Pages

23 January 2009

சென்னைப்பதிவர் சந்திப்புக்கு வந்த சோதனை..!

நேற்றைய பதிவில் சென்னைப்பதிவர் சந்திப்பு குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது . அச்சந்திப்பு சென்னை மெரினா கடற்கரையில் நடப்பதாக இருந்தது . ஆனால் 60வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடற்கரை முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பார்க்கிங் மற்றும் கூட்டமாய் அமர்ந்து பேசுவதும் பிரச்சனையாக இருக்கும் என பல பதிவர்களும் வாசகர்களும் நேற்று தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்தனர். அங்கே நேரில் சென்று பார்த்த போது பிரச்சனை ஒருமாதிரியாக புரிந்தது.

திடீரென இப்படி ஒரு சிக்கலை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. நடேசன் பார்க்கில் கொசுக்கடி பிரச்சனை இருப்பதால் புதிதாக ஒரு இடம் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.

அதனால் கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடியில் சந்திப்பை நடத்தலாம் என முடிவாகி அப்பதிப்பகத்தை அணுகினோம். அவர்களும் பெருந்தன்மையோடு அவர்களது மொட்டைமாடியில் நமது பதிவர்சந்திப்பை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினர்.

எனவே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடியில் நம் ஏற்கனவே திட்டமிட்டபடி நமது பதிவர்சந்திப்பு நடைபெறும்.


புதிய இடம் மற்றும் நேரம் -

இடம் - கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடி

நேரம் - 5.30 முதல் சந்திப்பு முடியும் வரை ( apprx 7.30 வரை)

கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )

மேலதிக விபரங்களுக்கு -

எனது முந்தைய பதிவு - http://www.athishaonline.com/2009/01/chennai-bloggers-meet-25-01-09.html


அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

முரளிக்கண்ணன் -9444884964

நர்சிம் -9940666868

கோவிக்கண்ணன் - 90477 44151


*******************************

தீடீரென உருவான இந்த பிரச்சனையால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். அனைத்து வாசகர்களும் , பதிவர்களும் கட்டாயம் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

நன்றி