தோசாவதாரம் !!

>> 17 September 2008

தோசாவதாரம் :


'' என் வணக்கத்திற்குரிய தமிழ்மக்களே இந்தியர்களே மன்னார்குடி பஞ்சாயத்து போர்டு தலைவர் குப்புசாமி, அண்டார்டிகாவில் ஐஸ் வண்டி ஓட்டும் ஜம்புலிங்கம் அண்ணாச்சி , கேளம்பாக்கம் குஜிலி கும்பாவும் அமர்ந்திருக்கும் இந்த தரித்திர விழா மேடையில் நானும் பேச வந்த கதை பெரிய கதை ஓலகமே சம்பந்தப்பட்ட கதை ,

ஏன் இது ஒரு மாமி கதையும் கூட , என்னடா பீஸாகடை பீஸா மாஸ்டர் மாமி கதை சொல்கிறானே என்று ஒரு ஐயம் எழலாம் ,

இங்கே மத்தியில் அமர்ந்திருக்கும் இந்த ஜலஜாமாமியும் இந்த கதையில் ஒரு முக்கிய பாத்திரம் அதனால் இந்த மாமியின் கதையையும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது , ஜலஜா மாமிக்கு நிறைய டமால் டுமீல் கதையுண்டு அதை இங்கே சொன்னால் இக்கதை பிரசுரமாகாது இருந்தாலும் ஜலஜா மாமி சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு அக்கதை சொல்ல குறைந்தது நாம் 50 வருடங்களாவது பின்னால் போக வேண்டும் சோ ( இங்கிலீசு SO ) 1958 , பீஸாஹட்டும் டோமினோசும் இந்தியாவிற்குள்ளும் இந்தியர்களின் வயிற்றுக்குள்ளும் புகாத நூற்றாண்டு தோசையும் ஆப்பமும் மோதி விளையாட வேறு ஐயிட்டம்கள் இல்லாத காலம் அதனால் அதன் ரசிகர்கள் வாயிலாக தன்னுள் மோதிக்கொண்ட நூற்றாண்டு ''

'' நாய்க்கும் சரி மனிதனுக்கும் சரி ருசிகண்டு விட்டால் தொல்லைதான் , கொருக்குபேட்டை கவுன்சிலர் காளியப்பனுக்கு ஆப்பம் மிகவும் பிடித்து போனது , பசி ருசியானது , ருசி ஓசியானாது , அது வரை மாமி மெஸ்ஸில் ஆப்பத்துடன் ஒண்டி குடித்தனம் நடத்தி வந்த தோசையை கவுன்சிலர் காளியப்பன் நிறுத்த சொன்னான் , ''

கவுன்சிலர் ஆட்கள் தோசைகல்லை பெயர்த்து எடுக்க , அங்கே வருகிறார் ரங்கன் ( அந்த கடை தோசை ஸ்பெசலிஸ்ட் , அவரது சிறப்பு 18 வகை தோசைகள் ) , தோசைக்கல்லை பெயர்த்து எடுக்கும் அடியாட்களை அடித்து நொருக்குகிறார் ( அப்படித்தான் இயக்குனர் சொல்லி தந்திருக்கிறார் ) ,

'' சுங்கம் பஸ் ஸடான்டில கடலைவித்த காளியப்பன்கிட்ட சூடாக வேணானு சொல்லு , அப்படி சொன்னது ஆருனு கேட்டா இந்த ரங்கன்தான்னு சொல்லு இன்னா!! ,'' ரங்கன் சூடாகிறார் தோசைகல்லின் மேல் கரண்டியால் ஓங்கி அடிக்கிறார் .

காளியப்பன் காண்டாகி மேலும் ஆட்களை அனுப்பி ரங்கனை அடிக்க சொல்கிறார் , சமையலறை கதவை இருக்க பிடித்து கொண்டு ரங்கன்

'' சாதா தோசை , சுபெசல் தோசை , வெங்காய தோசை , ஆனியன் ரவா , etc etc.. ( கோவில் புரோகிதர்கள் போல படித்துக்கொள்ளவும் ) '' என்று கதறியபடி கதவை பிடித்துகொண்டிருக்க , காளியப்பன் ஆட்கள் அடித்த அடியில் கதவு இரண்டாய் பிளக்க ராமு தெரித்து அனல் பறக்கும் தோசைக்கல்லில் விழுகிறார் , அவரையும் அகண்ட பிரமாண்டமான தோசைக்கல்லையும் சேர்த்து இழுத்து வருகிறார்கள் ஆட்கள் ,

இனி வசனங்கள் ,

காளியப்பன் : இன்னா ரங்கா , பாரு உம்புள்ளைங்கள்ளாலாம் எப்படி கதருதுனு , மருவாதயா நான் சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத

ரங்கன் : இன்னா எம் பாட்ட என்னாண்டயே பாடுறியா .. மவனே நான் செத்தாலும் இத பண்ணமாட்டேன்

காளி : மவனே நீ போடற வெங்காய தோசை , கீரை தோசை , ரவா தோசைலாம் தின்னு வயிரு செம கப்பு மாமு

ரங்கன் : பாத்தியா நைனா உன் வாயலயே எத்தினி தபா தோசை தோசைனு சொல்ல வச்சிருச்சு பாரு நம்ம தோசை

இப்படி ஒரு கலாய்ப்பை எதிர்ப்பார்க்காத காளி கடுப்பாகிறார்

காளி : இன்னாடா ஒன்னோட படா பேஜாரா பூடுச்சு , சரி ஒன்னு பண்ணு உன் தோசைகல்லுல எனக்கு ஒரு ஆப்பம் சுட்டு குடுத்தினா உன்ன உயிரோட விட்டுடறேன்

ரங்கனின் மனைவி காண்டாகிறார் ,

ரங்கனின் மனைவி : ஏ ஒன்னொட படா ரோதனையாக்கீதே பேசாம அந்தாளு சொல்ற மாறி ஆப்பம் சுட்டு குடுக்க வேண்டியது தான...


அனைவரும் ரங்கனை தோசை போடச்சொல்லி வற்புறுத்துகின்றனர் .


ரங்கன் தனது தோசை கல்லை காய வைக்கிறான் அதில் தண்ணீரை தெளித்து ஈர்குச்சி விளக்கமாறால் ஒரு விளாசு விளாசி மாவை எடுத்து தோசை சுடுகிறான் , காளி கோபமடைந்து அவனை அந்த காய்ந்து போன தோசைக்கல்லுடன் வைத்து கட்டி கூவத்தில் போட உத்தரவிடுகிறான் ,

பாடல் ஆரம்பமாகிறது , ரங்கன் அடித்தொண்டையில் கத்துகிறான்


கல்லை மட்டும் கண்டால் தோசை தெரியாது

தோசை மட்டும் கண்டால் ஆப்பம் கிடையாது


ஆப்பமாவிலே தோசை சுடலாம்

தோசை மாவிலே முடியாது


ஆப்பமாவிலே தோசை சுடலாம்
தோசை மாவிலே முடியாது



பூனைகண்ணில் பார்த்தால் எல்லாம் ஆப்பம்தான்

யானைகண்ணில் பார்த்தால் யாவும் தோசைதான்


மாவு தீர்ந்த பின்பு மாமிமெஸ்ஸில் தோசைகிடையாது

சட்னி மட்டும் தீர்ந்து போனால் ஆப்பம் - தின்ன முடியாது

பாடல் முடிகிறது...

டார்ச்சர் செய்யப்பட்ட ரங்கன் கூவத்தில் வீதப்படுகிறான் ஆழமில்லா பகுதியில் வீசப்பட்டும் அந்த ஆற்றின் கப்பு தாங்க இயலாமல் கதறி கதறி கண்மூடுகிறான் ,

''ரங்கன் செத்ததற்கு காரணம் தோசையுமல்ல , அந்த ரங்கன் நம்பி நாசமாய் போனதற்கு காரணம் ஆப்பமும் அல்ல .... தின்றே செத்தவர்கள் கதை அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் உண்டு ,ஹோட்டல் தோசை சரியில்லையென்றால் அதை கூண்டில் ஏற்றி குற்றம் சாட்டலாம் , வீட்டு தோசையை குற்றம் சொன்னால் தங்கமணிகளிடம் அடி மட்டுமே மிஞ்சும் , இந்த வீட்டு சக்தி வாய்ந்த தோசைகளின் மேல் தோசைகளை அடிக்கினால் நிச்சயம் அதன் பின்புலத்தில் ஒரு மாபெரும் சக்தி நிச்சயம் இருக்கும் , உதாரணத்திற்கு மனைவி , நாம் என்னதான் அலுவலகத்தில் இருந்தாலும் நம்மை வீட்டிலிருந்தே ஆட்டிவைக்கும் சக்தி மனைவிக்கு மட்டுமே உண்டென்று சொன்னால் அது மிகையாகாது , பசி வந்த நேரத்தில் காய்ந்த தோசைகளால் நம்மை காலி செய்யும் மனைவியும் சரி , கெட்டு போன சட்டினியுடன் வரும் ஹோட்டல் தோசையும் சரி பசிக்கும் போது நமது பசியை நிச்சயம் தீர்ப்பதில்லை , உதாரணம் டிசம்பர் 27 2003 கிரிவலபவன் வாந்திபேதி , சென்னை மயிலையில் பல நூறு பேர்களின் வயிற்றில் கபடி விளையாடிய தினம் , சரி அதற்கும் நம் கதைக்கும் என்ன சம்பந்தம் , மேற்கத்திய சிந்தனையில் கேப்மாரி தியரி என்று ஒன்று உண்டு இந்த உலக விஞ்ஞான தத்துவப்படி உலக வாந்திபேதிகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனபதாகும் , எடுத்துக்காட்டாக அருந்து விழும் ஒரு சிறிய பல்லியின் வால் பல ஆயிரம் பேரின் வாந்தி பேதிக்கு காரணமாய் இருக்கக்கூடும் என்பதே தத்துவம் , என் கதை ஒரு வாந்தி பேதியில் தொடங்கி ஒரு பல்லியின் வாலில் முடிகிறது


கதையின் இரண்டாவது அத்தியாயம் நுங்கம்பாக்கம் , பீஸா பாயிண்டில் துவங்குகிறது கதை சொல்லும் நானே கதாநாயகன் ஆனேன் , நானும் ஒரு வகையில் டமால் டுமீல் குஜிலி கும்பாதான் , ஆம் ராயபுரம் ரவுடி ராக்கப்பனின் மகனாய் பிறந்து , தோசை சுடுவதில் பல பட்டங்கள் பெற்று இன்றைக்கு கொலைகாரன்பேட்டையில் தோசைக்கல்லில் டமால் டுமீலென பீஸாகளைகண்ட

குஜிலி கும்பன் , அவசர சேவைக்காக நூறு பீஸாக்களை உற்பத்தி செய்யும் வேலையில் என்னை போல பல மாஸ்டர்களும் கடினமாக உழைத்துகொண்டிருந்தனர் , என் பெயர் கோயிந்தசாமி , என்னோட பசங்க இன்னானு கூப்புடுவானுங்கோ தெர்மா .. கோமி கோமி.......

____________________________________________________________________________________

TO BE CONTINUED....AGAINST PEOPLE'S INTREST....

___________________________________________________________________

Photo Courtesy - Dasavatharam Audio Wrapper

63 கருத்துக்கள்:

தமிழ் பிரியன் September 18, 2008 10:58 AM  

அதிஷா நீங்கள் ’அங்கே’ தங்க உறுப்பினராமே? ஜலஜாமாமி என்ற வார்த்தையைப் படித்ததுமே இந்த கமெண்டை போடுகின்றேன்... முழுவதும் படித்து விட்டு வருகிறேன்...

அதிஷா September 18, 2008 11:01 AM  

மாமினாலே தங்க உருப்பினரா...

என்ன கொடுமைடா முருகா...

narsim September 18, 2008 11:09 AM  

அதிஷா மீண்டு(ம்) வந்ததை அதிரடிபதிவுகளின் மூலம் அறிய முடிகிறது.. வாழ்த்துக்கள் அதிஷா!!


(பரிசல் :இன்னும் "வாழ்த்துக்கள் அதிஷாவ" பகிரங்க மன்னிப்பு கேட்டும் விடலயாடா நீ?)

நர்சிம்

கம்பன்,  September 18, 2008 11:10 AM  

சூப்பர்டா மாமு. அசத்துடா அசத்து. இப்படித்தானேடா ஒரு தோசைக்கதையை வைத்து எம்மை ஆட்டுகிறார்கள். நீ தொடரு மாமு. நாம இருக்கிறோம்.

Kamal September 18, 2008 11:15 AM  

சூப்பர்....செம ரீமேக்....ரசித்து சிரித்தேன்...
அதையும் கமல் ச்லாங்கிலேயே வாசித்தால் இன்னும் சிரிப்பு...

சரவணகுமரன் September 18, 2008 11:15 AM  

கலக்கல் காமெடி... :-)))

Anonymous,  September 18, 2008 11:26 AM  

நல்ல கற்பனை....Carry on

இளைய பல்லவன் September 18, 2008 11:43 AM  

தோசாவதாரம் சூப்பர்.

கண்டிப்பாக தொடரவும்.

லக்கிலுக் September 18, 2008 11:55 AM  

குஜாலா கீது மாமே. அப்டியே ரைட்டுலே உட்டு லெப்ட்டுலே வளைச்சி ஸ்ட்ரெய்ட்டா போயி கண்டினியூ பண்ணு.

லக்கிலுக் September 18, 2008 11:55 AM  

தோழர்!

உங்களுக்கு ‘தோசை சுடுவது' பற்றிய ஜோக் தெரியுமா தோழர்?

அந்த ஜோக்கை இங்கே பதித்தால் நீங்கள் வெளியிடுவீர்களா தோழர்?

வெண்பூ September 18, 2008 11:58 AM  

கலக்கல் கற்பனை அதிஷா... புன்னகையுடனே முழுதும் படிக்க முடிந்தது. சில இடங்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தன. பாராட்டுக்கள்.

****

கொஞ்சம் நீளமாக இருக்கிறது. சுருக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.

Anonymous,  September 18, 2008 11:59 AM  

Very good. continue.

அதிஷா September 18, 2008 12:08 PM  

தோழர் லக்கி எனக்கு தெரியாமலிருக்குமா அந்த தோசை ஜோக்கு

கட்டாயம் வெளியிடுகிறேன் தோழர்

( கொஞ்சம் சூட்டை குறைத்து போடவும்)

குசும்பன் September 18, 2008 12:17 PM  

அதிஷா செம கலக்கலான பதிவு, பாட்டும் அருமை!

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்!

குசும்பன் September 18, 2008 12:18 PM  

வெண்பூ said...
கொஞ்சம் நீளமாக இருக்கிறது. சுருக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.//

அண்ணே அது ஸ்பெசல் தோசை அப்படி கொஞ்சம் நீளமாகதான் இருக்கும் சுருக்கினால் தோசை அப்பமாக மாறிவிடும்.

முரளிகண்ணன் September 18, 2008 12:22 PM  

அதிஷா கலக்குங்க

குசும்பன் September 18, 2008 12:22 PM  

வாசகர் பரிந்துரைக்கு செல்ல தகுதி உடைய பதிவு ஆகையால் அங்கேயும் ஒரு குத்து குத்திட்டேன் அதிஷா!

வெயிலான் September 18, 2008 12:52 PM  

தமிழ்மணம் பிலிம்ஸ்
அதிஷா வழங்கும்
தோசாவதாரம்

உல்டா கிராபிக்ஸ் படத்தையும், கதையையும் வெகுவாக ரசித்தேன்.

செந்தழல் ரவி September 18, 2008 1:17 PM  

எக்ஸலண்ட் தோழர் !!!

பரிசல்காரன் September 18, 2008 1:32 PM  

அருமை சகா!

கமலின் மாடுலேஷனிலேயே படிக்க முடிவது ரீமேக்கின் சிறப்பு!

நிச்சயமாக தொடர்ந்து பல பாகங்கள் எழுதவும்!

பரிசல்காரன் September 18, 2008 1:33 PM  

@ லக்கிலுக்

//உங்களுக்கு ‘தோசை சுடுவது' பற்றிய ஜோக் தெரியுமா தோழர்?//

சொல்லுங்க.. சொல்லுங்க...

அவனும் அவளும் September 18, 2008 1:57 PM  

கலக்கிடீங்க ஆதிஷா. படிச்சி உணர்ச்சிவசப்பட்டு போய்ட்டேன். நகைச்சுவை உங்களுக்கு நல்லா வருதே......இது மாதிரியே நிறைய எழுதலாம் நீங்க...

.இத எடுத்து நான் தொடர் ஈமெயில் அனுப்ப போறேன். கொஞ்ச நாள் கழிச்சி வேற யார் பேராவாது போட்டு வந்தா நான் தான் காரணம் !

தமிழ்நெஞ்சம் September 18, 2008 2:06 PM  

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்

//மாவு தீர்ந்த பின்பு மாமிமெஸ்ஸில் தோசைகிடையாது

தோசாவதாரம் 18+ Special aa?
//அந்த கடை தோசை ஸ்பெசலிஸ்ட் , அவரது சிறப்பு 18 வகை தோசைகள்

மப்பு ஏத்திக்கிட்டு சாப்பிட்டா 1உம் பண்ணாது
//வயிரு செம கப்பு மாமு

சொல்ல வைச்சுட்டீங்களே - 'என்ன கொடுமை சார் இது?'ன்னு
//தோசைக்கல்லுடன் வைத்து கட்டி கூவத்தில் போட உத்தரவிடுகிறான்

ஆகா..உக்காந்து யோசிச்சு எழுதியிருக்கீங்க.. ரொம்பக் களைப்பாயிருப்பீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்துக் களைப்பாகுங்க.. வேறு வழி
//கோமி கோமி.......

Rajes September 18, 2008 2:23 PM  

excellent post.. pls continue..

மின்னுது மின்னல் September 18, 2008 2:29 PM  

கலக்கல் காமெடி... :-)))

Jeeves September 18, 2008 2:39 PM  

ஒரு :)) & ஒரு +

VIKNESHWARAN September 18, 2008 2:46 PM  

அதிஷா கதை சூப்பரா இருக்கு... நல்லா அடிச்சி ஆடுங்க...

Anonymous,  September 18, 2008 2:50 PM  

சூப்பரோ சூப்பர் அதிஷா! நான் உங்களுக்கு போடும் முதல் பின்னூட்டம் இது. இத்தனை நாள் நான் எப்படி உங்களை விட்டு வச்சேன்! இந்த லிங்கை கொடுத்த குசும்பனுக்கு நன்றி! கண்டிப்பா தொடரவும்!!!! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
அபிஅப்பா

ஆடுமாடு September 18, 2008 3:05 PM  

அதிஷா நல்லாயிருக்கு. வாழ்த்துகள். கமல் படிச்சார்னா, வாந்தி பேதியிலயே போயிருவாருன்னு நினைக்கிறேன்.

அடுத்த பார்ட்டை ஆரம்பிங்க.

கோவி.கண்ணன் September 18, 2008 3:47 PM  

ஐயோ...ஐயோ கதறி கதறி சிரிக்கக் கூட முடியுமா ?

:)))))))))))

ஜோசப் பால்ராஜ் September 18, 2008 4:34 PM  

அடிச்சு ஆடுங்க அதிஷா, ரொம்ப நல்லா இருக்கு.
கமல் கஷ்டப்பட்டு 3 வருசம் எடுத்த கதைய இப்டி கிழிக்கிறத பார்த்தா கமலே கன்னா பின்னானு சிரிப்பாரு.

//லக்கிலுக் said...
தோழர்!

உங்களுக்கு ‘தோசை சுடுவது' பற்றிய ஜோக் தெரியுமா தோழர்?

அந்த ஜோக்கை இங்கே பதித்தால் நீங்கள் வெளியிடுவீர்களா தோழர்? //

லக்கி நீங்க சொல்ல வந்த தோசை கதை ட்ரெயின்ல தோசை சுட்டக் கதையா?

naan September 18, 2008 5:20 PM  

sabaash sariyaana dosa...

SanJai September 18, 2008 5:20 PM  

பெருமாளே.. இந்த பாவியை மன்னியும்:))

.. அதிஷா.. போஸ்டர் சூப்பரப்பு.. :))

asgar September 18, 2008 5:25 PM  

nalla irukudhu,carry on

பினாத்தல் சுரேஷ் September 18, 2008 5:35 PM  

அருமையான Parody.

வரிக்கு வரி சிரித்தேன்.

பெசரட்டு தோசை எப்போ வரும்? சார் கேன் மேக் 5 டைப்ஸ் அப் தோசா இன் ஆப்பமாவு டயலாக் உண்டா?

பினாத்தல் சுரேஷ் September 18, 2008 5:35 PM  

அருமையான Parody.

வரிக்கு வரி சிரித்தேன்.

பெசரட்டு தோசை எப்போ வரும்? சார் கேன் மேக் 5 டைப்ஸ் அப் தோசா இன் ஆப்பமாவு டயலாக் உண்டா?

தமிழ் பிரியன் September 18, 2008 5:49 PM  

பெருமாளே! பெருமாளே! அதிஷா இன்னும் நிறைய இது மாதிரி பதிவு எழுது வை!
செமயா இருக்கு... :)

கப்பி | Kappi September 18, 2008 6:18 PM  

:)))

செம கலக்கல்!!

வால்பையன் September 18, 2008 6:35 PM  

கத ஜூப்பரா இருக்குதப்பா!
அடுத்த பாகம் எப்போ?

bala September 18, 2008 6:42 PM  

superb athisha oru thosaiyai dasavatharam kuda compare panneya vitham arumai.

புருனோ Bruno September 18, 2008 6:55 PM  

கண்டிப்பாக தொடரவும் :) :)

யு.எஸ்.தமிழன் September 18, 2008 7:09 PM  

அருமையாக பரோடி செய்திருக்கிறீர்கள். படிப்பதை நிறுத்திவிட்டு சிரித்தேன். விட்ட இடத்தை தொலைத்து மீண்டும் படித்து சிரித்தேன். வயிறு காலியாகிவிட்டது. இதையெல்லாம் பார்ட் பார்ட்டாகக் போட்டு உங்க சாடிஸ்த்தை காட்டாதீங்க!

வெங்கட்ராமன் September 18, 2008 7:58 PM  

தல சூப்பரு.
கண்டியூ கண்டியூ கண்டியூ

ஸ்கிரிப்ட ஃபுல்லா முடிச்சி விஜய் டி.வி லொல்லு சபாவில கொடுக்கவும்.
கண்டிப்பா செம கலாய்ப்பா இருக்கும்.

Kanagaraj September 18, 2008 8:27 PM  

Enjoyed a lot.. Keep it up

தாமிரா September 18, 2008 8:50 PM  

உங்க ஸ்டைல் முழுசும் வெளிப்படிகிற மாதிரியான ஸ்டோரி, பின்னீட்டிங்க..!

சென்ஷி September 18, 2008 8:51 PM  

//பினாத்தல் சுரேஷ் said...
அருமையான Parody.

வரிக்கு வரி சிரித்தேன்.

பெசரட்டு தோசை எப்போ வரும்? சார் கேன் மேக் 5 டைப்ஸ் அப் தோசா இன் ஆப்பமாவு டயலாக் உண்டா?
//

REPEATEY :))

SEMMA KALAKKAL

nathas September 18, 2008 8:55 PM  

:) :) :)

//TO BE CONTINUED....AGAINST PEOPLE'S INTREST//
Against People Interestaa ? Yaaru intha pathivukku ethiriyaa irukkaanga ?

கோபிநாத் September 18, 2008 9:09 PM  

கலக்கல் மச்சி ;)

TBCD September 18, 2008 9:21 PM  

நன்றாக எழுதியிருக்கீங்க..தங்க உறுப்பினரே....

ஃஃஃஃஃ

இன்னும் நான் பள்ளிக்காலத்தில் பேசப்பட்ட "ஆ" ஜோக்குகளே சுற்றி வருவது வியப்பளிக்கிறது....கற்பனை வறட்சியா...அல்லது இணையத்தில் மிகுந்து இருப்பதால்..யாரும் படிப்பதில்லையா....

கேள்விகள்..கேள்விகள்....

வடகரை வேலன் September 18, 2008 9:36 PM  

கலக்கல் அதிஷா.

பல்ராம் நாயுடுவுக்காக வெயிட்டிங்.

புதுகை.அப்துல்லா September 19, 2008 12:18 AM  

ஏங் கண்ணு ரூமு போட்டு யோசிப்பியோ :)))))

புதுகை.அப்துல்லா September 19, 2008 12:20 AM  

ஜோசப் பால்ராஜ் said...
லக்கி நீங்க சொல்ல வந்த தோசை கதை ட்ரெயின்ல தோசை சுட்டக் கதையா?
//

இன்னும் அத டிரெய்ண்ல தான் சுட்டுகிட்டு இருக்குறானுங்களா?

புதுகை.அப்துல்லா September 19, 2008 12:25 AM  

ஏங்கண்ணு எந்த லாட்ஜீல கண்ணு ரூம் போட்டு யோசிக்கிற? :)))))

நிஜமா நல்லவன் September 19, 2008 6:34 AM  

செம காமடி...தொடருங்க தல:)

அகநாழிகை September 19, 2008 10:20 AM  

நல்ல மொழி வளமும், பிரயோகமும் இருக்கு. ரசிக்கும்படியாவும் இருக்கு. ஆனா விகடன் போன்ற பத்திரிகைய வர ஜோக்ஸ் பக்கத்தையே படிக்காம திருப்பிடறோம். இதுக்குதான் கும்மி கும்பல் நிறைய பத்திரிகையில இருக்கே ! நீங்க த்தொசாவதாரத்துக்கு வீனாகுன நேரத்தை ஒரு நல்ல திரைக்கதை எழுத பயன்படுத்தி பதிவு நட்புக்குள்ள ஒரு குறும் படம் எடுக்க முயற்சிக்கலாமே ! anyway, முழுசா படிச்சேன், நல்லா சொறிஞ்சு விட்டுகிட்டேன் !
மடைய மாத்துங்கப்பா !

Anonymous,  September 19, 2008 5:33 PM  

III:

Ungaluku ellam ethume sonthama yosika theriyatha?
Ithil perumai pesa enna iruku...
Kaari thoo nu thupalam pola iruku.

Tharuthalai September 22, 2008 2:29 AM  

:-)))
புஷ் தோசைல NaClல் நெரைய இருக்குமா?

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

சேவியர் September 23, 2008 3:45 PM  

சூப்பர் :) நல்ல கற்பனை !

ரெஜோ October 9, 2008 4:24 PM  

நீங்க பெரிய மொக்கை பதிவர்ன்னு லக்கி ஒரு தடவை அவர் பின்னூட்டத்துல சொல்லிருந்தாரு (அப்டி தான் நெனைக்கறேன் ;-)) அதுக்காக இப்டியா ..

சரி மேட்டர் கு வருவோம் . கமலும் ரவியும் , தசாவதாரம் sequal பிளான் பண்றதா உளவுத்துறை ல தகவல் வந்திருக்கு .. உங்க கதைய கொண்டு போகலாமே !!! ;-)

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP