Pages

30 April 2009

ஆனந்த விகடனில் லக்கிலுக்கு!



(ஏதோ ஒரு டாஸ்மாக்கில் யாருடைய சரக்கையோ கையில் வைத்துக்கொண்டு குடிக்காமல் போட்டோவிற்காக போஸ் மட்டும் கொடுக்கும் குடியென்றால் மிரண்டோடும் இரு நல்லவர்கள் - அதிஷா மற்றும் லக்கிலுக்)


தோழர் லக்கிலுக்கை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த தேவையில்லை. வலையுலகில் திமுகவின் கொ.ப.செ என்று பலராலும் அறியப்பட்ட முதியவர். திமுக எப்போதெல்லாம் மண்ணில் விழுந்து புரள்கிறதோ அப்போதெல்லாம் திமுகவின் குட்டிமீசையில் மண் ஒட்டவில்லை என மார்தட்டும் பதிவுலக டைனோசர். ஒரு வளரும் காட்டெருமை. மிகச்சிறந்த எழுத்தாளாராய் ஆகப்போகிறவர். அவரது எழுத்துக்களைப்பார்த்தே வலையுலகில் பல நண்டு சிண்டு பதிவர்களெல்லாம் எழுத வந்திருப்பதாய் பலர் அவரிடம் சொல்வதாய் அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.

ஞானி முதல் சாணி வரை ஒன்றையும் விடாமல் அனைத்தையும் சுவாரஸ்யம் குன்றாமல் தன் வலையில் அனுதினமும் எழுதுபவர்.

அவரது ஒரு சிறுகதை , சிறுகதை என்றால் மிக மிக சிறிய ஒரு பக்க அளவிலான ஒரு கதை இன்றைய ஆனந்த விகடனில் (6-5-2009 இதழ் - பக்கம் 26)வெளியாகியுள்ளது. அது ஒருபக்க கதையாக இருந்தாலும் ஒரு பக்கா கதையாகத்தானிருக்கிறது. நான் படித்ததுமே அப்படியே ஷாக்காயிட்டேன்.

இன்னும் அவரது பல சிறுகதைகள் , பெரிய கதைகள், நாவல்கள் , கவிதைகள் லொட்டுகள் லொசுக்குகள் என பலதும் பல பத்திரிக்கைகளில் வெளிவர அவரது இஷ்ட தெய்வமான கருணாநிதியாணந்தாவையும் அழகர் மலை ஆண்டவர் அழகிரியையும் வேண்டுகிறேன்.

விகடனில் வெளியான அவரது ஒரு பக்க கதை கீழே.. படித்து பயன் பெறுங்கள்..

ம்ஹூம். இன்னும் எத்தனை நாளைக்குதான் அடக்கிக் கொண்டிருப்பது. இனிமேல் சத்தியமாக முடியாது!’ மனோகர் தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டான். “இனிமேல் நைட்டு பத்து மணிக்கு மேலே டிவியே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களா பார்த்து அவஸ்தை ஆயிடுது”.

மனோகர் 27, கன்னி கழியாத பையன். சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கைநிறைய காசு. ஊரில் அப்பா அம்மா. வார இறுதியில் பீர். தினமும் ஒரு கிங்ஸ் பாக்கெட். இதைத்தவிர பெரிய தப்புத்தண்டா ஏதுமில்லை. கொஞ்ச நாளாகத் தான் அந்த எண்ணம் வந்தது. “கன்னி கழிஞ்சுட்டா என்ன?”

இண்டர்நெட்டை மேய்ந்தான். தூக்கம் வராத பொழுதுகளில் இணையமே துணை. இரவுகளில் இவன் பார்ப்பது பெரும்பாலும் ‘பலான’ சைட்டுகள். மேய்ந்து கொண்டேயிருந்தபோது திடீரென அந்தப் பக்கம் திறந்தது. “ஓரிரவுக்கு பெண் வேண்டுமா?”. மனோகர் அவசரம் அவசரமாக அப்பக்கத்தை ஆராய்ந்தான். ஒரு கைப்பேசித் தொடர்பு எண் அளிக்கப்பட்டிருந்தது.

“ஹலோ நான் மனோகர் பேசுறேங்க. இண்டர்நெட்டில் இந்த நம்பரை பார்த்தேன்!”

“உடனே வாங்க” என்று காதில் தேன் ஊற்றிய குரல் பெசண்ட் நகரின் ஒரு அட்ரஸை சொன்னது.

“வந்துங்க... காசு”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்”

முதல் அனுபவம். யாரையும் ஆலோசிக்கும் மனநிலையில் இல்லை. பைக்கை எடுத்துக் கொண்டு நேராக பெசண்ட் நகருக்கு விட்டான். அவள் சொன்ன அப்பார்ட்மெண்ட் நவநாகரிகமாக இருந்தது. ‘இங்கு கூடவா கால்கேர்ள் இருப்பாள்?’

13-பி. காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் கேட் விண்ஸ்லட் மாதிரி இருந்தாள். “வந்துங்க..” உளற ஆரம்பித்தவனின் உதடுகளை அழுத்தமாக பொத்தினாள் அவள் உதடுகளில்.

விடியும் வரை என்ன நேர்ந்தது என்றே மனோகருக்கு தெரியவில்லை. இறக்கை கட்டி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். அவளே அவனை குலுக்கி எழுப்பினாள். “எவ்வளவு?” என்று தயக்கமாக பர்ஸை திறந்துகொண்டே கேட்டான்.

“வாரத்துக்கு ஒருத்தருக்கு இலவசம். இந்த வார இலவசம் உங்களுக்கு” பதில் சொல்லி விட்டு வாசல் வரை இழுத்து வந்து வெளியே தள்ளினாள். அவசரமாக கதவைப் பூட்டினாள்.

படிகளில் உற்சாகமாக இறங்கினான். பைக்கை ஸ்டார்ட் செய்தான். பாக்கெட்டை அனிச்சையாக தொட்டுப் பார்க்க பர்ஸ் மிஸ்ஸிங். கையில் எடுத்த பர்ஸை பெட் மீதே வைத்தது நினைவுக்கு வந்தது. ”அய்யய்யோ. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறதே? க்ரெடிட் கார்ட்ஸ் வேற”

திரும்ப அவசரமாக ஓடினான். படிக்கட்டில் ஓட அவகாசமில்லை. லிஃப்டுக்குள் நுழைந்தான். “எத்தனையாவது ப்ளோர் சார்?” லிஃப்ட் ஆபரேட்டர் விடியற்காலையிலேயே பட்டையெல்லாம் அடித்து பக்திபரவசமாக இருந்தார்.

“13க்குப் போப்பா”

...................... முடிவை இன்றைய ஆனந்த விகடனில் 15 ரூபாய் செலவழித்து காண்க.. அல்லது ஒரு ரூபாய் செலவழித்து எனக்கு போன் செய்தால் நானே சொல்கிறேன்.

அதுவரை இப்போதைக்கு ஆபீஸில் களிம்பின்றி ஆப்புகள் அடித்துக்கொண்டிருப்பதால் உங்களிடமிருந்து விடை பெறுவது.. உங்கள் அதிஷா

29 April 2009

பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?

(பப்பரப்பா என்று கைவிரித்துக்காட்டும் இந்த பாப்பா - ரேஷ்மா )

பிட்டுப்படங்கள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம் . என்னதான் அப்படிப்பட்ட படங்களின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை காணும் தைரியம் இருப்பதில்லை. ஏனோ நமது சமுதாய கட்டமைப்பு அவற்றைக்காணும் வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதில்லை.ஆனாலும் இருபது வயது இளைஞன் முதல் அறுபது வயது பல்லில்லா கிழவன் வரை அனைவருக்கும் செய்வதை விட( என்ன செய்வது என நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல ஓடிவிடுங்கள் ) பார்ப்பதில்தான் ஒரு உற்சாகம்.

ரொம்ப சீரியஸாக இப்படிலாம் பதிவு போட்டா நான் தமிழின துரோகி ஆகிவிட நேரிடலாம். இருந்தாலும் வாலிப வயோதிக அன்பர்கள் பலரின் வேண்டுகோள் என்ன செய்ய?. ஒரு பிட்டுப்படத்தை முறையாக எப்படிப் பார்ப்பது என்பதை கற்றுத்தரும் கடமை தமிழ் கூறும் நல்லுலகை சேர்ந்த எனக்கு இருப்பதாய் முந்தாநாள் போன் பண்ணிய சுந்தரிலிருந்து அடுத்தவாரம் போன் செய்ய இருக்கும் சுரேஷ் வரை அனைவரது வேண்டுகோளும்.

முதலில் பிட்டுப்படங்களை பிட்டுப்படங்களாய் பார்க்காமல் அவற்றை ஒரு உன்னத அனுபவமாய் பார்க்க என்னவெல்லாம் செய்யலாம். வாங்க பதிவுக்கு போகலாம்.

பிட்டுப்படங்களில் பல வகைகள் உண்டு. டபிள் எக்ஸ்,டிரிபிள் எக்ஸ், ஆங்கிலம்,தமிழ்,மலையாள தமிழ்,தமிழ் மலையாளம், ஹிந்தி தமிழ்,தமிழ் ஹிந்தி இப்படி இன்னும் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் டபிள் எக்ஸ் என்பது டபிள் எக்ஸ். டிரிபிள் எக்ஸ் என்பது டிரிபிள் எக்ஸ். இதற்கெல்லாம் கூட விளக்கம் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.

*****************************

*நேரம் இது மிக மிக முக்கியமானது. சில தியேட்டர்களில் காலைக்காட்சியில் மட்டுமே இது மாதிரி படங்கள் காட்டப்படும். அதிலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இன்னும் சில மாதங்களில் மூடும் தருவாயில் இருக்கும் தியேட்டர்களென்றால் உசிதம். நான்கு ஷோவும் பிட்டுப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை நாடுவது வீண். பிட்டுகளுக்கான உத்திரவாதம் இருக்காது. வெக்குனாப்புல போக நேரிடும். அதனால் முடிந்தவரைக்கும் காலைக்காட்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். (நேரம் 11லிருந்து 11.45 வரை மட்டுமே.. அதான்ல ஆபீசுக்கு லீவெல்லாம் போட வேண்டாம், ஒரு மணிநேர பர்மிஷனில் போய் வந்துவிடலாம்..;-)

* முதலில் டிக்கெட் எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளவேண்டும். பிட்டுப்படம் இருக்கும் சாலையோரம் சகஜமாய் நடந்து சென்று.. யாரும் பார்க்காத போது சடக்கென்று உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான். ஒரு பாம்பு எப்படி புத்துக்குள் ஊர்ந்து ஊர்ந்து புசுக்கென நுழையுமே அது போல. உள்ளே சென்றதும் கவுண்டர் என்ற ஒன்று இருக்கும் ( கட்டாயமாக ஜாதி இல்லை! ) . அது டிக்கெட் வழங்குமிடம். அங்கே சென்று டிக்கெட்டை வாங்க வேண்டும் . ( முடியல!)

* ஒரே விலைதான் எல்லா டிக்கெட்டும் என்பதை மனதில் கொள்க. (பிட்டுப்பட தியேட்டர்களின் எழுதப்படாத விதி! விதினாலே அப்படித்தான் ) . சமீபத்திய விபரம் 20 ரூ எல்லா வகுப்பும் ( அட!!). படத்தை முழுமையாக பார்த்தபின் இது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் இழந்த பணத்தை மீட்கலாம். அல்லது கன்சுயூமர் கோர்ட்டுக்கும் போகலாம்.

*அதனால் மறுபேச்சு பேசாமல் எவ்வளவு கேட்கிறார்களோ அவ்வளவையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவது உத்தமம். இல்லாவிட்டால் நீங்கள் தியேட்டரிலிருந்து தேவையில்லாமல் வெளியேற்றப்படுவீர்கள். அதைவிட நம் குலத்திற்கு மிகப்பெரிய அவமானம் இருக்குமா! அதிலும் நீங்கள் கேட்ட காசை கொடுக்க வில்லையென உங்கள் குமட்டில் குத்து விழுவதை யாரேனும் பார்த்துவிட்டால், ஐயகோ...

*அதனால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே நிறைய பணமெடுத்துக்கொண்டு செல்லவும். அல்லது பணமுள்ள நண்பரை அழைத்துச்செல்லவும். செல்லும் வழியில் படத்தில் ஆறு பிட்டு ஏழு பிட்டு என ஏகத்திற்கு கப்சா விடவும். (பிட்டு வரவில்லை என்றால் சே கட் பண்ணிட்டாய்ங்க சார் என்று கழண்டு கொள்ளலாம்.)

* அதே போல் உள்ளே நுழைந்தவுடன் தியேட்டரின் மிக இருட்டான பகுதிக்குள் பதுங்கிக்கொள்ளவும். அது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.

*ஆர அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும். (சம்பிரதாயம்ப்பா). பக்கத்தில் இருப்பவர் விடாவிட்டால் முதுகில் தட்டி மூச்சுவிட சொல்லுங்கள்.

*எப்படியோ உங்களை தியேட்டருக்குள் அழைத்து சென்றாகிவிட்டது. ஆறு மணிக்கு படம் என்றால் அது ஆறு முப்பதுக்குத்தான் தொடங்கவேண்டும் என்பது தியேட்டர் உரிமையாளரின் விருப்பம். அதனால் அரைமணிநேரம் வாசல் பக்கம் யார்யார் வருகிறார்கள் என அரை வெளிச்சத்தில் பார்த்து ரசிக்கலாம். (உங்கள் உற்றார் உறவினர் வந்தால் உசாராக உதவுமே )

*இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் உங்களை ஆரம்பத்தில் தியேட்டரின் இருட்டான பகுதியில் அமரச்சொன்னேன் என்று.

*அந்த அரை மணி நேர இடைவெளியில் லத்தீன் அமெரிக்க மற்றும் இத்தாலிய ரோமானிய இசையெல்லாம் , பாதி உடைந்து போன ஸ்பீக்கரில் போடுவார்கள் அதை ஆத்மார்த்த அனுபவமாக, பழுத்து வெடிக்க காத்திருக்கும் பலாப்பழத்தைப்போல கேட்டு ரசிக்க வேண்டும். (இல்லாவிட்டால் குமட்டில் குத்துவேன்) . (விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இதையெல்லாம் ரசிக்க தெரியாது, நம்மைபோன்ற அறிவுஜீவி குஞ்சுகளுக்கு மட்டும்தான் தெரியும். நாம் எதற்கு தியேட்டருக்கு வந்திருக்கிறோம் என்று.. குஞ்சு என்றால் கோழிக்குஞ்சு,ஆமைக்குஞ்சு,மீன் குஞ்சு என பொருள் கொள்க)

*ஸ்ப்பாடா ஒருவழியாக படம் போட்டாச்சா! , இங்கேதான் நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கியமான விடயம் வருகிறது. ஷகிலா படங்களில் முதல் காட்சியில் சாமி கும்பிடும் காட்சியோடு படம் துவங்கினால் படத்தில் 100 சதவீதம் குறைந்தது ஆறிலிருந்து பத்து பிட்டுகள் உத்திரவாதம். அதனால் வெறும் சாமி கும்பிடும் காட்சிதானே என பப்பரப்பா என பராக்கு பார்த்துக்கொண்டிருக்காமல் படத்தில் கவனமாய் இருக்க வேண்டும்.

*படத்தில் ஷகிலாவின் கணவனாகவோ அல்லது முக்கிய பாத்திரம் (கதாநாயகியின்) கணவனாக ஒரு அரைமண்டை கிழம் இருந்தால் வெற்றி உங்களுக்கே..! ஆறு பிட்டு உத்திரவாதம்.

*படம் ஆரம்பித்த பின் முன் சீட்டு ஏன் ஆடுகிறது, பின்னால் என்ன முனகல் சத்தம், ஐயோ குய்யோ என்று யார் கத்தினாலும் எதற்கும் தலை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பிடாதீங்க.. அதற்கான காரணங்கள் அனுபவித்து உணர வேண்டியது.பக்கத்து சீட்டில் அமரும் நபரை உன்னிப்பாக கவனிக்கவும். அவர் உங்களைப்பார்த்து சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்து ஏதும் புண்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.

*இன்டர்வெல்லுக்கு முன்னால் அதாவது படம் துவங்கி சரியாக அரைமணிநேரத்திற்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும் , தப்பி தவறி கூட படம் துவங்கியதிலிருந்து இன்டர்வெல் வரை ஆய்,சூச்சூ, உச்சா, கிச்சா ,தம்மு எதற்கும் போய் விடாதீர்கள். மிக முக்கியமான பிட்டை இழக்க வேண்டியிருக்கும்.

*இன்டர்வெல்லுக்கு பிறகு பொதுவாகவே எந்த தியேட்டரிலும் பிட்டுகள் போடுவதில்லை. சப்பையான கிளைமாக்ஸ் மட்டுமே.

அதை பார்ப்பதை விட இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் , தியேட்டரை விட்டு அரக்க பரக்க பின்னங்கால் பிடறியில் பட ஓடி விடுவது நல்லது. தியேட்டரும் இருட்டாக இருக்கும். யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லை.

*இப்படி ஒரு வழியாக பிட்டுப்படத்தை பார்த்து முடித்ததும் . வீட்டிற்கு சென்றதும் பழனி ஆண்டவரை வணங்கி நெற்றி நிறைய பட்டையிட்டு பேசாமல் படுத்து உறங்கவும். இறைவன் அருள் உங்களுக்கே சொந்தமாகும்.

***************************

பின் குறிப்புகள்.

*ஆங்கில பிட்டுப்படங்கள் தற்காலத்தில் அதிகம் வருவதில்லை. வந்தாலும் அவற்றில் பிட்டுகள் மகா மொக்கையாக இருப்பதால் அவற்றை பார்ப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

*அதே போல இந்தி பிட்டுப்படங்களில் .. பிட்டுகள் இடம் பெற்றாலும் மலையாளத்தை நெருங்கவே முடியாது. நெருங்கினாலும் இந்திக்காரர்கள் உணவைப்போல அதாங்க சப்பாத்தி போல இருக்கும். அதற்கு மேல் உங்களிஷ்டம்.

*சீன , கொரிய பிட்டுப்படங்களில் எனக்கு தெரிந்தவரை அலெக்ஸான்டரா வை அடித்து கொள்ள வேறு படமே இல்லை எனலாம். மற்ற படி அவை ஒரு உன்னத அனுபவத்தை தரவல்லது. சாப்ட் பிட்டு (soft biitu ) பார்க்க விரும்புபவர்கள் முயற்ச்சிக்கலாம்.

**************************

இது தவிர , டிவிடி வடிவத்தில் கிடைக்கும் பிட்டுப்படங்கள் பார்க்கும் போது எப்படி பார்க்க வேண்டும் என உங்களுக்கு நான் சொல்லித்தர தேவையில்லை. முடிந்த வரை படத்தை மியூட்டில் வைத்து ஒரு கையில் ரிமோட்டை பிடித்துக்கொண்டு காதை கூர்மையாக வைத்துக்கொண்டு பார்க்கவும். யாராவது வந்தால் அணைத்துவிட ( டிவியை!) வசதியாக இருக்கும்.

ஆனால் மிகச்சிறந்த ஆங்கில,மாற்றுமொழி பிட்டுப்படங்கள் வாங்க ஒரு மிகச்சிறந்த வழியுண்டு, சாரு நிவேதிதா மாதிரி கிம் கி டுக்... டின்டோ பிராஸ், சிரிலோ கிரிஸ்கோஸ்கி,அந்தோனி போர்ஜெஸ் போன்றோரின் படங்களை பார்ப்பவரை நண்பராக்கி கொள்ளுங்கள் . அவர்கள் பார்க்கும் படங்களின் பெயர் மட்டும் வாங்கிக்கொண்டு அதை போய் டிவிடி கடையில் கேளுங்கள். அவர் நிச்சயம் இரண்டில் ஒன்று தருவார், ஒன்று அந்த படத்தின் டிவிடி அல்லது சாராமாரியான அடி உதை.. இனிமே இந்த கடை பக்கம் வந்த மவனே சாவடிதான் என்கிற இலவச வசனத்தோடு.. ( சமயங்களில் சார் இந்த படமெல்லாமா பாக்கறீங்க பெரிய ஆள்சார் என்று பாராட்டவும் நேரிடலாம் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல)

***********************

இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.

23 April 2009

சந்தித்தவேளையும் சரக்கடித்த லீலையும்...!



தமிழகத்தில் அண்ணாச்சிகள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் பிரபலமாய் இருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். என் தெரு முனை அண்ணாச்சிகடை அண்ணாச்சியிடமிருந்தே துவங்குகிறேனே!. அடுத்து திருமங்கலம் இடைத்தேர்தலில் எழுநூறு ஓட்டுக்கள் வாங்கி சாதித்த ஒரு அண்ணாச்சி இருக்கிறார்.அவரைப்பற்றியல்ல.. துணிக்கடை அண்ணாச்சி ஒருவர். இட்லிக்கடை அண்ணாச்சி ஒருவர். சோறு போட்டு கல்வி கொடுத்த அண்ணாச்சி ஒருவர். படித்து முடித்த இளைஞருக்கு வேலை வாங்கித்தரும் அண்ணாச்சி ஒருவர். அண்ணாச்சிகள் வரலாற்றில் மிகமுக்கியமான இடத்தை வகிப்பவர்கள். இங்கே சாதீய அடிப்படையில் இதை சொல்லவில்லை. எங்கள் தெருவில் கடை வைத்திருக்கும் அண்ணாச்சி ஒரு மலையாளி என்பதே இதற்கான சாட்சி.

எதற்கு இவன் அண்ணாச்சிகளின் புகழ் பாடுகிறான். இப்போது என்ன வந்துவிட்டது அண்ணாச்சிகளுக்கு! எதற்காக அண்ணாச்சிகளை இழுக்கிறாய் நீயும் ''எங்கே அண்ணாச்சி'' என்று ஏதேனும் தொடர் எழுதப்போகிறாயா என்றெல்லாம் எண்ணங்கள் எழக்கூடும். இது அதற்கல்ல . அரபு நாட்டில் அப்படி ஒரு அண்ணாச்சி இருக்கிறார். அவரை முதல் முதலாக சந்தித்தது சென்னை தி நகர் பனகல் பார்க்கில்தான். மிக சுவாரஸ்யமானவர். பல அஜால் குஜால் கதைகளையும் அதி அற்புதமான கவிதைகளையும் ( கவிதைகளில் அஜால் குஜால் இருப்பதே இல்லை) வைத்திருப்பவர். பழக இனியவர். இதற்கு மேல் புகழ்ந்தால் கெட்ட வார்த்தைகளில் வசை பாடுபவர். மூத்த , பிரபல, பீத்த , பீதாம்பர என்று எந்த அடைமொழியில் அழைத்தாலும் அவரும் ஒரு பதிவர்.

அவர்.......... ஆசீப் அண்ணாச்சி... ( ஓகே ஓகே கைத்தட்டினது போதும். கூல் டவுன் மக்களே அவருக்கு அதுலாம் புடிக்காது.. அடிப்பாரு)

அவர் தன் பாசமிகு பதிவுல தம்பிகளைக் காண அரபு நாட்டில் இருந்து பறந்தோடி வருவதாய் பட்சி சொல்லவில்லை என் பாசமிகு அண்ணன் பாலபாரதி சொல்லுகிறார்.

அதனால் என்ன?

இந்த வாரம் சனிக்கிழமை பதிவர் சந்திப்பு மக்கா எல்லாரும் ஒழுங்கா வந்து சேருங்க..

இடம் - சேம் பிளேஸ்தான் - காந்திசிலை தண்ணீர் இல்லாத குட்டை

டயம் - ஈவ்னிங் 5.30 லருந்து

என்னைக்கு - இதோ வர சனிக்கிழமை! ஏன்ப்பா சனிக்கிழம என்னப்பா தேதி 25-04-2009

ஆசிப் அண்ணன் எல்லாருக்கும் தன் கையாலே கரப்பான்பூச்சி விருதும் , அதைத்தொடர்ந்து சரக்கும் சைடிஷும் வாங்கிக்கொடுத்து தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.

( சரக்கு என்றால் டீ - சைட் டிஷ் என்றால் வடை அல்லது பதிவர்சந்திப்பு புகழ் போண்டா என்று பிகினி சித்தர் ஏழாம் நூற்றாண்டில் பாடிச்சென்றதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே)


*******************

சரக்கென்றதும் டக் கென உங்களுக்கு என்ன ஞாபகம் வரும். எனக்கு முதலில் வருவது வாந்தி. அடுத்து சாருநிவேதிதா. போதைக்கே புதிய பரிமாணத்தை தன் எழுத்துக்களின் மூலம் தந்தவர். தந்துகொண்டிருப்பவர். எத்தனையோ பேர் அவரை சாடினாலும் இகழ்ந்தாலும் காரித்துப்பினாலும் அவரது இணையதளத்தில் தினமும் வாசிக்கத் தவறுவதே இல்லை. நானும் அப்படித்தான். இணையத்தில் இயங்குகிற பெரும்பாலானோர் அப்படித்தான். பாவம் மனிதர் என்ன கஷ்டமோ என்னவோ தன் புத்தகங்களை குறைந்த விலையில் கூவி கூவி விற்கிறார். ஓசியில் நோகாமல் படிக்கும் பலருக்கும் காசு கொடுத்து புத்தகம் வாங்க வேப்பங்காயாய் கசக்கிறது. நானும் அப்படித்தான். என்னால் ஆயிரம் ரூபாய்கள் செலவளித்து அந்த புத்தகங்களை வாங்கி அவருக்கு உதவ முடியாதே! நான் அவரைவிடவும் உலகமகா ஏழை. அது உலகுக்கே தெரியும். இருந்தாலும் சாருவின் மீது அவர் பணக்கார நண்பர்களோடு மட்டுமே பழகுவார் என்கிற ஒரு விமர்சனம் இருக்கிறது. அது யாரோ சிலபல உத்தமதமிழ் எழுத்தாளர்கள் கிளப்பிவிட்ட வதந்தியாக இருக்கக்கூடும். அவரது நண்பரான நான் ஒரு பரம ஏழை, அவரைக்காட்டிலும்!. அதனால்.....

என் கம்பேனி தந்த கம்யூட்டரில் , என் கம்பேனி தந்த இன்டர்நெட் கன்க்சனில் இந்த பதிவிற்கு நடுவே நம் நண்பர் சாருநிவேதிதாவுக்காக ஒரு குட்டி விளம்பரம்.

மிகசமீபத்தில் வெளியான அவரது பத்து புத்தகங்கள் மலிவு விலையில் நமது வாசகர்களுக்காக.. வாங்கி படிங்க நண்பர்களே..

இங்கே முழுவிபரமும்.


****************

ஏப்ரல் மாதம் 23 ஆம் தியதி உலக புத்தக தினம். நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் அதைக்குறித்து தெரிந்து கொள்வது நல்லதில்லையா!. இது குறித்து எனக்கும் நேற்றுவரை தெரிந்திருக்கவில்லை. வலைச்சரத்தில் எழுதிவரும் பிரியமுடன் பிரபுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி நண்பா!.

இந்த தினம் குறித்த மேலதிக விளம்பரங்களுக்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

அடத் தமிழிலேயே விக்கியில்! இதுகுறித்து பதிந்த அந்த தமிழருக்கு நன்றிகள்..

****************

அடச்சே! தமிழரின் மானத்தையே வாங்கிவிட்டார்கள். தமிழனுக்கு இப்படி ஒரு கொடுமை நேருவது இதுவே முதல் முறை. என்ன கொடுமை இது. நகத்தைக்கடித்துக் கொண்டு நேற்று டிவியை பார்த்து அப்படியே ஷாக்காய்ட்டேன்.

ஹைடன் என்ன அடி அடித்தார். அவர் அடித்த அடிக்கு எத்தனை சுலபமாய் வெற்றி பெற்றிருக்கலாம். சேசே தமிழன் மானம் சந்தி சிரிக்கிறது. இவர்களெல்லாம் தமிழர்களா.. கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா.. பொறுப்பு இருக்கிறதா..

டெல்லி ஒரு மொக்கை அணி. முழு பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமால் தமிழரின் மானம் பறிபோகிறதே என்கிற அக்கறை சிறிதும் இன்றி ஆடினர். அதிலும் மிக எளிதாக நாம் ஜெயித்துவிடவேண்டிய ஒரு மேட்சை தனது அக்கறையில்லாத ஆட்டத்தால் தோற்றுப்போனது கண்டு மனம் வெதும்பினேன். அதையே மதுரையே சேர்ந்த ஒரு இளைஞரும் மைதானத்தில் கூறினார். நன்றி செட் மாக்ஸ்.

பார்க்கும் போது மனம் வெடித்தது. இதயம் பொங்கியது. கையிலிருக்கும் ரிமோட்டை உடைத்து விடலாம் என்று கூடத்தோன்றியது. என்ன செய்ய என் வீட்டு பிளாக் அண்ட் வொயிட் சாலிடேர் டிவிக்கு ரிமோட் கிடையாது. தீக்குளித்துவிடலாம் என்று கூடத் தோன்றியது. மண்ணென்ய் தீர்ந்துவிட்டது. அடுத்த மாதம்தான் கிடைக்குமாம். அதற்குள் இன்னும் தமிழன் மானத்தை எப்படியெல்லாம் வாங்கப்போகிறார்களோ..

அதனால் மனம் நொந்து வெந்து வெதும்பி ஒன்றும் செய்யாமல் தமிழரின் நிலைகண்டு அழுது புரண்டு கேடிவியில் போட்ட அண்ணாச்சி நடித்த ( திருமங்கலம் தேர்தல் புகழ் ) ஐயா படம் பார்த்து 9 மணிக்கே தூங்கி போனேன். நாளைக்கு டெல்லியில் இருந்து எனது மூத்த அதிகாரி (இந்திக்காரர் ) வருகிறார். என்னைத்தான் கடலில் தூக்கியெறிந்தாலும் கட்டுமரமாக மிதக்க வேண்டுமே.. விடியட்டும் பார்த்துக்கொள்வோம். இன்னும் பல ஆட்டங்கள் தமிழனுக்கு இருக்கிறது. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

********

அவன் பெயர் டக்ளஸ். எப்போதும் என்னை நெக்ஸ்ட் மீட் பண்ண துடிக்கும் துடிப்பான இளைஞன். எதையும் ஆராய்ச்சிப் பண்ணும் குறுகுறுப்பு. எது சொன்னாலும் ஏன் என்று கேட்கும் எனக்கு பிடித்த பதிவன். அவன் இவனென்று அவரை மரியாதையின்றி விளிப்பதை அவன் ஏற்றுக்கொள்வான் என்றே நினைக்கிறேன்.


நேற்று சாட்டில் பேசும் போது ஏன் இப்போதெல்லாம் எதிர்வீட்டு ஜன்னல் எழுதுவதில்லை என்றான். பதிவெழுத மேட்டரே இல்லையென்றால்தான் எ.வீ.ஜ எழுதுவேன் என்றேன். அவ்வளவு ஈஸியா அது என்றான். வேண்டுமானால் நீ ஒரு தலைப்பு கொடு அதை வைத்து எழுதித் தருகிறேன் என்றேன்.

இதோ இந்த பதிவு. போதுமா நண்பா ராம்ராஜ் என்கிற எனக்கு பிடித்த என் டக்ளஸ் தம்பி.


****************

அப்படியே அகில உலகத்திலும் சந்திரமண்டலத்திலும் இருக்கும் பல ஆயிரம் கோடி மக்களும் மக்களும் முப்பது முக்கோடி தேவர்களும் நாப்பது நாற்கோடி அசுரர்களும் மும்மூர்த்திகளும்

நம் வலைப்பதிவை படிக்கும் ஆறு கோடி தமிழ்மக்களும்

திருச்சியில் போட்டியிடும் எங்கள் அன்பு அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கும் , ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் வலையுலக புகழ் எட்டாவது வள்ளல் ஜே.கே.ஆர் அவர்களுக்கும் , வருங்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு வெற்றிபெற செய்யுமாரு காலில் விழுந்து கதறி அழுது கேட்டுக்கொள்கிறேன். ( யோவ் நீங்க குடுத்த அறுபத்தியஞ்சு ரூவாவுக்கு இவ்ளோதான் கூவ முடியும்... இலவசமாய் கூவ பதிவுலகில் பல கோயிஞ்சாமிகள் இருக்கிறார்கள் அவர்களை அணுகவும்.)

*************

மேலே எழுதியிருந்த மொத்தத்தையும் படித்திருந்தால். மன்னிக்கவும் இன்னும் நான்கு நாட்களுக்கு நம் வலைப்பூ விடுமுறை. அதனால் நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒரே பதிவாக...

நேரடியாக கடைசி வரிக்கு வந்திருந்தால் இந்த பதிவையே நாள்தோறும் தினமும் ஒரு பாரா என்று படித்து அறிவை வளர்த்து வைகுண்டத்திற்கு செல்லலாம்.

நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

இன்று பந்த் - வெற்றி! வெற்றி! வெற்றி!




வெற்றி வெற்றி வெற்றி

ஆட்டோக்கள் ஓடவில்லை

பஸ்கள் வரவேயில்லை

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தலைவா உன் பந்த் அபார வெற்றி

சன்டிவியில் திருடாதிருடி

கலைஞரில் முரட்டுக்காளை

ஆதித்யாவில் இடைவிடாத சிரிப்பு

சிரிப்பொலியின் நகைப்போ இன்னும் அடங்கவில்லை

தங்கைக்கு குழப்பம் ரஜினியா தனுசா

பக்கத்துவீட்டு அக்காவுக்கு புதுப்படம் டிவிடி

அதிலும் குழப்பம்

ஆங்கிலமா தமிழா!

அம்மாவுக்கோ குழப்பம் குழம்பு வைப்பதில்

இன்றைக்கு மட்டனா சிக்கனா மீனா? - அப்பாவுக்கு

இன்னும் தெரியவில்லை மதியம் கலைஞரில் என்ன படமென்று

புதுப்படமா பழைய படமா? - எனக்கோ

மதியம் உறங்கலாமா அல்லது புதுப்பதிவா?

ஆயிரம் குழப்பங்கள் அத்தியாவசிய குழப்பங்கள் - ஆனாலும்

மனது நிறைந்து மகிழ்ச்சியாய் இருக்கிறது

ஈழத்தமிழா உன்னால்தான் இன்று இது...

தமிழகமே நன்றி சொல்லும் உன் சாவுக்கு

சாவு சாவு மேலும் சாவு

ஐ பி எல் ஆட்டம் தொடங்கிவிடும்

அது வரைக்கும் சாவு

ஆட்டம் முடிந்ததும் சந்திப்போம்

பந்த் நடத்திவிட்டோம் வெற்றிகரமாய்

இனி உனக்கும் மகிழ்ச்சிதான்

கடைசியாய் ஒன்று

தமிழினத்தலைவர் கலைஞருக்கு

விஷ் யூ ஏ வெரி ஹேப்பி பந்த் டே

***************************

21 April 2009

சரத்பாபு என்றொரு கைப்புள்ள!


சரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன். தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு வேறு ஆள் என்று.

ஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது. யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர். இந்தியாவை முன்னேற்ற! பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.

ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.

கட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.

இதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா? . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள்? அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா.. தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை. எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நடைமுறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.

அதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது. சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று. விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.

ஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.

அவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.

காதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்கு தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.

இது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.

இதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.

அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.

ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.

17 April 2009

உடல்கள் விற்பனைக்கு...




அவளை நம் எல்லாருக்குமே தெரிந்திருக்கும். அவள் பெயர் சில்க் ஸ்மிதா. எங்கோ ஆந்திராவில் விஜயலட்சுமியாய் பிறந்த அவள் தமிழ்சினிமாவின் போக்கையே சில காலம் மாற்றியமைத்தவள். அவளின்றி ஒரு படமும் வெளியாகவில்லை. அப்படி வெளியாக முயன்ற சிலதையும் வாங்க மறுத்தனர் விநியோகஸ்தர்கள். அவளின்றி சூப்பர் ஸ்டார்களின் படங்களும் பெட்டிக்குள் முடங்கிய காலமெல்லாம் உண்டு.


ஆனால் அவளே ஒருநாள் முடங்கிப்போவாள் என்று அன்று அவளோ சுற்றியிருந்தவர்களோ நினைத்திருக்க நியாமில்லை. அவளும் வீட்டிற்குள் முடங்களினாள். ஒரு நாள் ஊரே ரசித்த உடல் அந்தரத்தில் தொங்கியது. பிணமாய் கிடந்தாலும் அப்போதும் விடாமல் அவ்வுடலை ரசித்தகதைகள் கூட அவளைப்பற்றி சொல்வதுண்டு. அவள் பெயர் சில்க் ஸ்மிதா. புகழின் உச்சியில் இருக்கும் ஒருவர் தன் வாழ்வின் கடைசியில் உடல்நலம் குன்றி புகழ் இழந்து , வீட்டிற்குள் முடங்கிப்போவது நம்மூரில் புதிதல்ல. எத்தனையோ வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் நம் தெருவின் ஊரின் மூலையில் எங்கோ முடங்கித்தான் கிடக்கிறது.


அப்படி ஒருவனின் கதை THE Wrestler. ராண்டி தி ராம் ராபின்சன் என்ற பெயர் 80களின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருப்பதாய் பறைசாற்றும் பத்திரிக்கைகளினோடு காட்சி துவங்குகிறது. அவனது ஒவ்வொரு சண்டையும் பல லட்சம் பேரால் ரசிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பட்டித்தொட்டியெல்லாம் அவன் பெயர் சுவாசிக்கப்படுகிறது. ஆனால் இப்படம் அவனது எழுச்சியைப்பற்றியதல்ல. உடல் தளர்ந்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கையில் காலணா இல்லாமல் அவன் வாழ்க்கைப்போராட்டம் குறித்தது.


அவனது வீழ்ச்சி , அவனது குடும்பத்தின் நிராகரிப்பு , ஏழ்மை , ஒரு விபச்சாரியுடனான அவனது காதல் , உள்ளூர் மல்யுத்தப்போட்டியில் விளையாடியதால் மாரடைப்பு , அதனால் மல்யுத்தமாடத்தடை , மீண்டும் மல்யுத்தத்தில் பிராகசிக்க வரும் வாய்ப்பு , அதனை இவன் மறுப்பது , ஒரு கறிக்கடையில் வேலைக்கு சேருவது , அங்கே அவனது பழைய ரசிகர் அடையாளம் காண்பது , காதலியின் எதிர்ப்பையும் மீறி போட்டியில் கலந்து கொண்டு மல்யுத்த மேடையில் உயிர் துறக்கிறான் என படம் நகர்கிறது.


படத்தின் மிகமுக்கிய பாத்திரத்தில் மிக்கி ரூர்க் (MICKEY ROURKE) . 1941 என்னும் காமெடி திரைப்படத்தின் மூலம் ஸ்பீல்பெர்க்கால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்கு பின் சின் சிட்டி திரைப்படத்தின் பார்த்ததாய் ஞாயபகம். ஆனால் இந்த படம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் . ஹாலிவுட் கமலஹாசன் என பாராட்டலாம்.


ராண்டி தி ராம் ராபின்சனாகவே வாழ்கிறார். அதிலும் தனது மகள் தன்னை நிராகரிக்கும் காட்சியில் பிரமாதம். தூள்! என்று சொல்ல முடியவில்லை. மனத்தை கனக்கவைக்கிறார். மிக அற்புதமான நடிகர்.


ஒரு காட்சியில் கறிக்கடையில் கறித்துண்டுகளை வெட்டிக்கொண்டிருக்கிறார். அங்கே வரும் வாடிக்கையாளன் ஒருவன் அவரை அடையாளம் காண்கிறான். தாங்கள்தானே ராண்டி என கேட்க இவனோ தலையை குனிந்து கொண்டு நான் இல்லை நான் இல்லை என மறுக்கிறான். அவன் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறான். எத்தனை முயன்றும் அவனால் அழுகையையும் ஆதங்கத்தையும் அடக்கமுடியாது தன் கையை அந்த கத்தியால் அறுத்துக்கொண்டு ரத்தத்தை முகத்தில் பூசியபடி ராண்டி தி ராம் நான்தான்டா என கதறியபடி அந்த கடையை விட்டு வெளியேறுகிறார். அபாரமான நடிப்பு. அதைக்குறித்து எழுத வார்த்தைகள் ஏனோ சிக்கவில்லை.

விபச்சாரியாக அல்லது ஸ்டிரிப் டான்சராக வரும் கதாநாயகி. மரிசா டோமி. அவளது தளர்ந்து போன உடலை கேலி செய்யும் வாடிக்கையாளனை எதிர்கொள்வதாகட்டும் , தன் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் மல்யுத்த வீரனிடம் தன் காதலை தெரிவிக்க முடியாமல் தவிப்பதில் ஆகட்டும் அசத்தல் நடிப்பு.


படத்தின் கதை மல்யுத்தம் , ஸ்டிரிப் டான்ஸ் விபச்சாரம் எனும் இரண்டு வெவ்வேறு தளங்களில் இயங்குகிறது. (நாயகன் மற்றும் நாயகியின் தொழில் முறைகள் அவை) . இரண்டிற்குமான உடல் சார்ந்த ஒற்றுமையும் முதுமையின் முடிவில் அவர்கள் அனுபவிக்கும் வேதனையும் வலியும் நம் கண் முன்னே கொணர்ந்த இயக்குனரை கட்டாயம் பாராட்டியாகவேண்டும்.


இரண்டு தொழிலிலும் பிரதானமானது உடல். உடலின் கவர்ச்சி குன்றினால் அதை சரிசெய்து கொள்ள அவர்கள் செய்யும் பிரயத்தனம் ( மேக்அப் , ஆன்டிராய்டு பொட்டாக்ஸ் போன்ற மருந்துகள்) அவர்களது வாழ்க்கையையே முடித்துவிடும் அபாயகரமானவை. அதையும் மீறி அதை உட்கொண்டு உயிர்வாழவேண்டிய கட்டாயத்தின் காரணங்கள் மிக அருமையாய் சொல்லப்பட்டிருக்கிறது.


வீரமும் , பாலியலும் பிரதானமாய் ஆகிவிட்ட சமூகத்தில் அவை இரண்டையும் வெறுக்கின்ற இரண்டு பேரின் காதலை , சிறு சிறு மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையைப்போல சொல்லியிருக்கிறது திரைக்கதை அமைப்பு. அதிலும் நாயகனின் இரண்டு காதல் , ஒன்று நிராகரிப்பு தந்த காதலி மற்றொன்று தன்னை நிராகரித்த தனது தொழில். தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை நிரூபித்து உயிர்துறக்கிறான்.


WWF (world wrestling federation ) பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்களையும் அதில் பங்கு பெறும் பலரது வாழ்வியலையும் மிகச்சிறப்பாக பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் வின்ஸ் மெக்மோகன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இத்தனைக்கும் இது மல்யுத்தத்திற்கு ஆதரவான படம் கூட கிடையாது. ஆனால் படத்தின் வெற்றிக்காக அவர் உறுதுணையாக இருந்ததாக தெரிகிறது.

படத்தின் இயக்குனர் டாரன் அரோன்ப்ஸ்கியின் முந்தைய படமான ''பை''(கணக்கில் வருமே பை) ஆக இருக்கட்டும் , தி பவுண்டைனாக இருக்கட்டும் இரண்டுமே மனித மனங்களின் எழுச்சி வீழ்ச்சி குறித்தான சிக்கலான பிரச்சனைகளினூடே பயணிப்பவை. அந்த படமும் அப்படியே!. ஆனால் இவை மற்ற படங்களை காட்டிலும் ஆகச் சிறந்த ஒன்று.

படத்தின் இசை கிளின்ட் மான்செல். படம் நெடுக நிராகரிப்பையும் , தளர்ந்து போன தசையின் இறுக்கத்தையும் மனதினை ஆழமாய் வருடிச்செல்கிறது அவரது இசை. கிளாஸ்!


கேமரா! படம் முழுக்க ஒரு அழுக்குநிறமும்,இருளும் வெறுமையும் நம்மோடே பயணிக்கிறது.

2008ல் வெளியான இப்படம் பல விருதுகளைப்பெற்ற ஒன்றாகும். மிக்கி ரூர்க் (சிறந்த நடிகர் பிரிவு) மற்றும் மரிசா டோமி( சிறந்த துணை நடிகை பிரிவு) பரிந்துரைக்கப்பட்டாலும் விருது கிடைக்கவில்லை. கோல்டன் குளோப் மிக்கி ரூர்க்கிற்கு சிறந்த நடிகர் விருது கொடுத்து கௌரவித்தது. ஆஸ்கரும் கிடைத்திருக்க வேண்டும் ஜஸ்ட்டு மிஸ்.

13 April 2009

குவாட்டருக்கு தி.மு.க சைட் டிஷ்க்கு தே.மு.தி.க!


அவன் அந்த ரயிலில் கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ரயிலில் பயணம் செய்கையில் பொதுவாகவே அவன் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே வாசிப்பதை வழக்கமாக்கியிருந்தான். அது அவனுக்கு கூடுதல் அந்தஸ்த்தை தருவதாய் எண்ணி வந்தான். அதற்கு முந்தைய நாள் அவனது நெருங்கிய தோழர் தனது இரண்டாவது புத்தகத்தை அவனுக்கு இலவசமாய் கொடுத்திருந்தார். அவன் இலவசமாய் தரப்படும் புத்தகங்களை உடனே படித்து விடுவதில்லை. அது ஏனோ இலவச புத்தகங்கள் இரவல் புத்தகங்களைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் அவனுக்கு இருப்பதில்லை.

கைவசம் ஆங்கிலப்புத்தகங்கள் ஏதும் எடுத்து வராததால் , தோழரின் புத்தகத்தை படிக்க முடிவு செய்தான். படித்தபின்தான் புரிந்தது நல்ல வேளை ஆங்கில புத்தகம் எடுத்துவராமல் போனோம் என!. சென்னை சென்ட்ரலில் படிக்கத்துவங்கியவன் ஜோலார்ப்பேட்டை கடக்கும் போதே அந்த இலவசபுத்தகத்தை படித்து முடித்திருந்தான். அவன் பயணித்த ரயிலைவிட மிக வேகமாக பயணிக்கிறது அந்த புத்தகம். ஜெட் வேகம்.

வாழ்க்கை வரலாறுகள் படிப்பதில் அவனுக்கு எப்போதுமே சுவாரஸ்யம் இருந்ததில்லை. ஒரு மனிதனில் வாழ்க்கை முழுக்கவே சுவாரஸ்யமாய் இருப்பதில்லை. மிகச்சிலரது வாழ்க்கையே அப்படி இருந்துவிடும்.
தோழர் இவனுக்கு தந்த அதுவும் ஒரு வாழ்க்கை வரலாறுதான். ஆனால் ஒரு மசாலாத்தனமான வாழ்க்கை வரலாறு. அந்த பிரபலத்தின் வாழ்க்கையை இதைவிட சிறப்பாய் யாராலும் சொல்லியிருக்க முடியாது. அந்த பிரபலத்தின வாழ்க்கையே மசாலாவால் எழுதப்பட்டதுதான்.
முதல் அத்தியாயத்தில் வாசகன் கழுத்தை கற்றையாய் பிடித்து உள்ளே இழுத்து கடைசி அத்தியாயம் வரை பாசக்கயிற்றால் சுறுக்கு போட்டதுபோல கட்டிப்போட்டு கடைசி வரிகளை முடித்தபின்தான் காரித்துப்பி வெளியேற்றுகிறது.

பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம், படிக்க படிக்க உற்சாகம். எங்கோ எப்போதோ கேட்ட விளம்பரத்தின் வாசகங்கள் , இதோ அதை நேரில் அனுபவிக்க ஒரு புத்தகம் என்று சொல்ல தோன்றியது அவனுக்கு . வோடோபோன் விளம்பரத்தில் உடனடி உற்சாகத்தில் பகிர்ந்து கொள்ள யாருமின்றி நடக்கும் ஒரு நிமிட பரபரப்பை அந்த புத்தகத்தை படித்துமுடித்து மூடி வைக்கும் போது தந்துவிடுகிறது. டேய் பாருங்கடா என் நண்பனின் புத்தகம், என் நண்பன் எழுதியது , இந்த புஸ்தகம் எழுதினது என் பிரண்டுடா! ரயிலின் அவசரசங்கிலியை இழுத்து மொத்த ரயிலுக்குமே சொல்லிவிட தோன்றியது அவனுக்கு.

அந்த தோழர் யுவகிருஷ்ணா! அந்த பிரபலம் விஜயகாந்த்.


****************************


எங்கோ மதுரை ரைஸ்மில்லில் மீசையை முறுக்கிக் கொண்டு முத்துப்பாண்டியாய் வலம் வந்த பத்தாம்வகுப்பு பெயிலான விஜய்ராஜை உங்களுக்குத் தெரியுமா? அவனுது பால்யத்தில் அவனாடாத ஆட்டமெல்லாம் தெரியுமா உங்களுக்கு? விளையாட்டாய் சினிமாவிற்குள் நுழைந்து..பட்ட அவமானங்களால் வானளாவ உயர்ந்து நின்ற அவரைத்தெரியுமா உங்களுக்கு? இது மண்ணில்லடா மருந்து என மண்ணை அள்ளி உடலெங்கும் பூச நீயோ நகைத்துக்கொண்டிருக்க எங்கோ தென்தமிழகத்தின் கடைக்கோடியில் ஒரு ரசிகன் அதைக்கேட்டு சிலிர்த்தகதை தெரியுமா உங்களுக்கு?


அவர் நாராயண சாமி நாயுடு! விஜயராஜ்! ரைஸ்மில்!சினிமா!விஜயகாந்த்! ராதிகா!கிசுகிசு! கேப்டன்! அரசியல்! தேமுதிக தலைவர்! கோயம்பேடு திருமண மண்டபம்! கூட்டணி அலப்பறை! அவரது வருங்காலம்! இப்படிப்பயணிக்கிறது யுவகிருஷ்ணா என்கிற கிருஷ்ணகுமார் என்கிற லக்கிலுக்குவின் விஜயகாந்த் புத்தகம்.

அட்டகாசமான எழுத்து ! நக்கல்! கிண்டல்! டெரர்! துள்ளல்! இளமை கொப்பளிக்க இப்படி ஒரு புத்தகம் கிழக்குப் பதிப்பகதிற்கே புதிதாய் இருக்கலாம். கிழக்கின் மற்ற வாழ்க்கை வரலாற்று புத்தகங்களிலிலுருந்து தனித்து நிற்கிறது.


பேரரசு படங்களில் வருமே நாலு காமெடி ,மூன்று ரொமான்ஸ்,ஐந்து சண்டை,ஆறு பாட்டு, நடுவில் அதிலிருந்து சற்றும் விலகாத கதை! , அப்படி ஒரு மசாலாவை அரைத்து எழுதப்பட்ட நூலாகவே இது இருக்கிறது. விஜயகாந்த் என்னும் மசாலா நாயகனின் வாழ்க்கைப்பக்கங்கள் மசாலா இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா! புத்தகம் முழுக்க கோடி ராமகிருஷ்ணா ஸ்டைல் மசாலா! ஆந்திரா ஊறுகாய் போன்ற சுறுசுறு விரு விரு புத்தகம்.


******************************

இது மாம்பழ சீசன்,பரீட்சை சீசன்,ஐபிஎல்,ஈழம் சீசன்(!) மாதிரி இதோ இப்போது தேர்தல் சீசன் . கில்லிமாதிரி வெளியிட்டிருகிறார்கள் சீசன் பார்த்து. அவனது கணிப்புப்படி குறைந்தது 15000 காப்பிகளாவது விற்கும் வாய்ப்பிருக்கிறது . சொல்ல இயலாது தேமுதிகவே மொத்தமாய் பல ஆயிரம் காப்பிகள் வாங்கி தொண்டர்களுக்கு மானிய விலையில் தரும் வாய்ப்பும் இருக்கிறது.

புத்தகம் முழுக்க அத்தியாயத்திற்கு அத்தியாயம் விஜயகாந்த் வேட்டிசட்டையோடு வந்து கும்பிடு போடுவது நெருடல். விஜயகாந்தின் பார்த்திராத படங்கள் போட்டிருக்கலாம். இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

புத்தகத்தின் பல இடங்கள் தேமுதிக பதிப்பகத்தின் புத்தகம் வாசிக்கிறோமோ என்கிற எண்ணமே வருகிறது. அதுவும் வியாபார யுக்தியாக இருக்கலாம்.

மிதமிஞ்சிய புகழ்ச்சி புத்தகம் நெடுகிலும். விஜயகாந்தே நாணிக்கோணி கதவிடுக்கில் ஓளிந்து கொண்டுவிடுவார். தேமுதிகவின் வெறிபிடித்த கடைநிலைத்தொண்டன் எழுதினால் எப்படி எழுதுவானோ அப்படி ஒரு புகழ்ச்சி. சொல்லப்போனால் புத்தகம் அப்படிப்பட்ட வாசகர்களை குறிவைத்து எழுதப்பட்டதாக இருக்கலாம். யார் கண்டா!

சொல்ல இயலாது தேமுதிகவின் கொ.ப.செவாக லக்கிலுக்கை நியமிக்கும் வாய்ப்பு உதயசூரிய பிரகாசமாய் இருக்கிறது.

திமுகவின் மிகப்பெரிய தொண்டரான லக்கிலுக்கிடம் இருந்து, இப்படி ஒரு புத்தகமா என முதலில் அதிர்ச்சியாய் இருந்தது. அதுவும் அந்த எழுத்து நடை, அடப்பாவி ஒரு நாளும் கலைஞரைக்கூட இப்படி புகழ்ந்ததில்லையே நீ என்று கேட்கத்தோன்றியது.

கலைஞர் செய்யாத தில்லாலங்கடி லீலைகளா! வேலைகளா! அவரடிக்காத பல்ட்டியா! டாக்டர். விஜயை விட பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு பல்ட்டி அடிக்கும் வல்லமை பெற்ற ஒரே தமிழர்த்தலைவர் டாக்டர் கலைஞரல்லவா! நாளை தமிழ்ப்புத்தாண்டாம்!
அவர் பல்ட்டி அடித்தால் டெல்லிவரை பாய்வார். அவரது வலையுல உடன்பிறப்பு அப்படித்தானே இருப்பார். தேமுதிகவரை பாய்ந்திருக்கிறார். பிரியாணிக்கு திமுக லெக்பீசுக்கு தேமுதிக.

அதேபோல விஜயகாந்த் வரலாறு என துவங்கியபின் அதில் கலைஞர் மீதான விமர்சனஙளை ஏனோ பட்டுக்குஞ்சத்தில் சும்மானச்சுக்கும் அடித்து சொல்லியிருப்பது நெருடல். அரசியல் பகுதி முழுக்க அநியாயத்திற்கு நுண்ணரசியல். ஜெ மீது மட்டும் என்னதான் கோபமோ! ம்ம்

யுவகிருஷ்ணாவின் முந்தைய புத்தகம்(விளம்பர உலகம்) வேண்டுமானால் யுவகிருஷ்ணாவினுடையதாக இருக்கலாம். எனக்கு பிடிக்கவும் இல்லை. அதனாலேயே அதற்கு விமர்சனமும் எழுதவில்லை.

இந்த நூல் நிச்சயமாக கட்டாயமாக உறுதியாக இலச்சிமலை ஆத்தா சத்தியமாக அக்மார்க் ஐ எஸ் ஓ 9001 சான்றிதழ் பெற்ற லக்கிலுக் புத்தகம்.

லக்கியைப்பார்த்தால் அவனுக்கு பொறாமையாக இருக்கிறதாம். வயிறு எரிகிறதாம். நேரில் பார்க்கும் போது லக்கிலுக் அவனுக்கு ஜோடா வாங்கித் தருவார் என நம்புவோம்.


*******************

144 பக்கங்களோடு கிழக்குப்பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை வெறும் 70 ரூபாய் மட்டுமே. (பி.கு - சாருநிவேதிதா மாதிரியே தோழர் யுவகிருஷ்ணாவும் பாவப்பட்ட பரம ஏ........ழை .. )

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கிக்கோங்க..

உங்கள் அருகாமையில் உள்ள புத்தகக்கடைகளிலும், தேமுதிகவின் பிரச்சாரக்கூட்டங்களிலும் , மற்றும் ரயில் நிலையங்களிலும் கிடைக்கிறதாம்.

*******************
லக்கிலுக்கின் விஜயகாந்த் - டுபுரித்தனமான வாழ்க்கை வரலாறு... செம ஹாட்டு மச்சி

09 April 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!!




1.பாரத் மாதா கீ பாப்பா!


அவன் சட்டைக்குள் சிவப்பாய் மினுக் மினுக் குழந்தை கொல் என சிரித்தது 6 5 4 3 2 1 பாரத் மாதா கீ ஜே பாம் வெடித்தது



2 .இசை?


ஆஆஆஆஆ உச்சஸ்தாயில் பாடகர் சனியனே நிறுத்து உன்னோட பாட்டு கேக்க முடியுதா சொத் சொத் குழந்தை ஆஆஆஆஆஆ



3.நமக்கு நாமே திட்டம்.


கடைசிப் பொத்தானை அழுத்தினான் உலகம் அழிந்தது . வெற்றி வெற்றி வெற்றி அழிந்தனர் அனைவரும் உலகில் இனி நான் மட்டும்தான்.



4.வை...கோ! ராமதாஸ்!


ஈழமா! அது எங்கேயோ துபாய் பக்கம் ஆப்பிரிக்கா பக்கத்திலல இருக்கு!



5.சாப்பாடு தயார்


போன வாரம் வரைக்கும் அஞ்சாப்பு படிச்ச குட்டிப்பையன் ஓட்டல் போர்ட்ல எழுதினான் வயிறு முழுக்க பசியோட!



6.என் மலம்


சே பொண நாத்தம் நாறுது அந்த ஊதுபத்தி பத்தவையுமா! எப்பதான் க்ளீன் பண்ணி முடிப்பானோ



7.இலவசம்


கால் ஆட்டிக்கொண்டே சொன்னாள் காண்டம் வேணுமா எய்ட்ஸ் வேணுமா இரண்டும் ஃப்ரீதான்.



8.மிட்நைட் மசாலா


தனிமையில் உணர்ச்சிப்பெருக்கின் உச்சக்கட்டம் ,ரிமோட்டை வேகமாய் ஆட்டிக்கொண்டு வேறு எதையோ அழுத்திக்கொண்டிருந்தான்.



9.ரிசெசன்


ஏன்ப்பா இந்த பாத்ரூம்ல தண்ணி வரல , நீ வேற அவனவனுக்கு அதுவே வரல.



10.பொழுது போகல!
என்னடா மேல இருக்கறதுலாம். சும்மா டைம்பாஸ் மச்சி




07 April 2009

சாலமன் (என்கிற) சாமானுக்கு கடிதம்!



டே த்தா பாடு.. சாமான் வணக்கன்டா!

ஒனக்குலாம் த்தா கட்தாசி எழுதறளவுக்கு என் நெலம.. இன்னா பண்றது அல்லாமே விதிடா விதி.. கட்தாசினா இன்னானு தெரிமா ஓனிக்கு.. எனக்கும் தெரியாது.. இர்ந்தாலும் இப்போ வேற வழியில்ல எயிதியே ஆவணும்.. நெரிய பட்ச்சவங்க சொல்லீட்டாங்களே..

இன்னாடா இவன் த்தா சாமான்றானேனு திங்கிங்கா! த்தா மூச்சுக்கு முன்னூறுவாட்டி ங்கோத்தா போட்டு பேசியே பயக்கப்பட்ட உன்னான்டா அப்பிடி பேஸ்னாதானே மாமா என்னிய அடியாளம் தெர்யும்.

த்தா இன்ன்ன்னாஆ மாமா..... கட்சியா மாம்பலம் ஸ்டேசனான்டா கஞ்சா அடிக்க சொல்ல போலீஸ் தொர்த்துனானு ஓட்ற டிரெயின்ல ரன்னிங்ல ஏறி எஸ்ஸானதுக்கு அப்பால இன்னா ஆன எங்கே போன ஒன்னியும் தெர்லயே மாமா!

த்தா நானும் ஒன்னோட அதே டிரெயின்ல ஏறிருந்தா நானும் ஒன்னாட்டம் காணாம பூட்டுருப்பேனே இன்னாவோ.. அல்லாங்காட்டி இன்னிக்கு இப்படி இந்துருப்பனானும் தெர்ல மாமா.. த்தா அது இன்னா டிரெயினுனு கூட ரொசனை இல்ல மாமா!

டிரெயினுனு சொல்லதான் ஞாபகம் வர்து, ஒருவாட்டி லோக்கல் டிரெயின்ல, போத சிரிஞ்சி வாங்க பைசா இல்லாத பிச்ச எடுத்துனுருந்தமே ஞாபகம்க்கீதா! அப்ப பிடில் வாசிச்சிகினு நம்மளான்டயே பிச்ச எட்த்த குருடன நாயடி பேயடி அட்ச்சியே .... நாம புச்சா பிச்ச எடுக்கறோம்னு பழய பிச்சக்காரன்லாம் சேந்துகினு நம்ம டவுசர கயட்டி ஓட வுட்டானுங்களே ஞாபகம்கீதே... இன்னா அடி மாமா அது.. எச்சத்தட்டுல அடிவாங்கினாலும் செம அடி மாமா.. பிச்ச எட்த்து துன்னாலும் நல்லா உடம்ப வள்த்து வச்சிகிறானுங்கோனு நீ சொன்னியே.. சோக்கா மர்ந்துருவனா மாமா!

டவுசருனுதம்தான் ஞாபகம் வர்து.. துரைசாமி பிரிஜ்ஜோரம் மங்காயாண்ட அதான் மாமா மப்பு மங்கம்மா.. கோட்டர்க்கே...___ காட்டுவாளே , 30ரூவா ரேட்டு பேசி மேட்லி பிரிஜ்ஜாண்ட ஒதுக்குப்புறமா ரெண்டுபேரும் ஒதுங்க சொல்ல ஏதோ ஒன்னு உன் அதுல கடிச்சிருச்சுனு டவுசரக்கூட மாட்டமா ஓடியாந்தியே.. நான் கூட போலீஸ் தொர்த்துதுனு ஓடனேனே... மாமா அசால்ட்டா வுட்ற முடிமா!


பத்து வயசில ரெண்டுபேரும் ஒன்னா சைக்கிள் டியுப்ல சாராயம் விக்க சொல்ல போலீஸ்காரன் தொர்த்த நீ மட்டும் அவனான்ட மாட்டிகினு அவன் குஞ்சாமணில பீடிய வச்சு நசுக்கினானே ஞாயபகம்கீதா!! இன்னா வலிமாமா அது.. அப்பால நான் அத புட்சுக்கினு நீ என்னுத புட்சுக்கினு தெனமும் ஒனக்கு அங்கே தேங்காண்ணை போட்டுகினுருந்தேனே... அந்த தழும்பு கூட மறையாதுருக்க சொல்ல ... நம்ம கீதா கூட ஒன்னான்டா இன்னாதிது வெள்ளையாக்கீதுனு கேட்டானு சொன்னீயே!


மாம்பலம் ஐயரான்ட ஒருவாட்டி அசால்ட்டு பண்ணியே மாமா!


ஒன்ன சாலமா சாலமா னு கூப்பிட புடிக்காத சாமா சாமா னு கூப்ட்டுகினு இருக்க சொல்ல ஏரியாவாண்ட அல்லாரும் ஒன்ன ஐயருனு நினைச்சிகினு.. ஒரு குடுமி ஒன்னான்ட வந்து ஒரு நா.... ''ஐயரா இருந்துண்டு இப்படி இருக்கியே சண்டாளா நன்னா இருப்பியா'' னு ஒன்னான்ட டகில் வுட நீ அவன நடு ரோட்ல வுட்டு வூடு கட்டி பொயந்தியே.. அப்பால சாமா வே சாமான் ஆகி ஏரிய பூரா சாமான் வூடு சாமான் வண்டி சாமான் ஆட்டோனு அல்லா சாமானும் ஒனக்கு சாமான் சாமான் ஆச்சே ஞாபகம் கீதா..

மாமா நம்ம கீதா ஞாபகங்கீதா.. இன்னா மாமா நீ எப்படி மறப்ப.. மாம்பலம் ஹைரோடான்ட கணபதி பிளாட்ஸ்ல தொழில் பண்ணிகினு இருக்க சொல்ல ஒனக்கொண்டி ஃப்ரீயா போய் வருவீயே.. அதுகூட ஒன் மேல லவ்வு லவ்வுனு சொல்லிகினு என்னான்ட கூட ஃப்ரீயா வருமே.. அத போலீஸ் இட்டிகினுப் பூட்டானுங்கோ மாமா.. அப்பால அது திரும்பி வர சொல்ல கந்தலாயி மூஞ்செல்லாம் கீய்ஞ்சி போய் கேவ்லாமாகி என்னான்ட வந்து பாக்கு வாங்க பத்து ரூவா கேட்டு பிச்ச எடுத்துகினுருந்துச்சு..


டிநகர் பஸ் ஸ்டான்டு பக்கம் நம்ம ராக்கி இல்ல அதான்டா நம்ம டிநகரு மாமாபையன் அவனான்டா சேந்துகினு பத்துக்கும் இருபதுக்கும் போய்க்கினுக்கீது.. என்ன பாக்க சொல்லலாம் அழும் உன்ன கண்ணாலம் கட்டிக்கினு பத்து புள்ள பெத்துக்கினு ஜீடா வாயணும்னு கனா கண்டுகினுருந்தேனு..இன்னா மேறி கண்ணீர் வுட்டு கதறுது தெரிமா மாமா...

எனக்கே செம பீலிங்க்ஸா பூட்ச்சு அப்பால அதாண்ட போக சொல்லலாம் 20 ரூவா கேட்டாலும் கூட 20ஆ போட்டு 40 ஆக்குடுப்பேன்.. நான் இன்னா தியாகியா அதுக்கு வாழ்க்க குடுக்க.. டிப்ஸ்தான் குடுக்க முடியும்.

மாமா ஒன்ன கட்சியா தாம்பரம் பக்கம் அம்பிகாவோட பாத்தேனு நம்ம ஏழுமல அதான்பா நம்ம பஞ்சர்கட ஏழுமல, ரெண்டு வர்ஷம் முன்னால சொன்னான். இன்னா மாமா என் லவ்வர காணலனு நானும் அஞ்சு வர்ஷமா தேடினு இக்கிறேன். நீ அலேக்கா தூக்கிக்கினு எஸ்ஸாய்ட்டீயே.. எங்கிருந்தாலும் வாய்க மாமா வாய்க.. புள்ளக்குட்டிலாம் பெத்துகினுருப்பே இந்நேரம்.. த்தா.. எத்தினி வாட்டி அவள .. விடு மாமா.. பயசெல்லாம் சொன்னா உன் லைப்பு வீணாப்பூடும்..

மாமா ஒனக்கு நியூஸ் வந்துச்சா இல்லியானு தெர்ல, ஆயா பூட்ச்சு மாமா.. எந்த ஆயானு மட்டும் கேட்றாதடா பாடு.. மூணு வேளை ஒனக்கு சோறு போட்டு வயத்துச்சே அதே அம்மாதான்டா.. அத பாக்க கூட வர்லியே மாமா. அப்பிடி இன்னா பூ..ஆட்ற வேல மாமா ஒனக்கு. ஆயா செத்தாக்கூட வரமாட்டியா.. ஆறு வயசில அநாதியா நானும் நீயும் ஏதோ ட்ரெயின்ல பிச்ச எடுக்க புட்ச்சினு போக சொல்ல எஸ்ஸாயி மாம்பலம் வந்து எறங்க சொல்ல ஆரு மாமா நமக்கு சோறு போட்டது ஆயாதான அது செத்தப்ப கூட வரலியே மாமா.. வுடு மாமா இன்னாதாருந்தாலும் அது நம்மள கஞ்சாவும் சாராயமும் விக்க வச்சுகினுதான சோறு போட்டுச்சு..அல்லாங்காட்டி போட்டுருக்குமா!

இப்போ இன்னாத்துக்கு எழுத படிக்க தெரியாத ரெண்டாங்கிளாஸ் பெயிலான ஒனக்கு கட்தாசினு கேக்கறீயா.. நீ கட்ச்சியா மாம்பலம் டேசன்ல கஞ்சா அடிக்க சொல்ல போலீஸ் தொர்த்துதுனு.... எஸ்ஸாக சொல்ல ஒருத்தன தள்ளி வுட்டுகினு டிரெயின்ல ஏர்னீயா.... அவன் தண்டவாளத்துல வுயிந்து செத்துட்டான் மாமா.. நான் போலீஸாண்ட மாட்டிகினேன்.. கொலை கேஸூ போட்டு பத்து வருஷம் உள்ள வச்சுட்டாணுங்கோ தே...பசங்க. நீ போயி இன்னியோட பதினஞ்சு வருஷமாச்சு மாமா..என் அம்பிகா இத்திகினு பூட்ட! அதுகண்டி பருவால்ல ஆனா பத்து வர்ஷம் உள்ள உட்டு அட்ச்சானுங்களே ... அத்த ஒன்னால திருப்பி தரமுடிமா மாமா!

என்னிக்காவது ஒன்னகண்டி பாத்தேன் த்தா சாமான் ஒன் உசிரு என் கைலதான் மாமா போகும்.. த்தா டே பத்து வர்ஷம்டா... அன்னிக்கு நாம மாட்டினுருந்தா கூட மூணு மாசம்தான்..


என்னிக்கும் என் கண்ல மட்டும் மாட்டிராத மாமா.. என்னால ஒன்ன கொல்ல கூட முடியாது... உம் மேல அவ்ளோ அபெக்சன் வச்சிகிறேன்.. ஆனா போதைல இர்ந்தா கொன்னுருவேன்..!
அவ்ளோதான் சாமா.
முத்து..


*************************************************

என்னை முத்தய்யாவாக ( முத்தய்யாவா முத்தைய்யாவா என்ன பேரோ ) அருமை அண்ணன் சாலமனுக்கு (யார் பெத்த புள்ளையோ!) கடிதமெழுத அழைத்த பதிவுலக ரித்திஷ் திமுகவின் பிரச்சார பீரங்கி நண்பர் லக்கிலுக்குவிற்கே இந்தப்பதிவு சமர்ப்பணம். மாதவராஜ் அண்ணன் என்ன நினைத்துக்கொண்டு இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்தாரோ தெரியவில்லை அது அங்கே சுற்றி இங்கே சுற்றி என்னிடம் வந்துவிட்டது.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து எழுத ஒருவரை அழைக்கவேண்டுமாம். ஏன் ஒருவரை அழைக்கவேண்டும். பிரேக் தி ரூல்ஸ் .... அதனால் நான் ஐவரை அழைக்கிறேன். 1.முரளிக்கண்ணன் 2.பரிசல்காரன் 3.வால்பையன் 4. கார்க்கி 5.தாமிரா . தொடர்ந்து எழுதுபவர்கள் மேலும் ஐவரையோ ஐம்பது பேரையோ அழைத்து என்சாய் பண்ணுங்கோ!

06 April 2009

அழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்


உடன்பிறப்பே..

நமது சாம்ராட் கலைஞர் ஒரு வழியாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார். என்னே விந்தை இம்முறையும் மத்திய சென்னையில் எதிர்பார்த்தது போலவே தயாநிதியும் மதுரையில் மு.க.அழகிரியும் போட்டியிடுகின்றனர். அதிலும் நமது மதுரை மாமன்னர் மு.க.அழகிரி அவர்கள் அடுத்த திருமலைநாயக்கராய் ஆக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது மகனும் மகளும் இன்னும் அவர்தம் தந்தையைப்போல வெற்றிகள் பல பெற்று மன்னருக்கேற்ற இளவரசனாய் இளவரசியாய் மதுரையை ஆட்சி புரிவதை கண்ட பின்னேதான் நம் உடன்பிறப்பின் உயிர் பிரியவேண்டும். உயிர்பிரியும் வரை வாயில் விரலும் நெஞ்சில் கழகத்தின் கொள்கையுமாய் நீ சாவதை காணவேண்டும் என் உடன்பிறப்பே.

ஒரு பர்சனல் வேண்டுதலும் சேர்த்துக்கொள்வோம் உடன்பிறப்பே!... ஆண்டவா அடுத்து வரும் ஜென்மத்திலாவது கலைஞர் குடும்பத்தில் பிறந்து திமுகவில் கூட உறுப்பினர் ஆகாமல் எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக அருள்புரியவேண்டும். திமுகவில் மிகச்சிறந்த தொண்டர்கள் இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதி கலைஞர் குடும்பத்தில் பிறந்த கண்மணிகளுக்கே உண்டென கலைஞரின் நானுற்று இருபத்தைந்தாவது ஒன்று விட்ட இரண்டாவது மருமகனின் நான்கவது மகனின் மூன்றாவது மகளின் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரியுமே.

தற்சமயம் வெளியாகியிருக்கும் வேட்பாளர் பட்டியலும் அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டிவிட்டது. இது தவிர சிரிபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு என்கிற மிக நேர்மையான,பாசாங்கில்லாத நல்லவர் போட்டியிடுகிறாராம். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். நெப்போலியன் கூட எங்கோ போட்டியிடுகிறாராம். என்னது நெப்போலியன் யார்னே தெரியாதா... மக்களே சில வருஷங்களுக்கு முன்னால ... இப்ப ஞாபகம் வந்திருக்குமே.. அவர்தான். நிறைய பணமிருப்பவர்களும் போட்டியிட தகுதியுடையவர்கள் என்பது திமுகவில் புதிய விதிமுறை போல.




இதற்கெல்லாம் மேல் மணிமகுடமாய் பதிவுலக பேமஸ்,வடபழனி ஆட்டோ பேமஸ், நாயகன் பட பேமஸ் அரைசென்னை அதிபர் அண்ணன் ஜே.கே.ஆர் என்கிற ஒரு சிங்கமும் திமுகவின் வேட்பாளார் பட்டியலில் இடம் பெற்று தனது அரசியல் வாழ்க்கையை துவங்குகிறது. அந்த சிங்கம் மட்டும் எம்.பி ஆகட்டும் மவனுங்களா பதிவுலகில் அண்ணனை அசிங்கப்படுத்தி அவர் புகழ்ப்பரப்பும் அனைவருக்கும் தனது நாயகன் மற்றும் கானல்நீர் படங்களின் ஒரிஜினல் விசிடியும் , ஒரு லிட்டர் விஷமும் தரப்படும். உங்களது உயிர் விசிடி கவரைப்பார்த்தே பிரிந்து போனால் கம்பேனி அதற்கு பொறுப்பாகாது.

ராமதாசு எனும் துரோகியை நினைத்து வருந்த வேண்டாம் உடன்பிறப்பே! திமுகவின் இந்த வேட்பாளர் பட்டியலே டெரராக இருக்கிறதே. எல்லாருமே வெற்றிபெறும் அல்லது வெற்றியை வலிந்து பெறும் வேட்பாளராக தெரிகிறார்கள். உதாரணம் அழகிரி மற்றும் ரித்திஷ்

இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே திடீரென எங்கிருந்தோ முளைத்தவர்கள். ஒரு நாளும் திமுகவின் போராட்டங்களில் ( அப்படி ஏதேனும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடத்தியிருந்தால்) கலந்து கொள்ளாதவர்கள். கழகத்தின் வளர்ச்சிக்காய் தன் உயிர்தவிர வேறு எவர் உயிர் வேண்டுமானாலும் எடுக்கத் தயங்காத கண்மணிகளடா அவர்கள்... நிறைய பணத்துடன் ஒரு ஏரியாவையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். நிறைய அடியாட்களுடன் சுற்றுபவர்கள். டாடா சுமோ ரவுடிகள் போல் அல்லாமல் ஸ்கார்ப்பியோவில் சுற்றிவரும் பாரியும் ஓரியுமடா அவர்கள்!தேர்தலையும் தன் பிறந்தநாளையும் ஒரே மாதிரி கொண்டாடுபவர்கள். ஊருக்கே பிரியாணி போட்டு நிறைய லெக்பீசும் போடுகிறவர்கள் . என்ன ஒரே வித்தியாசம் என்றால் ரித்திஷ் முக.வின் மகன் அல்ல. அவரது பிரியாணியில் கிடப்பது லெக்பீஸும் அல்ல.

ரித்திஷ் என் தொகுதியில் போட்டியிடவில்லையே என வருந்தவைக்கும் அளவுக்கு தொகுதி மக்களுக்கு '' நிறைய '' செய்கின்ற நம் கழகத்தின் அருமையான கலங்கரை விளக்கமடா நம் தம்பி ரித்தீசு . தனக்கு ஓட்டுப்போடும் முதல் நபருக்கு வாட்ச்சும் இரண்டாவது ஆளுக்கு மோதிரமும் தந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை அத்தனை தயாள மனம் படைத்த வள்ளலடா நம் தளபதி ரித்தீசு.

அது தவிர மூன்று வேளை பிரியாணி, மாதம் 2000 ரூபாய், குவாட்டர் இத்தனையும் ரித்திஷாலும் அழகிரியாலுமே தர இயலும். பாரடா என் கண்மணியே இன்னும் சில மாதங்களில் எப்படி இருந்த தமிழ்நாடு எப்படி ஆகப்போகிறதென! இத்தகைய தலைவர்களை தமிழ்நாடு பெற்றதே நமக்கு பெருமை இல்லையா? தன் பிறந்தநாளுக்கு தனக்குத்தானே போஸ்டர் அடித்துக்கொள்ளும் கலாச்சாரத்தை துவங்கி வைத்த பெருமை இவர்களுக்கே சாரும். அதிலும் இருவரும் எம்பியாக மட்டும் ஆகிவிட்டால்.. தென்னகத்து ஓபாமாவே,இந்தியாவின் சேகுவாராவே, வாழும் வள்ளுவரே, நீ சிரித்தால் தீபாவளி , நீ ஆய் போனால் பொங்கல் என இந்த இருவரது போஸ்டர்கள் இனி அதிகமாக இருக்குமே!

அதிமுக எனும் அந்நியசக்தியைக்கண்டு அஞ்சாதே என் உடன்பிறப்பே! அவர்தம் ஆளுமை போயஸ்த்தோட்டத்தின் முட்டுச்சந்தில் புதைந்து போய் பல வருடமாகிவிட்டதடா என் கண்மணியே!

அழகிரி போட்டியிடும் தொகுதியில் போட்டியிட நேரடி போட்டியாளரான போயஸ்த்தோட்டத்து போக்கிரிகளே அஞ்சி நடுங்குகின்றனர்.. நம்மோடு போரிட்டு வெல்ல எவருண்டு இம்மாமண்ணில்.. திருமங்கலம் போரில் அதிமுகவின் டவுசரைக்கழட்டி புறமுதுகிட்டு ஓட விட்டது அத்தனை எளிதில் மறந்துவிட்டதா என் கண்மணியே.. ராமநாதபுரம் சிங்கமும் மதுரை புலியும் எம்.பியாகி தமிழனுக்காவும் தமிழின மக்களுக்காகவும் போராடி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பீகாருக்கு இணையான மாநிலமாக மாற்ற தாலி காத்த காளியம்மன் அருள்பாலிப்பாளடா என் கண்மணியே!
அனைத்து வேட்பாளரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிப்போம் . வாயில் விரலை வைத்துக்கொண்டு இம்முறையும் திமுக நாளைநமதே நாற்பதும் நமதே என போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வென்று தனது மீதி இரண்டாண்டு ஆட்சியை காத்துக்கொள்ளட்டும்.

கலைஞர் இன்னும் பல்லாண்டுகள் ஆட்சி செய்து தமிழ் வளர்க்கட்டும். இளைஞரணி தலைவராகவே ஸ்டாலின் இன்னும் நூறாண்டுகள் பதவி வகிக்கட்டும்.

மாமன்னர் கலைஞர் வாழ்க - அவர்தம் குடும்பம் வாழ்க - உன் குடும்பம் உனக்கெதற்கு - திமுக என்னும் அருமையான கழகமிருக்க.. வா என் கண்மணியே தேர்தல் பணியாற்ற வா.. கொடியவரை வீழ்த்துவோம் வா..


***************************



பட உதவி - என் வழி.காம்


03 April 2009

அருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி!


பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கெட்டவனின் அல்லது கெட்ட ஆத்மா அதை ஒரு ஜாடி அல்லது பெட்டி ஏதோ ஒரு ______ல் அடைத்து வைக்கின்றனர். காலம் உருளுகிறது. அந்த கெட்ட சக்தியை எதுவோ எப்படியோ தெரிந்தோ தெரியாமலோ விடுவிக்கிறது. அது தன்னை அடைத்து வைத்தவரை அல்லது வைத்தவர்களை பழிவாங்க புறப்படுகிறது. அதை எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதாக கதை அமையும். அம்புலிமாமா கதைகளில் படித்திருக்கிறேன் ஏழு மலை ஏழு கடல் தாண்டி இதுபோல கெட்ட ஆத்மாக்களை விட்டுவிடுவார்கள் அது திரும்பி வருவதற்குள் நாயகன் அடுத்த பிறவி எடுத்திருப்பான். கடைசியில் அதனோடு சண்டையிட்டு நரகத்திற்கே திருப்பி அனுப்புவான்.

இதே கதையை கோடி ராமகிருஷ்ணாவிடம் கொடுத்தால் என்ன செய்வார்? கோடி ராமகிருஷ்ணா ஆந்திர சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவர். நம்மூர் எஸ்.பி.முத்துராமனோடு அவரை ஒப்பிடலாம்,யாரும் கோபித்துக்கொள்ளாவிட்டால். மசாலா மன்னன். பெண்களுக்கான வன்முறைப்படங்கள் மன்னிக்கவும் ஆக்சன் படங்கள் எடுக்கிறவர்.
ஒரு திகில் படத்தைக்கூட பெண்களுக்காக எடுப்பவர். அதை ஆண்களும் ரசிக்கும் வண்ணம் எடுக்கும் திறமையும் உண்டு. அவரது முந்தைய படமான அம்மன் திரைப்படம் பார்த்து ஆடிப்போயிருக்கிறேன். தியேட்டரில் பல பெண்களும் சாமி வந்து ஆடினர். அதன் பிறகு இராம.நாராயணன் வரிசையாக அம்மன் படங்கள் எடுத்தது பழைய புராணம்.

சந்திரமுகி திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே ஒரிஜினல் போல பளபள பிரிண்டோடு திருட்டு டிவிடிகள் வந்துவிட்டன. படத்தை திருட்டு டிவிடியில் பார்த்த பலரும் அதற்கு பிறகு தியேட்டரை நோக்கி படையெடுத்தனர். தமிழ்திரையுலகமே அதிசயித்துத்தான் போயிருக்கும். அப்படி ஒரு படம் அதற்கு பின் தசாவதாரம். அதைத்தொடர்ந்த அப்படி ஒரு தரத்தில் வந்திருக்கும் படமே அருந்ததீ!

முதல் பத்தியில் சொன்னது போல கதை அவ்வளவுதான்.

திரைகதைதான் படத்தின் ஹீரோ , ஹீரோயின் அனுஷ்கா.

அனுஷ்காவா இது. அனுஷ்கா முகத்திற்கும் ஏதும் கிராபிக்ஸ் செய்திருப்பார்களோ என்று கூட தோன்றுகிறது. அழுகையும் அமைதியாக அப்பாவியாக ஆக்ரோஷமாக அதிரடியாக அசத்தலாக அடேங்கப்பா மிரட்டல் நடிப்பு. ஜக்கம்மா என்னும் அவரது பாத்திரப்பெயருக்கு ஏற்றாற் போல அப்படி பொருந்துகிறார். அதிலும் அந்த டிரம்ஸ் டான்ஸ் டோன்ட் மிஸ் இட்!

சந்திரமுகி படத்தில் ஷீலாவோடு ஒரு ஒல்லிக்குச்சி பயில்வான் நடிகர் வருவாரே அவர்தான் இந்த படத்தில் வில்லன். மனுசன் என்னமா வில்லத்தனம் காட்றான்யா. அந்த நடிகரை நிறைய இந்தி பிட்டுப்படங்களில் பார்த்திருக்கிறேன்( சீசா என்றொரு படத்தில் ஹீரோவாய் நடித்திருப்பார், பெயர் ஞாபகத்தில் இல்லை) . அவருக்கு குரல் கொடுத்தவருக்கு பாதி சம்பளத்தை கொடுக்க வேண்டும். குரலைக்கேட்டாலே பயமாக இருக்கிறது. பேய்க்குரல். பாதி சம்பளைத்தை பிண்ணனி பேசியவருக்கு கொடுத்திருக்க வேண்டும் அந்த நடிகர். அபாரமான டப்பிங்.

வில்லனுக்கு டப்பிங் பேசிய அந்த நபர்தான் படத்தின் வசனமுமாம். உக்கிரமான வசனங்கள். '' அடியே அருந்ததீ '' என்றால் நம் அடி வயிறு கலங்குகிறது. சபாஷ்

ஒலி,ஒளிப்பதிவு இரண்டுமே அட்டகாசம். ஒலி அலர வைக்கிறது. ஒளி பதறவைக்கிறது. முன்சீட்டு குடும்பத்தில் சில பெண்கள் அலறியதே சாட்சி.

படத்தின் திரைக்கதை 'கில்லி' வேகம். ஆதிகாலத்து அம்புலிமாமா கதைக்கு இப்படி ஒரு திரைக்கதை அமைப்பதும் அதை திரைக்கு கொண்டுவருவதும் சாதாரண காரியமாய் தெரியவில்லை. ரஜினிகாந்த் திரைப்படங்கள் பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு வருமே படம் நெடுகிலும் , அதை அனுஷ்காவை வைத்தே சாதித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறை அநியாயத்துக்கு இரத்தம். எனக்கெல்லாம் பென்சில் சீவும்போது இரத்தம் வந்தாலே மயக்கமே வந்துவிடும். இந்த படம் முழுக்க கிராபிக்ஸில் இரத்தத்தை ஆறாய் ஓட விட்டிருக்கின்றனர். வடிவேலு சொல்லுவாரே இது ரத்த பூமி என்று அதைவிட அநியாயம் . படம் பார்க்கும் நம் மீதே ஒரு கேலன் இரத்தம் தெரித்திருக்கும் அத்தனை இரத்தம். ஆந்திராவே ஒரு இரத்தபூமி என கேள்விப்பட்டிருக்கேன் அதுக்காக இப்படியா பாதி படத்தில் வயிற்றை குமட்டியது. நல்ல வேளை தண்ணி அடிக்காமல் படம் பார்த்தேன் , இல்லாவிட்டில் முன்சீட்டு நண்பரின் முதுகு நாறிப்போயிருக்கும்.

மிகச்சுமாரான கிராபிக்ஸ்தான். பல காட்சிகள் கிராபிக்ஸ் குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும். ஆனால் சில இடங்களில் ஹாலிவுட் தரம். இன்னும் கொஞ்சூண்டு மெனக்கெட்டிருந்தால் ஹாலிவுட் தரத்தில் படம் மொத்தமுமே வந்திருக்கும். (பட்ஜெட் படம் என்பதால் அப்படி இருந்திருக்கலாம்)

குழந்தைகளை தயவு செய்து அழைத்து செல்லவேண்டாம். அத்தனை வன்முறை. குட்டீஸும் ரசிக்கவல்ல ஒருபடத்தில் வன்முறையின் அளவு டன்கணக்கில். என்னைப்போன்ற குழந்தைகளுக்காகவாவது படத்தில் அதீத வன்முறையை குறைத்திருக்கலாம். என்னோட படம் பார்த்த முதியவரான தோழர் கூட பயத்தில் பல இடங்களிலும் அலறினார்.

மற்றபடி படத்தைக் கட்டாயம் தீயேட்டரில்தான் பார்க்கவேண்டும். திருட்டு டிவிடியில் பார்த்தால் உங்கள் மனைவி , அளவான காரத்தில் குறைவான மசாலாவோடு செய்த பிரியாணி மன்னிக்கவும் நான் வெஜ்-தக்காளி சாதம் போலிருக்கும்.

அருந்ததீ - ஹைதரபாதீ பிரியாணி
*************

02 April 2009

எ.வீ.ஜ-5 - பாலபாரதியும்,பதிவர் சந்திப்பும்,பின்ன ஞானும்..!

எதிர்வீட்டு ஜன்னல்கள் - 5


பிப்ரவரி 2008


பாருங்கடா பதிவு எழுதுகிறேன் என ஒரு அடப்பாசு பிளாகை துவங்கிய நேரம் அது. இன்றும் அது அடப்பாசாகத்தான் இருக்கிறது. ஓரளவு பாசாகும் தகுதியோடிருந்தாலும். அவனைத்தவிர யாருமே படித்திராத பதிவுகள் நிரம்பிய பிளாக் அது. பின்னூட்டங்கள் கூட ஒன்று விட்ட அண்ணனுக்கு போன் போட்டு போட சொன்னது. அவரும் ஒன்று போட்டார். அச்சமயத்தில் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார் அந்த வலையுலக தல.


அவனும் கலந்துகொண்டான் அனைவரும் அன்போடு பேசினர். கூச்ச சுபாவம் அதிகம் கொண்டிருந்தவன் யாருடனும் பேசவில்லை.சந்திப்பு முடிந்து திரும்பியவன் மீண்டும் வெகுண்டெழுந்து எழுதத்துவங்கினான். மீண்டும் அதே நிலைதான். படிக்க ஆளில்லை. நமக்குநாமே என்கிற நிலைதான். அவனே வேறு வேறு பெயர்களில் அவனுக்கே பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டான். பின்னூட்ட டுபுரித்தனங்கள் அவனுக்கு கை வந்தன. இங்கே தனிமையாய் உணர்ந்தான். மீண்டும் எழுதுவதில் சுணக்கம். எழுதுவதே இல்லை.


ஏப்ரல் - 2008

ஒரு ஞாயிறு மதியம். துணிதுவைத்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. இவனுக்கு அங்கே செல்ல ஏனோ மனதில்லை. பதிவு எழுதவே பிடிக்காதவனுக்கு பதிவர் சந்திப்பு எதற்கு. யாருமே படித்திராத பதிவராய் தன்னை உணர்ந்து கொண்டு விலகி நின்றான். இனி எழுதவே போவதில்லை. எழுதி என்னத்தை கிழித்து விட்டோம் என விரக்தியுற்று அதை மறந்து தொலைத்து கிழித்து விட்டான். துணியை துவைத்தபடி. நான் போகாவிட்டால் யாருக்கு என்ன நஷ்டம்,யார் கவலைப்படப் போகிறார்கள். ஆனாலும் மனதிற்குள் ஒரு வேதனை.

ஒரு அலைபேசி அழைப்பு , எதிர்புறம் அந்த பதிவர் என்னடா தம்பி சந்திப்புக்கு வரலையா என உரிமையோடு ஒரு கேள்வி. துணிதுவைத்ததில் உடலெங்கும் நனைந்திருந்தது கண்களைத்தவிர . இப்போது அதுவும் சேர்த்து. இவனால் பதில் கூற முடியவில்லை. உடனே கிளம்பி வாடா என் டுபுக்கு என அழைக்கிறார். படபட சடசடவென உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அண்ணா எப்படினா பதிவு எழுதறீங்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது, என் பதிவ யாருமே படிக்க மாட்டேன்றாய்ங்க எதுக்கு நான் எழுதணும் எழுதவும் வரமாட்டேங்குது இதையே பல பதிவர்களிடமும் கேட்டான்.

சந்திப்பு முடிந்தது. எழுதத்துவங்கினான். எதையாவது எழுதுடா என அந்த அண்ணன் விதைத்த நம்பிக்கை மனதில் ஒளிர எதையாவது எழுதத் துவங்கினான்.



ஜனவரி 2009

இதோ இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறான். 2 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் அவன் வலைப்பூவை. குமுதம் தனது டாப் டென்னில் ஏழாம் இடம் கொடுத்தது.

இன்று

மண்ணாய் போயிருக்க வேண்டிய அவனை மரமாய் வளர விதை போட்டவர் அந்தப் பதிவர். அவர் மட்டும் இல்லாவிடில் அவன் வாழ்க்கையில் வலையுலக எழுத்தென்பது கமா இல்லாமல் முற்றுப்புள்ளியாய் முடிந்திருக்கும் .

அந்த பதிவர் , பாலபாரதி என பலராலும் அறியப்பட்ட அவனது பாலாண்ணா!

இதோ ஒரு வருடத்தை நிறைவு செய்கிறான் அவன் தனது வலையுலக பயணத்தில். அவன் தன் செல்ல பாலாண்ணாவுக்கே முதல் நன்றியை தெரிவிக்க ஆசைப்படுகிறான். நன்றி என ஒரே வார்த்தையில் முடித்துவிட முடியவில்லை. இதுவரை தனக்கு வந்த பாராட்டுக்கள் அனைத்தையும் அவருக்கே தர எண்ணுகிறான். அது அவருக்கே உரியதாம். அதில் யாருக்கும் பங்கில்லை என்கிறான். பாசக்கார பயபுள்ள..

2006 ஆம் ஆண்டு அது, பதிவுலகில் பாலபாரதி என்பவரின் வரவு பலருக்கும் பிற்காலத்தில் சிம்மசொப்பனமாக இருக்க போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. ஒரு குழு மட்டுமே கொட்டமடித்துக்கொண்டிருந்த வலையுலகில் அவர்களை எதிர்த்து , அவர்களை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைத்து சிலரது ஆதிக்கத்தில் இருந்த பதிவுலகை அனைவருக்குமாய் ஆக்கிய பெருமை பாலபாரதிக்கே உரியது. பதிவர் சந்திப்புக்கள் பலதையும் பதிவர் பட்டறைகளும் நடத்தி பதிவுலகின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அவர்.

அவரது வலைத்தள முகவரி - http://blog.balabharathi.net




********************************************

பதிவருங்களுக்கு ஒரு கடிதாசு;

அன்புள்ள மாம்ஸ் அண்டு மச்சிஸ்!

எப்படிக்கீறீங்கோ..

புச்சு புச்சா நெரிய பதிவருங்கோ எழுதுறாங்கோ.. அதிலயும் நெரிய பேரு சோக்கா எழுதுறாங்கபா.. நம்ம பதிவுலக பெர்சுங்கோ அவங்களலாம் நேர்ல பாக்கணும்னும் அவங்களோட மீட் பண்ணிக்கனும்னும் முடிவு பண்ணிக்கீதுங்கோ... அதுமில்லாம புச்சா வந்த பதிவருங்களும் ஒருத்தர ஒருத்தர் மீட் பண்ணிக்கினு கும்சா இருக்க ஒரு வழியா இது இருக்கும்னு தேனாம்பேட்டை ரைட் ரங்கம்மா நினிக்கிது..

அதனால் மக்கள்ஸ் பகீர்னு இந்த வீக்கு ஒரு பதிவர் சந்திப்பு வைக்கலாம்னு பெருங்குடிமக்கள்லாம் முடிவு பண்ணீர்ச்சுங்கோ..

அதனால இன்னானா...


வலையுலக பெரிசு பாலபாரதி அவர்களின் தலைமைல


வர ஏப்ரல் மாசம் 5 ஆம் தேதி சாயங்காலம் நம்ம சென்னைலக்கீற நம்ம மெரீனா பீச்சாண்டக்கீற நம்ம காந்தி செலையாண்டக்கீற தண்ணில்லாத குட்டயாண்ட அல்லாருமா சேந்துக்கீனு கடலை வாங்கி தின்னுகினு கும்சா குந்திக்கினு குஜாலா கும்மி அடிக்கலாம்னு முடிவு பண்ணிக்கீறோம். அல்லாரும் வந்து சேருங்கோ மக்கள்ஸ்...

இன்னார்தான் கலந்துக்கணும், இன்னார்லாம் கயந்துக்க கூடாதுனு ஒன்னியும் ரூல்ஸ் கடியாதுபா! நீங்கோ பதிவு எழுதுங்கோ எழுதாதீங்கோ படிங்கோ படிக்காதீங்கோ யாரையாவது அடிங்கோ அடிக்காதீங்கோ ஆனா பதிவர் சந்திப்புக்கு வந்துருங்கோ...!

இத்தான் பேசணும் இதெல்லாம் பேசப்பிடாதுனு ஒரு ரூல்ஸ் கீல்ஸ்லாம் கடியாது.. யார் வேணா பேசலாம் இன்னா வேணா பேசலாம்..


இந்த பதிவர் சந்திப்பு யாரும் சேர்ந்துகிணு கூட்டம் போட்டுக்கிணு நட்த்துறதுலாம் கடியாது.. அல்லாருமா சேர்ந்துகிணு அல்லாருக்காவும் நட்த்துறது..


அல்லாரும் வந்து சேருங்கோ மக்களே...


எடம் - மெரீனா பீச்சு காந்தி செலையாண்டை


டைமு - 5 மணிலேருந்து அரட்ட கச்சேரி முடியற வரிக்கும்


நாளு - 05-04-2009 ஞாய்த்துகெழமை


மக்களே மறந்துடாதீங்கோ மறந்தும் வூட்ல தூங்கிடாதீங்கோ.. மருவாதியா வந்து சேருங்கோ அல்லாங்காட்டி பதிவு போட்டு உங்க நிஜார பேஜார் பண்ண வேண்டிருக்கும்..


எதினாச்சும் டவுட்டு இர்ந்த நம்பருக்கி போன் பண்ணுங்கோ.. ( சுண்டக்கஞ்சிக்கு ரிசர்வேஷன் இந்த நம்பர்ல கடியாது அதுக்கு வேற நம்பர் நேர்ல வாங்கோ வாங்கி தரேன்)


பாலபாரதி – 9940203132


லக்கிலுக் – 9841354308


அதிஷா – 9884881824


கேபிள் சங்கர் - 9840332666


முரளிகண்ணன் - 9444884964


அவ்ளோதான்மா கடுதாசி..


இப்படிக்கு உங்கள் அன்புள்ள


அதிஷா..




******************************




பதிவுலகில் ஒரு மாதமாவது தாக்கு பிடிப்பேனா என எண்ணியவன் ஒரு வருடத்தை கடக்கிறேன்...


என் பாதையில் எப்போதும் வழிகாட்டியாகவும் விழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்த இருக்கும் இருக்கவிருக்கும் முரளிக்கண்ணன்,பரிசல்,வடகரைவேலன்,வெயிலான்,ஜ்யோவ்ராம் சுந்தர்,வால்பையன், நர்சிம் ,கே.ரவிஷங்கர், உ.த அண்ணன்,கோவிண்ணா,செந்தழல்ரவி,பைத்தியக்காரன்,கேபிளார்,தாமிரா,ரமேஷ்வைத்யா அண்ணே,கார்க்கி,மருத்துவர் புருனோ,சஞ்சய் காந்தி,தூயா மிக முக்கியமாக நான் சந்தித்திராத என் நண்பர்கள் விக்கி என்கிற விக்னேஷ்வரன் மற்றும் மணிகண்டன், என்னை படித்த பிடித்த கடித்த கடிந்த பின்னூட்டமிட்ட பின்னூட்டமிடாத வாசகர் வாசகி என அனைவருக்கும் என் நன்றிகள் ஆயிரம் லட்சம் கோடி கோடி கோடி..நன்றிகள்


திரட்டிகள் இல்லாமல் நான் இல்லை என்பதில் உறுதியாய் இருக்கிறேன். என் பதிவுகள் திரட்டும் தமிழ்மணம்,தமிழிஷ்,தமிழ்வெளி,தமிழ்பிளாகட், திரட்டி.காம்,மாற்று, என அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள்.




*********************************