27 May 2008
சீனாவின் இன்றைய நிலை - சித்திரப்பதிவு
26 May 2008
உண்மைத்தமிழனின் '' புனிதப்போர் '' : குறும்பட விமர்சனம்
ஆரம்ப காட்சி ஒரு மேடையிலிருந்து துவங்குகிறது , அங்கே ஆறு ஆண்கள் வந்து அமர படம் துவங்குகிறது . முதலில் ஒருவர் ( யார் கண்ணன் ) பேச துவங்குகிறார் , அவர் நாட்டில் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துவிட்டதாகவும் , அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் , ஆண்களே உயர்ந்தவர்கள் என்றும் , அதற்காத்தான் இங்கே நாம் கூடியுள்ளோம் எனக் கூறி அமர்கிறார் . அடுத்தடுத்து வருபவர்களும் அதை முன்மொழிவதோடு பெண்கள் மூட்டைப்பூச்சிகள் , நசுக்கப்படவேண்டியவர்கள் , அவர்களுக்கு பாவம் பார்த்தால் நம்மை அழித்து விடுவார்கள் , பெண்கள் எப்போதும் ஆண்களை விட தாழ்ந்தவர்கள், நம் துன்பங்களுக்கு அவர்களே காரணம் என ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்கின்றனர் . இவ்வாறு ஒவ்வொருவராக பேசி அமர அவர்களுக்கு முறையே மோர்,இளநீர்,பெப்சி,கோக் தரப்படுகிறது . அந்த வரிசையில் கடைசியாக ஒருவர் பேசுகிறார் , அவர் பெண்களை பற்றி உயர்வாக பேசுகிறார் , பெண்கள் சிறந்தவர்களென்றும் அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்றும் பேச சக பேச்சாளர்கள் அதிருப்தி அடைகின்றனர் , அவர் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது இருக்கையில் அமர அவர் முன்னால் சில பாட்டில்கள் வைக்கப்படுகிறது , '' மவனே இப்டியே பேசின உனக்கு ஆசிட்தான் '' என கூட்டத்திலிருந்து ஒரு ஒலி கேட்க , படம் முடிகிறது .
இப்படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது படத்தில் யாருடைய முகமும் காட்டப்படவில்லை , நடிகர்களது உடலசைவுகளும்,அவர்களது வாயும் மட்டுமே காட்டப்படுகிறது . படம் பார்த்த எல்லோருக்குமே அது பிடித்திருக்கும் என எண்ணுகிறேன் . அதே போல் ஒவ்வொரு முறை குளிர்பானங்கள் வைக்கும் போதும் நம் மனதிலொரு சிறிய சஸ்பென்ஸ் இழையோடுவது மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது . அந்த முகமறைப்பு ஒளிப்பதிவு யுக்தியும் அருமை .இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது . அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம் )மற்றபடி படம் அருமையாக உள்ளது . உண்மைத்தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
எந்த ஒரு கலைஞனுக்கும் சரியானதொரு களம் அமையும் வரை அவனது திறமைகள் வெளியுலகிற்கு தெரிவதில்லை .
நம் சக பதிவரின் குறும்படத்தை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நன்றிகள்
24 May 2008
21 May 2008
சென்னை வலைப்பதிவருங்க சந்திப்பு 18.05.2008
சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 18.05.2008
வலைப்பதிவருங்க சந்திப்பு சென்னைல நடக்கப்போறது எனக்கு 18ம் தேதி சாயங்காலம் வரைக்கும் தெரியாது , ஒரு வாரமா கொஞ்சம் வேலை அதனால தமிழ்மணம் பக்கமும் தல வைக்கல,சந்திப்பு மேட்டரும் தெரியாது , ஒரு நாலரை மணிக்கு பாலாண்ணாகிட்டருந்து கால் , தம்பி கிளம்பிட்டியானு !! எனக்கு டூமில்னு இருந்துச்சு !!! எங்கனு கேட்டா ............ சந்திப்பு , காந்தி சிலைங்கறாரு , நான் , அண்ணே என்னணே சொல்லவே இல்லனு சொன்னதும் ஒகே பரவால உடனே கிளம்பி வானுட்டாரு .
'' மு.க'' னா '' மு.கருணாநிதி '' ஐயா இல்லீங்கோ நம்ம வலைக்கலைஞர் முரளிகண்ணன்ங்க , அடடா நம்மாளுனு மனசு மஜாவாய்டுச்சி .
அவருகிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டே லெப்டுல பாக்கறேன் அமைதியே உருவாய் அஜித்க்குமார் மாதிரி டீக்கா நம்மாளு டோண்டு சார் ( அப்பாடா அஜித்த பழி வாங்கியாச்சு!!!!!!! ;-) ) அவருக்கு ஒரு நமஸ்காரத்த வச்சிட்டு ,அவரோட கொஞ்ச நேரம் அளவளாவிட்டு , மறுபடியும் நம்ம முக கிட்ட அவால்லாம் யாருனு கேட்டேன் .
கோ.க அவங்கூரு சாக்லேட் குடுத்தாரு , நம்ம வலைப்பதிவுங்க மாதிரியே இருந்துச்சு ( வாயிலப் போட்டதும் கரைஞ்சிருச்சு ) , ஜ்யோவ்ராம் சாரும் அதியமான் அண்ணாவும் வளர்மதி சாரும் சீரியஸா எதோ பேசிட்டுருந்தாங்க ( ஆஹா மறுபடியும் சீரியஸா !!!!!!!!!!) உடனே அங்கருந்து எஸ் ஆகி லக்கிய கூட்டிக்கிட்டு தம் கட்ட கிளம்பினேன் .