Pages

22 January 2009

சென்னையில் பதிவர் சந்திப்பு - 25-01-2009













ஹாய் மச்சான்ஸ் அண்டு மச்சிஸ்.....

(என்னது நமீதா சொன்னாதான் புடிக்குமா... )

எப்படி இருக்கீங்க... நீங்க பண்ண , பண்ற புண்ணியத்துக்கு நல்லாத்தான் இருப்பீங்க.... விசயம் அதில்ல... அதாவது என்னன்னா.....

சமீபத்தில........... புத்தாண்டு முடிஞ்சிருக்கு , பொங்கல் முடிஞ்சிருக்கு , சென்னை சங்கமம் முடிஞ்சிருக்கு , மிக முக்கியமான விசயம் நம்ம புத்தகக்கண்காட்சி முடிஞ்சிருக்கு , நிறைய திருவிழாக்கள் முடிஞ்சிருக்கறதால நம்ம மக்கள்லாம் அந்த அனுபவங்களை பத்தி சகபதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்கணும்னு ஆசைப்படறதா முந்தாநாள் பாத்த கிளிஜோசியர் ஒருத்தர் சொன்னாரு , அதனால இந்த வாரக்கடைசில ஒரு பதிவர் சந்திப்பு வச்சு குசலசுபயோகங்களையும் அப்புறம் புத்தககண்காட்சி பத்தியும் பேசிக்கலாம்னு ஒரு யோசனை.

இதுக்கு நடுவுல நம்ம கோவி.க(அ)ண்ணனும் நம்ம பின்னூட்ட புயல் விஜய் ஆனந்தும் சிங்கப்பூர்லருந்து வராங்களாம் நம்மளையெல்லாம் சந்திச்சு குசலம் விசாரிக்க... சோ... இந்த வாரம் ஞாயித்துக்கிழமை பதிவர் சந்திப்பு வச்சிரலாம்னு சிலபல முக்கியபதிவர்கள்ல்லாம் ( நான் இல்லபா ) சேர்ந்து முடிவுபண்ணிருக்காங்களாம்.

அதனால மக்களே , பதிவர்களே , பின்னூட்ட நண்பர்களே , வாசகச்செல்வங்களே அனைவரும்

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் நம்ம

மெரினா பீச்சு காந்திசிலையாண்டை வந்துருங்கோ ... அங்க மீட் பண்ணலாம்...

சந்திப்பு தேதி - 25-1-2009

இடம் - மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறமுள்ள நீரில்லா குட்டை

நேரம் - மாலை 5.30 முதல் 8.00 வரை

மக்களே சந்திப்பு முடிஞ்சதும் அனைவருக்கும் தேநீர் விருந்து உண்டு கட்டாயம் கலந்துகிட்டு தேநீர் பருகவும்...

அதே மாதிரி இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு கிடையாது , யார் வேணாலும் கலந்துகிட்டு கலக்கலாம்.. கலந்துரையாடலாம்...

வாங்க மச்சான்ஸ் அண்டு மச்சீஸ் மெரினா அலறட்டும்....


இதுக்கு மேல உங்களுக்கு இன்னா டவுட்டு வந்தாலும்..

என்னோட dhoniv@gmail.com ங்கற மெயல்ஐடிக்கு ஒரு மெயிலனுப்புங்க

இல்லாட்டி இந்த நம்பருக்குலாம் கூப்புட்டு கேளுங்கோ.. ஓகேவா..

அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

முரளிக்கண்ணன் -9444884964

நர்சிம் -9940666868

ஒகேவா...


கடைசியாக கிடைத்த தகவல் படி அண்ணன் கோவி அவர்கள்

90477 44151

என்ற எண்ணில் சனிக்கிழமையிலிருந்து கிடைப்பார்.. அவரிடமும் அளவலவாலாம்.. ( ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரி).....



**************************
நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு -
மெரினாவில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீஸின் கெடுபிடி அதிகமிருப்பதால் , பதிவர் சந்திப்பு இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய இடம் மற்றும் நேரம் -
இடம் - கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடி
நேரம் - 5.30 முதல் சந்திப்பு முடியும் வரை ( apprx 7.30 வரை)
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
சிரமத்திற்கு மன்னிக்கவும்.