பீட்டர் பிரானா!

>> 07 September 2010




சினிமாவுக்கு போறதுன்னு முடிவெடுத்துட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்... அப்படி முடிவெடுத்துதான் பீரானா த்ரீ டி படத்துக்கு போறதுன்னு முடிவாச்சு. பீரானா த்ரீ டி படத்த பிவிஆர்லயோ எக்ஸ்பிரஸ் அவன்யூலயோ சத்யம்லயோ த்ரீ டி ல பாக்க ஆசதான். என்ன செய்ய கையில இருக்கற எழுவது ரூவாய்க்கு , அங்கெல்லாம் போனா ஒரு டீ கூட குடிக்க முடியாது! இந்த லட்சணத்துல மூனுடீயப் பத்தி சிந்திக்கமுடியுமா!


அதனால எப்பவும் பாக்கற பைலட்ல, தமிழ் டப்பிங்ல, முப்பது ரூவாவ குடுத்தோமா, ஸ்கிரீன்லருந்து மூணு சீட் தள்ளி , குந்த வச்சு உக்காந்து படம் பார்த்தமானு இருக்கறதுதான் என்னைமாதிரி பாவப்பட்ட சென்னைவாசிங்களுக்கு நல்லது! மாலுங்க எல்லாமே மாலு உள்ளங்களுக்கு மட்டுந்தான

ஏழு மணி ஷோவுக்கு ஆபீஸ்லருந்து அஞ்சு மணிக்கே போக என் தாத்தா என்ன கருணாநிதியா! இல்ல என் மச்சான் என்ன அழகிரியா! ஏழு மணிக்கு ஷோன்னாலும் ஆறு முப்பதுக்குதான ஆபீஸ்லருந்து கிளம்ப முடியும். கிளம்பினேன்.


ஓட்ட வண்டிய மிதிச்சி ஸ்டார்ட் பண்ணி டிநகர்லருந்து பைலட் தியேட்டர் போய் சேர அதிக பட்ச நேரம் பதினைஞ்சு நிமிஷம். ஈவ்னிங் டிராபிக்னா கூட பத்து நிமிஷம். என்ன ஆனாலும் தியேட்டருக்கு அஞ்சு நிமிஷம் முன்னால போய் சேர்ந்துரலாம். டிக்கட்ட வாங்கிட்டு, ஒரு தம்மப்போட்டுட்டு , வண்டிய ஸ்டான்ட்ல போட்டுட்டு போய் உக்கார்ந்த படம் போடறதுக்கு கரெக்டா இருக்கும்! இது பிளான்.


யெஸ் நீங்க நினைக்கறது அப்சலுட்டிலி கரெக்ட் ,. விதி வலியது! அதைவிடவும் வலியது சென்னை டிராபிக். எதிர்பார்க்க முடியாததை எதிர்பாருங்கள்னு பொடனில அடிச்சு சொல்லும்! சில சமயம் சி எம் கிராஸ் ஆவாரு, சில சமயம் அண்ணா சாலை மேம்பாலத்துல எந்த கார்க்காரனாவது எவன் மேலயாவது முட்டிகிட்டா டிநகர்ல டிராபிக் எகிறும். காரணமேயில்லாம அண்ணாசிலையிலருந்து மேம்பாலம் வரைக்கும் க்யூவுல நிப்பானுங்க.. டிநகர்ல புறப்படும் போதே கால் தடுக்குச்சு! ஆனாலும் தில்லா வண்டிய கிளப்பிக்கிட்டு சீறிப்பாஞ்சு அண்ணா மேம்பாலம் வரைக்கும் வளஞ்ச வளஞ்சு வந்து பார்த்தா நீ....ளமா டிராபிக்கு.


பீரானா..


சென்னையின் பிருமாண்ட டிராபிக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவனுக்கு இதெல்லாம் தூசியாச்சே! எப்படியாச்சும் அண்ணாசாலைய தாண்டி பீட்டர்ஸ் ரோடுக்கு போய்ட்டா அப்புறம் டிராபிக் இருக்காது. ச்சும்மா சீறிப்பாய்ஞ்சு சுறா மாதிரி (நாட் விஜய் மாதிரி , ஒரிஜினல் சுறா மாதிரி) எப்படியோ முக்கி முனகி திக்கி திணறி பாதி கிணறு தாண்டிட்டேன். அண்ணாசாலையதான் சொல்றேன். சத்யம் தியேட்டர் பின்னால ஒரு ரோடு போகும் பாருங்க , அதுக்கு பேருதான் பீட்டர்ஸ் ரோடு! அந்த ரோட்டுல ஈ காக்கா மட்டும்தான் இருக்கும்.. அது வழியாப்போய் எக்ஸ்பிரஸ் அவன்யூவ கடந்து ரைட் எடுத்தா ராயப்பேட்டை மணிகூண்டு.. அங்கருந்து ஸ்டிரைட்டா உட்டா பைலட் தியேட்டர். இதுதான் ரூட்டு!


சத்யம் தியேட்டர்ல படம் பாக்கற கார்க்காரனுங்க தொல்லைய கடந்துதான் எப்பவும் அந்த ரூட்டுல போய்த்தொலைய வேண்டியதாயிருக்கும். ஆனாப்பாருங்க அன்னைக்கு அவ்வளவா சத்யம் தியேட்டரான்ட கூட்டமே இல்ல. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.. டைம் பார்த்தேன் ஆறு நாப்பத்தஞ்சு! இன்னும் பதினைஞ்சு நிமிஷமிருக்கு.. எப்பவும் இல்லாம இன்னைக்கு ரொம்ப ஸ்பீடாவே வந்துட்டேன் போலன்னு , என்னோட வீரதீர சாகசங்கள நினைச்சு அப்படியே புளங்காகிதமடைஞ்சுட்டேன். எனக்கே லைட்டா சிலிர்ப்பாதான் இருந்துச்சு..


சிலிர்ப்போட சிலிர்ப்பா ஒரு சிரிப்போட சத்யம் தியேட்டர் புறக்காலி வழியத் தாண்டி பீட்டர்ஸ் ரோட்ல வண்டிய உட்டா.. ம்ம் .. என்னத்த சொல்ல ஒரு பயங்கர அதிர்ச்சி.. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குதானா இந்த ரோட்டுல டிராபிக் ஆகணும்.  ஆகிருச்சே! என்ன செய்ய..

எனக்கு முன்னால நாலு ஆட்டோ , ரெண்டு மினி லாரி, பின்னாடி ஒரு பஸ் , லெப்ட்ல மூணு பைக்கு, ரைட்டுல ஒரு ஆட்டோ , திரும்பிக்கூட போக முடியாத அளவுக்கு லாக் பண்ணி வச்சிருந்தானுங்க. கால் மணிநேரமாச்சு.. ம்ஹூம் முன்னால ஒரு இஞ்ச்கூட நகரல.. பக்கத்து ரோட்டு ஆட்டோகாரர் வண்டிய நிறுத்திட்டு வெளிய இறங்கி பீடிய பத்தவச்சுகிட்டு நின்னாரு. ண்ணா என்ன பிரச்சனைங்கணா என்றேன். புதுசா கட்டின எக்ஸ்பிரஸ் அவன்யூல அடுத்த ஷோ ஆரம்பிக்க போகுதுல அதான் கார்லாம் உள்ளே போகுதுப்பா.. அதான் டிராபிக்ன்னாரு..


பைலட் தியேட்டர்ல படம் பாக்கறவன்லாம் மனுஷன் கிடையாதாண்ணா என்றேன் அப்பிராணியாக.. அவரும் சோக முகத்தோடு ராஜா நீயும் பைலட்டுக்குதான் போறீயா என்றார்.. அவரும் அங்கேதான் போகிறார் போல.. பைலட்தியேட்டர்தான் ஆட்டோக்காரர்களின் சொர்க்கமாச்சே! பாவம் அவர்கிட்டயே ஒரு பீடிய வாங்கிப் பத்த வச்சுகிட்டு எட்டிப்பாத்தேன்.. எக்ஸ்பிரஸ் அவன்யூ வாசல்ல நாலஞ்சு கார் எடக்கு மடக்காக நின்னுகிட்டு ரோட்ட மறிச்சுகிட்டு மல்லுக்கட்டிக்கிட்டிருந்தாய்ங்க... இன்னைக்கு படம் பார்த்த மாதிரிதாம்டே மாப்ளேனு நினைச்சுகிட்டே புகைய குப்பு குப்புனு இழுத்து இழுத்து வுட்டேன்..


ஒரு வழியா டிராபிக் கிளியராகி ராயப்பேட்டை மணிகுண்டுகிட்ட வண்டிய திருப்ப.. மணிகுண்டுல டயம் 7.10! இதுக்கு மேல படத்தப்போய் பார்த்து அஞ்சாராச்சுனு பேசாம மணிகுண்ட சுத்திட்டு அப்படியே வீட்டப்பார்த்து போய்ட்டேன்.


விடிஞ்சுது! ஞாயித்துக்கிழமையாச்சே! இன்னைக்காச்சும் அந்த பீரானாவ பார்த்துரணும்னு கைல இருநூறு ரூவாவ எடுத்துகிட்டு தில்லா பிவிஆர் சினிமாஸ் போனேன். மூணு டில பக்கணும் 200ரூவாயாச்சும் வேணும்லா! 200 ரூவா எனக்கு ஒருநாள் கூலி! பரவால்லடா இன்னைக்கு பகட்டா ஒரு படத்த பார்த்துரணும்னு முடிவுபண்ணி கிளம்பினேன். உள்ளே போனா அடேங்கப்பா சொர்க்கம். வெளிய மழை.. லேசா மூச்சா முட்டிச்சு.. செக்யூரிட்டிகிட்ட பாத்ரூம் எங்கனு கேட்டு பாத்ரூம் பக்கமா போனேன். மறுபடியும் ஒரு சொர்க்கம்.


ஆனா பாருங்க அந்த மூச்சாபோற டாய்லெட்டுல தண்ணி வரல.. ஆனா சுத்தமா வாடையும் இல்ல.. தண்ணி திறந்து உடலாம்னா டாப்பையும் காணோம். வெளிய வந்து செக்யூரிட்டிகிட்ட கேட்டேன்.. ண்ணா உள்ள தண்ணியே வரலைங்கண்ணா என்னங்கண்ணா மேட்டர்ன்னேன். இந்த நுண்ணுயிரி கிருமி வச்சு அதுவா சுத்தம் பண்ணிக்குமாம்பா , தண்ணிய சேமிக்கணும்ல என்றார். ஓஓஓ என்று வாயை திறந்தவன் அப்படியே எல்லா மிட்டாய் கடையையும் பார்த்துகிட்டே , தானாவே ஏறி இறங்குற படிக்கட்டுல ஏறி இறங்கி.. தியேட்டர் கிட்ட வந்தேன். தண்ணித்தாகம்! தொண்டை அடைச்சுச்சு..

சுத்திமுத்தி பெரிய அண்டாவுல டம்ளர சங்கிலில வச்சு கட்டிவுட்டுருக்காய்ங்களானு தேடி தேடி தேடி தேடி.. ம்ஹூம் கிடைக்கல.. நம்ம தோஸ்த் செக்யூரிட்டிண்ணா இருக்காருல்ல.. ண்ணா தண்ணி.. என்றேன். தம்பி அந்த கடைல தண்ணி பாட்டில் கிடைக்கும் வாங்கி குடிச்சிக்கோங்கன்னாரு. கடையில தண்ணிபாட்டில் கேட்டேன் அரை லிட்டர் 12 ரூவாயாம்!


சுத்தியும் பார்த்தேன். நிறைய பீட்டர் பீரானாங்க 3டில  நூறு ரூவா காஃபிய குடுச்சிக்கிட்டிருந்துச்சு.. கார்ல வந்த பீரானா! காஃபி ஷாப் பீரானா! பீட்டர்ஸ் ரோட் பீரானா! என்னை முழுங்க வந்த பீரானா!


அன்புடன்
அதிஷா.

Read more...

கதவைத்திற கடவுள் வரட்டும்!

>> 31 August 2010





பக்திமான்

நம்ம சாமியார் நதிக்கரையோரம் , ஒரு பெரிய மரத்தடியில் ஆழ்ந்த தியானத்துல இருந்தாரு. அப்போ அந்தப்பக்கமா பையன் ஒருத்தன் வந்தான். கொஞ்ச நேரம் சாமியாரையே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தவனுக்கு என்ன தோணுச்சோ , அவரை புடிச்சு உலுக்கு உலுக்குனு உலக்க ஆரம்பிச்சான். பாவம் சாமி அதிர்ச்சில அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

‘’யார்டா ராஜா நீ.. என்னாத்துக்குடா என்னைப்போட்டு இந்த ஆட்டு ஆட்டுற’’ என்று அப்பாவியா கேட்டாரு.

‘’சாமி நீங்க தியானத்துல இருந்தீங்களா உங்கள பார்த்ததும், எனக்கு அப்படியே ஆன்மீகத்து மேல ஈடுபாடு வந்திருச்சு.. எப்படியாச்சும் உங்கள மாதிரி பெரிய சாமியார் ஆகி ஆன்மீக கடல்ல குதிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன், அதான் உங்க கிட்ட சிஷ்யனா சேரலாம்னு’’ என்று மண்டைய சொரிஞ்சான்.

சாமிக்கு ஒன்னும் புரியல.. யார்ரா நீ.. நானே இப்பதான் லேசா கண்ணசந்தேன்.. அதுக்குள்ள என்று மனதில் நினைச்சுகிட்டே ‘’ ஏன்டா ராஜா ஒனக்கு எதுக்கு இந்தமேரி ஆசைலாம்.. எதாச்சும் ஃபிகர பார்த்தமா ரூப்போட்டமானு , ஜாலியா இருந்தமானு இருக்கலாம்ல’’ என்றார்.

‘’அட நீங்க வேற சாமி, எனக்கு கடவுள் மட்டுமே போதும்.. சோறு கூட வேண்டாம்.. அவ்ளோ பக்திமான் சாமீ நானு’’ என்று அடுத்த குண்டைத்தூக்கிப்போட்டான்.

ஆஹா நாம போலி சாமியார்னு நினைச்சிட்டானோ என்று நினைத்தவர் , டபால்னு குதிச்சு அவன் கழுத்தை புடிச்சு தரதரனு இழுத்துகிட்டே போய் அவன ஆத்துல பொட்டு முக்கு முக்குனு முக்க ஆரம்பிச்சிட்டாரு! பாவம் அந்த பையன் ஆவ் ஊவ் ஆவ் ஊவ் னு கத்திகிட்டு, கையையும் காலையும் உதைக்க ஆரம்பிச்சிட்டான்.. நம்ம சாமியார் இப்பதான் சாமியார்.. இதுக்குமுன்னால பெரிய ரவுடியா இருந்தவரு.. பலசாலி.. வச்சு நல்லா தண்ணிக்குள்ளேயே அமுக்கிட்டாரு.. கொஞ்ச நேரம் கழிச்சு அவனை தூக்கி நிறுத்தினாரு.. ஆஆ.. ஊஊ..ம்ம் னு விதவிதமா மூச்சு விட்டான்.

அவன் ஆசுவாசமாக கொஞ்ச நேரமாச்சு. அவன் ரொம்ப டென்சனாகி ‘’ என்ன சாமி இப்படி பண்ணீட்டீங்க.. செத்தே போயிப்பேன்’’ என்ற திட்ட ஆரம்பித்தான்.

சாமியார் கேட்டாரு ‘’ராஜா தண்ணிக்குள்ள முக்கினேனே.. அப்போ உனக்கு எது ரொம்ப ரொம்ப அவசியமா இருந்துச்சு’’

கொஞ்ச நேரம் சாமியாரை அடித்துவிடுவதைப்போல முறைச்சுகிட்டே ‘’ ம்ம்.. காத்துதான்’’ என்றான் சிடுசிடுப்போட..

சாமியார் சிரிச்சாரு ‘’ உனக்கு என்னைக்கு காற்றை விட கடவுள் முக்கியமா இருக்காரோ அப்போ வா.. உன்னை சிஷ்யனா சேத்துக்கறேன்.. அதுவரைக்கு இந்த ஏரியா பக்கம் வந்த மவனே தண்ணிக்குள்ள அமுக்கியே கொன்னுருவேன் ஓடிப்போயிரு’’ என்றார்.


**********

ஞானம் டீ ஸ்டால்!

நம்ம சாமியார் எப்பவும் சிஷ்யர்கள் கிட்ட ஞானம் பத்தி பேசுறப்பவும், ஒரு டீ மாஸ்டர் பத்தி பேசிட்டே இருப்பாரு. அந்த டீ மாஸ்டருக்கு தன்னை விடவும் ஞானம் அதிகம்னும் சொல்லுவாரு.

அந்த டீ மாஸ்டர் சென்ட்ரல் ஸ்டேஷன் கிட்ட டீக்கடை வச்சிருந்தாரு. சிஷ்யங்களுக்கு செம காண்டாகிருச்சு. என்னங்கடா இது ஒரு சாதாரண டீ மாஸ்டருக்கு நம்ம சூப்பர் சாமியார விட ஞானம் ஜாஸ்தியா அப்படி என்னதான் அந்தாளுகிட்ட இருக்குனு பார்த்துட வேண்டியதுதானு முடிவு பண்ணி டிரெயின் ஏறி போய் சென்ட்ரல் ஸ்டேஷன் போனாங்க!

டீக்கடைக்கு போனவங்க , கடைக்காரர் வாங்க வாங்கனு வரவேற்று , டீ போட்டு குடுத்தாரு. இவனுங்க டீயக்குடிக்காம , ஆமா நீங்க பெரிய ஞானியாமே , உங்களுக்கு எப்படி ஞானம் கிடைச்சுது, உங்க குரு யாரு.. இப்படி நையி நையினு எதையாச்சும் கேட்டு பிணாத்திகிட்டே இருந்தானுங்க.. மாஸ்டர் கடுப்பாகி.. அவனுங்க கையிலருந்த டீ கிளாஸ புடிங்கிட்டு.. டேய் லூசுங்களா மரியாதையா ஓடிருங்க , இந்த ஏரியாப்பக்கம் உங்கள பார்த்தேன்.. மவனே கொன்னுருவேன் என்று அடித்து விரட்டி விட்டார்.

சிஷ்யப்புள்ளைங்கதான் பேஜாரான பசங்களாச்சே! விடுவானுங்களா மாறுவேஷத்துல போனானுங்க , அப்பவும் அந்தாளு கண்டுபுடிச்சு அடிபின்னு பின்னுனு பின்னி , ரத்தகளறியாக்கி திருப்பி அனுப்பினாரு.. சிஷ்யனுங்க நொந்து போயி.. அடப்போங்கடா நீங்களும் உங்க ஞானுமும்னு நம்ம சாமியார்கிட்டயே திரும்பி வந்தானுங்க!
சாமியார் கேட்டாரு ’’என்னப்பா , ஞானம் கிடைச்சுதா’’

‘’இன்னா சாமி கிண்டலா! நாங்களே அடிவாங்கி மூக்கு மொகரையெல்லாம் பேந்து போய் வந்திருக்கோம்’’ என்றனர் கோரஸாக!

‘’ஏன்ம்பா என்னாச்சு?’’ என்றார் சாமியார். நடந்ததையெல்லாம் சொன்னாங்க சிஷ்யனுங்க!

‘’என் பேர சொன்னீங்களா?’’

‘’சாமி! அதுவரைக்கும் பேசிட்டுதான் இருந்தான் அந்தாளு.. உங்க பேர சொன்னதுக்கப்பறம்தான் அடிபின்னிட்டான்.. நாங்க இப்போ கொஞ்சம் வீக்கா இருக்கோம் , உடம்பு சரியாகட்டும் முதல்ல உங்களுக்கு அப்புறம் அந்த டீமாஸ்டருக்கு’’ என்று கொதித்தனர்.

‘’அப்படீனா அந்த கடைல நீங்க டீயே குடிக்கலையா’’ என்றார் சாமியார்.

Read more...

வெள்ளிங்கிரி - 4

>> 27 August 2010


வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சாப்பாட்டுக்கு பிரச்சனையே கிடையாது. கையில் அஞ்சுரூவா கூட இல்லாமல் ஒரு மாதம் வரைக்கும் கூட அடிவாரத்திலேயே வசதியாக வாழமுடியும். மாசி முதல் சித்திரை வரைக்கும்தான் இந்த வசதி.  அடிவாரத்தை ஒட்டி ஒன்றிரண்டு ஹோட்டல்கள் இருந்தாலும், யாராவது சற்றே அதிகமான மானம்,ரோசம் உள்ளவர்கள் மட்டுமே அங்கே சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.. எங்களுக்கு எப்போதும் அன்னதானம்தான் மூன்று வேளையும். அதனாலேயே மலையேறி இறங்கியபின்னும் விடாப்பிடியாக இரண்டு மூணு நாட்கள் இருந்து சாப்பிட்டு அடிவாரத்தைசுற்றியே புரண்ட பின்பு செல்வது வழக்கம். மூன்று நாளும் கோவிலை சுற்றியுள்ள எந்த இடத்திலும் படுத்து உறங்கலாம். அருகிலிருக்கும் சின்ன சின்ன சுனைகளில் குளித்து புண்ணியம் தேடலாம்.

அடிவாரத்தில் காலையிலிருந்து இரவு வரைக்கும் தொடர்ந்து அன்னதானங்கள் நடந்து கொண்டே இருக்கும். அடிவாரத்தில் பத்திரச் செட்டியார் மடம், தேவர் மடம், புரவிப்பாளையம் மடம், சுக்கிரப்ப கவுண்டர் மடம், பட்டிபோயன் மடம், ஓக்கலிகர் மடம் என்று வரிசையாக பல மடஜாதிகளும் பந்தி போடுவார்கள். சித்திரை மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அன்னதானக்குழுக்கள் இங்கே ஓசிசோறு போடுவது தனிச்சிறப்பு. ராஜஸ்தானிலிருந்து கோவையில் முன்னெப்போதோ இடம்பெயர்ந்த ஒரு குழு உண்டு. பிரத்யேகமான சாப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். மூன்று நாள் அவர்களுடைய குழுவிலிருந்து வேளைக்கு பத்து குடும்பமாக விமரிசையான ஸ்பெசல் அன்னதானம் போடுவார்கள். அவர்களுடைய அன்னதானத்திற்குதான் கடுமையான அடிதடியெல்லாம் நடக்கும். பிச்சைக்காரர்களுக்கும் எங்கள் குழுவுக்குமிடையே கடுமையான தள்ளுமுள்ளும் மோதலும் நிறைந்திருக்கும். முதல் இரண்டு பந்திகளில் உட்கார்ந்தால்தால்தான் எல்லா ஐட்டங்களும் கிடைக்கும். மூன்று நான்கென்றால் வெறும் இலையை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். நாங்கள்தான் எப்போதும் அவர்களை வென்றிருக்கிறோம். சிலமுறை அவர்களுடைய நீண்ட கம்பினால் அடிவாங்கியதும் உண்டு. எங்கள் அளவிற்கு அந்த நீண்ட வெள்ளைதாடி பிச்சைகார சித்தர் சாமிகளுக்கு  டேலன்ட் பத்தாது.

வெள்ளிங்கிரி மலை பிச்சைகாரர்களை, பிச்சை எடுப்பவர்கள் என்று சொன்னால் விபூதியை வீசி சாபமிட்டுவிடுவார்கள். ஒரு முறை என்னை அடுத்த ஜென்மத்தில் எலியாக பிறந்து பூனையின் வாய்க்கு உணவாவாய் என்று ஒரு சித்தர் சாமி சாபம் கொடுத்துவிட.. ரெண்டு நாள் கனவெல்லாம் பூனை! விதவிதமான சாபங்கள் கொடுத்தாலும் எங்கிருந்துதான் கஞ்சாவை கவர்ந்துவருவார்களோ தெரியாது.. ஒருவேளை மலையிலேயே எங்காவது பதியம் போட்டு வளர்த்து காயவைத்து புகைக்கிறார்களோ என்னவோ.. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கஞ்சா காசிக்குப் பிறகு வெள்ளிங்கிரியில்தான் கிடைக்கிறது என்பார் சித்தர் ஒருவர். அருகில் போய் சாமீஈஈஈஈ... ஒரு இழுப்பு... என்று மண்டையை சொரிந்தால் அள்ளித்தருவதில் வல்லவர்கள். கொழந்தப்பசங்களா.. இந்தாங்கடா என்று ஒரு முழுப்பொட்டலத்தையும் கூடவே ஒரு சிகரட்டையும் இனாமைத்தருவதில் பிச்சைக்கார வள்ளல்கள் இந்த சித்தர்கள்.

ஆனால் அடுத்த வேளை அன்னதானத்தில் அவர்களுக்கு நல்ல சௌகரியமான இடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். மூன்று ஆள் உணவை ஒரே ஆள் சாப்பிடுவதைப்பார்த்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதியை அள்ளிப்பூசிக்கொண்டு கபாலத்தோடு கட்டாந்தரையில் கவிழ்ந்துவிடுவார். கிங்ஸ் மட்டுமே புகைக்கும் சித்தர்கள் கூட உண்டு. வில்ஸ் அடித்தால் பனிபெய்றதாலே தொண்டை கமறும் என்பார். அப்போ பீடிலாம் என்றால்? அதெல்லாம் சாதாரண மானிடர்கள் அடிக்கறதப்பா என்று சீன்போடும் சித்தர்கள் ஏராளம்.

வெள்ளிங்கிரியில் நடைபெறுகிற தொடர் அன்னதானங்களுக்கு பின்னால் ஒரு கதை உண்டு! வெள்ளிங்கிரி மலையில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் 1000 பேருக்கு அன்னதானம் செய்தமைக்கான ஸ்பெசல் அதிரடி ஆஃப்ரை ஆண்டவன் வழங்குவதாக கோவைக்கு அருகிலிருக்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் புராணம் ஒன்று சொல்லுகிறது. அதனால்தான் ஆண்டுதோறும் இந்த அன்னதான மேளா என்கின்றனர் என்னுடைய நண்பரான நீண்ட வெள்ளைதாடி செல்போன் வைத்திருக்கும் சித்தர்.



இந்த பேரூர் புராணம் இதை மட்டும் சொல்லவில்லை.. வெள்ளிங்கிரி மலையின் நான்காவது மலைக்காட்டில் கிடைக்கும் அரிய வகை மூலிகளைகளான மாங்கிசபேதி,அங்கிசபேதி,அயபேதி,அன்னபேதி முதலான மூலிகைகளின் மூலம் எப்பேர்ப்பட்ட வியாதியையும் குணப்படுத்தமுடியும் என்றும் சொல்லுகிறதாம். இதுபோக ஆறாவது மலையின் முக்கிய இடமான ஆண்டிசுனையில் நீராடி அதில் ரெண்டு மடக்கு நீர் குடித்தால் சகலரோகங்களும் நிவர்த்தியாகும் என்கிறது அப்புராணம்.. ஆய் போனால் கழுவவும்.. குளித்துவிட்டு ஜட்டியை துவைக்கவும், சிறுநீர் கழிக்கவுமாக , சுனையை சுற்றியுள்ள பகுதிகளை நாறடித்து வைத்திருந்தாலும்.. அந்த இயற்கையான ஊற்றின் குளிர்ச்சி அதையெல்லாம் மறக்கச்செய்யும். உள்ளே இறங்கினால் உடல் விரைத்துப்போகும். அதில் குளித்து முடித்து வெளியேறினால்.. லிரில் சோப்புப் போட்டு குளித்தால் கிடைக்குமே அதே புத்துணர்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

இத்தனைக்கும் அந்த நீரை அருகிலிருக்கும் லேபில் கொண்டு போய் கொடுத்தால் ஒரு கோடி வைரஸாவது இருக்கும். ஆனால் இதுவரை அதில் குளித்து யாருக்கும் எந்த தீங்கும் நேர்ந்ததாய் தெரியவில்லை.

************
முந்தைய மூன்று பாகங்கள் இங்கே

 பாகம் - 1
 பாகம் - 2
 பாகம் - 3


படம் உதவி நன்றி - http://imsaiilavarasan.blogspot.com , மற்றும் கூகிள்.

Read more...

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP