பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?

>> 29 April 2009

(பப்பரப்பா என்று கைவிரித்துக்காட்டும் இந்த பாப்பா - ரேஷ்மா )

பிட்டுப்படங்கள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம் . என்னதான் அப்படிப்பட்ட படங்களின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை காணும் தைரியம் இருப்பதில்லை. ஏனோ நமது சமுதாய கட்டமைப்பு அவற்றைக்காணும் வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதில்லை.ஆனாலும் இருபது வயது இளைஞன் முதல் அறுபது வயது பல்லில்லா கிழவன் வரை அனைவருக்கும் செய்வதை விட( என்ன செய்வது என நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல ஓடிவிடுங்கள் ) பார்ப்பதில்தான் ஒரு உற்சாகம்.

ரொம்ப சீரியஸாக இப்படிலாம் பதிவு போட்டா நான் தமிழின துரோகி ஆகிவிட நேரிடலாம். இருந்தாலும் வாலிப வயோதிக அன்பர்கள் பலரின் வேண்டுகோள் என்ன செய்ய?. ஒரு பிட்டுப்படத்தை முறையாக எப்படிப் பார்ப்பது என்பதை கற்றுத்தரும் கடமை தமிழ் கூறும் நல்லுலகை சேர்ந்த எனக்கு இருப்பதாய் முந்தாநாள் போன் பண்ணிய சுந்தரிலிருந்து அடுத்தவாரம் போன் செய்ய இருக்கும் சுரேஷ் வரை அனைவரது வேண்டுகோளும்.

முதலில் பிட்டுப்படங்களை பிட்டுப்படங்களாய் பார்க்காமல் அவற்றை ஒரு உன்னத அனுபவமாய் பார்க்க என்னவெல்லாம் செய்யலாம். வாங்க பதிவுக்கு போகலாம்.

பிட்டுப்படங்களில் பல வகைகள் உண்டு. டபிள் எக்ஸ்,டிரிபிள் எக்ஸ், ஆங்கிலம்,தமிழ்,மலையாள தமிழ்,தமிழ் மலையாளம், ஹிந்தி தமிழ்,தமிழ் ஹிந்தி இப்படி இன்னும் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் டபிள் எக்ஸ் என்பது டபிள் எக்ஸ். டிரிபிள் எக்ஸ் என்பது டிரிபிள் எக்ஸ். இதற்கெல்லாம் கூட விளக்கம் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.

*****************************

*நேரம் இது மிக மிக முக்கியமானது. சில தியேட்டர்களில் காலைக்காட்சியில் மட்டுமே இது மாதிரி படங்கள் காட்டப்படும். அதிலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இன்னும் சில மாதங்களில் மூடும் தருவாயில் இருக்கும் தியேட்டர்களென்றால் உசிதம். நான்கு ஷோவும் பிட்டுப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை நாடுவது வீண். பிட்டுகளுக்கான உத்திரவாதம் இருக்காது. வெக்குனாப்புல போக நேரிடும். அதனால் முடிந்தவரைக்கும் காலைக்காட்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். (நேரம் 11லிருந்து 11.45 வரை மட்டுமே.. அதான்ல ஆபீசுக்கு லீவெல்லாம் போட வேண்டாம், ஒரு மணிநேர பர்மிஷனில் போய் வந்துவிடலாம்..;-)

* முதலில் டிக்கெட் எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளவேண்டும். பிட்டுப்படம் இருக்கும் சாலையோரம் சகஜமாய் நடந்து சென்று.. யாரும் பார்க்காத போது சடக்கென்று உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான். ஒரு பாம்பு எப்படி புத்துக்குள் ஊர்ந்து ஊர்ந்து புசுக்கென நுழையுமே அது போல. உள்ளே சென்றதும் கவுண்டர் என்ற ஒன்று இருக்கும் ( கட்டாயமாக ஜாதி இல்லை! ) . அது டிக்கெட் வழங்குமிடம். அங்கே சென்று டிக்கெட்டை வாங்க வேண்டும் . ( முடியல!)

* ஒரே விலைதான் எல்லா டிக்கெட்டும் என்பதை மனதில் கொள்க. (பிட்டுப்பட தியேட்டர்களின் எழுதப்படாத விதி! விதினாலே அப்படித்தான் ) . சமீபத்திய விபரம் 20 ரூ எல்லா வகுப்பும் ( அட!!). படத்தை முழுமையாக பார்த்தபின் இது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் இழந்த பணத்தை மீட்கலாம். அல்லது கன்சுயூமர் கோர்ட்டுக்கும் போகலாம்.

*அதனால் மறுபேச்சு பேசாமல் எவ்வளவு கேட்கிறார்களோ அவ்வளவையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவது உத்தமம். இல்லாவிட்டால் நீங்கள் தியேட்டரிலிருந்து தேவையில்லாமல் வெளியேற்றப்படுவீர்கள். அதைவிட நம் குலத்திற்கு மிகப்பெரிய அவமானம் இருக்குமா! அதிலும் நீங்கள் கேட்ட காசை கொடுக்க வில்லையென உங்கள் குமட்டில் குத்து விழுவதை யாரேனும் பார்த்துவிட்டால், ஐயகோ...

*அதனால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே நிறைய பணமெடுத்துக்கொண்டு செல்லவும். அல்லது பணமுள்ள நண்பரை அழைத்துச்செல்லவும். செல்லும் வழியில் படத்தில் ஆறு பிட்டு ஏழு பிட்டு என ஏகத்திற்கு கப்சா விடவும். (பிட்டு வரவில்லை என்றால் சே கட் பண்ணிட்டாய்ங்க சார் என்று கழண்டு கொள்ளலாம்.)

* அதே போல் உள்ளே நுழைந்தவுடன் தியேட்டரின் மிக இருட்டான பகுதிக்குள் பதுங்கிக்கொள்ளவும். அது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.

*ஆர அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும். (சம்பிரதாயம்ப்பா). பக்கத்தில் இருப்பவர் விடாவிட்டால் முதுகில் தட்டி மூச்சுவிட சொல்லுங்கள்.

*எப்படியோ உங்களை தியேட்டருக்குள் அழைத்து சென்றாகிவிட்டது. ஆறு மணிக்கு படம் என்றால் அது ஆறு முப்பதுக்குத்தான் தொடங்கவேண்டும் என்பது தியேட்டர் உரிமையாளரின் விருப்பம். அதனால் அரைமணிநேரம் வாசல் பக்கம் யார்யார் வருகிறார்கள் என அரை வெளிச்சத்தில் பார்த்து ரசிக்கலாம். (உங்கள் உற்றார் உறவினர் வந்தால் உசாராக உதவுமே )

*இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் உங்களை ஆரம்பத்தில் தியேட்டரின் இருட்டான பகுதியில் அமரச்சொன்னேன் என்று.

*அந்த அரை மணி நேர இடைவெளியில் லத்தீன் அமெரிக்க மற்றும் இத்தாலிய ரோமானிய இசையெல்லாம் , பாதி உடைந்து போன ஸ்பீக்கரில் போடுவார்கள் அதை ஆத்மார்த்த அனுபவமாக, பழுத்து வெடிக்க காத்திருக்கும் பலாப்பழத்தைப்போல கேட்டு ரசிக்க வேண்டும். (இல்லாவிட்டால் குமட்டில் குத்துவேன்) . (விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இதையெல்லாம் ரசிக்க தெரியாது, நம்மைபோன்ற அறிவுஜீவி குஞ்சுகளுக்கு மட்டும்தான் தெரியும். நாம் எதற்கு தியேட்டருக்கு வந்திருக்கிறோம் என்று.. குஞ்சு என்றால் கோழிக்குஞ்சு,ஆமைக்குஞ்சு,மீன் குஞ்சு என பொருள் கொள்க)

*ஸ்ப்பாடா ஒருவழியாக படம் போட்டாச்சா! , இங்கேதான் நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கியமான விடயம் வருகிறது. ஷகிலா படங்களில் முதல் காட்சியில் சாமி கும்பிடும் காட்சியோடு படம் துவங்கினால் படத்தில் 100 சதவீதம் குறைந்தது ஆறிலிருந்து பத்து பிட்டுகள் உத்திரவாதம். அதனால் வெறும் சாமி கும்பிடும் காட்சிதானே என பப்பரப்பா என பராக்கு பார்த்துக்கொண்டிருக்காமல் படத்தில் கவனமாய் இருக்க வேண்டும்.

*படத்தில் ஷகிலாவின் கணவனாகவோ அல்லது முக்கிய பாத்திரம் (கதாநாயகியின்) கணவனாக ஒரு அரைமண்டை கிழம் இருந்தால் வெற்றி உங்களுக்கே..! ஆறு பிட்டு உத்திரவாதம்.

*படம் ஆரம்பித்த பின் முன் சீட்டு ஏன் ஆடுகிறது, பின்னால் என்ன முனகல் சத்தம், ஐயோ குய்யோ என்று யார் கத்தினாலும் எதற்கும் தலை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பிடாதீங்க.. அதற்கான காரணங்கள் அனுபவித்து உணர வேண்டியது.பக்கத்து சீட்டில் அமரும் நபரை உன்னிப்பாக கவனிக்கவும். அவர் உங்களைப்பார்த்து சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்து ஏதும் புண்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.

*இன்டர்வெல்லுக்கு முன்னால் அதாவது படம் துவங்கி சரியாக அரைமணிநேரத்திற்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும் , தப்பி தவறி கூட படம் துவங்கியதிலிருந்து இன்டர்வெல் வரை ஆய்,சூச்சூ, உச்சா, கிச்சா ,தம்மு எதற்கும் போய் விடாதீர்கள். மிக முக்கியமான பிட்டை இழக்க வேண்டியிருக்கும்.

*இன்டர்வெல்லுக்கு பிறகு பொதுவாகவே எந்த தியேட்டரிலும் பிட்டுகள் போடுவதில்லை. சப்பையான கிளைமாக்ஸ் மட்டுமே.

அதை பார்ப்பதை விட இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் , தியேட்டரை விட்டு அரக்க பரக்க பின்னங்கால் பிடறியில் பட ஓடி விடுவது நல்லது. தியேட்டரும் இருட்டாக இருக்கும். யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லை.

*இப்படி ஒரு வழியாக பிட்டுப்படத்தை பார்த்து முடித்ததும் . வீட்டிற்கு சென்றதும் பழனி ஆண்டவரை வணங்கி நெற்றி நிறைய பட்டையிட்டு பேசாமல் படுத்து உறங்கவும். இறைவன் அருள் உங்களுக்கே சொந்தமாகும்.

***************************

பின் குறிப்புகள்.

*ஆங்கில பிட்டுப்படங்கள் தற்காலத்தில் அதிகம் வருவதில்லை. வந்தாலும் அவற்றில் பிட்டுகள் மகா மொக்கையாக இருப்பதால் அவற்றை பார்ப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

*அதே போல இந்தி பிட்டுப்படங்களில் .. பிட்டுகள் இடம் பெற்றாலும் மலையாளத்தை நெருங்கவே முடியாது. நெருங்கினாலும் இந்திக்காரர்கள் உணவைப்போல அதாங்க சப்பாத்தி போல இருக்கும். அதற்கு மேல் உங்களிஷ்டம்.

*சீன , கொரிய பிட்டுப்படங்களில் எனக்கு தெரிந்தவரை அலெக்ஸான்டரா வை அடித்து கொள்ள வேறு படமே இல்லை எனலாம். மற்ற படி அவை ஒரு உன்னத அனுபவத்தை தரவல்லது. சாப்ட் பிட்டு (soft biitu ) பார்க்க விரும்புபவர்கள் முயற்ச்சிக்கலாம்.

**************************

இது தவிர , டிவிடி வடிவத்தில் கிடைக்கும் பிட்டுப்படங்கள் பார்க்கும் போது எப்படி பார்க்க வேண்டும் என உங்களுக்கு நான் சொல்லித்தர தேவையில்லை. முடிந்த வரை படத்தை மியூட்டில் வைத்து ஒரு கையில் ரிமோட்டை பிடித்துக்கொண்டு காதை கூர்மையாக வைத்துக்கொண்டு பார்க்கவும். யாராவது வந்தால் அணைத்துவிட ( டிவியை!) வசதியாக இருக்கும்.

ஆனால் மிகச்சிறந்த ஆங்கில,மாற்றுமொழி பிட்டுப்படங்கள் வாங்க ஒரு மிகச்சிறந்த வழியுண்டு, சாரு நிவேதிதா மாதிரி கிம் கி டுக்... டின்டோ பிராஸ், சிரிலோ கிரிஸ்கோஸ்கி,அந்தோனி போர்ஜெஸ் போன்றோரின் படங்களை பார்ப்பவரை நண்பராக்கி கொள்ளுங்கள் . அவர்கள் பார்க்கும் படங்களின் பெயர் மட்டும் வாங்கிக்கொண்டு அதை போய் டிவிடி கடையில் கேளுங்கள். அவர் நிச்சயம் இரண்டில் ஒன்று தருவார், ஒன்று அந்த படத்தின் டிவிடி அல்லது சாராமாரியான அடி உதை.. இனிமே இந்த கடை பக்கம் வந்த மவனே சாவடிதான் என்கிற இலவச வசனத்தோடு.. ( சமயங்களில் சார் இந்த படமெல்லாமா பாக்கறீங்க பெரிய ஆள்சார் என்று பாராட்டவும் நேரிடலாம் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல)

***********************

இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.

54 கருத்துக்கள்:

டக்ளஸ்....... April 29, 2009 2:41 PM  

\\இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.\\

ஏன் இந்த கொலைவெறி..?

டக்ளஸ்....... April 29, 2009 2:42 PM  

அணுபவம் நல்லத்தான்யா பேசியிருக்கு..!

Raju April 29, 2009 2:48 PM  

நன்றி நன்றி!

குசும்பன் April 29, 2009 2:50 PM  

அதிஷா இதில் பல தவறான தகவல்கள் தரப்பட்டு உள்ளன!

இடைவேளைக்கு பிறகே பிட்டு காட்டப்படும்! ஆனால் தாங்கள் சொல்லி இருப்பது தவறான தகவல்! இதை வன்மையாக கண்டிக்கிறேன்!

குசும்பன் April 29, 2009 2:51 PM  

//இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் //

ஆவலோடும் அதுக்கு அடுத்த பாகமான நடிப்பது எப்படி என்ற பதிவுக்கும் வெயிட்டீங்! தாங்கள் ஏன் ஒரு வொர்க்‌ஷாப் நடத்த கூடாது?

நாய்க்குட்டி April 29, 2009 2:52 PM  

எல்லாம் சரி பாஸு... எந்தெந்த தியேட்டர்ல பிட்டு போடுவாங்கோ, எந்தெந்த தியேட்டர்ல ஆப்பு அடிப்பங்கோ ... எதாவது விவரம் இருந்தா கொடுங்கோ...

மணிகண்டன் April 29, 2009 3:03 PM  

:)- சரி. இன்டர்நெட் என்ற மீடியம் யூஸ் பண்ணி இதை எப்படி பார்ப்பதுன்னு சொல்லாம விட்டதுக்கு என்ன காரணம் ?

jagadeesh,  April 29, 2009 3:15 PM  

hi,
pollachi omprakash.
erode nataraja.
hosur saravana
coimbatore near gandhipuram bus stand theaters.
good bid filim in english ciraco

ஜ்யோவ்ராம் சுந்தர் April 29, 2009 3:17 PM  

ஏன்யா, எதிர்ப் பதிவு எழுத வேண்டியதுதான், அதுக்காக இவ்வளவு நாள் கழிச்சா :)

வடிவேலன் ஆர். April 29, 2009 3:21 PM  

இனிமே இந்த கடை பக்கம் வந்த மவனே சாவடிதான் என்கிற இலவச வசனத்தோடு

நல்ல பதிவு தொடரட்டும் இதே மாதிரி எழுதினால் பரங்கிமலை ஜோதி ஓனர் உங்களை தேடுரார் பாரட்ட

கடைக்குட்டி April 29, 2009 3:26 PM  

என்ன அண்ணே இது ???? இப்பிடி ஒரு பதிவா ??
(நாளய இந்தியா என்னாகுவது...??)

செமத்தியான மசாலா பதிவு... label ல அனுபவம்ன்னு ஏன் போடல??

தமிழ் பிரியன் April 29, 2009 3:30 PM  

தம்பீ அதிஷா! இந்த பதிவின் மூலம் உங்கள் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறி விட்டது. இதில் சுத்தமாக உங்களுக்கு அனுபவமே இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது. இனியாவது படங்களுக்கு போய் பார்த்துட்டு அதன் அனுபவத்தை வைத்து எழுதுங்கள்.. இப்பதிவு ஒன்லி கேள்வி ஞானம் தான்.. அதுவும் பொய்யான தகவல்களையே உங்களுக்கு தந்துள்ளனர்.... ;-))

மணிகண்டன் April 29, 2009 3:36 PM  

***
ஏன்யா, எதிர்ப் பதிவு எழுத வேண்டியதுதான், அதுக்காக இவ்வளவு நாள் கழிச்சா
***

அப்படியா ? எதிர் பதிவா ? எந்த பதிவுக்கு ? அதோட லிங்க் கொடுக்காம அதிஷா ஏமாத்திட்டாரே ?

Suresh Kumar April 29, 2009 4:09 PM  

நல்ல அனுபவம்

லோகு April 29, 2009 4:14 PM  

என்ன சார் நீங்க..
இது கூட தெரியாமலா இருப்பாங்க..

அடுத்த தலைப்ப எழுதுங்க..

Senthil April 29, 2009 4:52 PM  

ungalaale mattum thaan mudiyum

super post

Subankan April 29, 2009 5:17 PM  

// இவற்றில் டபிள் எக்ஸ் என்பது டபிள் எக்ஸ். டிரிபிள் எக்ஸ் என்பது டிரிபிள் எக்ஸ்.//

என்னதிது?

ஆமா? அதென்ன டபுல்?, ட்ரிபுல்? கடைசிவரை சொல்லவே இல்லேயே?

Anonymous,  April 29, 2009 5:37 PM  

//வாங்க பதிவுக்கு போகலாம்.
//

Sooper nakkal.

உட்டாலக்கடி தமிழன் April 29, 2009 5:37 PM  

என்னுடைய பின்னூட்டம் எங்கே... உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா இந்தக் கொடுமையை எதிர்த்து...

பிட்டுப் படம் பற்றி எழுதும் அதிஷாவே, சின்ன பிட்டான என்னுடைய பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை?

தீப்பெட்டி April 29, 2009 5:44 PM  

டக்ளஸ்....... said...

\\இந்த பதிவுக்கு ஏன் இந்த கொலைவெறி..?//

ரிப்பீட்டேய்...

தேவகோட்டை ஹக்கீம் April 29, 2009 5:51 PM  

எனக்கு தெரிந்து இன்டெர்வெல்லுக்கு அப்புறம்தான் பிட் போடுவார்கள். தவறான தகவல்...அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 29, 2009 6:01 PM  

ஸ்ஸ்ஸபாஆஆஆஆஆ... :(

ஏண்ணே.. ஆபிஸ் வேலையை கூட விட்டு எவ்ளோ அஜால் குஜால் படங்கள் எல்லாம் தேடி குடுத்தேன். அதைவிட்டு இப்டி ஒரு சப்பை.. சாரி தொப்பைப் படத்தை போட்டு சுதிய கொறைச்சிட்டிங்களே.. :(

karthik April 29, 2009 6:02 PM  

neenga bittu padam edutha athulu herovuku enna qualification sir???

கிருஷ்ணா April 29, 2009 6:12 PM  

அண்ணாச்சி.. பிட்டுப்படத்தை புட்டு புட்டு எழுதியிருக்கீங்க.. இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி.. இந்த பிட்டுன்னா என்னாங்க அண்ணாச்சி?! ஆவ்!!!

Anonymous,  April 29, 2009 6:18 PM  

kanchipuram UDAYAM
SHANTHI
BALASUBRMANYA
KAARTHI

இரா.சிவக்குமரன் April 29, 2009 6:32 PM  

ஹும் நல்லாத்தான்யா இருக்கு.என் கூட இது பத்தி ஆராய்ச்சி பண்றதுக்கு ஆள் தேடிக்கிட்டு இருந்தேன். ஏன்னா இது ஊருக்கு ஊர் மாறும். ஒரு ஊருல இடைவேளைக்கு முன்னால, ஒரு ஊருல இடைவேளைக்கு பின்னால. இப்பிடி எவ்வளவோ விஷயம் இருக்கா இல்லியா? பொத்தாம் பொதுவா சொன்னா எப்பிடி?

தண்டோரா April 29, 2009 6:39 PM  

பிட்டு படம் ஓடும் அரங்குகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கழிவரை...எத்தனை கறை படிந்த கதைகள்..

தண்டோரா April 29, 2009 6:39 PM  

பிட்டு படம் ஓடும் அரங்குகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கழிவரை...எத்தனை கறை படிந்த கதைகள்..

நாஞ்சில் பிரதாப் April 29, 2009 6:45 PM  

நான் சின்ன வயசுல பிட்டு படம் பார்த்ததை ஒளிந்திருந்தது பார்த்த மாதிரி புட்டு புட்டு வைக்கிறிங்க...
குறிப்பா அந்த "தியேட்டர் இருட்டு பகுதி"...

Anonymous,  April 29, 2009 6:53 PM  

please give that directors name in english.Helpful to search in google.

Many of the guys interested to watch world films can download from the following site.

http://www.foriegnmoviesddl.com

வால்பையன் April 29, 2009 7:09 PM  

//பக்கத்து சீட்டில் அமரும் நபரை உன்னிப்பாக கவனிக்கவும். அவர் உங்களைப்பார்த்து சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்து ஏதும் புண்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.//

அடிபலமா தல!

BEST FUNDS ARUN April 29, 2009 7:29 PM  

அதிசா,
தயவு செய்து படம் பர்ர்த்து விட்டு எழுதவும். அதுபோல் த்மைல்நாட்டில் பிட்டு படம் பார்க்க சிறந்த தியோர் ஒரு லிஸ்ட் போடவும். நான் நாகர்கோயில் ராஜன் திடோறேல alexandra parthen.நல்ல படம்

சிக்கரம் பிட் படம் டைரக்ட் பண்ணுங்க? ஹீரோ??????????????



ONE AND ONLY ATHISA.

TITLE CARLA AKKAMUM UNARVUM ENDRU PODAVUM.

அறிவிலி April 29, 2009 7:46 PM  

திருச்சி முல்லை (இன்னும் இருக்கா?)

உங்க ஒரிஜினல் பேரு ப்ரகாஷா?

Chill-Peer April 29, 2009 9:04 PM  

//இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு. //

செம வரவேற்ப்பு... நிச்சயம் அடுத்த பதிவுக்கு ரெடியாயிட்டிருப்பீங்க... அதுல கேமரா மேன் / லைட் பாய்க்கு என்ன ரோல்னு மறக்காம சொல்லிடுங்க அதிஷா,

சென்ஷி April 29, 2009 9:18 PM  

:-))

நல்லா விலாவரியா எழுதிட்டீங்க போலருக்குது. இதுல குசும்பன் தப்பு வேற கண்டுபிடிச்சுருக்காரு. அப்ப அடுத்த பதிவு குசும்பன்கிட்டேர்ந்தா!

கோவி.கண்ணன் April 29, 2009 9:48 PM  

//இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு. //

என்ன கொடுமை அதிஷா. பார்ப்பது ஓகே, எடுப்பது......ஐயோடா சாமி.

போறப் போக்கைப் பார்த்தால் காமக் கதைப் புகழ் சுந்தரானந்த ஸ்வாமியை உங்களுக்கு சிஷ்யன் ஆக்கிடுவிங்கப் போல

குப்பன்_யாஹூ April 29, 2009 10:08 PM  

அப்படியே நம்பகமான திரை அரங்குகள் பெயரையும் போட்டு இருக்கலாம். பரங்கிமலை jothi, போரூர் பானு, ஓடியன் கடை மணி, மதுரை மது, கல்லிடை சக்தி, நெல்லை கலைவாணி, நாகர்கோயில் பிரபா, களியக்காவிளை ஸ்டார்.

தவிர்க்க வேண்டிய திரை அரங்குகள்:

ஆடம்பக்கம் ஜெயலக்ஸ்மி, எழும்பூர் கெயிட்டி, சென்கபட்டு ஆரார்ர்.

இணையம் வந்து நொடிந்து போன முதல் தொழில் இந்த பிட்டு பட திரை அரங்குகள் தான்.

குப்பன்_யாஹூ

Inba,  April 29, 2009 10:40 PM  

அதிஷா ஒரு முக்கியமான பாயிண்ட் விட்டுடிங்க

நகரின் முக்கிய தியேட்டர்களில்
தீபாவளி அல்லது பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு
புதிய படங்கள் வருவதற்கு
இரண்டு நாள் முன்னால்
ஓடும் பிட்டு படங்களை
பார்ப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம்.

VIKNESHWARAN April 29, 2009 11:41 PM  

//முடிந்த வரை படத்தை மியூட்டில் வைத்து ஒரு கையில் ரிமோட்டை பிடித்துக்கொண்டு காதை கூர்மையாக வைத்துக்கொண்டு பார்க்கவும்.//

மாமு இன்னோரு கைய இன்னா பண்றதுனு சொல்லவே இல்லப்பா நீ... :(

VIKNESHWARAN April 29, 2009 11:42 PM  

அத்த பதிவுல ஒரு பத்து படத்துக்கு லிங்க் போட்டினா அதிஷா டாட் காம் புணிதமடையும்.

தினேஷ் இராஜேந்திரன் April 30, 2009 2:02 AM  

அதிஷா அவர்களே , பிட் சீன் , இண்டெர்வெல் முடிஞ்சுதான் போடுவங்கப்பா.. ஏன்னா தியேட்டர்ல உள்ள அழுகி போன போண்ட வடைய அப்புறம் யாரு வாங்குவா.. நான் பார்த்தவரை இடைவேளைக்கு அப்புறம் தான் பிட். சமயத்தில் இன்ப அதிர்ச்சியும்,ஏமாற்றமும் இருக்கும். எதையும் தாங்கும் இதையமாக இருக்க வேண்டும்... அப்புறம் நீங்க சொன்ன மாதிரி மலையாளம் பிட் தான் சிரந்தது.

Anonymous,  April 30, 2009 11:44 AM  

athan DVD 25 rupaiku vikaranla appuram ethuku intha vetti vela

மாமா,  April 30, 2009 12:14 PM  

என்னைய நீ இந்த காலத்திலும் இப்படி இருக்க நீ தியேட்டர்ல போய் பிட்டு பாக்க சொல்ற
வீட்டுல செவுத்துல சாய்ஞ்சு உக்காந்து பப்ரபானு கல விரிசிபோட்டுகிட்ட்டு அதை ஒரு கைல புடிச்சிகிட்டு (ரிமோட் ) ஜம்முனு பாக்குற சோகம் வருமா சொல்லுயா அதிஷா....

babu May 1, 2009 10:25 PM  

அதிஷா வயது 36 சரியா?

kajaaa,  May 21, 2009 1:37 AM  

adink koiyaala

Saalim July 4, 2009 4:40 PM  

ஸூபர்!! ஆனால் எங்க ஊரில் interval-ku அப்புறம் தான் உச்ச காட்ட பிட்டு ஆரம்பிக்கும்!!! பிட்டு முடிந்தவுடன் க்லைம்யாக்ஸ்.... தியேடர் owner பெரிய புள்ளி என்றால் இன்னும் jamaikalam!!

Anonymous,  July 16, 2009 8:55 PM  

ellam sari neenga sonna directors pera mattum englishla ezudhirukkalaamla

senthu August 28, 2009 8:19 AM  

கிம் கி டுக்... டின்டோ பிராஸ், சிரிலோ கிரிஸ்கோஸ்கி,அந்தோனி போர்ஜெஸ் ....
இந்தப்படங்கல்ல "டின்டோ பிராஸ்" கலக்சனே இருக்குப்பா... நம்ம லெவலும் சாரு சாரளவுக்கு இல்லாட்டியும்...ஓகே போல...
அதுசரி இப்பல்லாம் யாரு டிவில பாக்குறாங்கப்பா.. எல்லாம் நெட் தான்... ஹீ.ஹீ...

livingston baba December 2, 2009 12:53 AM  

very very nice nana partha bitu padam alaxcandra mattum than (theaterla poi)

Anonymous,  December 15, 2009 5:56 PM  

neenga sonnathu supera iruku but ponnunga eppadi etha pakarathu. partha thappa?

pappu...

nhs January 10, 2010 12:26 PM  

piddu padam paarppathu thani sukam theriyuma!

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP