Pages

22 September 2009

ராஜபக்சே புரொடக்சன்ஸ்!



ராஜபக்சே புரொடக்சன்ஸ்!


கொழும்பு நகரம். அமைதியாய் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சராசரி ( காமன் மேன்! ) எப்போதும் போல காய்கறிகள் வாங்கிக்கொண்டு நகரின் மையத்தில் இருக்கும் பலமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடியில் அமர்ந்து கொள்கிறான். கமிஷனருக்கு போன் போடுகிறான். ஊருக்குள் பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் , அதை நீக்க வேண்டுமானால் தமிழ்தீவிரவாதிகளான குட்டி,ஜெகன், தங்கமணி என்னும் மூவரையும் அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த லசந்தே (சிங்களவர்) ஐயும் உடனடியாக தன்வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறான்.

_______________

____________

__________________

கதையின் நடுவில் என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள உன்னைப்போல் ஒருவன் ( கமல் நடித்தது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தி ரிமேக் ஒரு முறை பார்க்கவும் )

ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிந்து தமிழ்த்தீவிரவாதிகளும் அவர்களுக்கு உதவிய ஒரு சிங்களவனும் காமன் மேனிடம் ஒப்படைக்க ஆளில்ல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கூடவே கருணா என்றொரு நல்ல தமிழ் போலீஸும், இன்னொரு நல்ல சிங்கள போலீஸும் உடன் செல்கின்றனர்.

செல்லும் வழியில் கருணாவிடம் ஜெகன், ‘நம்ம இனம் எப்படிலாம் அழிஞ்சுருச்சு.. இனப்படுகொலை பண்றாங்க. இதுவரைக்கு இரண்டு லட்சம் பேர் செத்துட்டாங்க. நம்ம இனத்த அழிச்ச சிங்களவனோட சேர்ந்து எங்கள காட்டிக்குடுத்துட்டியே’’ என்றெல்லாம் வீரவசனம் பேசுகிறார். அமைதியாய் அமர்ந்திருக்கிறான் கருணா. முகம் மட்டும் கடுமையாய் இருக்கிறது.

‘’ஞாபகம் இருக்கா 1983 யூலைப்படுகொலை.. ‘’ என்று தொடர்கிறான் ஜெகன்.

‘’யோவ் அதையே எத்தனை வருஷத்துக்கு சொல்லிட்டு அலைவீங்க வேற ஏதாவது புதுசா சொல்லுங்க ‘’ என்று நக்கலடிக்கிறார் பின்னால் அமர்ந்திருக்கும் காமெடி சிங்களவர். (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும் , தியேட்டரில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.)

கருணா எதுவும் பேசாமல் வருகிறான். கருணா மூவரை காமன்மேன் சொல்லும் வேனில் ஏற்றிவிட்டு ஜெகனை மட்டும் பிடித்து கொள்கிறான். மூவரும் வேன் வெடித்து சாகின்றனர்.
மீதி ஒரு தமிழ்தீவிரவாதி மட்டும் எஞ்சி நிற்கிறான். அவனையும் கொல்லச்சொல்லுகிறான் காமன்மேன்!, அவனை தமிழ் போலீஸே மனமார மகிழ்ச்சியோடு கொல்லுகிறான்.

‘’1992ல நடந்த குண்டுவெடிப்புல ஒரு குழந்தை செத்துருச்சு அதனாலதான் இவங்களை கொல்லணும்னு சீட்டுகுலுக்கிபோட்டு முடிவு பண்ணேன், இது தமிழன் சிங்களவன்ற பிரச்சனை இல்ல தீவிரவாதம்ங்கற பிரச்சனை.. சிங்களவன் பண்ணாலும் தமிழன் பண்ணாலும் கொலை கொலைதான்’’ என்கிறான் காமன்மேன்.

தியேட்டரே அதிர கைத்தட்டுகிறது. பார்த்துக்கொண்டிருந்த இரண்டே இரண்டு தமிழனைத்தவிர!

************

அதனால் தீவிரவாதம் ஓழிக!