Pages

22 April 2010

ஆலப்புலவாயனார் சிரிதம் - என் கவிதைகளுக்கு காமெடி என்று பெயர் வை



ஆலப்புலவாயனாரும் தன்னை ஒரு கவிஞனா நிலை நாட்டிக்க ஏதேதோ செஞ்சும் ஒன்னும் பிரயோசனமில்ல. இலக்கிய கூட்டத்துக்கு போனாரு இந்தாள பார்த்தாலே நமட்டுத்தனமா சிரிச்சு குமட்டுல குத்தி விரட்டு விட்டாய்ங்க. சொந்த செலவுல கவிதை தொகுப்பு போட்டு, யாரைப் பார்த்தாலும் அதைக் குடுத்து டார்ச்சர் பண்ணி படிக்க வச்சு இலவசமாக குடும்பக்கட்டுப்பாடு பண்ணி கொலை பண்ணி மக்கள் தொகைய குறைச்சும் பார்த்தாச்சு பலனில்ல.. விகடன் குமுதம்னு எல்லா பத்திரிக்கைலயும் ஆளப்புடிச்சு காலப்புடிச்சு பூ... பூ... பூ மாதிரி தேன் மாதிரி கவிதை எழுதி அனுப்பியும் பார்த்தாச்சு ஒன்னும் நடக்கல.. என்ன காரணம்?

ஏன்னா அவரு நடந்தா அதிரடி எழுதினா சரவெடி எழுதினதுக்கப்பறம் ஒசாமா , ஒபாமா, மன்மோகன்சிங், ராஜபக்சே லெவல்லருந்து நெருக்கடி! தயவு செஞ்சு இனிமே கவிதை எழுதி எங்க ஆயுத மார்க்கெட்ட அழிச்சிராதீங்கனு! அப்படிப்பட்ட நம்ம கவிஞ்சரு கொஞ்ச நாள் அமைதியா ஐஸ்லாந்து எரிமலை 'அயாபியா பிளாயர் குத்துல்' மாதிரி யார் பேச்சுக்கும் போகாம அமைதியாதான் இருந்தாரு! காலைல எழுந்திருச்சு கண்ணாடி பார்த்து கவிதை சொல்லுவாரு.. லைட்டா கேர்ரா இருக்கும்.. யாரோ தூக்கிப்போட்டு மிதிச்ச மாதிரி இருந்தாலும் தாங்கிப்பாரு. இப்படி ஒரு அப்பிராணி வாழ்க்கை வாழ்ந்திட்டு இருந்தவர இந்த பெண்ணாதிக்க சமூகம் சும்மா விட்டுச்சா..

வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்ல , ரோட்டுக்கு போனா லேடி கான்ஸ்டபிள் தொல்ல, ஆபீஸ் போன மேலதிகாரி ( லேடீஸ் ) தொல்ல , எங்க பார்த்தாலும் பெண்கள் ஆதிக்கம்.. ஆட்டோலருந்து விமானம் வரைக்கும் எல்லாமே அவங்கள ஓட்டறாங்க... அட போரடிக்குதேனு தியேட்டருக்குப் போனா அங்கயும் நயன்தாரா நமீதா தொல்ல.. டிவிய போட்டா ஜட்ஜூங்க தொல்ல...

இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி காண்டாகி ஓடினாரு.. ஓடினாரு.. ஓடினாரு தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி லெஃப் எடுத்து அடுத்த சின்ன சிக்னல் ரைட் எடுத்து ஓடினாரு அங்க ஏற்கனவே வசனம் எழுதுற கவிஞரோட ஆபிஸ் இருந்ததால திரும்பி வந்துட்டாரு.. (பெரியவர் பாவம் பொல்லாதது , இவரு எங்கயாச்சும் கவிதை பாடி அவரு உயிருக்கே உலை வச்சிட்டா , இல்லாட்டி அவரு முரசொலில எதிர்கவித போட்டுட்டா உடன்பிறப்புகளின் உயிருக்கு யார் பொறுப்பு!)

இருந்தாலும் தமிழ்நாடே முன்னால சைட்ல நடுவுல எல்லா திசைலருந்தும் திரும்பிபார்த்தாலும் பின்னால பாக்கற பின்னவீனத்துவ கவிஞரா டெவலப் ஆகணும்னு வெறி வந்துடுச்சு. முன்னவீனத்துவமே முக்குது.. இதுல பின்னவீனத்துவம் ஒரு கேடானு பொண்டாட்டி திட்டினாலும்.. பெண்ணாதிக்கம் நைட்டானா குப்புற போட்டு குமட்டுல மிதிச்சுகிட்டுருந்துச்சே.... அதை எதிர்க்க வேண்டாமா?

இதுமாதிரி இக்கட்டான உடற்கட்டோடதான் ஒரு முடிவுக்கு வந்தாரு ஆ.பு.வாயனார். அந்த முடிவ கேட்டு அவரு வீட்டு மாடு , எருமை, பன்னிக்குட்டி பக்கத்துவீட்டு ஆயா மொதக்கொண்டு தற்கொலை முயற்சி பண்ணிக்கிட்டாங்களாம். ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பி பாக்கறமாதிரி இருந்துச்சு தட் முடிவு? யெஸ் ஆ.பு.வாயனார் இனிமே கோணி , தறி, குலை இல்லாம கவிதை எழுதறதில்லனு முடிவு பண்ணிட்டாரு.. பின்னவீனத்துவ சாகரத்துல குதிச்சிட்டாரு. அதுக்கு முன்னால பின்னவீனத்துவமா வாழணும்னு முடிவுபண்ணாரு. பொங்கி எழுந்தாரு.. சாரி எழுந்ததும் பொங்கினாரு (பின்னவீனத்துவம் டச்)

அதுக்கொசரம் சில எழுத்தாளர்கள் காலைலருந்து சாயங்காலம் வரைக்கும் என்ன பண்றாங்கனு நேரடியா பார்த்து அப்சர்வ் பண்ண முடிவு பண்ணாரு.
(இவரு முடிவு பண்றதுக்கு ஒரு முடிவே கிடையாது மக்களே! ஆனா முடிவு பண்ணிட்டாரு அவரு பேச்ச அவரு வீட்டு பசு மாடு, தெரு நாய் மற்றும் பல உறவினர்கள் மொதக்கொண்டு யாரும் கேக்கமாட்டங்க! இருந்தாலும் நாங்க முடிவெடுப்போம்!).
ஆனா எந்த எழுத்தாளர்கள் வீட்டு பக்கத்துல போனாலும் அடிச்சு விரட்டி விட்டுட்டாய்ங்க.. இவர பத்தின செய்தி பறவை காய்ச்சல் பீதி மாதிரி ஏற்கனவே எழுத்து வட்டாரத்துல ரொம்ப பேமஸ். அதனால அவராவே பின்னவீனத்துவ இதுவா டெவலப் ஆகறதா முடிவு பண்ணாரு..!

அதுக்கு முத்தாய்ப்பா ஒரு கவிதை எழுதினாரு.. அந்தக்கவிதைய அவருக்குத் தெரிஞ்ச விகடன் குமுதம் குங்குமம்க்குலாம் அனுப்பியும் வச்சாரு.. எல்லாரும் அதை திருப்பி அனுப்பும் போது கூடவே 500 ரூவா பணமும் வச்சு, கடவுளே இனிமே கவிதை கிவிதைனு எதையாவது எழுதி அனுப்பிராதீங்க நாங்கல்லாம் புள்ளகுட்டி காரங்க என்று கடிதமும் வச்சி அனுப்பினாங்க! நம்ம வாய்க்கால்பட்டி வரதுவும் பெரிய பீனா கனாதான் அவனிடம் யோசனை கேட்டார். அவனோ அட வெளங்காத பயலே அதுக்குத்தான் பிஞ்சு , சிறிசு , உரசுனு நிறைய பத்திரிக்கை இருக்கே அங்கே அனுப்பறதுதான்னான். ‘’அடப்பாவி நான் எழுதிருக்கறது ரொம்ப மோசமான இலக்கியம்’’ ‘’அதனாலதான் நான் அங்க அனுப்ப சொன்னேனு சொன்னான்’’ அடப்பாவி நான் சொன்னது சீரியஸ் லிட்ரேச்சர்டா!
ஒருவழியாக இவனுக்கு ஏற்றமாதிரி ஒரு சிறுபத்திரிக்கையையும் கண்டுகொண்டார். அந்தாளு ஒரு பரம ஏழை. அவரு அந்த பத்திரிக்கை நடத்தறதே ஆ.பு மாதிரி ஆட்களுக்கு ஆப்படிக்கத்தான். ஒரு கவிதைக்கு ஆயிரம் ரூபாய்னு வாங்கிட்டு அவரோட கவிதைய வெளியிட்டாரு. அந்த கவிதை முழுக்க ஒரே கோணி,குலை,தறினு குறிகெட்டுப் போய் இருந்துச்சு..

அவர் ப்ளான் பழிக்க ஆரம்பிச்சதே அப்பருந்துதான்!. எதை நினைச்சு அந்த கவிதைய எழுதுனாரோ அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரியே அகில இந்திய கோணிபையில் குப்பை பொறுக்குவோர் சங்கத்துலருந்து போலீஸ்ல புகார் குடுக்கப்போறாங்கனு எதிர்பார்த்தாரு! நடக்கல. இலக்கிய வட்டாரத்துலயும் அப்படி ஏதும் யாரும் இந்த கவிதைய பத்தி புலங்காகிதப்படறதாவும் தெரியல..

ஆ.பு மனம் தளரல. அவரு கண்ணீர் வடிச்சிகிட்டே இன்னொரு கவிதை எழுதினாரு. இந்த வாட்டி நிறைய கோணி நிறைய தறி நிறைய குலை.. அந்த கவிதையோட சாம்பிள் வரிகள் சில

தறிகள் எல்லாம் கோணிகளை நோக்கி திரும்புவதில்லை
கோணிகளும் தறிகளும் எப்போதும் முட்டிக்கொள்வதுமில்லை
முட்டிக்கொண்டால் ஒன்றொடொன்று சிக்கிக்கொள்கின்றன
விடுவிப்பதற்குள் குலை நடுங்கிவிடும்
கோணிக்குள் தறியோ தறிக்குள் கோணியோ
எதற்குள் எது இருந்தாலும்
குலை நடுங்கிவிடும் சோனிக்கு
கோணிகள் கோணிகளாக இருக்கிறது
தறிகள் தறிகெட்டு திரிகின்றன!

மேலே இருக்குற கவிதைபாதிதான். இப்படி கவிதை எழுதிவிட்டு உக்காந்து கனவு காண ஆரம்பிச்சாரு..

கனவு ஸ்டார்ட்ஸ் ஹியர் ------->

ஒட்டுமொத்தமாக தறிகளையெல்லாம் தறிகெட்டு திரிவதாக எழுதியதால் அகில உலக தறித்திறன் அளவுக்கதிகமாக வேலை செய்வோர் சங்கம் அதனை எதிர்த்தது. தறித்திறன் சங்கமும் கோணிப்பை சங்கமும் ஒரே கவிதையை எதிர்ப்பது உலகத்திற்கே புதுசு.
இதனால் தூங்கி எழுந்தால் கூட்டம் போடும் சங்கம் இந்த இருவரையும் கண்டித்து அல்லது இதில் ஒரு அமைப்பை கண்டித்து கூட்டம் நடத்தியது. இன்பிட்வீன் நம்ம கவிஞரு கடுமையா ஃபேமஸ் ஆகிட்டாரு.. ஆனா பின்னவீனத்துவமா இல்ல.. அது அவருக்கு பெரிய வருத்தம். எல்லாரும் அவரப்பார்த்து நீங்க ஒரு புர்ச்சி கவிஞ்சருனு சொன்னாங்க.. இல்ல இல்ல நான் பெண்ணாதிக்கத்துக்கு எதிரான கவிஞ்சருன்னாரு நம்மாளு..

இப்பிடியாக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அருமையான வேளையிலே ஆ.பு.வாயனாருக்கு பல புத்தகங்கள் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. பல கூட்டங்களில் தலைமை தாங்க அழைத்தனர். வளர்ச்சி எக்குத்தப்பா போய்கிட்டு இருந்ந்துச்சு.. ஒரு நாள் திடீர்னு பின் கலைஞருக்கு ஆலப்புலவாயனார் சிறப்பு விருது வழங்கப்பட்டது. (விருதை கலைஞர் அவருக்கே அவரே கொடுத்துக்கொண்டார் ). ஆலப்புலவாயனார் வாயை பிழந்து கொண்டு ஆவென பார்த்து கொண்டிருந்தார். கூட்டத்தில் அனைவரும் ஆ.புவை விட்டுவிட்டு கலைஞரை பாராட்டினர்.

கடுப்பான ஆ.பு தனிக்கட்சி தொடங்கினார். வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களை விற்று ஒருவழியாக முதல்வாரானார்.. அதற்கு பிறகு சினிமாவில் நடித்து ஹீரோவாகி சூப்பர் ஸ்டார் ஆனார். (பினா வானா கவிஞர் என்றால் எல்லாம ரிவர்ஸ்தான் )


------------->கனவு என்ட்ஸ் ஹியர்!

இப்படிலாம் கனவு கண்டுகிட்டு காவாலித்தனமாதான் திரிஞ்சுகிட்டிருந்தாரு நம்மாளு.. ஆனா நடந்ததே வேற, இவரு கவிதைக்கு எந்த ரியாக்சனும் இல்ல.. யாருமே கண்டுக்கல.. மனசு வெறுத்துட்டாரு.. பேனாவ தூக்கி வீசிட்டாரு.. மறுபடியும் எரிமலை உறங்க போயிருச்சு.. அவரோட கனவுகள் சிதஞ்சிருச்சு
இத்தோட இந்த கதை முடியுது.. அப்படினு எழுத ஆசதான்.. ஆனா என்ன செய்ய அதுக்கப்பறமும் ஆ.பு .வாவுக்கு வாய்ல கண்டமாச்சே..

அவரெழுதின கவிதைய அவரு பொண்டாட்டி எப்படியோ படிச்சிருச்சு.( அதுப்பின்னால அந்நிய நாட்டு ஐஎஸ்ஐ ஈஎஸ்ஐ புருஸ்லீ சீன உளவாளிகள்னு பல பேர் சதி இருந்திருக்கலாம் )

அப்புறமென்ன ஏன்ங்க இந்த கோணினா என்ன தறினா என்ன குலைனா என்னானு கேட்டுச்சு.. ஆ.பு.வாயனாரு அப்படியே அகமகிழ்ந்து போயி தன் வாயால தனக்கே ஆப்பு வச்சுகிட்டாரு.. இவரு குடுத்த வெளக்கத்தையெல்லாம் கேட்டாங்க அவரு பொண்டாட்டி.. அப்புறமென்ன ஆ.பு.வாயனாருக்கு தீபாவளி.. தீபாவளி.. தீ..பா..வ..ளி.. அதுக்கப்பறம்.. என்னாச்சுன்னா... அது என்னவா வேணா இருக்கட்டும்..

யாராவது பாவப்பட்ட கவிஞர் அடிவாங்கின கதைனா ரொம்ப சந்தோசமா படிப்பீங்களே.. அதுவும் ரசிச்சு ரசிச்சு.. போங்க போங்க புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க..