காலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை

>> 18 September 2008

காலமும் காதலும் காதலின் காலனும் -










காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை .

அவனையும் அவளையும் அது அப்படித்தான் அழைத்துச்சென்றிருக்கிறது , அவள் பூப்பெய்தி இருபது வருடங்களுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அத்தனையையும் எப்படித்தான் பொருத்துக் கொண்டதோ அந்த உடல் ,

காமத்தில் நகக்கீரல்களும் வலியும் அழகானாதாம் யாரோ ஆணாதிக்க கிழட்டு கவிஞன் பாடிச் சென்ற வரிகளின் அர்த்தம் அவளிதுவரை உணர்ந்ததில்லை , அவள் மேல் விழுகின்ற நகக்கீரல்களும் அவள் மேல் விழுகின்ற உடல்கள் தரும் எடையின் வலியும் அவளுக்கு என்றுமே சுகமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை , அதை ஒரு ஆணால் மட்டுமல்ல கணவனுடன் காமத்தில் கரைகண்ட எந்த குடும்ப பெண்டிரும் உணர இயலாத உயிரின் வலியது .

காதோரம் நரையும் முகமெல்லாம் மஞ்சளும் உதட்டில் சாயமும் தலையில் மல்லிகையும் சோம்பிய உடலும் கரைபடிந்த பற்களுமாய் அவளை எங்கும் காணலாம் . அவள் நம்மை சுற்றி எப்போதும் அலைபவள் . அதற்கென பிறக்காவிட்டாலும் அதற்காய் தயாராக்கப்பட்டவள் , கல்வியின்றி கலவி மட்டும் பயின்றவள் , இப்பெண்கள் பூப்படையாமலிருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் , காம மிருகங்கள் அப்போதும் புணர காத்திருக்கும் வாசலில் .

அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அந்த சாந்தி திரையரங்க பேருந்து நிருத்ததில் , தினமும் காலையில் ஒன்பது மணிக்கு பேருந்தில் ஏறி பத்து மணிக்கு அலுவலகம் சென்று ஆறு மணிக்கு மீண்டும் பேருந்தில் அடைக்கலமாகி மீண்டும் வீட்டை அடையும் நகரத்தின் கோடி இயந்திரங்களில் அவனும் ஒருவன் , பேருந்து நிலையத்தை ஒட்டிய அந்த நடைபாதை சுரங்க பாதையில் நின்ற படி போவோர் வருவோரை கண்களால் அழைத்து காசு பார்க்கும் அவள் இவனை அப்படி என்றுமே பார்த்ததில்லை , இவனுக்கு அதுவே அவள் மேல் மையல் வர காரணமாயிருந்தது .

அவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட அது , காதலா? காமமா? அல்லது மையலா? புயலா? எதுவோ ஒன்று மையம் கொண்டு அவனை தாக்கியிருந்தது .

காசு கொடுத்து காமம் தேடுபவன் என்ன காதலுடனா காமம் கொள்வான் , அவளை பூப்போல் புணர , அவன் காதலிக்க தொடங்கிய போதிருந்த அந்த காகிதப்பூ பலரது கைகளாலும் கசக்கப்பட்டு வாடியிருந்தது இப்போது , அவன் அவளது உடல் அவனுக்கொரு பொருட்டாய் இருந்ததில்லை , இவனும் ஒரு நாள் வாயைவிட்டு சொன்னான் உன் மேல் எனக்கு காதல் என்று , அவளால் பேச இயலாமல் எதோ தடுத்தது , பிறகு சரியென்றாள் . காதலித்தாள் .

பெரியாரென்றான் பகுத்தறிவென்றான் , அம்பேத்கரென்றான் , காதலென்றான் , அன்பென்றான் , கதை சொன்னான் , இதமாய் முத்தம் தந்தான் , இதயத்தில் நீ என்றான் , கடல் காட்டி முத்தமிட்டான் , காந்தி சிலையோரம் காற்றோடு கவிதை சொன்னான் , குடும்பம் பற்றி கவலையில்லை தனக்கு குடும்பமே இல்லையென்றான் , குழந்தைகள் வேண்டுமென்றான் , குடும்பத்தலைவியாய் ஆக்குவேனென்றான் , மடியில் படுக்கவைத்து பாடி மகிழ்வித்தான் , காதோரம் கிசுகிசுத்து அவளை கற்பனையில் மிதக்கவிட்டான்.

ஊருக்கு ஒதுக்குபுறமாய் யாருமில்லா தனிமையான விடுதியின் அறையில் அவனது தோளில் சாய்ந்து கொண்டு என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்றாள் , செய்வேன் என்றான் ஒற்றை வார்த்தையில் , அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் எப்போதும் இருந்தது , அவனுக்கு நம் உடல் மட்டும்தான் தேவை என்பதைப்போல , அவளது ஆண்களின் உலகம் துரோகிகளின் உலகம் , இவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து தொழிலுக்கும் போக இயலாமல் சாப்பாட்டிற்கும் மற்றதுக்கும் இவனை நம்பி அவன் தரும் சொற்பத்தில் இன்பம் கண்டு இன்று அவனுக்கு தன்னையே முழுமையாய் தரப்போகும் வேளையில் இப்படியொரு எண்ணம் அவள் மனதில் பாலில் ஒரு துளி விஷமாய் , அவன் சந்தேகமா என்றான் , இல்லை என்பது போல மறுத்தவளின் கண்களில் கண்ணீர் தன் சோகங்கள் தீர்ந்ததாய் . அவள் தனது உள்ளத்தை முழுமையாய் தந்தாள் , காமம் இல்லா உலகத்தில் வாழ்வதாய் , வெறிநாயாய் மேலே பாய்ந்து பிரண்டும் காமமில்லா உலகத்தில் வாழ்வதாய்....

காமம் முற்றி காதல் ஆகும் கண்களின் உலகத்தில் இவன் காதல் முற்றி காமமானது , அவனும் புணர்ந்தான் காதல் கிழிய புணர்ந்தான் ஆணுறை கிழியாமல் .

கதவு தட்டும் ஓசை கேட்க திறந்தால் காவலன் அவள் காதலின் காலன் , அவன்கள் தப்புவதும் அவள்கள் சிக்குவதும் நம் நாட்டில் காலம்காலமாய் நடப்பதுதானே , காலம் இருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்து சென்றது .

பல வருடங்களுக்கு பிறகு அதே சாந்தி திரையரங்க பேருந்துநிறுத்தம் , வருவோர் போவோரை கண்களால் அளந்த படி அவள் , காதோரம் நரைத்து விட்ட முடியை சரி செய்தபடி , நான் கேட்டேன் அவனை அதன்பிறகு நீங்கள் பார்க்கவில்லையா என்று , சிரித்தாள் , சதை கேட்கும் அவளிடம் கதை கேட்கும் பைத்தியம் போல் என்னை பார்த்தாள் .

பிரிதொரு நாள் அதே அவன் அதே அவள் , அவனுடன் அவனின் அவளும் , இவன் இருவராய் , அவள் ஒருத்தியாய் , அவன் வாழ்க்கையின் தேடலில் தீவிரமாய் அடுத்த பேருந்துக்காய் இவளை பார்க்காதது போல தனது பணப்பையை இருகப்பிடித்தபடி நிற்க , அவளும் அவனை பார்க்காதது போல அவளின் இன்றைய அவனாய் ஒரு பிச்சைகாரனிடம் பேரம் பேசியபடி , அவளுக்கு அவனது முகம் அருவருப்பாய் அவனுக்கும் அவளது முகம் அப்படியேவும் .

அவன் தினமும் வெறுப்புடனும் இன்பமில்லாமலும் இயந்திரம் போல் வாழ்க்கையையும் அவனின் அவளையும் காதலையும் புணர்ந்தபடி காதலையும் காலத்தையும் அவளையும் மறந்தவனாய் ,

அவள் எச்சில் பண்டமாய் தெருவோர நாய்களின் பசிக்குணவாய் வாயோரம் வழியும் புகையிலையினை துடைத்து கொண்டு பேரம் பேசிய படி இன்றும் நாளையும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த நாளும் ஓயும் வரை , இவர்களில் யார் இதற்கெல்லாம் காரணம் என புரியாமல் இவையெல்லாம் எதற்கு என தெரியாமல் கதை புரியாத நான் .

____________________________________________________________________

பட உதவி - மின்னஞ்சல் நண்பர்.

26 கருத்துக்கள்:

பரிசல்காரன் September 19, 2008 12:07 PM  

நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா!

பரிசல்காரன் September 19, 2008 12:08 PM  

கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!

பரிசல்காரன் September 19, 2008 12:09 PM  

ஒரு நாள் முழுவதுமா உங்கூட இருந்தேனேப்பா, இதப்பத்தியெல்லாம் சொல்லவே இல்லையே நீ?

:-(

narsim September 19, 2008 12:15 PM  

மிக நேர்த்தியான பதிவு..

தொடருங்கள்..

நர்சிம்

சுபாஷ் September 19, 2008 12:16 PM  

உங்கள் வழமையான நடையிலிருந்து வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
சிறப்பாகவுள்ளது.

தமிழ் பிரியன் September 19, 2008 1:07 PM  

நல்லா எழுதி இருக்கீங்க... உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது கடினமான ஒன்று.. அது உங்களுக்கு வருது.. :)

VIKNESHWARAN September 19, 2008 1:20 PM  

அதிஷா உங்கள் எழுத்துப் படிவங்களில் பி.ந தெரிகிறது. ஒளிமயமான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

நிதர்சனமான கதை. கலக்கலாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அதிஷா...

VIKNESHWARAN September 19, 2008 1:24 PM  

// பரிசல்காரன் said...
கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!//

யோவ் பரிசலு அவை அடக்கமா? ஒவ்வொரு பதிவிலும் அடிச்சி அடுறிங்க சொல்ல வந்துட்டாரு இவரு ஆசாமியாம்.

அதிஷா அப்பவே சொன்னாரு, உங்கள பத்தி... உண்மையா அந்த 'மேட்டரு'?

தமிழ்நெஞ்சம் September 19, 2008 1:26 PM  

வித்தியாசமான பரிமாணத்தில் உங்கள் எழுத்தாக்கம் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு குறும்படத்தை

http://sfintamil.blogspot.com/2008/09/mounam-short-film-by-kollywoodtoday.html

பொதிந்துள்ளேன். நேரமிருப்பின் காணுங்கள்.

கோவி.கண்ணன் September 19, 2008 1:29 PM  

ஜ்யோராம் சுந்தர் கதையில் இருந்து தப்பி வந்த கேரக்டர் மாதிரி இருக்கு 'அவள்'

:)

நல்லா இருக்கு, பின்னவீனத்துவ முயற்சியா ?

அனுஜன்யா September 19, 2008 2:00 PM  

உங்கள் எழுத்து நடை இதில் சற்று வித்தியாசப்படுகிறது. நல்லா இருக்கு.

அனுஜன்யா

வால்பையன் September 19, 2008 5:09 PM  

//கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!//

பரிசல்கிட்ட புடிச்சதே இந்த உண்மையை சொல்ற பழக்கம் தான்,
கேட்டுக்கப்பா அதிஷா விலகனும்மமா

முரளிகண்ணன் September 19, 2008 5:25 PM  

அதிஷா, அறிவியல் கதை போட்டியின் பொழுதே நினைத்தேன். உங்களுக்குள் ஒரு கதைசொல்லி இருக்கிறான் என்று.

உட்டாலக்கடி தமிழன்,  September 19, 2008 5:57 PM  

//வால்பையன் said...
//கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!//

பரிசல்கிட்ட புடிச்சதே இந்த உண்மையை சொல்ற பழக்கம் தான்,
கேட்டுக்கப்பா அதிஷா விலகனும்மமா
//

யாராவது ரெண்டு பேரை சிண்டு முடிச்சி வேடிக்கை பாக்குறதே இந்த ஆளுக்கு பொழைப்பாயிருக்கு. இந்த பொழைப்புக்கு எங்கேயாவது போய் நாண்டுக்கிட்டு..

வெண்பூ September 19, 2008 6:42 PM  

அற்புதமாக‌ எழுதுகிறீர்கள் அதிஷா... ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் தனித்தன்மையுடன் இருக்கிறது உங்கள் எழுத்து. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அதிஷா September 19, 2008 11:18 PM  

நன்றி பரிசல் அண்ணா

நன்றி நர்சிம்

நன்றி சுபாஷ்

அதிஷா September 19, 2008 11:20 PM  

நன்றி தமிழ்பிரியன்

நன்றி விக்கி

நன்றி தமிழ்நெஞ்சம்

அதிஷா September 19, 2008 11:21 PM  

நன்றி கோவி அண்ணா

நன்றி அனுஜன்யா

நன்றி வால்பையன்

அதிஷா September 19, 2008 11:21 PM  

நன்றி முரளி அண்ணா

நன்றி உட்டாலக்கடி தமிழன்

நன்றி வெண்பூ

புதுகை.அப்துல்லா September 19, 2008 11:33 PM  

என்ன மாதிரி மொக்கச்சாமிக்கெல்லாம் இதப் படிக்கிறதுக்கே தனி அறிவு வேணும். போய்ட்டு வர்றேன் அண்ணே. இனிமே எங்க கூட சேராதீங்க :)))))

Saravana Kumar MSK September 19, 2008 11:51 PM  

உங்கள் வழமையான நடையிலிருந்து வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
சிறப்பாகவுள்ளது.
:)

வடகரை வேலன் September 20, 2008 10:32 PM  

சூப்பர் அதிஷா. வித்தியாசமாக இருந்தது.

sAtHiSh,  September 21, 2008 12:28 AM  

kaadhal padam remake mathari irrukae,

அவனும் அவளும் September 21, 2008 11:33 PM  

இத விட கடினமான நடைல நான் ஒரு சிறுகதை படிச்சது இல்ல ஆதிஷா. உங்களோட சினிமா விமர்சனம், நகைச்சுவை பதிவுகளுக்கு எல்லாம் ஒரு எளிதான நடைல தான எழுதறீங்க. அருமையா இருக்கே ! அப்புறம் என்ன ? அவலங்கள தமிழ்ல எளிதான நடைல சொல்ல முகத்துல அறையரா மாதிரி சொல்ல முடியாதா ? உங்களால முடியும்ன்னு தான் நினைக்கிறேன்.

மத்தவங்க கமெண்ட் எல்லாம் படிச்சா, ஒருவேள தவறு என்கிட்ட தானோ என்னவோன்னு தோன்றுகிறது. இருந்தாலும் சொல்லனும்ன்னு தோணிச்சு... சொல்லிட்டேன். உங்க நண்பரோட திரைப்படம் போகும் பொது கேட்டு பாருங்க. அவர் என்ன சொல்றாருன்னு !

SurveySan September 22, 2008 10:20 AM  

நல்லா வந்திருக்கு.

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP