Pages

02 June 2008

தோனியின் சென்னையை வீழ்த்தியது வார்னேயின் ஜெய்ப்பூர்

இன்று நடந்த ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின , முதலில் ஆடிய சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 163 ரன்களை எடுத்தது , அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 20 ஆவது ஓவரின் கடைசி பந்து வரை ஆடி 164 ரன்களை எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது . ஆட்ட நாயகனாக யூசுப் பதானும் , தொடர் நாயகனாக பஞ்சாப் அணியின் சான் மார்சும் தேர்ந்தெடுக்கப் பட்டனர் . இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் அணி 1.2 மில்லியன் டாலர்களை பரிசுத்தொகையாக பெற்றது.
மந்தமான அரையிருதி ஆட்டங்களை போலன்றி இந்த ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருந்தது , ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்து கடைசி ஓவர் வரை பரபரப்புக்கு பஞ்சமின்றி ஒரு நல்ல போட்டியாக இருந்தது .
தொடக்கத்திலிருந்தே சென்னை அணியின் பீல்டிங் சுமாராகவே இருந்தது , சுரேஷ் ரெய்னா 2 கேட்ச்களை தவரவிட்டார் , ஆயினும் ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் சென்னை அணி விக்கெட்களை வீழ்த்த தவறவில்லை , இருப்பினும் ராஜஸ்தான் அணி மிக்க போராட்டத்திற்கிடையேயே வென்றது . சென்னை அணி இன்னும் 10 அல்லது 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்காலாம் . ஆட்டத்தின் ஒரு வேளையில் சென்னை அணியின் வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பிருந்தும் யூசுப் பதானின் அற்புதமான ஆட்டம் அதற்கு முட்டுகட்டையிட்டது .
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தலைவர் வார்னேயின் வியூகங்களும் வழிநடத்துதலும் அந்த அணியில் ஆடிய துடிப்பான இளைஞர்களின் மன உறுதியுமே காரணமாகும் .
கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் ,
எப்டியோ நம்ம புள்ளயாண்டானுங்க கீழ விழுந்தாலும் மண் ஒட்டாமதான் தோத்துருக்காய்ங்க , அது வரைக்கும் சந்தோசம் விட்ரா விட்ரா ............ எதோ இந்த டீம வச்சுகிட்டு பைனல்ஸ் வர வந்ததே பெர்சு ....