Pages

23 June 2008

15 ஆண்டுகள் லீவு எடுக்காத அபூர்வ ஈரோடு மாணவி

முதலில் செய்தி ; http://dinamalar.com/fpnnews.asp?News_id=1106&cls=row4
மேலே கொடுக்கபட்டுள்ள சுட்டியை சொடுக்கி அந்த செய்தியை படித்துவிட்டு மேலே தொடரலாம் .

இன்றைய தினமலரில் இப்படியொரு செய்தி , பார்த்தும் அதிர்ச்சியாக இருந்தது , விடுமுறை எடுப்பது தவறான காரியமா , விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்லுதல் சாதனையா என்பன போன்ற கேள்விகள் மனதில் எழுந்தன .

இம்மாணவியை அமைச்சர் ராஜா மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமியும் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று பாராட்டியும் உள்ளனர் . அந்த பெண்ணின் சாதனை நிச்சயம் பாராட்டதக்கதே இருப்பினும் , அந்த பெண் , தான் இது போன்றதொரு சாதனையை செய்ய தன் தாயின் தூண்டுதலே காரணம் என்கிறார் .

இது போன்றதொரு செய்தி மற்ற பெற்றோரும் தத்தமது குழந்தைகளையும் இது போல ஒரு சாதனைக்கு தூண்டலாம் . இதனால் குழந்தைகள் பெற்றோரின் ஆர்வத்திற்கு பலியாகும் வாய்ப்புள்ளது . ஏற்கனவே பக்கத்து வீட்டு குழந்தை முதல் ரேங்க் வாங்கினால் தன் மகனோ மகளோ அதே போல் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற மனோபாவம் இன்னும் எல்லா பெற்றோருக்கும் இருந்து வருகிறது . அதை யாரும் மறுக்க இயலாது .

நம் வாழுவின் சில தருணங்களில் குழந்தைகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் , அப்போதுதான் நம் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் சமுதாய மாற்றங்களும் அவர்களுக்கு தெரியவரும் . 15 வருடங்கள் என்பது அக்குழந்தையின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு , அதை நான்கு சுவற்றின் உள்ளேயே கழிக்கின்ற துன்பம் நம் அனைவரும் அநுபவித்ததே . அதற்காக விடுமுறை எடுப்பது சரியென்று கூறவில்லை , நம் வாழ்வின் மிக முக்கிய தருணங்களில் குழந்தைகள் நம்மோடு கட்டாயம் இருக்க வேண்டும் . அத்தருணங்களில் விடுமுறை தவறல்ல .

இது என் தனிபட்ட கருத்தே .