Pages

04 May 2009

நியூட்டனின் மூன்றாவது விதி?


நியூட்டனின் மூன்றாவது விதி...?

விதை விதைச்சவன் விதை அறுப்பான்..

திணை விதைச்சவன் திணை அறுப்பான்..

வினை விதைச்சவன் வினை அறுப்பான்..

நியூட்டனின் மூன்றாவது விதிக்கும் இந்த பழமொழிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாய் கருதுகிறேன். மூன்றாவது விதியை விளக்க மூன்றுவரி இருக்கிறதே போதாதா??


கதை?

கண்ணுக்குத் தெரியாத எதிரி. போனில் டார்ச்சர். செல்போன் சவால்கள் இன்ன பிற.....

தந்திரமாய் எதிரியின் பணம் புகழ் ஆள்பலம் அரசியல் பலம் அழிப்பது. காலக்கெடுவில் சாகடிப்பது.பிளாஸ்பேக்கில் அதற்கு ஒரு காரணம்.

தரணி,பேரரசு போன்றோரின் எல்லாத்திரைப்படக்கதைகளும் இதுதானே. தமிழ்சினிமாவின் சாபக்கேடான கதைக்களம். நியூட்டனின் மூன்றாவது விதியும் அதே விதிக்குள்தான் சிக்குண்டு கிடக்கிறது. ஆனால் புதுமையாய் எளிமையாய் வேகமாய் விவேகமாய் , தற்கால தமிழ்சினிமாவில் இருந்து விலகி பல நூறு ஆங்கிலப்படங்களின் தாக்கத்தோடு ஒரு தமிழ்சினிமா முயற்சி எனக்கொள்ளலாம்.

காதலியை கற்பழித்து கொன்ற ஒரு பணக்காரனை , பல மாதங்கள் திட்டமிட்டு முதல் பாராவில் சொன்னது போல பழிவாங்குகிறான் நாயகன். இதில் என்ன புதுமை என்றால் திட்டமிடலும் காதலும் படமல்ல.. பழிவாங்க அவன் எடுத்துக்கொள்ளும் இரண்டு மணிநேரம்.எங்கேயோ கேட்ட கதை போல் இருக்கிறதா கைதியின் டைரி? இருபத்திநாலு மணிநேரம்? நிறைய விடைகள் இருக்கிறது. எல்லாவற்றிலுமே காதலியை அல்லது மனைவியை கற்பழிப்பவனையே திட்டமிட்டு பழிவாங்குவதாய் அமைந்து விடுவது நகைமுரண்.

திரைக்கதை....... ?

அடேங்கப்பா என்ன ஒரு வேகம். படத்தின் ஒரு ஃபிரேமைக்கூட விட்டு விட இமைகள் தயங்கும். கில்லிக்கு பிறகு அப்படி ஒரு பேய் வேகப்படம். படம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு விநாடியும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. திரைக்கதை அமைத்தவர் மிகப்பெரிய அறிவாளியாக இருந்திருக்க வேண்டும். முதல் பாதியில் செம அடி வாங்கும் வில்லன் , இரண்டாம் பாதியில் நாயகனின் திட்டங்களை திறமையாக முறியடிப்பதும், நாயகன் தனது திட்டம் தவிடு பொடியானாலும் பீனிக்ஸ் போல் மீண்டெழுந்து திரும்ப திரும்ப வில்லனை நொருக்குவதும்.. அடேங்கப்பா.. எங்கிட்டுய்யா கத்துக்கிட்டீங்க. நீங்கல்லாம் கொலை பண்ண ஆரம்பிச்சா போலீஸ்காரனுக்கே பைத்தியம் புடிச்சிரும்.

எஸ்.ஜே.சூர்யா?

இருந்தாலும் இந்தாளுக்கு ரொம்ப நீளம்ங்க. அட நாக்குங்க. எத்தனை நல்ல நடிகர் இவர். மிகத்திறமையான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார். நடை உடை பாவனை என எல்லாவற்றிலும் புதிய சூர்யா. வெறிபிடித்து வில்லனை அழிக்க அலைவதாகட்டும், அப்பாவியாய் நாயகியை கைபிடிக்க அலைவதாகட்டும்.. எங்கே வைத்திருந்தாய் இத்தனை நாளாய் உனக்குள் இருந்த நடிகனை என கேட்க வைக்கிறது. ( கொடுமை என்னவென்றால் இந்த படம் இவருக்கு பெயர் வாங்கித்தந்துவிட்டால் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என அஜால் குஜாலுக்கே திரும்பி விடும் வாய்ப்புண்டு இவருக்கு ). இவரது குரல்தான் இவரது மிகப்பெரிய குறையாகவே கருதி வந்தேன். ஆனால் அந்த குரலாலேயே இந்த படத்தின் பலமாய் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

நாயகி?

படத்தின் நாயகிக்கு இருக்கு ஆனா இல்லை. நடிப்பு திறமைபத்தி சொன்னேன்.நாயகி உள்ளே போட்டிருக்கும் மார்பு பேடு(PAD) ஏழு முறை தெரிய ( அருகில் அமர்ந்து அதை எண்ணிய தோழருக்கு நன்றி ) ஏதேதோ காட்டியிருக்கிறார். மகாசப்பையான பிகர். மனம் ஒப்பவில்லை. ஏன்தான் தமிழன் ரசனை தெரியாமல் நாயகிகளை தேர்ந்தெடுக்கிறார்களோ!.மற்றபடி நாயகி குறித்து ''பெரிதாக'' சொல்ல ஒன்றுமில்லை.

வில்லன்...?

ராஜீவ்கிருஷ்ணா.. ஆஹா படத்தில் பார்த்தது. அதற்கு முன் ஏதோ ஒரு ரேவதி நாடகத்தில் பார்த்திருக்கிறேன். மிக நல்ல நடிகர். மரணபயத்தோடு பாதி படத்திலும் வில்லத்தனம் வழிந்தோடும் சிரித்த முகத்தோடு பாதி படத்திலும் பட்டையை கிளப்புகிறார். ஹீரோவாக வலம் வந்திருக்க வேண்டியவர் வில்லனாக ஒரு ரவுண்டு வருவார்.

இசை...?

வினய். பாடல்கள் மகா குப்பையாக இருக்கிறது. பிண்ணனி இசையில் பிரமிக்க வைக்கிறார். ஆங்கிலப்படங்களுக்கு இணையான பிண்ணனி அமைத்தமைக்கு ஒரு ஷொட்டு.. கேவலாமன பாடல்களை போட்டதற்கு ஒரு குட்டு.

மற்றவை..?

எடிட்டிங்கும் கேமராவும் படத்தின் மற்ற நாயகர்கள். அற்புதமாக தமக்கிட்ட பணியை அதிஅற்புதமாய் செய்திருக்கிறார்கள்.

இயக்கம்..?

இயக்கம் தாய்முத்துசெல்வன். அட்டபாசுக் கதைக்கு அருமையாய் திரைக்கதை அமைத்து படமாக்கியமைக்கு பாராட்டுக்கள்.

மைனஸ்..!

படத்தின் மிகப்பெரிய மைனஸ் எழவெடுத்த பாடல்கள். படத்தின் வேகத்தையே குறைத்துவிடுகிறது. தம்மடிக்க கூட வெளியே போக இயலவில்லை. காட்சிகளை இழக்கவேண்டி வருமே என்கிற தயக்கம். பாடல்கள் இல்லாமல் படமெடுத்து தொலைத்தால்தான் என்ன! இத்தனை நல்லபடத்தின் வேகத்தையே குறைத்துத் தொலைக்கிறார்கள்.

பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் மற்றபடி படம் நன்றாகவே வந்திருக்கிறது.

*********

பிளஸ்..?

பாடல்கள் தவிர்த்து மத்த எல்லாமே எல்லாமே எல்லாமே..

நியூட்டனின் மூன்றாவது விதிப்படி சொல்லணும்னா... திரு.தாய்முத்துச்செல்வன் ஒரு நல்ல திரைப்படத்தை தந்திருக்கிறார். நிச்சயம் அதற்கேற்ற நல்ல எதிர்வினை அவர் எதிர்பார்த்ததிற்கும் மேல் இருக்கும் கிடைக்கும்.