Pages

07 May 2009

இந்த காலத்து பசங்க இருக்காங்களே!






ஹரிணி சொன்ன குட்டிக்கதை -

போன மாதம் ஊருக்குச் சென்றிருந்தேன். கோயம்பத்தூருக்குத்தான். கோவை வெகுவாக மாறியிருந்தது. ஆறு மாதங்களுக்குள்ளாகவே பல மாற்றங்கள். பல இடங்களில் இருந்த மரங்கள் காணவில்லை. புதிது புதிதாக கலர்கலராய் பேருந்துகள். புதிதாய் இருக்கிறது.

ஹரிணிக்குட்டி கூட வளர்ந்திருக்கிறாள். ஹரிணிக்குட்டி யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் என் செல்லக்குட்டி! கன்னுக்குட்டி!. என் தங்கையின் முதல் மகள். வயது 3. இந்த வருடம் முதலாம்ஆண்டு எல்.கே.ஜியில் சேர்ந்து படிக்க இருக்கிறாள். மனதிற்குள் எப்போதும் அவளது நினைவுகளோடும் மாமா எப்ப ஊருக்கு வருவீங்க என்கிற தொலைப்பேசிக்குரலோடும் பல நாட்களாய் பிரிந்திருக்கிறேன்.

நான் வீட்டுக்குள் நுழைந்ததுமே வாரியணைத்து கொண்டு மாமா என்று என் கன்னத்தில் முத்தமிட்டதும் ஏனோ கண்களின் ஓரம் ஈரம் :-) . குழந்தைகளின் அன்பே அலாதியானது. அவர்களுக்கு நம்மை பிடித்துவிட்டால் ஒரு விநாடி கூட நம்மை விடமாட்டார்கள். ஹரிணியும் அப்படித்தான். தனது டோரா புத்தகத்தையும் விளையாட்டுப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு விளையாட அழைக்கிறாள். சாப்பிடும் போது மாமா நான் எப்படி சாப்பிடறேன் பாரேன் என என்னை அழைத்து காண்பிக்கிறாள்.

இரவானது அவள் அம்மாவிடம் நான் மாமாவோடதான் தூங்குவேன் என சொல்லிவிட்டு வந்து என்னோடு படுத்துக்கொண்டாள். மாமா ஒரு கதை சொல்லுங்க என்றாள். நானும் ஆர்வத்தோடு ஒரு ஊர்ல ஒரு பாட்டி என்று ஆரம்பித்தேன. மாமா அந்த கதை எனக்கே தெரியும்........ காக்கா வந்து வடை தூக்கிட்டு போயிருமே அதானே..உவ்வே என்றாள். அவள் அதற்கு அடுத்து எழுப்பிய கேள்விகளால் அதிர்ந்துதான் போனேன். ஏன் மாமா பாட்டி பகல்ல வடை சுடறா பகல்ல யாராவது வடை திம்பாங்களா , அப்புறம் ஏன் வடைய சுட்டா தட்டு வச்சு மூடி வைக்கணும்ல என்றாள். பதிலில்லை என்னிடம்.

மாமா வேற கதை சொல்லேன் என்றாள். பிளாகில்தான் பல இன்ப துனபக்கதைகளை இன்பினிட்டியாய் எழுதுகிறோமே நாமாக ஒரு கதை சொல்வோம் என பாப்பா ஒரு ஊர்ல ஒரு பெரிய யானை இருந்துச்சாம் என்று ஆரம்பித்தேன். மறுபடியும் மாமா அந்த கதை எனக்கே தெரியும் நான் சொல்றேன் எனத்தொடர்ந்தாள்.

'' ஒரு ஊர்ல ஒரு யானை இருந்துச்சாம். அது ரோட்டில வந்துட்டு இருந்துச்சாம். நம்ம சிவாசினி பாப்பா ( அவளது தங்கை! வயது 1.5 ) ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தாளாம். அப்போ அந்த யானை சிவாசினி பாப்பாவோட கைல இருந்த வாழைப்பழத்த புடுங்கி தின்னுருச்சாம். அப்புறம் அவளோட பிஸ்கட்டு முறுக்கு சாக்லேட் எல்லாத்தையும் புடுங்கிருச்சாம். அப்போ சிவா பாப்பா என்கிட்ட வந்து அழுதாளாம் அக்கா அந்த யானை என் சாக்லேட்ட புடுங்கிருச்சுனு உடனே நான் போயி அந்த யானைகிட்ட யான யான அந்த சாக்லேட்டு பிஸ்கட்லாம் திருப்பி குடு இல்லாட்டி அடிப்பேனு.. அந்த யானை முடியாது போ னு சொல்லிச்சாம். எனக்கு கோபம் வந்து அந்த யானைய புடுச்சு தூக்கி அடி அடினு அடிச்சு வால புடிச்சு இழுத்து சுத்தி சுத்தி அடிச்சதும் அந்த யானை அழுஅழுனு அழுதுட்டே அடிக்காதீங்க அடிக்காதீங்கனு சாக்லேட்டு பிஸ்கட்லாம் திருப்பி குடுத்துருச்சாம். நான் அத சிவா பாப்பா கிட்ட குடுத்துட்டனாம் ''

எனக்கு பாதி கதையிலேயே தலை கிர்ரென இருந்தது. மீதி கதை முடிப்பதற்குள் மயக்கமே வந்து விட்டது. இன்னும் ஸ்கூலுக்கே போகாத குழந்தைக்கு எப்படி தெரிந்தது இத்தனை விசயம். யார் சொல்லி கொடுப்பது. அவள் அம்மாவிடமே கேட்டேன். என் தங்கையோ அவள் இப்படித்தான் வினோ எப்பவும் புதுசு புதுசா கதை சொல்றா என்கிறாள்.

நினைத்து கொண்டேன் இந்த காலத்து குழந்தைங்க இருக்காங்களே ஊரையே வித்திடும் என்று. ஒவ்வொரு தலைமுறையும் புதிதாய் உருவாகும் போதும் இதையே கூறும் பலரையும் பார்த்திருகிறேன். என் அம்மாவை அவரது பாட்டி அப்படித்தான் சொல்லுவாராம் , என பாட்டி என் தங்கையை அப்படி சொல்வதை பார்த்திருக்கிறேன். இதோ இப்போது நான் .

****************

ஒரு மிக முக்கிய அறிவிப்பு -

இந்த வாரம் சென்னை பதிவர்கள் பலர் ஒன்னா சேந்து ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிருக்காங்க. குழந்தைகள்கிட்ட பாலியல் , அதாவது செக்ஸ் பத்தி பெற்றோர்கள் எப்படி பேசறது , அவங்ககிட்ட முறையா அது குறித்த விழிப்புணர்வ எப்படி ஏற்படுத்தறதுனும் குழந்தைகள் மனநிலை குறித்த உங்க கேள்விகளுக்கும் பதில் சொல்ல டாக்டர்.ஷாலினியும் , டாக்டர்.ருத்ரனும் ஒத்துகிட்டு இருக்காங்க.

அதனால வர மே 10 ஆம் தேதி அதாவது இந்த வாரம் ஞாயித்துகிழம சாயங்காலம் நம்ம கிழக்குப்பதிப்பகத்தோட மொட்டை மாடில அனைவருக்குமான கூட்டம் ஒன்னு ஏற்பாடு பண்ணிருக்காங்க. கவனிக்கவும் இது அனைவருக்குமான கூட்டம் இதுல பதிவர்கள்தான் கலந்துக்கணும் பதிவு படிக்கறவங்கதான் கலந்துக்கணும்னுலாம் ஏதும் விதிமுறை கிடையாது.

இதுல யார்வேணா கலந்துக்கலாம் சரிங்களா. உங்க பக்கத்து வீட்டு அங்கிள்லருந்து உங்களோட பெற்றோர் கூட கலந்துக்கலாம்.உங்களுக்கு கல்யாணம் ஆகாட்டி கூட இனிமே ஆகினா குழந்தை பிறக்கும்ல அதனால நீங்களும் கட்டாயம் கலந்துக்கணும்.

ஆனா ஒன்னு நீங்களோ இல்ல உங்க பிரண்டோ இல்ல பக்கத்துவீட்டுக்காரங்களோ யாரு கலந்துகிட்டாலும் தயவு பண்ணி முன்னாடியே உங்க வருகைய போன்லயோ இல்ல மெயில்லயோ சொல்லிட்டீங்கண்ணா முன்னேற்பாடுகள் பண்ண வசதியா இருக்கும்னு மக்கள் பீல் பண்றாங்க . சேர் , டீ , இடம்லாம் அரேஞ்ச் பண்ணனும் இல்ல. இந்த கூட்டத்தில கலந்துக்க பீஸ்லாம் ஒன்னும் இல்ல அனைவருக்கும் இலவசம். கூட்டம் முடிந்து தேநீர் விருந்திற்கும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.

சரியா ஒரு பேப்பர் பென்சில் எடுத்து நேரம் இடம்லாம் நோட் பண்ணிக்கோங்க



இடம் : கிழக்குப் பதிப்பக மொட்டைமாடி,
எல்டாம்ஸ் ரோடு,சென்னை.

நாள் : 10/மே/2009.

நேரம் : மாலை 4:30 - 7.00.


உங்கள் வருகைய சொல்லவும் - வழி தெரியாம முழிச்சாலும்

கீழ இருக்கற நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க

அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

நர்சிம் -9940666868

முரளிக்கண்ணன் -9444884964

கேபிள் சங்கர் - 9840332666



மெயில் அனுப்ப மறந்துடாதீங்க! : weshoulddosomething@googlemail.com



****

வர்ட்டா!