைகள் தங்கள் பாதைகளை தொடர்ந்து மாற்றிக் கொள்வதற்கான காரணங்கள் நீளுகின்றன. அதுவும் அண்மைக்காலங்களில் அங்கே உருவாகி வரும் புதிய கட்டிடங்களும் அதற்காக போடப்படும் மின்வேலிகளும் யானைகளின் திசையை மாற்றிவிடுவதால், அவை வயலுக்குள் புகுந்துவிட காரணமாக உள்ளன என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மேட்டுப்பாளையம் பகுதியைப்போலவே இங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. காட்டுப்பகுதிக்கு மிக அருகில் வீட்டுமனைகள் விற்பனை கன ஜோராக நடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீலகிரி மாவட்ட கிராமங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர், மசினகுடி, சீகூர், சிங்காரா, கோத்தகிரி, கூடலூர், முதுமலை, கோரக்குந்தா, மோயார் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம். அதிலும் மசினகுடியை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுயானைகளை எங்கும் காணலாம். அப்பகுதியைச் சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதியும் புல்வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காட்டுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பசுக்களும், ஆடுகளும், எருமைகளும் எந்நேரமும் மேய்ந்து கொண்டே இருக்கின்றன. இது வனப்பகுதியிலிருக்கிற புற்களின் அளவினை குறைத்து விடுவதால் அந்தக் காட்டில் வாழும் மான்கள், காட்டெருமைகளோடு புற்களுக்காக யானைகளும் போட்டி போட வேண்டியதாய் இருப்பதாக வனத்துறையினர் கவலைப்படுகின்றனர். அதிக உணவுத் தேவை கொண்ட யானைகள் இதை சமாளிக்க விவசாய பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோலாம்பாளையம் மற்றும் ஆனைகட்டி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-mLMNtOILhus/Tp0rr8JMCbI/AAAAAAAABwo/U1v33R05TaA/s1600/Picture1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="204" src="http://4.bp.blogspot.com/-mLMNtOILhus/Tp0rr8JMCbI/AAAAAAAABwo/U1v33R05TaA/s320/Picture1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;தோலாம்பாளையம் முழுக்க நிறைய வாழைத்தோப்புகளும் கரும்புத்தோட்டங்களையும் பார்க்க முடிந்தது. தோட்டத்தினை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளனர். இதனால், மின்வேலிகளில் சிக்கி யானைகளும் வேறு விலங்குகளும் இறந்து போவதும் உண்டு. இங்கே யானைகள் வர காரணமாக சொல்லப்படுவது யானைக்கு வாழையும், கரும்பும் மிகப்பிடிக்கும். தன் பாதையில் அவை இலவசமாக கிடைத்தால் அது உண்ணத்தான் செய்யும். இது தனியார் தோட்டம் இதை உண்ணக்கூடாது என்று யானைக்கு தெரியுமா எனச் சிரிக்கிறார் ஆனைகட்டி அருகே தோட்டம் வைத்திருக்கும் ராமர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இவை தவிர மேலும் சில காரணங்களும் உண்டு! காடுகளில் இயற்கையாய் உண்டாகாமல் மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் உண்டாகும் காட்டுத்தீ. காட்டில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விட்டு செல்லுகிற நெருப்பு மிச்சங்களும், தீக்குச்சிகளும், அணைக்காமல் வீசப்படுகிற சிகரெட் துண்டுகளும் பல ஹெக்டேர் அளவு காட்டினை அழித்து யானைகள் மட்டுமல்லாது சிறிய உயிர்களின் வாழ்விடங்களை நாசம் செய்தும் விடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களைபோலவே விலங்குகளுக்கும் உப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. யானைகளும் உப்புச்சுவைக்கு விதிவிலக்கல்ல.. காட்டில் இயற்கையிலேயே உப்பு மண்ணிலிருந்து கிடைத்து வந்தாலும், பருவநிலை மாற்றங்களால் அது குறைந்து போகிறது.. உப்புக்காகவும் யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாததாய் உள்ளது. அதற்கு நல்ல உதாரணம் வால்பாறை பகுதிகளில் வீடுகளை தாக்கும் யானைகள் முதலில் உண்பது உப்பைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர யானைகள் குறித்த போதிய அறிவின்றி, அவற்றை துன்புறுத்தி துரத்துவதும் தொடர்கிறது. கற்களால் அடிப்பது. தீப்பந்தங்களை வீசுவது, யானையின் மீதே வெடிகளை வீசுவது எனப் பல டார்ச்சர்கள்.. குட்டிகளோடு வரும் யானைகளை விரட்டுகிறேன் பேர்வழியென அவற்றை கோபப்படுத்துகின்றனர். இதனால், தன் குட்டிகளைப் பாதுகாக்க வேறுவழியின்றி அவை வன்முறையில் ஈடுபடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;“பெரிய நிறுவனங்கள் காடுகளில் தங்கள் கல்லூரிகளைக் கட்டுவது, சிலர் ஆசிரமங்களை நிர்மாணிப்பது, ரிசார்ட்கள் அமைப்பது, வீடுகள் கட்டுவது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள அரியவகை மரங்களை வெட்டுவது முதலான நடவடிக்கைகளை தவிர்த்தாலே யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் வனக் காவலர் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மசினகுடியிலேயே பிறந்து தினமும் காட்டு யானைகளை பார்த்து வளர்ந்த கணேஷின் கருத்து முக்கியமானதாக இருக்கிறது “எந்தக் காட்டு யானையும் நம் வீட்டிற்கோ நம் நிலத்திற்கோ வருவதில்லை. நாம்தான் யானைகளின் காட்டில், அதனுடைய இருப்பிடத்தில் வசிக்கிறோம், விவசாயம் செய்து சம்பாதிக்கிறோம், சுற்றுலா போகிறோம், வனப்பகுதியை அழிக்கிறோம். இதனை மனிதர்கள் உணரவேண்டும்! காட்டுயானைகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் வாழ்ந்தாலே போதும்.. இந்த பிரச்சினையே இருக்காது.’’ என்கிறார். &lt;br /&gt;இதனிடையே, யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் தொழில்நுட்பத்தையும் வனத்துறையினர் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணிக்க அவற்றிற்கு ரேடியோ காலர் கருவி பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;b&gt;தீர்வு என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;b&gt;முகம்மது அலி – யானைகள் குறித்த ஆராய்ச்சியாளர்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;“ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வனவிலங்குகள் மட்டுமே வாழத் தேவையான உணவும் நீரும் கிடைக்கும். ஆனால், இன்றோ வனப்பகுதிகளின் அளவு பெருமளவில் குறைந்து, விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது உணவு மற்றும் நீருக்கான தட்டுப்பாட்டினை உருவாக்கியுள்ளது. இதனை தடுக்க இனிமேல் வனப்பகுதிகளில் புதிய கட்டிடங்கள் அமைவதையும் குடியிருப்புகள் உண்டாவதையும் தடுக்க வேண்டும். ரிசர்வ் காடுகளில் உள்ள மக்களையும் பெரிய நிறுவனங்களையும் வேறு இடங்களில் குடியமர்த்தி, அந்த பகுதிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மீண்டும் காடுகளாக மாற்றலாம். இது வனவிலங்குகளுக்கான வாழ்விடத்தின் பரப்பினை அதிகரிக்கும். இது யானைகளும் மற்ற காட்டுவிலங்குகளும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதை பெருமளவில் தடுக்கும் என்பது நிச்சயம்” &lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;b&gt;லதானந்த்  – விருதுபெற்ற வனத்துறை அலுவலர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;“1992லிருந்து இந்தியா முழுக்க இருக்கிற காட்டுயானைகளின் பாதுகாப்புக்காக ‘பிராஜக்ட் எலிபென்ட்’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் யானைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. காட்டுத்தீயை அணைப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பு, அதுகுறித்த தகவல் தருபவர்களுக்கு பரிசு என புதிய முறைகளை கையாண்டு அதனை தடுத்து வருகிறோம். காட்டுக்குள் குடிநீர் ஆதாரங்களை பெருக்குதல், மூட்டை மூட்டையாக உப்பு கொட்டி வைத்தல், யானைகளின் வழித்தடங்கள் குறித்த விழிப்புணர்வை மலைக்கிராம விவசாயிகளிடம் ஏற்படுத்துதல், முக்கியமாக வேட்டையாடுபவர்களையும் வனத்தினை பாழாக்குகிறவர்களையும் தடுத்தல் என தொடர்ந்து வனத்துறை செயல்பட்டுவருகிறது. இவைதவிர காட்டுயானைகளை பிடித்து அதன் கழுத்தில் டிரான்ஸ்மிட்டர்களை இணைத்து காட்டுக்குள் விடுவதன் மூலமாக செயற்கைக்கோள் உதவியுடன் அதன் வழித்தடங்களையும் கண்டறிகிறோம். இது நல்ல பலனையும் அளித்தே வருகிறது.”&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;b&gt;ஆனந்த் – நேச்சர் கன்சர்வேஷன் பவுன்டேஷன் – யானைகள் ஆராய்ச்சியாளர்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;“வால்பாறைப்பகுதியில் 220 சதுர கி.மீட்டர் அளவுக்கு தேயிலை தோட்டங்கள்தான். பிரிட்டிஷ் காலத்தில் இங்கே 30 சதவிகிதம் துண்டுசோலைகள் இருந்தன. இன்று அது வெகுவாக குறைந்துள்ளது. வனத்துறையும் எஸ்டேட் உரிமையாளர்களும் இணைந்து வால்பாறைக்கு நடுவே பாய்கிற நடுவார் சோலயார் ஆற்றின் இரண்டு பக்கமும் பத்து அல்லது இருபது மீட்டர் அளவுக்கு காடுகளை உருவாக்கினால் கூட போதுமானது. அதற்காக, வனத்துறையும் எஸ்டேட் உரிமையாளர்களும் இணைந்து செயல்பட வேண்டியதாயிருக்கும். தற்போது எங்களுடைய அமைப்பின் மூலமாக யானைகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். அதோடு எஸ்எம்எஸ் மூலமாகவும் யானைகள் இருக்கிற பகுதிகளை மக்களிடம் சொல்வதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்த்தும் வருகிறோம்” &lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;b&gt;காளிதாஸ் – ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #ffe599;"&gt;“விவசாயிகளுடைய அறியாமையே பல நேரங்களில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் முடிகின்றன. அதனால், யானைகள் குறித்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்து அறிவியல் பூர்வமாக அவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுதவிர வாழை, கரும்பு தவிர்த்து மாற்றுப் பயிர்களை பயிரிடவும் அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். யானைகள் விவசாயநிலத்தினும் புகுந்துவிட்டால் அவற்றை சமாளிக்கவும் அவர்களை தயார்செய்ய வேண்டும்” &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kcLDOAWe4ek/Tp0qexcDgLI/AAAAAAAABwg/GJd2wgPPuKQ/s1600/IMG_3177.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-kcLDOAWe4ek/Tp0qexcDgLI/AAAAAAAABwg/GJd2wgPPuKQ/s320/IMG_3177.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: #b6d7a8;"&gt;ஆதார உயிரினம் யானை (KEY STONE SPECIES)&lt;/div&gt;&lt;div style="background-color: #b6d7a8;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: #b6d7a8;"&gt;யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ அதை அப்படி அழைப்பது வழக்கம். அதாவது அவை மரங்க
