Pages

06 October 2008

மன்மோகன்சிங் ஐயாவுக்கு ஒரு பாராட்டு கடிதம் :தந்தி இல்லைங்கோ...


மதிப்பிற்குறிய மன்மோகன்சிங் ஐயாவுக்கு ,

வணக்கமுங்கோ , என்னை உங்களுக்கு தெரியுதுங்களா , நான்தானுங்க எல்லா கிராமத்திலயும் இருக்கற ஒத்த ஆலமரத்தடில எப்படா மழைவரும்னு வானத்தையே பாத்துகிட்டும் , எப்படா கரண்ட் வரும்னு மோட்டாரையும் பாத்துகிட்டு கிடக்கற தற்குறி தமிழன் (இந்தியனும் வச்சிக்கலாம் என்ன மக்க இந்தியன் தாத்தாம்பாய்ங்க ) . எசமான் என்னடா இவன் என்ன சாதாசோதா நமக்கு கடிதம் எழுதனு மட்டும் நினைக்காதீங்க , நாங்கெங்க வூட்ல இருக்கறவீகளையும் சேர்த்து ஒங்களுக்கு மொத்தமா 10 ஓட்டு போட்ருக்கோமுங்கோ . அந்த தகிரியத்திலதான் கடுதாசி போடறமுங்க . சமீபத்தில கூட எங்க மொதல்வரய்யா உங்களுக்கு தந்தி போட சொன்னாரு . தந்தி போடலாம்னு எனக்கும் ஆசைதாங்கய்யா , ஆனா எதுக்கு தந்தினு தெரியலயே . விடுங்க நம்ம கடுதாசி அதுக்கில்ல.

இந்த கடுதாசி எதுக்கு எழுத ஆரம்பிச்சேன்னே மறந்து போச்சுங்கையா , ஏன்னா பாருங்க இங்க கரண்ட் எப்பயாச்சும்தான் வருது , அந்த நேரம் மோட்டரப்போட்டு கருதுங்களுக்கு கொஞ்சம் தண்ணி காட்டிக்கலாமுங்கையா . இந்த கடுதாசி கட்டாயம் கரண்ட் பிரச்சனைக்கும் இல்லீங்கையா , ஏன்னா அதுக்கு முன்ன ஒருக்கா எங்க மொதலமைச்சருக்கு ஒரு கடுதாசி எழுதி அவரும் அத மதிச்சி ஒரு வாரம் கரண்ட்டு விட்டு எங்கள மகிழ்ச்சியாக்கிட்டாருங்கையா , அப்புறம் என்னாச்சுன்னு நீங்க கேக்கறது புரியுதுங்கையா , அதபத்தி நாங்களே எங்க மொதலமைச்சருகிட்ட பேசி தீத்துக்கறோம் நீங்க என்ன பண்ணுவீங்க பாவம் . இந்த கடுதாசி நிச்சயம் இலங்கை பிரச்சனை பத்தியுமில்லீங்கையா , ஏன்னா அத பத்தி நமக்கு அறிவு ரொம்ப கொறவுங்கையா .

நேத்து நம்ம பத்தாவது படிச்ச ( அவன்தானுங்க எங்கூர்லயே அதிகம் படிச்சவன் ) பிச்சமுத்து சொன்னான் , நீங்க அமெரிக்கா காரன்கிட்ட ஏதோ ஒரு ஒப்பந்தம் ம்ம்ம் அணுசக்தி அது என்ன எழவோ நமக்கு தெரியாதுங்க , ஆனா அந்த ஒப்பந்தம்ல கையெழுத்துப்போட்டு நம்ம நாட்டயே அவன்கிட்ட அடமானம் வச்சுட்டீங்கனு சொன்னானுங்க , அது மட்டுமில்லாம இந்த ஒப்பந்தம் வேஸ்ட் இதுனால இந்தியாக்கு ஒரு மயிரும் கிடைக்காதுனும் சொல்றானுங்க .சாமி நீங்க வெசனப்படாதீங்க உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அவன் கெடக்கான் சிவப்பு சட்டை பய , நீங்க அப்படிலாம் நாட்டுக்கு கெடுதல் செய்யமாட்டீங்கனு தெரியும் , இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பயம்.

ஏன்னா பாருங்க நம்ம காவாலி காத்தமுத்து சொல்லுறான் அந்த காலத்தில பிரிட்டிஷகாரன்கிட்ட அடிமையா இருந்த இந்தியாவ காங்கிரசு சுதந்திரம் வாங்கி குடுத்துச்சுன்னும் இந்த காலத்து காங்கிரசு நம்ம இந்தியாவ அமெரிக்கா காரன்கிட்ட விக்குதுன்னும் , அவன் சொல்றப்பல்லாம் நமக்கு வயித்துக்குள்ள பூச்சி பறக்குதுங்கையா , இருந்தாலும் நீங்க நல்லவரு வல்லவருனு தைரியம் அதுமில்லாம அவன் உங்க கட்சி மேல எப்பவும் காண்டாவே சுத்தற நம்ம காவிகட்சி வேறெப்படி பேசுவான் .அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,
சாமி ஏற்கனவே ஊருக்குள்ள உக்கார இடத்தில குண்டுவைப்பானோ ஒன்னுக்கு போற இடத்தில குண்டு வைப்பானோனு அவனவன் அலறிகிட்டு திரியுறானுங்க , அத ஒன்னும் பண்ண மாதிரி தெரியல , அதவிடுங்க இந்த தீவிரவாதிங்க அவங்களயும் ஒன்னும் பண்ண மாதிரி தெரியல , அட அதயும் விடுங்க நம்ம விலைவாசி அது காட்டுத்தனமா காட்டேறி மாதிரி ஏறிகிச்சு அதயும் ஒன்னும் பண்ணல , அதெல்லாம் விட்டுட்டு இப்ப எதுக்கு இந்த ஒப்பந்தத்த இவ்ளோ அவசரமா நிறைவேத்தறீங்கனு நான் கேப்பனா? நம்ப கேனப்பய குப்பன் கேக்கறானுங்க . அவன் சொல்றப்பபக்கூட நமக்கு கதிகலங்கி பூமி அதிருதுங்க இருந்தாலும் அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

நாட்டுக்குள்ள இப்படி பல பிரச்சனை இருந்தும் , அதெல்லாம் மயிராபோச்சினு கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனைல வைனு சொல்றாப்பல எங்க வீட்டு கிழவி கூட ஏதேதோ பேசுதுங்க , அதுங்க கிடக்குதுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

உங்க ஆட்சி மேல நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்தப்பம் கண்ட கபோதி நாய்ங்க கூடல்லாம் கூட்டணி வச்சி நெறய காசு செலவழிச்சு மறுபடியும் ஆட்சிய புடிச்சதே இந்த ஒப்பந்தத்த நிறைவேத்தத்தான்னு நம்மூர் ராமாக்கா மகன் கூட சொல்லுறான் அவனுக்கு வயசு பத்துதானுங்க , அட அந்த சின்னபயபுள்ளைக்கு எவ்ளோ திமிரு பாருங்க யாரோ கொலைகாரனுக்கு மந்திரி பதவிலாம் நீங்க வாங்கிதந்துதான் உங்க ஆட்சிய காப்பத்தினீங்கன்னான் .அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு உங்கள பத்தி எங்களுக்கு தெரியாதா எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

இதுனா வரைக்கும் அந்த கருமம் புடிச்ச ஒப்பந்தத்தில என்ன மயிருதான் இருக்கு , அட அந்த கெரகத்த நிறைவேத்தினா இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்னு யாருக்குனா தெரியுமா , அட மேலிடத்தில இருக்கற மயிரான்லருந்து தா என்னாட்டாம் ஆலமரத்தடி கெழவன் வரைக்கும் ஒருத்தருக்கும் ஒரு எழவும் தெரியாது . அட அதையாவது நீங்க ச்சொல்லி குடுத்துட்டா உங்களுக்கு கோடி புண்ணியமா போகுமுங்க , அப்படினு நான் சொல்லலைங்க நம்ம ஊராட்சி மன்ற தலைவரு சுடலை சொல்லுறான்ங்க , அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

ஆனா சாமி அது என்ன இழவு கருமாந்திரம் அத நிறைவேத்தினா இன்னாகும் . அதுனால எங்கள மாதிரி ஏழைங்களுக்கு எதுனா உபயோகம் இருக்குமா , இதுலாம் எங்களுக்கு வேண்டாம் சாமி ஏன்னா நாங்க உங்கள நம்பித்தான் ஒட்டு போட்டமுங்க , எங்க தலைல நீங்க மண்ண போடமாட்டீங்கனு நம்புறோமுங்க , நீங்க அத என்ன காரணத்துக்கு வேணா நிறைவேத்துங்க ஆனா அதுனால நாம பொறந்த இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சனை வரும்னா அப்படி ஒரு ஒப்பந்தமே வேண்டாமுங்க... அத சொல்ல நீ யாரு மட்டும் கேக்காதீங்க சாமீ , உங்களுக்கு ஓட்டு போட்ட உரிமை இருக்குனு இன்னும் நம்பிக்கிட்டு கெடக்கற தற்குறி பயபுள்ளங்க ,....

அந்த ஒப்பந்தம் நல்லதோ கெட்டதோ என்னாட்டம் படிக்காத தற்குறி பயலுகளுக்கு புரியாதுங்க , ஆனா படிச்சவீகளுக்கு புரியுமில்ல அவங்கள்ள சிலபேரயாவது கூப்பிட்டு பேசி ஒரு முடிவெடுக்கலாமில்லைங்களா .... அதும் இந்த காலத்தில டிவி பொட்டிலாம் வந்திருச்சு அதுலயாவது இத பத்தி விபரம் சொல்லி மக்களுக்கு கொஞ்சம் விளங்க வைக்கலாமில்லீங்க..

உங்களோட ஒசந்த குணம் மக்களுக்கு புரியும்ல....

பாத்துக்கோங்க சாமீ அப்புறம் உங்க இஷ்டம் . நீங்க மெத்த படிச்சவீக நாங்கல்லாம் படிக்காதவீக உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல... எதுனா செய்யுங்க ...

இப்படிக்கு ,

குண்டிக்கடில குண்டு வச்சிருக்கானானு பாத்துக்கிட்டே கடிதம் எழுதற

தற்குறிதமிழன் .....

_____________________________________________________________________________________

அவ்ளோதான்பா... ;-)

_____________________________________________________________________________________