Pages

15 August 2008

இந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில : சுதந்திர தின சிறப்புப்பதிவு

நமது இந்தியாவின் தேசியக்கொடி குறித்த சில தகவல்கள் :
நமது இன்றைய மூவர்ணக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல . அது பல மாற்றங்களுக்கு பிறகு பலரது உழைப்பால் இன்றைய நாளில் நாம் உபயோகிக்கும் மூவர்ணக்கொடியாக உருப்பெற்றது .

முதல் மூவர்ணக்கொடி :




இந்தியாவின் சுதந்திர போர் இருபதாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் தொடங்கிய வேளையில் , அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினை சார்ந்த தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் தமக்கென ஒரு கொடியையும் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு கொடியாக இருக்க வேண்டும் என கருதி 1906ஆம் ஆண்டில் வங்காளத்தில் சுசிந்தர பிரசாத் போஸ் என்பவரால் வங்காளத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில் , இந்தியாவில் முதன்முதலாக மூவர்ணக்கொடி இடம் பெற்றதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன . நடுவில் மட்டும் சீக்கியர்களுக்காக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது.
இம்மூவர்ணக்கொடியில் , காவியில் நீள்வாக்காக 8 நட்ச்சத்திரங்களும் , மஞ்சளில் வங்காள மொழியில் வந்தே மாதரமும் , பச்சையில் ஒரு சூரியன்,சந்திரன் அதன் மீது ஒரு நட்சத்திரத்தோடு அமைந்தது .

முதலாம் உலகப்போரில் நமது கொடி :





1907ல் முதலாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில் , பிக்காய்ஜி காமா என்பவர் , ஜெர்மனியில் இந்தியாவின் மூவர்ணக்கொடியில் சில மாற்றங்களோடு அங்கே வெளியிடப்பட்ட இக்கொடி , முதலாம் உலகப்போருக்குப்பின் பெர்லின் கமிட்டி கொடி என அழைக்கப்பட்டது .



இக்கொடியில் இஸ்லாத்தை காட்டுவதாக பச்சைநிறம் முதலாவதாகவும் அதில் அப்போது இந்தியாவில் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில் எட்டு தாமரைகளும் இந்து மதத்தை வலியுருத்தும் காவி நிறம் கடைசியிலும் அதில் வலதுபுறம் சூரியன் மற்றும் இடதுபுறம் சந்திரனும் இடம்பெற்றிருந்தது , நடுவில் வெள்ளைநிறத்தினூடே வந்தேமாதரம் தேவநாகரியில் எழுதப்பட்டிருந்தது . இக்கொடி முதலாம் உலகப்போரில் மெசபட்டொமியாவில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .



1917 ல் மாற்றம் :



1917 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுயாட்சி வேண்டி அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதர திலகரும் ஒரு புதிய கொடியை உருவாக்கினர் . ஆனால் இக்கொடி அவ்வளவாக மக்களை சென்றடையவில்லை.



காந்தியின் வருகை :





மகாத்மா காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடியின் பல மாற்றங்களை கொண்டு வந்தார் , 1921 ஆம் ஆண்டு ஒரு புதிய வடிவில் கொடி உருவாக்கப்பட்டது . அக்கொடியில் இந்தியாவின் சிறுபான்மையினரின் மத அடிப்படையில் வெள்ளை(கிறித்துவம்),பச்சை(இஸ்லாம்),காவி(இந்து) என வரிசையாகவும் நடுவில் ராட்டையும் இடம் பெற்றது , அது அப்போதைய ஐயர்லாந்து நாட்டின் கொடியை ஒத்ததாக இருந்தது . இது பல அரசியல் காரணங்களால் இந்திய காங்கிரஸ் மற்றும் பெருவாரியான சுதந்திர போராட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மதம் சார்ந்த ஒற்றை நிற இந்தியக்கொடி :



இதனை அடுத்து ஆரஞ்சு (ஆக்கர்) நிறத்தில் இடது மூலை உச்சியில் ராட்டையுடன் ஒரு கொடி உருவாக்கப்பட்டது , அதுவும் இந்திய தேசிய காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.

ராட்டையுடன் இந்திய தேசிய காங்கிரஸின் கொடி 1931 :







1931 ல் காந்தியால் உருவாக்கப்பட்ட இக்கொடி இன்றைய நமது தேசிய கொடியோடு ஒத்து இருந்தது , நடுவில் அசோக சக்கரத்திற்கு பதிலாக ஒரு ராட்டை இடம் பெற்றது , இது அக்காலகட்டத்தில் அனைவாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களால் பல சுதந்திர போராட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது .


இந்தியாவின் இன்றைய தேசியக்கொடி :






1947 ஆகஸ்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் திரு.ராஜேந்திர பிரசாத் , திரு.அப்துல்கலாம் ஆசாத், திரு.ராஜாஜி, திருமதி.சரோஜினி நாயுடு , ஆகியோரது தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கான தேசிய கொடியை வடிவமைக்க முடிவானது , அவர்கள் அப்போதைய இந்திய தேசிய காங்கிரசின் கொடியை சில மாற்றங்களோடு எடுத்துக்கொள்ள முடிவானது . அக்கொடி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவாகி , ஆகஸ்ட் 15 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர நாளன்று மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது .



அதுவே இன்று வரை நமது தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.

__________________________________________________________________

* ஒரு ஆண்டில் இந்தியாவில் நமது கொடி விற்கப்படும் கொடிகளின் எண்ணிக்கை 40 மில்லியன் .

___________________________________________________________________

* இந்தியகொடியை உடையாக அணிவது தடை செய்யப்பட்டிருந்தாலும் , அது பிற்காலத்தில் கால்சட்டை மற்றும் உள்ளாடைகளாக பயன்படுத்த மட்டுமே தடை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது . மேல்சட்டையாக அணிய அனுமதி உண்டு.

__________________________________________________________________

*எவரெஸ்ட் சிகரத்தில் , முதன்முதலாக மே மாதம் 29 ஆம் தேதி 1953 ஆம் ஆண்டு நேபாள கொடியுடன் நடப்பட்டது.
___________________________________________________________________

*1971ல் இந்திய கொடி அப்பல்லோ 15 செயற்கைக்கோளில் அதில் சென்ற விண்வெளி வீரர் கமாண்டர் ராகேஷ் சர்மா அணிந்திருந்த சட்டையில் மெடலாக பயணித்தது .

___________________________________________________________________

*இந்தியாவிலேயே உயரமான கொடியேற்றம் ( 138 feet ) சென்னை கோட்டையில் உள்ளது

___________________________________________________________________

பாகிஸ்தான் ரூபாய் நோட்டில் , இந்தியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இணைந்த ஒரு அரிய புகைப்படம்



____________________________________________________________________

செம்ம டக்கரா ஒரு காந்தி கார்ட்டூன் :



____________________________________________________________________

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் .

____________________________________________________________________