30 September 2008
சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008
இந்த வார இறுதியில் பழம் பெரும் பதிவர் ( வரும் போது பழம் கொண்டு வரவும் ) ஆஸ்திரேலியாவாழ் பதிவரான பொட்டிகடையார் சென்னை வருகிறார்.
அவரை சந்திக்கவும் , மேலும் சென்னையில் மிகச்சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு எதுவும் நடத்தாத காரணத்தால் , பல புதிய பதிவர்கள் உருவாகி வரும் சூழலில் அவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பயன் பெறவும்
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கடை(எந்த கடை என்று நான் சொல்லவும் வேண்டுமா) விடுமுறையாதலால் , அதனால் பாதிக்கப்பட்ட சென்னைவாழ் பெருங்குடி மக்களின் சிரமத்திற்கு இன்றைய ஆளும் அரசின் அராஜக போக்கை கண்டித்தும் ஒரு சிறிய அளவிலான அறப்போர் புரியவும் உத்தேசித்துள்ளோம் .
இந்த சந்திப்பில் ஏற்கனவே அடியேன் ,தல பாலபாரதி , மருத்துவர்.புருனோ , நர்சிம் ,ஜ்யோவ்ராம் சுந்தர் , லக்கிலுக் , முரளிக்கண்ணன் , புதுகை அப்துல்லா , தாமிரா ( வருவார் என்ற நம்பிக்கையில் போடுகிறேன் ) , பதிவர் செல்வம் , சென் , ஆகியோர் வருவதாக உருதியாகத்தெரிகிறது . இச்சந்திப்பில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , மெரினா பீச்சில் இடப்பற்றாகுறை இருந்தால் மட்டுமே பிரச்சனை .
புதிய பதிவர்கள் கட்டாயம் கலந்துகொண்டு பதிவுகள் மற்றும் பதிவர்கள் குறித்த உங்கள் சந்தேகங்களை அங்கே வரும் பல மூத்த பதிவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் . நானும் கேட்டு தெரிந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன் .
அதனால் சென்னை பதிவர்களே அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்
சந்திப்பு நாள் - 04-10-2008
நேரம் - மாலை 6.00 லிருந்து
இடம் - சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறம்
வாங்க பாஸு... கலக்குவோம்.....
மேலதிக விபரங்களுக்கு..
எனது மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
எனது அலைபேசி எண் - 9941611993
_____________________________________________________________________________________
29 September 2008
பாரு நிபேதிதாவும் சாராயக்கடை லகுட பாண்டிகளும் ஒரு கடிதமும்......
இப்படிக்கு ..
புச்சா சாராயக்கடை தொறந்திக்கீற ஒரு லகுடபாண்டி..
(ஆண்டவா இன்னிக்கு நம்ம தலிவர் பேர சொல்லி வியாபாரம் தொட்ங்கிக்கீறேன் .. நீதான்பா காப்பத்தனும் )
பி.கு. - இப்பதிவு எந்த ஒரு நபரையும் குறிப்பிடுபவை அல்ல.... பிளாகு எழுதும் அனைவரையும் குறிப்பிடுவது மற்றும் பெருமாளையும்.... பெருமாளே
_____________________________________________________________________________________
ஒரு உலகசாதனை படைத்த வைன் பாட்டில் குறித்த செய்தி :
படத்தில் இருப்பது கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான வைன் பாட்டில் ஆகும் , இது ஆஸ்திரேலியாவை சேர்ந்த , கிம் புல்லக் எனபவரால் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது , இதன் உயரம் 6'5'' (6அடி 5 அங்குலம் ) , இந்த பாட்டிலினுள் 63.79 கேலன்கள் வைன் இருக்கிறது , அது சுமாராக 387 முழு வைன் பாட்டில்களுக்கு சமம் ஆகும்.
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா.....
____________________________________________________________________
28 September 2008
காதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங்களும் நல்ல பிகர்தான்.......!!!
இதில் என்ன சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் மூலமாகவோ dhoniv@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் , உங்கள் சந்தேகம் தீர்க்கப்படும்.
காதலை மேலும் கற்கலாம்..............
_____________________________________________________________________________________
இந்த பதிவு ஆண்களுக்காக மட்டுமில்லை , இங்கே தரப்படும் விடயங்கள் தங்கமணிகள் மற்றும் தங்கமணி ஆகப்போகும் பலருக்கும் உபயோகமாக இருக்கலாம் .
____________________________________________________________________
அவ்ளோதான்பா....
;-)
____________________________________________________________________
26 September 2008
மோசமான படமா ராமன் தேடிய சீதை ??
இந்த பெண் பார்க்கும் சடங்கும், பஜ்ஜி சொஜ்ஜி மொக்கைகளும் , பெண்ணை பாட சொல்லி கேட்பதும் , ஆடத்தெரியுமா , சமைக்கத்தெரியுமா என்பது போன்ற ஆணாதிக்க மனோபாவத்துடன் கூடிய மற்றும் சினிமாத்தனமான சடங்குகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது .
25 September 2008
சில்க்.......சில்க்......சில்க்............சில்க் ஸ்மிதா...!!!
*கடைசியாக நடித்த திரைப்படம் தங்கத்தாமரை
23 September 2008
பருத்திவீரனை விட சிறந்த படமா '' தாரே ஜமீன் பர் '' - ஒரு ஆஸ்கர் பயணம்
விஜயகாந்துனா காமெடிதானா..... அவரை பற்றிய ஒரு சீரியஸ் பதிவு (உங்கள் கண்ணீருக்கு கம்பெனி பொறுப்பல்ல)
நேற்றய பதிவில் ரஜினிக்காக ஒரு திரைக்கதை அமைத்து அப்படம் பப்படம் ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் அதைத்தொடர்ந்து , இன்று மக்களின் பேராதரவுடன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க
பாட்டி சுட்ட வடைகதையிலிருந்து புரட்சிகலைஞர் விஜயகாந்திற்காக அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சேஸிங்குடன் ஒரு ஆக்சன் ஸ்டோரி : ( தீவிரவாதிகள் மற்றும் பஞ்சாயத்து இல்லாமலா)
(காக்கையாக விஜயகாந்த் , பாட்டியாக லட்சுமி மற்றும் நரியாக வல்லரசு வாசிம்கான் )
ஊரின் மிகப்பெரிய கோடீஸ்வரியான லட்சுமி அந்த ஊரின் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சின்ன வயதில் ஒரு கண்ணு நொள்ளையாய் போன தன் பேரன் விஜய்காந்த் குணமானால் , வேண்டுதலுக்காக ஆயிரம் வைரங்கள் பதித்த ஒரு தங்க வடையை தர முடிவெடுத்து , பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த நேர்த்தி கடனை பல கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட தங்க வடையை செய்கிறார், ஆண்டவனுக்கே கொடுக்க போகும் வடை குறித்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டெல்லிகணேஷ்(லட்சுமியின் காரியதரிசி ) அதை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் தெரிவிக்கிறார் , பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம்கான் அதை அறிந்து மகிழ்ச்சியடைந்து அந்த பல கோடிரூபாய் மதிப்புள்ள தங்க வடையை அபகரிக்க திட்டமிடுகிறார். ( இப்படத்தில் புதுமையாக படம் தொடங்கி முதல் அரைமணிநேரம் கேப்டன் வரமாட்டார் , மக்கள் நிம்மதியாய் இருக்கலாம் )
இருண்ட ஆப்பிரிக்காவின் விடிவெள்ளி நைரோபி போலீஸ் விஜயகாந்த் , அங்கே கருப்பின தீவிரவாதிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார் , சோமாலியா அதிபருக்கு சவால் விடுகிறார் , தன்னை அதிபராக்கினால் வீட்டு வீடு தானே வந்து ரேசன் பொருள் தருவதாய் ஜால்ஜாப்பு விடுகிறார் , செல்போன் அலருகிறது , லட்சுமி ஆண்டவனுக்கு தரப்போகும் வடை குறித்து தெரிவிக்க குஷியாகி சண்டையை பாதியில் போட்டுவிட்டு , தன் பாட்டியின் இந்த பிரார்த்தனையை பார்க்க இந்தியா வருகிறார் , வந்த இடத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் ஒரு ஏழையை பார்த்து கடுப்பாகி டென்சனாகி மனம் நொந்து , கண் கலங்கி அவனை நினைத்து வெந்து வெதும்பி நொந்து , கவர்ச்சி நடிகை தேஜாஸ்ரீயுடன் ஒரு ஒப்பனிங் சாங்கில் நடனமாடுகிறார் .
அது தவிர ஊரில் இருக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் அரஜாகத்தை அந்த அரசியல்வாதிகளின் அடியாட்களை பின்னங்காலால் சுவறில் ஏறி அடித்து தட்டி கேட்கிறார் , ஒரு காட்சியில் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனைகள் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேசுகிறார் , இவர் பேச்சை நிறுத்தவாவது அரசியல்வாதிகள் திருந்தலாம் என மக்கள் எண்ணுகின்றனர் .
'' மக்கள் உங்ககிட்ட எதிர்பார்த்து கிடச்சது ஏமாற்றம் எங்கிட்ட எதிர்பாக்கறது நல்ல மாற்றம்'' என பஞ்ச் டயலாக் பேசுகிறார் .
வடிவேலுவை புரட்டி புரட்டி அடிக்கும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு நடுவே சம்பந்தமில்லாமல் வரலாம் ( வடிவேலு கால்சீட் கிடைத்தால் , இல்லாவிட்டால் விவேக்கை வைத்து பஞ்ச் வசனங்களுடன் கூடிய சமுதாய சீர்திருத்த வசனங்களை பேச வைக்கலாம் ) , கடைசி நேர தகவல் படி வடிவேலு நடிக்க மறுத்து விட்டார்.
அரசியல்வாதிகளை புரட்டி எடுத்து டயர்ட் ஆகும் போதெல்லாம் தன் மாமன் மகள் நயன்தாராவையும் புரட்டி எடுக்கிறார் , அவரது தொப்பிளில் பரமபதம் ஆடுகிறார் ( பாம்பு ஏணிகள் மற்றும் கட்டைகள் என எல்லாமே தொப்புளில் கதகளி ஆடுகின்றன் - அட எல்லாமே கிராபிக்ஸ்பா ), (இந்தியாவில் புரட்டி எடுக்க மன்னிக்கவும் டுயட் பாட இடமில்லாததால் ஆஸ்திரேலியா , அமெரிக்கா , இங்கிலாந்து என பல நாடுகளிலும் பாடுகிறார் ஆடுகிறார் மரத்தை சுற்றி சுற்றி ஹீரோயினை விரட்டுகிறார் ) , இடைவேளைக்கு முன்னால் இரண்டு பாடல்களிலும் அதன பிறகு ஒரு பாடலிலும் பாடுகிறார் . அதன் பின் நயன்தாரா மாயமாய் மறையலாம் காணாமல் போகலாம் நமக்கும் கதைக்கும் அதனால் ஒன்றும் ஆகிவிடாது .
இப்படி பல வேலைகளுக்கு நடுவில் கதையெழுதிவிட்ட பாவத்திற்காக அவர் லட்சுமியை சந்திக்கிறார் , அங்கே அவருக்கு தங்க வடை குறித்தும் அதை கடத்த போகும் தீவிரவாதிகள் பற்றியும் தெரிய வருகிறது , அதற்குள் படம் பாதிக்கும் மேல்முடிந்தும் விடுகிறது , கண்கள் சிவக்கிறது ( படம் முடியும் வரை அது அப்படியேதான் இருக்க போகிறது பீ கேர் புல்... நான் எதிரிகள சொன்னேன் ). வடையை எடுத்துக்கொண்டு ஆயிரம் கிலோ மீட்டருக்கு அந்தபக்கம் இருக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது பைக்கை கிளப்பிக்கொண்டு , கையில் பெட்ரோலுக்கு காசிருக்கிறதா என்கிற கவலையில்லாமல் முதுகில் வடையை கட்டிக்கொண்டு டுர்ர்ர்ர்ரென கிளம்புகிறார் . (காட்டுதீயாக , அனல் பொறி அல்லது கடலை பொரியாக , அடங்காத வெள்ளமாக ,பனை வெல்லமாக என மேற்கூறிய வாக்கியங்களினிடையில் மக்கள் எந்த வாக்கியத்தையும் இணைத்துக்கொள்ளலாம் )
போகும் வழியில் கிராமங்களில் மக்கள் படும் துன்பம் கண்டு மனம் நொந்து விக்கி திக்கி திணறி திக்குமுக்காடி அழுது புரண்டு கண்ணீர் வடித்து , மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என எண்ணி நயன்தாராவை அழைத்து அவரது தொப்புளில் ஜிலேபி சுடுகிறார் ( ஏற்கனவே ஆம்லேட்,ஆஃபாயில், பூரி கிழங்கு .பொங்கல், தோசை,ஆப்பம் என பல அயிட்டங்களையும் போட்டு விட்டதால் இம்முறை ஜிலேபி - எப்படியோ மக்கள் மகிழ்ச்சியா இருந்தா சரிதான் ) , ஊருக்குள் நடந்த பம்பரம் விடும் போட்டியில் நடந்த அசம்பாவித சம்பவத்தை தட்டி கேட்டு தீர்ப்பு வழங்குகிறார் ( மக்கள் எதிர்பார்க்கறாங்க பாஸு உங்களையும் சேர்த்துதான் பாஸு )
மக்கள் மகிழ்ச்சியாகி அவரை புகழ்ந்து பாடுகின்றனர் . சாங் தொடங்குகிறது .
அரசாங்கம் அமைக்க வந்த சின்னையா
ஆட்சில இருக்கறவங்கள்ளாம் வெண்ணையா
நீங்க கிரிக்கெட்டில் கலக்குகிற கங்குலி
நம்ம கூட்டத்தில இல்ல ஒரு கருங்காலி
உனக்காக கூடியிருக்கு பெரிய கூட்டம்
அத பாத்து ஆளுங்கட்சி தலைவருக்கு நம்மேல் நோட்டம்
நீ நின்னா திருவாரூர் தேரு
உன்ன தட்டி கேட்க தமிழகத்தில் யாரு .....
உன் அரசாங்கம் அமையட்டும் சீக்கிரம்
உன் ஆட்சிக்காக கண் முழிச்சு காத்துகிட்டு கிடக்கறோம்
ஆண்டவனோட மட்டும்மே உங்க கூட்டணி
தேர்தலில் நம்ப மாட்டீங்க கள்ள ஒட்டணி
( அரசாங்கம் அமைக்க வந்த சின்னையா )
அவரை வில்லன்கள் துரத்துகிறார்கள் , துரத்துகிறார்கள் , துரத்துகிறார்கள் , கார்கள் பறக்கின்றன , லாரிகள் எரிகின்றன , வெடிகுண்டுகள் வீசப்படுகிறது , வாசிம்கான் கதறுகிறார் , செல்போனில் கட்டளையிடுகிறார் , நடுவில் நயன்தாராவுடன் டூயட் பாடுகிறார் !!! ( ஏன்னு கேட்டா உங்க வீட்டிலும் கற்கள் வீசப்படலாம் அதனால் _______ ) .
கிளைமாக்ஸில் லட்சுமி , நயன்தாரா , மற்றும் பலரை கடத்தி வைத்துக்கொண்டு விஜயகாந்தை செல்போனில் அழைக்கிறார் , கேப்டன் டென்சனாகிறார் , வீரவசனங்கள் பேசுகிறார் ( வசன உதவி - லியாகத் அலிகான் ) , விஜயகாந்தின் தங்கையை தீவிரவாதிகள் கட்டி வைத்து கதற கதற ................................... (அட கற்பழிக்கலைங்க நீங்க வேற எதையாவது நினைச்சுகிட்டு இது சீரியஸ் கதை அதனால நோ கற்பழிப்புங்கோ ) கட்டி வைத்து கிச்சி கிச்சு மூட்டி டார்ச்சர் செய்ய அதை செல்போனில் கேட்ட விஜயகாந்த் வீரு கொண்டு எழுந்து கத்தி கதறி மண்ணெல்லாம் எடுத்து மேல பூசிக்கொண்டு ( இந்த சிச்சுவேசன்லயும் நீங்க நயன்தாராவோட டூயட் எதிர்பாத்தா அதற்கு நாங்க பொருப்பில்ல ) ... கண்ணீர் விடுகிறார் , தியேட்டரில் தாய்க்குலங்களும் அழுகின்றனர் அவரது டார்ச்சரை நினைத்து.........(விஜயகாந்தின் டார்ச்சர்.. வில்லன் டார்ச்சர இல்ல )
தனி ஆளாக பின்னிமில்லில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் உறவினரை தீவிரவாதிகள் சுடும் லட்சக்கணக்கான குண்டுகளில் ஒன்று கூட தன் மேல் படாமல் அனைவரையும்
துவம்சம் செய்து காப்பாற்றுகிறார் ,
கடைசியில் வடை குறித்த புள்ளி விபரங்களை கீழ்கண்டவாரு அடுக்குகிறார் இறுதிகாட்சியில் வாசிம்கானுடன் ஓற்றைக்கு ஓற்றையாக மோதுகிறார் , வாசிம் கானிடம் வசனம் ,
உலகத்துல வடை சுடுற நாடுங்க மொத்தம் பத்து
அதுல அதிகமா வடை சுடுறது இந்தியாவுல
ஒரு நாளைக்கு சுடுற வடைகளோட எண்ணிக்கை இரண்டு கோடி
அதுல ஊசி போன வடை அம்பது லச்சம்
அத வாங்கி அப்படியே திங்கறவன் இருபதுலட்சத்து முப்பத்தி அஞ்சாயிரம்
அத வாங்கி தினதந்தில கசக்கி திங்கறவன் 17 இலட்சம்
காசு குடுத்து திங்கறவன் ஆறு லட்சத்தி அருபதாயிரத்தி நானுரு பேரு
ஓசில திங்கறவன் மூணு லட்சத்தி முப்பதாயிரம் ஆங்ங்
.................விட்டா இந்தாளு நிறுத்தாம மூணு நாளு மூச்சு விடாம இந்த மாதிரபேசுவார்னு , கடுப்பாகி வாசிம்கான் கேப்டனை நையபுடைத்து வீசுகிறார் மூர்ச்சையான கேப்டன் விடமால் கணக்கு சொல்லிக்கொண்டிருக்க வாசிம் கான் இந்தாளுக்கு வெறி புடிக்கணும்னா ஒரே வழினு
இந்தியாவைப்பற்றியும் தமிழ்நாட்டைப்பற்றியும் தமிழ் மக்களைப்பற்றியும் மிக கேவலமாக பேசுகிறார் , அப்போதும் விடாமல் கணக்கு சொல்லிக்கொண்டிருக்க
நயன்தாராவையும் அவரது இறந்து போன தாய் அம்பிகாவை பற்றி படு கேவலமாக பேச உணர்ச்சி வந்து வாசிம்கானை நாயடிப்பது போலடித்து நாட்டை காக்கிறார் , வடையை காக்கிறார் .
( வாசிம் கானும் விஜயகாந்திடமிருந்து தப்பி போலீஸிடம் சரண்டைந்து போலீஸின் காலைபிடித்த படி ஐயா தயவு செஞ்சு என்னை தூக்குல வேணா போடுங்க இந்தாளுகிட்ட மட்டும் விடாதீங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்று கூறும் காட்சி சென்சாரால் தடை செய்யப்பட்டது ).
இறுதிக்காட்சியில் ராதாரவி போலிஸாக வந்து '' உங்கள மாதிரி ஒருத்தர்தான் இந்த நாட்டுக்கு தேவை '' என்று கூறி சல்யூட் அடிக்க , அதற்கு விஜயகாந்த் இதுலாம் என்னோட கடமை ஆங் என்கிறார்
ஆஞ்சநேயர் கோவிலில் தங்க வடையை சாமிக்கு காணிக்கையாக விஜயகாந்த் குடுக்க ஒரு வழியாக படம் முடிகிறது . மக்கள் நிம்மதி பெருமூச்சடன் திரையரங்கை விட்டு வெளியேற படம் முடிகிறது .
இந்த படத்தின் கதைக்கு நல்ல பெயர் சூட்டுவோருக்கு கேப்டனின் தேமுதிக உருப்பினர் அட்டை இரண்டும் , அவரது தர்ம்புரி மற்றும் கஜேந்திரா படங்களின் டிவிடி ( 7.1) பரிசாக காத்திருக்கிறது , உடனே முந்துங்கள் பரிசுகள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே . _____________________________________________________________________________________
நேற்றைய பதிவைப்போல இது எந்த கதையிலிருந்தும் உருவப்படவில்லை, இது நானே எழுதிய கதை இக்கதையை படமாக்க விரும்புவோர் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை அணுகவும். வி.கா வின் கால்ஜீட் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு ஃப்ரீதானாம்.
_____________________________________________________________________________________
விஜயகாந்த் v/s வடிவேலு - என்னங்கடா நடக்குது - தற்குறிதமிழனின் அலசல்
புரட்சி தலைவர் விஜயகாந்த் என்றாலே காமெடி தானா , இரண்டு நாட்களாக வடிவேலு மற்றும் விஜகாந்த் உடனான சண்டைகளை பார்க்கையில் வடிவேலு இதை வேண்டுமென்றே செய்ததாகவே தோன்றுகிறது , சமீபத்திய கலக்கபோவது,அசத்தபோவது,நசுக்க போவது என்று பல காமெடி நிகழ்ச்சிகளிலும் விஜயகாந்த் அடைந்திருக்கும் அளவ்வில்லா புகழையும் எங்கே இன்னும் சில நாட்களில் வடிவேலுவுக்கு போட்டியாக விஜயகாந்த்ம் இது போன்ற காமெடி படங்களில் தனி டிராக்கில் காமெடி பண்ணலாம் என்கிற அச்சமும் அவரை அப்பாவி விஜயகாந்த் மீது இது போன்ற ஒரு தாக்குதலை நிகழ்த்த காரணமாயிருக்கிறது ,
தற்காலங்களில் வெளியாகும் பெரும்பாலான இந்த காமெடி நிகழ்ச்சிகளில் வடிவேலுவின் மிமிகரியை விட விஜகாந்த் மிமிகரிக்கே மக்கள் ஆதரவும் வாக்குகளும் குவிவதை கண்டு ஏற்பட்ட அச்சம் தனக்கு தானே இது போன்ற ஒரு சம்பவத்தை அரங்கேற்ற காரணமாயிருக்கலாம் . அது தவிர சமீபத்தில் வெளியான விஜயகாந்தின் அரசாங்கம் திரைப்படம் வடிவேலுவின் முந்தைய படமான இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தை காமெடியிலும் மக்கள் ஆதரவிலும் விஞ்சியதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி அல்லது காண்டாக இது இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு போட்டியாக விஜய்,பரத்,நிதின், ஜேகே.ரித்திஷ என பலரும் வந்துவிட்டதால் உடனடியாக தனது இருப்பை நாட்டில் பதிவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இப்படி லூசுத்தனமாக அவர் இப்படி செய்திருக்கலாம் .
காமெடியில் விஜயகாந்தை தோற்கடிக்க இயலாது என்பதால் , விஜயகாந்திற்கு துளியும் சம்பந்தமில்லாத அரசியலில் அவரை தோற்கடிக்க வடிவேலு எடுக்கும் முயற்சியாகவே இச்சம்பவம் இருக்கிறது ,
வடிவேலு அவர்களே உங்களுக்கு தைரியமிருந்தால் எங்கள் அண்ணாவை காமெடியில் வெல்ல முடியுமா , அவரது காமெடிக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது உங்கள் காமெடிக்கு மக்கள் ஆதரவு அதிகமா என்று பார்த்துக்கொள்வோமா ???
எங்கள் ஆசான் விஜயகாந்த் அவர்களே இது போன்ற துக்கடா காமெடியர்களின் வீண் வாய்ச்சவடால்களுக்கெல்லாம் பயந்து விடாதீர்கள் உங்களால்தான் இன்று பல கோடி தமிழர்கள் வீடுகளிலும் மக்கள் சிரித்து மகிழ்கிறார்கள் தொடரட்டும் உங்கள் நகைச்சுவை பணி!!! , நேற்று முதல்வர் மீது இப்பழியை தூக்கிப்போட்டு தூர்வாரிய காமெடியை கண்டு பக்கத்து வீட்டு தாத்தா சிரித்து சிரித்து மண்டையை போட்டுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் , இது போல இன்னும் பல ஆயிரம் காமெடிகளை சோகமயமான கரண்ட்இல்லாத தமிழகத்திற்கு தந்து மக்களை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் .
காமெடியில் நீங்கள்தான் எப்போதும் முதல்வர் இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது ஐயா...
21 September 2008
ரஜினியின் அடுத்தப்பட கதையும் - பாட்டி வடை சுட்ட கதையும் ......!!!
பாட்டி வடை சுட்ட கதை ஒரு நகைச்சுவை கதை அது நம் எல்லாருக்கும் நன்கு தெரியும் , சிறு வயது முதலே நமக்குநம் வீட்டில் சொல்லி தந்த கதைதான் .
அதே கதையை தமிழ்சினிமாவுக்கு எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம் என்று சிந்தித்தால் இன்று வெளியாகும் பல படங்களின் கதைகளும் அதிலிருந்து உருவப்பட்டிருக்குமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது , சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு ஒரு குட்டி தொடராக தரலாம் என்றொரு எண்ணம் அதன் விளைவாக்க எனது முதல் கதை முயற்சி ரஜினிக்காக ( சூப்பர்ஸ்டார்தான பஸ்டு அதான் )
____________________________________________________________________________________
குடும்பத்தோடு பார்த்து ரசிக்க காதல்,சென்டிமெண்ட்,சோகம்,துரோகம்,வீரம்,சண்டை நிறைந்த சூப்பர்ஸ்டாருக்காக சூப்பர் கதை ... !!!
(காக்கையாக - ரஜினி , பாட்டியாக - வடிவுக்கரசி , நரியாக - ராதாரவி , வடையாக - பூர்வீக சொத்து )
அந்த கிராமத்தின் மிக பெரிய பணக்காரர் , அவர் இறந்து விட்டார் அவரது ஒரே மகன் சரத்பாபு , அவரது ஒரே பாட்டி லட்சுமி , அந்த ஒரே பாட்டியின் ஒரே தம்பி ராதாரவி , வேறு ஒரு ஊரில் வாய்க்கால் தகராறு நடக்கிறது , இரண்டு ஊர்காரர்கள் அடித்து கொண்டிருக்க அங்கே வரும் ரஜினி இரண்டு ஊர்க்காரர்களையும் சுமூகமாக பேசி தீர்க்கிறார் ( காவிரி பிரச்சனையை சம்பந்தபடுத்தி சிலபல பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார் ) அதில் ஒருவர் ரஜினியை பார்த்து நீங்கதான்யா இந்த ஊருக்கு தலைவனா இருக்கணும் உம்னு சொல்லுங்க உங்கள பஞ்சாயத்து போர்டு பிரெசிடென்ட் ஆக்கறோம்ங்கறாங்க ரஜினி புன்னைகைத்தபடி விரலை மேல உயர்த்தி '' கண்ணா காட்டுல ஒடுது முயல் நான் அரசியிலுக்கு வரது ஆண்டவன் செயல் '' அப்படினு சொல்லிட்டு நடக்க மக்கள்லாம் ___ தின்ன பன்னி மாதிரி தேமேனு முழிச்சுகிட்டு நிக்க ஓப்பனிங் சாங் ஸ்டார்ட் ...
போடா வாடா போடா வாடா பொட்ட கண்ணா..
நீ பொங்கி வந்து நின்னாக்க கன்னா பின்னா....
வாங்க வாங்க வாங்க வாங்க எங்கள் ஐயா....
நீ அரசியலில் பாஞ்சடிச்சா எரியும் தீயா....
வல்லரசா ஆகபோகுதிந்தியா..
நல்லரசா ஆக்க நீங்க வாங்கையா...
சிறகிருந்தா வானவில்லும் குடை பிடிக்கும்
நீங்க முதல்வரானா - தமிழ்நாட்டில்
நிலாவும் எடம்புடிக்கும்
மக்கள் கொந்தளித்து பாடுகின்றனர் ரஜினி எல்லாரையும் பார்த்து கையசைத்தவாறே பாடல் முழுக்க ஆடுகிறார் , பாடல் முடிந்ததும்
அடுத்த காட்சி அவர் வாழும் குடிசை வீட்டில் , அவர் சோற்றுக்கே வழியில்லாத ஏழையாய் ஒரு குடிசை வீட்டில் ஓன்டியாய் விஜயகுமாரின் வளர்ப்பு மகனாய் வாழ்கிறார் , விஜயகுமார் சாகும் நிலையில் அந்த வீட்டின் கயிற்று கட்டிலில் படுத்த படி ரஜினியை அழைத்து ஒரு கடிதம் கொடுத்து அதிலிருக்கும் விலாசத்தில் போய் பார்த்தால் உனக்கு வேலை கிடைக்கும் என்கிறார் .
ரஜினி ஜாலியாக முதுகில் ஒரு பையுடன் பாட்டு பாடிக்கொண்டு அந்த ஊரை அடைகிறார் , நுழைந்ததும் அந்த ஊரில் உள்ள குளத்தில் குளிக்கும் சுரேயாவிடம் (ஸ்ரேயா ) மணி கேட்கிறார் (எத்தனை படத்தில்தான் வழியே கேட்பது ) , அவர் ரஜினியை பார்த்ததும் குளிக்க குளிக்க அப்படியே எழுந்து மணி சொல்ல விழைய அவரது கச்சை கழண்டு விடுகிறது , ரஜினி அப்படியே ஷாக்காகி நிற்க சுரேயாவும் ஷாக்காகி நிற்கிறார் . கண்கள் கலக்கிறது , காதல் மலர்கிறது காட்சி கலைந்து அமெரிக்கா பிரேசில் வழியாக மலேசியா சிங்கப்பூர் வழியாக மீண்டும் அந்த குக்கிராமத்தை அடைகிறது , பாடல் முடிகிறது . சுரேயாவை அப்படி பார்த்த அதிர்ச்சியில் ரஜினி ரோபோ போல நடக்கிறார் . ( ரோபோவிற்கான விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது )
வடிவுக்கரசியை சந்தித்து தந்தை கொடுத்த கடிதத்தை தருகிறார் , ரஜினி தந்த கடிதம் கண்டு அதிர்ச்சியாகி அவருக்கு அந்த அரண்மனையிலேயே வேலை போட்டு தருகிறார் , (அங்கே வேலை செய்யும் கவுண்டமணியுடன் நிறைய காமெடி செய்கிறார் , அதை இங்கே எழுதினால் சீரியஸாக இருக்கும் அதனால் ஸ்டோரி டைரக்ட்லி கோயிங் டு தி மேட்டர் )
நடுவில் ஊரில் அடங்காபிடாரியாக இருக்கும் ஒருவரின் மனைவியை திட்டி அரைபக்க வசனம் பேசுகிறார் , பெண்களின் அடக்கம் குறித்து அற்புதமான கருத்துக்களை அள்ளி தெளிக்கிறார் , அந்த அப்பாவி கணவனின் மனைவியை திருத்துகிறார் . படம் பார்க்கும் பலரது அடங்காத மனைவிகளும் திருந்துகிறார்கள் , அப்பாவி கணவன்கள் கண்ணீரில் திரையரங்கத்தில் வெள்ளம்!!!
வடிவுக்கரசி தனது பூர்வீக சொத்தை சரத்பாபுவிற்கு எழுதி வைக்க முடிவெடுக்கிறார் , அது பிடிக்காத ராதாரவி , அதை தடுக்க சூழ்ச்சி செய்கிறார் , ஒவ்வொரு சூழ்ச்சியையும் அசாதாரணமாக ரஜினி முறியடிக்கிறார் , சரத்பாபுவை கொல்ல ஆள் அனுப்புகிறார் , அவர்களையும் அடித்து வீழ்த்துகிறார் , ( நாம அங்கதான் வைக்கறோம் டுவிஸ்ட )
அடிவாங்கியவர்களில் ஒருவன் ரஜினிதான் உங்கள கொல்ல அனுப்பினார் என்று சொல்ல சரத்பாபு கடுப்பாகி ரஜினியை வீட்டில் வளர்க்கும் நாயை விட்டு அட்டாக் செய்கிறார் ரஜினி நாயின் எல்லா கடிகளையும் சிரித்தபடியே தாங்கி கொள்கிறார் ,நாய்கடித்து பேண்ட் முதல் ஜட்டி வரை கிழிந்து பின்னாலிருந்து ரத்தம் வடிய அங்கிருந்து ( மூஞ்ச சிரிச்ச மாதிரியே வச்சுகிட்டு ) நடந்து செல்ல சோகப்பாடல் துவங்குகிறது .
இவ்விசயம் தெரிந்த வடிவுக்கரசி உண்மையை சொல்கிறார் , அந்த சொத்துக்கு அவர்தான் வாரிசென்றும் அவர் வாரிசு என்று தெரிந்தால் எதிரிகளால் ஆபத்து என்றும் தெரிவிக்க திகைக்த்து பின் வருந்துகிறார் சரத்பாபு .
சரத்பாபு ரஜினியை தேடுகிறார் , ஆனால் ரஜினி மாயாமாகிறார் , ராதாரவி வடிவுக்கரசி,சரத்பாபு,சுரேயா வை கடத்தி கொண்டு போய் மர்ம பங்களாவில் கட்டி வைத்து அவர்கள் முன்னால் மும்பை கவர்ச்சி நடிகையை நடனமாட விட்டு டார்ச்சர் செய்கிறார் , ( சரத்பாபுவுக்கு இந்த டார்ச்சர் மிகவும் பிடித்து அவர் ஓன்ஸ்மோர் கேட்டது சென்சாரால் கட் செய்யப்பட்டது ) . சொத்துப்பத்திரத்தில் கையெழுத்திட வடிவுக்கரசியை மிரட்டுகிறார், அவர் எவ்வளவு டார்ச்சர் செய்தும் மறுக்கிறார் ( லூசுப்பசங்க கையெத்து போடத்தெரியாத பாட்டிய டார்ச்சர் பண்றதா நினச்சிட்டு வாய கட்டி வச்சிட்டு கையெழுத்து போடுன்னு டார்ச்சர் பண்ணா அந்த கிழவி எப்படி போடும் , ) . ரஜினி திடீரென எங்கிருந்தோ ஒரு பைக்கில் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டோ அல்லது கயிறில் தொங்கிய படியோ வருகிறார் , ( அது படத்தின் தயாரிப்பாளரின் வசதியை பொருத்தது , நிறைய செலவு செய்ய முடிந்தால் கண்ணாடிகளை உடைத்து கொண்டு ஹெலிகாப்டரில் வருவது போல் கூட செய்யலாம் )
அனைவரையும் அடித்து துவைக்கிறார் , எரிமலையாய் வெடிக்காமல் சிரித்தபடி அடிக்கிறார் , நடுநடுவே சரத்பாபு,வடிவுக்கரசி,சுரேயா போன்றோர் அடியாட்களில் மட்டமான காமெடி பைட்டர்ஸை அடித்து துவைக்க , இறுதியில் கவுண்டமணி போலிசுடன் உள்ளே நுழைகிறார் , அனைவரையும் அடித்து துவைத்து ரஜினி போலிஸில் ஒப்படைக்க படம் முடியவில்லை ,
அடுத்த காட்சியில் ரஜினியிடம் சொத்துக்கள் ஒப்படைக்கபடும் போது ரஜினி மக்களைப்பார்த்தபடி
என்னோட நிரந்தர சொத்து இங்க இருக்கும் போது எனக்கு எதுக்கு சொத்து என்று தனது அழுக்கு வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு கிளம்புகிறார் .
மக்களைநோக்கி நடக்க படத்தில் நடித்த அனைவரும் ரஜினியின் பின்னால் நடக்க ஓப்பனிங் சாங்கே மீண்டும்
போடா வாடா போடா வாடா பொட்ட கண்ணா..
நீ பொங்கி வந்து நின்னாக்க கன்னா பின்னா....
வாங்க வாங்க வாங்க வாங்க எங்கள் ஐயா....
நீங்க அரசியலில் பாஞ்சடிச்சா எரியும் தீயா....
வல்லரசா ஆகபோகுதிந்தியா..
நல்லரசா ஆக்க நீங்க வாங்கையா..
சிறகிருந்த வானவில்லும் குடை பிடிக்கும்
நீங்க முதல்வரானா - தமிழ்நாட்டில்
நிலாவும் எடம்புடிக்கும்
படம் முடிய மக்களும் ரஜினியின் ரசிகர்களும் ரஜினியை கடித்த அந்த நாயை போல குஷியாகி குஜாலாகின்றனர் . திரையரங்கம் அதிர்கிறது , அந்த அதிர்ச்சி குறைவதற்குள் ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இக்கதைக்கு நல்ல தலைப்புகளை அள்ளித்தந்து குசேலன் பட டிவிடிகளை அள்ளிச்செல்லுங்கள் .
____________________________________________________________________________________
இப்பதிவின் தொடர்ச்சியாக நாளை காலை புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்தின் அதிரடி ஆக்சன் , சேஸிங் , தொப்புள் ரொமான்ஸ் , தங்கச்சி செண்டிமெண்ட் , வீர வசனங்கள் நிறைந்த பாகிஸ்தானில் படமாக்கப்படவுள்ள திரைக்கதை - உங்களுக்காக அதிஷாவின் வலைப்பூவில் மட்டுமே .......
_____________________________________________________________________________________
இப்போதெல்லாம் கருணாநிதி மேல் காண்டான ஞானியைப்போல அடிக்கடி நம் வலைப்பூவில் ரஜினி காண்டு காமெடிகள் இடம் பெருவதால் ஒரு கற்பனை கார்ட்டூன் .( படம் உதவி - மின்னஞ்சல் நண்பர் - கருத்து அடியேன் )
____________________________________________________________________
அவ்ளோதான்பா..... ;-)
_____________________________________________________________________________________
படம் உதவி - மின்னஞ்சல் நண்பர் மற்றும் google.com
20 September 2008
குருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்மக்களை தாக்க வந்துள்ள அடுத்த சுனாமி )
18 September 2008
காலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை
காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை .
அவனையும் அவளையும் அது அப்படித்தான் அழைத்துச்சென்றிருக்கிறது , அவள் பூப்பெய்தி இருபது வருடங்களுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அத்தனையையும் எப்படித்தான் பொருத்துக் கொண்டதோ அந்த உடல் ,
காமத்தில் நகக்கீரல்களும் வலியும் அழகானாதாம் யாரோ ஆணாதிக்க கிழட்டு கவிஞன் பாடிச் சென்ற வரிகளின் அர்த்தம் அவளிதுவரை உணர்ந்ததில்லை , அவள் மேல் விழுகின்ற நகக்கீரல்களும் அவள் மேல் விழுகின்ற உடல்கள் தரும் எடையின் வலியும் அவளுக்கு என்றுமே சுகமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை , அதை ஒரு ஆணால் மட்டுமல்ல கணவனுடன் காமத்தில் கரைகண்ட எந்த குடும்ப பெண்டிரும் உணர இயலாத உயிரின் வலியது .
காதோரம் நரையும் முகமெல்லாம் மஞ்சளும் உதட்டில் சாயமும் தலையில் மல்லிகையும் சோம்பிய உடலும் கரைபடிந்த பற்களுமாய் அவளை எங்கும் காணலாம் . அவள் நம்மை சுற்றி எப்போதும் அலைபவள் . அதற்கென பிறக்காவிட்டாலும் அதற்காய் தயாராக்கப்பட்டவள் , கல்வியின்றி கலவி மட்டும் பயின்றவள் , இப்பெண்கள் பூப்படையாமலிருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் , காம மிருகங்கள் அப்போதும் புணர காத்திருக்கும் வாசலில் .
அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அந்த சாந்தி திரையரங்க பேருந்து நிருத்ததில் , தினமும் காலையில் ஒன்பது மணிக்கு பேருந்தில் ஏறி பத்து மணிக்கு அலுவலகம் சென்று ஆறு மணிக்கு மீண்டும் பேருந்தில் அடைக்கலமாகி மீண்டும் வீட்டை அடையும் நகரத்தின் கோடி இயந்திரங்களில் அவனும் ஒருவன் , பேருந்து நிலையத்தை ஒட்டிய அந்த நடைபாதை சுரங்க பாதையில் நின்ற படி போவோர் வருவோரை கண்களால் அழைத்து காசு பார்க்கும் அவள் இவனை அப்படி என்றுமே பார்த்ததில்லை , இவனுக்கு அதுவே அவள் மேல் மையல் வர காரணமாயிருந்தது .
அவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட அது , காதலா? காமமா? அல்லது மையலா? புயலா? எதுவோ ஒன்று மையம் கொண்டு அவனை தாக்கியிருந்தது .
காசு கொடுத்து காமம் தேடுபவன் என்ன காதலுடனா காமம் கொள்வான் , அவளை பூப்போல் புணர , அவன் காதலிக்க தொடங்கிய போதிருந்த அந்த காகிதப்பூ பலரது கைகளாலும் கசக்கப்பட்டு வாடியிருந்தது இப்போது , அவன் அவளது உடல் அவனுக்கொரு பொருட்டாய் இருந்ததில்லை , இவனும் ஒரு நாள் வாயைவிட்டு சொன்னான் உன் மேல் எனக்கு காதல் என்று , அவளால் பேச இயலாமல் எதோ தடுத்தது , பிறகு சரியென்றாள் . காதலித்தாள் .
பெரியாரென்றான் பகுத்தறிவென்றான் , அம்பேத்கரென்றான் , காதலென்றான் , அன்பென்றான் , கதை சொன்னான் , இதமாய் முத்தம் தந்தான் , இதயத்தில் நீ என்றான் , கடல் காட்டி முத்தமிட்டான் , காந்தி சிலையோரம் காற்றோடு கவிதை சொன்னான் , குடும்பம் பற்றி கவலையில்லை தனக்கு குடும்பமே இல்லையென்றான் , குழந்தைகள் வேண்டுமென்றான் , குடும்பத்தலைவியாய் ஆக்குவேனென்றான் , மடியில் படுக்கவைத்து பாடி மகிழ்வித்தான் , காதோரம் கிசுகிசுத்து அவளை கற்பனையில் மிதக்கவிட்டான்.
ஊருக்கு ஒதுக்குபுறமாய் யாருமில்லா தனிமையான விடுதியின் அறையில் அவனது தோளில் சாய்ந்து கொண்டு என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்றாள் , செய்வேன் என்றான் ஒற்றை வார்த்தையில் , அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் எப்போதும் இருந்தது , அவனுக்கு நம் உடல் மட்டும்தான் தேவை என்பதைப்போல , அவளது ஆண்களின் உலகம் துரோகிகளின் உலகம் , இவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து தொழிலுக்கும் போக இயலாமல் சாப்பாட்டிற்கும் மற்றதுக்கும் இவனை நம்பி அவன் தரும் சொற்பத்தில் இன்பம் கண்டு இன்று அவனுக்கு தன்னையே முழுமையாய் தரப்போகும் வேளையில் இப்படியொரு எண்ணம் அவள் மனதில் பாலில் ஒரு துளி விஷமாய் , அவன் சந்தேகமா என்றான் , இல்லை என்பது போல மறுத்தவளின் கண்களில் கண்ணீர் தன் சோகங்கள் தீர்ந்ததாய் . அவள் தனது உள்ளத்தை முழுமையாய் தந்தாள் , காமம் இல்லா உலகத்தில் வாழ்வதாய் , வெறிநாயாய் மேலே பாய்ந்து பிரண்டும் காமமில்லா உலகத்தில் வாழ்வதாய்....
காமம் முற்றி காதல் ஆகும் கண்களின் உலகத்தில் இவன் காதல் முற்றி காமமானது , அவனும் புணர்ந்தான் காதல் கிழிய புணர்ந்தான் ஆணுறை கிழியாமல் .
கதவு தட்டும் ஓசை கேட்க திறந்தால் காவலன் அவள் காதலின் காலன் , அவன்கள் தப்புவதும் அவள்கள் சிக்குவதும் நம் நாட்டில் காலம்காலமாய் நடப்பதுதானே , காலம் இருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்து சென்றது .
பல வருடங்களுக்கு பிறகு அதே சாந்தி திரையரங்க பேருந்துநிறுத்தம் , வருவோர் போவோரை கண்களால் அளந்த படி அவள் , காதோரம் நரைத்து விட்ட முடியை சரி செய்தபடி , நான் கேட்டேன் அவனை அதன்பிறகு நீங்கள் பார்க்கவில்லையா என்று , சிரித்தாள் , சதை கேட்கும் அவளிடம் கதை கேட்கும் பைத்தியம் போல் என்னை பார்த்தாள் .
பிரிதொரு நாள் அதே அவன் அதே அவள் , அவனுடன் அவனின் அவளும் , இவன் இருவராய் , அவள் ஒருத்தியாய் , அவன் வாழ்க்கையின் தேடலில் தீவிரமாய் அடுத்த பேருந்துக்காய் இவளை பார்க்காதது போல தனது பணப்பையை இருகப்பிடித்தபடி நிற்க , அவளும் அவனை பார்க்காதது போல அவளின் இன்றைய அவனாய் ஒரு பிச்சைகாரனிடம் பேரம் பேசியபடி , அவளுக்கு அவனது முகம் அருவருப்பாய் அவனுக்கும் அவளது முகம் அப்படியேவும் .
அவன் தினமும் வெறுப்புடனும் இன்பமில்லாமலும் இயந்திரம் போல் வாழ்க்கையையும் அவனின் அவளையும் காதலையும் புணர்ந்தபடி காதலையும் காலத்தையும் அவளையும் மறந்தவனாய் ,
அவள் எச்சில் பண்டமாய் தெருவோர நாய்களின் பசிக்குணவாய் வாயோரம் வழியும் புகையிலையினை துடைத்து கொண்டு பேரம் பேசிய படி இன்றும் நாளையும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த நாளும் ஓயும் வரை , இவர்களில் யார் இதற்கெல்லாம் காரணம் என புரியாமல் இவையெல்லாம் எதற்கு என தெரியாமல் கதை புரியாத நான் .
____________________________________________________________________
பட உதவி - மின்னஞ்சல் நண்பர்.
17 September 2008
தோசாவதாரம் !!
'' என் வணக்கத்திற்குரிய தமிழ்மக்களே இந்தியர்களே மன்னார்குடி பஞ்சாயத்து போர்டு தலைவர் குப்புசாமி, அண்டார்டிகாவில் ஐஸ் வண்டி ஓட்டும் ஜம்புலிங்கம் அண்ணாச்சி , கேளம்பாக்கம் குஜிலி கும்பாவும் அமர்ந்திருக்கும் இந்த தரித்திர விழா மேடையில் நானும் பேச வந்த கதை பெரிய கதை ஓலகமே சம்பந்தப்பட்ட கதை ,
ஏன் இது ஒரு மாமி கதையும் கூட , என்னடா பீஸாகடை பீஸா மாஸ்டர் மாமி கதை சொல்கிறானே என்று ஒரு ஐயம் எழலாம் ,
இங்கே மத்தியில் அமர்ந்திருக்கும் இந்த ஜலஜாமாமியும் இந்த கதையில் ஒரு முக்கிய பாத்திரம் அதனால் இந்த மாமியின் கதையையும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது , ஜலஜா மாமிக்கு நிறைய டமால் டுமீல் கதையுண்டு அதை இங்கே சொன்னால் இக்கதை பிரசுரமாகாது இருந்தாலும் ஜலஜா மாமி சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு அக்கதை சொல்ல குறைந்தது நாம் 50 வருடங்களாவது பின்னால் போக வேண்டும் சோ ( இங்கிலீசு SO ) 1958 , பீஸாஹட்டும் டோமினோசும் இந்தியாவிற்குள்ளும் இந்தியர்களின் வயிற்றுக்குள்ளும் புகாத நூற்றாண்டு தோசையும் ஆப்பமும் மோதி விளையாட வேறு ஐயிட்டம்கள் இல்லாத காலம் அதனால் அதன் ரசிகர்கள் வாயிலாக தன்னுள் மோதிக்கொண்ட நூற்றாண்டு ''
'' நாய்க்கும் சரி மனிதனுக்கும் சரி ருசிகண்டு விட்டால் தொல்லைதான் , கொருக்குபேட்டை கவுன்சிலர் காளியப்பனுக்கு ஆப்பம் மிகவும் பிடித்து போனது , பசி ருசியானது , ருசி ஓசியானாது , அது வரை மாமி மெஸ்ஸில் ஆப்பத்துடன் ஒண்டி குடித்தனம் நடத்தி வந்த தோசையை கவுன்சிலர் காளியப்பன் நிறுத்த சொன்னான் , ''
கவுன்சிலர் ஆட்கள் தோசைகல்லை பெயர்த்து எடுக்க , அங்கே வருகிறார் ரங்கன் ( அந்த கடை தோசை ஸ்பெசலிஸ்ட் , அவரது சிறப்பு 18 வகை தோசைகள் ) , தோசைக்கல்லை பெயர்த்து எடுக்கும் அடியாட்களை அடித்து நொருக்குகிறார் ( அப்படித்தான் இயக்குனர் சொல்லி தந்திருக்கிறார் ) ,
'' சுங்கம் பஸ் ஸடான்டில கடலைவித்த காளியப்பன்கிட்ட சூடாக வேணானு சொல்லு , அப்படி சொன்னது ஆருனு கேட்டா இந்த ரங்கன்தான்னு சொல்லு இன்னா!! ,'' ரங்கன் சூடாகிறார் தோசைகல்லின் மேல் கரண்டியால் ஓங்கி அடிக்கிறார் .
காளியப்பன் காண்டாகி மேலும் ஆட்களை அனுப்பி ரங்கனை அடிக்க சொல்கிறார் , சமையலறை கதவை இருக்க பிடித்து கொண்டு ரங்கன்
'' சாதா தோசை , சுபெசல் தோசை , வெங்காய தோசை , ஆனியன் ரவா , etc etc.. ( கோவில் புரோகிதர்கள் போல படித்துக்கொள்ளவும் ) '' என்று கதறியபடி கதவை பிடித்துகொண்டிருக்க , காளியப்பன் ஆட்கள் அடித்த அடியில் கதவு இரண்டாய் பிளக்க ராமு தெரித்து அனல் பறக்கும் தோசைக்கல்லில் விழுகிறார் , அவரையும் அகண்ட பிரமாண்டமான தோசைக்கல்லையும் சேர்த்து இழுத்து வருகிறார்கள் ஆட்கள் ,
இனி வசனங்கள் ,
காளியப்பன் : இன்னா ரங்கா , பாரு உம்புள்ளைங்கள்ளாலாம் எப்படி கதருதுனு , மருவாதயா நான் சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத
ரங்கன் : இன்னா எம் பாட்ட என்னாண்டயே பாடுறியா .. மவனே நான் செத்தாலும் இத பண்ணமாட்டேன்
காளி : மவனே நீ போடற வெங்காய தோசை , கீரை தோசை , ரவா தோசைலாம் தின்னு வயிரு செம கப்பு மாமு
ரங்கன் : பாத்தியா நைனா உன் வாயலயே எத்தினி தபா தோசை தோசைனு சொல்ல வச்சிருச்சு பாரு நம்ம தோசை
இப்படி ஒரு கலாய்ப்பை எதிர்ப்பார்க்காத காளி கடுப்பாகிறார்
காளி : இன்னாடா ஒன்னோட படா பேஜாரா பூடுச்சு , சரி ஒன்னு பண்ணு உன் தோசைகல்லுல எனக்கு ஒரு ஆப்பம் சுட்டு குடுத்தினா உன்ன உயிரோட விட்டுடறேன்
ரங்கனின் மனைவி காண்டாகிறார் ,
ரங்கனின் மனைவி : ஏ ஒன்னொட படா ரோதனையாக்கீதே பேசாம அந்தாளு சொல்ற மாறி ஆப்பம் சுட்டு குடுக்க வேண்டியது தான...
அனைவரும் ரங்கனை தோசை போடச்சொல்லி வற்புறுத்துகின்றனர் .
ரங்கன் தனது தோசை கல்லை காய வைக்கிறான் அதில் தண்ணீரை தெளித்து ஈர்குச்சி விளக்கமாறால் ஒரு விளாசு விளாசி மாவை எடுத்து தோசை சுடுகிறான் , காளி கோபமடைந்து அவனை அந்த காய்ந்து போன தோசைக்கல்லுடன் வைத்து கட்டி கூவத்தில் போட உத்தரவிடுகிறான் ,
பாடல் ஆரம்பமாகிறது , ரங்கன் அடித்தொண்டையில் கத்துகிறான்
கல்லை மட்டும் கண்டால் தோசை தெரியாது
தோசை மட்டும் கண்டால் ஆப்பம் கிடையாது
ஆப்பமாவிலே தோசை சுடலாம்
தோசை மாவிலே முடியாது
ஆப்பமாவிலே தோசை சுடலாம்
தோசை மாவிலே முடியாது
பூனைகண்ணில் பார்த்தால் எல்லாம் ஆப்பம்தான்
யானைகண்ணில் பார்த்தால் யாவும் தோசைதான்
மாவு தீர்ந்த பின்பு மாமிமெஸ்ஸில் தோசைகிடையாது
சட்னி மட்டும் தீர்ந்து போனால் ஆப்பம் - தின்ன முடியாது
பாடல் முடிகிறது...
டார்ச்சர் செய்யப்பட்ட ரங்கன் கூவத்தில் வீதப்படுகிறான் ஆழமில்லா பகுதியில் வீசப்பட்டும் அந்த ஆற்றின் கப்பு தாங்க இயலாமல் கதறி கதறி கண்மூடுகிறான் ,
''ரங்கன் செத்ததற்கு காரணம் தோசையுமல்ல , அந்த ரங்கன் நம்பி நாசமாய் போனதற்கு காரணம் ஆப்பமும் அல்ல .... தின்றே செத்தவர்கள் கதை அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் உண்டு ,ஹோட்டல் தோசை சரியில்லையென்றால் அதை கூண்டில் ஏற்றி குற்றம் சாட்டலாம் , வீட்டு தோசையை குற்றம் சொன்னால் தங்கமணிகளிடம் அடி மட்டுமே மிஞ்சும் , இந்த வீட்டு சக்தி வாய்ந்த தோசைகளின் மேல் தோசைகளை அடிக்கினால் நிச்சயம் அதன் பின்புலத்தில் ஒரு மாபெரும் சக்தி நிச்சயம் இருக்கும் , உதாரணத்திற்கு மனைவி , நாம் என்னதான் அலுவலகத்தில் இருந்தாலும் நம்மை வீட்டிலிருந்தே ஆட்டிவைக்கும் சக்தி மனைவிக்கு மட்டுமே உண்டென்று சொன்னால் அது மிகையாகாது , பசி வந்த நேரத்தில் காய்ந்த தோசைகளால் நம்மை காலி செய்யும் மனைவியும் சரி , கெட்டு போன சட்டினியுடன் வரும் ஹோட்டல் தோசையும் சரி பசிக்கும் போது நமது பசியை நிச்சயம் தீர்ப்பதில்லை , உதாரணம் டிசம்பர் 27 2003 கிரிவலபவன் வாந்திபேதி , சென்னை மயிலையில் பல நூறு பேர்களின் வயிற்றில் கபடி விளையாடிய தினம் , சரி அதற்கும் நம் கதைக்கும் என்ன சம்பந்தம் , மேற்கத்திய சிந்தனையில் கேப்மாரி தியரி என்று ஒன்று உண்டு இந்த உலக விஞ்ஞான தத்துவப்படி உலக வாந்திபேதிகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனபதாகும் , எடுத்துக்காட்டாக அருந்து விழும் ஒரு சிறிய பல்லியின் வால் பல ஆயிரம் பேரின் வாந்தி பேதிக்கு காரணமாய் இருக்கக்கூடும் என்பதே தத்துவம் , என் கதை ஒரு வாந்தி பேதியில் தொடங்கி ஒரு பல்லியின் வாலில் முடிகிறது
கதையின் இரண்டாவது அத்தியாயம் நுங்கம்பாக்கம் , பீஸா பாயிண்டில் துவங்குகிறது கதை சொல்லும் நானே கதாநாயகன் ஆனேன் , நானும் ஒரு வகையில் டமால் டுமீல் குஜிலி கும்பாதான் , ஆம் ராயபுரம் ரவுடி ராக்கப்பனின் மகனாய் பிறந்து , தோசை சுடுவதில் பல பட்டங்கள் பெற்று இன்றைக்கு கொலைகாரன்பேட்டையில் தோசைக்கல்லில் டமால் டுமீலென பீஸாகளைகண்ட
குஜிலி கும்பன் , அவசர சேவைக்காக நூறு பீஸாக்களை உற்பத்தி செய்யும் வேலையில் என்னை போல பல மாஸ்டர்களும் கடினமாக உழைத்துகொண்டிருந்தனர் , என் பெயர் கோயிந்தசாமி , என்னோட பசங்க இன்னானு கூப்புடுவானுங்கோ தெர்மா .. கோமி கோமி.......
____________________________________________________________________________________
TO BE CONTINUED....AGAINST PEOPLE'S INTREST....
___________________________________________________________________
Photo Courtesy - Dasavatharam Audio Wrapper
16 September 2008
பொய் சொல்லப் போறோம் : சரக்கு பழசு ஸைடிஸ் புதுசு !!!
15 September 2008
வலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...!!!
அந்த வலைப்பக்கத்தின் படம்.