Pages

13 July 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!





ஒரு குட்டித்தத்துவம் -

''பெண்களும் பிரச்சனைகளும் மணியும் ஓசையும் மாதிரி அடிக்கு ஏத்த மாதிரி ஓசை கேக்கும் '' -


BY அகில உலகப்புகழ் அதிஷானந்தா!


***************


எத்தனை நாள் ஆகிவிட்டது இப்படி ஒரு கிரிக்கெட் ஆட்டம் பார்த்து. கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ச்சியான டி20 ஆட்டங்கள் ஒரு வித சலிப்பையும் கடுப்பையுமே தந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் ஆஷஸ் தொடர் ஆரம்பமானது. முதல் டெஸ்ட் போட்டி நேற்றோடு முடிந்தது. மிக அருமையான ஆட்டம். ஐந்து நாளும் ஆராவாரம். ஆஸி வெற்றியின் விளிம்பை முத்தமிட்டு திரும்பியது. இங்கிலாந்து கடைசி பந்து வரை போராடி ஆட்டத்தை டிரா செய்தது. என்ன விறுவிறுப்பு. எத்தனை பொறுப்பான ஆட்ட முறை. எத்தனை நுணுக்கமான களப்பணிகள். எக்ஸலன்ட்.

டி20 தன் ஆட்ட அளவில் சிறந்ததாக இருந்தாலும் அது ஒரு விபச்சாரியிடம் செல்வதைப்போன்றதாகவே படுகிறது. உடனடி ஆறுதல். மற்றபடி டெஸ்ட் ஆட்டங்களே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனின் முழுத்திறமையையும் வெளிக்கொணரும் மற்றும் அதீத ஆட்டத்திறனும் தேவைப்படுகிற ஒரு ஆட்டமாகவே கருதுகிறேன். டெஸ்ட் ஆட்டங்கள் மனைவியோடு ஆடுவதைப்போல. ஆடிக்கொண்டே இருக்க அதீத பொறுமையும் ஆற்றலும் திறமையும் தேவை. கொஞ்சம் பிசகினாலும் காலி.

ஆஸி அணியின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால் மிக எளிதாய் எந்த சுப்பனும் குப்பனும் முனியனும் சொல்லிவிடலாம். அந்த அணியின் மட்டமான பந்து வீச்சுதான் என்று. நம்மூரில் பல காலம் ஆடிய அதி அற்புத பந்து வீச்சாளர் அகார்கர் போலவே நான்கு பேரை வைத்திருக்கிறார் பாண்டிங். தேவையானபோது தேவைகளை தீர்க்கும் வார்ன் , மெக்ரா போன்றவர்கள் அல்ல அவர்கள். அதுவே பிரச்சனை. மற்றபடி மிக அருமையான ஆட்டம் அந்த முதல் டெஸ்ட். முடிந்தால் கட்டாயம் ஹைலைட்ஸ் பாருங்கள் நல்ல விறுவிறுப்பு.

இப்படி ஒரு டெஸ்ட் இங்கே நடக்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிரிலங்கா அந்த அணியை 90 ரன்களுக்குள் சுருட்டி வீசியது இன்னும் பிரமாதமாக இருந்தது. இன்னொரு பக்கம் டெஸ்ட் ஆட்டங்களில் சுமாரான பங்களாதேஷ் அணி வெஸ்ட் இன்டீசுக்கு இணையாக விளையாடிக்கொண்டிருக்கிறது.

டெஸ்ட்டுனா டெஸ்ட்டுதான்..

***************


பதிவுலக மக்களுக்காக ஒரு குட்டி வீடியோ (கடைசி இரண்டு பதிவுகளிலும் வீடியோ சேர்த்தமையால் இது ஹாட்ரிக் வீடியோ ) இதை பார்த்தும் சிரிக்கலாம். இந்த வீடியோவுக்கும் சமீபத்திய வலையுலக மக்களின் பிரச்சனைகளுக்கும் ஒரு எழவு கருமாந்திர தொடர்பும் இல்லை இல்லை இல்லை.



மிக நல்ல பிரிண்ட்டு. இத பாத்தாவது திருந்துங்க மக்கள்ஸ்.


*****************

சனிக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நமது அன்பு அண்ணன் சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்புநீ படம் பார்த்து தமிழகத்தில் பலருக்கும் ஆண்மைக்குறைவு , விரைவீக்கம் , மூலம் , பௌத்திரம் முதலான பிரச்சனைகள் உருவானதாய் பல நேயர்களும் ( இனிமே வாசகர்கள்னு சொல்ல மாட்டேனாக்கும் ) கருத்து தெரிவித்திருந்தனர். முழுப்படத்தையும் பார்த்து மகிழ்ந்த அனைத்து எங்கள்குல சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

படத்திற்கு நடுவே சாம் ஆண்டர்சன் படம் குறித்து நிறைய கூறினார். அதில் முக்கியமானது.

''இந்த படம் நம்ம இயக்குனரோட 35 வருஷ கனவு லட்சியம் , 35 வருஷமா இந்த கதைய மனசுக்குள்ளயே வச்சிருந்து , அதுக்காக ரொம்ப கஸ்டப்பட்டு இந்த படத்த எடுத்து ரிலீஸ் பண்ணாரு.. படம் முழுக்க ஒவ்வொரு காட்சிலயும் அவரோட உழைப்ப நீங்க பாக்கலாம்.. ''

''அல்லேலுயா ''


*****************

கவிஞ்சர் தபூ சங்கர போன வாரம் ஒரு சூட்டிங்கில் சந்திக்க முடிஞ்சது. அவரோட கவிதை புக்குலாம் பாத்திருக்கேன். ( ஒன்லி பாத்திருக்கேன் ) . திடீர்னு இயக்குனர் ஆகிட்டாராம்.

''வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்'' பட சூட்டிங் எம்.ஜி.எம் ரிசார்ட்டில் நடந்துகொண்டிருந்தது.

படத்தின் ஹீரோ குங்கும்பபூவும் கொ.புறாவும் பட ஹீரோ ( பேரு தெரியல )

ஹீரோயின் யாரோ. (ரொம்ப சுமாரான பிகர்தான், ஸ்கிரீன்ல அழகா தெரிவாங்களோ என்னவோ )

மத்தபடி படத்தோட டைட்டில் ரொம்ப புடிச்சிருந்தது.

சரி இந்த பட டைட்டில ஒரு பொண்ணுகிட்ட சொன்னா என்ன சொல்வாங்கனு டிரைபண்ணி பார்த்தேன்.

அவங்க சொன்னாங்க.. போலீஸ்ல ஈவ்டீசிங்னு கம்ப்ளைன்ட் தருவேன்னு.

மீ த எஸ்கேப்பு.

**********************

சமீபத்தில் டுவிட்டரில்..

- நாரதர் கலகம் நன்மையில் முடியுமாமே?

-நாரதரா! யோவ் நீயே ஒரு நாரதர் தானய்யா?

-ஹலோ நான் சொல்றது கைல வீணைலாம் வச்சிட்டு குடுமி வச்சிருப்பாரே அந்த நாரதர்.. contd
நாரதர் நாராயணானு சண்டை மூட்டிட்டு போயிடுவாரு சிவபெருமான் பக்தன் டவுசர கழட்டிட்டு எல்லாம் என் திருவிளையாடல்ம்பாரு

-அட வீணை வச்சிருக்கறது சரஸ்வதிய்யா.. நாரதர் வச்சுருக்கறது வேற!

-ஹலோ அது பெரிய வீணை மடில வச்சு செய்றது! நாரதரோடது சின்ன வீணை கைல புடிச்சு செய்றது

-டிங்!

***********

இந்த வாரம் புதன் கிழமை என்ன விசேசம்?

சரியான பதில் அளிக்கும் முதல் பத்து நேயர்களுக்கு எனது பின்னவீனத்துவ புத்தகமான ''சரசு கொஞ்சம் உரசு '' உடனடியாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

பின்னூட்டத்தில் உங்க மெயில் ஐடியை தெரிவிக்கவும். அல்லது dhoniv@gmail.comக்கு ஒரு மடலை தட்டிவிடவும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


************

வர்ட்டா!