Pages

05 December 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(2) - கங்கைகரைத்தோட்டம்.... கன்னிப்பெண்கள் கூட்டம்



முத்தமும் இன்பினிட்டிதான் ; -

ஜில்லென்று இருந்தது அந்த அறை . வெள்ளை ஓளி அறை முழுதும் பரவிக்கிடந்தது. படுக்கையில் நிர்வாணமாய் நான். என்னை சுற்றி வெள்ளை ஆடை தரித்த தேவதைகள். என்னை ஏக்கத்தோடு பார்த்திருக்க, நான் வெட்கத்தில் முகம் சிவந்து கிடக்கிறேன் நிர்வாணமாய் . என் மேல் ஒரு வயலட் நிறத்தில் மின்னும் போர்வை , வெல்வட்டாகவோ பட்டாகவோ இருக்கவேண்டும் . மிருதுவாக இருந்தது . என் உடல் அதைவிட மிருதுவாய் .

ஏகாந்தம் என்றால் என்னவென்று எனக்கு தெரிந்திராத வேளை அது . இவர்களெல்லாம் யார் எப்படி இங்கே வந்தேன் . எல்லா தேவதைகளும் அழகாய் இருப்பதேன் . புரியவில்லை . இதையெல்லாம் கேட்கும் நிலையில் நான் இல்லை . தேவதைகளெல்லாம் ஆடை தரித்திருக்க நான் மட்டும் நிர்வாணமாய் . கிளுகிளுப்பாய் உணர்ந்தேன் .

கோடி முறை விடாமல் புணர்ந்ததை போன்ற சோர்வு மனம் முழுக்க . உடல் முழுக்க ஒரு புத்துணர்ச்சி . அதில் ஒருத்தி குறுகிய உதட்டுக்காரி என் காது மடல்களை தடவுகிறாள் .அவள் விரல்கள் ஏன் குளிர்ச்சியாய் இருக்கிறது . இன்னொருத்தி மலையாளியாய் இருக்கவேண்டும் எனது கால்விரல்களை தன் இதழ்களால் முத்தமிடுகிறாள். உடல் சில்லிட்டு மயிர்க்கால்கள் குத்திநிற்கின்றன . குறுகுறுப்பு . அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அளவிட முடியாத மகிழ்ச்சி , ஒரு தேவதூதனை கண்டது போல களிப்பு .

என் அடிவயிற்றை ஒருத்தி பிசைகிறாள் . அவளை அடுத்தவளோ , அவளுக்கு பதினாறு வயதுதான் இருக்க வேண்டும் , என்னருகில் படுத்துக்கொண்டு என் உச்சந்தலையில் முத்தமிடுகிறாள் . அவளது இளம் மார்பு என் இடதுகையில் அழுந்தியபடியிருந்தது . என் கண்களும் உதடும் அதை நோக்கியே . இந்த பெண்களின் ஸ்பரிசம்தான் எத்தனை மென்மையாய் இருக்கிறது . ஒரு மலரை தொடுவது போல் அல்லவா என்னை தொடுகின்றனர் . எனக்கு மட்டும் மனதில் ஏன் ஒரு வன்முறை குடிகொண்டிருக்கிறது .

இது நிச்சயம் கனவல்ல , நிஜம் , உண்மை , இதோ என்னை அந்த குண்டுப்பெண் கன்னங்களை கிள்ளுகையில் வலிக்கிறதே . அவள் முகத்தில் எத்தனை மலர்ச்சி ,அவள் என்னை பார்த்து பெருமூச்செறிகையில் அவள் மார்புகள் விம்முவது அழகாய் இருக்கிறதே .

சென்னையின் லட்சக்கணக்கான பெண்களை பார்த்து எத்தனை நாள் பெருமூச்சு விட்டிருக்கிறேன் , ஒரு கோடி பேர் வாழும் இச்சென்னையில் எனக்கென்று ஒரு துணையாய் ஒரு பெண்ணில்லையே என்று எத்தனை இரவுகளை தனியாய் தொலைத்திருக்கிறேன் .

கடைசியாய் நான் சென்னை தி.கேணியில் நம்ம ஜட்ஜ் வீட்டு வாசலில் சாக்கடை அள்ளிக்கொண்டல்லவா இருந்தேன் . அங்கே ஒரு குப்பைலாரி பிரேக் பிடிக்காமல் என் மீது மோதியதே . ஆஆஆ நான் இறந்துவிட்டேனா? , இது சொர்க்கமா ? , இங்கெப்படி வந்தேன் . யார் இவர்கள் . எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது . ஆனால் வலிக்கவில்லை .

அதற்குள் ஒரு அரைகிழடு என்னை அவள் கைகளால் அணைத்தபடி அவள் முகத்தை என்னருகில் கொண்டு வந்து ச்செல்லமாக ''உன் பேர் என்னடா..... '' என்றபடி என் உதட்டில் முத்தமிட்டாள் . ஒரு வித வெண்ணையின் நாற்றம் . குமட்டியது .

நான் வாயைத்திறந்து பேச விழைந்தேன் வாயில் '' குவா........குவா........குவா'' தான் வந்தது . சத்தமாக ,இன்னும் சத்தமாக , வீரியத்துடன் . பல முறை முயன்றும் அதுவே .

அவள் '' ஏன்னா பாருங்கோ , இவன் அழறதை , ஏன்டா வினோ அழற... அழாதேடே.. சிண்டு '' என்றாள் . அவள் முத்தமிட்டாள் , இன்னொருத்தி முத்தமிட்டாள் , ஒரு கிழவன் முத்தமிட்டான் , ஐயயோ நம்ம ஜட்ஜ்ய்யா அவருமா... வீட்டுக்கு உள்ளேயே விடமாட்டாரே , அட கச்சேரி பண்றவர் அவருமா , இன்னும் நிறைய பேர் முத்தமிட்டனர் , முத்தமிட்டபடியே இருந்தனர் .

நான் கத்திக்கத்தி உறங்கிப்போனேன். அப்போதும் நிற்கவில்லை முத்தம் கொடுப்பது .

இச் இச் இச் இச்...... தூக்கத்திலும் கேட்டுக்கொண்டே இருந்தது . தருவது பெருவது இரண்டிலும் இன்பினிட்டி அது .


******************

தொடரும் இன்பம் ................
படம் - பிகாசோவின் தி கிஸ் . (கூகிளில் சுட்டது )