Pages

07 July 2009

சத்தியமா நான் சாமியார்தான்டா!





மாநிலத்தையே கலக்கற மிகப்பெரிய அரசியல்வாதி அந்த ஆளு. அவர் ஒருமுறை நம்ம சாமியாரைப்பற்றி கேள்விப்பட்டு அடடே இப்படி ஒரு ஆளா.. உடனே அந்தாள பாக்கணுமே..

''டேய் தம்பீ இந்தா வா!..''

''இன்னாண்ணா... , யார்டா அந்த சாமீ .. பயங்கர டெரராமே அந்தாள பாக்கணும் ஏற்பாடு பண்ணுங்கோ.. ''

ஒரு நல்ல முகூர்த்த நாளில் சாமீயாரை சந்திக்க வந்தான் அந்த மிகப்பெரிய ரவுடி.

சாமியார் எப்போதும் போல புலித்தோலில் அமர்ந்து கொண்டு வரும் கஸ்டமர்களுக்கு... சாரிப்பா...... பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்.

அரசியல்வாதியின் வரிசை வந்தது. அ.வா உள்ளே நுழைய அவரோடு வந்திருந்த குண்டு குண்டு அடியாட்களை பார்த்து குருவுக்கு லைட்டாக உதறலாய் இருந்தது.

சிஷ்யனைப் பார்த்தார் . அவன் நினைப்பது அவரது ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.

சிஷ்யன் '' இன்னைக்கு வாயக்குடுத்து நல்லா வாங்கிக்க போறயா நீ..! ஐ ஜாலி குரு இன்னிக்கி நாஸ்திடா '' என நமுட்டு சிரிப்பு சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

சிஷ்யனைப்பார்த்து குருவும் பயத்தோடு தெனாவெட்டாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.

அரசியல்வாதி குருவைப்பார்த்தான். அவனுக்கு குபீர் என இருந்தது. குருவின் முகத்தில் தெரிந்த ஒளியில் தேஜஸில் மிரண்டு போனான். அதுவும் குருவின் ஸ்டைலும் அழகையும் பார்த்து ஒரு நிமிடம் சுளீர் என இருந்தது.

தன்னைப்பார்த்து அரசியல்வாதி டெரராகிரான் என்பதை உணர்ந்தவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

''சாமீ இதுவரிக்கும் எனக்கு யார பாத்தும் இப்படி டகுலானதில்ல.. ஒன்ன பாக்க சொல்ல அப்பிடியே அடி வயிறு கலக்குதுப்பா.. இன்னாபா மேட்டரு.. நீகண்டி அரசியலுக்கு வந்த ஒரு பய ஒன் முன்னால நிக்க முடியாது போலக்கீதுப்பா.. '' என்றான் பவ்யமாய்.


''ஹாஹாஹாஹா.. '' அழகாக சிரித்தார் நமது டகில் சாமியார்.

''தெய்வீக சிரிப்புய்யா ஒனக்கு.. இன்னா மேட்டர் இது ஏன் ஒன்ன பாத்து எனக்கு டகில் ஆச்சு.. ''

''நீ ஒரு பொடியன்பா.. கொஞ்சம் அப்படி ஓரமா குந்திகினு இரு.. சொல்றேன்..''

அரசியல்வாதிக்கு லைட்டா கோபம் வந்தாலும் சாமியார் பவர்புல்லா இருப்பாரோனு ஒரு பயத்துல பேசாம போய் குந்திக்கினான்... சாரி உக்காந்துகிட்டான்.

நிறைய பேர் அவரை பார்த்து ஆசி வாங்கிக்கிட்டே இருந்தாங்க. அரசியல்வாதிக்கு லைட்டா இருந்த கோபம் அதிகமாகிட்டே இருந்துச்சு. சிஷ்யனுக்கு அதைபாக்க ஜாலியா இருந்துச்சு.

ஒரு வழியாக சாயங்காலம் ஆறு மணிக்கு யாரும் பக்தர்கள் இல்லாததால் அரசியல்வாதியை கூப்பிட்டார்..

''தம்பீ இப்படி வா.. ''

இன்னாது தம்பியா டேய் நீ கண்டி வெளிய வா... மவனே வாயகீயல்லாம் உடசிறேன்.. என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளிய கிகி என சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டு கையைக்கட்டிக்கொண்டு அருகில் சென்றான்.

''இன்னாத்துக்கு வெயிட் பண்ணிகினுக்கீறே..! ''

''சாமி உங்களான்ட ஒரு கொஸ்டீன் கேட்டனே..''

''ஓஓ அதுவா.. சரி வா அப்படிக்கா வெளிய நட்ந்துக்கினே பேசலாம்... '' என அழைத்துக்கொண்டு வெளியே நடந்தார்.


அது ஒரு பௌர்ணமி நாள். முழுநிலவு பளீர் என பெரிய ஸைஸ் பெட்ரமாக்ஸ் லைட்டு போல் எரிந்தது.

''தம்பீ , அங்க பாத்தீயா இரண்டு மரம் இருக்கா.. இது நான் பொறந்ததுலர்ந்து இருக்கு.. ஒன்னு நெட்டை இன்னொன்னு குட்டை.. ஆனா என்னைக்குமே அந்த குட்டை மரம் நெட்டை மரத்தப் பாத்து மெர்சலாகி .. நெட்டை மரம் ஒன்ன கண்டாலே எனக்கு மெர்லாக்கீதுனு சொன்னதே இல்ல.. இதுவரைக்கும் ரெண்டும் அப்படி யோசிச்சதுகூட இல்ல.. ஏன் தெரியுமா.. ''

''ஏன்னா மரம்லாம் எப்படி சாமீ கம்பேர் பண்ணிக்கும்.. ''

''அடங்கொக்கமக்கா ஒனக்கே நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்கே.... ஒகே தம்பீ நாம இன்னொருக்கா சந்திப்போம்.. நான் அவசரமா இமயமலைக்குப் போறேன்.. ''


கதை அவ்ளோதான்.

****************

பிற்சேர்க்கை.

அரசியல்வாதி குழம்பிப்போய் பார்த்துக்கொண்டிருக்க.. ஓட்ட நடையாய் கிளம்பிய சாமீ ஆஸ்ரமத்தின் பின்வாசல் வழியாக தனது வேட்டியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

****************

நன்றி - ஜென்கதைகள்