
'' டேய் மாப்ளே!!! என்னடா எப்படி இருக்கே , ரொம்ப நாளா ஆளும் இல்ல , போனும் இல்ல , உயிரோடதான் இருக்கியா!!!! '' சோகமாய் வினவினான் விஜய் .
'' இல்ல மச்சி , கொஞ்சம் பிஸிடா !! அதான் , எப்படி இருக்கே , அம்மா எப்படி இருக்காங்க , ஸாரிடா மாப்பி, போன் பண்ண்னும்னு நெனைப்பேன் அப்புறம் மறந்துருவேன் , '' கெஞ்சும் தோரணையில் அஜித் .
'' ஏன்டா நல்லாதான இருந்த என்ன ஆச்சு , என் மேல எதும் கோபமா , நான் எதும் தப்பா பேசிட்டனா , அப்படி எதும் பேசிருந்தா மன்னிச்சுர்ரா !!! ''
'' ச்சீ அப்படிலாம் ஒன்னுமில்லடா , நான் இந்த வலைப்பதிவுலாம் எழுத ஆரம்பிச்சுருக்கேன் , அதுல என்னோட கதை கவிதை விமர்சனம்லாம் எழுதறேனா அதான்டா , நிறைய யோசிக்க வேண்டி இருக்கு ''
'' வலைப்பதிவுனா?''
'' பிளாகுடா , நீ கூட ஏரிவாயன்னு ஒரு இங்கிலீஷ் பிளாகு வச்சிருக்கியே அது மாதிரி இது தமிழ்டா , தமிழ்ல வலைப்பதிவு ''
''ஸோ வாட் ''
''அதுதான்டா !! நிறைய யோசிச்சு எக்க சக்கமா எழுதறேன் , என்னோட கதை கவிதைலாம் கூட இருக்கு மாப்பி !! என்க்கு புனைப்பெயர் கூட இருக்குடா , ஜாம்பஜார் ஜக்குனு , என் வெப்சைட் அட்ரஸ் ஜக்குபாய் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்டா மறக்காம பாருடா''
'' பாக்குறேன்டா , கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறம் பேசறேன் மச்சி , பாய்டா '' '' பாய்டா மாப்பி'' அஜித் மனதுக்குள் பரபரப்பாக இருந்தது விஜய் தன் வலைப்பூவை பார்த்து விட்டு என்ன சொல்ல போகிறானோ என்று .
'' மச்சி விஜய் பேசறேன்டா !! ''
''சொல்லு மாப்பி ''
''மச்சி உன் பிளாக் பார்த்தேன்டா , நல்லாருந்துச்சி , பட் எனக்கு தான் ஒன்னும் புரியல ''
'' ஏன்டா , என்னாச்சு''
''நீ என்னமோ எழுதிருக்க , ஆனா பரவால்ல , நைஸ் , யாராவது வந்து பாக்குறாங்களா , ??''
அஜித்துக்கு என்னவோ போல் இருந்தது .
'' இது வரைக்கும் 2000 பேர் வந்து பார்த்துருக்காங்க மச்சி , ஆனா யாருமே கமெண்ட்ஸ் போட மாட்டேங்கிறாங்க , தமிழ்மணம்னு ஒரு திரட்டில போட்ருக்கேன் , அது மூலமா , வரவங்கதான் , தினமும் எப்படியாவது ஒரு பிளாக் போட்ருவேன்டா , ரெகுலரா அப்டேட் பண்ணிருவேன் , பட் தினமும் 20 பேர் தான் வராங்க , ரெண்டு நாளாதான் ஒன்னும் போடல , போஸ்ட் போட ஒரு மேட்டரும் கிடைக்கல மச்சி ''
'' சரி உன் பிளாக்ல நான் கமெண்ட் போடறேன் என் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி கமெண்ட் போட சொல்றேன் ஓகேவா , யூ டோண்ட் வொரி ,'' , '' தேங்கஸ்டா மச்சி ''
'' ஒகே உன் லவ்வர் கீதா எப்படி இருக்காடா , '' ,
''மச்சி நான் அவளோட பேசறதில்லடா ''
''ஏன்டா ''
'' நீ வேற , அவளால என் பிளாக்ல இருக்கற கவிதைகள ரசிக்க முடியல , எப்படி என்னோட வாழப்போறா !! என் கவிதை மொக்கையா இருக்காம் , அதுவுமில்லாம அவளோட பேசினா , என்னால என் பிளாகுக்கு மேட்டர் எதும் யோசிக்க முடியறதில்ல அதான்டா!!
''அடப்பாவி இதுக்கு போயி எவனாவது இப்படி பண்ணுவானா !! லூசாடா நீ ? ''
'' மச்சி உனக்கு என்னடா தெரியும் நம்ம எழுத்த நாலு பேரு படிச்சு , அது மூலமா கிடைக்கிற அந்த பாராட்டு அதுனால கிடைக்கிற அந்த சந்தோசம் , அந்த கிக்கே தனிடா ''
''மச்சி , நீ எதுக்கோ அடிமை ஆகிட்டேனு நினைக்கிறேன் , வீட்லதான இருக்க உங்கம்மாவ கூப்பிடு , நான் கொஞ்சம் பேசணும் ''
''மாப்பி அம்மாகிட்ட கொஞ்சம் பிரச்சனைடா , அம்மாகிட்ட சரியா பேசறதில்ல , எப்ப பாரு கம்ப்யூட்டரே கதினு இருக்கேனு என்ன ஒரு நாள் ரொம்ப திட்டிட்டாங்கடா , நானும் அவங்கள கன்னாபின்னானு திட்டிட்டேன் ''
'' அட இழவெடுத்தவனே !! அப்படி என்னதான்டா இருக்கு அந்த கருமம் புடிச்ச பிளாக்ல , அஞ்சு காசுக்கு பிரயோஜனமிருக்கா !!''
'' மாப்பி நான் காசுக்காக எழுதறதில்லடா , மனசு திருப்திக்காகடா , நான்லாம் சுஜாதா, பாலகுமாரன் மாதிரி வரவேண்டியவன்டா , கொஞ்சம் மிஸ் ஆகி இப்படி ஆகிட்டேன் , என் எழுத்துக்கு இங்கதான்டா சரியான அங்கீகாரம் கிடைக்குது ''
''உன்னலாம் திருத்தவே முடியாது , வை போன!! நீயெல்லாம் பிளாக் எழுதியே நாசமாப்போகப் போறடா , தயவு செஞ்சு இனிமே எங்கிட்டயும் பேசாத!!''
பட்டென அலைபேசி இணைப்பை துண்டித்தான் விஜய் .
காலச்சக்கரம் மேலும் 6 மாதங்கள் சுழன்றது
அஜித் தன் காதலியுடன் ஸ்பென்சர் பிளாசாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான் , அங்கே வந்த விஜய் இந்த காட்சியை பார்த்து ஆச்சர்யத்துடன் அஜித்திடம் ஓடிச்சென்று
'' மச்சி !! எப்படிடா இருக்கே , என்னடா என்னலாம் மறந்துட்டியா , மறுபடியும் கீதாவோட பேச ஆரம்பிச்சுட்ட , ஏய் கீ (தா) நாயே நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல !! ''
'' மாப்பி , நானே உனக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன்டா , இப்பலாம் நான் பிளாக் எழுதறதில்லடா , ''
'' அட்ரா சக்கை , இது எப்பருந்து ''
'' மச்சி இந்த பிளாக்னாலே என் வாழ்க்கைல நிறைய விசயங்கள இழந்துட்டேன்டா , அதுவுமில்லாம இந்த பிளாக்ல நல்ல கதை நல்ல கவிதைலாம் எவன் படிக்கிறான் , ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு , நானும் எப்படி எப்படியோ எழுதி பார்த்துட்டேன் ம்ம்ம் ஒரு பய நம்ம பிளாக்க மதிக்கலையே , அந்த விரக்தி எனக்கு வாழ்க்கைய உணர்த்திருச்சுடா , நான் இதனால என் வாழ்க்கையின் எத்தனை முக்கியமான தருணங்களை ரசிக்காம விட்டுட்டேன் , எக்ஸம்பிளுக்கு ஒன்னு சொல்லட்டா , இதோ என் செல்லக்குட்டியோட இந்த அழகான புன்னகையக்கூட ரசிக்க முடியாம போயிடுச்சே ''
கீதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள் . விஜயால் நம்பவே இயலவில்லை . கையை கிள்ளி பார்த்துக்கொண்டான் .
பெருமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றவன் இன்னும் அஜித்தின் இந்த மாற்றத்தை நம்ப இயலாமல் மீண்டும் விஜய்க்கு தன் அலைப்பேசியில் அழைத்தான்
'' மச்சி விஜய்டா '' , '' சொல்லு மாப்பி ''
'' மச்சி உண்மைய சொல்லு நீ உண்மைலயே பிளாக் எழுதறத விட்டுட்டியா ''
''மாப்பி , நீ பெரிய தில்லாலங்கடிடா , கண்டுபிடுச்சுட்டியே !!''
'' அப்ப நீ இன்னும் திருந்தலையா ''
'' மாப்பி இப்பவும் நான் பிளாக் எழுதறேன் , ஆனால் முன்னால மாதிரி இல்ல , பிளாக் மட்டுமே உலகமில்லனு புரிஞ்சுகிட்டேன் , பிளாக் படிக்கிறவங்களுக்கு என்ன புடிக்குமுன்னு தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி எழுத முயற்சி பண்றேன் , அதுனால நிறைய புதுபுது நண்பர்கள் கிடைக்கிறாங்க , ஆனால் ஒன்னு இந்த பிளாக் என் பெர்சனல் வாழ்க்கைய எந்த விதத்திலயும் பாதிக்காத மாதிரி பாத்துக்கறேன் , எதுக்குமே அடிமையாகம அத புரிஞ்சுகிட்டு
பண்ணா நிச்சயம் அந்த விசயத்துல பெரிய ஆளா வரலாம்டா , அது வாழ்க்கையா இருக்கட்டும் பிளாக்கா இருக்கட்டும் , அது இரண்டுக்குமே பொருந்தும் , பலன எதிர்பார்க்காம செய்ற எந்த வேலையும் ரொம்ப அழகாருக்கும் ''
'' அட நாயே , அப்ப காலைல கீதாவ வச்சுகிட்டு சீன் போட்ட?''
'' நீ வேற அவளுக்கு நான் பிளாக் எழுதறது தெரிஞ்சா அவ்ள்ளோதான் , சாமி தயவுசெஞ்சு அவகிட்ட மட்டும் சொல்லிறாத !!''
'' ஓகேஓகே , எப்படியோ போ!!''
''மச்சி இப்பக்கூட நாம பேசினத வச்சிதான் அடுத்த போஸ்ட் ஆரம்பிச்சிருக்கேன்டா ''
'' அட கருமாந்திரம் புடிச்சவனே , நீ பிளாக் எழுதியே நாசமா போ!!! என்ன விடு , பாய் ''
அஜித் தனது புதிய பதிவை தன் கணினியில் தொடங்கினான் '' பிளாக் எழுதி நாசமாப்போனவன்!!!!'' என்று.
55 comments:
'' அட கருமாந்திரம் புடிச்சவனே , நீ பிளாக் எழுதியே நாசமா போ!!!
சூப்பரா இருக்குங்க... இன்னும் இந்த மாதிரி அதிகமான பிளாக் எழுதி நாசமாய் போக என் வாழ்த்துக்கள்...
:)
நல்லா இருந்திச்சு கதை... இதில என்னத்துக்கு விஜய், அஜித் என்னு போட்டு வைச்சிருக்கீங்க விட்ட திரும்பவும் அவங்களுக்குள்ள சண்டைய மூட்டீடுவீங்க போல இருக்கே...
மத்தது ஏதோ பத்திரிகையில வந்திச்சே ப்லொக் எழுதிறது மனநோயாளிகள் என்று அது உண்மை என்குறீங்களா??
பத்த வச்சிட்டமில்ல
கதை ரொம்ப நல்லா இருக்கு..
ஆனா நடுவில் அட்வைஸ் தான் பிடிக்கல..நாங்கள்ளாம் ஹீரோ படத்துல லாஜிக்கே இல்லாம என்ன பண்ணாலும் கேள்வியே கேக்கமாட்ட்டோம்..பக்கம்பக்கமா அட்வைஸ் வசனம் பேசினார்ன்னா கடுப்பாகிடுவோம்.. ஆமா :))
//நான்லாம் சுஜாதா, பாலகுமாரன் மாதிரி வரவேண்டியவன்டா , கொஞ்சம் மிஸ் ஆகி இப்படி ஆகிட்டேன்//
ஹா...ஹா... இதுக்கு மேலே தொடர முடியவில்லை.சிரிச்சிட்டு அப்புறம் வாரேன்.
//நான் இதனால என் வாழ்க்கையின் எத்தனை முக்கியமான தருணங்களை ரசிக்காம விட்டுட்டேன் , எக்ஸம்பிளுக்கு ஒன்னு சொல்லட்டா , இதோ என் செல்லக்குட்டியோட இந்த அழகான புன்னகையக்கூட ரசிக்க முடியாம போயிடுச்சே //
என் மனைவி இந்தப் பதிவை படிச்சா ரொம்ப ரசிப்பாங்க!
எக்சலண்ட் அதிஷா!
\\ VIKNESHWARAN said...
சூப்பரா இருக்குங்க... இன்னும் இந்த மாதிரி அதிகமான பிளாக் எழுதி நாசமாய் போக என் வாழ்த்துக்கள்...
:)
\\\
ரீப்பிட்டே ;)
அதிஷா கலக்கலா எழுதி இருக்கீங்க.
காமெடியாக இருந்தாலும் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கு ...
அதிகமான பிளாக் எழுதி நாசமாய் போக என் வாழ்த்துக்கள்...
ஒன்றும் வித்தியாசம் இல்லை அதிஷா. தாங்கள் பிளாக் எழுதி நாசமாப்போனால், அவர்கள் எதுவுமே எழுதாம நாசமாப்போவார்கள்.
//இது வரைக்கும் 2000 பேர் வந்து பார்த்துருக்காங்க மச்சி , ஆனா யாருமே கமெண்ட்ஸ் போட மாட்டேங்கிறாங்க//
இப்ப என்ன இதுக்கு பின்னூட்டம் போடனுமா? வேண்டாமா?
போடலைன்னா வருத்தப் படுவீங்க. போட்டா பிளாக் எழுதியே டேஷாப் போய்ருவீங்க.
:-))))))
பொன்னியின் செல்வன் படம் பார்த்துட்டீங்களா?
கயல்விழி சொல்றாமாதிரி எங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ணா புடிக்காது...
அட்வைஸை கொஞ்சம் கொறைச்சி இன்னும் கொஞ்சம் மசாலாவ காரமா ஏத்து மச்சி! :-)
வாங்க அனானி அண்ணா
உங்க வாழ்த்துதான் பஸ்ட்
நன்றாக உள்ளது
இதை தான் ஆங்கிலத்தில்
introspection
அப்படினு சொல்றாங்களோ
// நீ கூட ஏரிவாயன்னு ஒரு இங்கிலீஷ் பிளாகு வச்சிருக்கியே //
இது டாப்பு...
// ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு //
இதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே?
வாங்க விக்னேஸ்வரன்
உங்க வாழ்த்துக்கு நன்றிங்க
வாங்க இவனே
அஜித் , விஜய் னு பேரு வச்சது சும்மாதான்
\\
மத்தது ஏதோ பத்திரிகையில வந்திச்சே ப்லொக் எழுதிறது மனநோயாளிகள் என்று அது உண்மை என்குறீங்களா??
\\
நான் அதை வழிமொழியல அது மாதிரி யாரும் ஆகிடகூடாதுங்கறதுதான் என் கருத்து
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இவன்
நல்லாயிருக்கு கதை. இந்த கதையை எப்படி இன்னும் பெட்டரா எழுதி இருக்கலாம்னு சொல்ற அளவுக்கு சரக்கு இல்லை என்கிட்ட அதனால.. ஜஸ்ட் என்சாய்..
\\
பக்கம்பக்கமா அட்வைஸ் வசனம் பேசினார்ன்னா கடுப்பாகிடுவோம்.. ஆமா :))
\\
கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சோ
ஹிஹி
கருத்துக்கு மிக்க நன்றி அக்கா
அடிக்கடி வாங்க ...
(இந்த பதிவுலகத்துலயே எனக்கு நல்லது சொல்ற ஒரே ஆள் நீங்கதான் தெரியுமா...அவ்வ்வ்வ் )
\\
ஹா...ஹா... இதுக்கு மேலே தொடர முடியவில்லை.சிரிச்சிட்டு அப்புறம் வாரேன்.
\\
ராஜ நடராஜன் எப்ப ரிட்டர்ன்
\\
என் மனைவி இந்தப் பதிவை படிச்சா ரொம்ப ரசிப்பாங்க!
எக்சலண்ட் அதிஷா!
\\
ரொம்ப நன்றி பரிசல்காரன்
இந்த கதை நான் என் அம்மாவுக்காகத்தான்
எழுதினேன்
வாங்க கோபிநாத்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
\\ காமெடியாக இருந்தாலும் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கு ... \\
வாங்க கிரி
நான் கஷ்டப்பட்டு சீரியஸா சிந்திச்சு ஒரு கதை போட்ட இப்படி சொல்லிட்டீங்களே
அவ்வ்வ்வ்
எனிவே
வருகைக்கு நன்றி
வாங்க துரைராஜ்
உங்க வாழ்த்து பலிக்கணும்
வருகைக்கு நன்றி
\\
ஒன்றும் வித்தியாசம் இல்லை அதிஷா. தாங்கள் பிளாக் எழுதி நாசமாப்போனால், அவர்கள் எதுவுமே எழுதாம நாசமாப்போவார்கள்.
\\
நன்றி ஜிம்ஷா
\\
இப்ப என்ன இதுக்கு பின்னூட்டம் போடனுமா? வேண்டாமா?
போடலைன்னா வருத்தப் படுவீங்க. போட்டா பிளாக் எழுதியே டேஷாப் போய்ருவீங்க.
\\
வாங்க வடகரை வேலன்
எப்படியோ ஒரு பின்னூட்டம் போட்டீங்களே அது போதும்
சீக்கிரம் நல்லா டேஸா போய்டுவேன்
அப்பாடா எப்படியோ ஒரே நாள்ல்ல இத்தனை பேருகிட்ட வாழ்த்து வாங்கிட்டேன்
\\
அட்வைஸை கொஞ்சம் கொறைச்சி இன்னும் கொஞ்சம் மசாலாவ காரமா ஏத்து மச்சி! :-)
\\
ஆஹா நீங்களுமா
நாமல்லாம் மசாலா படம் எடுக்குறவங்களா!!!!
இருந்தாலும் உங்க கருத்த கேட்டுகின்னு
இனிமே கருத்த கொறைக்கிறேன்
மசாலாவ ஏத்துறேன்
\\
நன்றாக உள்ளது
இதை தான் ஆங்கிலத்தில்
introspection
அப்படினு சொல்றாங்களோ
\\
வாங்க வெற்றிவேல்
இது நிச்சயமாக introspection இல்லை
இது கற்பனை கலந்த உண்மை அவ்வளவே
நான் அப்படி இல்லை
\\
// ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு //
இதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே?
\\
வெண்பூ நிச்சயமா இருக்கு
அதுதான் இன்றைய வலைப்பதிவுகளுன் நிலை
பின்னூட்டம்தானே.. போட்டாச்சு.. போட்டாச்சு... விட்டா லேபிளுக்கு ஒரு பின்னூட்டம் போட வேண்டியிருக்கும் போல..
நிச்சயமாக இது நேர விழுங்கிதான், ஆனால் அதற்க்கு ஏற்றார் போல் நேரத்தை நாம்தான் வகுக்க வேண்டும்
படித்தேன்
ரசித்தேன்
குறும்புக்காரனய்யா நீ
வாழ்கவளமுடன்.
வாங்க தமிழ்பறவை
;-)))
பின்னூட்டத்துக்கு நெம்ப நன்றிங்க
அடிக்கடி வாங்க
வாங்க ஜாக்கி சார்
நிச்சயம் பிளாக் எழுதறது நீங்க சொல்ற மாதிரிதான்
நாமதான் தீர்மானிக்கணும் எது முதல்லனு
உங்க கருத்துக்கு மிக்க நன்றி
\\
படித்தேன்
ரசித்தேன்
குறும்புக்காரனய்யா நீ
வாழ்கவளமுடன்.
\\
வாங்க ஜன்னல்
ஹிஹி
எதோ நம்மாலானது
சொந்த அனுபவமா? நல்லா இருக்கு திரு. அதிஷா.
இதே போக்கில் போனால் விரைவில் "ப்ளாக் எழுதி நாசமானோர் சங்கம்" ஆரம்பிக்கப்பட்டு, ப்ளாக் எழுதியதால் எப்படி எல்லாம் வாழ்க்கை நாசமாகப்போனது என்று அனுபவங்களை சங்க உறுப்பினர்கள் ப்ளாகாக எழுதுவார்கள்.
இதுக்கு அனுபவம், உண்மைக்கதைனு இல்ல லேபில் போட்டிருக்கணும்?
:))
\\
சொந்த அனுபவமா? நல்லா இருக்கு திரு. அதிஷா.
\\
இல்லைங்க , நிறைய புதுசா வர பதிவர்கள்கிட்ட பேசினதுல கிடைச்ச விசயத்தை கதையாக்கிட்டேன்
\\
இதே போக்கில் போனால் விரைவில் "ப்ளாக் எழுதி நாசமானோர் சங்கம்" ஆரம்பிக்கப்பட்டு, ப்ளாக் எழுதியதால் எப்படி எல்லாம் வாழ்க்கை நாசமாகப்போனது என்று அனுபவங்களை சங்க உறுப்பினர்கள் ப்ளாகாக எழுதுவார்கள்.
\\
ஹிஹி
சீக்கிரம் ஒன்னு தொடங்குங்க
நானும் கலந்துக்கறேன்
\\
இதுக்கு அனுபவம், உண்மைக்கதைனு இல்ல லேபில் போட்டிருக்கணும்?
\\
ஆஹா
ராப் இது உண்மைக்கதை இல்லங்க
இது கொஞ்சம் எல்லா புது பதிவர்களுக்கும் ஒத்து போற ஒரு விசயம் அவ்வளவுதான்
வாங்க தமிழன்
என்ன சிரிப்பு இது
எவ்வளவு சீரியஸா எழுதினா ஆளாளுக்கு வந்து இப்படி சிரிக்கிறீங்களே
அவ்வ்வ்வ்வ்
:-)))))))))
:-)))))))))
நல்ல கதை நல்ல கவிதைலாம் எவன் படிக்கிறான் , ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு.
உண்மை. ஆனால் தவறா ?
நான் இதனால என் வாழ்க்கையின் எத்தனை முக்கியமான தருணங்களை ரசிக்காம விட்டுட்டேன் , எக்ஸம்பிளுக்கு ஒன்னு சொல்லட்டா , இதோ என் செல்லக்குட்டியோட இந்த அழகான புன்னகையக்கூட ரசிக்க முடியாம போயிடுச்சே ''
காலத்திற்கு காலம் நமது ரசிப்புத்தன்மை வேறுபடும். அதனால் இன்று நாம் விட்டுவிட்டோமோ என்று தோன்றும் பொழுதுகள் விடப்படவேண்டியவையே.
எவ்வளவு சீரியஸா எழுதினா ஆளாளுக்கு வந்து இப்படி சிரிக்கிறீங்களே
எனது பதிலை இதை பார்த்த பிறகு தான் அடித்தேன்.
:)- அதனால் இவ்வளவு கிறுக்காக இருக்காளே என்று தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்.
வாங்க அவனும் அவளும்
\\
உண்மை. ஆனால் தவறா ?
\\
தவறில்லைதான் ஆனால் அதனாதிக்கத்தில் மற்றவை பாதிப்படையாதவரை
நீங்களும் சிரித்து விட்டீர்களா...
;-)
adra sakka adara sakka.... ennoda blog lifeya appadiye copy adichcha maathiri irukku.. enna.. Geetha maathiri character mattumthaan illa :((((
thelivana nadai.suvaiyana kalam.kalakkeetinga
சூப்பரா இருக்குங்க... இன்னும் இந்த மாதிரி அதிகமான பிளாக் எழுதி நாசமாய் போக என் வாழ்த்துக்கள்...
நீங்கள் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், முடிவே இல்லை!
வாங்க ஜி..
இது உங்க லைப்ப காப்பி அடிச்சு எழுதினதுதான்
பாவம் நீங்க நெஜ வாழ்க்கைலதான் துணையில்லாம சிங்கிளா (ஜி) இருக்கிங்களேனு நாங்களா சும்மா இட்டு கட்டி அடிச்சு விட்டதுதான் கீதா..
;-(((((
மிக்க நன்றி சதிஷ் குமார்
என்னுடைய மற்ற பதிவுகளையும் பார்த்து உங்க கருத்த சொல்லுங்க
வாங்க தமிழகத்தின் தலைவன் புதுகை சாரல்
உங்க பின்னூட்டம்தான் 50 வது பின்னூட்டம் .
கருத்துக்கு மிக்க நன்றி
அதிஷா,
உங்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை வருகிறது. ரசித்தேன். சொல்வது சீரியஸ் விஷயம் என்றாலும் சிரிக்கச் சிரிக்கச் சொல்வது ஒரு தனிச் சிறப்பு. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
மிக்க நன்றி அனுஜன்யா
ha ha ha ha ha ha
Post a Comment