சாமி நீங்க என்ன லூசா!

>> 03 May 2009








ஒரு நாள் குரு எப்போதும் போல சிஷ்யனை அழைத்தார். குருன்னாலே டெரர் ஆச்சே. அதும் நம்ம குரு அகிலாண்ட நாயகன் அன்னபோஸ்ட் எம்.பி...

சிஷ்யனை அழைத்து எப்போதும் போல எவரெஸ்ட் சிகரத்தின் மேல் தான் ஒரு மடம் அமைக்க இருப்பதாகவும் அங்கே சென்று ஒரு எஸ்டிமேட் போட்டுக்கொண்டு வரவும் சொன்னார்.

சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''சாமி நீங்க என்ன லூசா? '' என்றான்

''டே சிஷ்யா ஒன்னியும் டென்சனாவத...! இப்ப இன்னாத்துக்கு பயப்படறே.. ராஜா நீ அங்க போக சொல்ல உனக்கு இன்னா ஆபத்து வந்தாலும்.. ஆண்டவா காப்பாத்துனு மட்டும் சொல்லு , வேற எதுவும் தப்பிதவறி கூட சொல்லிறாத.. உனக்கு ஒன்னியும் நடக்காது.. ஓகேவா''

''ஓகேபா'' என்று அங்கிருந்து எவரெஸ்ட்டை நோக்கி கிளம்பினான். மாங்கு மாங்குனு உச்சிக்கு பக்கத்தில போயிட்டிருந்தான்.

டபக்குனு ஏறும் போது கால் ஸ்லிப்பாகி கீழே விழ ஆரம்பித்தான்.. உடனே ஆண்டவா காப்பாத்து என கத்தினான்.. அவனை வானத்திலிருந்து ஒரு கை வந்து பற்றிக்கொண்டது.

ஸ்ப்பாடா பொழச்சிட்டோம் என்று அமைதியானவனாய் ''தேங்க்ஸ்பா கடவுளே'' என்றான். சட்டென கைகள் அவனை விட்டது பொதக்கடீரென அதல பாதாளத்தில் விழுந்தான்.


*****************

மலையிலிருந்து விழுந்தாலும் குருவின் ஞானதிருஷ்டியால் எப்படியோ உயிர்பிழைத்தான் சிஷ்யன்.

ஒரு நாள் அவனும் மற்ற இரண்டு சீடர்களும் நமது குருவும் தியானத்தில் இருந்தனர்.

அப்போது கோயிலில் கட்டிவைத்திருந்த கொடி வேகமாய் பறந்தது.

அதை கவனித்த முதல் சீடன் சொன்னான '' கொடியாடுது''

இரண்டாவது சீடன் கொஞ்சம் அறிவுள்ளவன் , அவன் ''காற்றாடுது'' என்றான்

நம்மாளுக்கு எப்போதுமே கொஞ்சம் எல்லாரையும் விடவும் அறிவு அதிகம் உடனே '' நம் மனம்தான் ஆடுது '' என்றான்...

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த குரு மெர்சலாகி '' த்தா! ஒன்னியும் ஆடல.. உங்க வாய்தான் ஆடுது.. அல்லாரும் மூடினு தியானம் பண்ணுங்கடா '' என்றார்.

****************

ஆஸ்ரமத்தில் மற்றொரு நாளில்...

''மாமா ஆஸ்ரமத்தில் ஜாலியா பேசிகிட்டே தியானம் பண்ண முடியாது நாம ஆத்துக்கு அந்தாண்ட போய் தியானம் பண்ணுவோம்டா'' என்றான் நம்ம சிஷ்யன்.

''ஓகே மச்சி'' என்று ஆமோதித்தான் பிரண்டு சிஷ்யன்.

இருவரும் அக்கரைக்கு போனதும் கரையில் அமர்ந்து தியானத்தை துவங்கினர். அக்கரையில் ஏற்கனவே இருந்த குருநாதர் இவர்களை கண்காணிக்கலாம் என முடிவெடுத்து மரத்துக்கு பின்னால் மறைந்து நின்றார்.

தியானம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்டு சிஷ்யன் ''மச்சான் நான் என்னோட பெட்டிய பூட்டாம வந்துட்டேன்டா , இரு மச்சி பூட்டிட்டு வந்துடறேன்'' என்று ஆற்று நீரின் மீது அட்டகாசமாக நடந்து அந்த பக்கம் போய் திரும்பி அதுபோலவே ஆற்றின் மேல் நடந்து வந்தான்.

மறைந்து பார்க்கும் குருவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இதையெல்லாம் நாம் சொல்லித்தரவே இல்லையே என்று அவருக்கு ஓரே குழப்பம். ஏனென்றால் அதெல்லாம் அவருக்கே தெரியாது.

மீண்டும் தியானம் தொடர்ந்தது. இந்த முறை நம்ம சிஷ்யன் '' மச்சான்.......மச்சான்..''

''என்னடா.. இப்பதான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ள''

''இல்லடா நான் ஜட்டி போடாம வந்துட்டேன் ,போய் ஜட்டி போட்டுட்டு வந்துடறேன்டா''

''போய் தொலைடா''

நம்ம ஆளும் அதே போல ஆற்றின் மேல் அநாயசமா நடந்து போய் திரும்பி வந்தான்.

குருவுக்கு கோபமே வந்துவிட்டது. இந்த சில்லரை பசங்கனாலயே முடியுதுனா என்னால முடியாதா .. என்று ஒடி போய் ஆற்றில் நடக்க முயன்றார். தொபுக் என மூழ்கிப்போனார்.

இதை சிஷயர்கள் பார்த்துவிட்டனர். நம்மாளு சிரிப்பு வந்து அடக்கிக்கொண்டிருந்தான்.

குருவுக்கு அவமானமாய் போய்விட்டது. இருந்தாலும் விடாமுயற்சியோடு மீண்டும் கரைக்கு வந்து மீண்டும் ஆற்றில் நடக்க முயன்றார். இம்முறையும் தோல்வி.

மூன்றாம் முறை, நான்காம் முறை.. நாற்பதாவது முறை என ஒரு முறை கூட அவரால் நடக்கவே முடியவில்லை.

இருட்டிவிட்டதால் சிஷ்யர்கள் இருவரும் அவர் கண் முன்னாலேயே ஆற்றின் மீது நடந்து அந்த பக்கம் சென்றனர்.

குருவுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. இன்னும் ஒரு முறை என மீண்டும் மீண்டும் இரவெல்லாம் முயன்று கொண்டிருந்தார். கரைக்கு வருவார். உள்ளே நடப்பார். மூழ்குவார். குளிரில் உடலெல்லாம் நடுங்கியது.

அருகருகே படுத்திருந்த அந்த சிஷ்யர்கள் பேசிக்கொண்டனர்.

''மச்சான் பாவம்டா நம்ம குரு'' என்றான் நம்மாளு .

''நீ வேறடா இன்னா மாதிரி டார்ச்சர் குடுக்கறான் அந்தாளு... அனுபவிக்கட்டும் ''

''வேண்டாம் டா நாம போய் சொல்லிரலாம் ஆத்துக்கு நடுவுல எங்கலாம் கல்லு போட்டு வச்சிருக்கோம்னு .. பாவம்டா சாமி சரியான லூசு நாளைக்கு செத்தாலும் செத்துரும்...'' .

**************

22 கருத்துக்கள்:

Chill-Peer May 3, 2009 8:23 PM  

//நம்மாளுக்கு எப்போதுமே கொஞ்சம் எல்லாரையும் விடவும் அறிவு அதிகம் உடனே '' நம் மனம்தான் ஆடுது'என்றான்//

அதனால தான் உங்க மனசு எப்பவும் ஆடிக்கிட்டே இருக்கா அதிஷா?

அக்னி பார்வை May 3, 2009 8:28 PM  

இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை அதிஷானந்தா

தமிழ் பிரியன் May 3, 2009 8:41 PM  

கடைசிக் கதை கலக்கல்பா!

VIKNESHWARAN May 3, 2009 9:16 PM  

இன்னாமா எழுதுற மாமு....

ஊர் சுற்றி May 3, 2009 9:23 PM  

ஏற்கெனவே கேட்ட கதைகள்தான் என்றாலும், அதிஷாவிடமிருந்து வரும்போது இவற்றிற்கு தனி அழகு.

//இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை அதிஷானந்தா// :))))))))))

நான் உங்கள் சிஷ்யனாக வரலாமா?
ஆசிரமம் எங்கேன்னு மட்டும் சொல்லுங்க.

தமிழ்ப்பறவை May 3, 2009 9:43 PM  

கலக்கல் அதிஷா

சென்ஷி May 3, 2009 10:24 PM  

//அக்னி பார்வை said...
இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை அதிஷானந்தா
//

ரிப்பீட்டே :-))

SUREஷ் May 3, 2009 10:40 PM  

//''நீ வேறடா இன்னா மாதிரி டார்ச்சர் குடுக்கறான் அந்தாளு... அனுபவிக்கட்டும் ''
//


அனுபவியுங்கள்,,, அனுபவியுங்கள்

ஆயில்யன் May 3, 2009 10:54 PM  

கலக்கல்

//உங்க வாய்தான் ஆடுது.. அல்லாரும் மூடினு தியானம் பண்ணுங்கடா '' என்றார்//

:)))))))))))))))

Chandra May 3, 2009 11:16 PM  

eppadi sir oru satharana jokka evvolo azahaga ezhuthiringa?? Very good.. the last one.. aduthathu thiraikathai thaan !!

அது சரி May 4, 2009 1:16 AM  

பின்னிட்ட மச்சி :0)))...அதுவும் நான் ஓமக்குச்சி நரசிம்மனை குருவா நினைச்சிக்கிட்டு படிச்சேன்...

தராசு May 4, 2009 9:48 AM  

கலக்கல் தல,

Udhayakumar May 4, 2009 11:38 AM  

கடைசி கதை சூப்பர்ப்பா!!! நீயெல்லாம் இந்த மாதிரி கதை சொல்லி கேட்டதே இல்லை தெரியுமா???

(பருத்திவீரன் சின்னப்பையன் என்கிட்ட சொன்னது இது)...

Anonymous,  May 4, 2009 12:58 PM  

Hello Sir, Mariyathai (Dr.Vijayakanth - OSCAR Film - Vimarcahana Please

RAHAWAJ May 4, 2009 1:46 PM  

எப்படிமா எப்படி சும்மா சூப்பராகீதுமாமு

தீப்பெட்டி May 4, 2009 4:52 PM  

கடசீ கத நல்லாத்தா கீதுபா...

கயல்விழி நடனம் May 4, 2009 5:17 PM  

//வேண்டாம் டா நாம போய் சொல்லிரலாம் ஆத்துக்கு நடுவுல எங்கலாம் கல்லு போட்டு வச்சிருக்கோம்னு ..

என்ன ஒரு வில்லத்தனம்....

pappu May 4, 2009 6:54 PM  

கடைசி சாமி கதை வழக்கமான கதையோட நல்ல ஆல்டர்னேடிவ்

kaakaa July 23, 2009 8:48 PM  

இதை வரி மாறாமல் குங்குமத்தில் படித்த மாதிரி நினைவு. அதுவும் உன்னோட படைப்பா தலீவா?

Sambasivam August 23, 2009 11:44 AM  

பின்னிட்ட மாமு கண்டின்யு மா

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP