Pages

30 March 2009

இன்கமிங் ஃப்ரீ - அவுட்கோயிங் நீ !







சராசரி சாவு வீடுதான் அது. அனைவரும் அழுது கத்தி புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இறந்தவர் தவிர அனைவரும் அழுகின்றனர். இறந்தவருக்கு மிகக்குறைந்த வயதாம். அழுவதில் கூட நம்மவர்கள் அளவுகோல் வைத்திருக்கின்றனர். அதிக வயதானவர்கள் இறந்துபோனால் அழுகை மிகக்குறைவு. மிகக்குறைந்த வயதில் இறந்துபோனால் மிக அதிக அழுகை. அங்கே மிதமான அழுகைதான். இறந்தவருக்கு வயது 55.



எங்கிருந்தோ ஒரு பாடல் கேட்கிறது.''உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே''. ஆமாடா சொல்லுடா என்று அழுது கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி செல்போனை காதில் வைத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து விலகுகிறாள். அரை மணி நேரமாய் '' காதோடுதான் நான் பேசுவேன் '' என்பதாய் பேசிக்கொண்டே இருக்கிறாள். பின் மீண்டும் கூட்டத்தோடு குழுமி அழுகை ஓவெனும் அழுகை தொடர்கிறது.



இன்று சாவு வீடென இல்லை கோவில் முதல் கோட்டை வரை எங்கும் நிறைந்திருக்கிறது இந்த பாழாய்ப்போன செல்போன்கள்.நகரத்து சாலைகளில் மாதம் தோறும் செல்போனில் பேசிக்கொண்டே சென்று இறந்து போவோரின் எண்ணிக்கை விலைவாசியைப்போல ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பெரும்பாலும் இது போல அதிகம் ரோட்டில் நடந்துகொண்டே போனில் பேசுவோர்களில் அதிகமானோர் இளம் பெண்களே. யாரிடம் இவர்கள் பேசுகிறார்கள் எதற்கு பேசுகிறார்கள்.. என்ன பேசுகிறார்கள்.. ஏன் இந்த கொலைவெறி.. அல்லாவுக்குத்தான் தெரியும். ஆனால் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.



ஒரு நண்பர் உடல்மொழி அசைவுகள்(BODY LANGUAGE) குறித்து அதிகம் தெரிந்தவர் . அவரிடம் பேசும்போது '' சார் போன்ல பேசுறவங்க எதிர்பக்கம் யார்கிட்ட பேசுறாங்கன்றத அவங்க முக பாவத்தை வச்சே கண்டு புடிச்சிரலாம் சார்'' , ''அது எப்படி ? '' ஆச்சர்யமாய் கேட்டேன்.



''ஒரு உதாரணம் சொல்றேன் நீங்க உங்க புதிய(!) மனைவி , காதலி , அல்லது கள்ளக்காதலி கிட்ட பேசும் போது உங்களையும் அறியாம உங்களுடைய கன்னங்களை உங்க கண்ணை நோக்கி நகர்த்துவீங்கன்னாரு.. சிரிக்கும் போது ஆகுமே அது மாதிரி , கண்ணுக்கு கீழே உப்பலா? , அதுவே உங்க முதலாளி அல்லது மேனஜரா இருந்தா , அப்படி ஆகாது, கண் சிமிட்டல் குறைவா இருக்கும்''



அட இது புதிய விசயாமாக இருக்கிறதே என சில நாட்கள் எங்கள் அலுவலகத்தில் இருக்கும் சிலர் போனில் கதைக்கையில் உற்று நோக்கினேன், பெரும்பாலும் அது சரியாகவே இருந்தது. அலுவலகத்தில் முக்கால்வாசிபேர் காதலியோடோ அல்லது க.காதலியோடுதான் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அலுவலகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் அப்படி பேசுவதில்லை. ( என் அலுவலகத்தில் எந்த பெண்ணுக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை , அது வேறு கதை). திருமணமான ஆண்களோ தனது மனைவியுடன் பேசும் போதும் மேனஜரிடம் பேசுகிற அதே முகபாவனை.



சாலைகளில் நடந்து கொண்டே பேசுகிற பெரும்பாலான பெண்களுக்கு இந்த டெக்னிக் சரியாக கில்லி மாதிரி வேலை செய்கிறது. 75% பெண்கள் (இளம்) காதலனோ அல்லது யாரோ ஒரு மிக நெருங்கிய நண்பரிடம்தான் ( பாலியல் முதல் பலதும் பகிர்ந்து கொள்ளும் நண்பர் குழாம்) பேசுகிறார்கள்.



பல பெண்களிடமும் இது குறித்து பேசும் போது அலுவலகம் மற்றும் வீட்டில் சில விசயங்களை ஆண்களிடம் கேட்கவோ அல்லது பேசவோ இயலாது , குறிப்பாக பாலியல் தொடர்பான விசயங்களாகட்டும் , பொதுவெளியில் பேசத்தயங்கும் விடயங்களாகட்டும் அது குறித்துப் பேச சாலையே சிறந்தது என்றும் , சாலைகளில் நடந்து கொண்டே குசுகுசுவென பேசினால் என்ன வேண்டுமானாலும் பேச இயலும் என்கிற சுதந்திரம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.



சாலைகளில் இது போல பேசுவதால் விபத்துக்கள் நேருமே , வீட்டில் தனியாக பேசலாமே என்று கூறினேன். அதற்கு பெரும்பாலானோர் கூறும் பதில் வீட்டில் பேச எஸ்எம்எஸ் பரிமாற்றமே சிறந்தது , பெற்றோருக்கு சந்தேகத்தை எழுப்பாது என்றும் , தனியறையிலோ மொட்டைமாடியிலோ பேசினால் பெற்றோர் சந்தேகப்பட வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தனர். பெற்றோர்கள் கவனிக்க.



இது குறித்து இன்னும் ஆழமாய் ஆராய்ச்சி செய்ததில் இது போன்ற பெண்கள் பெரும்பாலும் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்பவர்கள் , அதிலும் தோழிகள் இன்றி தனியாக அதிக தூரம் நடந்து செல்கையில் பேச்சுத்துணைக்கு ஒரு ஆள் இருந்தால் பயணக்களைப்பு தெரியாதே , அதிலும் சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம் , பெண்களுக்கு ஆண்களின் உலகம் எப்போதுமே சுவாரஸ்யம்தானே,அதுவும் ஒரு காரணம். மிக முக்கியமானதும் கூட.



தோழர் ஒருவர் இது குறித்து பேசும் போது மிகவும் வேதனையோடு ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார். பத்து வருடங்களுக்கு முன்னாலெல்லாம் சாலைகளில் செல்லும் இளம்பெண்களில் பத்தில் மூன்று பேராவது சைட் அடிக்கும் ஆண்களை திரும்பி பார்ப்பார்கள். இப்போதோ நிலைமை பத்தில் ஒருவர் கூட ஆண்களை சட்டை செய்வதில்லை என்றார். யோ உனக்கு பத்து வயசு கூடிருச்சுய்யா அதனாலதான் என்றேன் முறைத்தபடி நகர்ந்தார். ஆனால் அவர் கூறியதிலும் உண்மை இருப்பதாகவே உணர்கிறேன். சைட் அடிக்கும் ஆண்களை ஓரக்கண்ணால் அளந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூட குறைந்து விட்டதாகவே தெரிகிறது.



ஆண்களில் அதிகமானோர் சாலைகளில் நடந்தபடி பேசுவதில்லை. கவனித்திருக்கிறீர்களா? . அதற்கான காரணம் தெரியவில்லை.



பெரும்பாலும் இப்பெண்கள் யாருக்கும் போனில் அழைத்து பேசுவதில்லை. வெறும் மிஸ்டு கால் மட்டுமே , ஆண்களே போனில் அழைத்துப்பேசுகின்றனர் என்றார் நண்பர் ஒருவர். இது போன்ற பெண்கள் அதிகமாக பயன்படுத்துவது LIFETIME VALIDITY சிம்கார்டுகள். வாழ்நாள் முழுக்க இன்கமிங் இலவசம்.



ஆண்களும் ஏமாந்தவர்கள் அல்ல. இப்படி ஆண்களுக்கு டேக்கா குடுக்கும் பேசிமயக்கும் பேச்சு சுந்தரிகளின் பேச்சை நாசூக்காய் ரெக்கார்ட் செய்து புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். அது இணையகாலத்தில் மிக விரைவில் புளுடூத்தில் பரவலாகி விடுகிறது. அதனால் பெண்களும் இந்த விசயத்தில் கொஞ்சம் ஆபத்தை உணர்ந்து யாரிடம் வேண்டுமானாலும் பேசுவதை தவிர்த்து , ஆழம் பார்த்து கால் விடுவது நல்லது. இல்லாவிட்டால் இது போன்ற பேச்சுக்கள் கூட உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் எமனாகலாம்.



அண்மைக்காலங்களில் திருமணமான பெண்களும் இது போன்ற செல்போன் உறவுகளில் ஈடுபடுவது கணிசமாக அதிகரித்து ஏனோ வயிற்றில் புளியை கரைக்கிறது.



இது போன்ற உறவுகள் பலதும் பல நாள் நீடிப்பதாய் தெரியவில்லை. எப்போதாவது அரிதாய் ஒரு சில உறவுகள் திருமணம் வரை நீடிக்கும் வாய்ப்பிருக்கிறது. திருமணமானவர்கள் இடையேயான உறவுகள் கொலை வரை நீடிக்கும் வாய்ப்பிருக்கிறது.



அந்த உறவுகள் குறித்தும் அதனூடே கிழிந்து தொங்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்தும் இன்னொரு சமயம் இதே தலைப்பில் எழுத முயல்கிறேன்.



சமீபத்தில் சகஜமாய் புழங்கும் இது போன்ற காதல்,க.காதல் உரையாடல் ரெக்கார்டிங்குகளை இங்கே இணைக்கலாம். ஆனால் ஏனோ மனசாட்சி உறுத்தி தொலைக்கிறது. இணையத்தில் தேடி நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.



கடைசியாக எழுத்தாளர் வாமுகோமுவின் கவிதை ஒன்றோடு முடித்துக்கொள்வோம்.



உனக்கு போன் செய்வதில்



இப்போது சிக்கல் இருக்கிறது.



உனது கணவன் இரவுப் பணிக்குசென்றிருப்பானா



அல்லதுபகல் நேரப் பணி முடித்துதிரும்பி விட்டானா தெரியவில்லை..



இரு ந்தாலும் இது ஒன்றும்பெரிய பிரச்சினை இல்லைதான்..



உன்னைப்பொருத்தவரை!



ஆமாண்டி,தெரியலடி,ஆவாதடிஎன உனது தோழியிடம்பேசுவதுபோல,



நான் ஒன்றுபேசநீ ஒன்று பேசி வைத்துவிடுவாய்.



உனக்கு போன் செய்வதிலான சிக்கல்



"மனைவியின் கள்ளக்காதலனைவெட்டிக்கொன்ற கணவன் "



என்கிற செய்தியை தினசரி ஒன்றில்படித்ததிலிருந்துதான் !



இதற்க்கெல்லாம் போயா பயம் ?



உள் மனது அவ்வப்போதுதட்டிக்கொடுத்தாலும்



திருட்டு மாங்காய்க்கு ருசிதனிதான் கண்மணி.



எப்படியோ மனதை திடப்படுத்திஉனக்கு ரிங் அடித்தேன்.



"இன்னிக்குத்தான் குளித்தேன்நாலு நாளு போவட்டும் "என்கிறாய் !



போச்சாது போ!



நன்றி - vaamukomu.blogspot.com









********************************