Pages

27 August 2009

உயிரை வாங்கும் செல்போன்!



செல்போனில் பேசுவது சிலபேருக்கு எப்போதுமே எரிச்சலூட்டும் பிரச்சனைதான். காதலியோடு பேசுறதுன்னா ஓகே! . பிரச்சனைனாலும் சுகம்னாலும் அதில் முதல் பிரைஸ் எனக்கே எனக்குதான். ஏனோ அந்த கருமத்தை வாங்கின காலத்திலிருந்தே பல சிக்கல்கள். இருந்தாலும் அதை விட்டொழிக்கவும் முடியலை.

செல்போனில் நான் பேசுவது எனக்கு எப்போதும் உபத்திரவமாய் இருந்ததில்லை. அனைவருக்கும் அப்படித்தான். மற்றவர்கள் செல்போனில் பேசுவதுதான் பிரச்சனை, சிக்கல், மண்டை குடைச்சல் மண்ணாங்கட்டி எல்லாமே!.

அலுவலகத்தில் பக்கத்துச்சீட்டு சக ஊழியர். போனை காதில் வைத்தால் இவர் பேசுவது ஊருக்கே கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் பிரக்ஞை இன்றி காது கிழிய பேசிக்கொண்டே இருப்பது. இடையில் நமக்கு ஏதாவது கால் வந்துவிட்டால் போச்சு! நமக்கு போன் பண்ணியவருக்கு நாம் பேசுவது கேட்கிறதோ இல்லையோ பக்கத்து சீட்டுக்காரர் குரல் மட்டும் நன்றாக கேட்டுக்கொண்டே இருக்கும். சமயத்தில் அதற்கு அவர் பதில் சொல்லும் கொடுமையும் நடப்பதுண்டு!

நெருக்கமான நண்பர் அவர் உலக விசயங்களையும் உள்ளூர் மேட்டர்களையும் அலச ஆரம்பித்தால் ஒன்றைரை ஆண்டுக்கு ரூம்போட்டு பேசும் சகல வல்லமை படைத்தவர். அவரோடு கழிக்கும் நேரமெல்லாம் பொன் போன்றதாய் கருதுவேன். அவரிடம் ஒரே பிரச்சனை. நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு போன் வரும் ( செல்போன்!) அவ்வளவுதான் , பக்கத்தில் ஒரு பரதேசி நிற்கிறானே என்கிற எந்த பிரக்ஞையும் இன்றி செல்போனில் மூழ்கிவிடுவார். நாம் தேமே என அவர் வாயையும் மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும்.

இன்னொருவர் மிக நல்ல அறிவாளி. நிறைய படித்தவர். பண்புள்ளவர். பெரிய பதவியில் இருப்பவர். போனில் அழைத்தால் அமைதியாய் பேசுவார். அவரோடு உரையாடுவது எனக்கு எப்போதுமே சக்கரைக்கட்டிதான். நேரில் அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாததால் போனில் அழைத்து நிறைய விசயங்கள் குறித்து கதைப்போம். மிக ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அதி இன்னொரு கால் வருது கட் பண்ணிட்டு கூப்பிடறேன் என டொக் என போனை வைத்து விடுவார். நமக்குதான் ஆர்வம் அதிகமாச்சே கால் வரும் கால் வரும் என அந்த நபர் போன் பண்ணுவாரா மாட்டாரா என்ன ஆச்சோ ஏதாச்சோ என நினைத்துக்கொண்டு காத்திருப்போம். ஒரு முறை இரு முறை என்றால் பரவாயில்லை நான் எப்போது பேசினாலும் நடுவில் யாராவது போன் பண்ணித் தொலைத்து விடுகிறார்கள் போல!

மற்றொருவர் அவரும் நண்பர்தான். வெளியூரில் வசிப்பவர். இவருக்கு வாய் காது வரை. பேச ஆரம்பித்தால் சாமான்யமாக போனை வைக்க மாட்டார். ஒரு கன்டிசன் அது பெண்களோடு மட்டும். ஆண்கள் என்றால் ம்ம் அப்புறம், ஓகோ , ஓகே, சரிப்பா தேங்க்ஸ் பை இதுதான் அவரது உரையாடலாக இருக்கும். அவரையும் ஒரு மனிதராக மதித்து ஒரு டோமரு போன் பண்றானே என்கிற _______ கொஞ்சம் கூட இருக்காத என்ன!

இன்னொருவர், இவரும் வெளியூர் ஆள்தான். இவரிடம் யார் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் தன் வேலையில் மட்டுமே கண்ணாக இருப்பார். நடுநடுவே ம்ம் ஆமாஆமா என்று நமது உரையாடலை கவனிப்பது போன்றதொரு பாசாங்கு வேறு. காதில் போனை வைத்துக்கொண்டு கவனத்தை பக்கத்து சீட்டு பருவமங்கையிடம் வைத்திருந்தால்! ம்ம் லூசு போல நாம் எதையாவது பேசிக்கொண்டிருப்போம் , நடுவில் ஏதாவது கேட்டால் , என்ன என்ன என்று பதறுவது , பின் மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து துவங்க வேண்டும். வேலையில் மும்முரமாய் இருக்கிறேன் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்ல ஏன் தயக்கம். அதை சொல்லிவிட்டால் நாம் ஏன் அந்த நபரை தொந்தரவு செய்யப்போகிறோம். பேசறவன் கேனப்பையனா இவிங்க இருந்தா ஏரோபிளேன் ஓட்டிகிட்டே போன் பேசுவாங்களாம்!

மிகமுக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். சரக்கடித்துவிட்டு போதை ஏறவில்லையென்றால் செல்போன்தான் ஊறுகாய் இவர்களுக்கு. எவனுக்காவது போன் போட்டு யாரிடம் பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மானவாரியாக அளந்து கொட்டுவது. அரசியல் முதல் ஆபாசம் வரை பேசுவார்கள். அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனை ரொம்ப சிம்பிள் இப்படி பேசும் நேரம் இரவு 1 மணிக்கு மேல்! சாமானியத்தில் போனை வைத்தாலாவது பரவாயில்லை. சமயத்தில் விடியும் வரைகூட பேசிக்கொண்டே இருப்பார்கள். நட்பு காரணமாக நாமும் வேறு வழியின்றி.. என்னத்தை சொல்ல!

இந்த கான்பரன்ஸ் கால் ஆசாமிகள் அலும்பு அதற்கும் மேல் , யாரையாவது கான்பரன்ஸ்காலில் வைத்துக்கொண்டு நம்மை அந்த மூன்றாம் ஆளிடம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது. இப்படி கோர்த்து விட்டு ரத்தகளறி ஆக்குவதில் அலாதி பிரியம் இவர்களுக்கு.

இப்படி ஆளாளுக்கு போட்டு வதைச்சா எப்படித்தான் ம்ம் என்னத்த சொல்ல! இதுக்கு நடுவில் இந்த மிஸ்டு கால் பேர்வழிகள் , மொக்கை எஸ்எம்எஸ் கயவர்கள் , கிரெடிட்கார்ட் , பர்சனல் லோன் , ரிங்டோன் , கால்ர் டோன் , அந்த ஆபர் இந்த ஆபர் , ஆயாவுக்கு டிக்கட்டு , கக்கூஸ் போக பக்கட்டு அது இது இப்படி அப்படி...... முடியல..

22 August 2009

கந்த(ல்)சாமி!




ஏழைங்கன்னாலே நெம்ம தமிழ்சினிமா காரவீகளுக்குத்தான் ரொம்ப பிரியம். எப்படியாவது அவங்க கண்ணீர தொடச்சி அவங்க வாழ்க்கைல ஒரு டார்ச் லைட்டையாவது அடிக்கோணும்னு ரெம்ப காலமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அறுபது வருஷத்துக்கு மொன்னால வந்த மலைகள்ளன்ல தொடங்கி ரெண்டு வருஷம் முன்னால வந்த சிவாஜி வரைக்கும் ஏழைங்க ஏன் ஏழைங்களா இருக்காங்கனு சொல்லிட்டே இருக்காங்க. இந்த ஏழைங்களுக்கு பிலிம் காட்டியே பல சினிமாக்காரங்க பணக்காரங்க ஆகிருக்காங்க.

அந்த வரிசைல நேத்தும் ஒரு படம் ரிலீஸாகிருக்கு. கந்தசாமி. கறுப்பு பணத்தையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல பதுக்கி வக்கிறாங்க அதான் இந்தியா ஏழை நாடா இருக்கு. அதெயல்லாம் இங்க கொண்டு வந்துட்டா போதும் எல்லாஞ்சரியாகிடுமாம். பணக்காரங்க கிட்ட இருக்கற காசெல்லாம் ஏழைக்கு கிடைச்சிட்டா போதும் நாட்டுல எல்லாரும் சமம்தானு தாணு பல நூறு கோடி செலவளிச்சு சொல்லிருக்காரு. பாவம் தாணு பரம ஏழை போலருக்கு.
ச்சே என்னே உயர்ந்த உள்ளம். ஏழைங்க மேல என்னே பரிவு.. ச்ச்ச்சுச்சுசுசுசு..

ஒரே இஸ்கூல்ல படிச்ச பயலுவ வேற வேற அரசாங்க உத்தியோகத்தில இருந்துகிட்டு அது மூலமா நாட்டையே ஆட்டிப்படைக்கிற பெரிய பணக்காரங்க... ஓகே ஓகே கூல் நீங்க ரமணானு மனசுக்குள்ள நினைக்கிற எனக்கு கேக்குது. அதேதான்.

அந்த பணக்காரங்க கிட்டருந்து எடுத்த காச ஏழை மக்களுக்கு குடுக்கறாரு. அதுக்கு டெக்னிக் என்னானா போருர் முருகன் கோயில் மரத்துல உங்க கொறைய எழுதி போட்டா போதும். கந்தசாமி உங்க பிரச்சனைய சோல்வ்,... ஓகே ஓகே கூல் இது அந்நியன் மாதிரி இருக்கா.. அதான் இல்ல ஏன்னா அதுல வெப்சைட்ல போடுவாங்க இதுல கைல எழுதி மரத்துல கட்டுவாங்க டிபரன்ஸ் புரியுதா!

அப்புறம் ஸ்பைடர்மான்,பேட்மான் அதாங்க சிலந்தி மனிதன் , வௌவால் மனிதன் மாதிரி இவரு ஒரு சேவல்மான் (COCK-MAN ). இங்கிலீசுல சொன்னா அமெரிக்காகாரன் சிரிப்பான். விக்ரம் சேவலாட்டமே கொக்கரக்கோனு நல்லா காமெடியா பண்றாரு.. லேடீஸ் கெட்டப்ல வந்து டேன்ஸ்லாம் ஆடறாரு. நடிக்கதான் அவ்ளோவா வாய்ப்பில்ல. சும்மா விக்ரம் நிறைய உழைச்சாருனா என்னத்தா உழைச்சாருனுதான் தெரியல. ஒரு வேள நாலு வருஷம் ஒரு படத்தில நடிக்கறதுக்கு பேரு உழைப்பாருக்கும் போல.

சுரேயானு ஒரு பொம்மனாட்டி. நல்லா படம் பூரா பாப் கட்டிங் பண்ணிகிட்டு நெஞ்சு இடுப்பு வயிறு தொப்புள்னு ஏழைகளுக்கு ஹெல்ப் பண்றாங்க. சாரி ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ற விக்ரம லவ் பண்றாங்க. ஆனா பாவம் அவங்களயும் அவங்க குரலையும் சிங்க் பண்ணா ஏதோ பிளஸ்டூ பையன கூட்டியாந்து லேடிஸ் வேசம் போட்டு நடிக்க வச்ச மாதிரி இருக்கு.
சுசி கணேசன் சின்னதா ஒரு பாத்திரத்தில வராரு. சின்ன பாத்திரம்னா கிண்ணம் , ஸ்பூன் , டம்ளர் மாதிரி. பாவம்!

வடிவேலு எப்பவும் போல நல்லா அடிவாங்குறாரு. பாவமா இருக்கு.

அவரோட இயக்கம்? அவருக்கு படம் எடுக்கவரலைனு எவன் சொன்னான். அவருக்கு படம் எடுக்க வரும் ஆனா வராது. பாவம்ங்க கொஞ்சம் ஓவரா படம் எடுத்துட்டாரு. மொக்கையா ஒரு கதை , அதுக்கு பல கோடி ரூவா பட்ஜெட்டு. மனசுக்குள்ள ஷங்கருனு...!. அதுக்காக ஷங்கர் படத்தோட கதையவேவா படமா எடுக்கணும். சுசி கணேசன் பாவம்.

படம் பூரா கேமரா நம்ம முகத்தில பிளாஷ் அடிச்சுகிட்டே கிடக்குற எஃபெக்ட்டு. எடிட்டிங்னு ஒரேடியா ஒரு ஒரு சீனையும் ஓவரா எடிட்டிடாடய்ங்க போல. ஆனாலும் பின்னாடி சீட்டு ஆயாவுக்கு கண்ணு அவிஞ்சி போற அளவுக்கா. பாவம்யா மக்க பொழச்சு போகட்டும் விட்டுருங்க!

படம் பூரா செம மியூஜிக். தேவி சிரி பிரசாத் நல்லா பண்ணிருக்காப்ல. ஆனா வேற படத்துக்கு இப்படி பண்ணிருக்கலாம். இந்த படத்துல இது ஓட்டல.

போனவாரம் உலகப்படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பாத்து நொந்தேன். இந்தவாரம் ஹாலிவுட் படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பார்த்து... ம்ம் விதி வலியது.

படம் பார்த்துட்டு வெளிய வரும்போது கேர்ள்பிரண்டு திட்டிகிட்டே வந்துச்சு. ஏன்மா இப்படி திட்ற பாவம் எவ்ளோ காசு செலவழிச்சு கஷ்டப்பட்டு உழைச்சு படம் எடுத்துருக்காய்ங்கனு சொன்னேன். உழைச்சிட்டா போதுமானு கேட்டா..! ஐயாம் கப்சிப்.

இதே ரேஞ்சுல இன்னும் மூணே படம். தமிழ்சினிமாவ ஆண்டவானலயும் காப்பத்த முடியாது. அம்புட்டுதான்.

கந்தசாமி - ஹிஹி.. பாவம் தாணு!


பின் குறிப்பு - மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்..

15 August 2009

பொக்கிஷம் - கொலைவெறியோடு ஒரு இலக்கியம்



இரண்டு வருஷமா ஒரு நல்ல படம் எடுக்கறேனு எதையோ எடுத்துருக்காய்ங்க.. தெரியாம தியேட்டர்க்குள்ள போனதுக்கு, மூன்றரை மணிநேரம் ம்ம்ம்ம் முடியல மூக்குல ரத்தம் வந்துருச்சு.. இது மாதிரி பத்து படம் எடுத்தா போதும் இனிமே எவனும் தியேட்டர் பக்கமே வரமாட்டான். இதுக்கு என் ஆருயிர் நண்பரையும் அழைச்சிட்டு போயி அவருகிட்ட அசிங்க அசிங்கமா திட்டு வாங்கினதுதான் மிச்சம்.


எனக்கு தேவைதான்.எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான்.

முக்கால் படம் பாத்தவனுக்கே இந்த எபெக்ட் . முழுப்படம் பாத்தவீங்க உயிரோட வீட்டுக்கு போனாய்ங்களானே தெரியல.இந்த கருமத்த பாக்கறதுக்கு பன்றிக்காய்ச்சல் வந்து செத்துருங்க..



மொத்தத்தில் பொக்கிஷம் - பொக்கிசப்பொட்டியில் காஞ்ச சாணி



STATUTORY WARNING - WATCHING POKKISHAM IS INJURIOUS TO YOUR MENTAL HEALTH


*********************


மத்தபடி இடைவேளையில் புகைபிடிக்க தடை இருந்தும் ரசிகர்களின் நிலைகண்டு மனமிரங்கி சிகரட் பிடிக்க அனுமதித்த அண்ணா தியேட்டர் உரிமையாளர் வாழ்க..!

06 August 2009

இறகுகள் இங்கே சிறகுகள் எங்கே!



காற்றில் கரைந்தது
உடலெல்லாம் எரித்தது
கண்ணிலும் சுரந்தது
நீ இல்லாத போதில்
தடவியே சிவந்த
முந்தும் காதல்

பார்க்காத போதெல்லாம் பார்த்து
சிலிர்த்து
வியர்த்து
உயிர்த்து
மனதடைத்து
வெறுத்து
தூதூதூதூதூ மயிறு

கடப்பதற்குள் கடந்துவிட்ட
உடைந்த மனதின்
படுக்கையில்
உடைகளைந்த போதெல்லாம்
இன்னும் வேண்டும்
என் உச்சம்
முகமெங்கும் எச்சம்
மிச்சம்

கட்டியணைக்கையில் முதுகு சீண்டலில்
கண்விழிக்கையில்
காணவில்லை உன்னை
எங்கே மறைத்திருந்தாய்
உன் பாழும் சிறகுகளை!

*****************