Pages

15 October 2011

டிவைன் லவ்வர்ஸ்



குருமாவுக்கு உருளைக்கிழங்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல பிட்டுப்படங்களுக்கும் பிட்டு முக்கியம். கில்மா படங்களை திரையிடும் தியேட்டர் ஓனர்களை கோயில்கட்டித்தான் கும்பிடணும். படத்தில் பிட்டிருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் பிட்டில்லாத படங்களை பார்க்கிற வெறிகொண்ட ரசிகர்கள் சீட்டை கிழித்து கதவை உடைத்து ஸ்கீரினையும் நாசமாக்குவதை காணலாம். ஆனாலும் தொடர்ந்து திரையிடும் இந்த தியேட்டர் அதிபர்களின் தைரியம் பாராட்டப்படவேண்டியது. நாமாவது பாராட்டுவோம்.

அப்படி அண்மையில் சென்னை விஜயா தியேட்டரில் பார்த்த ஒரு கில்மா படம் பல நினைவுகளை தட்டி எழுப்பியது. அந்தப்படத்தில் பிட்டும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை. கோபங்கொண்ட ரசிகர்கள் சீட்டை பிராண்டி பிராண்டி அந்த்தியேட்டரின் எந்தசேரிலும் பஞ்சே இல்லை. இதுதான் இன்றைய பிட்டுப்படங்களின் நிலை.

பிட்டுப்படங்களிலும் சில கிளாசிக்குகள் உண்டு. அலெக்ஸான்ட்ரா,பாடி ஆஃப் எவிடன்ஸ்,புளூ லகூன்,ப்ளே கேர்ள்ஸ்(ஷகிலா நடித்த முதல் படம்),ச்சிராக்கோ மாதிரியான படங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள் அவை. ஒவ்வொரு முறையும் புத்தணர்ச்சியும் புது எழுச்சியும் நிச்சயம். இந்த கிளாசிக்குகளை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் டிவைன் லவ்வர்ஸுக்குத்தான். பதினான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் எழுச்சிக்கு காரணமாக அமைந்த முக்கியமான படம்.

கோவை அப்சரா தியேட்டரில் ரிலீஸாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த பிரமாண்டமான சூப்பர் ஹிட் பிட்டுப்படம் அது. கோவை வாசிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் யாருமே அந்த வராது வந்த மாமணியை மறந்துவிடமுடியாது. ஒன்னுரெண்டு பிட்டுக்கே வீங்கித்தவித்த தமிழ்சமூகத்திற்கு ஏகப்பட்ட பிட்டுகளை வாரி வழங்கி விருந்தளித்து தட்டி எழுப்பிய காவியம் டிவைன் லவ்வர்ஸ்.

படம் வெளியான சமயத்தில் மாலைமலரில் விமர்சனம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் படத்தில் எந்தெந்த இடத்தில் அருமையான பிட்டுகள் இடம்பெறுகின்றன. எதையெல்லாம் ரசிகர்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாது என்பதையெல்லாம் பிட்டு பிட்டு வைத்திருந்தனர். அதிலும் அந்த குளியலறை காட்சியும், குகை பிட்டு குறித்தும் எழுதியிருந்ததை தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கிவைக்கலாம். அது தொடர்பான சில ஜாலியான புகைப்படங்களும் கூட வெளியாகியிருந்தது. அப்போது எனக்கு அறியாத வயசு. இப்போதும்தான். ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். அந்த விமர்சனத்தை பார்த்ததுமே இந்தப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என நெஞ்சு துடித்தது. நண்பர்களோடு பேசி காசு சேர்த்து ஒரு நல்லநாளில் அப்சரா தியேட்டரை நோக்கி படையெடுக்க முடிவெடுத்தோம்.

அப்சரா தியேட்டருக்கென்று சில தனிச்சிறப்புகள் உண்டு. காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தின் வாசலிலேயே தியேட்டர் அமைந்திருக்கும். ஹிந்தி படங்களுக்கும் அதிரடி ஆக்சன் மற்றும் அற்புதமான பிட்டுப்படங்களுக்கும் பேர் போனது. நுழைவாயிலில் எந்தப்படம் ஓடினாலும் அந்தப்படத்தின் பெரிய ஓவிய பேனர் வைக்கப்பட்டிருக்கும். பஸ்ஸில் அந்தவழியாக போகிறவர்களெல்லாம் அதை ஒரு நிமிடம் நின்று ரசித்துச்செல்வதை பார்க்கலாம். அப்படி ஒரு அற்புதமான ஓவியம் ‘’டிவைன் லவ்வர்ஸ்’’ படத்திற்கும் வைக்கப்பட்டிருந்தது. சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அரைநிர்வாண அழகியும் (உடல் முழுக்க வெறும் நகைகள்தான்!) தாடிவைத்த கொடூரமான சிற்பியும் என என்றைக்குமே மறக்காத கிளாசிக் ஓவியம் அது. (அதை வரைந்தவர் அண்மையில் தன் திரைச்சீலை புத்தகத்திற்காக தேசியவிருது பெற்ற எழுத்தாளர் ஓவியர் ஜீவா)

எங்கள் நண்பர்கள் குழு தியேட்டரில் நுழைந்து டிக்கட் எடுக்க முயலும்போதே சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டோம். பொடனியில் அடித்து ‘’ஏன்டா இத்துணூன்டுருந்துட்டு இந்தப்படம் கேக்குதா எந்த ஸ்கூல்டா நீங்க, ஓடுங்கடா’’ என எங்களை மிரட்டினர். அப்பாவிகளான நாங்களோ ‘’யாருங்க நீங்க என்ன வேணும் உங்களுக்கு’’ என எகிற.. செம அடி! அநியாயம்! இதுமாதிரி சமூக விரோதிகளைதான் தியேட்டரில் ஊழியர்களாக வைத்திருக்கிறார் அப்சரா தியேட்டர் அதிபர். எங்களை உள்ளே விட மறுத்துவிட.. வாடிய நெஞ்சோடு வீடு திரும்பினோம்.

ஆனாலும் நான் மட்டும் விடாப்பிடியாக இப்படத்தை பார்த்தே தீருவேன் என சபதம் பூண்டேன். அடுத்த வாரமே மீண்டும் தியேட்டருக்கு செல்ல மீண்டும் சட்டையோடு தூக்கி வெளியே போடப்பட்டேன். பரவாயில்லை. மீண்டும் முயலுவோம் என ஒன்பது முறை தியேட்டருக்கு சென்றும் இறுதி வரை அப்படத்தை பார்க்கிற பாக்கியம் கிடைக்கவேயில்லை.
அதற்குள் படம் நூறு நாட்களை கடந்துவிட்டது. படம் வேறு இடங்களில் ரிலீஸாகும்போது அந்த தியேட்டர்களெல்லாம் என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அருகில் அமைந்தது இன்னொரு கொடுமை. இப்படியாக டிவைன்லவ்வர்ஸின் முதல் ரீலிஸில் பார்க்க இயலாவிட்டாலும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நரசிம்மநாயக்கன் பாளையம் பத்மாலாயா தியேட்டரில்தான் அந்தப்படத்தை பார்க்கும் பாக்கியம் கிட்டியது.

பொதுவாக தமிழில் வெளியான பூர்வஜென்ம படங்கள் ஓடியதாக நினைவில்லை. டிவைன் லவ்வர்ஸும் பூர்வஜென்ம கதைதான். போன ஜென்மத்தில் சேர முடியாத காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருகிறார்கள். வில்லன் தடுக்கிறார் என்கிற கதைதான். ஆனால் சில பல அருமையான பிட்டுகளை தூவிவிட்டு கமகமக்க கொடுத்திருந்தார் படத்தின் இயக்குனர். படம் பார்க்கிற அனைவருக்குமே முழுமையான திருப்தி! எனக்கும்தான். அதற்கு பிறகு சாயிபாபாகாலனியில் இருக்கிற தியேட்டர் ஒன்றில்(பெயர் மறந்துவிட்டது) நாஸ்தியேட்டரில், இருதயாவில், ஜிபியில், டிலைட்டில் என எண்ணிலடங்காத முறைகள் அந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை ரிலீஸ் செய்தாலும் ஹிட்டான ஒரே பிட்டுப்படம் டிவைன் லவ்வர்ஸாகத்தான் இருக்க வேண்டும்.

இந்தப்படத்தின் இயக்குனர் சுபாஷ் இதன் வெற்றியால் உற்சாகமாகி அதற்குபின் டிஸ்கோடான்சர், அட்வென்சர்ஸ் ஆஃப் டார்ஜான் என நிறைய அஜால்குஜால் படங்களை களமிறக்கினாலும் இன்றுவரை அவர்பெயர் சொல்லும் படமாக டிவைன்லவ்வர்ஸ் மட்டுமே திகழ்கிறது.

அதே படத்தின் இரண்டாம் பாகம் பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இதை இரண்டாம்பாகம் என்று சொல்வதை விடவும் ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்று சொன்னால் அது மிகையாகாது. அதை மொக்கையாக தமிழில் டப் வேறு செய்து தொலைத்திருக்கிறார்கள். ஒரிஜினலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மோசமான ரீமேக். உணர்ச்சியேயில்லாத நடிக நடிகையர். பிட்டே இல்லாத காட்சிகள் என முந்தைய படத்தின் புகழை குலைக்க வந்த பாதகனாகவே இப்படம் அமைந்திருந்தது. படத்தினைப்பற்றி பெரிதாக சொல்ல எதுவுமே இல்லை. பெரிதாக இருப்பது ஹீரோவின் முடியும் வில்லனின் தடியும்தான்!

இந்த இரண்டாம்பாகத்தினையே அண்மையில் கேகேநகர் விஜயாவில் பார்க்க நேர்ந்தது. நீங்கள் டிவைன் லவ்வர்ஸ் படத்தின் ரசிகராக இருந்தால் இந்த இரண்டாம் பாகத்தினை தவிர்த்துவிட்டு பழைய படம் இணையத்தில் கிடைக்கிறது அதையே டவுண்லோடி ரசிப்பதே சாலச்சிறந்தது!