`புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தனித்தனியாக சொல்வது கஷ்டம். எனவே, ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுரை.
முதலில் ஓடுவதை தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். ஓட்டம் கூட தியானம்தான் என்கிறார் ஓஷோ. ஆனால் அதைச் சரியாக செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். இல்லையென்றால் முட்டிவீக்கம், முழங்கால்வலி, குதிக்காலில் பிரச்னை என ஓடுகிற ஆசையே போய்விடும்.
நான் சொல்கிற விஷயமெல்லாம் ஆனா ஆவன்னா அடிப்படை. இதை சரியாக பின்பற்றினாலே போதும் ஒருமாதிரி சில மாதங்களில் அமெச்சூர் ஓட்டக்காரனாகிவிடலாம். அதற்குபிறகு உடலும் கூகுளுமே நிறைய கற்றுக்கொடுக்கும்.
1 - ஓடவேண்டும் என முடிவெடுத்துவிட்டதும் ஜனவரி ஒன்றாம்தேதியே உடனே எங்காவது மைதானத்திலோ பார்க்கிலோ சாலையிலோ லொங்கான் லொங்கான் என ஓடவேண்டாம். மூச்சுத்திணறும் நெஞ்சை அடைக்கும், தலைசுற்றும், அரை கிலோமீட்டர் கூட ஓடமுடியாது, நமக்கே நம்மை நினைத்து அசிங்கமாக இருக்கும். என்னத்துக்கு அவசரம்..
2 - முதல் ஒரு வாரத்திற்கு மெதுவாக பொறுமையாக நடக்க ஆரம்பியுங்கள். மூச்சை கவனியுங்கள். முதல் நாள் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சியில் தொடங்கலாம். அடுத்தடுத்த நாட்களில் அரை அரையாக கூட்டி பத்து நாட்களில் ஐந்து கிலோமீட்டர் நடக்கலாம். முதலில் நம்மால் நடக்க முடிகிறதா என்பதை பார்க்கவேண்டுமில்லையா?
3 - பத்து பதினைந்து நாட்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, நடக்க ஆரம்பித்து ஒரளவுக்கு உடம்பு செட் ஆகிவிட்டதா, இப்போது ஓடத்தொடங்கலாம்.
4 - வீட்டில் சும்மா கிடக்கிற பழைய ஷூ, அலுவலகத்துக்கு போடுகிற பார்மல் ஷூவெல்லாம் போட்டுக்கொண்டு ஓடக்கூடாது. குறிப்பாக பாத்ரூம் செப்பல், ஹவாய் செப்பல், வெறுங்காலில் எல்லாம் ஓடுவது நிச்சயம் கூடவே கூடாது. காலுக்கேற்ற நல்ல ரன்னிங் ஷூ வாங்கிப்போட்டுக் கொண்டுதான் ஓடவேண்டும். ஆயிரம் ரூபாய்க்கே ஒரளவு நல்ல ஓட்டக்காலணிகள் கிடைக்கிறது. சோத்து சோம்பேறியாட்டம் அமேசானில் தேடாமல் நாலுகடை ஏறி இறங்கி போட்டுப்பார்த்து வசதிபார்த்து வாங்கவும். காலுக்கு கச்சிதமில்லாத காலணியும் ஆபத்துதான்.
5 - உடை விஷயத்தில் கவனம் வேண்டும். ஜீன்ஸ் போட்டு ஓடுவது, சட்டை பேண்டில் ஓடுவதெல்லாம் கூடாது. நல்ல எளிய வியர்வை உறிஞ்சக்கூடிய கச்சிதமான உடைகள் அணியவும். வேட்டி லுங்கி கட்டிக்கொண்டோ, பர்தா போட்டுக்கொண்டோ, சுடிதார் போட்டு துப்பட்டாவை முகத்தில் கட்டிக்கொண்டோவெல்லாம் ஓடக்கூடாது.
6 - ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடுவதை விட நல்ல காற்றோட்டமான அவுட்டோர் ரன்னிங்தான் சிறந்தது. நல்ல சுத்தமான ஆக்ஸினோடு ஓடுவது உடலுக்கு நல்லது. ஜிம் செலவு இல்லை.
7 - அதிகாலையில் எழுந்து ஓடுவதுதான் சிறந்தது. அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாதவர்கள் திடீரென எழுவதால் பகலில் தூக்கம் சோர்வு எல்லாம் வரும்தான். ஆனால் பத்து பதினைந்து நாட்களுக்கு பிறகு அது இருக்காது. அதற்கு பிறகும் இருந்தால், இரவு அதிக நேரம் மொபைல் நோண்டாமல் நேரங்காலமாக உறங்கச்செல்லவும். அப்போதும் சோர்வாக இருந்தால் உணவுப்பழக்கத்தை கவனிக்கவும்.
8 - சரி ஓடுவோம். ஓட ஆரம்பிக்கும்போது நமக்கு எது சரியான வேகம் என்பது தெரியாது என்பதால் வெறிநாய் துரத்துவது போல நினைத்து தபதபவென ஓடுவோம். அப்படியெல்லாம் ஓடி நாம் உசேன் போல்ட் ஆகப்போவதில்லை. பொறுமையாக எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓட ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் போகப்போக வேகம் பிக்அப் பண்ணிக்கொள்ளலாம்.
9 - ஆரம்பத்தில் ஓட்டம் - நடை என கலந்து கட்டி பண்ணலாம்.. போகப்போக ஸ்டாமினா அதிகரிக்கும்போது முழுமையாக ஓட ஆரம்பிக்கலாம். அரைகிலோமீட்டர் ஓட்டம், ஒரு கிமீ நடை என ஆரம்பியுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு அரைகிமீயை ஒன்றாக அதிகரியுங்கள். மூச்சு வாங்கினால் கொஞ்சம் நடை போட்டுவிட்டு மீண்டும் ஓடுவதால் எந்த அம்பயரும் உங்களுக்கு அவுட் கொடுக்கப்போவதில்லை. அதனால் ஓட்டம்+நடை பார்முலாவை பின்பற்றுங்கள்.
10 - ஓடும்போது மூச்சுவிடுவதை நன்றாக கவனிக்க வேண்டும். மூக்குவழியாகவும் வாய்வழியாகவும் சீராக மூச்சு விடவேண்டும். வயிறு இறுக்கிப்பிடித்து வலி உண்டாகும் சிலருக்கு. அப்போது வயிற்றுக்குள் காற்றை பலூன் போல செலுத்தி விரிவடைய செய்தால் சரியாகிவிடும். அச்சம் தேவையில்லை. ஆனால் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து விடவேண்டும். மூச்சை அடக்கிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டெல்லாம் ஓடாதீர்கள். ஓடும்போது ''ஹேப்பி பர்த்டே டூயூ'' பாடிப்பாருங்கள்... அதை தடையில்லாமல் பாடமுடிந்தால் மூச்சுவிடுவது சரியாக இருக்கிறது என்று அர்த்தம்! (சிகரட் பழக்கமிருந்தால் அதை விட்டுவிடுங்கள். அல்லது ஓட்டத்தை விட்டுவிடுங்கள். உடல் பாதிப்பு அதிகமாகிவிடும்)
11 - வார்ம்அப்ஸ் நிச்சயம் அவசியம். அப்படீனா என்ன என்பவர்கள் யூடியூபில் தேடினால் நிறைய கிடைக்கும். உடலை இலகுவாக்குகிற சிறிய உடற்பயிற்சிகள் இவை.
12 - ஓடும்போது கையில் மொபைல், காதில் ஹெட்போன் எல்லாம் வைத்துக்கொண்டு ஓடாதீர்கள். வீட்டிலேயே மொபைலை வைத்துவிட்டு ஓடுவது நல்லது. அல்லது மொபைல் பவுச் கிடைக்கும் அதில் வைத்துக்கொள்ளவும். ஓடும்போது ஹெட்போன் இடைஞ்சலாக இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.
13 - கூட்டமான பார்க்குகளில் ஓடுவது சிரமம். அதற்கு சாலைகளில் ஓடலாம். நாய்கள், ஆய்கள் ஜாக்கிரதை. ஓடுகிற குழுக்கள் உங்கள் ஊரில் இருந்தால் அவர்களோடு சேர்ந்து ஓடுங்கள். பயிற்சிகளில் நிறைய உதவுவார்கள்.
14 - ஓடி முடித்தபின் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முக்கியம். தசைகளை இழுத்து விட்டுக்கொள்வதால் காயங்களை தவிர்க்கலாம். யோகா தெரிந்தவர்கள் பத்து சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. எனக்குத்தெரிந்து ரன்னர்களுக்கான பெஸ்ட் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி அதுதான்.
15 - நைக்ப்ளஸ், ஸ்ட்ரவா, ரன்கீப்பர் மாதிரி மொபைல் ஆப்களை உபயோகித்தால் ஓடும் தூரம் நேரமெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். அது அடுத்தடுத்த நாட்களில் ஓடுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும். ஸ்ட்ராவா என்பது ஓடுகிறவர்களுக்கான ஃபேஸ்புக்... ஓடிஓடி லைக் வாங்குவது நமக்கான உத்வேகத்தை தரும்.
16 - ஆரம்பத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் ஓடினாலே போதும். திங்கள், செவ்வாய் ஓட்டம், புதன் நடைபயிற்சி, வியாழன்-வெள்ளி ஓட்டம் - சனி - யோகா, கிரிக்கெட், டென்னிஸ், சைக்கிளிங் மாதிரி ஏதாவது, ஞாயிறு ஓய்வு என வழக்கப்படுத்திக்கொள்ளலாம். அல்லது நம்முடைய ஸ்கெட்யூலுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.
17 - ஓய்வு முக்கியம். தினமும் ஓடிக்கொண்டேஏஏஏஏ இருக்கக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது ஓடாமல் ஓய்வில் இருங்கள். ஆனால் வீட்டிலேயே குப்புறப்படுத்துக்கொள்ளாமல் பார்க்கிலோ பீச்சிலோ ஓடுகிற இடத்திலோ வேடிக்கை பாருங்கள், தியானம் பண்ணுங்கள்.. சைட் அடியுங்கள். ஆனால் அன்றாட பயிற்சியை ஸ்கிப் பண்ணுவது மொத்தமாக வழக்கத்தை உடைத்து தினப்பழக்கத்தை சிதைக்கும்.
18 - காலில் முட்டியில், இடுப்பில் முதுகில் கழுத்தில் வலி இருந்தால், நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அதற்குபிறகு ஓடிக்கொள்ளலாம்.
19 - பொறுமை மிகமிக அவசியம். எடுத்த உடனே நூறு கிலோமீட்டர் ஓடமுடியாது. அரைகிலோமீட்டர்தான் முடியும். அதை முழுமையான அர்பணிப்போடு ஓடுங்கள். மெதுமெதுவாக தூரத்தையும் வேகத்தை அதிகரியுங்கள்.
20 - அதிக தூரம் ஓடும்போது நிறைய போர் அடிக்கும். அதை எதிர்கொள்ள மனதை பயிற்றுவிக்கவேண்டும். குழுவாக ஓடும்போது இந்த போரை தவிர்க்கலாம். அல்லது பாட்டுகேட்டுக்கொண்டே ஓடலாம்.
21 - ஜனவரிக்கு பிறகு வெயில் அதிகரிக்கும். எனவே கையில் சின்னதாக ஒரு தண்ணீர் பாட்டில் வைத்துக்கொண்டு ஓடவும்.
22 - ஓட ஆரம்பித்தால் நன்றாக பசிக்கும். அதனால் கொல தீனி தின்னக்கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்பதில் இனிமேல்தான் அதிக கவனம் வேண்டும்.
23 - நாலுநாள் ஓடிவிட்டு வந்து வயிற்றை தடவிப்பார்த்து தொப்பை குறையலயே என்று அழக்கூடாது. சொல்லப்போனால் ஓட ஆரம்பித்த பிறகுதான் தொப்பை பெரியதாக மாறியதுபோல தோற்றம்தரும். நெஞ்சு நிமிர்வதால் வயிறு மேலும் முன்னுக்கு வரும். ஆனால் ஓட ஓட குறையும் நம்பிக்கையாக ஓடுங்கள்.
24 - ஓடும்போது இயல்பாகவே நம் பாதங்களின் பின்புறம்தான் தரையில் முதலில் விழும். அப்படி ஓடக்கூடாது. பாதங்களின் நடுப்பாகம் தரையில் படும்படி ஓடவேண்டும். கவனித்து ஓடுங்கள்.
25 - தினமும் ஓட்டத்திற்கு பிறகு காலுக்கு வலுவேற்றும் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். அதை ஸ்கிப் பண்ணக்கூடாது.
இதெல்லாம் தெரிந்தால், ஓட்டம் நிரந்தரமான ஒரு ஆரோக்கிய பழக்கமாக மாறும். இவை தெரியாததால்தான் பலரும் ஓட்டத்தை ஆரம்பத்திலேயே விட்டுவிட நேர்கிறது.
கடைசியாக எந்த வயதிலும் ஓட்டப்பயிற்சியை தொடங்கலாம். எந்த வயதிலும் மாரத்தான் ஓடலாம். அதற்கு தடையேயில்லை. அண்ணாநகரில் ஒரு 70 வயது ரன்னரை நேரடியாகவே பழக்கமுண்டு அவர் 65வயதில் ஓடத்தொடங்கியவர். (குழந்தைகள் என்றால் மட்டும் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடவேண்டாம். )
ஓட்டத்திற்கு நம்பிக்கைதான் முக்கியம். அதைவிட முக்கியம் பொறுமை. ஓட்டப்பயிற்சி என்பதில் உடல் பலம் என்பது பாதிதான் ஓடுவதற்கான மனபலம்தான் முக்கியமானது. மாரத்தான் ஓட்டங்களில் நீண்ட தூரத்திற்கு யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாக ஓடுவதற்கு கால்களில் மட்டுமே பலமிருந்தால் பத்தாது. மனதிலும் வேண்டும். அது இருக்கிறவர்களால்தான் சிறந்த ஓட்டக்காரர்களாக முடியும்.
Best wises
அதிஷா.
18 January 2019
புத்தகத் திருவிழா 2019
புத்தகத் திருவிழாவில் கூட்டமில்லை. அப்பளம்தான் அதிகம் விற்பனையாகிறது. இப்படி எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ``ஆமான்டா அப்பளம்தான்டா அதிகமா விக்கும். ஏன்னா அந்த அப்பளத்தைவிட....'' என்று வாசகர்கள் திருப்பி திட்டுவதில்லை. அவர்கள் அத்தனை சாதுவானவர்கள். எழுத்தாளன் மீதிருக்கிற கோபத்தில் அம்பிகையே அபிராமியே என அப்பளத்தை வாங்கி கோபமாக இரண்டு கடிகடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வாயில்லா வாசகர்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம். என்றைக்கு தமிழ்வாசகன் அவன் காசு கொடுத்து வாங்கிய நூலை படித்து கடுப்பாகும்போது எழுத்தாளனை திரும்பத் தாக்கத்தொடங்குகிறானோ அன்றைக்குதான் தமிழ் எழுத்துலகம் வாழும். அதெல்லாம் நடக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை... ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.
முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.
அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பதிப்பகமே ரமேஷ் பப்ளிஷர் என நான்குகடை, சுரேஷ் பப்ளிஷர் என ஐந்து கடை, ராமேசுரேஷ் டிஸ்ட்ரிபூட்டர்ஸ் என பத்து கடை என கண்டமேனிக்கி ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். எங்கு சுற்றினாலும் ஒரே மாதிரியான நூல்களையே திரும்ப திரும்ப பார்க்கும் போது வாசகனுக்கு எவ்வளவு அலுப்பும் எரிச்சலும் வரும்... இப்படிப்பட்ட ப்ராக்ஸி கடைகளிலேயே போய்விட்டது 30 % !
அடுத்து ஒரே மாதிரியான புத்தகங்கள் விற்கிற ஜிகே கடைகள். இங்கெல்லாம் பொன்னியின் செல்வன், சத்திய சோதனை, தெனாலி ராமன் கதைகள், பீர்பால், சாண்டில்யன்... இப்படிப்பட்ட நூல்களை மட்டுமே விற்பார்கள். இங்கெல்லாம் ஆண்டுதோறும் ஒரு புதிய நூலைக்கூட போடமாட்டார்கள். வருடாவருடம் அதே செட்டு... அதே நூல்கள். ஒரு புதுமையும் இருக்காது. எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்கிற பிரச்னைகள் இல்லாமல் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து விற்கிற குரூப்கள் இவர்கள். இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு 15% தேறும்.
அடுத்து ஆங்கில நூல்கள் விற்பவர்கள். பென்குயின் தவிர பெரிய ஆங்கில பதிப்பகங்கள் சென்னை புத்தகத்திருவிழாவில் ஏனோ கால்வைப்பதில்லை. பெரும்பாலும் டூபாக்கூர் புக்ஸ் கம்பெனிகள்தான் களம்காண்கின்றன. எங்காவது பழைய கண்டெயினரில் பழைய நூலகத்தில் கழித்துக்கட்டின நூல்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்து எது எடுத்தாலும் 100 வகையில் விற்பார்கள். அதில் பத்து சதவீதம் கூட தேறுகிற நூல்களே இருக்காது. எல்லாமே 10 ரூபாய் கூட மதிப்பில்லாத நூல்களாக இருக்கும். இவ்வகை கடைகள் 5%
அடுத்து ப்ரமோஷன் கடைகள். தங்களுடைய பொருள்களை விற்பதற்காக, அல்லது பிரபலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற கடைகள். இங்கெல்லாம் நமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. புத்தகத்திருவிழாவுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் பத்து கடைகளை மொத்தமாக போட்டு... உள்ளே பத்து பேர் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நம்மை உள்ளே அழைத்து பலூனை கொடுத்து மண்டையை கழுவி எதாவது எஜூகேஷனல் சாப்ட்வேரை தலையில் கட்டுவார்கள். இதுமாதிரி கடைகள் ஒரு 5%
மீதி இருக்கிற 25% கடைகளில் நல்ல நூல்கள் கிடைக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதில் முக்கால்வாசி கடைகளில் புக்பேருக்கென்றே அவசரஅவசரமாக சரியாக எடிட் செய்யப்படாமல், பிழைகள் பார்க்காமல், சரியான ஆய்வுகளோ உழைப்போ இல்லாமல் அவசரகதியில் எழுதப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். 200 ரூபாய் கொடுத்து ஒரு வாசகன் புத்தகம் வாங்குகிறான், அவனுடைய பணத்துக்கு மதிப்புக்கொடுத்து அவனை கொஞ்சமாவது மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்கள் இவைகளில் சொற்பமாகத்தான் தேரும். அது எது எனக் கண்டுபிடித்து சொல்லவும் நம்மிடம் ஆட்கள் இல்லை. ஃபேஸ்புக்கில் தேடினாலும் கிடைக்காது. முகநூல் ஹிட் என சில நூல்கள் உண்டு... அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மட்டையடி அடித்து நம் தலையில் கட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தில் இந்த 25% கடைகளில் எதையோ ஒன்றை எடுத்துவந்து பத்து பக்கம் படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவோம்.
இப்படி ஒட்டுமொத்த புத்தகத்திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்பது கடைசிவரை உள்ளே சென்று திரும்புகிற வாசகனுக்கு மர்மமாகவே இருந்துவிடுகிறது. ஆண்டுதோறும் இதே செட்அப்தான், ஒரு புதுமையோ மாற்றமோ இருக்காது. அதே லிச்சி ஜூஸ், அதே புதிய கவிஞர்கள் படை, அதே காலச்சுவடு கிளாஸிக்ஸ், அதே காமிக்ஸ் கடை, அதே மேடை, அதே சுகிசிவம், அதே மனிதர்கள்...
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ, அவன்மீது எந்த பச்சாதாபமும் இல்லாமல் மொக்கையான சரக்குகளையும் அதிக விலைக்கு தலையில் கட்டி, மோசமான சூழலில் குடிக்க விட்டிருக்கிறார்களோ அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.
உலகெங்கிலும் நடக்கிற புத்தகத்திருவிழாக்களின் வீடியோக்களை யூடியூபில் தேடிப்பாருங்கள்... எப்படியெல்லாம் புதுமைகள் பண்ணுகிறார்கள். ஆங்கில நூல்களை வாங்கிப்பாருங்கள், அட்டை தொடங்கி கன்டென்ட் வரை எத்தனை உழைப்பு. ஒரு ஒரு ரூபாய்க்கும் மதிப்பு மிக்க நூல்களை போடுகிறார்கள்.
நம் புத்தகத் திருவிழா கடைகளில் கிரியேட்டிவிட்டி என்பது துளிகூட இருக்காது. போகட்டும் வசதிகளாவது இருக்கிறதா? கடையில் இருப்பவர்களுக்கும் நூல்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே ஒரு நூலை எடுத்து விவரித்து பரிந்துரை செய்யவும் பக்காவான ஆளில்லை. நல்ல நூல்களும் இல்லை. புதிதாக வருகிற சில நூல்களும் வாசகன் மீதான அக்கறையோடு எழுதப்படுவதில்லை...
இதையெல்லாம் தாண்டியும் இத்தனை கூட்டங்கள் வருடந்தோறும் வருவதும் நூல்கள் வாங்குவதும் கூட அதிசயிக்கதக்க அதிசயம்தான்... பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அந்த பாவப்பட்டவர்களுக்கு ரத்தினக்கம்பளமல்லவா விரிக்க வேண்டும்... அவனை பார்க்கிங்கில் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்... யாசகனைப்போல!
சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை... ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.
முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.
அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பதிப்பகமே ரமேஷ் பப்ளிஷர் என நான்குகடை, சுரேஷ் பப்ளிஷர் என ஐந்து கடை, ராமேசுரேஷ் டிஸ்ட்ரிபூட்டர்ஸ் என பத்து கடை என கண்டமேனிக்கி ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். எங்கு சுற்றினாலும் ஒரே மாதிரியான நூல்களையே திரும்ப திரும்ப பார்க்கும் போது வாசகனுக்கு எவ்வளவு அலுப்பும் எரிச்சலும் வரும்... இப்படிப்பட்ட ப்ராக்ஸி கடைகளிலேயே போய்விட்டது 30 % !
அடுத்து ஒரே மாதிரியான புத்தகங்கள் விற்கிற ஜிகே கடைகள். இங்கெல்லாம் பொன்னியின் செல்வன், சத்திய சோதனை, தெனாலி ராமன் கதைகள், பீர்பால், சாண்டில்யன்... இப்படிப்பட்ட நூல்களை மட்டுமே விற்பார்கள். இங்கெல்லாம் ஆண்டுதோறும் ஒரு புதிய நூலைக்கூட போடமாட்டார்கள். வருடாவருடம் அதே செட்டு... அதே நூல்கள். ஒரு புதுமையும் இருக்காது. எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்கிற பிரச்னைகள் இல்லாமல் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து விற்கிற குரூப்கள் இவர்கள். இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு 15% தேறும்.
அடுத்து ஆங்கில நூல்கள் விற்பவர்கள். பென்குயின் தவிர பெரிய ஆங்கில பதிப்பகங்கள் சென்னை புத்தகத்திருவிழாவில் ஏனோ கால்வைப்பதில்லை. பெரும்பாலும் டூபாக்கூர் புக்ஸ் கம்பெனிகள்தான் களம்காண்கின்றன. எங்காவது பழைய கண்டெயினரில் பழைய நூலகத்தில் கழித்துக்கட்டின நூல்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்து எது எடுத்தாலும் 100 வகையில் விற்பார்கள். அதில் பத்து சதவீதம் கூட தேறுகிற நூல்களே இருக்காது. எல்லாமே 10 ரூபாய் கூட மதிப்பில்லாத நூல்களாக இருக்கும். இவ்வகை கடைகள் 5%
அடுத்து ப்ரமோஷன் கடைகள். தங்களுடைய பொருள்களை விற்பதற்காக, அல்லது பிரபலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற கடைகள். இங்கெல்லாம் நமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. புத்தகத்திருவிழாவுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் பத்து கடைகளை மொத்தமாக போட்டு... உள்ளே பத்து பேர் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நம்மை உள்ளே அழைத்து பலூனை கொடுத்து மண்டையை கழுவி எதாவது எஜூகேஷனல் சாப்ட்வேரை தலையில் கட்டுவார்கள். இதுமாதிரி கடைகள் ஒரு 5%
மீதி இருக்கிற 25% கடைகளில் நல்ல நூல்கள் கிடைக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதில் முக்கால்வாசி கடைகளில் புக்பேருக்கென்றே அவசரஅவசரமாக சரியாக எடிட் செய்யப்படாமல், பிழைகள் பார்க்காமல், சரியான ஆய்வுகளோ உழைப்போ இல்லாமல் அவசரகதியில் எழுதப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். 200 ரூபாய் கொடுத்து ஒரு வாசகன் புத்தகம் வாங்குகிறான், அவனுடைய பணத்துக்கு மதிப்புக்கொடுத்து அவனை கொஞ்சமாவது மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்கள் இவைகளில் சொற்பமாகத்தான் தேரும். அது எது எனக் கண்டுபிடித்து சொல்லவும் நம்மிடம் ஆட்கள் இல்லை. ஃபேஸ்புக்கில் தேடினாலும் கிடைக்காது. முகநூல் ஹிட் என சில நூல்கள் உண்டு... அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மட்டையடி அடித்து நம் தலையில் கட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தில் இந்த 25% கடைகளில் எதையோ ஒன்றை எடுத்துவந்து பத்து பக்கம் படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவோம்.
இப்படி ஒட்டுமொத்த புத்தகத்திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்பது கடைசிவரை உள்ளே சென்று திரும்புகிற வாசகனுக்கு மர்மமாகவே இருந்துவிடுகிறது. ஆண்டுதோறும் இதே செட்அப்தான், ஒரு புதுமையோ மாற்றமோ இருக்காது. அதே லிச்சி ஜூஸ், அதே புதிய கவிஞர்கள் படை, அதே காலச்சுவடு கிளாஸிக்ஸ், அதே காமிக்ஸ் கடை, அதே மேடை, அதே சுகிசிவம், அதே மனிதர்கள்...
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ, அவன்மீது எந்த பச்சாதாபமும் இல்லாமல் மொக்கையான சரக்குகளையும் அதிக விலைக்கு தலையில் கட்டி, மோசமான சூழலில் குடிக்க விட்டிருக்கிறார்களோ அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.
உலகெங்கிலும் நடக்கிற புத்தகத்திருவிழாக்களின் வீடியோக்களை யூடியூபில் தேடிப்பாருங்கள்... எப்படியெல்லாம் புதுமைகள் பண்ணுகிறார்கள். ஆங்கில நூல்களை வாங்கிப்பாருங்கள், அட்டை தொடங்கி கன்டென்ட் வரை எத்தனை உழைப்பு. ஒரு ஒரு ரூபாய்க்கும் மதிப்பு மிக்க நூல்களை போடுகிறார்கள்.
நம் புத்தகத் திருவிழா கடைகளில் கிரியேட்டிவிட்டி என்பது துளிகூட இருக்காது. போகட்டும் வசதிகளாவது இருக்கிறதா? கடையில் இருப்பவர்களுக்கும் நூல்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே ஒரு நூலை எடுத்து விவரித்து பரிந்துரை செய்யவும் பக்காவான ஆளில்லை. நல்ல நூல்களும் இல்லை. புதிதாக வருகிற சில நூல்களும் வாசகன் மீதான அக்கறையோடு எழுதப்படுவதில்லை...
இதையெல்லாம் தாண்டியும் இத்தனை கூட்டங்கள் வருடந்தோறும் வருவதும் நூல்கள் வாங்குவதும் கூட அதிசயிக்கதக்க அதிசயம்தான்... பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அந்த பாவப்பட்டவர்களுக்கு ரத்தினக்கம்பளமல்லவா விரிக்க வேண்டும்... அவனை பார்க்கிங்கில் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்... யாசகனைப்போல!
Subscribe to:
Posts (Atom)