Pages

06 August 2009

இறகுகள் இங்கே சிறகுகள் எங்கே!



காற்றில் கரைந்தது
உடலெல்லாம் எரித்தது
கண்ணிலும் சுரந்தது
நீ இல்லாத போதில்
தடவியே சிவந்த
முந்தும் காதல்

பார்க்காத போதெல்லாம் பார்த்து
சிலிர்த்து
வியர்த்து
உயிர்த்து
மனதடைத்து
வெறுத்து
தூதூதூதூதூ மயிறு

கடப்பதற்குள் கடந்துவிட்ட
உடைந்த மனதின்
படுக்கையில்
உடைகளைந்த போதெல்லாம்
இன்னும் வேண்டும்
என் உச்சம்
முகமெங்கும் எச்சம்
மிச்சம்

கட்டியணைக்கையில் முதுகு சீண்டலில்
கண்விழிக்கையில்
காணவில்லை உன்னை
எங்கே மறைத்திருந்தாய்
உன் பாழும் சிறகுகளை!

*****************