Pages

15 September 2008

வலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...!!!


சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை அதிகமாகியுள்ளது , அது போல நம் பதிவுலகத்திலும் கொள்ளையர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது . பதிவு திருட்டு என்பது என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிக புதியதும் அரியதுமான ஒரு வார்த்தை .



இரண்டு வாரங்களுக்கு முன் எனது டிஷர்ட் வாசகங்கள் குறித்த பதிவு எனது வலைத்தளத்தில் வெளியானது அனைவரும் அறிந்ததே , அந்த பதிவில் HISUBASH என்னும் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் ஒரு லிங்க்கை கொடுத்து அதை பார்வையிட கூறியிருந்தார் . அந்த வலைப்பக்கத்தில் பார்த்தால் எனது டிஷர்ட் பதிவு ஒரு வரி கூட மாறாமல் அப்படியே முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதை பார்க்க நேர்ந்தது (தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது ) . சரி நமது ஒரு பதிவுதானே என்று அந்த வலைப்பூவை மேலும் தேடினால் அங்கு எனது சிலபலபதிவுகள் மட்டுமின்றி லக்கிலுக் போன்ற பதிவர்களது பல பதிவுகளும் அப்படியே திருடப்பட்டுள்ளது , ஒரு இடத்தில் கூட அது எந்த இடத்திலிருந்து உருவப்பட்டது என குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . குறைந்தது உபயம் என அந்த பதிவின் உரிமையாளரின் பெயரயாவது போட்டிருக்கலாம்.



இதில் அந்த வலைப்பூவில் காப்பிரைட் honey tamil என்று வேறு போட்டுள்ளனர் . நாளைக்கே அந்த பதிவு தான் எழுதியதென்றும் அதை எழுதிய நான் , அதை திருடியதாகவும் குற்றம் சாட்டினால் நம்மால் என்ன செய்து விட முடியும் . அந்த வலைத்தளத்தில் அவரது பெயர் மின்னஞ்சல் முகவரி எதுவுமே இல்லை .




பதிவர்களாகிய நாம் நமது ஒவ்வொரு பதிவினையும் எழுத எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அதன் வலியும் வேதனையும் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று . அப்படி நாம் மிக சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை சுட்டு தனது பதிவில் போடுவது தவறில்லை ஆனால் அந்த பதிவில் அதனை யார் எழுதியது என ஒரு வரி இட்டாலாவது பரவாயில்லை , என்னை போன்ற புதிய பதிவர்களது வலைப்பூவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் ஒன்றிரண்டாவது கூடும் . இதை எப்படி தடுப்பது யாரிடம் முறையிடுவது ஒன்றும் இயலாது ,




ஐயா புளைங்கள பெத்த புண்ணியவான்களே , அங்க அவன் அவன் ஒரு பதிவு எழுதறுதுக்குள்ள டவுசர் கிழிஞ்சு கீழ்வானம் செவந்துருது , தயவு செஞ்சு உங்க பதிவுல யாரோட பதிவ வேணும்ணாலும் போட்டுக்கோங்க ஆனா அத எங்க சுட்டீங்கணு போட்டீங்கண்ண உங்களுக்கு புண்ணியமா போகும் .



இப்போதைக்கு இந்த வலைத்தளம் மட்டும்தான் மாட்டிருக்கு இன்னும் யார் யார் எழுதினத எங்க எங்க போட்டு யாராரு காசு பாக்கறாங்கனு தெரியல....

அந்த வலைத்தள முகவரி இதானுங்க நீங்களும் போயி பாருங்க உங்க பதிவும் திருடப்பட்டிருக்கலாம் .






இந்த வலைபதிவு புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது , அதனால் பதிவுகளை பற்றி அதிகம் தெரியாமல் இப்படி செய்திருக்கலாம் , இப்படிப்பட்ட பதிவு திருட்டுக்கள் தடுக்கப்பட வேண்டியவை , இணையத்தில் உலவும் பலரும் இது குறித்து அறிந்திருக்க வேண்டும் , இனி இது போல யாரும் செய்யாதவாரும் தடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரது ஆவலும் கூட .



பதிவுகளுக்கான காப்பிரைட் உரிமைகள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சகபதிவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.



அதையும் பதிவுடன் இணைக்க ஏதுவாக அமையும்.



____________________________________________________________________

அந்த வலைப்பக்கத்தின் படம்.