சரத்பாபு என்றொரு கைப்புள்ள!

>> 21 April 2009


சரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன். தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு வேறு ஆள் என்று.

ஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது. யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர். இந்தியாவை முன்னேற்ற! பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.

ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.

கட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.

இதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா? . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள்? அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா.. தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை. எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நடைமுறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.

அதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது. சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று. விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.

ஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.

அவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.

காதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்கு தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.

இது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.

இதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.

அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.

ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.

125 கருத்துக்கள்:

நையாண்டி நைனா April 22, 2009 1:49 PM  

அவரு பொது வாழ்வில் என்ன கிழித்தார் என்று யாரும் ஒன்றும் சொல்லக்காணோம். இதற்கு எங்கள் தலை,அண்ணன் J.K.R எவ்வளவோ மேல்.

Suresh April 22, 2009 1:52 PM  

நிங்க சொல்ல வந்ததை காயபடுத்தாம சொன்னதுக்கு ரொமப ரொம்ப நன்றி அதிஷா உங்களின் மேல் ஒரு பாசம் பெங்கியது உண்மை ... உங்க கருத்துகளும் என் கருத்துகளும் வேறு பெற்று இருந்தாலும் நிங்க சொன்ன விதம் எனக்கும் ரொம்ப பிடித்தது..

krishnaaleelai April 22, 2009 1:53 PM  

ட்ராபிக் ராமசாமியை ஆதரிக்கலாம்

Suresh April 22, 2009 2:08 PM  

என்க்கு இந்த Food King சரத்ப்பாபு பற்றி முன்னாடியே படித்து இருக்கிறேன். ஆனால சரத்பாபு தேர்தலிள் போட்டி என்றதும் நானும் உங்கள மாதிரி முத்து அண்ணாமலை படத்தில் நடித்த சரத் என்றே நினைத்தேன்...

ஆனால் அப்புறம் தெரிந்துக்கொண்டேன்

எல்லாரும் இதுக்கு முன்னாடி செஞ்சு தோற்று போய்டாங்க அது எல்லாம் நடக்காது என்று நிங்க சொல்லுவது தப்பு

இந்தியா 1983 வோர்ல்ட் கப் விளையாடும் போது இந்தியா ஜெய்க்கும் என்று சொன்னால் உங்கள மாதிரி தான் எல்லாரும் சிரித்து நகையாடி இருப்பாங்க ...

லூஸா நீ என்று கூட கேட்டு இருப்பாங்க ஆனா ஒரு (Underdogs) என்று சொல்ல படும் அதாவது ஜெய்க்க முடியாது என்று சொல்லப்படும் ஒரு அணி செய்த்தது ஒரு ஹிஸ்டரி...

அதற்க்கு அப்புறம் முடியவே முடியாது என்று மார் தட்டும் விமர்சகர்கள் பாரட்டுவது இயல்பே

அட 1% கூட சாத்தியம் இல்லை என்றே வையுங்க அவருக்கு அதரவு சொல்லுவதில் தப்பு இல்லையே

யாரும் ஆட்டு மந்தைபோல் போக வில்லை அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு பின் அவரின் தன்னம்பிக்கை பார்த்தே ஆதரவு...

மக்கா அவரிடம் உள்ள தைரியம் பல பேரிடம் இல்லை, வெட்டி வம்பு ரவுடி இல்லை அவர், அவர் படிப்பு மட்டுமே காரணம் இல்லை

இது வரை அரசியலில் மிக பெரிய ஏமாற்று வேளை நடந்து வருது..

அதை மாற்ற நம்மலும் போவது இல்லை வந்த வரையும் எதுக்கு வந்த பேசாம போய் வீட்டுல இரு நாடு திருந்தாது உதவாது ..நீயும் என்னை மாதிரி பதிவு போடு சம்பள்ம் வாங்கி சாதரண வாழ்கை வாழு

எதற்க்கு இந்த முயற்சி..

நாங்களும் வர மாட்டோம் வந்தவனை நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்

ஒரு இளைஞனை ஆதரிக்க ஒரு இளைஞனிடம் பக்குவம் இல்லை ஒற்றுமை இல்லை...

அட போங்கயா கைப்புல்லைனு சொல்லி காமெடி வேற

MR.சரத்பாபு எதற்க்கு வரிங்க மக்கள் எல்லாம் நாங்க பழைய கட்சிக்கு தான் போடுவோம் நிங்க நின்னா உங்க எதிர்த்து பதிவு போடுவோம்
யாரு முடியாது இப்படி தான் காந்தி நினைத்து இருந்தால் அந்த் ஒல்லி மனிதன் பின்னாடி நாடு வராது தம்பி

நீங்க லக்கி எல்லாம் அப்போவே நல்ல வேளை இல்லை இருந்து இருந்தா காந்தி ஒரு கைபுள்ள உங்க ளா ஆங்கிலயே பிரிங்கு படை ஆயுததை எதிர்த்து ஒண்ணு பண்ணா முடியாது நிங்க ஒரு ஒல்லி , படித்த பையன் உங்க கிட்ட உடம்புல் சக்தி இல்லை, 4 பேரு ஆட்டு மந்தை போல் வந்துடா சுதந்திரம் வந்துடுமா என்று சொல்லி இந்தியாவை அடிமையாய் வைத்து இருப்பிங்க

வாழ்க தமிழன் ஒரு தவளையின் கதை போல் தானும் முன்னேற மாட்டான் செய்யுறவ்னையும் விடமாட்டான் நம்ம தமிழன்

டக்ளஸ்....... April 22, 2009 2:15 PM  

களம் இறங்கியாச்சா..?
நம்ம பதிவு என்னாச்சு தல..?

மணிகண்டன் April 22, 2009 2:35 PM  

****
ஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.
****

ஐஐஎம்மிலும் தமிழ் நோ டீச்சிங். அங்க டெப்த் பாத்து லெக் வுடுன்னு தான் சொல்லி தருவாங்க. சோ, ஆழம், ஆளம் பிரச்சனை நஹி. அதுனாலயே அவருக்கு வாக்கு போடணும் !

Anonymous,  April 22, 2009 2:38 PM  

நல்ல பதிவு. முன்பு ஒருமுறை "" மாணவர்கள் இப்படித்தான் கட்சி தொடங்கி பின்னர் கலைத்துவிட்டார்கள். இவர்கள் யாரும் அடிப்படை தெரிந்து வர ஆசைபடுவதில்லை. இவர்கள் தமிழ் படம் போல ஒரேஒரு பாடலில் முன்னேற வேண்டும் என்று நினைகிறார்கள் போலும்.

என்னமோ இவர்களை வாழ்த்துவோம்...

ஸ்ரீ.... April 22, 2009 2:41 PM  

ஒரு வேளை அவர் வெற்றி பெற்றுவிட்டால்...?

ஸ்ரீ....

G.Ragavan April 22, 2009 2:46 PM  

I dont agree to your post.

There is a change... whcih is visible. He is trying to bring in. It is our time to support.

If we keep on suggesting and questioning without taking any actions.... DMK and ADMK will only be coming to power.

I wish he wins. Even otherwise... he has shown.... how the action speaks. than what we are doing.

மணிகண்டன் April 22, 2009 2:47 PM  

****
தமிழில் 2 இலட்சம் ஹிட்ஸ்களை கடந்த 245வது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்
***

இது இப்ப தான் பாக்கறேன் ! கலக்கல் மற்றும் வாழ்த்துக்கள்.

Peer April 22, 2009 2:54 PM  

சரி விடுங்க அதிஷா, அவரு இப்ப தோத்து போனாலும்...அடுத்த சட்டமன்ற தேர்தல்...அதுலயும் போச்சுனா.... உள்ளாட்சி. அவருக்கு தோல்வி ஒண்ணும் புதுசா இருக்காதுன்னு நம்புறேன்.

சக்கர, உணர்ச்சிவசப்படாதிங்க...

டக்ளஸ்....... April 22, 2009 3:18 PM  

\\தமிழில் 2 இலட்சம் ஹிட்ஸ்களை கடந்த 245வது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்\\
தெரியாமத்தான் கேக்குறேன்..
நாங்க என்ன ஆடா இல்ல மாடா..? சொன்னா நல்லாருக்கும்..!

குசும்பன் April 22, 2009 3:34 PM  

//தமிழில் 2 இலட்சம் ஹிட்ஸ்களை கடந்த 245வது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்//

மேய நான் என்ன ஆடா மாடா? எப்படி இப்படி சொல்லலாம்! ஒரு கோடி கேட்டு மானநஷ்டவழக்கு தொடருவேன் 256 வது நபராக:)

அப்புறம் சக்கரைய காச்சும் பணியில் நீங்களுமா! ?????

மணிகண்டன் April 22, 2009 3:35 PM  

அதிஷா,

உங்க பதிவுல ஒரு நிறைவு இல்லை.

அத தவிர, ரொம்பவே லாஜிக்கல்லா இருக்கற மாதிரி ஒரு பீல் வருது. அப்படி தோன்றும் அனைத்துமே குப்பை என்று எனக்கு தோன்றும்.

வெற்றி பெற வாய்ப்பு இல்லை/மிகவும் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதை எதற்கு மறுபடியும் ஒரு பதிவு போட்டு எழுத வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. அவரை ஆதரித்து வருபவருக்கு "இது தெரியாது" என்ற உங்கள் எண்ணத்தை சற்று சீர்தூக்கி பாருங்கள். அப்பொழுது புரியலாம் ஏன் ஆதரிக்க முயல்கிறார்கள் என்று.

இந்தியாவை முன்னேற்ற குடிசையில் வாழ்கிறார் என்ற கிண்டல் எதற்கு என்று புரியவில்லை. கோடிக்கணக்கில் புழங்கும் ஒரு வர்த்தகம் செய்து தான் வருகிறார். ஆதலால் அவருக்கு நிர்வாக திறன் கிடையாது என்றோ / நடைமுறை சிக்கல் புரியாது என்றோ எனக்கு தோன்றவில்லை. அதே சமயம், இதை வைத்து அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியானவரா என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. அவர் ஒருவேளை இத்தேர்தலில் தோற்ற பிறகு, அடுத்த சட்டமன்ற தேர்தலிலோ, கவுன்சிலர் தேர்தலிலோ போட்டியிடலாம். அதற்கான தகுதியாக இத்தேர்தலில் பெற்ற வாக்குகளை பயன்படுத்தலாம். அரசியல்ரீதியாக பார்த்தால், வெற்றி என்பது இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது போல அவ்வளவு வெளிப்படையான ஒன்று அல்ல.

கவுன்சிலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று, பாராளுமன்ற தேர்தலில் நிற்க மற்றும் வெற்றி பெற நீங்கள் சரத் பாபுவை வாழ்த்துகிறீர்கள் என்று யாரும் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. (தயாநிதி மாறன், கனிமொழி, அன்புமணி ராமதாஸ், ராகுல் காந்தி மற்றும் பலரை பார்த்து வளர்ந்த சமூகம் தானே ! அதனால் நிர்வாக திறன் படிப்படியாக தான் வரும் என்று நம்ப மாட்டார்கள். )

லக்கி லுக், அ.தி.மு.க மற்றும் பி ஜே பி கட்சியை சார்ந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்களே என்ற வருத்தத்தில் எழுதினார்.

நீங்கள் ?

Suresh Kumar April 22, 2009 3:37 PM  

நல்லா காமெடியா எழுதியிருக்கீங்க தல

Anonymous,  April 22, 2009 3:37 PM  

appdina enna pannalam nu solreengA?Already irukura Politicians ku alternative vendaam nu solreengala? Read his statements from rediff. Arasiyal vaathi aagurathukku IIM qualification nu sollala. But he has faced all sorts of people and doing a good public relationship. Kastam thaan, but still unless there is a attempt, our situation will not improve

ஜெட்லி April 22, 2009 3:40 PM  

//நாங்களும் வர மாட்டோம் வந்தவனை
நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்//
சரியா சொன்னிங்க சுரேஷ்... நான் உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

முரளிகண்ணன் April 22, 2009 4:16 PM  

நல்ல கோணம் அதிஷா.

வால்பையன் April 22, 2009 4:28 PM  

அண்ணே எனக்கு அரசியலில் ஆனா, ஆவன்னாவே தெரியாது!

இது அரசியல் பதிவுன்னு அப்பவே சொல்லியிருந்தா, கால்ல்ல விழுந்தாவது ஒரு நம்பர புடிச்சி கொடுத்துருப்பேன்!

எனக்கு தெரிஞ்ச கைபுள்ள எங்க ஏரியா(ஈரோடு)வுல நிக்கிற இளங்கோவன் தான், ஏன்னா அவரு தான் கை சின்னத்துல நிக்கிறாரு!

இனி கை சின்னத்தில் நிற்பவர்களை கைபுள்ள என கிண்டல் செய்பவர்கள் கண்டிப்பாக, சத்தியமாக, நிச்சியமாக எனக்கு ராயல்டி தர வேண்டியதில்லை,

நல்லா பாருங்க தர வேண்டியதில்லை.

வுடு ஜூட்!

அக்னி பார்வை April 22, 2009 4:30 PM  

உங்கள் அப்படியே வழிமொழிகிறேன்...

ஷங்கர் Shankar April 22, 2009 4:37 PM  

/ நாங்களும் வர மாட்டோம் வந்தவனை
நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம் /

சும்மா வா சொன்னாங்க பெரியவங்க..
தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்.

நன்று உரைத்தீர்கள் சுரேஷ்!

Anonymous,  April 22, 2009 5:24 PM  

Hi,
A different take on things and I agree with your points.
But I feel you may quite a bit of backlash since you have been, to use a cliche, "Politically Incorrect".

narsim April 22, 2009 5:48 PM  

என்ன சொல்ல வர்றீங்க அதிஷா?

OSAI Chella April 22, 2009 5:50 PM  

அதிசா வின் கருத்தில் உடன்படுகிறேன். இப்படித்தான் லோக்பரித்ரான் என்ற அமைப்பு ஐ.ஐ.டி சர்டிபிகேட் ஓடு வந்து காணாமல் போனது. என்னைப்பொறுத்தவரை சரத் அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியலுக்கு வந்து என்னத்தை சாதிக்கப்போகிறார். அனேகமாக மீடியா தாக்கத்தை ஏற்படுத்தினால் போதும் என்று நினைக்கலாம்! மற்றபடி பொதுநலப் பணியாற்ற 5 ஆம் க்ளாஸ் படித்திருந்தால் கூட போதும்! இவர்கூட ஏழைகளுக்கு 25 பைசாவில் எப்படி இட்லி கொடுப்பது என்று பிரகலாந் ன் பாட்டம் ஒஆf தி பிரமிட் முறைப்படி செயல்பட்டிருக்கலாமோ என்னமோ! அதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது! இதைப்பற்றி ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை! நான்கு வருடம் இஞினியரிங் படித்துவிட்டு இரண்டுவருடம் சம்பந்தமில்லாமல் நிர்வாகவியல் படித்து வெட்டி பந்தாவிடுவதற்கு இந்த ஐ.ஐ.எம் கள் மற்றும் மீடியாக்கள் தான் காரணம். உண்மையை சொன்னால் எம்டி படிக்கும் டாக்டர் எம்பி பி எஸ் 5 அரை ஆண்டுகள் படித்துவிட்டுத்தானே போகிறார். அவர் என்ன பி.எஸ்.ஸி அக்ரி படித்துவிட்டா போகிறார். என்னை பொறுத்தவரை புரொடக்சன் மேனேஜ்மென் ட் தவிர மற்ற படிப்புகளுக்கு பி,இ பி,டெக் சேர்த்துக்கொள்ளப்படுவதை தவிர்க்க வேண்டும்!

Anonymous,  April 22, 2009 5:55 PM  

There is a guy who used to live life with prostitutes, he has always seen only these girls in his life, suddenly one day he got married and he started suspecting his wife too but she is a good family girl.

Please tell me people

1. Is this girl's mistake ?
2. Is this that guy's ugly view who always see all as prostitutes
3. Or is this the guys surrounding.

Mr. Small Boy Encourage him, he is far far better than other current politicians. Just for the sake of telling or posting or just thinking i am thinking in a different view ...

dont post like this ..

Views are always good but dont conclude whether he can do it or not.

Why cant u ask the same questions to him and post your views after that.

Just by teasing others you are spoiling your image.

You are guy who will support nasty current politicians and never encourage or allow other youngsters, if you feel there are so many youngsters contesting please tell about them to us, we will vote.

He is far better than you in character,views, thinking, and finally studies

Studies is not the only reason we like him, but the character he showed, he is crorepati who lives in a hut now, can you tell me where you will live ?

He at this age started a own company rejecting offers, refer rediff article, you dont have guts to do like that, working like other normal person and posting some snuffy posts

Compare you with him first

Do you think Jesus Christ or Mohamed or Krishna will come to candidate in TN

He is also a young, we never project his IIM or poverty or his background

We support him due to his character, the confidence, his management skills

His manifesto has basic things which we need. Do you want to tell we will give you tv and you can watch serial

Or only if we tell you everything then you will vote

If you have any dobuts send feedback in his website, he will answer

A MP candidate who is accessible by all, Can you speak to DMK candidate

You Athisa small boy. Dont think yourself as a famous blogger and write some snuffy posts...

Treat every one equal

Go to desibaba they have hits more than you, just posting about heroines and writing some dirty posts or opposing rajini and other actors even a fool can get hits.
You guys do form a blogger network and apart from few conscious good persons everyone say everything as good.. what ever you write is good.

i am not a blogger, i read blogs now and then, my friend referred your post, everyone of us are unhappy

Please change ur attitude baba..

Keep doing good things to society

All the best.
Karthik

Kanna April 22, 2009 5:56 PM  

//ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம்//

அவர் ஏன் அரசியலுக்கு வர கூடாது?

எனக்கு புரியவில்லை விளக்கமுடியுமா?

அவர் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஏன் காண்டு?

அவரு வாராரு... முடிஞ்சா கிழிக்குறாரு..

அவர் ஜெயிக்குறாறா... இல்லை டெபாசிட் போகுதா உங்களுக்கு ஏன் கவலை.....

கைபுள்ள னு சொல்றதெல்லாம் தரம் தாழ்ந்த வார்த்தை...

Anonymous,  April 22, 2009 6:07 PM  

/ நாங்களும் வர மாட்டோம் வந்தவனை
நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம் /

ஏம்பா நீ என்ன பெரிசா கழட்டி விட்டாய்னு அலுத்துக்கிற. சும்மா மொக்கப் பதிவு எழுதுற, விமர்சனம்னு அப்பப்ப வாந்தி எடுக்கிற, அரசியலுக்கு நடிகன் வரக் கூடாது, படித்தவன் வரக் கூடாது என்ன சொல்ல வர்ற ரெளடிகள் மட்டும் தான் வரனும்கிறாயா ?

நீ சொன்ன மாதிரி ஒரு குமஸ்தா அல்லது நீ எலக்செனில் நின்றிருந்தால் இத்தனை விளம்பரம் கிடத்திருக்காது.

தகுதி என்று ஒன்னு இருக்கே அதை எப்பப்பா புரிஞ்சுக்கப் போறீங்க. உயர உயர பறந்தாலும் நீ பருந்து ஆக முடியாது தம்பி.

இந்த மாதிரி யாருக்கும் பிரயோசனமில்லாத பதிவுகளில் உன் வீரத்தைக் காமிக்கலாம். அது தவிர உன்னால இந்த நாட்டுக்கு வேற எந்த உபத்திரவமும் பண்ணமுடியாது.

பதிவுலப் பதர்களை இகழ்பவன்.

Anonymous,  April 22, 2009 6:32 PM  

//அதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது! இதைப்பற்றி ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை! நான்கு வருடம் இஞினியரிங் படித்துவிட்டு இரண்டுவருடம் சம்பந்தமில்லாமல் நிர்வாகவியல் படித்து வெட்டி பந்தாவிடுவதற்கு இந்த ஐ.ஐ.எம் கள் மற்றும் மீடியாக்கள் தான் காரணம்.//

And then finding a job as a finance analyst at an Investment bank in Wall St.

UNGALODU NAAN April 22, 2009 6:38 PM  

உங்களுடைய கருத்தில் எனக்கும் உடன்பாதில்லை
தேவர் மகன் படத்தில் வரும் ஒரு வசனம் விதை நான் போட்டது

அது மாதிரி தான் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கணும்
அப்பதான் நிறைய பேர் முயற்சி செய்வார்கள் அதை விட்டுட்டு
தொடங்கும் போதே முட்டுக்கட்டை இடவேன்டமே



ஒரு சரத்பாபு இத்தனை பேருக்கு தன்னை அடையாளம் காட்டி இருக்கிறார்
இதுவே ஒரு சாதனை
புதிய முயற்சிகளை உக்குவிப்போம்
வரவேற்போம்

Anonymous,  April 22, 2009 6:41 PM  

//ஏம்பா நீ என்ன பெரிசா கழட்டி விட்டாய்னு அலுத்துக்கிற. சும்மா மொக்கப் பதிவு எழுதுற, விமர்சனம்னு அப்பப்ப வாந்தி எடுக்கிற, அரசியலுக்கு நடிகன் வரக் கூடாது, படித்தவன் வரக் கூடாது என்ன சொல்ல வர்ற ரெளடிகள் மட்டும் தான் வரனும்கிறாயா ?//

அண்ணே உண்மையை அதுவும் அதிஷாவின் பதிவுகள பத்தி இப்படி எல்லம் சொல்லக்கூடாது

//நீ சொன்ன மாதிரி ஒரு குமஸ்தா அல்லது நீ எலக்செனில் நின்றிருந்தால் இத்தனை விளம்பரம் கிடத்திருக்காது.//

அவரு எல்லாம் நிண்ணா ஹீ ஹீ
அவரு கைப்புள்ளைனு கூட சொல்ல மாட்டாங்க வேற சொல்லுவாங்க

//தகுதி என்று ஒன்னு இருக்கே அதை எப்பப்பா புரிஞ்சுக்கப் போறீங்க. உயர உயர பறந்தாலும் நீ பருந்து ஆக முடியாது தம்பி.//

அவரு உயர எல்லாம் பறக்கவே இல்லை நீங்க வேற

//இந்த மாதிரி யாருக்கும் பிரயோசனமில்லாத பதிவுகளில் உன் வீரத்தைக் காமிக்கலாம். அது தவிர உன்னால இந்த நாட்டுக்கு வேற எந்த உபத்திரவமும் பண்ணமுடியாது.//

அவரு சிங்கம் ????? அவரு மொக்கையா அதிஷாவின் பதிவுகள் அதற்க்கு சூப்பர் சொல்லும் ஜால்றாக்கள் இருக்கும் வரை எங்க சிங்கத்தை அண்ணனை ஒண்ணும் பண்ண முடியாது

//பதிவுலப் பதர்களை இகழ்பவன். //

பதர்க்கூட இல்லை அவர்

Anonymous,  April 22, 2009 6:44 PM  

சரத்பாபு எனும் மீடியாவின் 'கைப்புள்ள' பற்றிய ஒரு பதிவில் நான் வெளியிட்ட பின்னூட்டங்களில் முக்கியமான பகுதி
http://globen.wordpress.com/2009/04/14/sarathbabu/#comments

-----------------
படிப்புக்கும் நல்ல அரசியலுக்கும் என்ன தொடர்பு. ப.சிதம்பரம், சு.சாமி, அருன் ஷோரி, அருன் ஜெய்ட்லி, மன் மோகன் சிங், மாதவராவ் சிந்தியா போன்ற மெத்தப் படித்தவர்கள்தானே முக்கியமான பல பொருப்புக்களில் இருந்து கொண்டு இத்தனை காலமாக நாட்டை குட்டிச்சுவராக்கி வந்திருக்கின்றனர்
----------------------------
14 தேர்தலாய் இது போன்ற படித்த, இளைஞர் பில்டப்புகள் கொடுக்கப்படாத முறை எது? போபர்ஸ் புகழ் ராஜீவ் பிரதமாராய் இருந்த நாடல்லவா இது…
----------------------------
சரத்பாபு மோசமானவர் என்று சொல்லவில்லை அவர் புகழை தான்டி ஏதும் சிந்தித்திருக்க முடியாது. மற்றபடி அவர் ஜெயிக்கப்போவதுமில்லை ஜெயித்துவந்தாலும் அவரால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.. அது அவர் குற்றமல்ல நமது அரசியல் முறையில் அதற்கான வாய்புகளே இல்லை.

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத் என பல நகரங்களில் இது போன்ற தொழிலதிபர்கள், அறிவு ஜீவிகள் தேர்துலுக்கு நிற்பது ஏதோ ஒரு பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி சேனலின் வேலையென்றே தோன்றுகிறது. இது போன்ற செய்திகளை வைத்து தானே டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி போன்ற ஊடகங்கள் பிழைக்கின்றன.
--------------------------
சரத்பாபு புதியதாய் நாலு ஹோட்டல் திறக்கட்டும் பாராட்டுகிறேன், ஆனால் நல்லது செய்ய முடியும் என்று தேர்தலில் நிற்பது என்பது தன்னைத்தானே ஏமாற்றிக்கொளவது. மக்களையும் மறைமுகமாக ஏமாற்றுவது (அடுத்த தேர்தலில் நின்றால் நேரடியாக) அவருக்காக பிரச்சாரம் செய்வதும் அப்படியே…
அவரை நான் தூற்றவே இல்லை..

மீண்டும் சொல்கிறேன் ஒரு எம்.பி ஆகி அவரால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.. அதற்கு இவ்வளவு பில்டப்புகள் தேவையும் இல்லை.

----------------------------
ஒரு எம்.பி ஆவதினால் அவரிடத்தில் அவருக்கு எந்த ‘பவரும்’ வராது, சட்டம் இயற்றும், அதனை அங்கிகரிக்கும் உரிமை மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு உண்டு, அதை அமல் செய்யும் அதிகாரம் ”அதிகார வர்க்கத்திடம்” மட்டுமே உள்ளது. அந்த அதிகார வர்க்கம் இவரது கட்டுப்பாட்டில் இல்லை, அது சுயேச்சையாக இயங்குகிறது. அதற்கு மக்களிடம் எந்த தொடர்பும் இல்லை, மக்களுக்கு கட்டுப்படவும் இல்லை. மன்மோகன் சிங் செயல் பாடு சரியில்லை என்றால் இந்த தேர்தலில் தோர்கடித்து விடலாம் ஆனால் உங்கள் பகுதி கலெக்டர் செயல்பாடு சரியில்லையென்றால், … ஒன்றும் செய்ய முடியாது.. இதுதான் யதார்த்தம். இந்த இரட்டை ஆட்சி முறையில் எவ்வளவுதான் நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்தாலும் ஒன்று ”ஜோதியில்” கலந்து விட வேண்டும் இல்லை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடி வந்துவிட வேண்டும். பல படித்த லட்சியவாத இளைஞர்களை இந்திய ”ஜனநாயகம்” தின்று செரித்துள்ளது.
இன்றைய பெருந்தலைவர்களும் ஒரு காலத்தில் அரசியல் புதுமுகங்கள்தான்..! புதியவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் வாரிசு அரசியல் ஒழியாது… புதிய வாரிசுகளை உறுவாக்கவே அது உதவும்
---------------------------
இந்த ஊடகங்களுக்கு பரபரப்பு (சென்சேஷன்-ஸ்கூப்) தான் தேவையே தவிர உண்மையான செய்தியை வெளியிடும் எண்ணமெல்லாம் இல்லை. ஒரு அமனுக்காக ஒதுக்கப்பட்ட மீடியா ஸ்பேஸ் மற்றும் டைம் ஐ விட சிங்களப்ப படையினரால் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்படும் ஈழத்தமிழர் அவலத்திற்கும், ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விதர்பா பகுதி செய்திகளுக்கு இவை கொடுத்த அளவு மிக மிக குறைவு. காரணம் படித்த நடுத்தர/மேல்தட்டு மக்களிடம் இந்த செய்திகள் போனியாகாது… அமன்/சரத்பாபு/ஜெட் ஏர்வேஸ் போன்ற செய்திகள்தான் இவர்களுடைய அரை உண்மை வடிவத்தில் சொல்ல ஏதுவானவை…
------------------------------
சரி இது இந்த பதிவுல இங்கிலிபீசுல புண்ணூட்டம் போடறவுகளுக்காவ...

If you are elected

As a member of parliament you have no rights but to pass the laws. (That too as an independent…tough.) The enforcement of the Law lies with the Beaurocrats, who will never listen to you… ’cause they know your span is 5 years and YOU are Dependant on THEM for your survival and not Vice Versa. Of course this is in condition that you become a minister…which you will not. At the most this election will get you vantage media space and publicity for you. Good luck with your business.

சரத்பாபு சைட்டுல போட்டேன் இன்னமும் பதில் இல்ல
-----------------------------

கம்பீட்டர் முன்னால உக்காந்து பதிவு போடற மாதிரி இல்ல ஓட்டுப்போடுறது அதுக்கு போய் 'லோக்கல்' பீபிளோட க்யூவுல நிக்கனும் அதுவும் இந்த வெய்யில்ல... இதுவரைக்கும் இந்த காகித புலிகள் கொண்டாடும் பெரிய்ய்ய்ய மனுசங்க எவனும் வந்து ஓட்டு போட்டதே இல்ல... பாக்கதான போறோம் எத்தன பதிவர்களும் புண்னூட்டர்களும் ஓட்டு போடப்போறாங்கன்னு... :-)
0000000000000000000000

யப்பா SURESHu என் சக்கரக்கட்டி 'பிகர் மடிப்பது எப்படி'ங்கர மாதிரியான சமூக பயன் வாய்ந்த கட்டுரைகளை வெளியிடும் உன் தளத்துல சரத்துபாப்புவுக்கு வெளம்பரம் கண கச்சிதமா பொருந்துது...நடத்து நடத்து

மணிகண்டன் April 22, 2009 7:05 PM  

***
அதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது!
***

ஓசை செல்லா,

இந்த பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? என்னை பொறுத்தவரை, மானேஜ்மண்ட படித்துவிட்டு இன்ஜினியரிங் வேலை செய்தால் பெரிய கேனத்தனம் / பிரச்னையும் ஆகலாம். Vice Versa, அந்த அளவிற்கு முட்டாள்தனம் அல்ல. சௌத்ரி என்ன எழுதினார் என்று தெரியாது. ஆனால் எனக்கு வாய்த்த பல நல்ல மேனேஜர்கள் நீங்கள் கூறிய வகையறாவை சேர்ந்தவர்கள் தான்.

Suresh April 22, 2009 7:07 PM  

@ அனானி


//யப்பா SURESHu என் சக்கரக்கட்டி 'பிகர் மடிப்பது எப்படி'ங்கர மாதிரியான சமூக பயன் வாய்ந்த கட்டுரைகளை வெளியிடும் உன் தளத்துல சரத்துபாப்புவுக்கு வெளம்பரம் கண கச்சிதமா பொருந்துது...நடத்து நடத்து //

நான் கடவுள் இல்லை மனுஷன் நல்ல கருத்துகளும் இருக்கும் ஜாலியாவும் இருக்கும் சும்மா நானும் உன்னை மாதிரி தான் மக்கா

சும்மா சமுகசிந்தனை நான் கடவுள் என்று நல்லவனாய் நடிக்க முடியாது

எனக்கும் நல்லதும் செய்யவும் தெரியும் மொக்கையும் தெரியும்

ஒரு கருத்தை உங்க பெயரல போட முடியாம அனானியா போட்திங்க நன்பா

அரவிந்தன் April 22, 2009 7:24 PM  

எம்.பி.ஏ படித்தவர் எக்ஸிகியுட்டீவ் ஆக எப்படி நினைப்பார் மேனேஜர்-ஆகத்தான் நினைப்பார்

அதனால்தான் நேரிடையாக எம்.பி பதிவிக்கு போட்டியிடுகிறார்..அவர போய் போயும் போயும் பஞ்சாயத்து தேர்தல நிக்க சொன்னா எப்படி அதிஷா..

எம்.பி.ஏ எம்.பி.ஏ ஞாபகம் இருக்கட்டும்

அரவிந்தன் April 22, 2009 7:27 PM  

எதோ ஒரு பேட்டியில் ”தமிழ் வழி பாடத்திட்டதில் படித்திருந்தால் தான் ஒரு தொழிலாளியாக போயிருப்பேன் ஆங்கில பாடத்திட்டதில் படித்தால்மட்டும் முதலாளியாக மாறியதாக சொன்னாராம்..

என்ன கொடும சரவணன்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 7:27 PM  

அட ஃப்ரீயா விடுங்க தல.. சரத் பாபு போன்ற படித்த?!( அரசியலுக்கு வர IIM படிப்பு தேவை இல்லை) இளைஞர்கள் வரது நல்ல விஷ்யம் தான். ஆனால் , நம்மாளுங்க பண்ற ஆர்ப்பாட்டம் ரம்பா ரம்பா ஓவர். ஏற்கனவே அசாம் கன பரிஷத் என்ற மாணவர்களின் கட்சியின் கேவலங்களை பார்த்தாகிவிட்டது. இன்று அந்த கட்சி மிக கேவலமான நிலையில் இருக்கு. அதன் தலைவர்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அடித்துக் கொண்டது அகில இந்திய கூத்து. சரத்பாபுவை வரவேற்போம். ஆனால் அவரை புனித பிம்பமாக சித்தரிப்பதை ஒத்துக் கொள்ள முடியாது. வழக்கமான ஒரு சராசரி அரசியல்வாதி சொல்ற மாதிரி தான் சொல்றார். ஜெயிச்சா அது பண்ணுவேன்.. இது பண்ணுவேன் என்று. என்ன செய்தால் அது இதெல்லாம் செய்ய முடியும் என்று அவர் விளக்கியதாக தெரியவில்லை.

சேது சமுத்திர திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். வீராணம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் என அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்று கூடி முயற்சிப்பதற்கே ஆயிரம் முட்டுக் கட்டைகள். ஒரு சுயேட்சை என்ன செய்துவிட முடியும்?.

எங்கள் பிரதிநிதி இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற அளவுகோளுக்காக இவரை ஆதரிக்கலாமே தவிர, இவரால் பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும் என ஆதரிக்க முடியாது. அது நடவாத காரியமே.

மெத்தப் படித்திருபப்தும், பெரிய இட்லிகடை நடத்துவதும் , குடிசையில் பிறந்ததுமே மட்டுமே மெச்சத் தகுத்த தகுதிகள் அல்ல.

IIM ஆட்களின் கொள்கைகளை பாருங்க: http://jago.in/

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 7:31 PM  

//யாரும் ஆட்டு மந்தைபோல் போக வில்லை அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு பின் அவரின் தன்னம்பிக்கை பார்த்தே ஆதரவு..//

சுரேஷ், அப்ப்டி என்ன கேள்விகள் அவரிடம் கேட்டிர்கள்? அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்.?

இது கொஞ்சம் புதுசா இருக்கு. அவரை ஆதரிக்க அதில் எதும் காரணம் கிடைக்குமா என தெரிந்துக் கொள்ளவே இந்தக் கேள்விகள்.

செந்தழல் ரவி April 22, 2009 7:45 PM  

//நாங்களும் வர மாட்டோம் வந்தவனை
நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்//

சரியா சொன்னிங்க சுரேஷ்... நான் உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.


//சும்மா வா சொன்னாங்க பெரியவங்க..
தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்.

நன்று உரைத்தீர்கள் சுரேஷ்! ///

திரு வெல்லம் அவர்களே

அடுத்த பின்னூட்டத்தில்,

சிறப்பாக விளம்பினீர்கள் சுரேஷ். என்று சொன்னால் உண்மையிலேயே அது நீங்க போட்டமாதிரியே இருக்காது. நல்லா கொண்டைய மறைக்கலாம். ஆனாலும் இம்புட்டு இண்டெலிஜெண்டலியா இருக்கபடாது ஆமாம்....

செந்தழல் ரவி April 22, 2009 7:47 PM  

//இப்படித்தான் லோக்பரித்ரான் என்ற அமைப்பு ஐ.ஐ.டி சர்டிபிகேட் ஓடு வந்து காணாமல் போனது.//

லோக் தரித்திரான் ஒரு ஆர் எஸ் எஸ் கயவாளிக்கூட்ட இனிஷியேட்டிவ் என்று தெரியாதா ???

செந்தழல் ரவி April 22, 2009 7:48 PM  

///உங்களுடைய கருத்தில் எனக்கும் உடன்பாதில்லை
தேவர் மகன் படத்தில் வரும் ஒரு வசனம் விதை நான் போட்டது

அது மாதிரி தான் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கணும்
அப்பதான் நிறைய பேர் முயற்சி செய்வார்கள் அதை விட்டுட்டு
தொடங்கும் போதே முட்டுக்கட்டை இடவேன்டமே



ஒரு சரத்பாபு இத்தனை பேருக்கு தன்னை அடையாளம் காட்டி இருக்கிறார்
இதுவே ஒரு சாதனை
புதிய முயற்சிகளை உக்குவிப்போம்
வரவேற்போம்///

இதுல இருக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் வெச்சு இது யார்னு நான் கண்டுபிடிக்கவேயில்லை...

செந்தழல் ரவி April 22, 2009 7:50 PM  

...ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை


அண்ணே செளத்திரிங்கறவரு விக்ரமனை வெச்சு லாலாலான்னு பாட்டு போட்டு படம் எடுப்பாரே அந்த புரொடியூசரா ?

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 7:51 PM  

ரவி, வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என பேச வேண்டாம். ஆர் எஸ் எஸ் என்பது ஆன்மிக வழியில் மக்களை நல்வழிப் படுத்தும் ஒரு அமைப்பு. அதில் என்ன கயவாளித் தனம் கண்டீர்கள்?

செந்தழல் ரவி April 22, 2009 7:56 PM  

தமிழ்நாட்ல எலக்சன்ல நிக்குற பயபுள்ள ஏன் இங்கிலிபீசுல வெப் சைட் வெச்சிகிது ??

செந்தழல் ரவி April 22, 2009 7:56 PM  

வருசத்துக்கு 7 கோடு டர்ண் ஓவர் செய்யற பயபுள்ள ஏன் ஆத்தாக்கிழவிய குடிசையிலேயே வெச்சுகீது ? ஒரு அப்பாட்டுமெண்டு வாங்கித்தரலாமே ?

மணிகண்டன் April 22, 2009 7:57 PM  

****
சிறப்பாக விளம்பினீர்கள் சுரேஷ். என்று சொன்னால் உண்மையிலேயே அது நீங்க போட்டமாதிரியே இருக்காது. நல்லா கொண்டைய மறைக்கலாம். ஆனாலும் இம்புட்டு இண்டெலிஜெண்டலியா இருக்கபடாது ஆமாம்....
****
ஹா ஹா ஹா.

இதுக்காகவே நான் IP Tracking பண்றது இல்ல. பண்ணினா, இந்த சஸ்பென்ஸ் எல்லாம் இருக்காது.

பழம் தின்னு கொட்டை போட்டவருக்கும், மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் ரவியாரே !

செந்தழல் ரவி April 22, 2009 7:57 PM  

மெட்ராசு மே மாச வெயில்ல இந்த பயபுள்ள ஏன் கோட்டு சூட்டுல அலயுது ? புழுங்கலையா ? இல்லை கார்ல ஏசி கீதா ?

செந்தழல் ரவி April 22, 2009 7:57 PM  

அம்புட்டுத்தேன்.

மணிகண்டன் April 22, 2009 8:02 PM  

***
ஆனால் , நம்மாளுங்க பண்ற ஆர்ப்பாட்டம் ரம்பா ரம்பா ஓவர்.
***

சஞ்சய் :-

"காங்கிரசில் இருப்பதே பெருமை..காங்கிரசை வளர்ப்பதே கடமை"

இதை விட ஓவரா ?

கோச்சிக்காதீங்க.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நியாயம் !

ஹே ராம் படத்துல ஒரு வசனம் வரும். "ஓநாயா இருந்து பாரு. வேட்டைக்குரிய நியாயம் புரியும்ன்னு" நச் வசனம்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:05 PM  

//ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை//

அரிந்தம் சவுத்ரியை அவமானப் படுத்துவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது ரவியாரே( மாம்ஸ்.. இது நல்லா இருக்குல்ல.. எலெக்‌ஷன் டைம்ல :) )

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:09 PM  

//செந்தழல் ரவி said...

வருசத்துக்கு 7 கோடு டர்ண் ஓவர் செய்யற பயபுள்ள ஏன் ஆத்தாக்கிழவிய குடிசையிலேயே வெச்சுகீது ? ஒரு அப்பாட்டுமெண்டு வாங்கித்தரலாமே ?//

என்னய்யா கொடுமை இது? :(

இவர் ஏசி ரூம்ல இருந்தாலும் குடும்பத்துக்கு ஒருத்தர் குடிசைல இருந்தாத் தான்யா குடிசைவால் மக்களோட அருமை புரியும்.

நேர்மையா சம்பாதிச்ச காசை வைத்து சவுகரியமா வாழ முடியாதவர் கிட்ட ஒரு தொகுதியை ஒப்படைச்சா அவ்ளோ தான். சுச்சி பேங்குல கீர 72 லச்சுமி கோடி 100 லச்சிமி கோடி ஆவும்.

தானும் அனுபவிக்க மாட்டான். அடுத்தவனுக்கும் ஒன்னும் பண்ண மாட்டான். அவங்கம்மா கிட்ட தனியா போய் பேசிப் பாருங்கய்யா.. கொட்டித் தீர்த்துடுவாங்க...:(

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:13 PM  

//"காங்கிரசில் இருப்பதே பெருமை..காங்கிரசை வளர்ப்பதே கடமை"

இதை விட ஓவரா ? //

மணி சார். அந்த ஓநாய் உதாரணத்துக்கு நன்றி. அதனால தான் நான் அப்டி ஓவரா பண்றேன். நான் அந்த இயக்கத்தின் உறுப்பினர். மனசாட்சியே இல்லாம பல சமயம் வக்காலத்து வாங்குவேன்.
நாய் வேஷம் போட்டா குறைக்கணுமே சார்.

ஆனா இந்த சரத்பாபுவை ஆதரிக்கிறவங்க அவர் கட்சியில எதும் உறுப்பினர்களா? அப்டி இருந்தா யாரு கேள்வி கேக்கப் போறாங்க.

2011ல் ஆட்சியை புடிப்போம்னு சொல்ற ராமதாஸ், விசயகாந்த், கார்த்திக், சரத் குமாரை எல்லாம் குறையா சொல்றோம். :)

செந்தழல் ரவி April 22, 2009 8:15 PM  

***
ஆனால் , நம்மாளுங்க பண்ற ஆர்ப்பாட்டம் ரம்பா ரம்பா ஓவர்


ரம்பா டிஎம்கேவுல இருக்கு. பாபிலோனா தான் ஏடிஎம்கேவுல இருக்கு.

செந்தழல் ரவி April 22, 2009 8:16 PM  

ஆது ஜிவா அப்பா சவுத்திரி இல்லையா ??

யாருய்யா அந்த சவுத்திரி ? வெளக்காமா சொல்லுங்க, நாங்க எல்லாம் வெளங்காமட்டைங்க.

மாமா அன்னைக்கு பக்கோடாவ ராகியில செஞ்சிருந்தானுங்களே நியாபகம் கீதா ?

செந்தழல் ரவி April 22, 2009 8:17 PM  

2011ல் ஆட்சியை புடிப்போம்னு சொல்ற ராமதாஸ், விசயகாந்த், கார்த்திக், சரத் குமாரை எல்லாம் குறையா சொல்றோம். :)...

விஜய டி ஆரை பற்றி கொஞ்சமாவது சக்கரை இருக்கிறதா ?? ச்சே அக்கறை இருக்கிறதா ??

செந்தழல் ரவி April 22, 2009 8:19 PM  

SanJai: அங்க தான் மாம்ஸ் இருக்கேன்
Sent at 4:44 PM on Wednesday
me: yes lets play
long time no gummi

செந்தழல் ரவி April 22, 2009 8:19 PM  

இன்னும் இந்த கம்பெனி கமெண்ட் மாடரேசன் செய்யுது. ஹும்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:20 PM  

//மக்கா அவரிடம் உள்ள தைரியம் பல பேரிடம் இல்லை, வெட்டி வம்பு ரவுடி இல்லை அவர், அவர் படிப்பு மட்டுமே காரணம் இல்லை//

அண்ணன் அஞ்சா நெஞ்சனை விட தைரியசாலியா?

மணிகண்டன் April 22, 2009 8:21 PM  

***
ஆனா இந்த சரத்பாபுவை ஆதரிக்கிறவங்க அவர் கட்சியில எதும் உறுப்பினர்களா?
***

இது என்னங்க அநியாயமா இருக்கு ? கட்சியில உறுப்பினரா இருந்தா தான் ஆதரிக்கனும்ன்னு யாரு சட்டம் எழுதினது ? கட்சிக்கு தான் புனித பிம்பம் கொடுக்கணும்ன்னு யாரு சொன்னது ?

அவருக்கு புடிச்ச வேட்பாளர அவரு ஆதரிக்காரு. அதுக்கு அவர் கிட்ட காரணம் இருக்கு. அவர போட்டு இந்த தாளிப்பு தாளிக்கறீங்க !

மணிகண்டன் April 22, 2009 8:23 PM  

***
தானும் அனுபவிக்க மாட்டான். அடுத்தவனுக்கும் ஒன்னும் பண்ண மாட்டான். அவங்கம்மா கிட்ட தனியா போய் பேசிப் பாருங்கய்யா.. கொட்டித் தீர்த்துடுவாங்க...:(
***

சரத்பாபுவ கிண்டல் பண்றதா நினைச்சிகிட்டு காமராஜர கிண்டல் பண்றீங்க.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:23 PM  

//விஜய டி ஆரை பற்றி கொஞ்சமாவது சக்கரை இருக்கிறதா ?? ச்சே அக்கறை இருக்கிறதா ??//

அய்யகோ.. எப்படி விட்டேன்.. தமிழினத் த்லைவர் என்று சொன்னதற்காக கைகூப்பி வருத்தப் பட்ட தானைத் தலைவன் சன் டிவி அரட்டை அரங்கம்(அதிரும்) புகழ் டியாரை மறந்துவிட்டேனே.. :(

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:25 PM  

//இது என்னங்க அநியாயமா இருக்கு ? கட்சியில உறுப்பினரா இருந்தா தான் ஆதரிக்கனும்ன்னு யாரு சட்டம் எழுதினது ?//

செந்தழல் ரவியே.. உமக்கு கொஞ்சமாவது பருப்பிருக்கா சாரி பொறுப்பிருக்கா? இதை நான் சொல்லி எவ்வளவு நேரம் ஆய்டிச்சி. இன்னும் அந்த சட்டத்தை எழுதாம என்னய்ய செய்கிறீர். மணி சார் கோச்சிக்கிரார் இல்ல? :(

என்னாது? சட்டம் செய்ற கார்பெண்டர் லீவு போட்டுட்டாரா? :(

செந்தழல் ரவி April 22, 2009 8:26 PM  

அவருக்கு புடிச்ச வேட்பாளர அவரு ஆதரிக்காரு. அதுக்கு அவர் கிட்ட காரணம் இருக்கு. அவர போட்டு இந்த தாளிப்பு தாளிக்கறீங்க !


போன பதிவு தலைப்ப பார்த்து எலக்சன் முடிஞ்சுருச்சுன்னு நெனைச்சுட்டேன்யா

மணிகண்டன் April 22, 2009 8:26 PM  

***
//விஜய டி ஆரை பற்றி கொஞ்சமாவது சக்கரை இருக்கிறதா ?? ச்சே அக்கறை இருக்கிறதா ??//
***

எங்க ஊருல டி ஆர் கட்சி சார்பா மன்சூர் அலி கான் நிக்கறாரு ! லக்கிக்கு வாக்களிக்கரேன்னு வாக்குறுதி கொடுத்துட்டேன். இல்லாட்டி இவரு தான் என்னோட பேவரிட்டு.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:27 PM  

//அதிஷா: யோவ் நிறுத்துங்கய்யா முடியல கை வலிக்குது//

என்ன கொடுமைங்க இது? கும்மி அடிக்க தடையா? கூப்பிடுங்கள் வைகோவை.. இங்கே ரத்த 6 ஓடட்டும்.
( இந்த 6 போட்டா இறையாண்மை பிரச்சனை இருக்காதுன்னு ராம் ஜெத்மலானி தான் சொன்னாரு )

jackiesekar April 22, 2009 8:27 PM  

எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன்.//


நல்ல வரி அதிஷா பாராட்டுக்கள்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:28 PM  

//மாமா அன்னைக்கு பக்கோடாவ ராகியில செஞ்சிருந்தானுங்களே நியாபகம் கீதா ?

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதை ஏன் சாமி ஞாபகப் படுத்தறிங்க. நீங்களும் நானும் செல்லாவும் ராகிப் பக்கோடா சாப்ட சந்தோஷதோடயே ஆனைக்கட்டில ஒரு நட்சத்திர விடுதில சோறு சாப்டோமே சோறு.. அதைக் கூட மறக்க முடியாதே.. :(

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 22, 2009 8:31 PM  

//சரத்பாபுவ கிண்டல் பண்றதா நினைச்சிகிட்டு காமராஜர கிண்டல் பண்றீங்க. //

ஆமாமா.. சுச்சி பேங்குல அவரு தான் பதுக்கி வச்சிருக்காராம். ;)

( அண்ணே.. கும்மி அடிக்கிறோம்னு கோச்சிக்காதிங்க. நானும் ரவியும் சேர்ந்தா இப்டி தான்.. ஒரு வழிப் பண்ணிடுவோம். டரியள் ஆகாதிங்க :) )

Anonymous,  April 22, 2009 9:49 PM  

After reading all the above comments,I think Sarath has already created an Impact among the people, which I see it as positive change.It will definitely help him to establish himself.

செந்தழல் ரவி April 22, 2009 10:31 PM  

ஒரே ஒரு விஷயம் சீரியசாக சொல்கிறேன்...

அப்படியே சரத் பாபு ஜெயித்து பாராளுமன்றம் போனாலும் அங்கே அரைமணி நேரத்துக்கு மேல் உக்கார முடியாது...

அங்க வர்ர கெழட்டு பயலுக கண்டதை தின்னுப்புட்டு டர் புர்ருனு காத்து பிரியுவாய்ங்க...

விஷ வாயு மாஸ்க் போட்டுக்கினு உக்காரனும் அல்லது வெளிய ஓடியாரனும்...

ப்ளீஸ் வேண்டாம்...புத்தியா பொழைச்சுங்கங்க...நல்லா இருங்கடே

vinoth gowtham April 23, 2009 12:39 AM  

எளியவர்களை கிண்டல் பண்ணுவது எளிது..
நீங்களும் அந்த வகைய சேர்தவர்னு இப்ப தான் தெரியுது..
அவரு நின்ன நின்னுட்டு போறாரு..அவர கிழ்த்தரமா விமர்சித்து இவ்வளவு பெரிய பதிவு தேவையா..அதுவும் சொல்லி வாய்த்த மாதிரி நீங்களும் லக்கியும் ஒரே சமயத்தில் அப்படி என்ன அவர் மீது வெறுப்பு..அவரின் அம்மாவை கூட கிழ்தரமாக விமர்சித்து உள்ளிர்கள்..அதற்கு சப்போர்ட் பண்ணியும் நிறையா பெரிய மனிதர்கள் பேசி உள்ளார்கள்..உங்களின் குடும்பத்தை ஒருவர் இப்படி விமர்சனம் செய்தால் சும்மா இருப்பிர்கள..யாரு மீது இந்த கோபம்..

இதற்கு பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும்..வேறு வழி இல்லாமல் கம்மென்ட் போடுகிறேன்..

Muthu April 23, 2009 1:12 AM  

Adisha .its great u made me to
know little more about him....somehow ur helping him to become famous ...

ithu oru jana nayaga nadu annan rithis lam nikkuraru,
ivar nikka kudatha
avara vadivelu voda compare panni kaipulla nu solli romba famous akitinga ...

paravala unga support ipadiyachum kudukuringaley...thembu irukuravara ithey mathiri neraya eluthungu .....valthukal...nandri

JesusJoseph April 23, 2009 1:29 AM  

100% accepting your thought
i am sure that he will stop talking about politics and do his business for the next 5 years and then he will back agaoin

C April 23, 2009 1:35 AM  

அய்யா,
உங்கள் கருத்து ரொம்ப சரி.
அது போல LTTE க்கு ஆதரவு கொடுக்கும் எனது அருமை blogger களுக்கும் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்க.
நம்ம "super சுப்புராயன்" பிளாக்கர்கள் எழுத்தை படித்து விட்டு america, europe மற்றும் எல்லா நாட்டு தலைவர்களும் ஒன்று கூடி தீர்ப்பு கொடுப்பார்கள் (அதுவும் நமக்கு சாதகமாக) என்று நாம் நம்பி கொண்டு இருக்கிறோம்.
OC ல blog கொடுத்தால் சரத்பாபு விற்கும் ஆதரவு கொடுக்கலாம். மற்ற நாட்டு தீவிரவாத அமைப்புக்கும் ஆதரவு கொடுக்கலாம்.
Loose பசங்க :-)

திருப்பூண்டி April 23, 2009 1:42 AM  

அரசியல் ஒரு சாக்கடை அவர் விழுந்து விட்டார் (எனி வே) சரத் ன் தைரியம் பிடித்திற்க்கு
\\\\

Anonymous,  April 23, 2009 2:14 AM  

unaakku enayya kaandu? irukkira maththa arasiyalvaathikalai vida
Sarath Babu evvalavo mel. arasiyalukku thakuthinnu oru mannum thevaiyillai. unnoda blog konjam rasanaiya irundhadhu; ini padikkapovathu illai. bye, rama..

மக்குசாமி April 23, 2009 3:46 AM  

அதிஷாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. ஒரு வேளை அதை அதிஷா தெளிவாக கூறாமல் விட்டிருக்கலாம்.

என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

http://karuppuswamy.com/makkupress/2009/04/23/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/

மணிகண்டன் April 23, 2009 4:57 AM  

***
நானும் ரவியும் சேர்ந்தா இப்டி தான்.. ஒரு வழிப் பண்ணிடுவோம்
***

ராத்திரி முழுக்க தூக்கம் வராம கேவி கேவி அழுதுகிட்டு இருந்தேன். இனிமே இப்படி பண்ணாதீங்க. :( -

vrb. indialife April 23, 2009 5:40 AM  

ungalludiya padhivukku villambaram thadi kolvathu pola,avarudiya caterer job kku villambaram thadi kollattumaa avarudiyaa sontha salavil.vendraal arasiyal, veelnthaal vetri in job-l.

vel

Suresh April 23, 2009 5:51 AM  

//****
சிறப்பாக விளம்பினீர்கள் சுரேஷ். என்று சொன்னால் உண்மையிலேயே அது நீங்க போட்டமாதிரியே இருக்காது. நல்லா கொண்டைய மறைக்கலாம். ஆனாலும் இம்புட்டு இண்டெலிஜெண்டலியா இருக்கபடாது ஆமாம்....
****
ஹா ஹா ஹா. //

இந்த கருத்தை சொன்னது நல்ல ஷங்கரின் பக்கங்கள் அவர் என்னக்கு முன்னாடியே ரொம்ப நாளா பதிவு போடுபவர், தம்பிகளா நான் புதுசு

நான் என் கருத்தை என் பெயரிலே சொல்பவன்

யாரும் கொண்டைய மறைக்க தேவை இல்லை அதுவும் இது மாதிரி சப்ப மெட்டருக்கு ஹ ஹா

Suresh April 23, 2009 5:55 AM  

//சரத்பாபுவ கிண்டல் பண்றதா நினைச்சிகிட்டு காமராஜர கிண்டல் பண்றீங்க.//

:-) சிரித்தேன் காரணம் கலைஞர் சொல்லற மாதிரி நினைத்து பார்த்தது

ஹா ஹா

Suresh April 23, 2009 5:58 AM  

//இதுல இருக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் வெச்சு இது யார்னு நான் கண்டுபிடிக்கவேயில்லை...//

யாருயா அது உங்களோடு நானா , இது வரை நான் தான் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்யோட எழுதிட்டு இருந்தேன் நினைத்தேன் இன்னொரு நல்லவரா

Suresh April 23, 2009 6:07 AM  

நல்லவங்களா நாங்க டமில சன் டிவினு பெயர் வச்சோம், பெயர டமிழ் வச்சோம் ஆனா பேத்திகள் படிப்பது கான்வெண்டில்

அப்புறம் மிகப்பெரிய தகுதி தமிழ் தமிழ் என்று சொல்லி ஊர ஏமாத்தணும் சும்மா இங்கிலிஷ் பேண்டு சட்டை எல்லாம் போட்டு உண்மையா பொதுவா எப்படி இருப்பமோ அது மாதிரி இருந்தா வந்து விடுவார்கள் தமிழ் காவலர்கள்

எப்பா சாமி எல்லாரும் இது வ்ரை வந்த கட்சிகளுக்கு கூட இத்துனை கேள்வி கேட்டது இல்லை ஹ்ம்ம் ஒருத்தன் மாட்டினா போட்டு அவனை அட சரத்தை தான் சொல்லுறேன் இப்படி நீ நல்லவனா.. நீ பருப்பா, நீ என்ன பண்ணுவ, நீ யார கேட்டு படிச்ச, தமிழ் மீடியத்துல படிச்சு கஷ்டப்பட்டு முண்ணுக்கு வந்த நாங்க எல்லாம் இப்போ இங்கிலிஷ் மீடியத்துல எங்க குழ்ந்தைகள படிக்க வைக்கும் உண்மையை நீ எப்படி யா சொல்லலாம்

அமெரிக்க ஒடி போய் பதிவுல தமிழ வளர்க்கும் எங்கள மாதிரி நீயும் போய் அமெரிக்காவுல இருந்து பதிவுல பேச வேண்டியது தானே

சொல்லுயா

நீ என்ன எதுனு சொல்லமா உனக்கு வோட்டு போட நாங்க என்ன முட்டாளா இது வ்ரை அலசி ஆராய்ந்து திமுக அதிமுகக்கு போட்ட மாதிரி தான் போடுவோம்

ஜாதி தாண்டி மதம் தாண்டி உனக்கு போட நாங்க என்ன முட்டாளா?

சும்மா ஜாலியா கும்மி அடிப்போம் வெட்டியா வம்பு செய்வோம்
மொக்கை பதிவு போடுவோம்
இங்கிலிஷ் தெரிந்தாலும் நான் தமிழின் என்று வேஷம் போட்டு ஊர எமாத்துவோம் ஊருக்கு தான் தமிழ் வீட்டுக்கு குழந்தைக்கும் இங்கிலிபிஷ்

இப்போ எல்லாரும் ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
அதிஷா - இப்போவே கண்ணை கட்டுதே

Suresh April 23, 2009 6:13 AM  

//மெட்ராசு மே மாச வெயில்ல இந்த பயபுள்ள ஏன் கோட்டு சூட்டுல அலயுது ? புழுங்கலையா ? இல்லை கார்ல ஏசி கீதா ?//

மச்சி நீ கோட்டு சூட்டோட ஹ்ம்மா போஸ் கொடுக்கிற அது எப்போ எடுத்த போட்டோ அவரு கிட்ட சொல்லிட்டே எல்லாரும் முட்டா பசங்க இன்னும் சினிமாவ விட்டு வெளிய வரல அதலால் ஆயாவோட ஒரு எம்ஜியார் மாதிரி போஸ் கொடுங்கனு

ஹ்ம்ம் எப்பா சாமி நடிச்சா தான் காலமா உன்னை மாதிரி தான் அவரும் என்றோ எடுத்த கோட் சூட்டோட போட்டோ போட்டுடாங்க வெப்சைடில் ஆமா அவரு குடிசையில் அவங்க அம்மாவோட பள்ளி குழந்தையோட எடுத்த போட்டோ பார்க்கலையா மச்சான்

உன்னை மாதிரி பால்வடியும் முகத்துடன் ஒரு கோட் சூட் போஸ் கொடுத்து இருந்தா விட்டு இருப்ப போல ;)

Suresh April 23, 2009 6:16 AM  

//சுரேஷ், அப்ப்டி என்ன கேள்விகள் அவரிடம் கேட்டிர்கள்? அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்.?

இது கொஞ்சம் புதுசா இருக்கு. அவரை ஆதரிக்க அதில் எதும் காரணம் கிடைக்குமா என தெரிந்துக் கொள்ளவே இந்தக் கேள்விகள்.//

கண்டிப்பா Sanjay
50வது பதிவில் இருக்கும்...

நம்ம திமுக அதிமுக கேள்வி கேட்டு வோட்டு போட்டதை விட சின்ன கேள்விகள் தான் :-)ரொம்ப பெரிசா எல்லாம் கேட்கல ஏழைக்கு என்ன பண்ணுவிங்க .. அதுவும் ஒரு தனி எம்பியா போன்ற கேள்விகள்

Suresh April 23, 2009 6:19 AM  

இன்னும் இந்த கம்பெனி கமெண்ட் மாடரேசன் செய்யுது. ஹும்.

ஹ ஹா

அப்புறாம் டிரர் டிஆர் பத்தி எதுக்கு எழுதனும் அத விட காமெடியா எழுத நம்ம பதிவர்கள் இருக்கும் போது

Suresh April 23, 2009 6:20 AM  

//அவர போட்டு இந்த தாளிப்பு தாளிக்கறீங்க !//

மச்சான் இது எல்லாம் சும்மா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சப்ப மெட்டர் ;) இன்னும் தாளிக்கவே இல்லை பா ;)

Suresh April 23, 2009 6:25 AM  

// Sridhar Narayanan said...

திடீர்னு சரத்பாபு ஆதரவு அலை வீசற மாதிரியும் அதனால பெரிய தவறு நிகழ்ந்துவிடப் போற மாதிரியும் வேகவேகமா பதிவு போட்டிருந்ததினால கேட்டேன்.

வலையுலகில் 100 பேரு பதிவு போட்டா மொத்தம் 500 ஓட்டுக்கூட தேறாது. கட்சி, ஜாதி, மதம் எல்லாம் தாண்டி யாரும் கண்ணை மூடிட்டு சரத்பாபுவிற்கு ஓட்டுப் போட்டு ஜனநாயகத்தை பாழடிச்சிடப் போறதில்லை. கவலைப் படாதீங்க //

சரியான வாதம்.....

♥ தூயா ♥ Thooya ♥ April 23, 2009 6:31 AM  

ரொம்ப வெயிலில் இருந்து எழுதினிங்களா அதிஷா??கிகீகிகிகி

Dr.Rudhran April 23, 2009 7:51 AM  

good post..maybe this is what he wanted. this could be his promo for a future feature

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 23, 2009 8:19 AM  

//After reading all the above comments,I think Sarath has already created an Impact among the people, which I see it as positive change.It will definitely help him to establish himself.//

all d best dude.. :))
Our terror leader Mr. TR has also created an impact among us. Please help him to establish himself too.. :))

UNGALODU NAAN April 23, 2009 8:27 AM  

TAMIZLA TYPE PANRADUKKULLA

DAVU THINDU PUDUDU

IDHULA SPELLING MISTAKE


ILLAMA EZUDANUMA




ENNA KODUMAI RAVI SIR!!!!!!!!!!

ரங்குடு April 23, 2009 8:37 AM  

படிக்காதவன் எல்லாம் அடாவடி அரசியல் பண்ணி பதவிக்கு வருவதால் தான் நாம் நாடு இந்த நிலைக்கு வந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆர் - படிப்பே கிடையாது.
காம ராஜ் - 5ங் கிளாஸ்
கருணாநிதி - 5ங் கிளாஸ்.
ஜயலலிதா - 10ங் கிளாஸ்

இதிலிருந்தே தமிழ்நாட்டின் முன்னேற்றம் எப்படி இரூக்க்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

Suresh April 23, 2009 10:28 AM  

@ Vino Goutham

//எளியவர்களை கிண்டல் பண்ணுவது எளிது..
நீங்களும் அந்த வகைய சேர்தவர்னு இப்ப தான் தெரியுது..
அவரு நின்ன நின்னுட்டு போறாரு..அவர கிழ்த்தரமா விமர்சித்து இவ்வளவு பெரிய பதிவு தேவையா..அதுவும் சொல்லி வாய்த்த மாதிரி நீங்களும் லக்கியும் ஒரே சமயத்தில் அப்படி என்ன அவர் மீது வெறுப்பு..அவரின் அம்மாவை கூட கிழ்தரமாக விமர்சித்து உள்ளிர்கள்..அதற்கு சப்போர்ட் பண்ணியும் நிறையா பெரிய மனிதர்கள் பேசி உள்ளார்கள்..உங்களின் குடும்பத்தை ஒருவர் இப்படி விமர்சனம் செய்தால் சும்மா இருப்பிர்கள..யாரு மீது இந்த கோபம்..

இதற்கு பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும்..வேறு வழி இல்லாமல் கம்மென்ட் போடுகிறேன்.. //

மச்சான் மிக அழகாக சொன்னாய்

சும்மா பதில் சொல்ல மாட்டாங்க அவங்க அம்மா என்னயா தப்பு செஞ்சாங்க ?

ஆதிஷா மற்றும் லக்கி, மற்றும் ஜிங் சா போட்டு கீழ் தரமாக எழுதும் உன்னை பத்தி கிழி கிழினு கிழிக்க ஒரு நிமிடம் ஆகாது ஆனா உன்னை மாதிரி நான் கிழ் தரமாணவன் இல்லை

அப்புறம் வினோத் மச்சான் அவங்க எல்லாம் இத விட மோசமான வார்த்தைகளை கமெண்டுகளை பார்த்து இருப்பாங்க Why blood same blood nu துடைத்து போட்டு மானம் வெட்கம் ரொஷம் இல்லாம அடுத்த பதிவை போடுவாங்க ...

சொத்துல உப்பு போட்டு திண்ணா பரவாயில்லை...

இதுல இவங்கலே ஆனானி பேருல கமெண்டு, எவனாவது திட்டினாலும் ஹ்ம்ம் Comment Moderation vera
அப்போ எவ்வளவு வாங்கிட்டு இருப்பாங்க சும்மா அமைதியா இருக்கிற நம்ம மாதிரி பதிவர்களையும் ஆட்டத்துக்கு இழுக்குறது மச்சான் நம்ம எல்லாம் கலாய்த்தா அப்புறம் அவன் ரூம் போட்டு தான் அழனும் .. ச ச அது எல்லாம் ரோஷம் உள்ள தமிழன் செய்யுறது.. விடு மச்சான்

பிரபலம் சொல்லி புதிய பதிவர்களை வம்பு இழுத்து... காலி பண்ணின பல கதை இருக்கு,
மச்சான் பல பேர் பொய் சொல்வதணால் பொய் உண்மை ஆகாது

"ஆமா கட்சி சார்ப்புல எவ்வளவு கொடுத்தாங்களோ பதிவுக்கு என்று ஒரு பேச்சு இருக்கு"

நீங்க திருப்பி கேட்பிங்க எனக்கு அன்பு கொடுத்தாங்க

Karthik Lollu April 23, 2009 10:44 AM  

Appa enda katchikku thaanga vote panradhu?? DMK, ADMK ivanga apdi enna saadicitaanga???

//ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம்.//


appa enna thagudi neenga edhirpaakureenga?? Rahul gandhi maadhiri UK poi padicha thaan varanuma illa kamarajar maadhiri kalvi koodame poga koodada?? illa AMBANI maadhiri industrialist irukanuma??


//பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.//


ellarum vaayila vada sudra case thaanga.. enga nikkuraanga?? sollunga.. enda independent candidateaavadhu idhu maadhiri ennathoda nikkiraara or atleast so called DMK, ADMK candidates nikkuraangala??


oruthar solraaru, enga ammakku 7 mozhi theriyum, avanga pradamar aaga thagudi irukku.. apdi aagita naa thaan defense minster... idhellam keka maatengale??? ungal kannukku nalladhu mathum thaan thavarudala theriyum



//நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது.//


nostradamus maadhiri pesadenga.. orutharukku vaaippu kodukamaiye, avan enna kilikka poraan nu neenga ninaikardhu naala thaan evanum munnera maatengiraan... vaippu koduthu mathum inga irukuravanga kilichita maadhiri..

Suresh April 23, 2009 10:51 AM  

//உங்களுக்கு தான் அவரைப் பத்தி எல்லாம் தெரியுமே அப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே. அப்பறம் எதுக்கு அவரைக் கேக்கறனு சொன்னீங்க?//

Election la nikura orutharku nan avaru sarbula percharam sollalam avaru keta kelvigaluku nane bathil ellam solla kudathu avaru than sollanum machan

ennaum ellam theriyumnu sollala
ennaku unnai pathi therinchavida avara pathi nalla theriyum

//எங்கயாவது அவர் மக்களுக்கு பண்ண நல்லதை சொல்லி நீங்க பேசிருக்கிங்களா?//

ஒ ஊரு புல்லா நல்லது பண்ணா தான் ஒத்துபிங்களா மக்கா
ஆமா அவரு 200 பேருக்கு வேளை தராரு 200 குடும்பம் வாழுது, அவரால் முடிந்த நல்ல விஷியங்களை செய்யுறாரு

ஒருத்தன் தன் வேளையை செவ்வனனே செய்யுராரு அதுக்கு மேல என்ன வேணும் தில்லா நிக்கிறாரு நீ வேணா நில்லேன்
ஆமா ஒரு இளைஞனாய் தன் கம்பெனி நிறுவாகம் தன் ஏரியா மக்கள், பள்ளிகளுக்கு சென்று ஊக்கம் இது எல்லாம் தராரு, அவரு ஒரு தனி மனிதனாய் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார் மேலும் விவரம் பேட்டியில்

சும்மா அரசியல் வாதி மாதிரி அவரு 10 ருபாய்க்கு செஞ்சு போட்டுக்கு போஸ் கொடுக்க சொல்றிங்களா
அப்புறம் 100 ருபாய் அடிப்பாங்க
காசு செலவு பண்ணமா எலக்ஷ்ன்ல மக்கள் கொடுத்த நிதியில் நிக்கிறாரு மச்சான் .. அவரு பணம் போட்டா தான் அதை எடுக்க பிஸினஸ் செய்ய அரசியலை உபயோக படுத்த அவரு சீப் அரசியல் வாதி இல்லை

அப்புறம் அவரு ஒரு கட்சியில் சேர்ந்தால் ஒரு சீட் வருங்காலத்தில் கிடைக்கும் ஆனா அவரு தனியா நிக்க்றாரு

அப்புறம் அமொரிக்க சிவாஜி என்று ஒரு நன்பர் தென்னூர் ஏரியாவில் அவரு சம்பாரித்த லட்சங்களை மக்களுக்கு செலவு பண்றார் தெரியுமா அவரை பத்தி ஆனந்த விகடனல வந்துச்சு அவரே நின்னாலும் நிங்க குத்தம் சொல்லுவிங்க இன்னைக்கு அவருக்கு பொண்ணு தரல எவனும், அவர் ஊருக்கு நல்லவர் அவங்க அம்மாவுக்கு லூஸ் பையன் என்று திட்டுறாங்க ஆக மொத்தம் உங்களுக்கு பணம், இல்லை உதவி செய்தால் நல்லவன் இல்லைணா ?

அவரு பாரு தணிய அவரு கடமையும் வேளையும் கருத்தாய் காசு பணம் பார்க்காம செய்யுறாரு

அண்ணே நிங்க ரொம்ப பேசினா பேசமா ரிசன் பண்ணிட்டு இந்தியா வாங்க நானும் ரிசைன் பண்ண் ரெடி டீல் உங்களுக்கு மட்டும் சவால் கூட I am ready to loose my job for people come lets go to each village and do work, varingala adutha flight la vanthuta unga pathathai nan thani uthi kaluvuran neenga enna sonnalum ketkuran

டீல் ஒக்கேவா மச்சான்

//அவர் தனிமனித சாதனைகள் வைத்து சமுதாய பங்கை எடை போட எனக்கு விருப்பமில்லை. அதனால தான் கேள்வி கேக்கறேன்.//

தன் வேளை ஒழுக்கமாய் செய்பவன் கண்டிப்பா எலக்ஷன்ல நிக்கிறது இல்லை சரி வாங்க நம்ம நிப்போம்
அவரு என்ன வில்லை ஒடைத்து ஊருக்கு புல்லா செய்யனுமா அவரால் முடிந்த உதவியை பள்ளி மக்களுக்கு செய்கிறார் நன்பா...நீங்க அந்த் செரி மக்களிடம் போய் கேட்ட மாதிரியே சொல்றிங்க சரி i will ask him to list it ok

//அப்பறாம் நானு சொன்னது ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் போஸ்டை. அது இல்லைனா புராஜக்ட் புட்டுக்கிட்டு தான் போகும். ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் சரியா இல்லாம எத்தனையோ பிராஜக்ட் புட்டுக்கிட்டு போயிருக்கு.//

ஆமா தெரியும் அது இல்லாடி புட்டுகிட்டு போகும் ஆனா நான் என்ற வார்த்தை நீங்க உபயோக படுத்தினிங்க நன்பா நான் நீ யர்ரு இல்லடியும் உலகம் இயக்க்ம் தான் நான் என்ற அகம்பாவம் வேண்டாம்
அதை தான் சொன்னேன்

//அப்பறம் என்னை பத்தி புராணம் பாட இந்த பதிவு இல்லை. சரத்பாபு இது வரை மக்களுக்கு என்ன பண்ணிருக்காருனு சொல்லுங்க. விவாதிப்போம்.//

சரி பா சொல்றேன்

//, உன் வேளையை அதான்பா அந்த ஆன் சைக்கோ//
அடுத்து தனி மனித தாக்குதலோட வர பின்னூட்டம் பப்ளிஷ் ஆகுது சுரேஷ்.

Please mind your words!!!

ஓகே Here after namma ;) mind panrom

apprum namma deal athanga please reign and come , i will also come lets go together to each village, stay in hut and do social activites enna thailva eppo next flight la varinga ok right, apprum intha deal ungalukum enakum matutm than enna ok va

Suresh April 23, 2009 10:52 AM  

//உங்களுக்கு தான் அவரைப் பத்தி எல்லாம் தெரியுமே அப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே. அப்பறம் எதுக்கு அவரைக் கேக்கறனு சொன்னீங்க?//

Election la nikura orutharku nan avaru sarbula percharam sollalam avaru keta kelvigaluku nane bathil ellam solla kudathu avaru than sollanum machan

ennaum ellam theriyumnu sollala
ennaku unnai pathi therinchavida avara pathi nalla theriyum

//எங்கயாவது அவர் மக்களுக்கு பண்ண நல்லதை சொல்லி நீங்க பேசிருக்கிங்களா?//

ஒ ஊரு புல்லா நல்லது பண்ணா தான் ஒத்துபிங்களா மக்கா
ஆமா அவரு 200 பேருக்கு வேளை தராரு 200 குடும்பம் வாழுது, அவரால் முடிந்த நல்ல விஷியங்களை செய்யுறாரு

ஒருத்தன் தன் வேளையை செவ்வனனே செய்யுராரு அதுக்கு மேல என்ன வேணும் தில்லா நிக்கிறாரு நீ வேணா நில்லேன்
ஆமா ஒரு இளைஞனாய் தன் கம்பெனி நிறுவாகம் தன் ஏரியா மக்கள், பள்ளிகளுக்கு சென்று ஊக்கம் இது எல்லாம் தராரு, அவரு ஒரு தனி மனிதனாய் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார் மேலும் விவரம் பேட்டியில்

சும்மா அரசியல் வாதி மாதிரி அவரு 10 ருபாய்க்கு செஞ்சு போட்டுக்கு போஸ் கொடுக்க சொல்றிங்களா
அப்புறம் 100 ருபாய் அடிப்பாங்க
காசு செலவு பண்ணமா எலக்ஷ்ன்ல மக்கள் கொடுத்த நிதியில் நிக்கிறாரு மச்சான் .. அவரு பணம் போட்டா தான் அதை எடுக்க பிஸினஸ் செய்ய அரசியலை உபயோக படுத்த அவரு சீப் அரசியல் வாதி இல்லை

அப்புறம் அவரு ஒரு கட்சியில் சேர்ந்தால் ஒரு சீட் வருங்காலத்தில் கிடைக்கும் ஆனா அவரு தனியா நிக்க்றாரு

அப்புறம் அமொரிக்க சிவாஜி என்று ஒரு நன்பர் தென்னூர் ஏரியாவில் அவரு சம்பாரித்த லட்சங்களை மக்களுக்கு செலவு பண்றார் தெரியுமா அவரை பத்தி ஆனந்த விகடனல வந்துச்சு அவரே நின்னாலும் நிங்க குத்தம் சொல்லுவிங்க இன்னைக்கு அவருக்கு பொண்ணு தரல எவனும், அவர் ஊருக்கு நல்லவர் அவங்க அம்மாவுக்கு லூஸ் பையன் என்று திட்டுறாங்க ஆக மொத்தம் உங்களுக்கு பணம், இல்லை உதவி செய்தால் நல்லவன் இல்லைணா ?

அவரு பாரு தணிய அவரு கடமையும் வேளையும் கருத்தாய் காசு பணம் பார்க்காம செய்யுறாரு

அண்ணே நிங்க ரொம்ப பேசினா பேசமா ரிசன் பண்ணிட்டு இந்தியா வாங்க நானும் ரிசைன் பண்ண் ரெடி டீல் உங்களுக்கு மட்டும் சவால் கூட I am ready to loose my job for people come lets go to each village and do work, varingala adutha flight la vanthuta unga pathathai nan thani uthi kaluvuran neenga enna sonnalum ketkuran

டீல் ஒக்கேவா மச்சான்

//அவர் தனிமனித சாதனைகள் வைத்து சமுதாய பங்கை எடை போட எனக்கு விருப்பமில்லை. அதனால தான் கேள்வி கேக்கறேன்.//

தன் வேளை ஒழுக்கமாய் செய்பவன் கண்டிப்பா எலக்ஷன்ல நிக்கிறது இல்லை சரி வாங்க நம்ம நிப்போம்
அவரு என்ன வில்லை ஒடைத்து ஊருக்கு புல்லா செய்யனுமா அவரால் முடிந்த உதவியை பள்ளி மக்களுக்கு செய்கிறார் நன்பா...நீங்க அந்த் செரி மக்களிடம் போய் கேட்ட மாதிரியே சொல்றிங்க சரி i will ask him to list it ok

//அப்பறாம் நானு சொன்னது ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் போஸ்டை. அது இல்லைனா புராஜக்ட் புட்டுக்கிட்டு தான் போகும். ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் சரியா இல்லாம எத்தனையோ பிராஜக்ட் புட்டுக்கிட்டு போயிருக்கு.//

ஆமா தெரியும் அது இல்லாடி புட்டுகிட்டு போகும் ஆனா நான் என்ற வார்த்தை நீங்க உபயோக படுத்தினிங்க நன்பா நான் நீ யர்ரு இல்லடியும் உலகம் இயக்க்ம் தான் நான் என்ற அகம்பாவம் வேண்டாம்
அதை தான் சொன்னேன்

//அப்பறம் என்னை பத்தி புராணம் பாட இந்த பதிவு இல்லை. சரத்பாபு இது வரை மக்களுக்கு என்ன பண்ணிருக்காருனு சொல்லுங்க. விவாதிப்போம்.//

சரி பா சொல்றேன்

//, உன் வேளையை அதான்பா அந்த ஆன் சைக்கோ//
அடுத்து தனி மனித தாக்குதலோட வர பின்னூட்டம் பப்ளிஷ் ஆகுது சுரேஷ்.

Please mind your words!!!

ஓகே Here after namma ;) mind panrom

apprum namma deal athanga please resign and come , i will also come lets go together to each village, stay in hut and do social activites enna thailva eppo next flight la varinga ok right, apprum intha deal ungalukum enakum matutm than enna ok va

sathiskumar,  April 23, 2009 10:57 AM  

புகழ்ல இருக்குரவரே திட்டியே புகழ் தேடுபவர்களில் நீங்களும் ஒருவர். யாராவது ஒருத்தர் நல்லதுபண்ணனும் நினச்சா அதுல குத்தம் கண்டு பிடிச்சு அத பண்ண விடாம பண்றதுல அப்டி என்ன அற்ப சந்தோசம் உங்களுக்கு...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ April 23, 2009 11:28 AM  

//நானும் ரவியும் சேர்ந்தா இப்டி தான்.. ஒரு வழிப் பண்ணிடுவோம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மணி சார், நான் சொன்னது கும்மியை பத்தி. சீரியசான இடங்கள்ல நாங்க இப்டி தான் கும்மி அடிப்போம் என்ற அர்த்தத்தில் சொன்னேன். உங்களை ஒரு வழி பண்ணிடுவேன்னு சொல்லலை. தவறா இருந்தா மாப்பு கேட்டுக்கிறேன் அண்ணே.

Naresh Kumar April 23, 2009 12:08 PM  

என்ன சொல்ல வற்ரீங்க ஆதிஷா???

ஒருத்தரு செய்யணும்னு வர்றது அவ்ளோ பெரிய தப்பா? ஒரு வேளை காங்கிரஸ், திமுக, அதிமுகவையே பார்த்து மந்தையாகிப் போன நமக்கு எங்க வெளங்கிடப் போறமோன்னு பயமா???

உங்கள் பதிவு சுவையாக இருந்தாலும், கருத்து அடிப்படையில் எனக்கு ஒப்பவில்லை!!!

நீங்க சொன்ன படிப்படி முன்னேற்றம்னா, அது ராகுலுக்கு பொருந்துமா????

நரேஷ்
www.nareshin.wordpress.com

Kanna April 23, 2009 1:56 PM  

நானும் இப்போதுதான் ஒரு பதிவு போட்டேன்

http://venkatesh-kanna.blogspot.com/2009/04/blog-post_23.html

ரெண்டு நாள் முன்னாடியே போடனும்னு நினைச்சேன்...

நேரம்தான் கிடைக்கல..

ஆனா அதுக்குள்ள கொசு தொல்லை ஜாஸ்தி ஆயிட்டு...

லக்கிலுக் April 23, 2009 1:56 PM  

நரேஷ், சுரேஷ்னு ஷ்ல பேரு முடியறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே? அது ஏன்?

லக்கிலுக் April 23, 2009 1:56 PM  

நரேஷ், சுரேஷ்னு ஷ்ல பேரு முடியறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே? அது ஏன்?

KISHORE April 23, 2009 2:26 PM  

உங்கள் பதிவில் உங்களை மேதாவி போன்று காட்டிகொள்ளும் முயற்சி மட்டுமே தெரிகிறது... தனித்து போட்டிஇடும் ஒரு தனி நபரை பற்றியும் அவருக்கு ஆதரவு அளிபவர்களையும் இவ்ளவு கிழ்த்தரமாக விமர்சிக்கும் நீங்கள் அரசியலுக்கு வந்து உங்களால் முடிந்ததை கிழிக்க்கலாமே... ?

Suresh April 23, 2009 3:47 PM  

//நரேஷ், சுரேஷ்னு ஷ்ல பேரு முடியறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே? அது ஏன்?//

அதிஷா, யுவகிருஷ்னா

இப்படி "ஷா, ஷ்னா" முடியரவங்க எல்லாம் ரொம்ப கெட்ட பசங்களா இருக்காங்களே அதனால தான்

Suresh April 23, 2009 3:50 PM  

அதிஷா யுவகிருஷ்னா

உங்க ரெண்டு பேருக்கும் ஒரு டீல்
//
அண்ணே நிங்க ரொம்ப பேசினா பேசமா ரிசன் பண்ணிட்டு இந்தியா வாங்க நானும் ரிசைன் பண்ண் ரெடி டீல் உங்களுக்கு மட்டும் சவால் கூட I am ready to loose my job for people come lets go to each village and do work, varingala
டீல் ஒக்கேவா மச்சான்//

apprum namma deal athanga please resign and come , i will also come lets go together to each village, stay in hut and do social activites enna thailva eppo next flight la varinga ok right, apprum intha deal ungalukum enakum matutm than enna ok va//

நந்தா April 23, 2009 4:11 PM  

நக்கலில் நையாண்டியில் எழுத்துத் திறமையில் தொடர்ச்சியாய் வளர்ந்துக் கொண்டிருக்கும் அதிஷா தெரிகிறார்.

ஆனால் கருத்தியல் ரீதியில் அதிஷா பல அடிகள் பின்னுக்கு போய் இருக்கிறார்.

சரத்பாபு சரியான தேர்வு இல்லை என்பதை நீங்கள் சுட்டிக் காட்ட விரும்பி இருந்தால் அதை நீங்கள் சரியாக கொணரவே இல்லை. தன்முனைப்பும், டார்கெட் ஆடியன்ஸ் பதிவர்களுக்கான மசாலா ஐட்ட்த்தை மட்டுமே சேர்த்திருக்கிறீர்கள். மன்னிக்கவும் என்னைப் பொறுத்த வரை குப்பை.

புருனோ Bruno April 23, 2009 4:22 PM  

//ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை //

இதே தேர்தலில் போட்டியிடும் மாபா பாண்டியராஜன் குறித்த உங்களின் கருத்து என்ன

என் கருத்து - தேதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ள இரு தொகுதிகளில் விருதுநகர் ஒன்று

Suresh April 23, 2009 4:22 PM  

//இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 288 கிரிமினல்கள்

ஏப்ரல் 23,2009,14:53 IST

புதுடில்லி: இன்று நடக்கும் இரண்டாவது கட்ட லோக்சபா தேர்தலில் 288 கிரிமினல்கள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் மொத்தம் 1,633 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியில் 31 பேர் மீதும், பாரதீய ஜனதாவில் 27 பேர் மீதும், சமாஜ்வாடி கட்சியில் 13 பேர் மீதும் கொலை, ஆள் கடத்தல், கொள்ளை போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
//

தினமலர் செய்தி அதற்க்கு சரத் எவ்வள்வோ மேல்

புருனோ Bruno April 23, 2009 4:22 PM  

//ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.//

இதே கருத்தைத்தான் நானும் கூறினேன். முதலில் உள்ளாட்சி. அதன் பிறகு நாடாளுமன்றத்திற்கு வர முயல வேண்டும்

அதிஷா April 23, 2009 4:38 PM  

110 பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

அதிஷா April 23, 2009 4:39 PM  

சில பின்னூட்டங்கள் இங்கிருந்தும் , வந்த பின்னூட்டங்களில் சிலவும் நீக்கப்பட்டுவிட்டது.

நண்பர்கள் மன்னிக்கவும்.

அதிஷா April 23, 2009 4:42 PM  

@மருத்துவர் புருனோ..

இந்த பதிவில் வேண்டுமென்றேதான் ம்பாய் பாண்டியராஜன் குறித்து குறிப்பிடவில்லை. அதற்கு சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. (உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்)

**********

விருதுநகர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கிறேன்.

**********

அதிஷா April 23, 2009 4:53 PM  

சுரேஷ் அதிகமாய் கோபப்படுகிறீர்கள். உணர்ச்சி வேகத்தில் எதையும் சாதித்துவிட முடியாது. வீணாக சரத்பாபுவிற்காக இங்கே சண்டை போடும் நேரத்தில் அவருக்காக உங்கள் ஏரியாவில் நான்கு பேரிடம் வாக்கு சேகரிக்கலாம்.

மற்றபடி உங்கள் மீதோ சரத்பாபுவின் மீதோ எனக்கோ அல்லது தோழர் லக்கிலுக்குவிற்கோ எந்த காழ்ப்புணர்ச்சியோ பொறாமையோ கோபமோ கிடையாது.

நல்ல இளைஞர் சக்தி சரியான வழிகாட்டுதலின்றி தோல்விப்பாதையில் செல்கிறதே என்கிற ஆதங்கத்தை தவிர.

நெக்ஸ்ட் மீட் பண்றேன்

இப்படிக்கு

உங்களைப்போல சரத்பாபுவைப்போல அதிகம் படித்திடாத.. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத.. அன்றாடம் சோற்றுக்காக உழைக்கும்

பத்தாவது பெயிலான

உங்கள் அன்புள்ள அதிஷா

அதிஷா April 23, 2009 5:05 PM  

\\எளியவர்களை கிண்டல் பண்ணுவது எளிது..
நீங்களும் அந்த வகைய சேர்தவர்னு இப்ப தான் தெரியுது..
அவரு நின்ன நின்னுட்டு போறாரு..அவர கிழ்த்தரமா விமர்சித்து இவ்வளவு பெரிய பதிவு தேவையா..அதுவும் சொல்லி வாய்த்த மாதிரி நீங்களும் லக்கியும் ஒரே சமயத்தில் அப்படி என்ன அவர் மீது வெறுப்பு..அவரின் அம்மாவை கூட கிழ்தரமாக விமர்சித்து உள்ளிர்கள்..அதற்கு சப்போர்ட் பண்ணியும் நிறையா பெரிய மனிதர்கள் பேசி உள்ளார்கள்..உங்களின் குடும்பத்தை ஒருவர் இப்படி விமர்சனம் செய்தால் சும்மா இருப்பிர்கள..யாரு மீது இந்த கோபம்..

இதற்கு பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும்..வேறு வழி இல்லாமல் கம்மென்ட் போடுகிறேன்..\\


நண்பர் திரு.வினோத் கௌதம் அவர்களுக்கு..

பதிவை மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்துப்பாருங்கள் நண்பா. எந்த இடத்தில் நான் சரத்பாபுவின் குடும்பத்தைகுறித்த எனது விமர்சனத்தை வைத்திருக்கிறேன் என்று கூறினால் அந்த பகுதியை மட்டுமல்லாது இந்த பதிவையே நீக்கி விடுகிறேன்.

தாங்கள் இதுவரைக்கும் என் மீது வைக்காத உயரிய மரியாதைக்கு என்று தன்யனாவேன் நண்பரே! மரியாதை தருமளவிற்கு நான் உயர்ந்தவனல்ல.

யாரென்றே தெரியாத ஒருவரை ஒருமையில் விளிக்கும் அளவுக்கு தாழ்ந்தவனும் அல்ல.

மற்றபடி உங்கள் கேள்விகளுக்கான விடை எனது பதிவிலேயே நிறைய நிரம்பி உள்ளது.

தங்களது மேலான வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!

இப்படிக்கு..

நேத்துவரை உங்களிடம் மரியாதை பெற்று வாழ்ந்து வந்த

இனிமேல் அதை திரும்ப பெறவே வாய்ப்பே இல்லாத

அதிஷா

அதிஷா April 23, 2009 5:21 PM  

நையாண்டி நைனா,கிருஷ்ண லீலை,டக்ளஸ்,மணிகண்டன்,அனானி1 ,அனானி 2,அனானி 3 .....

ஆகிய அனானி நண்பர்களுக்கும்

ஸ்ரீ ,ஜி.ராகவன்,பீர்,குசும்பன்,ஜெட்லி,முரளிக்கண்ணன்,வால்பையன்,அக்கினிபார்வை, சங்கர், நர்சிம் ஓசை செல்லா, கண்ணா , உங்களோடு நான், என்னோடு நீ ,அரவிந்தன் , சஞ்சய் காந்தி , செந்தழல் ரவி , ஜாக்கி சேகர், முத்து, ஜோசப் , சி , திருப்பூண்டி ஆகிய நண்பர்களுக்கும்

மருத்துவர் ருத்ரன், தூயா , மக்குசாமி , கிசோர் , கார்த்திக் , ரங்குடு மற்றும் நரேந்திரனுக்கும்

என் இனிய வணக்கங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Suresh April 23, 2009 5:24 PM  

//சுரேஷ் அதிகமாய் கோபப்படுகிறீர்கள். உணர்ச்சி வேகத்தில் எதையும் சாதித்துவிட முடியாது. //

நண்பா நான் பாரதி சொன்ன மாதிரி இப்படி இருக்காங்களே நம் இளைஞர்கள் என்று உங்களையும் நன்பர் லக்கியும் நினைத்து தான் ஆதங்க பட்டேன் கோபம் இல்லை

இது மக்களுக்கு புரியனும்
என்பத்றக்கே பின்னூட்டங்கள் இல்லைனா மெளனம் சம்மதம் என்று சொல்லிடுவாங்க ;)

//வீணாக சரத்பாபுவிற்காக இங்கே சண்டை போடும் நேரத்தில் அவருக்காக உங்கள் ஏரியாவில் நான்கு பேரிடம் வாக்கு சேகரிக்கலாம்.//

என்னால் முடிந்ததை என் நன்பர்களிடம் பேசி இன்னைக்கு மட்டும் ஒரு 30 வோட்டு சேகரிச்சேன் மச்சான்

//மற்றபடி உங்கள் மீதோ சரத்பாபுவின் மீதோ எனக்கோ அல்லது தோழர் லக்கிலுக்குவிற்கோ எந்த காழ்ப்புணர்ச்சியோ பொறாமையோ கோபமோ கிடையாது.//

அது எப்படி மக்கா இப்படி முழு புசனிக்காவை சோத்துல மறைக்கிறிங்க நன்பா
கைபுள்ளை என்றும் லக்கி அவரு ஜோக்கர் என்றும் சொல்லுவது என்னபா நண்பா பாசமா ?



//நல்ல இளைஞர் சக்தி சரியான வழிகாட்டுதலின்றி தோல்விப்பாதையில் செல்கிறதே என்கிற ஆதங்கத்தை தவிர.//

அதங்கபட்டு தான் திமுகவுக்கும் அதிமுக பாஜாவுக்கு சப்போர்ட்டா
ஒரு இளைஞன் வரான் அதுக்கு சப்போர்ட் பண்ண வழி இல்லை சும்மா நடிக்காதிங்க பாஸ்..

சரி வாங்க தலைவனாய் நீங்க நான் உங்களுகு ஆதரவு தரனேன்யா , கைபுள்ளை என்று சொல்லமாட்டேன்


//நெக்ஸ்ட் மீட் பண்றேன்//
கண்டிப்பா ;) மீட் பண்ணுவோம் மச்சி


இப்படிக்கு

உங்களைப்போல சரத்பாபுவைப்போல அதிகம் படித்திடாத.. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத.. அன்றாடம் சோற்றுக்காக உழைக்கும்

பத்தாவது பெயிலான
உங்கள் அன்புள்ள அதிஷா

அதான் மச்சி பத்தாவதுக்கூட படிக்காத எத்துனையோ தோழருக்கு இருக்கும் தெளிவு உன்னிடத்தில் இல்லை ஆமா

நல்ல இளைஞர் சக்தி சரியான வழிகாட்டுதலின்றி தோல்விப்பாதையில் செல்கிறதே என்கிற ஆதங்கம் இருந்தா இந்த மாதிரி தெளிவு இல்லாம நையாண்டி என்று நல்ல விஷியத்தை நல்ல மனிதர்க்ளை பூக்களாய் விரியும் முன்ணே சுட்டு நசுக்க போடப்படும் பதிவுகளை நிப்பாடுங்க

இப்படிக்கு
படித்தாலும் அன்பையும், நல்ல சமுகத்தையும் (தமிழகத்தை) எதிர்நோக்கும்
சுரேஷ்

அதிஷா April 23, 2009 5:25 PM  

சுரேஷ் தயவு செய்து இது போன்ற மோசமான வார்த்தைகளோடு பின்னூட்டங்கள் இட வேண்டாம்.

இதற்காகத்தான் மட்டுறுத்தல் செய்ய வேண்டியிருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள்.

மணிகண்டன் April 23, 2009 7:54 PM  

***
அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மணி சார், நான் சொன்னது கும்மியை பத்தி. சீரியசான இடங்கள்ல நாங்க இப்டி தான் கும்மி அடிப்போம் என்ற அர்த்தத்தில் சொன்னேன். உங்களை ஒரு வழி பண்ணிடுவேன்னு சொல்லலை. தவறா இருந்தா மாப்பு கேட்டுக்கிறேன் அண்ணே.
****

படுத்தாதீங்க சஞ்சய். இது கூட எனக்கு புரியாதா ?

வெண்பூ April 23, 2009 9:38 PM  

உங்களுடன் ஒத்துப்போகிறேன் அதிஷா..

வெங்கிராஜா April 23, 2009 11:25 PM  

பிரச்சனையே இரண்டுமே ஏதோ விளம்பரம் போல இருப்பது தான். அதிஷாவின் பதிவாகட்டும், ஐ.ஐ.எம் அரைவேக்காடாகட்டும்.

கவுண்டமணி: "எதுக்குடா நமக்கு இந்த பாழாப்போன விளம்பரம்?"

மதிபாலா,  April 24, 2009 9:46 AM  

ஸ்ஸ்ப்பா , அந்த சரத்பாபுவை பத்தி அந்த சரத்பாபுவே கவலைப்பட்டிருப்பாரான்னு தெரியலே.

அதுக்கு இம்புட்டு அலப்பறையா.?

யாருமே இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்தறே ங்கிற டயலாக் தான் நினைவுக்கு வருது.

திட்டமிடல் இல்லாமல் ஏதோ ஒரு தொகுதியில் நின்று மாற்றிக் காட்டுவேன் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். விளம்பரம் தேடும் வேலை.

ஆனால் , திட்டமிட்டு ஒரு அரசியல் இயக்கமாக இளைஞர் சக்தியை முறைப்படுத்தினால் வெற்றி கண்டிப்பாக கதவைத் தட்டும்.

Anonymous,  April 25, 2009 5:07 AM  

This is the very worst and bad post i have ever seen in my life. This also gives a hint to us the People in Tamil Nadu like you don't encourage much. Shame on us.

Pot"tea" kadai April 26, 2009 3:41 PM  

i am absolutely disgusted with the way senthazhal ravi & sanjaigandhi gummi on this post as i often played pe pe at school ground.

இருந்தாலும் கணக்குக்காக நானும் 124 அல்லது125

Pot"tea" kadai April 26, 2009 3:42 PM  

அஸ் ய டமிலியன் அய் நெவர் என்கரேஜ் காமெண்ட் மோடரேஷன், ஹே!

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP