Pages

25 December 2008

சென்னையில் அதிரடி சரவெடி பதிவர் சந்திப்பு

ஹாய் மச்சான்ஸ் மச்சிஸ்..

இந்த வாரம் சிங்கப்பூர்லருந்து நம்ம ஜோசப் பால்ராஜ் அண்ணன் வராரு, அடுத்த வாரம் இங்கிலீசு புத்தாண்டு வருது , அப்புறம் இரண்டு வாரம் கழிச்சு தமிழ்புத்தாண்டு வருது , பொங்கல் வருது ... இப்படி நிறைய வரதால , உடனே நம்ம மக்களையெல்லாம் சந்திக்கலாம்னு பலரும் விரும்புறதா தெரியுது .

அதனால இந்தவாரம் சனிக்கிழமை , சாயங்காலம் 5.00 மணிக்கு , தி.நகர் நடேசன் பார்க்ல ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யலாம்னு பதிவர்கள் பிரியப்படறாங்க.

மக்கள் அனைவரும் தவறாம இந்த கூட்டத்தில கலந்துகிட்டு , அங்கே வருகிற ஸ்ரீஸ்ரீ ஜோசப் பால்ராஜ் சுவாமிகள் ஆசிகளை பெறலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமும் இருக்கும் ( ஆல்கஹால் நிச்சயம் இல்லை ! ) .

சென்ற முறை மெரினாவில் மழை வந்து ஆட்டத்தை கெடுத்தது போல இந்த முறை நிகழாது என வருணபகவானை வேண்டிக்கொள்வோம். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முறை சிலபல மண்டபங்கள் தேடப்பட்டது , விழாக்காலமாதலால் ஒன்றும் சரியாக அமையவில்லை . அதனால் மழைவந்தாலும் சமாளிக்க முடிந்த நடேசன் பார்க்கை பாலபாரதி அண்ணன் தேர்வு செய்தார்.

வெறும் கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு தவிர்த்து , சில முக்கிய நாட்டுநடப்புகளும் விவாதிக்கப்படும் . மென்மையான விவாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் .

பல அதிரடி பதிவர்களும் அல்டிமேட் பதிவர்களும் கலந்துக்குவாங்கனு எதிர்பார்க்குறோம்..

மக்கள்ஸ் மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள்..

சந்திப்பு நாள் - டிசம்பர் 27 -

இடம் - நடேசன் பார்க் , திநகர் , சென்னை.

நேரம் - மாலை 5.00

தலைமை - திரு.பாலபாரதி

பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு மட்டுமல்ல , வாசகர்களுக்கும்தான் , அதனால் புதுப்பதிவர்களும் , வாசகர்களும் கூச்சப்படாம கலந்துக்கோங்க..

அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்...

மேலதிக விபரங்களுக்கு -

அதிஷா - 9884881824 அல்லது dhoniv@gmail.com

லக்கிலுக் - 9841354308 அல்லது luckylook32@gmail.com

முரளிக்கண்ணன் - 9444884964


வந்து சேருங்க மக்கா...

புத்தாண்டை வரவேற்கலாம்... ஜோசப் பால்ரோஜோட...