பேரினவாதத்தின் ராஜா

>> 04 December 2009

அருள் எழிலன். தமிழ் பத்திரிக்கையுலகில் நான் பெரிதும் மதிக்கும் பத்திரிக்கையாளர்களில் முதன்மையானவர். ரஜினிகாந்தை எனக்குத் தெரியும் அவருக்குத்தான் என்னைத் தெரியாது என்று ஒரு காமெடி உண்டு. அப்படித்தான் எனக்கும் அவருக்குமான உறவு. அதிகம் பழக்கமில்லை. ஆனால் பிரபல வார இதழிலும் இணையத்திலும் அவரது எழுத்தை தூரத்திலிருந்து வாசிக்கும் நேசிக்கும் ஒரு வாசகன். இவரது சமூக அக்கறையுள்ள கட்டுரைகளில் தனக்கென ஒரு தனி பாணியுடன் வலம் வரும் மிகச்சிறந்த எழுத்தாளர். அவருடைய முதல் புத்தகம் இந்த வாரம் வெளியாகிறது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை அதைத்தொடர்ந்த சம்பவங்கள் ராஜபக்சே அரசின் அராஜகப்போக்கு என பல பிரச்சனைகள் குறித்துப்பேசும் தனது ''பேரினவாதத்தின் ராஜா''என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் வரும் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.

புலம் வெளியீடு.

அனைவரும் வருக!



(படத்தை சொடுக்கியும் விபரங்கள் அறியலாம்!)

1 கருத்துக்கள்:

Anonymous,  December 4, 2009 5:03 PM  

சாருவுக்கு நீங்களும் நட்டு தாங்குவீர்களே? உங்களை மட்டும் இப்பதிவர் எப்படி விட்டார்?

http://kavuchi.wordpress.com

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP