Pages

22 March 2008

சிறுதொடர்கதை : வலியில்லா வலி பாகம் 3

வலியில்லா வலி பாகம்-3 ;

நான் கடைசியாக பார்த்தது அவளையும் அந்த லாரியையும்தான் , நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த அவளை காப்பாற்ற முயற்சி செய்தது மட்டுமே என் நினைவில் இருந்தது , பிறகு என்ன நடந்தது என்பது எவ்வளவோ முயன்றும் ஞாயபகத்திற்கு வரவில்லை . நான் எங்கிருக்கிறேன்? , எனக்கு என்ன ஆயிற்று? ஐயோ அவளுக்கு? ஒன்றுமே புரியவில்லை , என்னால் என் உடலைக்கூட உணர முடியவில்லை , ஆனால் உடலெங்கும் வலி. அவளுக்கு என்ன அயிற்றோ , மேலும் வலித்தது அதிகமாக மிக அதிகமாக.........

என்னை சுற்றி நான்கைந்து குரல்கள் ஒலிப்பதை என் காதுகள் உணர்கின்றன , எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சிறுவனின் குரல் , '' அண்ணா இது நம்ம மெக்கானிக் அஸிஸ்டென்டுணா !! '','' டேய் உயிர் இருக்கானு பாரு ? '' இது டிரைவர் , '' அண்ணா நெறய ரத்தம் போயிருக்கேணா , நீயே பாருணா .... '' , '' இது தாங்காதுடா '' , இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க மனமோ அதில் சுவாரசியம் இல்லாமல் அவளுக்கு என்ன ஆயிற்றோ என சிந்தனை செய்கிறது . இந்த உயிர் போகும் வலி வேறு கொல்கிறது . புதிதாக ஒரு குரல் ஆஆ!!!! இது அவள் குரல் போல்........... இல்லை அவள் குரலேதான் . என் வலியெல்லாம் மறைந்தது , இனி நான் பிழைத்து விடுவேன்,இனி நான் பிழைத்து விடுவேன் , இனி நான் பிழைத்து விடுவேன் .........................................


என் உடலெங்கும் பரவியிருந்த வலி இப்போது இல்லை ,அவள் பேசுவதும் இப்போது நன்கு கேட்கிறது , ''நான் கடைசியாக பார்த்தது அவளையும் அந்த லாரியையும்தான் , நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த அவளை காப்பாற்ற முயற்சி செய்தது மட்டுமே என் நினைவில் இருந்தது , பிறகு என்ன நடந்தது என்பது எவ்வளவோ முயன்றும் ஞாயபகத்திற்கு வரவில்லை . நான் எங்கிருக்கிறேன்? , எனக்கு என்ன ஆயிற்று? ஐயோ அவளுக்கு? ஒன்றுமே புரியவில்லை , என்னால் என் உடலைக்கூட உணர முடியவில்லை , ஆனால் உடலெங்கும் வலி. அவளுக்கு என்ன அயிற்றோ , மேலும் வலித்தது அதிகமாக மிக அதிகமாக, இதுதான் உயிர் போகும் வலியோ .

என்னை சுற்றி நான்கைந்து குரல்கள் ஒலிப்பதை என் காதுகள் உணர்கின்றன , எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சிறுவனின் குரல் , '' அண்ணா இது நம்ம மெக்கானிக் அஸிஸ்டென்டுணா !! '','' டேய் உயிர் இருக்கானு பாரு ? '' இது டிரைவர் , '' அண்ணா நெறய ரத்தம் போயிருக்கேணா , நீயே பாருணா .... '' , '' இது தாங்காதுடா '' , இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க மனமோ அதில் சுவாரசியம் இல்லாமல் அவளுக்கு என்ன ஆயிற்றோ என சிந்தனை செய்கிறது . இந்த உயிர் போகும் வலி வேறு கொல்கிறது . புதிதாக ஒரு குரல் ஆஆ!!!! இது அவள் குரல் போல்........... இல்லை அவள் குரலேதான் . என் வலியெல்லாம் மறைந்தது , இனி நான் பிழைத்து விடுவேன்,இனி நான் பிழைத்து விடுவேன் , இனி நான் பிழைத்து விடுவேன் .........................................

என் உடலெங்கும் பரவியிருந்த வலி இப்போது இல்லை ,அவள் பேசுவதும் இப்போது நன்கு கேட்கிறது , '' சாரிமா.... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!!! '' அவள் சாகவில்லை,அவள் சாகவில்லை,அவள் சாகவில்லை , என் மனம் மகிழ்ச்சியால் குதிக்கிறது . அவள் தொடர்ந்தாள் '' ப்ளீஸ்மா.... இங்க ஒரு ஆக்ஸிடெண்ட் டா!!.....................................ம்ம் வலையூர் பாலத்துக்கிட்ட , எனக்கு ஒன்னுமில்ல , ப்ராமிஸ்மா!!! , எனக்கு ஒன்னுமில்லடா , தினமும் ஒரு லூசு நான் காலேஜ் வரும் போது என்னை பாத்து சிரிப்பானு சொல்லல , இன்னைக்கு பாலம் வழியா வர்ரப்போ அவன் திடீர்னு ஓடி வந்து என்னை தள்ளி விட்டுட்டு பின்னால வந்த லாரில விழுந்துட்டான்டா .............., ஏன்னு தெரிலடா , எங்கிட்ட கேட்டா...............தெர்லமா ப்ளீஸ்....... , நான் இன்னைக்கு வர்ல ............வேண்டாம்மா !! ப்ளீஸ் ......... ம்ம் மீ டூ ........ ஐ லவ் யூ மா!!!!! '' , அவள் முடிக்க எனக்கு மீண்டும் வலிக்கிறது , உடலில் அல்ல உள்ளே உள்ளே உள்ளே... அதிகமாய் இன்னும் இன்னும் அதிகமாய் இன்னும் இன்னும் இன்னும் வலிக்கிறது , என்னால் இப்போது கேட்கவும் இயலவில்லை , ஆனால் இன்னும் கூட இருக்கிறது அந்த உயிர் போகும் வலி இல்லை உயிர் போக்கும் வலி .

முடிந்தது.